• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jan 31, 2025
Messages
10
நேசம்


ராசி… ராசி…

அம்மா.. ஏன்மா என் பேரை ஏலம் போடுற, இங்க தானே நிக்கிறேன்.

ஏன்டி, “நா கத்திகிட்டே இருக்கிறேன்,எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி நிக்குறே,என்னன்னு கேட்டா உன் வாயில இருக்க முத்து கொட்டிருமா,வர வர உனக்கு காதே கேட்க மாட்டேங்குது” என்றார் காமாட்சி.

அம்மா அவளுக்கு காது கேட்குது,உனக்குத்தான் கேட்கல போல என்றாள் அவரின் பெரிய மகள் சித்ரா.

என்னடா, “என்ன ஒரே சத்தம்”என்றபடி வந்தார் கருணாகரன்.

கருணாகரன் மற்றும் காமாட்சி தம்பதிக்கு இரு பெண் பிள்ளைகள்,அதில் மூத்தவள் சித்ராவுக்கு திருமணம் செய்துவிட்டார்கள்.அவள் கணவன் சதீஷ்,அவர்களுக்கு சர்மா என்ற ஒரு மகன் இருக்கிறான்.

இரண்டாவது பெண் தான் ராசி,அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள்.மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் எடுக்கின்றாள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவளுக்கு விடுமுறை.

நேற்று மாலையே வீட்டிற்க்கு தன் மூத்த மகள் குடும்பமும் வந்திருக்க கடைவரை சென்று வர அப்போதிருந்தே அழைத்துக் கொண்டிருக்கிறார் காமாட்சி.

அவளும், “இரும்மா வர்றேன்” என பதில் கொடுத்துவிட்டாள்.ஆனால் அது அவளது தாய்க்கு கேட்கவில்லை.

சித்ராவோ, என்னம்மா எதுக்கு கூப்டீங்க என்க,

இல்லடி, மார்கெட் வரைக்கும் போகனும், இவளைக் கூப்பிட்டா இன்னும் காணோம்,அதான்.

அம்மா அவ அப்போவே வந்துட்டா,நீதான் திரும்பி பாக்காம கத்திகிட்டே இருக்க.

ஆமாடி எனக்கு முதுகுலையும் கண்ணு இருக்கு பாரு “சரி சரி நேரமாகுது,மாப்பிள்ளை எழுந்துட்டாரா” என்றார் காமாட்சி.


ம் அம்மா,நேரமா எழுந்து அப்பா கூட வாக்கிங் போனாங்க,இந்நேரம் வந்துருக்கணும் என்ற போதே கருணாகரன் ஹாலில்,என்னடா ஒரே சத்தம் என பேசுவது கேட்க,
“இதோ அப்பாவே வந்துட்டாங்களே”.
எனத் தன் தந்தையை நோக்கி சென்றாள் சித்ரா. “குளித்து விட்டு வருகிறேன்” என சதீஷ் அவனது அறைக்குள் சென்று விட்டான்.

இத்தனை சம்பாசனையும் சமையலறையில் நடைபெற்று கொண்டிருக்க,தாயும் மகளும் ஹாலுக்கு வந்தனர்.

என்னங்க கொஞ்சம் மார்கெட் வரைக்கும் போய்ட்டு வரணும் என்றார் காமாட்சி.

அதுவரை அமைதியாக இருந்த ராசி என்னம்மா வாங்கணும்,அப்பா இல்லைன்னா மாமா கிட்ட குடுத்து விடுங்க, எனக்கு வேலை இருக்கும்மா என்றாள்.

“என்னடி வேலை??, உன் பிரென்ட் கூட அரட்டை அடிக்கிறதுதானே,அதெல்லாம் நாளைக்கு பார்த்துக்கோ.ஒழுங்கா சமையலுக்கு ஹெல்ப் பண்ணு என சொல்ல,

“அம்மா நீ சமையல் செஞ்சாத்தான் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்குமாம் அதனால நீயே செஞ்சிரு,என்னப்பா நான் சொல்றது சரிதானே” என்றாள்.

ரொம்ப சரி,காமாட்சி என்ன இருந்தாலும் உன் கைப்பக்குவம் வருமா? என்க அவருக்கு பயங்கர கோவம்.

ஆமா நாளைக்கு அவள கட்டிக்குடுத்துட்டு சமையல் செய்ய நம்மளும் அங்க போயிடலாம் சரியா,அவ ஒரு வேலையும் செய்ய வேணாம் என்க,

என்ன பேசுற காமாட்சி அதெல்லாம் என் பொண்ணு பார்த்துக்குவா, சித்ரா எப்படி இருந்தா இப்போ அவ மாறல. அதெல்லாம் சரியா போயிடும்,பிள்ளைங்க நம்ம வீட்ல இருக்கவரைக்கும் தான் இந்த சுதந்திரம்,அம்மா கையாள சாப்பாடுன்னு இருக்கும், அதுக்குப்பிறகு அவங்களே நினைச்சாலும் ஏன் நீயே நினைச்சாலும் அவள இப்போ மாதிரி அப்போ பார்த்துக்க முடியாது.அதுனால அவ பிரியப்பட்டா செய்யட்டும் இல்லன்னா விட்டுடு சரியா என்க,

இப்படி பேசிபேசியே என் வாயை அடச்சிருங்க,இவளுக்கு நீங்க ஓவரா செல்லம் குடுக்கிறீங்க,அவளும் இப்போல்லாம் என் பேச்சைக் கேட்கிறதே இல்லை பார்த்துக்கோங்க,என முகத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு தந்தையையும் மகளையும் ஒரு முறை முறைத்துவிட்டு தேவையான பொருட்களை ஒரு லிஸ்ட் போட்டு எழுதி வந்து கொடுத்தார்.

நீங்களே போய் வாங்கிட்டு வாங்க,எனக்கு வீட்ல ஆயிரத்தெட்டு வேலை இருக்கு என சொல்ல, கருணாகரனோ சரிம்மா, ஆயிரத்து ஒன்பதாவது வேலையா ஒரு கப் டீ போட்டுட்டு வந்துடு,குடிச்சிட்டு மார்கெட் போறேன் என சொன்னார்.


“இன்னிக்கு பால் வரல, அதனாலே நீங்க பால் வாங்கிட்டு வந்தாதான் டீ, காபி எல்லாமே போங்க” என அவர் மனைவி ஒழுங்கு காட்டிவிட்டு உள்ளே செல்ல இவரோ பாவமாக மகளை பார்க்க, அவள் எப்போதோ உள்ளே ஓடிவிட்டாள்.
தன் இன்னொரு மகளைத் தேட
அங்கு சித்ரா அவரைப் பார்த்தவாறே நின்றிருந்தாள்.

மனதிற்குள்,“அட வானரமே உனக்குத்தான இவ்வளவு நேரம் சப்போட் பண்ணினேன்,நீ என்னடான்னா எனக்கு ஒரு பிரச்சினைன்ன உடனே விட்டுட்டு ஓடிட்டே” என்று ராசியை திட்டியவாரே, மார்கெட் கிளம்பி சென்றார் கருணா.

பின்னாடியே வந்த சர்மாவை கவனிக்கவில்லை,அப்பிச்சி என்னையும் கூட்டிட்டு போங்க பிளீஸ் என்க,டேய் அங்க வந்து சாக்லேட் அது இதுன்னு கேட்க கூடாது சரியா என்றார்.சித்ரா அவன் தன் தந்தையோடு செல்லவும் ராசியின் அறைக்கு சென்றாள்.


அவன் சரி என்றதும் அப்பிச்சியும் பேரனும் மார்கெட் கிளம்பினர்.இங்கு சொல்வதுதான் அப்படி ஆனால் ஒரு சாக்லேட் விட்டுவைக்காமல் அனைத்தையும் வாங்கிவிடுவான் சர்மா.கருணாவும் கேட்பதெல்லாம் வாங்கி கொடுத்து விடுவார்.


இது எப்போதுமே நடக்கும் ஒன்று தான்,எனவே பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை.


ராசியின் அறையில் அக்காவும் தங்கையும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
ஏய் அப்பா பாவம் டி என்றாள் சித்ரா,அக்கா அதெல்லாம் அப்பா பார்த்துப்பாங்க ஆமா சர்மா எங்க என்க, அவனா அப்பா கூட இருந்தான்.அப்பா அவனை மார்கெட் கூட்டிட்டு போனாங்க என்றாள்.

சித்ரா அம்மாவுக்கு உதவி செய்ய சமையலறைக்கு சென்று விட, ராசியும் சமையல் அறைக்கு செல்ல திரும்பியவள், ஹாலில் கேலண்டரில் நேற்றைய தேதி கிழிக்கப்படாமல் இருப்பதை கண்டு, அதனை சரி செய்தாள். அப்போதுதான் முழு காலண்டரையும் பார்வையிட ராகவேந்திரா படம் .


அதை கண்டவளுக்கு நேற்றைய தினம் ஞாபகத்திற்கு வந்தது. வெள்ளிக்கிழமை மாலை பள்ளி விட்டு வெளியே வந்த போது இரண்டு சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் தெரியாமல் மோதிக்கொண்டனர். அதில் இருவருமே கீழே விழுந்து விட்டனர். ஒருவனுக்கு மட்டும் உள்ளங்கையில் சிராய்ப்பு. இன்னொருவனுக்கு அடி எதுவும் படவில்லை.

இதை பார்த்தவுடன் வேகமாக அந்த சிறுவர்களுக்கு பக்கத்தில் சென்றாள் ராசி.

அப்போது அவளை விட அவளுக்கு முன்னையே வேகமாக ஒருவன் வந்து நின்றிருந்தான். பார்க்க ஆளுமையான தோற்றம். பார்த்தவுடன் கண்ணில் ஒட்டிக் கொள்ளும் ஒரு கம்பீரம்,அழகு. ஒரு சிறுவனை அவன் தூக்கி விட மற்றொரு சிறுவனை இவள் தூக்கி விட்டாள்.

“டேய் பார்த்து வர மாட்டீங்களா டா கொஞ்சம் கவனமா வாங்க “என்று விட்டு அதில் ஒரு பையனை மட்டும் அதாவது அடிபட்ட பையன், அவன் தான் இவனின் அண்ணன் மகன் தர்ஷன்.

அவனிடம், “அச்சச்சோ காயம் ஆயிடுச்சா செல்லத்துக்கு சரி வீட்டுக்கு போய் மருந்து போட்டுக்கலாம்” என ஆறுதலாக பேசி விட்டு, மற்ற சிறுவனிடம் திரும்பி “உனக்கு ஒன்னும் அடிப்படலையே சரி பார்த்து பத்திரமா போ” என்று விட்டு அவன் தர்ஷனை கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டான். செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,தர்ஷனும் ராகவ் சித்தப்பா கை ரொம்ப வலிக்குது என்ன சொல்வது இவளுக்கு கேட்டது. அப்படித்தான் தெரியும் அவனுடைய பெயர். அதற்கு மேல் அவனைப் பற்றி எந்த ஒரு விவரமும் தெரியாது.

அங்கு அவள் ஒரு நிற்பதையே அவன் கண்டு கொள்ளவில்லை. அதே நினைவுடன் இருந்தவள் அவள் அம்மா அழைக்கவும்,அங்கு சென்று விட்டாள்.

அன்றைய பொழுது மிகவும் சந்தோஷமாக அழகாக தன் அக்கா குடும்பத்துடன் சென்றது.

அன்று மாலை கருணாகரனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை பேசியவருக்கு அளவில்லாத சந்தோஷம். உடனே அந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தன் மனைவியிடமும் தன் மாப்பிள்ளை மற்றும் சித்ராவிடமும் பகிர்ந்து கொண்டார்.

தரகர் தான் போனில் பேசி இருந்தார். ராசிக்கு ஒரு நல்ல வரன் வந்திருப்பதாகவும், செவ்வாய்க்கிழமை அன்று பெண் பார்க்க வருவதாகவும் செய்தி சொல்லி இருந்தார்.

அவளுக்கும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக மாப்பிள்ளை பார்க்கின்றனர்.எதுவுமே சரிப்பட்டு வரமாட்டேன் என்கிறதே, ஜாதகம் பொருந்துவதே இல்லை.


அதனால் இதுவரை மாப்பிள்ளை என்று வீட்டுக்கு யாரும் வந்ததில்லை.இதுதான் முதல் முறை அதனால்தான் இவ்வளவு சந்தோஷம்.

இந்த விஷயம் இன்னும் ராசிக்கு தெரியாது. தெரிந்தால் என்ன சொல்லுவாளோ. அவளுக்கு காதல் அது இது என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஆனாலும் இந்த ராகவேந்திரா படத்துடன் கூடிய நாட்காட்டியை பார்த்தவுடன் மட்டும் கொஞ்சம் தடுமாறுகின்றாள்.

அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கே தெரியவில்லையே. அப்புறம் எப்படி அவளது பெற்றோருக்கு தெரியும்.

வீட்டில் அவளை பெண் பார்க்க வருகின்றார்கள் என்று திங்கட்கிழமை மாலைதான் சொன்னார்கள் ராசியிடம். ஏனோ அவளுக்கு மனது பிசைய ஆரம்பித்தது. எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று அம்மா நான் வேற லீவு சொல்லலையே என்க.அவளுக்கே இது சிறுபிள்ளை தனமாகத்தனமாகத் தான் தோன்றியது.
“ஏன்டி போன் பண்ணி லீவு சொல்ல முடியாதா” என்று சொன்னார் அவளது தாய். அம்மா முக்கியமான ஒரு கிளாஸ் இருக்குமா கண்டிப்பா போயே ஆகணும் என்க அவளை முறைத்தார் காமாட்சி.

ஆமாம், பின்னே மூன்றாவது படிக்கும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றாள். இதில் முக்கியமான வகுப்பு என்றால் கோபம் வரத்தானே செய்யும்.

“கிறுக்குத்தனமா எதுவும் யோசிக்காம ஒழுங்கா நாளைக்கு லீவ சொல்லுடி என்றார்”அவருக்கு எதுவும் தோன்ற, ராசி உன் மனசுல யாரும் இருக்காங்களா என்று கொஞ்சம் தயங்கி மிகுந்த பயத்தோடு தான் கேட்டார். ஏனென்றால் இதுவரைக்கும் தன்மகள் காதல் வயப்பட்டிருப்பாள் என்ற அளவுக்கு நினைத்ததும் இல்லை அந்தளவுக்கு ராசியும் நடந்ததில்லை.

இவள் இப்போது தயங்கவும் கொஞ்சம் பயம் எட்டிப் பார்த்தது.

அவரின் பயத்தை புரிந்து கொண்ட ராசி, “என்னம்மா நீ எதையோ யோசிக்கிற, இல்ல கொஞ்சம் பயமா இருக்கு அதான்” என்றாள்.


“ஐயோ, ஒரு நிமிஷத்துல உயிரே போயிடுச்சு ஏன்டி உங்க அக்காவுக்கும்தானே மாப்பிள்ளை பார்
த்து கல்யாணம் பண்ணி வச்சோம்.அவ என்ன பயந்துகிட்டே இருக்கா பயந்துகிட்டே இருந்தா எப்படி கல்யாணம் நடக்கும்.
 
New member
Joined
Jan 31, 2025
Messages
10
லூசு, நாங்க கூடவே வெச்சிருக்க முடியுமா, உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா. நீ சந்தோஷமா இருந்தா தானடி நாங்க நிம்மதியா இருக்க முடியும். என்னமோ போ, நேத்து பொறந்த மாதிரி இருக்கு, இப்போ கல்யாணம் பண்ற அளவுக்கு வளர்ந்துட்ட, உனக்கு ஒரு நல்ல வரன அந்த மாகாளி ஆத்தா தான் அமைச்சு தரணும். அம்மா..! தாயே..!என் பொண்ணுக்கு இந்த வரனே அமையனும் என்று மகளிடம் பேசிக்கொண்டு அந்த அம்பாளிடமும் கோரிக்கை வைத்தார்.


ஏனென்றால் சதீஷிற்க்கு நெருங்கிய நண்பன் மற்றும் தொழில் பார்ட்னர். நல்ல குடும்பம். இந்த வரன் தரகர் மூலமாக வந்ததுதான் இருந்தாலும் இந்த குடும்பத்தை பற்றி விசாரித்த போது சதீஷிற்க்கும் சதீஷின் பெற்றோருக்கும் நன்றாக தெரியும் என்பதால் இதுவே அமைய வேண்டும் என மனமார வேண்டினார் காமாட்சி.

சூரியன் தன் கண்களை மெது மெதுவாக திறக்க விடியல்ப்பூ அழகாக பூத்தது. அன்றைய நாள் எல்லோருக்குமே இனிய நன்னாளாக விடிந்தது ஒருத்தியைத் தவிர. வேறு யாராக இருக்க முடியும்? அது நம் ராசியே தான்.

என்னதான் தாய் தந்தைக்காக திருமணத்திற்கு தயார் என்ற நிலைக்கு மாற மனம் நினைத்தாலும் ஏனோ ராகவனின் முகம் அவள் கண் முன்னால் வந்தது. இத்தனைக்கும் அவள் ஒன்னும் அவன் மீது காதல் வயப்படவில்லை இருந்தாலும் ஏதோ ஒரு ஈர்ப்பு. மனம் வலித்தது. ஒருவேளை இதுதான் காதலா என்றும் தெரியவில்லை.
அவனும் பார்த்து பேசி இருந்தால் கூட ஏதாவது செய்யலாம் இவள் ஒரு முறை பார்த்தது மட்டும்தான் அதை வைத்து எப்படி காதல் என்று நினைப்பது.

எல்லோரும் அரக்க பறக்க அவர்களது வேலையை பார்க்க, ராசியும் எழுந்து குளித்து கிளம்பி மிதமான ஒப்பனைகள் செய்து அரக்கு பச்சை நிறத்தில் புடவை உடுத்தியிருந்தாள். பார்ப்பதற்கு தேவலோக கன்னிகை போல இருந்தாள். கொள்ளை அழகு. மாநிறம் தான்,ஆனால் பார்ப்பவர்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. லேசாக பவுடர் போட்டு, பொட்டு வைத்து, அவள் தலையில் மல்லிகை மலரை சூடி, கண்களுக்கு மை மட்டும் தீட்டி விட்டாள் சித்ரா. மத்தபடி வேறு எதுவும் செய்யவில்லை அதற்கே அத்தனை அழகு.

மாப்பிள்ளை வீட்டினர் எட்டு மணிக்கு எல்லாம் வீட்டிற்கு வந்து விட்டனர். சித்ரா ராசியின் அறைக்குள் வந்து, ராசி அவங்க எல்லாம் வந்துட்டாங்க, நீ அங்க வந்து எல்லாருக்கும் ஒரு வணக்கம் மட்டும் சொல்லிட்டு உள்ள வந்துடு என்று சொல்லி அவளை கூட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

தலையை நிமிர்த்தி கூட பார்க்கவில்லை. பொதுவாக எல்லோரையும் பார்த்து கை குவித்து வணக்கம் சொன்னாள். பிறகு அனைவருக்கும் காபி மற்றும் பலகாரங்கள் பரிமாறப்பட்டது.சோபாவில் ஒரு நாலைந்து பேர் அமர்ந்திருந்தனர். மாப்பிள்ளையின் அம்மா, அப்பா ,பாட்டி ,தாத்தா, தரகர் என வீட்டின் மூத்தவர்கள் மட்டுமே அங்கு மாப்பிள்ளைக்கு ஒரு அண்ணா இருக்கின்றார். அவர் இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் குடும்பத்தோடு வருவதாக சொல்லியிருந்தார்கள். மாப்பிள்ளையும் அவர்களோடு வருவதாக உள்ளது போல என நினைத்துக் கொண்டாள்.

ஆனால் உண்மையில் மாப்பிள்ளை அங்கு வந்து விட்டான். ஆனால் ராசி பார்க்கவில்லை அவள் வருவதற்குள் அவனுக்கு ஒரு அழைப்பு வர முக்கியமான அழைப்பு என அதை பேச தோட்டத்திற்கு சென்று விட்டான்.

அங்கு ஒரு பெண்மணி இவளை தன்னருகில் வந்து அமரும்படி அழைத்தார். அவளும் சென்று அவர் பக்கத்தில் அமர்ந்தாள். உன் பேர் என்னம்மா என்று கேட்க இவள் ராசி என்றாள். கேள்வி கேட்டவர் வேறு யாரும் அல்ல மாப்பிள்ளையின் அம்மா காவேரி. அப்போதும் நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை.

சிறிது நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர் மொத்த குடும்பமும். மாப்பிள்ளை வீட்டினருக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. பெண் வீட்டினருக்கும் மாப்பிள்ளை பிடித்திருந்தது. பொருத்தமும் சரியாக இருக்க அடுத்த வரும் முகூர்த்தத்திலேயே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று நாள் குறித்துக் கொண்டன.

இவளுக்குத்தான் மனம் அடித்துக் கொண்டது.

அப்பொழுதுதான் சதீஷின் குடும்பமும் மாப்பிள்ளையின் அண்ணன் தேவா குடும்பமும் வீட்டிற்குள் வந்தனர். தாராளமாக ஒரு 15 பேர் உட்காரும் அளவுக்கு சோபா இருந்ததால் கீழே ஜமுக்காளம் விரிக்கும் அளவிற்கு தேவை இருக்கவில்லை அப்போது. ஆனால் இப்பொழுது கூட்டம் அதிகமாக இருக்க ஜமுக்காளம் விரித்து அதில் பாட்டி,காமாட்சி,சித்ரா,ராசி, காவேரி, தேவா மனைவி சாரு,சித்ராவின் மாமியார் ராஜேஸ்வரி, எல்லாருமே கீழே அமர்ந்து ஒரு கூட்டணி அமைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். சர்மா கருணாவிடம் சமத்தாக அமர்ந்திருந்தான்.தரகரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.


மாப்பிள்ளையின் பாட்டி சாவித்ரி ராசியின் கன்னம் தொட்டு “அழகா இருக்க ராசாத்தி,நீ மகராசியா இருக்கணும்”என்றார். காவேரிக்கும் ராசியை மிகவும் பிடித்து விட்டது.

ஆனால் ராசிக்கு மட்டும் மனம் எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. இங்கே நிலைத்து நிற்கவேயில்லை. அப்படி என்ன அவன் அவ்வளவு ஸ்பெஷல் என்று யோசிக்க தான் தோன்றியது. காதலும் இல்லை ஏன் இந்த மனம் இவ்வாறு முரண்டு பிடிக்கிறது என்றுதான் தோன்றியது.

“பார்த்து ஒரு வாரம் இருக்குமா அதற்கே இந்த கொடுமையா ஐயையோ,”மனம் அது பாட்டுக்கு புலம்பிக்கொண்டே இருந்தது மற்றவர்கள் பேசுவது காதிலேயே விழவில்லை.

மாப்பிள்ளையின் அண்ணனான தேவா, கருணாகரனிடம் “மாமா தம்பியும் உங்க பொண்ணும் கொஞ்சம் தனியா பேசட்டுமே. அவங்களுக்குள்ள பேசி பார்த்தா தானே தெரியும், நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்டான்.

எனக்கும் ஒரு சரின்னு தான் படுது என்றவர் தன் மனைவி காமாட்சியை பார்த்து கண்ணைக் காட்ட, அவரோ சித்ராவை பார்க்க சித்ரா ராசியிடம், “ராசி மாப்பிள்ளை தோட்டத்தில இருக்காரு நீ போயி அவருக்கு இந்த காபியை கொடுத்துட்டு உனக்கு ஏதாவது கேக்கணும்னா இல்ல ஏதாவது பேசணும்னா பேசிட்டு வா” என்றாள் ரகசியமாக. அவளுக்கு மிகுந்த சங்கோஜமாக இருந்தது.


அவளுக்கும் வேறு வழி இல்லையே காபியை எடுத்துக்கொண்டு தோட்டத்தை நோக்கி சென்றாள்.

ராசி தோட்டத்தை பார்த்து பார்த்து செதுக்கி இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் அவளுக்கு பூக்கள் என்றால் அவ்வளவு பிரியம். எல்லா வண்ணங்களிலும் ரோஜா பூ, செவ்வந்திப் பூ, சம்மங்கி, செண்பகப் பூ, மனோரஞ்சிதப்பூ, மருகு, கனகாம்பரம்,மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி என பூக்களை தனியாக ஒரு பக்கமாக வைத்திருந்தாள்.

காய்கறிகள் என அதற்கு தனியாக என பிரித்து பிரித்து வைத்திருந்தாள்.


அவன் எங்கு நிற்கிறான் என்று பார்த்தால் பூச்செடிகளுக்கு மத்தியில் நின்றிருந்தான். பின்தோற்றம் யாரையோ நினைவு படுத்த,ச்ச இவன நினச்சு நினச்சு அவன் மாதிரியே தோணுது போல என்று நினைத்தவள் சுற்றி முற்றி பார்க்க அவன் பக்கத்தில் ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

அந்த சிறுவன் அவன் தர்ஷன் தானே.அப்பொழுதே தோன்றியதே முன்பே பார்த்தது போல
சாருவை பார்க்கும் போது,. ஆனால் இப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது சாருவின் முகம் அப்படியே தர்ஷனுக்கும் இருக்கின்றது.

அப்படி என்றால் அவன்.

அவள் இதயம் வேகவேகமாக அடித்துக் கொண்டது.


சட்டென தர்ஷன் அங்கிருந்து வீட்டிற்குள் ஓடிவிட, அதே நேரம் அவளும் பூந்தோட்டத்திற்குள் வந்து விட்டாள். என்ன செய்வது என தெரியவில்லை. இதயம் அவளுக்கு முன்னே எகிறி குதித்து ஓடியது. அவன் சட்டென திரும்பிப் பார்த்தான். அவன் முகத்திலும் அந்தப் பூக்களைப் போலவே மலர்ச்சி. இன்முகமாக வரவேற்றான்.

அழகான சிரிப்பு அவனிடத்தில், அவளுக்கு என்ன உணர்வு என்றே தெரியவில்லை.
ஏதோ உலகையே வென்றுவிட்டது போல ஒரு பூரிப்பு அவள் மனதில்.அவன் ராகவன்.

ராகவனை நிச்சயம் அவள் அங்கு எதிர்பார்க்கவில்லை. அது அவள் முகத்திலே தெரிந்தது. அவனுக்கும் என்ன புரிந்ததோ என்னவோ, அவள் அருகில் வந்தான்.

ஹாய் நான் ராகவன், நீங்க ராசி…
எனக்கு முன்னாடியே உங்களைத் தெரியும்.

இந்த வாங்க போங்க வேண்டாம்னு தோணுது.உங்களுக்கு எப்படி எனக் கேட்டான்.

அவளும் “ம்ம்ம்” என தலையாட்ட

ஏன்னா நமக்குள்ள ஒரு டிஸ்டன்ஸ் இருக்கிறது போல இருக்கு.


நீ எனக்கானவள் ன்னு முடிவு பண்ணிட்டுத்தான் தரகர் மூலமாக உங்க வீட்டுக்கு மாப்பிளை பார்க்க வந்தோம்.அதுக்கு முன்னாடியே உன் அத்தான் கிட்ட சொல்லிட்டேன்.அவனுக்கும் பரிபூரண சம்மதம்.கிட்டத்தட்ட உன்னை ஒரு வருஷமா பார்த்திட்டு இருக்கேன்.உனக்கு என்னை இந்த ஒரு வாரமா தானே தெரியும் என கேள்வியாக நிறுத்த அவள் ஆம் என்பது போல தலையசைத்தாள்.

நீ வேலைக்கு சேர்ந்து எவ்வளவு நாள் ஆகுது என்றான்.

நான் ஒரு ஆறு மாதம் இருக்கும் என்னும்போது அவளுக்குள் குழப்பம்.எப்படி இவன் ஒரு வருஷமா என்னை பார்த்திருப்பான்.ஒன்றுமே புரியவில்லை.

ஒரு தடவை சதீஷ் ஃபோன் ல உன் ஃபோட்டோ பார்த்தேன்.அப்போவே மனசுல அழுத்தமா பதிஞ்சுட்ட.அப்போ இருந்து நீதான் என் மனசு முழுக்க இருக்கே டி.இதுக்குமேல என்னால காத்திருக்க முடியாது. ஐ லவ் யூ என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே.

அவளால் அவனுக்கு பதில் சொல்லும் அளவுக்கு தெம்பில்லாமல் போக அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தாள்..அவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் கரங்களை தன் கரங்களுக்குள் வைத்துக்கொண்டவன் என்னடி காதலாக என்றான்..

அவ்வளவுதான் அவள் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வந்துவிட்டது.

நாம் நினைத்தது கிடைக்காது என்று மனதிற்குள் சுருண்டு விழுந்தபோது
அது அவள் கையிலேயே அழகாக கிடைத்து விட்டதே.

உனக்கு என்னை பிடிக்குமா இல்லையான்னு நான் கேட்க மாட்டேன்.
ஏன்னா என்னை மட்டும் தான் உனக்கு பிடிக்கும்னு இந்த நிமிஷம் உன் கண்ணைப் பார்த்து நான் தெரிஞ்சுக்கிட்டேன்.

அவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்து ஐ லவ் யூ ராகவ் என்றாள்.

அவ்வளவு தான் அவன் அவளை தன் கரங்களில் ஏந்தி இருந்தான்.அவள் தன் கரங்களை அவன் கழுத்தில் மாலையாக கோர்த்துக்கொண்டாள்.

அவன் மனதில்

கையில் மிதக்கும் கனவா நீ…. கைகால் முளைத்த காற்றா நீ …
கையில் ஏந்தியும் கணக்கவில்லையே…


பிரியமுடன்
அவர்கள் வாழ்க்கை நகரும்.

இனிதே நாமும் விடைபெறுவோம்.
நன்றி.


என்றும் நட்புடன் சந்தனா.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
956
ஸ்வீட் அன்ட் சிம்பிள் லவ் ஸ்டோரி. நினைச்சது கிடைக்கலன்னா, கிடைச்சதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வரும்பொழுது, நினைத்ததே கிடைத்தால்? அந்த சந்தோஷத்திற்கு அளவேது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் புவனா 💐 💐 💐
 
New member
Joined
Jan 31, 2025
Messages
10
ஸ்வீட் அன்ட் சிம்பிள் லவ் ஸ்டோரி. நினைச்சது கிடைக்கலன்னா, கிடைச்சதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வரும்பொழுது, நினைத்ததே கிடைத்தால்? அந்த சந்தோஷத்திற்கு அளவேது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் புவனா 💐 💐 💐
மிக்க நன்றி சிஸ்😍
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top