• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jan 15, 2026
Messages
18
💙விவாதக் காதல்💙

Part 8

மகிழினியின் பழியால் மனம் குன்றிய கொடிவீரன் அவள் அறைக்குச் சென்று அவளை நெருங்கி, அவள் கன்னத்தை நோக்கி தன் கரங்களை ஓங்கியவன், "என்ன பொண்ணு நீங்க? யாரு மேல கை வைக்கிறிங்க?
இழுத்து ஒன்னு வச்சேன்னு வையுங்க... வேணாம்... உங்கள மாதிரி நானும் இப்படி கேவலமா நடந்துகிட்டா, அப்புறம் உங்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இருக்காதுன்னு தான் உங்கள சும்மா விடுறேன்" என்று கர்ஜித்தவன் ஓங்கிய தன் கரங்களை கீழே போட்டான்.

"என்ன நான் கேவலமா நடந்துக்கிட்டேனா?? ஓ... அப்போ நீ பண்ணதுக்கு பெயர் என்ன?" என்று மகிழினி கண்களில் கொலை வெறியுடன் கத்தினாள்.

இவர்கள் சத்தத்தை கேட்டு பக்கத்து அறையில் இருந்த பாட்டி மகிழினி அறையின் கதவை தட்ட, "இங்க பாரு. ஒழுங்கா இங்க இருந்து போயிடு. இல்லைனா உன் மேல போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்" என்ற மகிழினி வேகமாக சென்றவள் தன் அறையின் கதவை திறந்தாள்.

"என்ன சித்ரா? என்ன இங்க சத்தம்?" என்று புரியாமல் கேட்ட பாட்டியின் கண்முன் கொடிவீரன் கண்களில் அனல் கக்கும் கோபத்துடன் நின்று இருந்தான்.

"தம்பி என்னபா? நீ எங்க இந்த நேரத்துல? எதாவது பிரச்சனையா? சித்ரா என்னமா ஆச்சு?” என்றார் பாட்டி பதற்றதுடன்.

"பாட்டி பாட்டி இவன் என்கிட்ட... இவன் என்னை டேட்டிங் கூப்பிடுறான் பாட்டி" என்றாள் மகிழினி அதே கோவத்தோடு.

"ச்சீ வாயை மூடுங்க. என்னை பெத்ததும் ஒரு பெண் தான். நீங்க சொல்ற மாதிரி கேவலமான புத்தி எல்லாம் எனக்கு இல்லை" என்று சீறினான் கொடி.

"ஐயோ இங்க என்னதான் நடக்குது? ஏன் இப்படி ரெண்டு பேரும் எனக்கு புரியாத மாதிரி பேசுறீங்க" என்று தன் நெஞ்சில் கை வைத்து கொண்டு புலம்பினார் பாட்டி.

"பாட்டி இந்த ஆளு வேணுகிட்ட எனக்கு காதல் கடிதம் தந்து அனுப்பி இருக்கான். அதுல வேற உனக்கு ஓகேனா சொல்லு நம்ம டேட்டிங் போகலாம்னு எழுதி இருக்கான். எவ்ளோ அசிங்கமான ஆளு பாட்டி இவன்" என்று முகத்தை சுழித்தாள் மகிழினி.

"ஏய் இன்னும் ஒரு முறை என்னை இப்படி கேவலமா பேசுனீங்கன்னு வையுங்க. உங்கள..." என்று பற்களை கடித்து கொண்டு கையை ஓங்கினான் கொடி.

"தம்பி என்ன நீ? என் பேத்தியை அடிக்கிற உரிமையை உனக்கு யாரு தந்தது? நீ பாட்டுக்கிட்டு அவளை அடிக்க கை ஓங்குற?" என்று தன் அதிகப்படியான கோவத்தை வெளிப்படுத்தினார் பாட்டி.

"ஓ... நான் உங்க பேத்தியை அடிக்க கை ஓங்கியதுக்கே உங்களுக்கு இவ்வளவு கோவம் வருதுன்னா, உங்க பேத்தி மாடி ஏறி வந்து, என் கன்னத்துல அடிச்சது மட்டும் இல்லாம, என்னை அசிங்கமா காரி துப்பிட்டு போனாங்களே. அதுக்கு யாரு நியாயம் சொல்லுவாங்க?" என்று கொடி அதே வீராப்புடன் கேட்டான்.

"நான் ஒன்னும் உன்னை சும்மா அடிக்கல. நீ பண்ண கேவலதுக்காக தான் உன்னை அடிச்சேன்" என்று தன் குரலை உயர்த்தினாள் மகிழினி.

"ஏய் நான் உன்னை என்ன பண்ணேன்?" என்று மீண்டும் அவளிடம் எகிறினான் கொடி.

"கேவலமா எனக்கு லவ் லெட்டர் தந்தியே. அது போதாதா" என்று மகிழினி சொன்னதும் பாட்டியின் முகம் மாறியது.

"நான் உங்களுக்கு லெட்டர் தந்தேன்னு எந்த பைத்தியக்காரன் சொன்னான்?" என்று விசாரித்தான் கொடி.

"படிக்கிற புள்ள கையில கிஃப்ட் பாக்ஸ் தந்து. அத நீ என்கிட்ட தர சொல்லல" என்று தெளிவாக கேட்டாள் மகிழினி.

"ஐயோ இங்க என்ன நடக்குது. மனுஷனை நிம்மதியா தூங்க விட மாட்டிங்களா" என்று கண்களை கசக்கி கொண்டே வந்தான் அழகன் 🤭 வேணு.

"பாட்டி. இவன்கிட்டயே கேளுங்க. இவன் தான் இந்த ஆளு தந்த கிஃப்டை எடுத்துக்கிட்டு நம்ம வீட்டுக்குள்ள வந்தான். நான் யாருக்குடா இதுன்னு கேட்டேன். இவன் தான் சொன்னான், இந்த ஆளு அந்த கிஃப்ட் உனக்குன்னு சொல்லி தந்தாருன்னு" என்று வேணுவை சாட்சிக்கு அழைத்தாள் மகிழினி.

"வேணு, உன்கிட்ட நானா அதைத் தந்து உன் அத்தைக்கிட்ட தர சொன்னேன்?" என்று அமைதியான குரலில் வேணுவிடம் கேட்டான் கொடி.

"இல்லையே அந்த கிஃப்ட் உனக்குன்னு நீங்க என்னை தானே எடுத்துக்க சொன்னிங்க" என்று மகிழினிக்கு புரியும்படி சொன்னான் வேணு.

"பாட்டி, இதை நான் வேலை செய்யுற இடத்தில் ஒரு பொண்ணு அவங்க மனசுல இருக்கறதை கடிதமா எழுதி இந்த பாக்ஸ்ல வச்சி எனகிட்ட தந்து இருக்காங்க போல. நான் அத பிரித்து பாக்காம இங்க எடுத்துட்டு வந்துட்டேன். வாசல்ல உங்க பேரன் நின்னுகிட்டு யாருக்கு கிஃப்ட் எனக்கான்னு கேக்கும் போது. ஆமாடா உனக்கு தான்னு நான் சொன்னது உண்மை தான்.”

“ஆனா, அந்த பாக்ஸ்ல இப்படி ஒரு கடிதம் இருக்கும்னு எனக்கு தெரியாது. ஏதோ நட்பின் அடிப்படையில் அந்த பொண்ணு எனக்கு அன்பளிப்பு தந்து இருக்காங்கன்னு தான் நான் நினைச்சேன். அது எப்படி உங்க பேத்தி கையில போச்சுன்னு கூட எனக்கு இப்போ வரை முழுசா புரிஞ்சிக்க முடியல. எது எப்படி இருந்தாலும், இவங்க எப்படி பாட்டி விசாரிக்காம என்னை அடிப்பாங்க? இவங்கள மாதிரியே நானும் பதிலுக்கு இவங்கள அடிச்சா நல்லாவா இருக்கும். பெண்கள் எப்படி ஆண்கள் அடிக்க கூடாதோ, அதே போல ஒரு ஆம்பள மேல பெண்களும் கை வைக்க கூடாது. உங்க பேத்திக்கிட்ட சொல்லி வையுங்க. நான் இன்னும் ஐந்து நாளுல இந்த வீட்டை விட்டு போயிடுவேன். ஆனா, இந்த மாதிரி அவசர குடுக்கை தனம் இருந்தா, இவங்கனால யாருக்கும் எந்த நிம்மதியும் கிடைக்காது.

“அப்புறம் இந்தாங்க. இதுநாள் வர நான் இங்க சாப்பிட்டதுக்கு பணம். இன்னும் 5 நாளுல நான் இங்க இருந்து போயிடுறேன். உங்க பேத்திக்கு என்னாட கோடி நன்றிகளை தெரியப்படுத்திடுங்க" என்று மூச்சு விடாமல் பேசிய கொடி, தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து டேபிள் மேல் வைத்தவன், மகிழினியை பார்த்து ஒரு முறை முறைத்தவன் பார்வையில் உள்ள உண்மையை கண்டு மகிழினியின் கண்கள் மேலும் கலங்கியது.

"என்னமா இது? ஏன் இப்படி அவசரப்பட்ட? இப்போ பாரு பாவம் அந்த தம்பி எவ்வளவு வருத்தம் இருந்தா, இனிமே இந்த வீட்டுல இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு, சாப்பிட்ட சாப்பாடுக்கு பணத்தை எடுத்து வச்சிட்டு போகுது" என்று பாட்டி கொடியின் பக்கம் பேசினார்.

"இல்ல பாட்டி அந்த லெட்டரை பார்த்ததும் எனக்கு இவர் தான் எழுதி இருப்பாரோன்னு நினைச்சுட்டேன். தப்பு தான் பாட்டி. நான் போய் அவர்கிட்ட மன்னிப்பு கேக்குறேன்" என்ற மகிழினி தன் அறையில் இருந்து மாட்டிக்கு செல்ல, அவளைப் பின் தொடர்ந்து வேணுவும் செல்ல, அங்கே கொடி தங்கி இருக்கும் ரூம் கதவு பூட்டி இருந்தது.
வாசலில் சுரேஷின் பைக் நின்று இருந்ததை பார்த்த மகிழினி, "வேணு அவர் வண்டி கூட கொண்டு போகல போல. அப்போ பக்கதுல எங்காவது போய் இருப்பாரா" என்று வருத்தத்துடன் கேட்டாள் மகிழினி.

"தெரியலயே அத்த. ஆமா நீ ஏன் அவர்கிட்ட சண்டை போட்ட? நார்மலா நீ யார் கூடவும் சண்டை போட மாட்டியே. என்னாச்சு உனக்கு?" என்று கேள்வி கேட்க,

"எல்லாம் உன்னால தான். வா கீழே போகலாம்" என்று பொடியனை இழுத்துக்கொண்டு கீழே சென்றாள் மகிழினி.


டீ கடையில் கையில் சின்ன பையுடன், கடுங்கோபத்தில் அமர்ந்து இருந்த கொடியின் செல் போன் ரிங் ஆனதும், அதே கோபத்துடன் போனை எடுத்தவன், தன்னை அழைப்பது தன்னுடன் பிறந்த உடன் பிறப்பு சசி என்று தெரிந்து கொண்டவன், பெருமூச்சியை வெளியேற்றிய நிலையில் சசியின் அழைப்புக்கு பதில் தந்தான்.
 
New member
Joined
Jan 15, 2026
Messages
18
"சொல்லு அக்கா. அம்மா எப்படி இருக்காங்க?” என்று இவன் பேசும் தோரணையில் தன் தம்பியின் மனநிலையை அறிந்து கொண்டாள் சசி.

"என்னடா தம்பி? என்ன ஆச்சு? வேலையில ஏதாவது பிரச்சனையா? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" என்று தன் தம்பியை அன்புடன் விசாரித்தாள் சசி.

"வேலையில எல்லாம் பிரச்சனை இல்ல அக்கா. நான் தங்கி இருக்கிற வீட்ல தான் ஒரு சின்ன பிரச்சனை" என்று தன் மனதில் இருக்கும் சோகத்தை தன் அக்காவிடம் வெளிப்படையாக தெரிவித்தான் கொடி.

"தங்கி இருக்கிற வீட்டில என்னடா பிரச்சனை. மறுபடியும் அந்த பொண்ணு கிட்ட போயி அறிவுரை சொல்றேன்னு வாங்கி கட்டிக்கிட்டியா" என்று கொடியின் அக்கா சசி கிண்டலாக விசாரித்ததும், கொடிக்கு கோபம் தலைக்கு ஏறியது.

"அக்கா கொஞ்சம் நிறுத்துறியா. இனி அந்த பொண்ணு எக்கேடு கெட்டுப் போனாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்ல. அந்த பெண்ணுடைய வாழ்க்கையை சீர் பண்றதுக்காக நான் இந்த ஊருக்கு வரல" என்று டீக்கடையை மறந்து கத்தினான் கொடி.

"இப்போ எதுக்குடா நீ இவ்வளவு கோபப்படுற? நீ இந்த அளவுக்கு கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லையே. சரி சொல்லு என்னதான் உனக்கு பிரச்சனை?" என்று சசி தன் தம்பியின் கோவத்திற்கு உண்டான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக அவனை அன்பாக வினாவினாள்.

கொடியும் சில நொடி யோசித்த பிறகு, தன் அலுவலகத்தில் ரேஷ்மா இவனுக்குத் தந்த அன்பளிப்பையும், அதை வேணு மாற்றுதலாக மகிழினியிடம் தந்த விஷயத்தையும், மகிழினி விசாரிக்காமல் தன்னை அறைந்த நிகழ்வையும், பதிலுக்கு இவன் மகிழினியை திட்டிய சம்பவத்தையும் எடுத்துச் சொல்ல சசி வாய்விட்டு சிரித்தாள்.

"அக்கா என்னை ஒரு பொண்ணு அடிச்சிட்டான்னு சொல்றேன். உனக்கு கோபம் வரும்னு பார்த்தா, இப்படி குலுங்கி குலுங்கி சிரிக்கிற? என்ன என்னை பாத்தா உனக்கும் கேவலமானவனா அசிங்கமானவனா தெரியுதா?” என்று மீண்டும் தான் இருக்கும் இடத்தை மறந்து கர்ஜித்தான் கொடி.

"அட பைத்தியக்காரா நான் என் தம்பியை நினைச்சு சிரிக்கலடா. அந்த சின்ன பையன் வேணுவ நெனச்சு சிரிச்சேன். அவன் பண்ண ஒரு காரியத்தால அமைதியின் சுயரூபமா இருந்த என் தம்பி, இவ்வளவு கோபப்படுறானே. அதை நினைத்து சிரிச்சேன்" என்று தன் சிரிப்பிற்கு உண்டான காரணத்தை விவரமாக சொன்னாள் சசி.

"ரொம்ப சிரிக்காத. பல்லு சுளிக்கிக்க போகுது. நீ எனக்கு ஆறுதல் சொல்லுவேன்னு உன்னுடைய போனை அட்டென்ட் பண்ணா. நீ என்னடானா, சிரிச்சு மேலும் என்னை வெறுப்பேத்தி பாக்குறியா" என்று மீண்டும் தன் அக்காவிடம் கோபம் கொண்டான் கொடி.

"அந்தப் பொண்ணு பண்ணது மிகப்பெரிய தப்பு தான்டா. ஆனால், அதைவிட பெரிய தப்பு, உனக்கு ஒரு வயசுக்கு வந்த பெண் அன்பளிப்பு கொடுக்கிறான்னா, அந்த அன்பளிப்புல என்ன இருக்கும்னு உன் மரமண்டைக்கு தெரியாம, அதை நீ ஒரு குழந்தைகிட்ட கொடுக்கலாமா?" என்று பொதுவான நியாயத்தை எடுத்துரைத்தாள் சசி.

"அவன் ஒன்னும் குழந்தை இல்ல. பாக்க தான் ஏழு வயசு. ஏழு ஊர் வாயை மொத்தமா குத்தகை எடுத்து வைத்திருப்பான்" என்று வேணுவின் அருமை பெருமையை எடுத்துச் சொன்னான் கொடி.

"அவன் யாரா வேணும்னா இருக்கட்டும். இந்த விஷயத்தை பொருத்தவரைக்கும் உங்க ரெண்டு பேரு மேலயும் தப்பு இருக்கு. உண்மை என்னன்னு விசாரிக்காமல் அந்த பொண்ணு உன் மேல கைய ஓங்கிருக்கக் கூடாது. அதேபோல வேலை செய்யும்போது உனக்கு ஒரு பொண்ணு அன்பளிப்பு கொடுக்கிறானா, அவ எந்த இன்டென்ஷன்ல உனக்கு அதை கொடுத்திருப்பான்னு தெரிஞ்சுக்காம, அதை நீ ஒரு குழந்தையிடம் கொடுத்தது அதைவிட பெரிய தப்பு. சரி நடந்தது நடந்துருச்சு. இப்போ அதைப்பத்தி பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல. இதுக்கு தான் நீ இவ்வளவு கவலையா இருக்கியா?" என்று சசி சாதாரணமாக கேட்டாள்.

"பின்ன கோவப்படாம... அது எப்படி ஒரு பொண்ணு என்னை அடிக்கலாம்?" என்று மீண்டும் மகிழினி இவனை அறைந்த நிகழ்வை நினைவுபடுத்தி கொண்டான் கொடி.

"அது என்னடா ஒரு பொண்ணு? ஏன் பொண்ணுங்க ஆம்பளைங்களை அடிக்க கூடாதா?" என்று ஒரு பெண்ணாக சசி கேட்டாள்.

"ஆணோ, பெண்ணோ, அது என்ன கை ஓங்குற பழக்கம்?" என்று மீண்டும் புலம்பினான் கொடி.

"சரிடா விடு. பாவம் அந்த பொண்ணு. அவளுக்கு இன்செக்யூரிட்டி ஃபீல் கூட இருக்கலாம். அப்படி ஒரு கடிதத்தை வீட்டுக்கு வந்த பத்தே நாளில் ஒருவன் எனக்கு தந்துட்டானே என்ற ஆத்திரம் கூட அவளுக்கு இருக்கலாம். என் தம்பி இந்த விஷயத்துல எல்லாம் டியூப் லைட்னு எனக்கு தெரியும். ஆனா பாவம் அந்த பொண்ணுக்கு தெரியாது இல்ல" என்று கொடியை சமாதானம் செய்தாள்.

"சரி. நீ இதெல்லாம் அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருக்காத. நான் பாத்துக்குறேன்" என்று சசிக்கு நம்பிக்கை தந்தான்.

"ஆமா இப்போ நீ எங்க இருக்க?" என்று கேட்டாள்.

"எனக்கு அந்த வீட்டுக்கு போக பிடிக்கல அக்கா. அதான் நாளைக்கு போட வேண்டிய துணியை மட்டும் எடுத்துக்கிட்டு, பக்கத்து தெருவில் இருக்கும் டீ கடைக்கு வந்து இருக்கேன். இங்கேயே நைட் டின்னர் எதாவது சாப்பிட்டுட்டு, சின்னதா ஒரு ஹோட்டல்ல ரூம்ல தங்கலாம்னு நினைக்கிறேன்" என்று வெறுமையாக சொன்னான்.

"டேய் நமக்கு நேரம் சரியில்லைனா. கூழாங்கல் கூட நம்ம எதிர்ல வந்து குத்து ஆட்டம் ஆடிட்டு போகும்" என்று சிரித்து கொண்டே சொன்னாள்.

"இப்போ ஏன் அக்கா இவ்வளவு கேவலமான ஒரு தத்துவம் சொல்ற?" என்று முகத்தை சுருக்கினான்.

"இல்லடா தம்பி. நீ பாட்டுக்கிட்டு அந்த பொண்ணு மேல இருக்குற கோவத்துல ஹோட்டல்ல ரூம் போட்டுட்டு, அங்க போலீஸ் ரைட் வந்து, அந்த நேரம் பார்த்து உன் ரூம்ல உனக்கே தெரியாம ஒரு பொண்ணு இருந்து, அப்போ உன்னை பிராத்தல் கேஸ்ல உள்ள தூக்கி வச்சிட்டா, அப்புறம் உன் அக்கா எனக்கு எப்படிடா கல்யாணம் நடக்கும்?" என்று கொடியை பயமுறுதினாள் சசி.

"என்ன அக்கா சொல்ற? அப்படி எல்லாம் நடக்குமா? ஐயோ வேணாம் வேணாம் நான் நைட்டு 11 மணி போல அந்த வீட்டுக்கு போயிட்டு, காலையில யார் கண்ணுலயும் படாம, அங்கிருந்து வேலைக்கு போயிடுறேன்" என்று அச்சத்துடன் சொன்ன கொடியின் சிறு பிள்ளை தனத்தைகேட்டு ரசித்தாள் அவனின் சகோதரி.


"சரி அக்கா நான் கால் கட் பண்ணுறேன். நாளைக்கு பேசலாம்" என்று சொன்ன கொடி, நேரத்தை கடத்தி இரவு பனிரெண்டு மணி அளவில் தூக்க கண்ணோடு சுரேஷின் பாட்டி வீட்டுக்கு சென்று, மாடியில் இருக்கும் தன் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றபடி மீண்டும் கதவை தாழிட எண்ணும் சமயம், மல்லி பூ தோட்டத்தின் நடுவில் யாரோ அமர்ந்தப்படியே உறங்கி கொண்டு இருப்பதை பார்த்து, கொடி தன் கண்களை கசக்கி உற்று பார்த்தவன் கண்கள் முழுதும் நிறைந்து இருந்தாள் சித்ரமகிழினி.

🙏வேணு போல ஊருக்கு ஒருத்தன் இருந்தா ஊர் விளங்கிடும் 🤭

Urs

SK💙💛
 
Member
Joined
Feb 8, 2025
Messages
34
"சொல்லு அக்கா. அம்மா எப்படி இருக்காங்க?” என்று இவன் பேசும் தோரணையில் தன் தம்பியின் மனநிலையை அறிந்து கொண்டாள் சசி.

"என்னடா தம்பி? என்ன ஆச்சு? வேலையில ஏதாவது பிரச்சனையா? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" என்று தன் தம்பியை அன்புடன் விசாரித்தாள் சசி.

"வேலையில எல்லாம் பிரச்சனை இல்ல அக்கா. நான் தங்கி இருக்கிற வீட்ல தான் ஒரு சின்ன பிரச்சனை" என்று தன் மனதில் இருக்கும் சோகத்தை தன் அக்காவிடம் வெளிப்படையாக தெரிவித்தான் கொடி.

"தங்கி இருக்கிற வீட்டில என்னடா பிரச்சனை. மறுபடியும் அந்த பொண்ணு கிட்ட போயி அறிவுரை சொல்றேன்னு வாங்கி கட்டிக்கிட்டியா" என்று கொடியின் அக்கா சசி கிண்டலாக விசாரித்ததும், கொடிக்கு கோபம் தலைக்கு ஏறியது.

"அக்கா கொஞ்சம் நிறுத்துறியா. இனி அந்த பொண்ணு எக்கேடு கெட்டுப் போனாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்ல. அந்த பெண்ணுடைய வாழ்க்கையை சீர் பண்றதுக்காக நான் இந்த ஊருக்கு வரல" என்று டீக்கடையை மறந்து கத்தினான் கொடி.

"இப்போ எதுக்குடா நீ இவ்வளவு கோபப்படுற? நீ இந்த அளவுக்கு கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லையே. சரி சொல்லு என்னதான் உனக்கு பிரச்சனை?" என்று சசி தன் தம்பியின் கோவத்திற்கு உண்டான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக அவனை அன்பாக வினாவினாள்.

கொடியும் சில நொடி யோசித்த பிறகு, தன் அலுவலகத்தில் ரேஷ்மா இவனுக்குத் தந்த அன்பளிப்பையும், அதை வேணு மாற்றுதலாக மகிழினியிடம் தந்த விஷயத்தையும், மகிழினி விசாரிக்காமல் தன்னை அறைந்த நிகழ்வையும், பதிலுக்கு இவன் மகிழினியை திட்டிய சம்பவத்தையும் எடுத்துச் சொல்ல சசி வாய்விட்டு சிரித்தாள்.

"அக்கா என்னை ஒரு பொண்ணு அடிச்சிட்டான்னு சொல்றேன். உனக்கு கோபம் வரும்னு பார்த்தா, இப்படி குலுங்கி குலுங்கி சிரிக்கிற? என்ன என்னை பாத்தா உனக்கும் கேவலமானவனா அசிங்கமானவனா தெரியுதா?” என்று மீண்டும் தான் இருக்கும் இடத்தை மறந்து கர்ஜித்தான் கொடி.

"அட பைத்தியக்காரா நான் என் தம்பியை நினைச்சு சிரிக்கலடா. அந்த சின்ன பையன் வேணுவ நெனச்சு சிரிச்சேன். அவன் பண்ண ஒரு காரியத்தால அமைதியின் சுயரூபமா இருந்த என் தம்பி, இவ்வளவு கோபப்படுறானே. அதை நினைத்து சிரிச்சேன்" என்று தன் சிரிப்பிற்கு உண்டான காரணத்தை விவரமாக சொன்னாள் சசி.

"ரொம்ப சிரிக்காத. பல்லு சுளிக்கிக்க போகுது. நீ எனக்கு ஆறுதல் சொல்லுவேன்னு உன்னுடைய போனை அட்டென்ட் பண்ணா. நீ என்னடானா, சிரிச்சு மேலும் என்னை வெறுப்பேத்தி பாக்குறியா" என்று மீண்டும் தன் அக்காவிடம் கோபம் கொண்டான் கொடி.

"அந்தப் பொண்ணு பண்ணது மிகப்பெரிய தப்பு தான்டா. ஆனால், அதைவிட பெரிய தப்பு, உனக்கு ஒரு வயசுக்கு வந்த பெண் அன்பளிப்பு கொடுக்கிறான்னா, அந்த அன்பளிப்புல என்ன இருக்கும்னு உன் மரமண்டைக்கு தெரியாம, அதை நீ ஒரு குழந்தைகிட்ட கொடுக்கலாமா?" என்று பொதுவான நியாயத்தை எடுத்துரைத்தாள் சசி.

"அவன் ஒன்னும் குழந்தை இல்ல. பாக்க தான் ஏழு வயசு. ஏழு ஊர் வாயை மொத்தமா குத்தகை எடுத்து வைத்திருப்பான்" என்று வேணுவின் அருமை பெருமையை எடுத்துச் சொன்னான் கொடி.


"அவன் யாரா வேணும்னா இருக்கட்டும். இந்த விஷயத்தை பொருத்தவரைக்கும் உங்க ரெண்டு பேரு மேலயும் தப்பு இருக்கு. உண்மை என்னன்னு விசாரிக்காமல் அந்த பொண்ணு உன் மேல கைய ஓங்கிருக்கக் கூடாது. அதேபோல வேலை செய்யும்போது உனக்கு ஒரு பொண்ணு அன்பளிப்பு கொடுக்கிறானா, அவ எந்த இன்டென்ஷன்ல உனக்கு அதை கொடுத்திருப்பான்னு தெரிஞ்சுக்காம, அதை நீ ஒரு குழந்தையிடம் கொடுத்தது அதைவிட பெரிய தப்பு. சரி நடந்தது நடந்துருச்சு. இப்போ அதைப்பத்தி பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல. இதுக்கு தான் நீ இவ்வளவு கவலையா இருக்கியா?" என்று சசி சாதாரணமாக கேட்டாள்.

"பின்ன கோவப்படாம... அது எப்படி ஒரு பொண்ணு என்னை அடிக்கலாம்?" என்று மீண்டும் மகிழினி இவனை அறைந்த நிகழ்வை நினைவுபடுத்தி கொண்டான் கொடி.

"அது என்னடா ஒரு பொண்ணு? ஏன் பொண்ணுங்க ஆம்பளைங்களை அடிக்க கூடாதா?" என்று ஒரு பெண்ணாக சசி கேட்டாள்.

"ஆணோ, பெண்ணோ, அது என்ன கை ஓங்குற பழக்கம்?" என்று மீண்டும் புலம்பினான் கொடி.

"சரிடா விடு. பாவம் அந்த பொண்ணு. அவளுக்கு இன்செக்யூரிட்டி ஃபீல் கூட இருக்கலாம். அப்படி ஒரு கடிதத்தை வீட்டுக்கு வந்த பத்தே நாளில் ஒருவன் எனக்கு தந்துட்டானே என்ற ஆத்திரம் கூட அவளுக்கு இருக்கலாம். என் தம்பி இந்த விஷயத்துல எல்லாம் டியூப் லைட்னு எனக்கு தெரியும். ஆனா பாவம் அந்த பொண்ணுக்கு தெரியாது இல்ல" என்று கொடியை சமாதானம் செய்தாள்.

"சரி. நீ இதெல்லாம் அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருக்காத. நான் பாத்துக்குறேன்" என்று சசிக்கு நம்பிக்கை தந்தான்.

"ஆமா இப்போ நீ எங்க இருக்க?" என்று கேட்டாள்.

"எனக்கு அந்த வீட்டுக்கு போக பிடிக்கல அக்கா. அதான் நாளைக்கு போட வேண்டிய துணியை மட்டும் எடுத்துக்கிட்டு, பக்கத்து தெருவில் இருக்கும் டீ கடைக்கு வந்து இருக்கேன். இங்கேயே நைட் டின்னர் எதாவது சாப்பிட்டுட்டு, சின்னதா ஒரு ஹோட்டல்ல ரூம்ல தங்கலாம்னு நினைக்கிறேன்" என்று வெறுமையாக சொன்னான்.

"டேய் நமக்கு நேரம் சரியில்லைனா. கூழாங்கல் கூட நம்ம எதிர்ல வந்து குத்து ஆட்டம் ஆடிட்டு போகும்" என்று சிரித்து கொண்டே சொன்னாள்.

"இப்போ ஏன் அக்கா இவ்வளவு கேவலமான ஒரு தத்துவம் சொல்ற?" என்று முகத்தை சுருக்கினான்.

"இல்லடா தம்பி. நீ பாட்டுக்கிட்டு அந்த பொண்ணு மேல இருக்குற கோவத்துல ஹோட்டல்ல ரூம் போட்டுட்டு, அங்க போலீஸ் ரைட் வந்து, அந்த நேரம் பார்த்து உன் ரூம்ல உனக்கே தெரியாம ஒரு பொண்ணு இருந்து, அப்போ உன்னை பிராத்தல் கேஸ்ல உள்ள தூக்கி வச்சிட்டா, அப்புறம் உன் அக்கா எனக்கு எப்படிடா கல்யாணம் நடக்கும்?" என்று கொடியை பயமுறுதினாள் சசி.

"என்ன அக்கா சொல்ற? அப்படி எல்லாம் நடக்குமா? ஐயோ வேணாம் வேணாம் நான் நைட்டு 11 மணி போல அந்த வீட்டுக்கு போயிட்டு, காலையில யார் கண்ணுலயும் படாம, அங்கிருந்து வேலைக்கு போயிடுறேன்" என்று அச்சத்துடன் சொன்ன கொடியின் சிறு பிள்ளை தனத்தைகேட்டு ரசித்தாள் அவனின் சகோதரி.


"சரி அக்கா நான் கால் கட் பண்ணுறேன். நாளைக்கு பேசலாம்" என்று சொன்ன கொடி, நேரத்தை கடத்தி இரவு பனிரெண்டு மணி அளவில் தூக்க கண்ணோடு சுரேஷின் பாட்டி வீட்டுக்கு சென்று, மாடியில் இருக்கும் தன் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றபடி மீண்டும் கதவை தாழிட எண்ணும் சமயம், மல்லி பூ தோட்டத்தின் நடுவில் யாரோ அமர்ந்தப்படியே உறங்கி கொண்டு இருப்பதை பார்த்து, கொடி தன் கண்களை கசக்கி உற்று பார்த்தவன் கண்கள் முழுதும் நிறைந்து இருந்தாள் சித்ரமகிழினி.

🙏வேணு போல ஊருக்கு ஒருத்தன் இருந்தா ஊர் விளங்கிடும் 🤭

Urs

SK💙💛
Venu than 😂storyku turning 😂point😂😂😂
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top