- Thread Author
- #1
Part 6
அன்றைய தினம் இரவு மொட்டை மாடியில், சுரேஷ் தன் நண்பன் கொடிவீரனுடன் பேசிக்கொண்டு இருக்க, எப்பொழுதும் போலவே மகிழினி மல்லி செடி பூக்களின் நடுவே, அவளது சுவாசத்தை உணர்ந்து கொண்டு இருந்தாள்
"ஏன் மச்சான் கேக்குறேன்னு தப்பா நினைக்காத. உன் தங்கச்சி ஹஸ்பன்ட் எப்போ, எப்படி இறந்தாரு?" என்று இவன் மனதில் எழுந்த சந்தேகத்தை கேட்டான்.
"எல்லாம் என்னால தான்டா" என்று வருத்தத்துடன் சொல்ல,
"என்னடா சொல்ற? உன்னாலையா? நீ என்ன பண்ணின?" என்று புரியாமல் கேட்டான்.
"ம் ஆமாடா. என் தங்கச்சிக்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னாடி தான் கல்யாணமாச்சு."
“ஒரு வருஷத்துக்கு முன்னாடியா!?”
“ம் ஆமாடா.”
“உன் மச்சான் எப்போ இறந்தாரு?”
"கல்யாணம் முடிந்த அதே நாள் தான்" என்று சொன்னவனின் கண்கள் கலங்கியது
"என்னடா சொல்ற?" என்று ஆச்சிரியம் கலந்த கவலையுடன் கேட்டான்.
“ம்... ஆமா. என் தங்கச்சியை கல்யாணம் பண்ண மாப்பிளை பெயர் வீரவேல். அவரு காவல்துறை அதிகாரி. அவரு ஒரு அனாதை. இன்னைக்கு நம்ம வீட்டுக்கு ஒரு புரோக்கர் வந்தாரு இல்ல. அவர் மூலியமா வந்த சம்மந்தம் தான். பார்த்ததும் என் தங்கச்சிக்கு அவரையும், அவருக்கு இவளையும் ரொம்ப பிடிச்சி போச்சு. என் தங்கையை பொண்ணு பார்த்துட்டு போன பத்தாவது நாளே அவர் இவளை கட்டிக்க நாள் குறிச்சிட்டாரு.”
"பத்து நாள்லயா?" என்று கண்களை விரித்ததான் கொடிவீரன்.
“ம்... பத்து நாள்ல தான் கல்யாணம். ரெஜிஸ்டர் ஆபீஸ்ல ஆரவாரம் இல்லாமல் நடந்து முடிந்து இருக்கு. என் பாட்டியின் பிடிவாதத்தால என்னை என் தங்கச்சி அவ கல்யாணத்துக்கு கூப்பிடல. ஆனா கல்யாணம் முடிந்த கையோடு என் தங்கச்சி ஏக்கத்தை புரிஞ்சுச்சிகிட்ட அவளோட புருஷன், என்னை பார்க்க கல்யாணம் முடிந்த கையோடு அவளை அழைச்சிட்டு வர வழியில, யாரும் எதிர் பார்க்காத அளவுக்கு ஒரு விபத்து. அதில்...” என்று நிறுத்த,
“என்னடா சொல்ற?” என்று அதிர்ந்து கேட்டான்.
“ம்... அவங்க ஒட்டிகிட்டு வந்த கார் ஆக்சிடண்ட் ஆகிருச்சி. மாப்பிள்ள ஸ்பாட் அவுட். என் தங்கச்சி தலையில அடிபட்டு அவ காதுல நரம்பு ஏதோ பிரச்சனை ஆகி, அவ அந்த விபத்துல இருந்து கண் விழிக்கவே பத்து நாளாச்சு.” என்றான் சுரேஷ்.
“பத்து நாளா!?”
“ம்... ஆமாடா. என் தங்கச்சி பத்து நாள் கடந்து தான் கண்ணை திறந்தா. அவ கண்ணை திறந்ததும் முதல்ல என் வீரா எங்கன்னு தான் கேட்டா. அவளுக்கு நாங்க பேசுறது எதுவுமே கேக்கல. இத விட ஆச்சிரியமும் அதிர்ச்சியும் கலந்த செய்தி என்னனா, அவ தன்னோட புருஷன் இறந்ததை இன்னும் நம்பல. ஏன் இன்னவரைக்கும் ஒரு சொட்டு கண்ணீர் கூட அவ கண்ணுல இருந்து அவ புருஷன் இறந்ததுக்காக வரல.” என்றான் வருத்தமாக.
“என்னடா சொல்ற!?”
“ம்... ஆமாடா. நாங்க அவள ஒரு மாசம் கடந்து தான் ஹாஸ்ப்பிட்டல்ல இருந்து அவ புருஷன் வீட்டுக்கு அழைச்சிட்டு போனோம். அங்க அவ எந்த ஒரு சஞ்சலமும் இல்லாம தானா அந்த வீட்டை காலி பண்ணி, வீரா வாங்கி வச்சிருந்த எல்லா பொருளையும், அவர் வளர்ந்த ஆஸ்ரமதுக்கே கொடுத்துட்டா. அவரோட நினைவா அவ எடுத்துட்டு வந்தது அதோ அங்க இருக்கு பாரு சில மல்லி பூ செடிங்க அது மட்டும் தான்.”
“ஓ...” என்றான் கொடிவீரன்.
“வீரா கூட வேலை பார்த்த சில பேர் அவரோட இறப்புக்கு வருத்தம் தெரிவிப்பாங்க. ஆனா, இவ அவங்க எதாவது பேச வந்தா இவளோட காது மெஷினை கழட்டி வச்சிட்டு, அவங்களுக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வந்து தருவா. அவளாவே பக்கத்து தெருவுல அவங்க புருஷன் பெயர்ல கேண்டீன் ஆரம்பிச்சு, அதுல வர பண்ணத்தை இவ செலவுக்கு போக மீதியை வீரன் வளர்ந்த ஆஸ்ரமதுக்கு தந்துடுவா.
“உன் சிஸ்டர் நான் வேலை பாக்குற இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வந்து அவங்க ஹஸ்பண்ட் பேர்ல இருந்த பணம் இவங்கள சேர வேண்டிய காசு பத்து லட்சத்தை கூட ஏதோ அஷ்ரமத்துக்கு தான்டா தந்து இருக்காங்க.
“ம்... வீரன் வளர்ந்த ஆஸ்ரமம் தான் அது.”
“ஓ...”
“இன்னும் பத்து நாள் கடந்தா வீரா இறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது. ஆனா இவ என்னடானா, அவர் கூட பல வருஷம் வாழ்ந்த மாதிரி அவருக்காக, மறுமணம் எல்லாம் வேணாம். நான் இப்படியே இருக்கேன்னு அவரோட ஒரு போட்டோவை வச்சிக்கிட்டு அது கூடவே வாழலாம்னு முடிவு பண்ணிட்டா போல.
“அது எப்படிடா? பாவம் உன் சிஸ்டர் சின்ன பொண்ணு.”
“ம்... அதுக்கு தான்டா இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க நாங்க படாத பாடுபடுறோம்.”
“உடனே எப்படிடா முடியும். அவங்களுக்கான டைம் குடுக்க வேண்டாமா? கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் பேசு” என்றான் கொடிவீரன்.
“என்னவோ போ. எல்லாம் அவன் செயல். சரிடா நான் கிளம்புறேன்.”
“இருடா. நான் உன்னை பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விடுறேன்.”
“இல்லடா. நான் நடந்து போய்க்கிறேன்.
“சரி பார்த்து போயிட்டு வா சுரேஷ்.”
“டேய் என்னால அடுத்த வாரம் இங்க வர முடியாது. சோ நீ இங்க எதாவதுனா கொஞ்சம் பார்த்துக்கோ.
“ம்... கண்டிப்பா பார்த்துக்கிறேன்டா.”
கொடியின் அறையில் இருந்து வெளியே வர, அங்கே மகிழினி மல்லி தோட்டத்தில் நின்று இருந்தவளை பார்த்து அவள் அருகில் சென்றவனை கொடியும் பின் தொடர்ந்தான்.
"பாப்பா" என்று அவள் தோள் மீது கை வைத்ததும்,
"ஹாங் சொல்லுங்க அண்ணா" என்றாள் அந்த பூக்களின் மீது கவனத்தை செலுத்தியப்படி
"நான் கிளம்புறேன்மா" என்றான் சைகையுடன்
"ம்... போகும் போது அண்ணிக்கு சாப்பாடு கொண்டு போங்க" என்று சொன்னவள் மீண்டும் தன் பார்வையை செடிகள் மீது பதித்தாள்.
"ம்" என்றான் கவலையாக
"சரி நேரத்தோடு நீங்க கிளம்புங்க" என்று சொன்னவள் மேலும் பேச்சை வளர்க்காமல் தன் பணியைத் தொடர்ந்தாள்.
"பாப்பா நான் அடுத்த வாரம் வர முடியாது. உனக்கு எதாவது உதவி வேணும்னா என் நண்பன் கொடி கிட்ட கேளு" என்று சுரேஷ் கொடிவீரனைச் சுட்டி காட்டினான்.
மகிழினி தன் அண்ணனை பார்த்து ஏளனமாக சிரித்து, "நீங்க இல்லாத போது இவர் தான் எங்களுக்கு துணையா இருந்தாரா என்ன?" என்று அழுத்தமாக கேட்டதும் கொடியின் முகம் இறுக்கமாக மாறியது
"இல்ல பாப்பா" என்று இவன் விளக்கம் தரும் முன்பு,
"சரி எதாவது தேவைன்னா கண்டிப்பா கேக்குறேன்" என்று சொன்னவளின் பார்வை கொடிவீரனின் மீது சிறிதளவும் படரவில்லை.
"சரிமா. நான் கிளம்புறேன். கொடி வரேன்டா" என்று அங்கிருந்து கிளம்பியதும், கொடி சகஜமாக மகிழினியிடம் பேச எண்ணியவன்,
முதலில் அவள் காதில் மெஷின் உள்ளதா என்று தெரிந்து கொள்ள நினைத்தவன், அவளையே உற்று பார்த்து கொண்டு இருந்தான்.
"என்ன சார் எதாவது சொல்லனுமா?" என்று மகிழினி நேருக்கு நேராக நின்று கேட்டதும் திட்டுகிட்டு விழித்தவன், "அது ம்... ஆமாங்க சொல்லணும் தான்" என்று ஒரு முடிவோடு அவள் முன் வந்து நின்றான்.
மகிழினி புருவம் உயர்த்தி அவனிடம் "என்ன?" என்று வினவியதும்.
"இல்லிங்க ஆக்சுவலி உங்க நிலைமை எனக்கு புரியுது. ஆனா, உங்க அண்ணனும் பாட்டியும் பாவம் தானே. அவங்க உங்களுக்கு இன்னோரு வாழ்கை வேணும்னு நினைக்கிறதுல தப்பு இல்லையே" என்று முதலில் தயங்கினாலும் பிறகு தைரியத்தை வர வைத்து அவளிடம் இந்த கேள்வியை கேட்டதும் மகிழினி மீண்டும் சிரித்தாள்.
"உங்க நண்பன் நிம்மதியா இருக்கணும்னு நீங்க நினைக்கிறதுல தப்பு இல்ல. ஏன்னா அவர் உங்க நண்பன். ஆனா, என்னோட பர்சனல் லைப்ல பிளீஸ் நீங்க தலையிட வேணாம். உங்க எல்லோரை விடவும் எனக்கு என் வாழ்க்கை மேல நிறையவே அக்கறை இருக்கு" என்று சிரித்த முகத்துடன் மகிழினி சொல்ல, கொடி சற்று முகம் மாறினான்.