Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 101
- Thread Author
- #1
விவாதக் காதல் – 5௦
மகிழினியிடம், “பரவாயில்லைங்க. சுடுதண்ணீரை நானே எடுத்துட்டு போறேன்” என்றவன் அவள் கையில் இருந்த தண்ணீரை வாங்கிக்கொள்ள, மகிழியின் முகம் எந்த ஒரு விருப்பு வெறுப்பையும் வெளிப்படுத்தாமல் இருப்பதைக் கண்டு நிம்மதி பெருமூச்சுடன், “என்ன பாட்டி நீங்களும் அத்தை கூடவே நம்ம ஊருக்கு போறிங்களா?” என்று கேட்க,
“ம்... ஆமா தம்பி. உங்க அம்மா தான் என்னையும் கீதாவயும் நாளைக்கே வர சொன்னாங்க” என்றார் அவருக்கு தேவையான துணிகளை அடுக்கி கொண்டே.
“பாட்டி நான் எந்த பையில டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிக்க?” என்று வேணு கேட்க,
“என்ன வேணு? உனக்கு ஸ்கூல் இல்லையா? நீயுமா இவங்க கூட ஊருக்கு போகப்போற என்றவள் வேணுவை தன்னோடு கட்டிக்கொண்டு அவன் முடியை கோதிக்கொண்டே கேட்டாள் மகிழினி.
“ஆமா அத்தை நானும் இவங்கக்கூட நாளைக்கு கிளம்புறேன்.”
பாட்டி, கீதா, வேணு என்று அவர்களுக்கு உடமைகளை எடுத்து வைத்துக்கொள்ள, கொடிவீரனின் பார்வை அவனின் பாவையின் விழிகளை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தது.
“மாமா, நீங்க அத்தை கூட எப்ப வருவீங்க? என்று சிறுவன் கேட்டதும் இயல்பு பார்வைக்கு வந்து, “நாங்க வெள்ளிக்கிழமை காலையில அங்க இருப்போம்டா” என்றவன் கீதா அருகில் அமர்ந்து கொண்டான்.
“ஏன் தம்பி நீங்களே தாலி பண்ணிப் போடுவீங்கன்னு உங்க அம்மா சொன்னாங்களே. நீங்க அந்த வேலையெல்லாம் கூட பண்ணுவிங்களா?” என்று கேட்டார் பாட்டி.
“என் மாப்பிள்ள நகை மட்டும் இல்ல. சமையல் கூட நல்லா தான் பண்ணுவாரு. கேட்டரிங் எல்லாம் படிச்சாரு. ஆனா, இவரோட அம்மா தான் கரண்டி பிடிக்கிற ஆம்பளைங்களுக்கு எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காதுன்னு சொல்லி, இவர ஊர் விட்டு ஊர் ஆபீஸ் உத்தியோகத்துக்கு அனுப்பி வச்சிருக்கா.”
“என்ன நீங்க சமையல் பண்ணுவிங்களா?” என்று ஆச்சர்யமாகக் கேட்டாள் மகிழினி.
“உங்க அளவுக்கு எல்லாம் இல்லிங்க. ஏதோ பண்ணுவேன்.” என்றான் பவ்யமாய்.
“என்னமா நீ. உன் புருஷனுக்கு என்னல்லாம் தெரியும்னு கூட உனக்கு தெரியாதா?” என்றார் கீதா.
‘என்ன அவங்க புருஷனா நினைக்கிறங்களான்னே அவங்களுக்கு தெரியல’ என்று மனதில் பேச, மகிழினி அவனைக் கண்டு முறைத்தாள். “ஏங்க முறைக்கிறீங்க?” என்றான் காரணம் அறியாது.
“உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது.”
“ஐயோ! சரி சரி நான் போய் தூங்குறேன். குட் நைட்.”
“மாப்பிள்ள பங்க்ஷன்கு உங்க அண்ணன் அண்ணி வருவாங்களா?”
“ஏன் அத்தை? என் அண்ணன் வந்தா அவர அங்கேயும் வந்து நீங்க வம்பு பண்ணலாம்னு பாக்குறீங்களா?”
“யாரு, நான் உங்க அண்ணனை வம்பு பண்ணுறேனா?”
“ஆமா. எங்க அண்ணன் பாவம் தானே.”
“அவனுக்கு பாவம் பார்த்தா ஊர் தாங்காதுபா” என்றார் கீதா.
“அண்ணனை அம்மா கூப்பிட்டு இருப்பாங்க தான் அத்தை. சரி நீங்க நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்புறீங்க? நான் வேணும்னா ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணவா?”
“இல்ல மாப்பிள்ள. உங்க அக்கா சசியே எல்லா வேலையும் அங்க இருந்தபடியே பண்ணிட்டா. நாங்க நாளைக்கு காலையில பத்து மணி பஸ்க்கு கிளம்பிடுவோம்.”
“நான் வேணா ஆபீஸ்ல சொல்லிட்டு வந்து உங்கள பஸ் ஸ்டாண்ட் அழைச்சிட்டு போகவா?” என்று கேட்டான் கொடிவீரன்.
“அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீங்க ஏன் அடிக்கடி லீவு சொல்லுறிங்க?”
“ம்... சரி அத்தை. காலையில பாக்கலாம். வேணு வா தூங்க போகலாம்.”
“நான் ஏன் வரணும்?” என்று கேட்டான்.
“நீ தானேடா இனிமே மாமா பக்கத்துல தூங்க போறேன்னு, உங்க அத்தைகிட்ட சொல்லிருக்க.”
“என்ன நான் சொன்னேனா அதெல்லாம் நான் சொல்லல. எங்க அத்தை தான் நான் முடியாதுன்னு சொல்லியும் என்னை வலுகட்டாயமாக உங்க கூட படுக்க அழைச்சிட்டு வந்தாங்க” என்று உண்மையைச் சொல்ல அவளோ தலையில் கை வைத்துவிட்டாள்.
“ஓ... ஏங்க நீங்க பொய் கூட சொல்லுவிங்களா?”
“ஆமா நான்தான் உங்களுக்கு அடிபட்டு இருக்கும்போது தனியா படுக்க வேணான்னு நினைச்சு, உங்க கூட தூங்கலாம்ன்னு வந்தோம். ஏன் இப்போ என்னவாம் அதுக்கு?” என்றாள் திமிராக.
“அப்போ வாங்க. நேரமாகுது பாருங்க. வாங்க போய் தூங்கலாம்.” என்றான் அடித்ததுடா யோகம் என்பதாக.
“ஐயோடா ஆளைப்பாரு. அதான் உங்க கை கட்டு எல்லாம் கழட்டியாச்சு இல்ல. இனிமே எங்க துணை உங்களுக்கு எதுக்கு போங்க போய் தூங்குங்க” என்றவள் பொய்யான கோபத்துடன் அவள் அறைக்கு செல்ல,
“கட்டின பொண்டாட்டி கூட ஒரே ரூம்ல தூங்கணும்னா, நம்ம கை கால்ல கட்டு வேணும் போல” என்று இவன் முனங்குவதை கேட்டு
“உங்க நிலமை பாவம் தான்போல மாப்பிள்ள. போங்க போய் வெறும் தரையில கவுந்து அடித்து படுத்துக்கோங்க. போங்க” என்றார் கீதா.
“ம்... எனக்கு என் பழனி மாமா ராசி போல. குட் நைட் அத்தை” என்றவன் கையில் ப்ளாஸ்குடன் மாடிக்கு சென்று கட்டிலில் படுத்தவன் மனதை முழுவதுமாக மகிழினியின் உருவம் மட்டுமே நிறைந்து இருந்தது
மறுநாள் காலை எப்போதும் போலவே கொடிவீரன் தன் அலுவலகத்துக்குக் கிளம்பி கீழே இறங்கி வர, மேசை மேல் அவனுக்காக காலை உணவுடன் சேர்ந்து, மதிய உணவை இவனுக்காக ஒரு பையில் தயாராக வைத்துவிட்டு, மகிழினி தன் கேண்டீன்கு சென்று இருப்பதை அறிந்து கொண்டவன், காலை உணவை சாப்பிட அமர்ந்ததும், கீதா கையில் தண்ணியுடன் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார்.
“மாப்பிள்ள எங்களுக்கு கேப் மட்டும் புக் பண்ணிடுங்க. நாங்க 9.30 மணிக்கு இங்க இருந்து கிளம்புறோம்” என்றார் கீதா.
“ம்... சரி அத்தை. பார்த்து போயிட்டு வாங்க. போனதும் எனக்கு மெசேஜ் பண்ணுங்க. வேணு ஜாக்கிரதை பாட்டிக்கு மருந்து எல்லாம் எடுத்துக்கோங்க.”
“ம்... சரி மாப்பிள்ள” என்று சொல்ல,
பாட்டி அவர் அறையில் இருந்து வெளியே வந்தவர், “ஏன் தம்பி நீங்க பஸ்ல வருவிங்களா? இல்ல உங்க காருல வருவீங்களா.?” என்க,
“காருல தான் பாட்டி.”
“கார்லையா?”
“ம்... ஏன் பாட்டி? உங்க பேத்தி பயப்படுவாங்கன்னு நினைக்கிறிங்களா?”
“ம்... ஆமாபா.”
“நான் பாத்துக்குறேன். நீங்க கவலைப்படாம கிளம்புங்க” என்று சொன்னவன், மதிய உணவை எடுத்துக்கொண்டு அனைவரிடம் இருந்தும் விடைபெற்று, அவனுடைய வேலைக்கு செல்ல, ஒரு வார காலம் அவனுக்காக காத்திருந்த எல்லா வேலைகளையும் செய்தான்.
ரேஷ்மா அவள் அறையில் தன் வேலையில் முழுகி இருக்க, நேரம் கடந்ததை உணராமல் இருவரும் ஒன்றாக மதிய நேரம் கேண்டீன்கு சாப்பிட வந்ததும், ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தவர்களுக்கு, இயல்பாக இதழ்களில் புன்னகை மலர்ந்தது.
“என்ன வீரா? உடம்பு இப்போ எப்படி இருக்கு?”
“ம்... இப்போ ஓகே தான் ரேஷ்மா” என்றான் கொடிவீரன்.
“வாங்களேன் சேர்ந்தே சாப்பிடலாம். உங்களுக்கும் சேர்த்து நான் ஆர்டர் பண்ணவா?”
“நோ தேங்க்ஸ் ரேஷ்மா. நான் லஞ்ச் எடுத்துட்டு வந்துருக்கேன்.”
“இட்ஸ் ஓகே. பட் சேர்ந்து சாப்பிடலாமே.”
“ம்...”
“இதோ இந்த டேபிள்ல உக்காரலாமா?” எனவும் கொடிவீரன் சம்மதம் சொல்ல, இருவரும் ஒன்றாக ஒரு டேபிளில் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டு கொண்டு இருக்க,
“என்ன சாப்பாடு இது பார்க்க கலர் கலரா இருக்கு. நல்லா இருக்குமா?” என்று கேட்டாள்.
“இது வானவில் சாதம்ங்க. என் பொண்டாட்டி எனக்காக ரெடி பண்ணுற ஸ்பெஷல் ரைஸ்.” சந்தோசமாக சொன்னான்.
“அப்படி என்ன இதுல ஸ்பெஷல் இருக்கு?”
“ம்... உங்க தட்டுல நீங்க ஆர்டர் பண்ண சாப்பாடு வகை வகையா இருந்தாலும், என் தட்டுல எனக்காக, என் பொண்டாட்டி ரெடி பண்ணி தந்த இந்த சாப்பாடை எட்டிப்பார்த்து இத்தனை கேள்வி கேக்குறீங்க பாருங்க. இது தான் ஸ்பெஷல்” என்றான் பெருமையாக.
“அது என்ன சாப்பாடுன்னு கேட்டதுக்கா நீங்க இவ்ளோ பேசுறிங்க?”
“ஓ... அதிகமா பேசுறேனோ.”
“சரி நீங்க சாப்பிட்டு வாங்க. நான் வொர்க் கன்டினியூ பண்ணப்போறேன்.”
“ம்...”
“தென் நீங்க பிரைடே லீவு கேட்டீங்கன்னு மேனேஜர் சொன்னாரு. ஏன் வீரா எங்காவது வெளிய போறிங்களா? பர்சனல்னா சொல்ல வேணாம்.”
“ம்... ஆமா பர்சனல் தான்.”
“பட் நீங்க இத்தன நாள் இங்கேயே லீவு எடுத்துட்டா, எங்க அண்ணன் கல்யாணதுக்கு எப்படி இங்க லீவு கொடுப்பாங்க” என்று கேட்டாள்.