Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 97
- Thread Author
- #1
விவாதக் காதல் - 48
ரேஷ்மாவிடம் தோற்று போனவனாக இறங்கி வந்தவன், கீழ் வீடு பூட்டி இருப்பதை பார்த்து, ‘வீட்டுல யாரும் இல்லையா? அத்தை, பாட்டி ரெண்டு பேரும் எங்க கிளம்பி போனாங்க?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டிருக்க,
அவனைக் கண்டுவிட்ட ரேஷ்மா வேகமாக காரில் இருந்து இறங்கி முன் கதவை திறந்துவிட்டு, “வீரா வாங்க நேரமாச்சு” என்று அழைத்ததும், கொடிவீரன் காரில் ஏறி அமர்ந்துகொண்டான். இந்தக் காட்சியை எதிர் வீட்டில் விளையாடி கொண்டிருந்த வேணு பார்த்த சமயம், மருத்துவமனை அழைத்துச் சென்றவள், திரும்பி வந்து விடும்போது மணி மாலை ஆறு ஆகிவிட்டது.
காரில் இருந்து இறங்கிய கொடிவீரன், “ரொம்ப தேங்க்ஸ்ங்க. நீங்க கிளம்புங்க. நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம்” என்றான்.
“நீங்க ரொம்ப மோசம் வீரா. நான் உங்கள வெளிய எங்காவது காபி ஷாப் அழைச்சிட்டு போறேன்னு சொன்னதுக்கும் வேணான்னு சொல்லிட்டீங்க. சரி உங்க வீட்டுலயாவது ஒரு வாய் காபி தருவிங்கன்னு பார்த்தா, இப்படி ரோட்டுல நிக்க வச்சு விரட்டி விடுறிங்க.”
“இப்போ என்ன உங்களுக்கு காபி வேணுமா?”
“ம்... ஆமா.”
“சரி வாங்க” என்றவன் ரேஷ்மாவுடன் வீட்டுக்குள் நுழைய ஹாலில் பாட்டியும் கீதாவும் அமர்ந்து இருந்தார்கள்.
“ஹாய் பாட்டிஸ்” என்று ரேஷ்மா குதூகலமாகக் கத்த,
“வாமா உக்காரு.” என்றதும் அவள் அவர் அருகில் அமர, கீதாவோ வாயை மூடி திறக்கவில்லை.
“என்ன தம்பி வெளிய போயிட்டு வரிங்களா? எங்க கையில கட்டு கழட்டியாச்சா?”
“ம்... ஆமா பாட்டி. நாளைக்கு வேலைக்குப் போகணும். அதான் டாக்டரை பார்த்து கட்டு ரிமூவ் பண்ணிட்டு வந்தேன்.”
“நீங்க ஹாஸ்பிட்டல்கு தனியாவா போனீங்க?” என்று அவர் கேட்க,
“அது...” என்று திணறினான் கொடிவீரன்.
“நோ நோ. நான்தான் வீராவை என் காருல அழைச்சிட்டு போய், அவரு கூடவே இருந்து மறுபடியும் ஜாக்கிரதையா அழைச்சிட்டு வந்தேன்.” என்று ரேஷ்மா சொல்ல, கீதா அப்படியே அமைதியாகவே அமர்ந்திருக்க, பாட்டி, “ஓ...” என்றார்.
“அத்தை என்னாச்சு உங்களுக்கு பல்வலியா?”
“ஹ்ம் இல்ல மாப்ள.”
“பின்ன ஏன் வாயில கைய வச்சிக்கிட்டு உக்காந்து இருக்கீங்க?”
“சாரி மாப்ள.”
“எதுக்கு சாரி?”
“அது வந்து... நான்...” என்று பேசாதிருக்க,
“கீதா இரு. பாப்பா நீ என்ன சாப்பிடுற?” என்று கேட்டார் பாட்டி.
“பாட்டி அவங்களுக்கு காபி வேணுமாம். கீதா அத்தை நீங்க இவங்களுக்கு ஒரு காபி போட்டு கொண்டு வரிங்களா?” என்று தன் அத்தையை கேட்க, கீதாவோ வாயில் வைத்த கையை எடுக்காமல் திருட்டு முழி விழித்து கொண்டிருக்க, அதைப் பார்த்து, "என்ன?" என்று கண்களால் கேள்வி கேட்கும் சமயம்
"காபி காபி காபி எடுத்துக்கோங்க காபி காபி" என்று சமையல் அறையில் இருந்து வந்த வேணு, தன் கையில் இருந்த காபியை ரேஷ்மா எதிரில் நீட்டினான்.
“டேய் வேணு நீயா காபி போட்ட” என்று இவன் கேட்டதும்
“நான் இல்ல மாமா. அத்தை போட்டாங்க” என்றான்.
“ஓ... சிஎம் கேண்டீன்ல இருந்து வந்துட்டாங்களா?” என்று சமையல் அறையை எட்டிப்பார்க்க, அங்கே மகிழினியின் நிழல் மட்டுமே தரையில் தெரிந்தது.
“ரேஷ்மா நீங்க அத்தைகிட்ட பேசிகிட்டு இருங்க. நான் இதோ வரேன்” என்றவன் சமையல் அறையை நோக்கி செல்ல
“மாப்பு வேணா போகாதீங்க” என்று எச்சரித்தார் கீதா.
புருவம் உயர்த்தி "ஏன்?" என்று கேட்க,
“சாரி மாப்ள. ஆக்சுவலி இன்னைக்கு உங்க சிஎம் காலையில கேண்டீன் போகும் போது, உங்ககிட்ட சொல்லச் சொல்லி என்கிட்ட ஒரு செய்தி சொன்னாங்க. அதை நான் உங்கக்கிட்ட சொல்ல மறந்துட்டேன்” என்றவர் பச்சைப்பிள்ளையை போல முகத்தை பாவமாக வைக்க,
அவர் அருகில் சென்றவன், “என்ன அத்தை? என்ன சொல்லுறீங்க? என்கிட்ட அவங்க அப்படி என்ன சொல்ல சொன்னாங்க?” என்று கேட்டான்.
“அதுவா மாப்பிள்ள. இன்னைக்கு நீங்க ஹாஸ்பிடல்கு போகணும்னு நேத்து என்கிட்ட சொன்னதை நான் உங்க சிஎம்கு இன்னைக்கு காலையில சொன்னேனா...”
“ம்... சரி. அதிலென்ன?”
“அதுக்கு உங்க சிஎம், கேண்டீன்ல வேலையை சீக்கிரமா முடிச்சிட்டு நான் 5 மணிக்கு எல்லாம் வந்து அவரை நானே ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போறேன்னு, உங்ககிட்ட சொல்ல சொன்னாங்களா...” கொடிவீரன் அவரை முறைக்க, “அதை நான் உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.”
“அத்தை” என்று அவன் பல்லைக்கடிக்க,
“நான் மகிழினி பாட்டி கூட பக்கத்துல கடைக்கு போய்ட்டு வரதுக்குள்ள, நீங்க இந்த பொண்ணு கூட வெளிய போய்ட்டிங்களா... நீங்க அப்படி போனதும் இப்படி உங்கள ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போக, உங்க சிஎம் ஆட்டோல வந்துட்டாங்க. உங்களை எங்கனு கேட்டதுக்கு இந்த வேணு பையன், நீங்களும், இந்த ரேஷ்மா பொண்ணும் ஒண்ணா காருல கிளம்பி போனீங்கன்னு போட்டு விட்டுட்டான்.” என்றார் கீதா.
“என்ன அத்தை சொல்லுறீங்க? அவங்க என்கூட ஹாஸ்பிடல் வர போறாங்கனு நீங்க சொல்லிருந்தா, நான் அவங்களுக்காக வெயிட் பண்ணிருப்பேனே” என்றவன் வேகமாக சமையல் அறைக்குள் நுழைய, வேகமாக இரவு உணவுக்காக காய்களை வெட்டி கொண்டுருந்த மனைவி அருகில் அருகில் சென்றவன், “ஏங்க சாரிங்க. நீங்க என்கூட வராதா இருந்திங்கன்னு எனக்கு தெரியாதுங்க.” என்று அவள் முகத்தையே பார்த்தான்.
“ஏன் மாமா நீங்க ரேஷ்மா அக்கா கூட காருல போகும்போது ஒரு பாட்டு சத்தம் கேட்டுச்சே. அது ஹிந்தி பாட்டா? இல்ல இங்கிலிஷ் பாட்டா?” என்று உள்ளே வந்தவனை பார்த்த கொடிவீரன் கடுப்பாக முறைக்க, மகிழினியோ இவர்கள் இருவரையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள்.
“ஏங்க உங்கிட்ட தான் பேசுறேன். பிளீஸ் என்னை பாருங்களேன். நீங்க அத்தைக்கிட்ட சொன்னது எனக்கு தெரியாதுங்க” என்று கெஞ்சும் குரலில் பேசியவனின் சூழ்நிலையை அறிந்துகொள்ள விரும்பாத மகிழினி, மேலும் அவள் செய்யும் வேலையில் மட்டுமே கவனமாக இருந்தாள்.
“வீரா நீங்க என்ன இதுக்கெல்லாம் இப்படி கெஞ்சிட்டு இருக்கீங்க. இவங்க உங்க வொய்ப் தானே. ஏன் உங்க அத்தைகிட்ட இன்பார்ம் பண்றவங்களுக்கு, உங்களுக்கு ஒரு போன் பண்ணி விவரத்தை சொல்ல முடியாதா என்ன? ஐ திங்க் இவங்ககிட்ட உங்க போன் நம்பர் கூட இருக்காதுன்னு தான் நான் நினைக்கிறேன்” என்று சமையல் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த ரேஷ்மாவைப் பார்த்து மகிழினி முகம் மாறினாள்.
“ப்ச் ரேஷ்மா நீங்க ஹால்ல போய் உக்காந்து காபி குடிங்க. நான் பேசிட்டு வரேன்.” என்றவன் மனைவியை பார்க்க,
“என்ன வீரா நீங்க. இவங்க பண்ண வேண்டிய கடமையை நான் உங்களுக்காக பண்ணிருக்கேன். ஆனா, இவங்க எனக்கு தேங்க்ஸ் சொல்லாம முகத்தை இப்படி தூக்கி வச்சுக்கிட்டு இருக்காங்க. ஓ... இதுனால தான் இவங்கள நீங்க சிஎம்னு கூப்பிடுறிங்களா?” என்றதில் கொடிவீரன் அதிர, மகிழினி முறைத்தாள்.
"அப்போ சிஎம்னா சிடு மூஞ்சியா" என்று ரேஷ்மா கிண்டலாக கேட்க,
அதே சமயம் பளார் என்று இடி விழும் சத்தம் போல அடி விழுந்தது வேணு கன்னத்தில்.
வேணுவுக்கு விழுந்த அடியில் கொடிவீரன், ரேஷ்மா அரண்டு போய் நின்று இருக்க,
“ஏன் அத்தை என்னை அடிச்சீங்க?” வேணு அழுதபடி கேட்டான்.
“சமையலறைக்கு செருப்பு காலோட வரக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?”
“நான் எங்க செருப்பு போட்டு இருக்கேன்.”
“நீங்க என்னை தானே சொல்லுறீங்க?” என்று இடையிட்டாள் ரேஷ்மா.
“ரேஷ்மா நீங்க ஹால்ல போய் உக்காருங்க. பிளீஸ்” என்றான் கொடிவீரன்.
“இட்ஸ் ஓகே வீரா. நான் கிளம்புறேன். நம்ம நாளைக்கு வொர்க்ல மீட் பண்ணலாம்” என்றதும் தலையசைத்தான்.
“ஹலோ மேடம்” என்று செல்பவளை நிறுத்தினாள் மகிழினி.
“இப்போ ஏங்க போறவுங்கள கூப்புடுறீங்க” என்று பதறினான் கொடிவீரன்.
“வாட்?” கொஞ்சம் திமிராகவே கேட்டாள் ரேஷ்மா.
“அடுத்தவங்க வீட்டுக்கு போனா வாசல்ல செருப்பை கழட்டிட்டு போகணும்னு கூட உங்களுக்கு தெரியாம இருந்து இருக்கலாம். பட், அடுத்தவங்க பர்சனல் விஷயத்துல இன்டர்பயர் ஆகக்கூடாதுன்னு கூடவா உங்களுக்கு தெரியாது.”
மகிழினியின் வார்த்தையில் எரிச்சலாகிய ரேஷ்மா, “லிசன் நான் உங்க பர்சனல் லைஃப்ல தலைவிடல. நான் என் வீரா டார்லிங் கூட தான் பேச வந்தேன்.” என்றாள்.
“உங்க டார்லிங் டம்மக்கு எல்லாம் உங்க ஆபீஸ்குள்ள வச்சிக்கோங்க. இது எங்க வீடு. அண்ட் அவரு என்னை என்னவா நினைத்து சிஎம்னு கூப்பிடுறாருன்னு நீங்க கமெண்ட் பண்றதுக்கு, உங்களுக்கு எந்த ரைட்ஸ்ம் இல்ல. ஏதோ நீங்க என் ஃப்ரண்ட் மீனாவோட சிஸ்டர் இன்லானு உங்கள சும்மா விடுறேன். இல்லைன்னு வைங்க....”
கொடிவீரன் “ஐயோ!” என்று அலற,
“என்ன என்ன பண்ணுவீங்க?”
“ம்... நான் என்ன பண்ணுவேன்னு நீங்க உங்க டார்லிங்கிட்ட கேளுங்க. அவரு தெளிவா சொல்லுவாரு.”
“என்ன வீரா இது இவங்க ஏன் இப்படி என்கிட்ட கோவமா நடந்துக்குறாங்க. இங்க நடந்ததை எல்லாம் நீங்களும் தானே பார்த்துகிட்டு இருந்திங்க. என்மேல என்ன தப்பு இருக்கு?” நியாயம் கேட்டாள் அவனிடம்.
“ரேஷ்மா பிளீஸ் நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க.”
“இட்ஸ் டூ மச் வீரா.”
“இல்லிங்க. நான் சொல்றத கேளுங்க நீங்க முதல்ல கிளம்புங்க.” கெஞ்சலாகக் கேட்டான் ரேஷ்மாவிடம்.
“ஹலோ உங்க கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் வெளிய போய் வச்சிக்கிறிங்களா? இங்க நான் டின்னர் பண்ணனும்.”
“இந்த அவமானத்தை நான் கண்டிப்பா மறக்க மாட்டேன் வீரா.”
“வேணு அந்த அருவா எடு. இந்த தேங்காய் வெறும் கத்தியில உடைச்சா சரி வராது போல. அருவாள ஒரே போடு போட்டா வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டா ஆகும் பாரு.”
“ஒரு வெட்டு. ரெண்டு துண்டா அத்தை?” தன் சந்தேகத்தைக் கேட்டான் வேணு.
“ம்... ஆமாடா. ஏன் சந்தேகமா இருக்கா? நான் வேணா ரெண்டு பேரையும் துண்டு போட்டு காட்டவா?” என்றதும் ரேஷ்மா முறைத்தாள்.
“என்ன ரெண்டு பேரையா?”
“இல்ல தேங்காயை ரெண்டு துண்டு போடவான்னு கேட்டேன்டா?”
“எம்மா தாயி நீங்க எதையும் போட வேணாம். ரேஷ்மா பிளீஸ் நீங்க கிளம்புங்க.”
ரேஷ்மா கோவமாக மகிழினி வீட்டில் இருந்து வெளியேற, கீதாவும், பாட்டியும் இங்கே நடந்த எந்த விஷயத்திலும் தலையிடாமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்க, வேணு எப்போதும் போலவே, "நம்ம வாங்காத அடியா" என்று எதிர்த்த வீட்டுக்கு விளையாட சென்ற நிலையில், சமையல் அறையில் நின்றிருந்த மகிழினியின் முகம் கோவத்தால் சிவந்திருந்தது.