• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 46

Joined
Jan 15, 2026
Messages
93
விவாதக் காதல் - 46


சில நிமிடங்கள் கடந்த நிலையில், மகிழினி தன் அறைக்குள் நுழைந்தவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் கொடிவீரனை பார்த்து, “என்னா பேச்சு. இவருக்கு வாய் ரொம்ப அதிகம்பா.” என்று தனக்குள் அவனை கடிந்துக்கொண்டே, அவளை அறியாமல் அவனை ரசித்தவள், அருகில் இருந்த போர்வையை அவன் மீது போர்த்திய சமயம், கொடியின் கைபேசி பாடலை நிறுத்தி ஒரு அழைப்பு வந்தது. அதில் நம்பர் எதுவும் இல்லாது அந்னோன் என்று வந்தது.

“யாரு இந்த நேரத்துல போன் பண்ணுறாங்க? ஒருவேளை முக்கியமான கால் எதாவது இருந்தா. ம்... இவரை எழுப்பலாமா? இவரு வேற நல்லா தூங்குறாரே. சரி நம்மளே எடுத்துப் பேசுவோம்” என்று அழைப்பை ஏற்று,

"ஹலோ" என்று சொல்லும் முன்பே,

"என்னடா புது மாப்பிள, இன்னைக்கு தப்பிச்சிட்டன்னு சந்தோஷமா இருக்கியா? எப்பவா இருந்தாலும் உன்னோட முடிவு என் கையிலதான்டா மிஸ்டர். கொடிவீரன்" என்று மறுமுனையில் அதிகாரமான குரல் ஒலிக்க, அந்த குரலை கேட்டு மகிழினியின் முகம் இருள் சூழ்ந்தது.

அந்நேரத்தில் கண்கள் விழித்த கொடிவீரன், “என்னாச்சு சிஎம்? யார் போன்ல?” என்று கேட்க, அவளோ அதிர்ச்சி குறையாது நின்றிருக்க, “உங்கள தான் கேக்குறேன். என்னாச்சு?” என்றான்.

மகிழினி அவள் கையில் இருந்த போனை மேசை மேல் வைத்து, “உங்களுக்கு நடந்தது ஆக்சிடண்ட் இல்லையா?” என்று கேட்டதும், தன் படுக்கையில் இருந்து எழுந்தவன், “அது இல்ல. இ...இது விபத்து தான். ஆமா யாரு போன்ல?” என்றவன் கைபேசியை எடுக்க,

“அப்போ என்னால தான் உங்கள மறுபடியும் அந்த வனிதா தொல்லை பண்ணுறாளா?” என்றவளின் கண்களில் கண்ணீர் இருகோடுகளாக வெளியேற,

“ஐயோ இல்லங்க. ஏன் இப்ப அழறீங்க? சரி யாரு போன் பண்ணது? இதுல எந்த நம்பரும் தெரியலையே.”

“ம்... ஆமா. நமபர் ஏதும் தெரியலதான். ஆனா, பேசுனது கண்டிப்பா அந்த வனிதா தான். எனக்கு அவ குரல் நல்லாவே தெரியும்.”

“ஓ... சரி என்னவாம்?”

“ப்ச்... அப்போ அவளால தான் உங்களுக்கு விபத்து நடந்துச்சா?” அவன் அமைதியாக இருக்க, “பிளீஸ் சொல்லுங்களேன். அவ உங்கள என்னதான் பண்ணா?” என்று மகிழினி கத்தியதும் இவள் குரலை கேட்டு பாட்டியும், கீதாவும் கதவை தட்டிக்கொண்டு இவர்கள் அறைக்குள் நுழைந்தார்கள்.

“என்னம்மா சத்தம்? என்று கீதா கேட்க,

“என்ன சித்ரா இது? அடிபட்டு வந்துருக்குற பிள்ளைகிட்ட கத்திகிட்டு இருக்க நீ?” அவளைத் திட்டினார் பாட்டி.

“பாட்டி நாங்க சும்மாதான் பேசிகிட்டு இருக்கோம். பிளீஸ் நீங்க எல்லாம் போய்ப்படுங்க. சிஎம் நம்ம அப்புறம் பேசிப்போம். அவங்கள போய் படுக்க சொல்லுங்க” என்றான்.

கணவனை முறைத்த மகிழினி, “அம்மா இவருக்கு விபத்து தானா நடக்கல.” என்றதும் என்னவென்பதாய் இருவரும் கொடிவீரனைப் பார்க்க,

“அது வந்து பாட்டி” என்று திணறினான்.

“இப்போவது சொல்லுங்க. என்னதான் நடந்துச்சு?”

“ப்ச் பயப்படுற அளவுக்கு எல்லாம் ஒண்ணுமில்லங்க. நான் பைக்ல வரும்போது, ஒரு கார் வேணும்னே வந்து என் வண்டியில மோதுச்சு. நான் கீழே விழுந்த வேகத்துல சின்னதா அடிபட்டுச்சு. அப்போ அந்த காருல இருந்து இறங்கின ஒருத்தன், கத்தியோட என்னை நோக்கி வந்தான். அதுக்குள்ள அங்க கூட்டம் கூடிட்டதால, அங்க இருந்து அவங்க போயிட்டாங்க. ஆனா, அவனுங்க எல்லாம் யாருன்னு எனக்கு அப்போ தெரியல. அதுக்கு அப்புறம் தான் என் ஃப்ரண்ட் ஜீவா பார்த்து காப்பாத்தினது எல்லாம்.

“என்ன மாப்பிள்ள இது? அப்போ கொஞ்சம் விட்டுருந்தா இன்னைக்கு உங்கள அந்த ஆளுங்க எதாவது பண்ணிருப்பாங்க போல” என்றார் கீதா.

“ம்... ஆனா, இதெல்லாம் வனிதா ஆளுங்க தான் பண்ணாங்கன்னு எந்த சாட்சியும் இல்லையே அத்தை.”

“அதான் இப்போ அவளே போன் பண்ணி மிரட்டினாளே. கண்டிப்பா இது அவளோட வேலையா தான் இருக்கும். இது போதாதா அவளை மாட்டிவிட.” என்று சொன்னாள் மகிழினி.

“ப்ச் சரி இருந்துட்டு போகட்டும் விடுங்க.”

“என்ன விடணுமா? என்ன விளையாடுறிங்களா? இது உங்க உயிர் சமந்தப்பட்ட விஷயம்ங்க. ரொம்ப சாதாரணமா சொல்லுறீங்க” என்று எகிறினாள்.

“அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆகாதுங்க.”

“அப்படி நீங்க சொன்னா ஆச்சா. இல்ல நாளைக்கு நம்ம போய் கமிஷனரை மீட் பண்ணி அந்த வனிதா மேல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வரலாம்/”

“ஐயையோ நீங்க சும்மா இருக்க மாட்டீங்களா? அதெல்லாம் வேணாங்க.” என்றான் திரும்பவும்.

“நீங்க சும்மா இருங்க. வனிதா அடிபட்ட வெறி நாய் கண்டிப்பா அவ மறுபடியும் நம்மள தான் கடிக்க வருவா. அதுக்கு முன்னாடி அவ பல்லோடு சேர்த்து அவ பதவியையும் நான் புடுங்குறேன் பாருங்க.”

“நல்லா புடுங்குன நீ. இப்போ பாரு நீ அவகிட்ட வச்சிகிட்டதால தான் கொடி தம்பிக்கு இப்போ பிரச்சனை.”

“என்ன பாட்டி நீங்க. அப்போ அவ அதிகாரத் திமிர்ல இத்தனையும் பண்ணிக்கிட்டு இருப்பா. நம்ம இதெல்லாம் பார்த்துகிட்டு அமைதியா போகணுமா?”

“அம்மாடி சித்ரா. இப்போ அதெல்லாம் வேணாம்மா. நம்ம வேணும்னா இந்த விஷயத்தை சட்டப்படி டீல் பண்ணலாம்.” என்றார் கீதா.

“அத்தை ஏன் நீங்க வேற.”

“ஏங்க நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. கீதா அம்மா நீங்க சொல்லுங்க. சட்டப்படினா எப்படி டீல் பண்ணலாம்னு சொல்லுறிங்க.?”

“நாம அந்த வனிதா மேல கேஸ் போடலாம்.”

“ஆமா கோர்ட்ல இருக்குற பெண்டிங் கேஸ் எல்லாம் பத்தல போல.” என்று சடைத்தான் கொடிவீரன்.

“ஆமாமா கேஸ் எல்லாம் வேணாம். நாளைக்கு நான் இவரை அழைச்சிட்டு போய் கமிஷனர் கிட்ட வனிதா மேல கம்பளைண்ட் பண்ணிட்டு வரேன்.”

“ஏங்க நாளைக்கு கதையை நாளைக்கு பேசிப்போம். அத்தை நீங்க பாட்டியை அழைச்சிட்டு போய்ப்படுங்க.”

“ம்... சரி மாப்பிள.” என்று கீதா சொல்லவும்,

“என்னமோ போங்க. ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க முடியல” என்ற பாட்டியும், கீதாவும் இவர்கள் அறையில் இருந்து வெளியே செல்ல,

பாவமான முகத்துடன் மகிழினி எதிரில் வந்த கொடிவீரன், “பிளீஸ் கோவப்படாம இப்போ தூங்க வரிங்களா” என்றான்.

“ஆமாமா இவ்ளோ நடந்துருக்கு. இதெல்லாம் மறச்சிட்டு அப்படியே நல்ல பிள்ளை போல தூங்க கூப்பிடுறிங்களா?”

“நான் நல்ல பிள்ள தாங்க” என்றான் அப்பாவியாய்.

“ம்... இவ்ளோ நல்லவனா இருந்தா இதுக்கு பெயர் கேனைத்தனம்.”

“ம்... உண்மைதாங்க. என்னை கேனையன்னு நினைத்ததால தான், கட்டின பொண்டாட்டியே என்னை வேணான்னு சொல்லிட்டாங்க.” அவள் முறைக்க, “நீங்க ஏங்க முறைக்கிறிங்க நான் என் பொண்டாட்டியை தானே சொன்னேன்?” என்றான் கிண்டலாக.

“நீங்க பேச்சை மாத்தாதீங்க. நாளைக்கு கமிஷனரை பார்க்க போறோம்” என்றவள் தரையில் பாய் விரித்து புத்தகத்துக்கு நடுவில் இருக்கும் வீரவேலின் கிழிந்த புகைப்படத்தை எடுத்து, தன் தலையணை கீழ் வைத்தவள், “எதாவது வேணும்னா என்னை எழுப்புங்க குட் நைட்” என்று படுத்துவிட்டாள்.

மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்த மகிழினி, உறங்கிக் கொண்டிருக்கும் கொடிவீரனுக்கு தொல்லை தராமல், அவனுக்கு தேவையானவற்றை தயார் செய்து, பாட்டியிடமும், கீதாவிடமும் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி தன்னுடைய கேண்டீன்கு சென்றவள், அடிக்கடி பாட்டியை அழைத்து கணவன் நிலையை அறிந்து கொண்டாள்.

வேலைகளை சீக்கிரமாக முடித்து மூன்று மணியளவில் வீடு திரும்பியவள் கண் எதிரில் மாறன், கீதா, பாட்டி மற்றும் கம்பீரமான தோரணையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அமர்ந்திருக்க, அவரை பார்த்தபடி வீட்டுக்குள் நுழைந்தவள் அனைவரையும் பார்த்து சிரித்த முகத்துடன் வணக்கம் சொன்னாள்.

"வாமா பாப்பா. சார் இவங்க தான் என் தம்பி பொண்டாட்டி. பாப்பா இவரு யாருன்னு உனக்கு தெரியுமா?" என்று கேட்டான் மாறன்.

"தெரியாதுங்க" என்றவளின் கண்கள் கொடிவீரனை தேட,

"என்னமா உன் புருஷனை தேடுறியா? நான்தான் அவர்கிட்ட வனிதா மேல கம்பளைண்ட் லெட்டர் எழுதி தர சொன்னேன். அந்த லெட்டர் ரெடி பண்ணதான் உன் புருஷன் உங்க ரூமுக்கு போயிருக்காரு" என்று அந்த நபர் சொல்ல, அறையில் இருந்து வந்த கொடிவீரன் தன் கையில் இருந்த கம்ப்ளைன்ட் லெட்டரை அந்த நபரிடம் கொடுத்தான்.

அதைப் பார்த்த மகிழினி கண்களால் "யாரு இவரு" என்று கேட்க,

"இவர் கமிஷனர் ஜெகன். நம்ம கபடி குழுவுல இவரோட பையன் தான் இப்போ டாப் ப்ளேயர்” என்று சொல்ல, மகிழினி அவரை பார்த்து மீண்டும் வணக்கம் வைத்தாள்.

“என் பையன் இன்னைக்கு டாப் ப்ளேயர்னா அதுக்கு இவங்க ரெண்டு பேர் தான்மா காரணம்.”

“அப்படி எல்லாம் இல்ல சார். உண்மையாவே உங்க பையன் நல்ல திறமையானவன் தான்.”

“ம்... நல்லதுபா. சரி நீங்க எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க. இந்த கம்பளைண்டை நான் பர்சனலா டீல் பண்ணிக்குறேன்.” என்றார் ஜெகன்.

“உங்களுக்கு ரொம்ப நன்றி சார்” என்றான் கொடிவீரன்.

“நோ பார்மாலிடீஸ் வீரா. உடம்ப பார்த்துக்கோங்க.”

“ம்... சரி சார். உங்க பையன கேட்டதா சொல்லுங்க.”

“கண்டிப்பா சொல்லுறேன்,

“சார் அந்த வனிதாவை சும்மா விடாதீங்க.” என்றாள் மகி.

“நான் பார்த்துக்குறேன் மிசஸ்.மாறன். யூ டோன்ட் ஒர்ரி.”

“ரொம்ப தேங்க்ஸ் சார். இவ்ளோ தூரம் என் தம்பியை பார்க்க நேர்ல வந்தது பெரிய விஷயம் சார்” என்றான் மாறன்.
 
Joined
Jan 15, 2026
Messages
93
“ஏன் இப்படி எல்லாம் சொல்லுறீங்க மாறன். நீங்களும் என் பேமிலி மெம்பர்ஸ் போல தானே. ஆக்சுவலி நானே கேவியை பார்த்து ஏன் கபடி கோச் கன்டினியூ பண்ணலன்னு கேட்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா, நீங்கதான் சொல்லிட்டீங்களே. அவங்க அம்மாக்கு விருப்பம் இல்லைன்னு. அப்படி இருக்கும்போது இதுல நான் சொல்ல என்ன இருக்குன்னு தான் அப்படியே விட்டுட்டேன்.”

“என்ன சார் பண்ண சொல்லுறிங்க. பிள்ளைங்க பிடித்ததை பண்ண பெத்தவங்களே தடையா இருக்காங்க.”

“ம் உண்மைதான்” என்று அவர் சொல்லும்போது கீதா முறைக்க, “சரிப்பா நான் கிளம்புறேன். மாறன், கொடிவீரா நீங்க ரெண்டு பேரும் உங்க மிசஸ் கூட நம்ம வீட்டுக்கு ஒருநாள் விருந்துக்கு வரணும் ஓகேவா?”

“ம் கண்டிப்பா சார்.” மாறன் சொல்ல,

“சார் அப்புறம் இந்த கம்பளைண்ட் விஷயத்தால மறுபடியும் இவங்களுக்கு ஏதும் பிரச்சனை வராதுல்ல?”

“நோ வீரா. எந்த பிரச்சனையும் வராது நான் பார்த்துக்குறேன்” என்ற கமிஷனர் வெளியேறியதும் பாதி புரிந்தும் புரியாதவளாக கொடிவீரனை பார்த்து மகிழினி கேள்வி கேட்கும் முன்பு,

“என்னமா இங்க என்ன நடந்துச்சுன்னு புரியலையா?” என்று மகி கேட்க,

“ம்ம்...” என்று தலையாட்டினாள் மகிழினி.

“பாப்பா கமிஷனர் ஜெகன் எங்களுக்கு தெரிஞ்சவர். நேத்து என் தம்பிகிட்ட அந்த வனிதா மறுபடியும் பிரச்சனை பண்ணான்னு, எனக்கு நைட் மெசேஜ் அனுப்புனான். போதாக்குறைக்கு நீயும் வனிதா பேர்ல கம்பளைண்ட் பண்ணும்னு சொன்னியாமே. அதான் நானே கமிஷனர் சாரை இங்க அழைச்சிட்டு வந்துட்டேன்.”

“மாறன் மாமா சொன்னதுதான். இனிமே நீ எதுக்கும் பயப்படாத சித்து. ஜெகன் சார் எல்லாத்தையும் பார்த்துப்பாரு.”

“உங்களுக்கு ரொம்ப நன்றிங்க. நானே என்னடா இது என்னால இவருக்கு பிரச்சனை மேல பிரச்சனை வருதுன்னு ரொம்ப கவலையா இருந்தேன். இப்போ தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.”

“சரி மாமா கிளம்பலாமா?” என்று கேட்டாள் மகி.

“இந்தாடி என்ன வந்ததும் கிளம்புற? போன முறை வந்தப்ப கூட நீ சாப்பிட்டு போகல/ இரு நான் உனக்கு சாப்பாடு கொண்டு வரேன்” என்றார் கீதா.

“எனக்கு தேவையில்ல. என் மாமாக்கு மரியாதை இல்லாத இடத்துல நான் எப்படி சாப்பிடுவேன்.”

“எப்படினா கையில தான்” என்றான் வேணு.

“டேய் காடை முட்ட. என்ன என் அம்மா வாயா உனக்கு.”

"இல்லையே எனக்கு வேற வாய்.”

“நீ வேற வாயோ, நார வாயோ என்கிட்ட வச்சிக்காத. மாமா வாங்க போகலாம்.”

“அக்கா இருங்க சாப்பிட்டு போகலாமே.”

“இல்லமா இன்னைக்கு என் மாமாவுக்கு மேட்ச் இருக்கு. நாங்க சீக்கிரம் போகணும்.”

“ஆமா இவ போய் தான் இவன் கூட கபடி ஆட போறா.” கீதா நொடிக்க,

“நாங்க அங்க எல்லாம் ஆட மாட்டோம்” என்று கோபமாக சொன்னாள் மகி.

“அண்ணி ஏன் இப்படி கோவமா பேசுறீங்க. அண்ணா இருங்க சாப்பிட்டு போகலாம்.” என்றான் கொடிவீரன்.

“இல்லடா தம்பி. எனக்கு டைம் ஆகுது. நான் இன்னோரு நாள் வரேன். நீ உடம்ப பார்த்துக்கோ. பாப்பா என் தம்பியை பார்த்துக்கோமா”

“ம்ம்...” என்று மகிழினி சொல்ல,

“உடம்பெல்லாம் சரியான பின்னாடி உன் பொண்டாட்டியை அழைச்சிட்டு நம்ம ஊருக்கு வா.”

“ம்... சரி அண்ணா.”

“கீதா வரட்டா” என்று மாமியாரை வம்பிழுத்தான் மாறன்.

“வராத அப்படியே ஓடிடு.”

“அதான் உங்க பொண்ணை கூட்டிட்டு ஏற்கனவே ஓடிட்டேனே. இப்போ ஓடணும்ன்னா உங்கள கூட்டிட்டு தான் ஓடணும்.”

“மாமா நீ பண்ணாலும் பண்ணுவ. முதல்ல வா கிளம்பலாம்.” என்றதும் தன் காதல் மனைவியை அழைத்துக்கொண்டு மகிழினி வீட்டில் இருந்து வெளியேறினான்.

“என்னங்க நீங்க. உங்களுக்கு கமிஷனர் நல்ல பழக்கம்னு முன்னதாவே சொல்லிருந்தா நம்ம அந்த வனிதாவை சசி அக்கா கல்யாணத்துல பிரச்சனை பண்ணும் போதே அடக்கி வச்சிருக்கலாமே.”

“ம்... அப்போ இருந்த சூழ்நிலையில எனக்கு இதெல்லாம் யோசிக்க தோணலங்க.”

“அட போங்கங்க. எனக்கு மட்டும் இவரை முன்னதாக தெரிந்து இருந்தா நம்ம நாடக கல்யாணம் நடந்து இருக்கவே இருக்காது. நீங்களும் இப்படி என்னால கை காலை உடைசிகிட்டு வந்து உக்கார்ந்து இருக்கமாட்டீங்க. நானும் உங்கிட்ட டிவோர்ஸ் கேட்டு கெஞ்சிகிட்டு இருந்து இருக்க மாட்டேன்” என்று தன் கையில் இருந்த பையை ஓரம் வைத்தவள் அவனை கடந்து தோட்டத்து பக்கம் செல்ல,ஏனோ அவள் உதிர்த்த சொற்கள் கொடிவீரனின் இதயத்தை முள்ளாய் தைக்க,

அவன் முகம் வாடியதை கவனித்த கீதா, “என்ன மாப்பிள்ள? உன் பொண்டாட்டி பேசினதை நினைச்சு வருத்தப்படுறீயா?” என்று கேட்டார்.

“ப்ச் அதெல்லாம் இல்ல அத்தை. வார்த்தை விதை மாதிரி. வீரியம் உள்ள மண்ணுல நம்ம விரும்பி ஒரு விதையை விதைத்தாலும். இல்ல போற போக்குல யாராவது அந்த மண்ணுல விதையை தூவி விட்டு போனாலும். அது அந்த மண்ணின் விருப்பமே இல்லாமல் விளைய தொடங்கிடும்.”

“என்ன மாப்பிள்ள சொல்றிங்க?”

”நான் விரும்பி என் பொண்டாட்டியா அவங்கள நினைத்து எனக்குள்ள விதைத்து கொண்ட காதல் விதை போல, அவங்க மனசுல நான் இப்பவரை இல்ல.”

“ம்... காலத்தால் அவ மனசு மாறினா தான் உண்டு போல.”

“ம்... மாறும்னு நம்புவோம்.”

“சரி நீங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.”

“அத்தை அடுத்த முறை நீங்க மாறன் அண்ணனையும், மகி அண்ணியையும் திட்டாதீங்க.”

“அதை அடுத்த முறை பாப்போம்” என்றவர் சமையல் அறைக்கு செல்ல, கொடிவீரன் அறைக்குள் சென்று தன் கைபேசியில் இசையை ஒலிக்க செய்து, படுக்கையில் படுத்து கண்கள் மூடி பாடலை கேட்டவன் மனதில், ஏனோ அந்த பாடலை ரசிக்க முடியாமல், மகிழினி பேசிய சொற்கள் மட்டுமே அவன் செவியில் ஒலித்து கொண்டிருந்தது.

“என்னங்க தூங்குறீங்களா?” என்று வந்தாள் மகிழினி.

“ம்... இல்ல சொல்லுங்க.”

“இப்போ பெய்ன் ஓகேவா?”

“ம்...”

“ஜெயா அம்மா போன் பண்ணாங்களா??”

“நான் பண்ணி பேசுனேன். அக்கா, மாமா, அம்மா மூணு பேரும் காலஸ்த்ரி கோவில்ல வேண்டுதல்னு போயிருக்காங்க. அவங்க வந்ததும் உங்ககிட்ட பேசுறேன்னு சொன்னாங்க.”

“உங்களுக்கு அடிபட்ட விஷயம் இன்னும் அவங்களுக்கு நீங்க சொல்லலையா?” என்று கேட்டாள்.

“இல்லிங்க சொல்லல.”

“ம்... ஆனா, அம்மாவுக்கு எப்பாவது தெரிந்தா நான் சொல்லலைன்னு என்கிட்ட கோச்சிக்க மாட்டாங்களா?”

“அப்படியே தெரிந்தாலும் நான்தான் சொல்ல வேணான்னு சொன்னேன்னு சொல்லுங்க.”

“சரி நான் உங்களுக்கு குடிக்க முடக்கத்தான் கீரை சூப்பு ரெடி பண்ணேன். போய் எடுத்துட்டு வரேன். அதை குடிச்சிட்டு நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க” என்றவள் சில நிமிடங்களில் கையில் சூப்புடன் வந்து கட்டிலில் அமர்ந்திருக்கும் கணவன் பக்கம் ஒரு இருக்கையை போட்டு இவளும் அவன் அருகிலமர்ந்து, ஸ்பூனின் உதவியோடு அவனுக்கு சூப்பை கொடுத்தாள்.

அவனோ தன் புருவம் உயர்த்தி பார்த்து வெற்று புன்னகையுடன், “என்னங்க பண்ணுறீங்க? கொடுங்க நானே சாப்பிட்டுக்குறேன், என்னோட கை உங்களுக்கு இந்த தொல்லை தர அளவுக்கு எல்லாம் அடிப்பட்டு போகல தாங்க” என்றவன் அவள் கையில் இருந்த சூப்பை வாங்கி எந்த வித பேச்சுக்கும் இடம் தராமல் ஒரே வாயில் குடித்து முடித்து, “தேங்க்ஸ்ங்க சூப் நல்லா இருந்துச்சு.”

குடித்து முடித்து மேசை மேல் வைத்ததும் மகிழினி முகம் மாறியவள், “என்னாச்சு உங்களுக்கு? என் மேல எதாவது கோவத்துல இருக்கீங்களா?” அவனை பாவமாக பார்க்க,

ஒரு நொடி அவள் கண்களை உற்று பார்த்தவன் பெருமூச்சுடன் தன் இதழோரத்தில் புன்னகையுடன், “அப்படியெல்லாம் ஏதும் இல்ல”

என்றவன் அவள் பக்கம் இருந்து தன் பார்வையை வேறு திசையில் திருப்பிக்கொள்ள, சில நொடிகள் கண் இமைக்காமல் பார்த்த மகிழினி மேசை மேல் இருந்த கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் சமயம், "மாமா மாமா" என்று அழைத்துக்கொண்டு வேணு அறைக்குள் நுழைந்தான்.

“என்ன வேணு இவ்ளோ ஹாப்பியா வர.?”

“மாமா இங்க பாருங்க. இன்னைக்கு ஸ்கூல்ல பரிட்சை பேப்பர் தந்தாங்க. நான் கணக்குல என்ன மார்க் சொல்லுங்க?”

“ம்... 95.”

“ஐயோ அவ்வளவு எல்லாம் இல்ல,”

“பின்ன...”

“65” என்றான் வேணு.

“வாவ் சூப்பர்டா, நல்ல இம்ப்ரூவ்மென்ட்தான்.”

“ம் எங்க வாத்தியார் கூட அதான் சொன்னாங்க. ஆனா, இதெல்லாம் உங்கனால தான். நீங்க தானே சொன்னிங்க. நமக்கு ஒரு விஷயம் வேணும்னா அது முயற்சி பண்ணாம கிடைக்காதுன்னு. அதான் நானும் முயற்சி பண்ணி படிச்சேன். இப்போ பாருங்க கணக்குல நான் பாஸ் ஆகிட்டேன்.”

“ம்... ஆமாடா முயற்சி பண்ணாம எதுவும் கிடைக்காது, ஆனா, நம்ம பண்ற முயற்சி மத்தவுங்களுக்கு கஷ்டத்தை தரும்போது நம்மளும் அவங்களுக்கு தொல்லையா மாறிடுவோமோ என்ற அச்சதுலயே சில முயற்சிங்களை எல்லாம் தொடர சங்கடமா இருக்குடா” என்றவன் வேணு தலையை வருடி கண்களை சிமிட்டி, "எனிவே சூப்பர்டா, எனக்கு கை சரியானதும் உனக்கு கிப்ட் வாங்க ஷாப்பிங் போகலாம் ஓகேவா” என்றவன் அருகில் இருக்கும் தன் போனுடன் சேர்த்து, அவனின் சில பொருட்களையும் எடுத்து ஒரு பையில் வைத்து,

“ஏங்க. எனக்கு இங்க கம்பர்டபுளா இருக்க முடியல, சோ நான் மாடியில இருக்குற ரூம்லயே இருந்துக்குறேன், நீங்க இனிமே தரையில எல்லாம் படுக்காதிங்க.” என்று மாடிக்கு செல்ல, மகிழினியின் கண்கள் ஏனோ அவளை அறியாமல் கலங்குவதை உணர்ந்தவள் தன் கையில் இருந்த கிண்ணத்தை வேணுவிடம் தந்து வேகமாக மாடிக்கு சென்று கொடிவீரன் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top