• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 45

Joined
Jan 15, 2026
Messages
91
விவாதம் – 45


“ஜீவா உனக்கு தான்டா நான் நன்றி சொல்லணும். நீ மட்டுமே சரியான நேரத்துல வராம போய் இருந்தா, கண்டிப்பா எனக்கு இன்னும் அதிகமா இஞ்சுரி ஆகிருக்கும்” என்றான் வலி கலந்த வார்த்தைகளில்.

“நாங்களா எங்க வந்தோம்? இதோ ரேஷ்மா தான் எங்கள அங்க அழைச்சிட்டு போனா” என்று சொன்ன மீனாவை புரியாமல் பார்த்த கீதா, “ஆமா என் மாப்பிள்ளைக்கு எங்க ஆக்சிடண்ட் நடந்துச்சு? நீங்க எங்க அவர பார்த்தீங்க?” என்று மகிழினி மனதில் எழும்பிய கேள்வியை கீதா கேட்க,

“மேரேஜ்கு தைக்கக் கொடுத்த டிரஸ் வாங்க நானும் ஜீவாவும் ரேஷ்மா கூட போனோம். பர்சேஸ் எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு போகும் வழியில கைகால் அடிபட்டு வீரன் பிரதர் வலியோட பைக் எடுக்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்திருக்காரு. இவரை காருல இருந்தபடியே பார்த்த ரேஷ்மா அவருக்கு ஆக்சிடன்ட்னு தெரிந்து, வேகமா இவரை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போக சொன்னா. நாங்களும் ஹாஸ்பிடலுக்கு இவரை அழைச்சிட்டு போயிட்டு உங்ககிட்ட விவரத்தை சொல்லலாம்னு பார்த்தா உங்க போன் நம்பர் எல்லாம் என்னனு கூட தெரியல. போதாக்குறைக்கு இந்த சித்ரா வேற செல்போன் இல்லாம இருக்கா. அதுவும் இந்த காலத்துல... ஹ்ம்... அதான் உங்க யார்கிட்டயும் இன்பார்ம் பண்ண முடியல” என்று நடந்ததை சொன்ன மீனா நேரத்தைப் பார்த்து, “ப்ரோ நாங்க கிளம்பட்டுமா? நைட் லேட்டா போனா அத்தை மாமா திட்டுவாங்க. அதுவும் இல்லாம கல்யாண நேரத்துல நாங்க ஒண்ணா சுத்த கூடாதுன்னு வேற ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்காங்க” என்று சொல்லி ஜீவாவை பார்த்தாள்.

“ஆமா மச்சான். நேரம் ஆகுது. நாங்க கிளம்புறோம்” என்றவன் ரேஷ்மாவை பார்த்து கண்களால் அழைத்தான்.

கவலையுடன் கொடியை பார்த்த ரேஷ்மா, “அண்ணா நான் இங்கேயே இருக்கவா?” என்று கேட்டதும் மகிழினி அவளை முறைத்து சட்டென்று தன் பார்வையை கொடி பக்கம் திருப்,ப

“என்ன ரேஷ்மா காமெடி பண்ணுறீங்களா? பிளீஸ் நீங்க முதல்ல நேரத்தோடு கிளம்புங்க. மச்சான் நீ கிளம்புடா நேரமாகுது பாரு” என்றவன் மகிழினி பக்கம் பார்வையை திருப்பவில்லை.

“ம்... ஓகே வீரா. நான் இப்போ போய்ட்டு நாளைக்கு வரேன். ஹாங் நீங்க டேப்லெட் எல்லாம் சரியா போடுங்க” என்றவள் வேணுவை அங்கிருந்து நகரும்படி சைகை காட்ட,

“என்னங்க என்ன காத்துல காக்கா ஓட்டுறீங்க” என்று கேட்டான் கடுப்பாகவே.

“பிளீஸ் மூவ்” என்று சொன்னதும்,

“ஒ... இடுப்பு வலியா? ஆனா, எங்க வீட்டுல நாங்க இடுப்பு வலி எல்லாம் வந்தா அயோடெக்ஸ் தான் தடவுவோம்” என்றான் கிண்டலாக.



“ஹேய் நான் அதை மீன் பண்ணல” என்றாள் ரேஷ்மா.

“அப்போ கருவாடு பண்ண போறிங்களா? அதுல முருங்கைக்காய் உருளை கிழங்கு எல்லாம் போடுவீங்களா?” என்றான் கிண்டலாக.

“வேணு நீ இந்த பக்கம் வா. அவங்க அவர்கிட்ட ஏதோ பேச போறாங்க” என்றவள் கொடிவீரனை முறைக்க, அவனுக்கு ஐயோ என்றானது.

“பாப்பா நீ இங்க இருந்தே பேசுமா” என்றார் கீதா.

“ஒ... மை குட்னஸ். என்ன வீரா இது உங்ககூட பேச எனக்கு இங்க பிரைவசியா இருக்காது போல” என்றாள் முகம் மாறிய நிலையில்.

மகிழினி அவளை முறைக்க, “ஜீவா நீ இவங்கள அழைச்சிட்டு கிளம்பு பிளீஸ்” என்றான் கொடிவீரன்.

“ஆமா ஜீவா மாமா. வா போகலாம். நேரம் ஆகுது பாரு. ரேஷு வா சீக்கிரம்” என்றாள் அவசரமாக

“இருங்க அண்ணி வரேன். வீரா இந்த டேப்லெட் எல்லாம் எப்படி போடணும்னு உங்களுக்கு தெரியுமா? இல்லைனா நான் எழுதி வச்சிட்டு போகவா?” என்று கேட்க,

“அம்மாடி ரேஷு எங்க பொண்ணு என் மாப்பிள்ளையை பார்த்துப்பா. நீங்க பண்ண ஹெல்ப்கு ரொம்ப நன்றி. நீங்க நேரத்தோடு கிளம்புங்க” என்றார் அவள் செய்வதைக் கண்டு கடுப்பாக.

“உங்க பொண்ணா? அது யாரு?” என்று புருவம் உயர்த்த,

“ம்... நான்தான்” என்றாள் மகிழினி உரிமையோடு

“ஓ... நீங்களா? பட் நீங்க எப்படி இவரை பார்த்துப்பிங்க? இவருக்கும் உங்களுக்கும் தான் எதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்னு கேள்விப்பட்டேனே” என்றதும் கொடிவீரன் மானசீகமாக தலையில் கைவைக்க,

“சோ வாட்?” என்றாள் மகிழினி கடுங்கோபத்துடன்.

“நீங்க பாட்டுக்கு இவரு மேல இருக்குற கோவத்துல இவருக்கு டேப்லெட் எல்லாம் ஒழுங்கா கொடுக்காம விட்டுட்டா. நான் என்ன பண்ணுறது?” என்று முகம் மாற, மகிழினியின் முறைப்புக்கு அளவில்லாமல் போனது.

“ஏய் அவளே நர்ஸ் தான் ரேஷு” என்றாள் மீனா சிரித்துக்கொண்டே.

“ஒ... அப்படியா?” என்று கேட்க,

“அப்படி இல்லைனாலும் நாங்க அவரை நல்லாதான் பார்த்துப்போம். ஏய் மீனா நீ முதல்ல கிளம்பு. நேரம் ஆகுது பாரு” என்றவளின் கோவம் முழுதும் ரேஷ்மா, கேவி மேல் இருந்தது

“ஓகே வீரா டார்லிங். நான் நாளைக்கு உங்கள வந்து மீட் பண்ணுறேன். பை டியர்” என்றாள் கண்சிமிட்டி.

“மச்சான் உடம்ப பார்த்துக்கோடா.”

“நாங்க போய்ட்டு வரோம் பிரதர். எங்க மேரேஜ்குள்ள நீங்க உடம்ப தேத்திடுங்க” என்று மீனா சொன்னதும், கைவிரல் தூக்கி சரி என்றான்.

“உங்களுக்கு கல்யாணமா?” என்று வேணு கேட்க,

“ம்... ஆமா குட்டிப்பையா” என்றாள் அவன் கன்னத்தை கிள்ளி.

“எங்க வச்சி கல்யாணம்? இந்த ஊர்லையா?” என்று கேட்க,

“இல்ல பெங்களூர்ல” என்றாள் சிரித்த முகத்துடன்.

“ஏன் இங்க மண்டபம் கிடைக்கலையா?”

“டேய் வேணு அமைதியா இரு” என்று அழைத்து மருமகனை முறைக்க,

“தம்பி எங்க சொந்த ஊர் பெங்களூரு தான்பா” என்ற ஜீவாவும் வேணு கன்னத்தை கிள்ள,

“ஒருவன் அழகா இருந்தா, ஆளாளுக்கு கிள்ளுறீங்க” என்றான் தன் கன்னத்தை தடவிக்கொண்டே.

“சரி நாங்க கிளம்புறோம்.” மீனா சொன்னதும்,

“வீரா டார்லிங் பாய்” என்று ரேஷ்மா கையசைக்க

“அவரு பாய் தான். நீங்க கிளம்புங்க” என்று வேணு கிண்டல் செய்தான்.

அவர்கள் சென்றதும் வீட்டுக்குள் நுழைந்த பாட்டி கொடியின் நிலையை கண்டு பதறி, "என்ன நடந்தது" என்று விசாரிக்க, கீதா விவரத்தை சொன்னதும் கண் கலங்கியவர், “என்ன தம்பி இது. கொஞ்சம் ஜாக்கிரதையா வண்டி ஓட்டக்கூடாதா?” என்று கேட்டார்.

“பாட்டி எனக்கு ரொம்பல்லாம் அடி படல” என்று கொடிவீரன் அவரை சமாதானம் செய்ய,

“என்னப்பா நீ? கையில இவ்ளோ பெரிய கட்டு இருக்கு. போதாதகுறைக்கு கால்ல அடிபட்டிருக்கு.”

“இதெல்லாம் சின்ன அடிதான்” என்றான் சிரித்துக்கொண்டே.

“ஆமாமா. இவங்களுக்கு இதெல்லாம் சின்ன அடிதான். இதுங்க எல்லாம் கபடி ஆடிட்டு வரும்போது கைகால் வாய்னு எல்லாத்தையும் உடைச்சிகிட்டு தான் வருவாங்க” என்றார்.

“அத்தை இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது?” என்று கேட்டான்.

“புரியல மாப்பிள்ள?”

“ம்... அடிப்படணும்னு விதி இருந்தா, அது கபடி களத்துக்கு போகலைனாலும் அடிபடும் தான்” என்றான் மகிழினியை பார்த்தபடி.

“இப்போ இந்த தத்துவம் யாருக்கு?” என்று கீதா கேட்க, மகிழினி எப்பவும் போல் அவளின் முறைப்பைத் தொடர,

“யாருக்கு வேணுமோ எடுத்துக்கோங்க” என்றவன் மகிழினியை பார்த்து கண்சிமிட்டினான்.

“தம்பி நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.”

“ம்... சரி பாட்டி. நான் மாடியில போய் இருந்துக்குறேன். இப்போ இருக்குற நிலைமையில என்னால இங்க கால்நீட்டி படுக்க முடியாது” என்று சோபாவில் இருந்து தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவனை பார்த்து குரலை செருமிய மகிழினி,

“பாட்டி அவரை மாடிக்கு எல்லாம் போக வேணாம் சொல்லுங்க. இதோ இந்த ரூம் சும்மாதானே இருக்கு. அங்க படுக்க சொல்லுங்க” என்றாள் அக்கறையாக.

“இல்லிங்க. அந்த ரூம்ல ஜன்னல் இல்ல எனக்கு மூச்சு முட்டும். நான் மாடியிலேயே போய் இருந்துக்குறேன்” என்றவன் மீண்டும் வாசலை நோக்கி செல்ல,

“அப்... அப்போ... நான் இருக்குற ரூம்ல படுத்துக்கோங்க. அங்க ரெண்டு ஜன்னல் இருக்கு. காத்து நல்லா வரும்” என்றாள் தயங்கியபடி.

“ஐயையோ அங்க வந்தா என் மூச்சே நின்னுடும்” என்றவன் சட்டென்று நாக்கை கடித்துக்கொள்ள, மகிழினி கோபத்தில் பல்லைக்கடிக்க,

“அது இல்லிங்க நான்...” வார்த்தை தடுமாற,

“போதும். அப்போ நீங்க என்கூட ஒரே ரூம்ல இருந்தா, உங்க மூச்சு நின்னுடுமா?” என்று கலங்கிய கண்களை அவனுக்குக் காட்டாதவாறு கேட்டாள்.

“செத்தான்டா சேகர்” என்று சிரித்தார் கீதா.

“என்ன தம்பி நீங்க? ஏன் இப்படிப் பேசிறீங்க?” என்று பாட்டியும் சோகம் பாட,

“இல்ல பாட்டி. நான் இவங்க கூட ஒரே ரூம்ல இருக்கும்போது, நான் நார்மலா பேசுனா கூட எதாவது தப்பா நினைக்க போறாங்கன்னு தான்...” என்று தயங்கி சொல்ல,

“ஏன் சார்? எனக்கு சம்மந்தமே இல்லாத ஒரு பொண்ணு வந்து, என் வீட்டுல என் எதிர்லயே என்னை என்னென்னமோ பேசிட்டு போறாங்க. அதுக்கே நான் தப்பா நினைக்கல. நீங்க பேசுறதுக்கா நான் தப்பா நினைக்க போறேன்” என்றாள் கிண்டலாக

“மாப்பிள்ள நீங்க சிக்கிட்டீங்க. டேய் வேணு உன் பாட்டியை அழைச்சிட்டு வாடா. நம்ம போய் நைட் டின்னர் ரெடி பண்ணலாம்” என்றார்.

மகிழினி அதே முறைப்புடன் இருக்க, “ஏங்க இப்போ ஏன் கோவப்படுறீங்க? நான் சொல்ல வந்தது என்னன்னா...” என்று வார்த்தையை வளர்க்க

“ம்... போதும். ரொம்ப நீட்டி முழக்காதீங்க. வாங்க வந்து என் ரூமை ஷேர் பண்ணிக்கோங்க” என்றவள் ரேஷ்மா இவனிடம் தந்த டீயை கையில் எடுத்து அவனை முறைத்தபடி, “சாருக்கு இந்த டீயை சூடு பண்ணி தரணுமா? இல்ல...” என்று புருவம் இறுகி கேட்க,

“பரவாயில்லைங்க” என்றான் டீக்காக கையை நீட்டி,

“அப்படினா...” என்று கோவமாக கேட்க,

“ஆறினாலும் பரவாயில்ல. நான் அதையே குடிச்சிக்கிறேன்” என்றவன் எதார்த்தமாக சொன்னான்.
 
Joined
Jan 15, 2026
Messages
91

“அப்படியே முகத்துல ஊத்திடுவேன். சொல்லிட்டேன்” என்றவள் கையில் இருந்த டீயை அவனை நோக்கி ஊத்தப்போக, அவனோ கள்ளத்தனமாக சிரித்துக்கொண்டான்.”

“அந்த பொண்ணு குடிச்சிட்டு தந்ததை நீங்க குடிப்பிங்களா?” என்று கடுப்பாக கேட்க,

“டீ வீணா போயிடுமே” என்றான் பாவமான முகத்தோடு.

“சரியான வீணா போனவன் தான் போல நீங்க” என்றவளின் இதழ்கள் சுளித்து அழகாக நடனமாட,

“என்னங்க முனகுறீங்க? டீயை தாங்க” என்றான்.

“முடியாது” என்று அந்த டீயை தன் முதுகின் பின் பதுக்கிக்கொள்ள,

“ஏன்?” என்று புருவம் உயர்த்தி கேட்டான்.

“அ...அது நான் உங்களுக்கு ஹெல்த் மிக்ஸ் தரேன்.”

“அப்போ இந்த டீ??”

“ஆங் உங்க ஆளு குடிச்சி வச்ச டீயை, நான் என்ன ஏலத்துக்கா விடமுடியும்” என்றாள் கிண்டலாக.

“ஏங்க தப்பா பேசாதீங்க” என்று தன் கன்னத்தில் போட்டுகொண்டவன் மகிழினியை நல்ல பிள்ளையை போல பார்த்தான்.

“நான் என்ன தப்பா பேசினேன்?” என்று கோவமாக கேட்டாள்.

“நீங்க தான்ங்க... நீங்க மட்டும் தான்ங்க என்னோட ஆளு” என்றவன் அவளை பார்த்து மீண்டும் கண்சிமிட்ட,

“அஹான். அதான் பார்த்தேனே” என்றாள் அவன் வார்த்தையை நம்பாது.

“அவங்க ஏதோ புரியாம பேசுறாங்க” என்று இவன் சமாளிக்க,

“யாரு அவளா?” என்று கோவம் கொண்டாள்.

“ஐயோ பொம்பள பிள்ளைங்கள அவ இவன்னு சொல்லக்கூடாதுங்க. பாவம் ரேஷ்மா. அப்புறம் சாமி உங்க கண்ணைக் குத்திடும்” என்று சில்மிசமாக சொல்ல,

“அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட பேசுனா, இப்போ நான் உங்க வாயில குத்திடுவேன்” என்று தன் விரலை அவன் கண்கள் அருகில் கொண்டு சென்றாள்.

“சரியான ராங்கிங்க நீங்க” என்றான் அவள் மீது சற்றும் குறையாத காதலுடன்.

“ம்... இப்போ உங்களுக்கு அப்படித்தான் தெரியும்” என்று சிலுத்து கொண்டவள், “சரி வாங்க” என்று கொடிவீரனை தன் அறைக்குள் அழைத்து சென்று, சுவற்றை ஒட்டி போடப்பட்டிருந்த இருக்கையை காட்டி, “நீங்க இங்க உக்காருங்க. நான் பெட் ரெடி பண்ணுறேன்” என்று படுக்கையை தயார் செய்து கட்டிலில் இவள் தலையணை கீழே இருக்கும் வீரவேலின் கிழிந்த புகைப்படத்தை எடுத்து, மேசை மேல் இருக்கும் புத்தகத்தின் நடுவில் பத்திரமாக வைத்தாள்.

“நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. நான் மாடியில இருந்து உங்களுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் இங்க எடுத்துட்டு வரேன்.”

“ஏங்க ஒரு நிமிஷம்” என்றதும் அவள் நிற்க, “அக்கா, அம்மாகிட்ட எனக்கு அடிபட்ட விஷயத்தை சொல்லாதீங்க.” என்றான்.

“ம்... சொல்ல மாட்டேன்.”

“இப்ப எனக்கு கொஞ்சம் தண்ணி தரீங்களா?”

“ம்... இதோ எடுத்துட்டு வரேன்” என்றவள் அந்த நொடியில் இருந்து கொடிவீரனை மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள, அவன் இருக்கும் தன் அறைக்கே அவனுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வந்தவள், அன்றைய தின இரவு உணவையும் அவனுக்கு தந்து மாத்திரையை கொடுத்தாள்.

“நீங்க போய் சாப்பிடுங்க. நான் என்ன சின்னப் பிள்ளையா? நான் இருக்குற இடத்துக்கே எல்லத்தையும் எடுத்துட்டு வந்து தரிங்க?” என்று கேட்டான்.

“உங்களுக்கு தான் கைகால் அடிபட்டுருக்கே. நீங்க கொஞ்சம் சரியாகும் வரை இதெல்லாம் நான் பண்ணா நீங்க ஒன்னும் குறைஞ்சு போயிடமாட்டிங்க.”

“அப்படியா சொல்லுறீங்க?”

“ஏன் நான் உங்களுக்கு இதெல்லாம் பண்ணமாட்டேன்னு நினைக்கிறிங்களா?” என்றாள் கோவமாக.

“ஐயோ நீங்க பண்ணுவீங்க. ஆனா, நான்தான் இதெல்லாம் வேற மாதிரி எடுத்துக்ககூடாதுன்னு என்னை நானே சமாதானம் பண்ணிக்கிறேன்.”

“புரியல. இப்போ என்ன சொல்ல வரீங்க?”

“இல்லிங்க. பொண்டாட்டி என்ற உரிமையில் செய்யுறீங்கனு நான் சந்தோஷமா உங்களுக்கு நன்றி சொல்லுவேன். ஆனா, நீங்க உடனே உங்களுக்கு மட்டும் இல்ல, இதே எங்க கேண்டீன்ல பால் போடுற பால்காரனுக்கு கைகால் அடிபட்டு இருந்தா கூட, இதே மாதிரி தான் ஓடி ஓடி சேவை பண்ணுவேன்னு சொல்லுவீங்க. அப்புறம் அதை கேட்டு நான் ஃபீல் பண்ணுவேன். தேவையா எனக்கு?”

“ஹலோ பாஸ்! நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும், உங்க நிலைமையில யாரு இருந்தாலும் நான் கண்டிப்பா இதெல்லாம் பண்ணுவேன் தான்” என்றதும், “ஓ...” என்று எழ முயன்றவனை பார்த்தவள், “என்ன?” என்று பதறினாள்

“நான் கோவமா மாடிக்கு போறேன்ங்க” என்றவன் வாசலை நோக்கி நடந்தான்.

“ஹலோ இருங்க இருங்க. இப்போ ஏன் இவ்ளோ கோவமா போறீங்க?’ அவனை பின் தொடர்ந்தபடி கேட்க,

“என் அக்கா, அம்மா, பொண்டாட்டியை தவிர வேற ஒரு பொண்ணு எனக்கு இந்த மாதிரி சேவை பண்றது எல்லாம் எனக்கு பிடிக்காதுங்க. சோ பெட்டர் நான் மாடில இருக்குற என் ரூமுக்கு போறேன்” என்றான் பொய்யான கோபத்துடன்

“ஹலோ ரொம்ப பண்ணாதீங்க. வாங்க வந்து படுங்க” என்றாள் கட்டில் பக்கம் கையை நீட்டி.

“அப்போ சொல்லுங்க. உங்களுக்கு நான் யாரு?” என்று புருவம் உயர்த்த, அவள் முறைக்க, “நீங்க சொன்னால் தாங்க நான் இங்க இருப்பேன். இல்லைனா நான் இப்பவே மாடிக்கு போறேன்” என்று செல்வது போல் பாசாங்கு காட்டியவன், பின், “ம்... சொல்றிங்களா? இல்ல நான் மாடிக்கு போகவா?” என்றான்.

“சரி நீங்க மாடிக்கு போங்க” என்றாள் அவளும்.

“என்னது?” என்று விழித்தான் கொடிவீரன்.

“நீங்க மாடிக்கு போங்க சார்” என்றவள் வாசலை நோக்கி கையை காட்ட,

“இல்ல இல்ல வேணாம். மணி ஒன்பதுக்கு மேல ஆச்சு. மாத்திரை போட்டதுல எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு. நான் இங்கேயே படுத்துக்குறேன்” என்றவன் கட்டிலின் விழும்பில் படுத்துக்கொண்டான்.

“ம்... என்ன வாயி. ஆளைப்பாரு. கம்முனு தூங்குங்க சொல்லிட்டேன்” என்றவள் அவனையே கோவமாக முறைக்க,

“ஏங்க” என்று ஒற்றை கண்ணை மூடி அழைத்தவனைக் கண்டு,

“ம்...” என்று அதே கோவத்தோடு கேட்டாள்.

“போன்ல பாட்டு ப்ளே பண்ணிட்டு போங்க” என்றான் கெஞ்சும் குரலில்

“எனக்கு அதெல்லாம் பண்ணத் தெரியாது. இந்தாங்க உங்க போன் நீங்களே ப்ளே பண்ணுங்க.” அவன் போனை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.

“ம்... சரி நீங்க போய் சாப்பிடுங்க” என்றவன் தன் செல்போனில் பாடலை ஒலிக்கச் செய்து, மகிழினியின் கட்டிலில் தலை சாய்ந்து படுக்க, அவன் உட்கொண்ட மாத்திரையின் வீரியத்தில் படுத்ததும் கண் உறங்கினான்.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top