• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 15, 2026
Messages
87
விவாதக் காதல்

விவாதம் - 43


மறுநாளே மருத்துவரிடம் அனுமதி வாங்கி அதே வாரம் அறுவை சிகிச்சையும் செய்துவிட, அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவன் மூன்று நாட்கள் வேலைக்கு போகாமல், அவளுடன் இருந்து மனைவியை கவனமாக பார்த்துக் கொண்டான்.

மருத்துவரின் அறிவுரைப்படி மகிழினிக்கு காதில் கட்டு பிரிக்கும் வரை, தண்ணீர் படாமல் கவனமாக பார்த்து கொண்ட பாட்டியும், கீதாவும் அவளோடு சேர்ந்து கேண்டீன் வேலைகளையும் கவனித்துக் கொண்டனர்.

மகிழினி தன் பாட்டியின் கைபேசியில் அவ்வப்போது கொடிவீரனின் அம்மா ஜெயா, மற்றும் சசியிடம் அன்பாக பேசுபவள், தனக்கும் கேவிக்கும் உள்ள பணிப்போரை பற்றி, எள்ளளவும் சொல்லாமல் மறைத்தாள்.

குளிரில் அடிக்கடி மாடிக்கு போக முடியாத காரணத்தால், அவள் வளர்க்கும் மல்லிப்பூ செடிகளை பார்த்து கொள்ளும் முழு பொறுப்பும் கொடியை வந்தடைந்தது.

பாட்டிக்காகவும் ஜெயாவுக்காகவும் தன் வீம்பை கொஞ்சம் தளர்த்திக் கொண்ட மகிழினி, இவள் அறையின் வெளியே போடப்பட்டிருந்த சோபாவில் கொடியை உறங்க அனுமதித்திருக்க, அவன் கேட்கும் பாடல்களுக்கு இவளும் ரசிகையாக மாறி இருந்தாள்.

என்னதான் கொடிவீரன் அன்பையும், அக்கறையும் மகிழினியிடம் வெளிப்படுத்தினாலும், அவள் மனதை ஆக்ரமித்து இருக்கும், தன் அன்புக்கு சொந்தமான வீரவேலின் கிழிந்த புகைப்படத்தைப் பார்த்து, தினமும் மகிழினியின் கண்கள் கலங்காமல் இருந்தது இல்லை.

இவை அனைத்தும் ஒரு வார காலத்தில் நடந்து முடிய, அவ்வப்போது அலுவலகத்தில் ரேஷ்மாவிடம் இருந்து சில சங்கடங்கள் கொடிவீரனுக்கு வராமல் இருந்ததும் இல்லை.

இதோ மகிழினியின் காது கட்டு பிரிக்க, அப்போது தான் அவளுக்கு பிறர் சொல்லும் "ம்" கூட தெளிவாக ஒலித்தது. இந்த ஒரு வார காலமும், கேவி தன்மேல் கொண்ட அக்கறையை கண்ட மகிழினி, எங்கே அவன் மீது மீண்டும் நட்பு மலர்ந்து விட போகிறதோ என்று பயந்தவள், தனக்கு தானே சில கட்டமைப்புகளை போட்டு வைத்துக்கொண்டாள்.

அன்றைய தினம் ஞாயிறு என்பதால் மகிழினியின் பாட்டி பிரியாணி செய்து கொண்டிருக்க, மாடியில் இருக்கும் அறையில் அமர்ந்து இசையுடன் சேர்ந்து புத்தகம் வாசித்து கொண்டு இருந்தவனைத் தேடி ஓடி வந்தாள் மகிழினி.

“என்னங்க என்னாச்சு? ஏன் இவ்ளோ வேகமா ஓடி வரீங்க?” என்று கேட்பவனுக்கு பதில் சொல்லாமல், அவன் அறையின் கதவுக்கு பின் ஒழிந்து கொண்டாள்.

“அந்த வேணு பையன் வந்தா, நான் இங்கே இருக்கேன்னு சொல்லாதீங்க பிளீஸ்.” என்று இவள் கெஞ்சும் தருணத்தில் வேணு மாடிக்கு கையில் கலர் பொடியுடன் ஓடி வந்தான்.

“மாமா அத்தை இங்க வந்தாங்களா?” என்று கேட்டவனின் கண்கள் மொட்டை மாடியில் உள்ள மீதி இடங்களை நோட்டமிட்டது.

“ம்... உன் அத்தையா?” என்றவன் கதவின் பின் சிறு பிள்ளையை போல, அவள் இதழ் கடித்து, கண்கள் படபடத்து, தன் கை விரல்கள் பத்தையும் பயத்தில் பிசைந்து கொண்டு இருந்தவளை பார்த்து உள்ளுற சிரித்தான்.

“ஹ்ம் இல்லடா. உன் அத்தை இங்க வரல.” என்றதும் வேணு ஏமாற்றமாக கீழே இறங்கி போக,

அதைக் கண்டு சிரித்த முகத்துடன் கதவின் பின்னால் இருந்து வெளியே வந்தவள், “ரொம்ப தேங்க்ஸ்ங்க. இந்த லட்டு பையன் என் மேல அந்த கலர் பொடி அடிச்சே தீருவேன்னு, அடம் பிடித்து என்னை துரத்திட்டு வந்துட்டான். அதான் உங்க ரூமுக்கு வந்துட்டேன். சாரி.” என்றவள் அவன் அறையில் இருந்து வெளியே செல்ல முயன்ற, தருணம் வாசலில் குட்டி சாத்தானை போல வேணு கையில் கலர் பொடியுடன் நின்றிருந்தான்.

"ஓ... புருஷனும் பொண்டாட்டியும் என்கிட்ட பொய் சொல்றிங்களா? இருங்க இப்போ உங்க ரெண்டு பேரையும் இந்த கலர் பொடியால குளிப்பாட்டுறேன்" என்றவன் கையில் இருந்த கலர் பொடியை இவர்களை நோக்கி வீச, அங்கிருந்து தப்பிக்க நினைத்த மகிழினி, கொடியின் தோளை பற்றிக்கொண்டு அவன் முதுகின் பின் ஒளிந்துகொண்டாள்.

அவளைக் காப்பாற்ற நினைக்காத கொடிவீரன், வேணு கையில் இருந்த கலர் பொடியை வாங்கி, இவன் பங்குக்கு மகிழினியின் மீது வீச, கோவம் கொண்டவள், தரையில் சிதறி இருந்த கலர்ப் பொடியை எடுத்து, கொடியின் கன்னத்தில் தன் கைகளால் பூச, அவளின் கரங்களை தடுத்த கொடிவீரனின் பிடியில் இருந்து பின் வாங்கியவள், கால் தவறி விழப்போகையில், கொடிவீரனின் டிஷர்ட்டை பற்றிக்கொண்டு கட்டிலில் விழுந்தவள், கணவனையும் தன் தேகத்தோடு இணைத்து கொண்டு கீழே விழ, நிலத்தின் மேல் படர்ந்த கொடியாக மாறி இருந்தான் கொடிவீரன்.

இவர்கள் இருவரும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாது இருக்க, "என்னடா நடக்குது இங்க? ஏன்டா டேய். என்ன இது ரூமுக்குள்ளயே மாறி மாறி கபடி ஆடிக்கிட்டு இருக்கீங்களா" என்று கிண்டலாக கேட்ட குரலுக்கு சொந்தக்காரனாக, இவர்கள் கண் முன் நின்று இருந்தான் கொடிவீரனின் தூரத்து சொந்தமான அண்ணன் மாறன்.

“அண்ணா நீங்களா!?” என்று ஆச்சிரியம் கலந்த மகிழ்ச்சியில் மாறனை வரவேற்க, மகிழினி தன் முகத்தை அவள் முந்தானையில் துடைத்து கொண்டவள் வந்தது யாரென்ற கேள்வியை தன் பார்வையாள் கொடியிடம் கேட்க,

“இவரு எங்க பெரியம்மா பையன். நம்ம கீதா அத்தை இருக்காங்க இல்ல அவரோட மூத்த மருமகன். இவர் பெயர் மாறன்” என்றதும்

“ஒ... வாங்க உக்காருங்க” என்று இருக்கையை காட்டினாள் மரியாதை நிமித்தமாக.

“இருக்கட்டும்மா. அப்புறம்டா தம்பி கல்யாணம் எல்லாம் முடிஞ்சிருக்கு, இந்த அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்கு தோணல பார்த்தியா?”

“ஏன் அண்ணா நீங்க வேற.” என்றான்.

“ம்... இவங்க தான் உன் மனைவியா?”

‘அப்படின்னு நான் மட்டும்தான் சொல்லிக்கிறேன்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ள, அதை உணர்ந்தாற்போல் மகிழினி அவனை முறைத்தாள்.

“என்னடா கேள்வி கேட்டா வாயில வடகம் போட்டுக்கிட்டு இருக்க? சொல்லு இவங்க தானே உன் பொண்டாட்டி?” எனக் கேட்டான்.

“ம்...” என்று கொடிவீரன் சொல்ல,

“சரி சரி. நீங்க ரெண்டு பேரும் கலர் பூசி விளையாடிக்கிட்டு இருக்கும் போது நான் குறுக்க வந்து உங்க ஆட்டத்தை கெடுத்துட்டேன் போல. நான் கீழே போறேன் நீங்க விளையாட்டை முடிச்சிட்டு வாங்க.” என்று நகர,

“ஒரு நிமிஷம் நில்லுங்க.” என்று மாறனை நிற்கவைத்து, “நாங்க சும்மா தான் பேசிட்டு இருந்தோம்” என்றாள்.

“ஏம்மா என் பொண்டாட்டி கூட தான் என்கிட்ட சும்மா பேசுவா. பின்ன புருஷனோட பேசும்போது அவங்க அக்கௌன்ட்ல காசு போட்டுட்டா பேசுவாங்க.” என்றான் அவனுக்கே ஆன குசும்பில்.

“ஹாங் அது இல்லிங்க. நாங்க அப்போ விளையாட எல்லாம் இல்லைன்னு சொன்னேன்.”

“அப்போ விளையாடல. சோ இப்போ விளையாட போறிங்கன்னு சொல்ல வரிங்களா?”

“அச்சோ நான் அதை சொல்ல வரலைங்க” என்றாள் வேகமாக.

“ஏங்க இவரு இப்படி தான் எடக்கு மடக்கா பேசுவாரு. நீங்க கீழே போங்க நான் இவர அழைச்சிட்டு வரேன்” என்றான் மனைவியிடம்.

‘அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் வாய் ஜாஸ்தியா இருக்கு’ என்றெண்ணினாள்.

“டேய் உன் பொண்டாட்டி முகத்தை பார்த்தா, அவங்க நம்ம ரெண்டு பேரையும் பேட் வேர்ட்ஸ்ல திட்டுறாங்க போல.”

“அவங்க அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க. சரி நீங்க வாங்க. அப்புறம் என்ன திடிர்னு சென்னைக்கு விஜயம்?”

“இங்க ரெண்டு நாள் கபடி டோர்ணமெண்ட்டா. அதான் பசங்க கூட ரூம் எடுத்து தங்கிருக்கேன். சரி நீயும் சென்னையில தான் இருக்கன்னு உன் அக்கா சசி சொன்னா. அதான் உன்னை வந்து பார்த்துட்டு, உன் மேரேஜ் க்கு ஒரு வாழ்த்து சொல்லலாம்னு வந்தேன்.”

“பசங்க கூட வந்திங்களா? அப்போ அண்ணி ஊருல தனியா இருக்காங்களா?”

“அது எப்படி அவ என்னை விட்டுட்டு இருப்பா. சிவன் இருக்குற இடத்துல சக்தி இருக்குறது போல, இந்த மாறன் இருக்குற இடத்துல மகி இருந்து தானே ஆகணும்.”

“அப்போ அண்ணி எங்க? அவங்கள அழைச்சிட்டு வரல?”

“ம்... வந்துருக்கா கீழே அவங்க அம்மாவை பார்த்து பேசிகிட்டு இருக்கா.”

“ஓ... பரவாயில்ல அண்ணா. அத்தை உங்கள ஏத்துக்கிட்டாங்களா?”

“அது எப்படிடா உன் அத்தை என்னை ஏத்துப்பாங்க?”

“அப்படி என்னதான் அவங்களுக்கு உங்க மேல கோவம்?”

“அதை நீ அவங்ககிட்ட தான் கேட்கணும்

“சரி வாங்க. போய் அண்ணியை பார்த்துட்டு அப்படியே அத்தைகிட்ட உங்க கதையை பேசி ஒரு முடிவு எடுப்போம். வாங்க கீழே போகலாம்.”

கொடியுடன் சேர்ந்து மாறன் கீழே இறங்கி வர, அங்கே கீதா அவர்கள் கத்தும் சத்தம் கேட்டு, வாசலில் ஓரமாக நின்று கொண்டு இருந்த மகிழினியின் அருகில் வந்த கொடிவீரன், “என்னங்க வாசல்ல நின்னுகிட்டு என்ன பண்ணறீங்க?” என்று மகிழினியிடம் கேட்க,

“உங்க அத்தை அதோ அங்க நிக்குறாங்களே அவங்கள கண்டமேனிக்கு திட்டிகிட்டு இருக்காங்க. அதான் நான் உள்ள போனா அவங்களுக்கு சங்கோஜமா இருக்குமேன்னு இங்கேயே நிக்குறேன்.”

“சரிதான். அத்தை சண்டையை ஆரம்பிச்சிட்டாங்களா?”

“இப்போ நான் போய் எப்படி ஸ்டாப் பண்ணுறேன் பாரு” என்று மாறன் வீட்டுக்குள் நுழைந்து, தன் மனைவியின் அருகில் செல்ல, மகி கண்களில் கண்ணீருடன் கீதா திட்டுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
 
Joined
Jan 15, 2026
Messages
87
“அம்மா இன்னும் ஏன் எங்க மேல கோவமாவவா இருக்க. அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்? நான் லவ் பண்ணது தப்பா? நான் லவ் பண்ணது தான் உனக்கு என்னை பிடிக்காம போக காரணமா?” என்று கேட்க,

“நீ லவ் பண்ணது தப்பு இல்ல. நீ லவ் பண்ண ஆளு தப்பு. இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவனை நம்பி ஊரை விட்டு ஓடிப்போன பாரு அது தப்பு” என்று மகள் மாறனை காதல் திருமணம் செய்து கொண்டதை ஏற்றுகொள்ள முடியாமல் கோவத்தில் கத்தி கொண்டு இருக்க,

“ஏங்க நீங்க வாங்க நம்ம உள்ள போய் வேடிக்கை பாப்போம்” என்று மனைவியை அழைத்தான் கொடிவீரன்.

“என்ன வேடிக்கையா? ஏங்க அவங்க உண்மைக்கே சண்டை போடுறாங்கங்க” என்றாள் மகிழினி.

“இருக்கட்டும்ங்க. ஆனா, இவங்க சண்டை நமக்கு பாக்க ஜாலியா தான் இருக்கும். நீங்க வாங்க நம்ம உள்ள போகலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து, யாருக்கும் இடையூறு தராமல், இந்த சண்டையை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கும் வேணு அருகில் சென்று நின்று கொண்டனர்.

“இவங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று மகிழினி கேட்க,

“எங்க அண்ணா மாறன் அவங்க மகளை கல்யாணம் பண்ணிக்கிட்டது அவங்களுக்கு பிடிக்கல” என்று இவன் சொன்னதும் மகிழினி, கீதாவை பார்த்து முறைத்தபடி நின்றிருந்தாள்.

பிரச்சனையை வளர்க்க கூடாது என்று முடிவெடுத்த மாறன், “அத்தை” என்று அழைக்க,

“என்னை அப்படி கூப்பிடாத.” பட்டென்று சொன்னார் கீதா.

“ஓகே. அப்போ கீது டார்லிங்னு கூப்பிடவா?”

“ஏய் வேணாம். என்னை பற்றி உனக்கு முழுசா தெரியாது.” என்று எச்சரிக்க,

“சரி. எனக்கு உங்கள பற்றி எதுவுமே தெரிய வேணாம். ஆனா, நீங்க என் மகியை மட்டும் திட்டாதீங்க.”

“அவ என் பொண்ணுடா. நான் அப்படித்தான் திட்டுவேன்.”

“மாமா நீ சும்மா இரு அவங்க திட்டட்டும்” என்று கணவனை அமைதியாக இருக்கச் சொன்னாள் மகி.

“என்ன உன் அம்மாவை பார்த்ததும், உனக்கு நான் வேண்டாதவனா போயிட்டேனா.” என்று மாறன் கோபப்பட.

“ஐயோ இல்ல மாமா. அப்படி எல்லாம் இல்ல.”

“ம்... ஆமா இதே மாதிரி என் பொண்ணுகிட்ட நேக்கா பேசி, அவளை உன் பக்கமாவே வச்சிக்கோ.”

“ஆமா என் பொண்டாட்டி என் பக்கம் தான் இருப்பா. ஏன்மா பாப்பா நீ சொல்லு ஒரு பொண்டாட்டினா அவங்க தன்னோட புருஷன் பக்கத்துல தானே இருக்கனும்” என்று மகிழினியிடம் கேட்க, அவளோ அவனின் திடீர் கேள்வியில் விழித்தாள்.

“அட சொல்லுமா. புருஷன் பக்கம் நிக்குறவ தானே பொண்டாட்டி” என்றதும் வேறு வழியில்லாது தலையசைத்தாள் மகிழினி. “பாத்திங்களா அத்தை. உங்க அருமை மருமகன் கொடியோட மிசஸ் கூட சொல்லுறாங்க.” என்றான்.

“ஆமா ஆமா அவ சொல்றத நீ வேணா நம்பு.” என்ற நொடி,

“அத்தை” என்று குரலை உயர்த்தினான் கொடிவீரன்.

“சரி மருமகனே. உன் பொண்டாட்டியை நான் எதுமே சொல்லல போதுமா.”

“ஏன் மகி உன் அம்மாவுக்கு என்ன கிறுக்கு பிடிச்சி போச்சா. நான்தான் இவங்களுக்கு முதல் மருமகன். என்னை விட்டுட்டு இவனை பார்த்து மருமகன், மாமா மகன்னு பாட்டு பாடிக்கிட்டு இருக்காங்க.”

“ஆமா. எனக்கு உன்னை காட்டிலும் என் வீரன் மாப்பிளையை தான் பிடிக்கும். இப்போ என்ன அதுக்கு?”

“அம்மா அப்படி என்ன உங்களுக்கு என் மாறன் மேல கோவம்?” என்று மகி கேட்க,

“அதானே. அப்படி என்ன நான் பண்ணேன் உங்களுக்கு. மொத்தம் நாலு பொண்ணு இருந்தும், நான் உங்க முதல் பொண்ணை மட்டும் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஒருவேளை உங்களுக்கு அதான் என் மேல வருத்தமா?”

“அடடா நீ கட்டிக்கலனு தான் என் மூணு பொண்ணுங்களும் தவம் கிடக்குறாங்க பாரு.”

“அவங்க தவமே இருந்தாலும் நான் கிடைக்க மாட்டேன் மாமியாரே.”

“ஏய் என்னை அப்படி கூப்பிடாதேன்னு சொன்னேன் இல்ல” என்றார் எரிச்சலாக.

“அத்தை ஏன் இப்படி கோவப்படுறீங்க? அப்படி அண்ணன் என்ன பெரிய தப்பு பண்ணிட்டாரு அவரை ஏன் உங்க மருமகனா ஏத்துக்க மாட்டேன்றீங்க?” கொடிவீரன் கேட்க,

“இவன் எதுமே பண்ணல. அதான் எனக்கு இவனை பிடிக்கல.”

“நான் ஏன் உங்களுக்கு பண்ணனும்? அதான் எல்லாத்துக்கும் சேர்த்து என் மகியை நான் நல்லா பார்த்துக்குறேனே. அது போதாதா.”

“அப்படி என்ன நீ அவளை பார்த்துக்கிட்ட?” என்றார் கீதா.

“அத்தை உங்க மகள நான் கட்டின புடவையோட வான்னு சொல்லி தான் கால்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

“ஆமாடா அதான் அவ கட்டின 150 புடவையோட சேர்த்து பத்து பட்டுப்புடவையையும் தூக்கிட்டு போயிருக்கா” என்றார் கடுப்புடன்.

கொடிவீரன் வாய்மூடி சிரிக்க, மகிழினி சத்தமாகவே சிரித்துவிட்டாள்.

“ஏங்க சிரிக்காதிங்க.” என்று மனைவிடம் சொல்ல,

“ஐயோ! உங்க அண்ணன் பயங்கரமான ஆளுதான் போல” என்று சிரிப்பை நிறுத்தாது சொன்னாள் மகிழினி.

“உங்க பொண்ணு வக்கீல் அத்தை. நான் எதார்த்தமா சொன்னதை தெளிவா புரிஞ்சி சரியா பண்ணுறா. அதுக்கு நான் என்ன பண்றது?”.

“ஏங்க உங்க அண்ணி வக்கீலா?” கணவனிடம் மகிழினி கேட்க,

“ஏங்க அவன்கிட்ட போய் நமக்கு டிவோர்ஸ் ஆக என்ன பண்ணனும்னு கேட்கப்போறிங்களா?” என்றான் அவள் எண்ணம் உணர்ந்து.

“உங்களுக்கு எப்படி தெரியும்?”

“என் பொண்டாட்டியை பற்றி எனக்கு தெரியாதா?”

“ம்ம்... நான் உங்க பொண்டாட்டியா?”

“இல்லையா பின்ன” என்றதில் மகிழினி முறைக்க, “சரி சரி நம்ம சண்டையை அப்புறம் வச்சிக்கலாம். அங்க பாருங்க சீன் மிஸ் ஆகப்போகுது” என்றான் கொடிவீரன்.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top