Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 63
- Thread Author
- #1
விவாதக் காதல் – 31
நேரம் வேகமாக கடந்த நிலையில், கடைக்குச் சென்ற கொடிவீரனும்... அவனின் அத்தையும் கையில் சில பொருள்களை எடுத்துக்கொண்டு வேணுவுடன் உள்ளே நுழைந்தார்கள்.
மகிழினி இவர்களுக்கு குடிக்க தண்ணீர் தந்தாள்.
"ஏன்டி ஜெயா, உன் மவனுக்கு என்ன புத்தி கெட்டு போச்சா?” என்று குதற்கமாகக் கேட்டார் கீதா.
"ஏன் அண்ணி? என்னாச்சு?”
"பின்ன என்னடி, நம்ம வீட்டு பொண்ணுக்கு நம்ம ஆயிரக்கணக்குல செலவு பண்ணி துணிமணி எல்லாம் எடுத்துக் கொடுத்தா, அதுல ஒரு லாஜிக் இருக்கு. ஆனா, இவன் என்னமோ, மாப்பிளையோட மாமன் கூட பிறந்த பிறப்புக்கு எல்லாம் ஆயிரக்கணக்குல செலவு பண்ணி, பட்டுப்புடவை எடுக்குறான். இது எந்த ஊரு நியாயம்டி” என்று கடுகடுக்க,
"என்ன அண்ணி பண்ண சொல்லுறீங்க. நம்ம வீட்டுப் பொண்ணு கௌவரவமா வாழணும்னா, நம்ம இதெல்லாம் பண்ணித்தானே ஆகணும்” என்றார் ஜெயா.
“என்னமோ போங்க. இதெல்லாம் ரொம்ப அதிகம். ஐ டோன்ட் லைக் திஸ். பேட் ஹேபிட்” என்று தன் எதிர்ப்பை தெரிவித்தார் அவர்.
"அண்ணி உங்களுக்கே தெரியும்ல, இந்த கல்யாணம் நடக்க நாங்க எவ்வளவு பணம் செலவு பண்ணிருக்கோம்னு. இவ்ளோ பணம் செலவு பண்ணுற எங்களுக்கு, நம்ம வீட்டுக்கு வரப்போற மாப்பிளையோட அக்கா மாமா ஆசைப்படுற மாதிரி, அவங்க சொந்தங்களை திருப்திபடுத்த, நாங்க கொஞ்சம் செலவு பண்ணுறது தப்பு இல்ல அண்ணி” என்றார் ஜெயா.
"அத்தை நீங்க இதெல்லாம் கண்டுக்காதீங்க. அதே போல இதெல்லாம் ஒரு விஷயம்னு நீங்க சசி அக்காகிட்ட சொல்லிக்கிட்டு இருக்காதிங்க. அப்புறம் அக்கா ரொம்ப மனசு கஷ்டப்படும்” என்று கொடிவீரன் சொல்ல, அறையின் உள்புறம் அமர்ந்து இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த சசியின் இதயம் ரணமாக இருந்தது.
அன்றைய தினம் மாலை நேரம். சிவாவின் அக்கா ஆண்டாளின் கணவன் நாராயணனின் அக்காவிற்கு மரியாதை செய்வதற்காக கொடிவீரனும்... ஜெயாவும் இவர்கள் தங்கி இருக்கும் வீட்டில் காத்திருக்க, சசியின் முகமோ இங்கு நடக்கும் எந்த விஷயங்களும் பிடிக்காமல் கோபத்துடன் காட்சி தந்தது.
“அக்கா இப்போ ஏன் முகத்தை இப்படி வச்சி இருக்க நீ?”
“எனக்கு இங்க நடக்குற எதுவுமே பிடிக்கல.”
“உனக்கு மாப்பிளையை பிடிச்சிருக்குல்ல. அது போதும் எங்களுக்கு. நீ கொஞ்ச நேரம் எதையும் யோசிக்காம இரு.
“ஆமா அக்கா. ப்ளீஸ் முகத்தை அப்படி வச்சிக்காதிங்க” என்று மகிழினியும் கொடிவீரனுக்கு ஆதரவாக பேசினாள்.
“மாமா, ஜெயா பாட்டி உங்களை கூப்பிடுறாங்க” என்று வேணு சொல்லவும்...”ஆங் இதோ வரேன்.” என்ற கொடிவீரன், "ஏங்க. அநேகமா மாப்பிளையோட வீட்டுல இருந்து தான் கண்டிப்பா அவரோட மாமாவோட அக்கா வந்து இருப்பாங்க போல. நான் போய் அங்க அவங்கள கவனிக்குறேன். நீங்க அக்காவை அவங்க பாக்கணும்னு சொல்லும் போது மட்டும்... நான் வேணுகிட்ட சொல்லி அனுப்புறேன். அப்போ நீங்க அக்காவை வெளிய அழைச்சிட்டு வாங்க” என்று வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறினான்.
"பாரு சித்ரா. இன்னும் இந்த கல்யாணமே முடியல. அதுக்குள்ள இவனும்... என் அம்மாவும் இந்த குடும்பத்துக்கு அடிமை போல நடந்துக்குறாங்க” என்று கடுப்பாக சொன்னாள்.
"விடுங்க அக்கா. பொண்ணு வீடுனாலே இப்படி அடங்கித்தான் போகணும் போல” என்று மகிழினி சசியை சமாதானம் செய்ய,
"இல்ல இல்ல. தாலி மட்டும் என் கழுத்துல ஏறட்டும். அப்புறம் இருக்கு பாரு, இவனுங்க போடுற ஆட்டதுக்கு நான் எப்படி பிஜிஎம் மாத்துறேன்னு மட்டும்” என்று சசி சொல்ல, மகிழினி சிரித்து கொண்டாள்,
"அத்தை அத்தை. உங்களை சசி அக்காவை அழைச்சிட்டு வெளிய வர சொன்னாங்க” என்று வேணு சொன்னதும். மகிழினி சசியை அழைத்து கொண்டு வெளியே வர, வீட்டு வாசலில் மேளச்சத்தம் முழங்க. கையில் பூ மாலையுடன் சிவாவின் அக்கா கணவன் நாராயணன் காத்து இருக்க,
ஜெயா, கொடிவீரன், மற்றும் சசியின் அத்தை என்று அனைவரும். சிவாவின் அக்கா கணவன் நாராயணனின் அக்கா வரும் காரை எதிர்பார்த்து, இவர்களை வரவேற்க அடிமைகளை போல நின்றிருப்பதை பார்த்து, மகிழினியின் முகமும் மாறியது.
நின்ற காரில் இருந்து இறங்கிய பெண்மணின் கழுத்தில் மாலை அணிவித்து, "அக்கா வாங்க வாங்க. எப்படி இருக்கீங்க? உங்களை பார்த்து எத்தனை நாளாச்சு” என்று நாராயணன் தன் அக்காவை வரவேற்றார்.
“ஐயோ! இந்தப் பொம்பளையா, இந்த ஆளோட அக்கா? இவ உன்கிட்ட பிரச்சனை பண்ண போலீஸ் தானே” என்று சசி மகிழினியைக் கேட்க,
"ம்... ஆமா அக்கா. என் கேண்டீனைக் கேட்டு என்கிட்ட பிரச்சனை பண்ண போலீஸ் வனிதா தான் இவங்க” என்று சிறு அச்சதுடன் அவள் சொல்ல, கொடியின் முகமும் வனிதாவை கண்டதும் இருண்டுபோனது.
"வாங்க. உள்ள வாங்க அக்கா. ஏய் சிவா. என் அக்காவை உள்ள அழைச்சிட்டு வாடா” என்று அவர் சொன்னதும்... வனிதா கெத்தாக மாலையுடன் வீட்டுக்குள் நுழைந்து, நடுவீட்டில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டபடி திமிரின் உச்சத்தில் அமர்ந்து இருந்தாள்.
"அக்கா, இவங்க தான் என் மச்சான் சிவா கட்டிக்க போற பொண்ணு வீட்டு காரங்க” என்று சிவாவின் மாமா நாராயணன் சொல்ல, தயக்கத்துடன் கொடிவீரன் ஒரு வணக்கத்தை போட்டு வைத்தான்.
"அம்மாடி சித்ரா, சசியை அழைச்சிட்டு வந்து இவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க சொல்லு மா” என்று ஜெயா சொன்னதும் சசியை அழைத்து கொண்டு வந்த மகிழினியை பார்த்த வனிதா முகம் மாற, தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி தூர வீசினாள்.
"டேய்! இவ இங்க என்னடா பண்ணுறா? இவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் என்ன சம்மந்தம்? இவ வீட்டுல தான் நீங்க பொண்ணு எடுத்து இருக்கீங்களா” என்று வனிதா அதிகபட்ச கோவத்தில் உருமியவளை சமாதானப்படுத்தும் விதமாக,
"நான் இவங்களோட ஃப்ரண்ட் தாங்க. சொந்த காரங்க எல்லாம் இல்ல” என்று மகிழினி சொன்னதும்... வனிதாவின் கோவத்துக்கு என்ன காரணம் என்று புரியாமல் நாராயணன் குழப்பதுடன் நின்று இருக்க,
"இவ உங்களுக்கு யாரா வேணா இருக்கட்டும். ஆனா, இன்னும் ஒரு நொடி இவ இங்க இருந்தாலும்... இந்தக் கல்யாணம் நடக்காது” என்று வனிதா கோபத்துடன் சொன்னார்.
“ஏன் நடக்காது? அப்படி என்ன இந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் பிரச்சனை?" என்று கீதா கேட்க,
"அதெல்லாம் உங்ககிட்ட சொல்லனும்ன்னு அவசியம் இல்ல. இவ இருந்தா இந்த கல்யாணம் நடக்காது” என்று வனிதா மீண்டும் அழுத்தமாக சொன்னார்.
"என்னால இங்க எந்த மன சஞ்சலமும் வேண்டாம். நான் கிளம்புறேன், இந்த கல்யாணம் எந்த தடங்களும் இல்லாம நல்லபடியா நடக்கனும். வேணு நீ வா நம்ம கிளம்பலாம். பாட்டி வாங்க போகலாம்” என்ற மகிழினி, வேணுவின் கரங்களை பிடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற,
அவளின் கரங்களைப் பிடித்து தடுத்து நிறுத்திய கொடிவீரன், "இவங்கள நாங்க எங்க வீட்டு கல்யாணத்துக்கு முறைப்படி அழைத்திருக்கோம். சோ இப்போ இவங்க எங்க வீட்டு பொண்ணு. அதனால உங்களோட தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக எல்லாம்... எங்க வீட்டுக்கு வந்த பெண்ணை இப்படி பாதியில வெளிய அனுப்ப இயலாது. சோ பெட்டர் நீங்க கசப்பான விஷயத்தை எல்லாம் மறந்துட்டு, ஆக வேண்டிய நல்ல காரியத்தை நடத்திக் கொடுத்துட்டு போங்க” என்று வனிதாவை பார்த்து சொன்னவனின் கைபிடியில், அவள் கரங்கள் அகபட்டு இருக்க, சிலையென அதே இடத்தில் நின்றுருந்தாள் அழகு தேவதை சித்ரமகிழினி.
"என்ன பேசுற தம்பி நீ. என் அக்காவை எதிர்த்து எல்லாம் நீ இப்படி பேச கூடாது” என்று உருமினான் நாராயணன்.
"சார். நான் எதிர்த்து எல்லாம் பேசல. நியாயத்தை தான் பேசினேன். உங்க அக்காவுக்கும் இவங்களுக்கும் என்ன வேணா பிரச்சனை இருக்கலாம். ஆனா, இன்னைக்கு இவங்க எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட். நாங்க அவங்கள அப்டி எல்லாம் விட்டு தர முடியாது” என்றான் ஆர்ப்பாட்டம் இல்லாத குரலில்.