Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 51
- Thread Author
- #1
விவாதம் – 25
இதோ இன்று புதன்கிழமை மதிய உணவு நேரத்தில், “அக்கா. என்ன இது? யாரு இன்னைக்கு சமைச்சது?” என்று கேட்டவன் தன் கையில் இருந்த சாப்பாடு தட்டை எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்.
“ஏன்டா. நம்ம வள்ளி அக்கா தான் வந்து சமைச்சு வச்சிட்டு போனாங்க. ஏன் என்னாச்சு?” என்றாள் சசி
“இந்த குழம்புக்கு என்ன பெயர்?” என்று முகத்தை சுளித்தான் கொடி.
“சாம்பார் வைக்கிறேன்னு தான் சொன்னாங்க. ஏன் என்னவா வச்சி இருக்காங்க?” என்று கேட்ட சசி, தம்பியின் தட்டில் இருந்து ஒரு வாய் எடுத்து சாப்பிட்டு, “ஏன் நல்லா தானே இருக்கு” என்றாள் சசி
“ஐயோ அக்கா. உனக்கு நாக்கு செத்துப் போச்சு போல. சாம்பார்னா எப்படி இருக்கனும் தெரியுமா?” என்றவன் தன் கையை அலம்பிய பின் சசியின் முந்தனையில் அவன் கையை துடைத்து கொண்டு இருக்க,
“எப்படி இருக்கனும்?” என்று சசி கேட்டாள்
“CM வைக்கிற மாதிரி இருக்கனும்” என்று பெருமிதமாக சொன்னான் கொடி.
“அது யாரு டா CM?” என்று புரியாதவளாக கேட்டாள் சசி.
“அதான் அக்கா. அவங்க” என்றவன் தன் கையில் இருந்த கைபேசியைப் பார்த்து கொண்டு இருந்தான்.
“அவங்கன்னா யாரு?” என்றாள் சசி
“நீ ஒரு மங்குனி அக்கா. நான் யாரை சொல்ல போறேன். எனக்கு வேற எந்த பொண்ணை தெரியும்” என்றவன் மீண்டும் அவன் கைபேசியை பார்த்து கொண்டிருந்தான்.
அவன் கையில் இருந்த கைபேசியை பிடுங்கியவள், "டேய் கேக்குறேன் இல்ல. சொல்லுடா. யாரு அந்த CM?" என்று அழுத்தமாக கேட்டாள்.
“அதான் அக்கா என் நண்பன் சுரேஷ் இருக்கான் இல்ல. அவங்க சிஸ்டர்.”
“டேய்! ஏன் அவளுக்கு பெயர் இல்லையா. அது என்ன CM?” என்று புரியாமல் கேட்க, மௌனமாக சிரித்தான் கொடி.
“என்னடா தம்பி சிரிக்குற? டேய் என்ன வெக்கப்படுறியா. சொல்லிட்டு பண்ணுடா சகிக்கல.” என்று கிண்டல் செய்தாள் சசி
“நான் வெக்கமும் படல. துக்கமும் படல. நீ போய் வேலையை பாரு.” என்றவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல,
அவனை பின் தொடர்ந்து வந்த சசி, “டேய் நில்லு. சித்ராவுக்கு செல்ல பெயர் வைக்கிற அளவுக்கு, நீ தேறிட்ட இல்ல” என்றாள்.
“ஐயோ அக்கா. செல்ல பெயர் எல்லாம் இல்ல. அது அவங்க பெயர் தான். நான் சித்ரமகிழினி என்ற பெயரை CM ன்னு கூப்பிட்டேன்.” என்றவனின் இதழ்கள் அவள் பெயரை சொல்லும் போதே புன்னகை பூத்தது.
“சரி அதெல்லாம் விடு. ஆமா அப்படி என்னடா அவ மட்டும் ஸ்பெஷலா சாம்பார் வைப்பா?” என்று கேட்டாள் சசி
“ஸ்பெஷலாவா! அக்கா நீ என்ன மிஞ்சி போனா பருப்புல கத்திரிக்காய், முருங்கைக்காய் மட்டும் தானே போட்டு சாம்பார் வைப்ப. ஆனா, அவங்க சுமார் 10 வகையான சாம்பார் வைப்பாங்க” என்று சொன்னவன் மீண்டும் தன் அக்காவின் அருகில் வந்து அமர்ந்தான்.
“என்னது பத்து வகையான சம்பாரா?” என்று கண்கள் விரிந்தாள் சசி
“ஆமா அக்கா. மணத்தக்காளி கீரை சாம்பார். அப்பளச் சாம்பார். சுண்டக்காய் சாம்பார். கதம்ப சாம்பார். வெங்காயத்தாள் சாம்பார். மொச்சை பயிர் சாம்பார். வெந்தய கீரை சாம்பார். பறங்கிக்காய் சாம்பார். வெண்டக்கா சாம்பார். பலாக்கொட்டை சாம்பார். கொடை மிளகா சாம்பார். அப்புறம்...”
“டேய் போதும்டா.” என்று அடுக்கிக்கொண்டே போன தம்பியைத் தடுத்து நிறுத்தினாள் சசி.
“ஏன்டா அந்த அளவுக்கு அவளோட சமையல் உனக்கு பிடிச்சி இருக்கா?” என்று கேட்டதும்...
“என்ன அக்கா இப்படி கேட்டுட்ட. அவங்க சூப்பரா சமைப்பாங்க. என்ன திறமை தெரியுமா அந்தப் பொண்ணுக்கு இந்த வயசுல ஒரு கேன்டீன் ரன் பண்ணுறாங்கன்னா, எவ்ளோ கெத்து பாரு. நமக்கு எல்லாம் அப்பா இறந்த பின்னாடி, அம்மானு ஒரு பந்தம் இருந்துச்சு. ஆனா, அந்தப் பொண்ணு படிக்கிற வயசுல அம்மா, அப்பாவை இழந்து, பாட்டி அரவணைப்பில் வளர்ந்து, அவங்க பாட்டி சொன்ன பையனை கல்யாணம் பண்ணி, அந்த வாழ்க்கையும் எதிர்பாராத விதமாக ஏமாற்றத்தை தந்தாலும், அவங்க புருஷன் பெயருல ஒரு கேன்டீன் ஆரம்பிச்சு, அதுல எவ்வளவோ பிரச்சனை வந்தாலும், தனி ஆளா நின்னு தில்லா சமாளிக்கிறாங்க பாருங்க. ரியலி பெரிய கிரெடிட் தரணும் அக்கா அவங்களுக்கு. அவங்க ஹஸ்பன்ட் இவங்க பெயர்ல போட்ட, இன்சூரன்ஸ் பணத்தை கூட, அந்த பொண்ணு ஒரு ருபா எடுத்துக்காம, வீரன் வளர்ந்த ஆஸ்ரமதுக்கே தந்துட்டாங்க. ப்ச் அந்த பொண்ணு உண்மையிலேயே கிரேட்க்கா” என்று மனம் மகிழ்ந்து, மகிழினியைக் கொடிவீரன் பாராட்டிக் கொண்டிருக்க, அவனைப் பார்த்து சிரித்தாள் சசி.
?என்ன அக்கா? ஏன் சிரிக்கிற?” என்றான் கொடி
“என் தம்பி முதல்முறை ஒரு பெண்ணை பற்றி இவ்வளவு அனாலிஸ் பண்ணிருக்கானே என்று யோசிச்சு சிரிக்கிறேன்” என்றாள் சசி.
“இதுல நீ யோசிக்கிவோ, சிரிக்கவோ ஒண்ணுமே இல்ல. போ போய் வேலையை பாரு” என்றவன் சோபாவில் இருந்து எழுந்ததும் அவன் கையை பிடித்த சசி “ஒண்ணுமே இல்லையா?” என்று ஆவலாக கேட்டாள்.
“அக்கா இன்னும் ரெண்டு நாளில் உனக்கு கல்யாணம். போ போய் அம்மா எங்கன்னு பாரு” என்றவன் தன் கைபேசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அன்றைய தினம் இரவு நேரம், சசியின் திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடித்த கொடிவீரன், சோர்வாக தன் வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்ததும், அவனுக்கு தண்ணீர் கொடுத்தபடி ஜெயா மகன் அருகில் வந்து அமர்ந்தார்.
“அம்மா. அக்கா எங்க?” என்று கொடி கேட்டதும்
“இதோ இருக்கேன்டா” என்று கைபேசியைப் பார்த்துக்கொண்டே வீட்டினுள் இருந்து வெளியே வந்த சசி, “டேய்! சித்ரா வர கார் நம்ம ஊர் எல்லைக்கு வந்துருச்சாம். இன்னும் 5 நிமிஷத்துல அவங்க இங்க இருப்பாங்களாம்” என்று அவள் சொன்ன நேரம் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது.
“இதோ சித்ரா வீட்டுல இருந்து வந்துட்டாங்க போல” என்று ஆசையாக ஜெயா திண்ணையில் இருந்து எழுந்தவர் காரை நோக்கி நடக்க.
தாயைப் பின் தொடர்ந்து வந்த கொடிவீரனின் கண்கள், ஏனோ அவனின் CMமை பார்க்க ஆவலாகக் காத்திருக்க, அவனை நோக்கி ஓடி வந்த பெண்ணொருத்தி சட்டென்று அவனை கட்டிப்பிடித்து அவனின் கைகளில் இதழ் பதித்தாள்.
அதே நேரம் காரில் இருந்து இறங்கிய சித்ரமகிழினி கண்ணுக்கு எதிரில், கொடிவீரனின் மாமன் மகள் ரதி அவனை கட்டி கொண்டு நின்றிருந்தாள்.
“ஏய்! என்ன பண்ற? நீ ஏன் இப்போ நீ இங்க வந்த?” என்று ஜெயா கத்தியதும் ரதி கொடியின் பின் சென்று ஒளிந்து கொண்டாள்
“அம்மா இப்போ ஏன் அவளைக் கத்துறீங்க. பாவம் அவ பயந்துடப்போறா. நீங்க முதல்ல வந்தவுங்கள போய் வீட்டுக்குள்ள கூப்பிடுங்க” என்று கொடியின் வார்த்தையில், ரதி அன்பாக மீண்டும் அவனை ஒட்டிக்கொண்டாள்.
“வா சித்ரா. உள்ள வா. டேய் வேணு குட்டி, எப்படிடா இருக்க? பாட்டி வாங்க. எப்படி இருக்கீங்க?” என்று சசி அன்பாக இவர்களை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
“சித்ரா வா வா. வா உள்ள வா மா எல்லோரும் உள்ள வாங்க.” என்று ஜெயாவும் அழைக்க பாட்டி, வேணு மற்றும் மகிழினி ஆகிய மூவரும் கொடி வீட்டிற்குள் நுழைந்தனர்.
இதோ இன்று புதன்கிழமை மதிய உணவு நேரத்தில், “அக்கா. என்ன இது? யாரு இன்னைக்கு சமைச்சது?” என்று கேட்டவன் தன் கையில் இருந்த சாப்பாடு தட்டை எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்.
“ஏன்டா. நம்ம வள்ளி அக்கா தான் வந்து சமைச்சு வச்சிட்டு போனாங்க. ஏன் என்னாச்சு?” என்றாள் சசி
“இந்த குழம்புக்கு என்ன பெயர்?” என்று முகத்தை சுளித்தான் கொடி.
“சாம்பார் வைக்கிறேன்னு தான் சொன்னாங்க. ஏன் என்னவா வச்சி இருக்காங்க?” என்று கேட்ட சசி, தம்பியின் தட்டில் இருந்து ஒரு வாய் எடுத்து சாப்பிட்டு, “ஏன் நல்லா தானே இருக்கு” என்றாள் சசி
“ஐயோ அக்கா. உனக்கு நாக்கு செத்துப் போச்சு போல. சாம்பார்னா எப்படி இருக்கனும் தெரியுமா?” என்றவன் தன் கையை அலம்பிய பின் சசியின் முந்தனையில் அவன் கையை துடைத்து கொண்டு இருக்க,
“எப்படி இருக்கனும்?” என்று சசி கேட்டாள்
“CM வைக்கிற மாதிரி இருக்கனும்” என்று பெருமிதமாக சொன்னான் கொடி.
“அது யாரு டா CM?” என்று புரியாதவளாக கேட்டாள் சசி.
“அதான் அக்கா. அவங்க” என்றவன் தன் கையில் இருந்த கைபேசியைப் பார்த்து கொண்டு இருந்தான்.
“அவங்கன்னா யாரு?” என்றாள் சசி
“நீ ஒரு மங்குனி அக்கா. நான் யாரை சொல்ல போறேன். எனக்கு வேற எந்த பொண்ணை தெரியும்” என்றவன் மீண்டும் அவன் கைபேசியை பார்த்து கொண்டிருந்தான்.
அவன் கையில் இருந்த கைபேசியை பிடுங்கியவள், "டேய் கேக்குறேன் இல்ல. சொல்லுடா. யாரு அந்த CM?" என்று அழுத்தமாக கேட்டாள்.
“அதான் அக்கா என் நண்பன் சுரேஷ் இருக்கான் இல்ல. அவங்க சிஸ்டர்.”
“டேய்! ஏன் அவளுக்கு பெயர் இல்லையா. அது என்ன CM?” என்று புரியாமல் கேட்க, மௌனமாக சிரித்தான் கொடி.
“என்னடா தம்பி சிரிக்குற? டேய் என்ன வெக்கப்படுறியா. சொல்லிட்டு பண்ணுடா சகிக்கல.” என்று கிண்டல் செய்தாள் சசி
“நான் வெக்கமும் படல. துக்கமும் படல. நீ போய் வேலையை பாரு.” என்றவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல,
அவனை பின் தொடர்ந்து வந்த சசி, “டேய் நில்லு. சித்ராவுக்கு செல்ல பெயர் வைக்கிற அளவுக்கு, நீ தேறிட்ட இல்ல” என்றாள்.
“ஐயோ அக்கா. செல்ல பெயர் எல்லாம் இல்ல. அது அவங்க பெயர் தான். நான் சித்ரமகிழினி என்ற பெயரை CM ன்னு கூப்பிட்டேன்.” என்றவனின் இதழ்கள் அவள் பெயரை சொல்லும் போதே புன்னகை பூத்தது.
“சரி அதெல்லாம் விடு. ஆமா அப்படி என்னடா அவ மட்டும் ஸ்பெஷலா சாம்பார் வைப்பா?” என்று கேட்டாள் சசி
“ஸ்பெஷலாவா! அக்கா நீ என்ன மிஞ்சி போனா பருப்புல கத்திரிக்காய், முருங்கைக்காய் மட்டும் தானே போட்டு சாம்பார் வைப்ப. ஆனா, அவங்க சுமார் 10 வகையான சாம்பார் வைப்பாங்க” என்று சொன்னவன் மீண்டும் தன் அக்காவின் அருகில் வந்து அமர்ந்தான்.
“என்னது பத்து வகையான சம்பாரா?” என்று கண்கள் விரிந்தாள் சசி
“ஆமா அக்கா. மணத்தக்காளி கீரை சாம்பார். அப்பளச் சாம்பார். சுண்டக்காய் சாம்பார். கதம்ப சாம்பார். வெங்காயத்தாள் சாம்பார். மொச்சை பயிர் சாம்பார். வெந்தய கீரை சாம்பார். பறங்கிக்காய் சாம்பார். வெண்டக்கா சாம்பார். பலாக்கொட்டை சாம்பார். கொடை மிளகா சாம்பார். அப்புறம்...”
“டேய் போதும்டா.” என்று அடுக்கிக்கொண்டே போன தம்பியைத் தடுத்து நிறுத்தினாள் சசி.
“ஏன்டா அந்த அளவுக்கு அவளோட சமையல் உனக்கு பிடிச்சி இருக்கா?” என்று கேட்டதும்...
“என்ன அக்கா இப்படி கேட்டுட்ட. அவங்க சூப்பரா சமைப்பாங்க. என்ன திறமை தெரியுமா அந்தப் பொண்ணுக்கு இந்த வயசுல ஒரு கேன்டீன் ரன் பண்ணுறாங்கன்னா, எவ்ளோ கெத்து பாரு. நமக்கு எல்லாம் அப்பா இறந்த பின்னாடி, அம்மானு ஒரு பந்தம் இருந்துச்சு. ஆனா, அந்தப் பொண்ணு படிக்கிற வயசுல அம்மா, அப்பாவை இழந்து, பாட்டி அரவணைப்பில் வளர்ந்து, அவங்க பாட்டி சொன்ன பையனை கல்யாணம் பண்ணி, அந்த வாழ்க்கையும் எதிர்பாராத விதமாக ஏமாற்றத்தை தந்தாலும், அவங்க புருஷன் பெயருல ஒரு கேன்டீன் ஆரம்பிச்சு, அதுல எவ்வளவோ பிரச்சனை வந்தாலும், தனி ஆளா நின்னு தில்லா சமாளிக்கிறாங்க பாருங்க. ரியலி பெரிய கிரெடிட் தரணும் அக்கா அவங்களுக்கு. அவங்க ஹஸ்பன்ட் இவங்க பெயர்ல போட்ட, இன்சூரன்ஸ் பணத்தை கூட, அந்த பொண்ணு ஒரு ருபா எடுத்துக்காம, வீரன் வளர்ந்த ஆஸ்ரமதுக்கே தந்துட்டாங்க. ப்ச் அந்த பொண்ணு உண்மையிலேயே கிரேட்க்கா” என்று மனம் மகிழ்ந்து, மகிழினியைக் கொடிவீரன் பாராட்டிக் கொண்டிருக்க, அவனைப் பார்த்து சிரித்தாள் சசி.
?என்ன அக்கா? ஏன் சிரிக்கிற?” என்றான் கொடி
“என் தம்பி முதல்முறை ஒரு பெண்ணை பற்றி இவ்வளவு அனாலிஸ் பண்ணிருக்கானே என்று யோசிச்சு சிரிக்கிறேன்” என்றாள் சசி.
“இதுல நீ யோசிக்கிவோ, சிரிக்கவோ ஒண்ணுமே இல்ல. போ போய் வேலையை பாரு” என்றவன் சோபாவில் இருந்து எழுந்ததும் அவன் கையை பிடித்த சசி “ஒண்ணுமே இல்லையா?” என்று ஆவலாக கேட்டாள்.
“அக்கா இன்னும் ரெண்டு நாளில் உனக்கு கல்யாணம். போ போய் அம்மா எங்கன்னு பாரு” என்றவன் தன் கைபேசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அன்றைய தினம் இரவு நேரம், சசியின் திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடித்த கொடிவீரன், சோர்வாக தன் வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்ததும், அவனுக்கு தண்ணீர் கொடுத்தபடி ஜெயா மகன் அருகில் வந்து அமர்ந்தார்.
“அம்மா. அக்கா எங்க?” என்று கொடி கேட்டதும்
“இதோ இருக்கேன்டா” என்று கைபேசியைப் பார்த்துக்கொண்டே வீட்டினுள் இருந்து வெளியே வந்த சசி, “டேய்! சித்ரா வர கார் நம்ம ஊர் எல்லைக்கு வந்துருச்சாம். இன்னும் 5 நிமிஷத்துல அவங்க இங்க இருப்பாங்களாம்” என்று அவள் சொன்ன நேரம் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது.
“இதோ சித்ரா வீட்டுல இருந்து வந்துட்டாங்க போல” என்று ஆசையாக ஜெயா திண்ணையில் இருந்து எழுந்தவர் காரை நோக்கி நடக்க.
தாயைப் பின் தொடர்ந்து வந்த கொடிவீரனின் கண்கள், ஏனோ அவனின் CMமை பார்க்க ஆவலாகக் காத்திருக்க, அவனை நோக்கி ஓடி வந்த பெண்ணொருத்தி சட்டென்று அவனை கட்டிப்பிடித்து அவனின் கைகளில் இதழ் பதித்தாள்.
அதே நேரம் காரில் இருந்து இறங்கிய சித்ரமகிழினி கண்ணுக்கு எதிரில், கொடிவீரனின் மாமன் மகள் ரதி அவனை கட்டி கொண்டு நின்றிருந்தாள்.
“ஏய்! என்ன பண்ற? நீ ஏன் இப்போ நீ இங்க வந்த?” என்று ஜெயா கத்தியதும் ரதி கொடியின் பின் சென்று ஒளிந்து கொண்டாள்
“அம்மா இப்போ ஏன் அவளைக் கத்துறீங்க. பாவம் அவ பயந்துடப்போறா. நீங்க முதல்ல வந்தவுங்கள போய் வீட்டுக்குள்ள கூப்பிடுங்க” என்று கொடியின் வார்த்தையில், ரதி அன்பாக மீண்டும் அவனை ஒட்டிக்கொண்டாள்.
“வா சித்ரா. உள்ள வா. டேய் வேணு குட்டி, எப்படிடா இருக்க? பாட்டி வாங்க. எப்படி இருக்கீங்க?” என்று சசி அன்பாக இவர்களை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
“சித்ரா வா வா. வா உள்ள வா மா எல்லோரும் உள்ள வாங்க.” என்று ஜெயாவும் அழைக்க பாட்டி, வேணு மற்றும் மகிழினி ஆகிய மூவரும் கொடி வீட்டிற்குள் நுழைந்தனர்.