Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 33
- Thread Author
- #1
விவாதக் காதல்
விவாதம் - 15
விவாதம் - 15
"சரி இருங்க. நான் போய் சன்னிதானத்தை இன்னும் ஒரு முறை சுத்திட்டு வந்திடுறேன். சசி நீயும் வா” என்று ஜெயா தன் மகளை அழைத்து கொண்டு கோவிலை சுற்றி வர சென்றார்.
"ஏங்க. ஏன் இதெல்லாம். நான் அவங்கள வெளிய வீடு எடுத்து தங்க வச்சிக்கிறேன்” என்று கொடி மீண்டும் முதல் இருந்து ஆரம்பிக்க.
“ப்ளீஸ் சார். நான் உங்களுக்கு நிறைய கடமைப்பட்டு இருக்கேன். இந்த ஒரு செயலை செய்தாவது, உங்களுக்கு நான் பட்ட கடனை சரி பண்ணிக்கிறனே” என்று சொன்ன மகிழினியை எதிர்த்து பேச மனமில்லாமல் சிலையாக நின்று இருந்தான் கொடி
ஏதோ யோசனையில் கோவிலை சுற்றி வந்த ஜெயா, தொலைவில் இருந்து கொடியையும் மகிழினியையும் பார்த்தவர்.
"ஏன்டி சசி. அந்தப் பொண்ணு பார்க்க நல்ல பொண்ணா இருக்கா இல்ல. எவ்வளவு அமைதியா பேசுறா. நல்ல முக லட்சணமா வேற இருக்கா. இந்த பொண்ணு என்ன ஆளுங்கனு கேட்டா, நம்ம கொடி வீரனுக்கு இவளை பேசி முடிக்கலாம் இல்ல” என்று ஜெயா தன் மனதில் பட்ட ஆசையை தன் மகளிடம் வெளிப்படுத்தினார்.
‘அவளோட அழகை பார்த்து ரசிக்கிற உனக்கு. அவளோட ஆழ்மனசுல இருக்குற வேதனை புரியாதும்மா’ என்று சசி தனக்குள் எண்ணிகொண்டாள்.
"சரி வாடி போகலாம். நேரமாகுது பாரு” என்று ஜெயா தன் மகளை அழைக்க, மகிழினி ஒரு ஆட்டோவில், கொடியின் அக்காவையும், அம்மாவையும் தன் வீட்டுக்கு அழைத்து செல்ல, இவர்களை பின் தொடர்ந்து வந்தான் கொடி.
ஆட்டோவில் இருந்து முதலில் இறங்கிய மகிழினியை பார்த்து, வாசலில் நின்று இருந்த அவளின் பாட்டி, மகிழ்ச்சியில் ஓடி வந்து அவளை கட்டி கொள்ள காரணம், மகிழினியின் நெற்றியில் இருந்த குங்குமப் பொட்டு என்ற உண்மை கொடிக்கு மட்டுமே தெரிந்து இருந்தது.
"பாட்டி. இவங்க இவரோட அம்மாவும், அக்காவும். ஒரு சின்ன வேலையா நம்ம சென்னைக்கு வந்து இருக்காங்க. அந்த வேலை முடியும் வரை இவங்க நம்ம வீட்டுலயே இருக்கட்டும்னு தான் அழைச்சிட்டு வந்தேன்”
என்று மகிழினி சொன்ன எதுவும் பாட்டியின் காதில் விழவில்லை.
"வணக்கம்ங்க” என்று ஜெயா சொல்ல.
“ஹாய் பாட்டி.” என்று சுட்டிதனமாக கண் அடித்தாள் சசி.
"பாட்டி. நான் பக்கத்து தெருவுல தான் ஒரு வீடு பாத்து இருக்கேன். என் அம்மாவும், அக்காவும் பத்து நாளைக்கு அங்கேயே தங்கி அவங்க பூஜையை முடிச்சிட்டு கிளம்பிடுவாங்க. ஆனா, உங்க பேத்தி தான். பிடிவாதமா இவங்கள உங்க வீட்டுலயே தங்க வைக்கலாம்னு இங்க அழைச்சிட்டு வந்துட்டாங்க” என்று கொடி சங்கோஜாத்துடன் சொன்னான்.
"என்ன தம்பி நீ. என் பேத்தி சொல்ற மாதிரி, உங்க அம்மாவும், அக்காவும். எத்தனை நாள் வேணுனாலும் இங்கேயே இருக்கட்டும். முதல்ல இவங்கள உள்ள அழைச்சிட்டு வாங்க. வாங்க உள்ள வாங்க” என்று பாட்டி அனைவரையும் அன்போடு வீட்டுக்குள் அழைத்தார்.
சசியும், ஜெயாவும் மகிழினியின் வீட்டுக்குள் நுழைந்ததும், மகிழினி இவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, "அம்மா என்ன குடிக்கிறிங்க. காபி டீ. இல்லைனா ஜூஸ் போடவா?” என்று கேட்டாள்.
"யாரு இவங்க எல்லாம். என்ன ஒரே கூட்டம். மறுபடியும் என் அத்தையை பொண்ணு பார்க்க யாராவது வந்து இருக்காங்களா என்ன” என்று குரலை உசத்தி கொண்டே வேணு உள்ளே நுழைய.
"டேய் வாலு. கொஞ்சம் சும்மா இருக்கியா. இவங்க நம்ம கொடி தம்பியோட அம்மாவும் அக்காவும்" என்று பாட்டி சொன்னதும், வேணு வந்தவர்களை மேல் இருந்து கீழ் வரை முறைத்து பார்த்தான்.
"என்ன தம்பி. கண்ணு தெரியலையா என்ன. இந்த லுக்கு விடுற. வேணும்னா சாப்பாட்டுக்கு முருங்க கீரை அதிகமா சேர்த்துக்கோ பா. கண்ணு நல்லா தெரியும்” என்று சசி கிண்டல் பண்ண.
"ஹலோ. என்ன லந்தா. எனக்கு கண்ணு எல்லாம் நல்லா தான் தெரியும்” என்று கோவமாக சொன்ன வேணு, அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
"அவன் இப்படி தான் பேசுவான். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க. சரி நீங்க பாட்டி கிட்ட பேசிகிட்டு இருங்க. நான் உங்களுக்கு குடிக்க டீ எடுத்துட்டு வரேன்” என்று சொன்ன மகிழினி சமையல் அறைக்குள் நுழைய, பாட்டி அவள் பின் வந்தார்.
“அம்மாடி சித்ரா. இவங்களுக்கு எந்த ரூம் தர போற.?”
“உங்க ரூமுக்கு எதிர்ல இருக்குற அறையை தான் தரலாம்னு இருக்கேன் பாட்டி. அதானே கொஞ்சம் பெருசா இருக்கும்.”
“சரி மா. உன் இஷ்டம்.”
“ம்ம்... என்றாள் மகிழினி
“சித்ரா!”
“சொல்லுங்க பாட்டி.”
“நீ இனிமே உன் நெற்றியில பொட்டு வச்சிக்கோடா. இப்போ தான் லட்சணமா இருக்க.” என்று பாட்டி சொன்னதும் தான் மகிழினிக்கு நினைவு வந்தது. ஜெயா தன் நெற்றியில் வைத்த பொட்டு இன்னும் கலையாமல் இருக்கிறது என்று.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் இடத்துக்கு "உள்ளே வரலாமா” என்று கேட்டுக்கொண்டே சசி உள்ளே நுழைந்தாள்.
"வாங்க அக்கா” என்று மகிழினி அழைக்க, பாட்டி அங்கிருந்து சிரித்தபடியே வெளியே செல்ல.
"நாங்க இங்க தங்குறது உங்களுக்கு ஏதும் தொந்தரவு இல்லையே” என்று சசி கேட்டதும்.
"அப்படி எல்லாம் இல்ல அக்கா. நீங்க இங்க நிம்மதியா தங்கி, உங்க பூஜையை சந்தோஷமா முடிச்சிட்டு போங்க” என்று சொன்ன மகிழினி. சசியிடம் டீயை நீட்டினாள்.
“தேங்க்ஸ்மா” என்று சொன்னவள் கையில் ஒரு கப்பை எடுத்து கொள்ள.
மீதம் இருக்கும் தேநீர் நிரம்பிய கோப்பைகளை எடுத்துக்கொண்டு, வரவேற்பறை சென்றவள், அங்கே அமர்ந்து இருக்கும் பாட்டி மற்றும் ஜெயாவுக்கு முதலில் தேநீரை கொடுத்தவள், மீதம் இருக்கும் ஒரு கோப்பையை கொடி முன் நீட்டினாள்.
"ம்., சட்டுப்புட்டுன்னு டீயை குடிச்சிட்டு பொண்ணு பிடிச்சிருக்கான்னு சொல்லுடா" . என்று சசி கிண்டலாக கொடியின் காதில் சொல்ல, தன் கையில் எடுக்கப்போன கோப்பையை எடுக்காமல், கைகள் நடுங்கினான் கொடி.
"என்னாச்சு. டீ வேணாமா?” என்று மகிழினி கேக்க.
"ம்... எடுத்துக்கோடா தம்பி” என்று சசி சொன்னதும், சட்டென்று டீ கோப்பையை கையில் எடுத்தவன்.
"நீ பேசுனது மட்டும் அந்த பொண்ணு காதுல விழுந்து இருந்திச்சு. இந்த டீயை என் மூஞ்சில ஊத்தி இருப்பாங்க” என்று சசியின் காதை கடித்தான் கொடி.
"அம்மா. நீங்க அந்த ரூம்ல தங்கிக்கோங்க. உங்களுக்கு வேற என்ன தேவைன்னாலும் சொல்லுங்க. இது உங்க வீடு மாதிரி. எதுக்கும் சங்கோஜம் படாதீங்க” என்று மகிழினி சொல்ல. ஏனோ ஜெயாவின் கண்கள் மகிழினியை விட்டு விலகாமல் இருந்தது.
"ஏன் தம்பி. இந்த ரூம் நல்லா பெருசா இருக்கும்பா. நீயும் கூட உங்க அம்மா, அக்கா கூடவே தங்கிக்கலாம் இல்ல.” என்று பாட்டி சொன்னதும்.
"இல்ல பாட்டி. நான் மாடிலேயே தங்கிக்கிறேன்” என்று சொன்ன கொடியை மேலும் யாரும் வற்புறுத்தவில்லை.
பிரயாண களைப்பில் கொடியின் அம்மாவும், அக்காவும் தங்குவதற்க்காக. மகிழினி ஏற்பாடு செய்து கொடுத்த அறையில் நிம்மதியாக ஓய்வு எடுத்தார்கள் இருவரும்.
இரவு உணவைத் தயார் செய்த மகிழினி வழக்கம் போல் அதை மேசை மேல் வைத்து விட்டு தன் அறைக்குள் புகுந்து கொள்ளாமல். அவள் கைகளாலேயே கொடியின் அம்மாவுக்கும் அக்காவுக்கும் பரிமாறுவதை பார்த்து மகிழினியின் பாட்டிக்கு ஆச்சிரியம் கலந்த மகிழ்ச்சியாக இருந்தது.
"சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குமா. ரொம்ப அருமையா பண்ணி இருக்க” என்று ஜெயாவின் பாராட்டிற்கு தகுதியான பெண்ணாக இருந்தாள் மகிழினி.
"சாரி சித்ரா. நான் உங்கக்கூட வந்து ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன். பட் ரொம்ப அசதியா இருந்துச்சு. நல்லா தூங்கிட்டேன் போல” என்று சசி வருத்தமாக சொன்னாள்.
"எங்க அத்தைக்கு இதெல்லாம் ஒரு வேலை இல்ல. எங்க அத்த தினமும் 150 பேருக்கு சமைச்சு தராங்க” என்று முருங்கை அடையை முழுங்கி கொண்டே பேசினான் வேணு.
"உங்களுக்கு இன்னொரு இட்லி வைக்கவா” என்று மகிழினி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், சாம்பாரை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்த கொடியை, தன் விரல்களை சுண்டி அழைத்தாள் சசி.
"என்ன அக்கா” என்று தன் புருவத்தை உயர்த்தியவன் அக்காவின் பார்வை மகிழினி பக்கம் இருப்பதை உணர்ந்து, "என்னங்க?” என்று கேட்டான்.
தன் கையில் இருந்த இட்லியை பார்த்து, "இன்னொரு இட்லி வைக்கவா' என்றாள் மகிழினி.
"இல்ல இல்ல போதும்ங்க. நிறைய சாப்பிட்டுட்டேன். நம்மளே எடுத்து வச்சி சாப்பிடும் போது நமக்கு அளவு தெரியும். பட், யாராவது பரிமாறி சாப்பிட்டா, எத்தனை இட்லி உள்ள போகுதுனே தெரியல. நான் அதிகமா சாப்பிட்டது போல இருக்கு” என்று மூச்சை இழுத்துப் பிடித்தான் கொடி.
"நீயும் உக்காந்து சாப்பிடுமா” என்று ஜெயா சொன்னதும்,
"எங்க அத்த இதெல்லாம் சாப்பிட மாட்டாங்க. அவங்க நைட்ல ஒரு கிளாஸ் பால் மட்டும் தான் குடிப்பாங்க” என்றான் வேணு.
"ஐயையோ! நைட் ஒரு வேள சாப்பிடலைனா ஒரு சிட்டுக் குருவி அளவுக்கு நம்ம உடம்புல சதை குறைந்துடும். வா வா. வந்து எங்க கூட உக்காந்து சாப்பிடு வா” என்று உரிமையாக ஜெயா அழைத்து, மகிழினியை தன் அருகில் அமர்த்தி, ஒரு தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்தார்.
மறுப்பு ஏதும் சொல்லாமல், இரவு உணவை பேத்தி சாப்பிடுவதை பார்த்து பாட்டிக்கு ஆச்சிரியம் கூடிப் போனது.