Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 33
- Thread Author
- #1
14
"சார். இப்போ வலி எப்படி இருக்கு?” என்று கொடிவீரனைக் கேட்டதும்.
"ம்... வலி இப்ப கொஞ்சம் தேவலைங்க” என்றான்.
"காயத்துல தண்ணி படக்கூடாது. நான் கேன்டீன்ல இருந்து, பிளாஸ்டிக் சீட் கொண்டு வந்தேன். இத கையில சுத்திகிட்டு குளிங்க” என்று தன் கையில் இருந்த கவரை கொடியிடம் கொடுத்தாள் மகிழினி.
"ஏங்க. சுரேஷ் வண்டி நடுரோட்டில் நிக்குது. நான் குளிச்சிட்டு போய் முதல்ல எடுத்துட்டு வந்துர்றேன்” என்றான் கொடி.
"ஐயோ இல்லிங்க. கேன்டீன்ல நம்ம சாப்பாடெல்லாம் எடுத்துட்டு போறதுக்கு, குட்டி யானை வண்டி வரும். நான் அந்த வண்டியில அண்ணனுடைய பைக்கை ஏத்திட்டு வந்து, வீட்ல இறக்க சொல்லிட்டேன். வண்டி எப்பவோ வீட்டுக்கு வந்துருச்சி” என்றாள் மகிழினி.
"அத்த. இவருக்கு கையில அடி தானே பட்டுருக்கு. ஆனா, இவரு வேலைக்கு போக போறாறாம்” என்று வேணு சொல்ல,
"ஐயோ. இந்த கையை வச்சிக்கிட்டு நீங்க எப்படி வேலைக்கு போவீங்க. அடலீஸ்ட் ஒரு வாரமாவது நீங்க ரெஸ்ட்ல இருக்கனும்” என்று அக்கறையாக சொன்னாள் மகிழினி.
"இல்லிங்க. வேலைக்கு போகாம வீட்டுல இருந்து, நான் என்ன பண்ண போறேன்” என்று சொன்னான்.
"நம்ம ஜாலியா விளையாடலாம். நீங்க வேலைக்கு போக வேணா” என்று வேணு சொல்ல.
"ம்... சரி நான் மூணு நாள் கடந்து வேலைக்கு போறேன்” என்றான் கொடி சிரித்து கொண்டே.
"சரி சரி. சார் நீங்க குளிச்சிட்டு சாப்பிடுங்க. அத்த நீங்க வாங்க. நம்ம கீழே போகலாம்” என்று தன் கையோடு மகிழினியை கீழே அழைத்து சென்றான் வேணு.
நேரம் 11.30 மணி அளவில், மகிழினி மீண்டும் மாடிக்கு மதிய உணவுடன் வேணுவை அழைத்து கொண்டு வந்தவள், கதவைத் தட்டியபடி அறைக்கு செல்ல, அங்கே உறங்கி கொண்டு இருந்தவனைப் பார்த்து, சத்தம் இல்லாமல் சாப்பாட்டை மேசை மேல் வைத்த நேரம், கொடியின் கைபேசி சிணுங்கியது.
அந்தச் சத்தத்தில் உறக்கத்தில் இருந்து கண் விழித்தவன் எதிரில் மகிழினியும் வேணுவும் நின்று இருப்பதைப் பார்த்து புன்முறுவலுடன் தன் கைபேசி அழைப்புக்கு பதில் தந்தான் கொடி.
"சொல்லு அக்கா?” மறுமுனையில் சசி என்ன சொன்னாளோ, "எப்போ” என்று கேட்க, பின், "ம்... சரி அக்கா. நான் பாத்து சொல்லுறேன். ம்... அம்மாகிட்ட நான் நைட்டு பேசுறேன்” என்று சொன்னான்.
அவன் கைபேசி இணைப்பை துண்டிக்கும் வரை காத்து இருந்த மகிழினி. "சார். மதியம் சாப்பாடு எடுத்துட்டு வந்து வச்சிருக்கேன். நீங்க சாப்பிடுங்க. அப்புறம் வாஷ் பண்ண துணி இருந்தா தாங்க. நான் துவைத்து தரேன்” என்று கேட்டாள்.
"ஐயோ. அதெல்லாம் வேணாங்க. நீங்க இப்படி எனக்காக சாப்பாட்டை மாடிக்கு எடுத்துட்டு வரதே எனக்கு கஷ்ட்டமா இருக்கு“ என்றான் கொடி.
"இருக்கட்டும் சார். துவைக்க துணி இருந்தா தாங்க” என்று மீண்டும் மகிழினி கேக்க.
"இல்லிங்க. அழுக்கு துணி எல்லாம் இல்ல” என்று பொய் சொன்னான் கொடி.
"சரிங்க சார் . நீங்க சாப்பிடுங்க. வேணு வா நம்ம கீழே போகலாம்” என்று மகிழினி வேணுவை அழைத்தாள்.
அதே சமயம் பாட்டி மாடிக்கு ஏறி வந்தவர், "என்ன தம்பி இப்போ எப்படி இருக்கீங்க” என்று அக்கறையுடன் நலம் விசாரித்தார்.
"வாங்க பாட்டி.இப்போ ok தான்” என்றான் கொடி.
"அடிக்கடி உன்னை இங்க வந்து பாக்க முடியல தம்பி. கோச்சிக்காத” என்று பாட்டி தன் உடல் நிலை சோர்வால் சொன்னதும்.
"இருக்கட்டும் பாட்டி. நீங்க எல்லாம் என்னை இந்த அளவுக்கு கவனிச்சிக்குறதே பெருசு” என்று நன்றி சொன்னான் கொடி.
"சரிப்பா நீ சாப்புடு. இங்க இருக்க போர் அடிச்சா கீழே இறங்கி வந்து டிவி கூட பாரு” என்று சொன்னார்.
"இல்ல பாட்டி. எனக்கு டிவி பாக்குற பழக்கம் எல்லாம் இல்ல. நான் பாட்டு தான் கேப்பேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க அடிக்கடி மேலே ஏறி வராதீங்க” என்று சொன்னான் கொடிவீரன்.
"சரிப்பா. நாங்க வரோம். நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு” என்ற பாட்டி கீழே இறங்கி செல்ல, அவரை தொடர்ந்து மகிழினியும், வேணுவும் செல்ல, அதன்பின். மதிய உணவை முடித்த கொடி மீண்டும் ஓய்வு எடுத்தான்.
இப்படியாக. கொடியின் இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் என்ற குற்ற உணர்வில், அவனுக்கு தேவையான எல்லா விஷயங்களையும், மகிழினி பார்த்து பார்த்து செய்து கொடுத்தாள்.
5 நாட்கள் கடந்த நிலையில், கொடியின் கையில் ஏற்பட்ட காயங்கள் சற்று குணமடைய, கொடி வேகமாக குளித்து முடித்த மாப்பிள்ளை கணக்கில் வெளியே கிளம்பி கொண்டு இருந்தான்.
"என்ன சாரே. ஹீரோ போல ரெடி ஆகுறீங்க. எங்க சினிமாக்கு போறீங்களா?” என்று வேணு ஆவலாக கேக்க.
"இல்ல இல்லடா. நான்...” என்று கொடி வேணுவின் கேள்விக்கு உண்டான பதிலை சொல்லி முடிக்கும் முன் மகிழினியின் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டு கொடி கீழே இறங்கி ஓடினான்.
ஆட்டோவில் இருந்து இறங்கியது கொடிவீரனின் சகோதரி சசிகலா. தன் அக்காவை பார்த்ததும், அன்பாக தோளணைத்து, "என்ன அக்கா நீ. நான் வண்டி எடுத்துட்டு பஸ் ஸ்டாண்ட் வந்து இருப்பேன் இல்ல. நீ ஏன் தனியா ஆட்டோ எல்லாம் புடிச்சுகிட்டு கஷ்டப்படுற. ஆமா அம்மா எங்கே?” என்று கொடி கேட்ட கேள்விக்கு பதில் தராத சசியின் கண்கள் தேடியது என்னவோ மகிழினியை தான்.
"என்ன அக்கா நீ. அம்மா எங்கன்னு கேட்டா. நீ யாரை தேடுற?” என்று அதட்டினான் கொடி.
"டேய்! ஆட்டோல வரும்போது பக்கத்து தெருவுல ஒரு கோவிலை பார்த்துட்டு, அம்மா அங்க விளக்கு போட இறங்கிட்டாங்க. நம்ம அப்புறம் போய் அவங்கள அழைச்சிட்டு வரலாம்” என்று மீண்டும் தன் பார்வையால் சசி மகிழினியை தேட.
"யாருங்க இந்த லேடி?” என்று வேணு இடுப்பில் கையை வைத்துக்கொண்டு திமிராக கேட்டான்.
"ஓ... நீ தான் அந்த வேணு கேடியா?” என்று சசி பதிலுக்கு வேணுவை கலாய்த்தாள்.
"அக்கா. நீ ஏன் இப்போ வந்ததும் வராததுமா சின்ன பையன் கட்ட வம்பு பண்ணுற? சரி நீ மாடிக்கு போய் பையை வச்சிட்டு வா. நான் ஆட்டோக்கு பணம் கொடுக்குறேன். நம்ம சீக்கிரம் போய் அம்மாவை அழைச்சிட்டு வரலாம்" என்று சொல்லவும் அப்படியே செய்தால்.
தன் அக்காவை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, பக்கத்து தெருவில் இருக்கும் கோவில் வாசலில் வண்டியை நிறுத்திய பின், கோவிலுக்குள் சென்றவர்கள், தன் தாயைத் தேடிக்கொண்டு சாமி சன்னிதியை சுற்றி வர, அம்மன் சன்னதி முன் நின்றிருந்த தாயைப் பார்த்ததும், அவர் அருகில் சென்றான் கொடி.
"அம்மா” என்று அழைத்ததும், மகனைப் பார்த்து அன்போடு கட்டி அணைத்து கொண்டவர், தன் மகனின் நெற்றியில் முத்தமிட்டு, "எப்படிடா இருக்க?” என்று அன்போடு விசாரித்தார் கொடியின் தாய் ஜெயா.
"நல்லா இருக்கேன் அம்மா. என்ன வந்ததும் கோவிலுக்கு வந்துட்டீங்களா? எங்க போனாலும் சாமியை தொல்லை பண்ணுறதை விடமாட்டீங்களா?” என்று தன் தாய் ஜெயாவை கேலி செய்தான் கொடிவீரன்.
"வேற வேலை” என்று ஒத்து ஊதினாள் சசி.
"உனக்கும், உன் அக்காவுக்கும் என்னை வம்பு பண்ணலைனா தூக்கம் வராதே” என்று கொடியின் காதை திருகினார் ஜெயா.
தனக்கு பின் நின்று பேசும் நபர்களின் பேச்சைக் காதில் வாங்காத ஒரு பெண், கண்கள் மூடி அம்மனை வணங்கிக்கொண்டு இருந்தவள், சில நிமிடத்தில் கண் திறந்து, "விபூதி தரீங்களா?” என்று ஐயரிடம் கேட்க,
ஐயர் இவள் அழைப்பதைக் காதில் வாங்கமால் சன்னதிக்குள் செல்ல,
"பாப்பா. நீ கூப்பிடுறது ஐயர் காதுல விழல போல. இந்தாம்மா குங்குமம்”
என்ற கொடியின் தாய், அந்த பெண்ணின் முன் சென்று, அவள் நெற்றியில் தன் கரங்களால் குங்குமத்தை வைக்க, அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தாள்.
கண்முன் நின்று இருந்த ஜெயாவின் அருகில், கொடி பதற்றதுடன் நின்று இருந்தவன் கண் முன் ஜெயா இட்ட குங்குமத்தை ஏற்று நின்று இருந்தாள் சித்ரமகிழினி.