New member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 25
- Thread Author
- #1
விவாதக் காதல்
Part 12
“என் வீராவோட புகைப்படம் எனக்கு என் உயிருக்கு சமம் என்று தெரிந்தும், நீங்க எப்போ இப்படி பண்ணீங்களோ, அதோட உங்களுக்கும் எனக்கும் இருக்குற சொந்தம் முடிஞ்சு போச்சு. நான் போறேன். நான் என் வீரா கூடவே போறேன்." என்று வேகமாக கீழே இறங்கி ஓடிய மகிழினியை வேணு பின் தொடர்ந்தான்.
சில நொடிகளில், "அத்த அத்த. கீழே இறங்கு அத்த. ஐயோ பாட்டி. அத்தையை வந்து பாருங்க" என்று வேணு கத்தும் சத்தம் கேட்டு, பாட்டி கீழே ஓடி வர, பாட்டியை பின் தொடர்ந்து ஓடி வந்தான் கொடிவீரன்.
"என்னடா? என்னாச்சு?" என்று பாட்டி பதற, மகிழினி இருக்கும் அறையின் ஜன்னல் பக்கம் நின்று அழுது கொண்டு இருந்தான் வேணு.
"ஐயோ சித்ரா. கீழ இறங்குமா. இனிமே நான் உன்னை ஒண்ணுமே சொல்லமாட்டேன். என் அம்மா இல்ல. தயவு செய்து கீழே இறங்குமா" என்று பாட்டி அலறினார்.
பாட்டியை பின் தொடர்ந்து வந்த கொடி, மகிழினியின் அறை கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றவன், நாற்காலியின் மேல் ஏறி நின்று இருந்த, மகிழினியின் கையில் வைத்திருந்த புடவையை பிடுங்கி தூரம் வீசியவன், மகிழினியின் கன்னத்தில் ஒரு அரை விட்ட சமயம். கண்கள் கிறங்கி மகிழினி கொடி வீரனின் இதயத்தில் சரிந்தாள்.
அதைக் கண்டு பாட்டி பதறி போன சமயம், "ஐயோ அத்த. என் அத்தைக்கு என்னாச்சு?" என்று வேணு ஒரு பக்கம் கதறினான்.
"தம்பி. என் பேத்திக்கு என்னாச்சுபா?" என்று பாட்டியும் கத்த.
அருகில் இருக்கும் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொண்டு, மகிழினியின் முகத்தில் தண்ணீரை தெளித்து தெளிய வைக்க முயற்சித்தான்.
“ஐயோ என்ன இது? ஏன் என் பேத்தி கண் விழிக்க மாட்டேன்றா. தம்பி எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா. எதாவது செய்” என்றார் பாட்டி.
“பாட்டி. பக்கத்துல எங்காவது கிளினிக் இருக்கா?”
“ஹாங் பக்கத்து தெருவுல இருக்கு தம்பி. இருப்பா நான் போய் ஆட்டோ அழைச்சிட்டு வரேன்.”
“இல்ல பாட்டி. இன்னைக்கும், நாளைக்கும் ஆட்டோ எல்லாம் ஸ்டிரைக். சரி நான் இவங்கள கட்டில்ல படுக்க வச்சிட்டு, அந்த கிளினிக்ல இருந்து டாக்டரை அழைச்சிட்டு வரேன். பார்த்துக்கோங்க.” என்று கொடிவீரன் சொல்லவும், பாட்டி சம்மதமாய் தலையசைக்க, அவன் மருத்துவரை அழைக்கச் சென்றுவிட்டான். “சித்ரா. என்னை பாருமா. பாட்டியை மன்னிச்சுடு தாயி.” என்று பாட்டி தன் அவசர புத்தியை நினைத்து கவலை பட்டவர், மகிழினியின் காலடியில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தார்.
வேணுவுக்கோ இங்கே என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியாமல், தன் அத்தையின் நிலையை கண்டு கலங்கி நின்றான்..
சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்த கொடிவீரன், "பாட்டி. கிளினிக்ல இருக்குற டாக்டர்ஸ் எல்லாம் வீட்டுக்கு வர மாட்டாங்களாம். நம்ம தான் இவங்கள அங்க அழைச்சிட்டு போகணும். நான் கேப் வர சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்" என்று கொடி சொல்லி முடிப்பதற்குள், வாசலில் வண்டி வந்து நின்ற சத்தத்தை கேட்ட உடனே தன் கரங்களால் மகிழினியை தூக்கிக் கொண்டான் கொடிவீரன்.
பாட்டியும் வேணுவும் அவனை பின் தொடர்ந்து செல்ல, சில நிமிடங்களில் அருகில் இருந்த கிளினிக்கில் மகிழினிக்கு முதல் உதவி நடந்து கொண்டிருந்தது.
பாட்டி கண்களில் கண்ணீர் மட்டும் வற்றாமல் பெருக, "பாட்டி. அழாதீங்க பாட்டி. அவங்களுக்கு ஏதும் ஆகாது. அவங்க நல்லா ஆகிடுவாங்க" என்று பாட்டிக்கு ஆறுதல் சொன்னான்.
"ஏன் பாட்டி நீங்க மாமாவோட போட்டோவை கிழிச்சி போட்டிங்க. நீங்க அந்த போட்டோவை கிழிச்சதால தானே அத்த இப்படி எல்லாம் பண்ணாங்க. போங்க பாட்டி நான் இனிமே உங்க கூட பேச மாட்டேன். என் அத்தைக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா, நான் உங்க கூட இருக்கவே மாட்டேன்" என்று சிறுவன் வேணுவும் அழுது கொண்டு இருந்தான்.
"டேய். உன் அத்தைக்கு ஒன்னும் ஆகாதுடா. நீ அழாத" என்று கொடி சிறுவனுக்கு ஆறுதல் சொன்ன தருணம்,
"டாக்டர் உங்கள வர சொல்லுறாரு" என்று செவிலி வந்து சொல்ல, கொடி வீரன் பாட்டி, வேணுவுடன் உள்ளே சென்றான்.
கைகளில் ட்ரிப்ஸ் ஏறிய நிலையில் மகிழினிக்கு சிகிச்சை நடந்து கொண்டு இருக்கும் காட்சியை பார்த்து பாட்டி கதறி அழ, கொடி சமாதானம் செய்தான்.
"இவங்களுக்கு பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. பட் ரொம்ப வீக்கா இருக்காங்க. பிபி ரைஸ் ஆகியிருக்கு. அதோட சாப்பிடாம வேற இருந்து இருக்காங்க போல. நாங்க ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம். இன்னைக்கு நைட் இவங்க இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு காலையில செக் பண்ணிட்டு மேற்கொண்டு என்ன ஏதுன்னு பாக்கலாம்" என்று டாக்டர் சொன்னதும், பாட்டி மருத்துவரை கையெடுத்து கும்பிட்டு தன் நன்றியை தெரிவித்தார்.
“பாட்டி பயப்படாதீங்க. அவங்க நல்லா தான் இருக்காங்க. நீங்க இப்போ அழுது மேற்கொண்டு உங்க உடம்ப கெடுத்துக்காதீங்க. ஏற்கனவே உங்களுக்கு நெஞ்சு வலி வேற இருக்கு. அதனால நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க.
“என்னால எப்படி தம்பி அமைதியா இருக்க முடியும்? அவ நல்லா இருக்கணும்னு தானே நான் இப்பவரை அவளுக்காக வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனா, அவளுக்கு என் அன்பு புரியல. செத்தவனுக்காக என்னை விட்டு போக முடிவு பண்ணிட்டாளேப்பா. என்னால தாங்கிக்கவே முடியலை” என்று வாயை மூடி சத்தம் வராமல் அழுதார்.
“பாட்டி சொல்லுறேன்னு கோச்சிக்காதீங்க. நம்மள பொறுத்த வரை அவங்க கணவர் இறந்துட்டாரு. ஆனா அவங்கள பொறுத்தவரை அவர் இன்னும் அவங்க மனசுல வாழ்ந்துக்கிட்டு தான் இருக்காரு. நீங்க அவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தான் ஆகணும். காலம் எல்லாத்தையும் மாத்தும். முதல்ல நீங்க அவங்கள கல்யாணம் பண்ணச் சொல்லி கம்பல் பண்ணாதீங்க. அவங்கள அவங்க போக்குல விட்டுடுங்க.” என்று மகிழினியின் மன நிலையில் இருந்து கொடிவீரன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும். பாட்டியின் மனதில் நல்லதோர் மாற்றத்தை உண்டாக்கியது.
“பாட்டி. நீங்க உங்க பேத்தி கூட இருங்க. நானும் வேணுவும் போய் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரோம்.”
“இல்ல தம்பி. நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் பாத்துக்குறேன்.”
“என்ன பாட்டி நீங்க. உங்கள இந்த நிலைமையில விட்டுட்டு நான் மட்டும் எப்படி போய் ரெஸ்ட் எடுக்க இயலும்?” என்று சொன்னான்.
“உனக்கு ஏன்பா எங்களால தொல்லை. நாங்க பார்த்துக்கறோம்” என்று கொஞ்சம் தவிப்புடன் சொன்னார் பாட்டி.
“தொல்லை எல்லாம் இல்ல பாட்டி. நீங்க அமைதியா இருங்க. வேணு நீ என்கூட வரியா?” எனக் கேட்டான்.
“ம்... வரேன்.”
“பாட்டி. உங்க மாத்திரை எல்லாம் எங்க இருக்குன்னு வேணுவுக்கு தெரியும்ல? என்று கேட்க,
“எனக்குத் தெரியும்.” என்றான் வேணு.
“சரி. சாவியை வாங்கிகிட்டு என்கூட நீ வா. நம்ம நடந்தே போயிட்டு. வரும் போது வண்டியில வந்துடலாம்.” என்று கொடி சொன்னதும். வேணு அவனுடன் மகிழினியின் வீட்டுக்குச் சென்றான்.
அங்கே இவர்களுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு மீண்டும் கிளினிக்கிற்கு வர, கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவ மகிழிநியைப் பார்த்து கொடிவீரன் பெருமூச்சு விட்டான்.
“பாட்டி. இதுல இட்லி இருக்கு. நீங்க சாப்பிட்டு மாத்திரை போடுங்க.”
“வேணாம் தம்பி. எனக்கு எதுவும் வேண்டாம். இவ இப்படி இருக்கிறப்ப என்னால எப்படி சாப்பிட முடியும்?”
“ஏன் இப்படி பண்ணுறீங்க. நீங்க சாப்பிடாம இருக்குறதால இங்கே எதுவும் மாறாது. பிளீஸ் சாப்பிடுங்க பாட்டி.”
“நீ சாப்பிட்டியாப்பா?”
“நானும் வேணுவும் சாப்பிட்டு தான் உங்களுக்கு இட்லி வாங்கிட்டு வந்தோம். நீங்க சாப்பிடுங்க” என்றான்.
“பாட்டி. அத்தைக்கு பசிக்காதா? அவங்களுக்கு கொடுக்கலை?” என்று அக்கறையாகக் கேட்டான்.
“அவங்களுக்கு ட்ரிப்ஸ் ஏறுது இல்ல. இப்போதைக்கு பசி இருக்காதுடா.” என்று பாட்டிக்குப் பதிலாக கொடிவீரன் பதில் சொன்னான்.
“ஓ... அத்த எப்போ கண் திறப்பாங்க?”
“அவள் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கட்டும். நான் தான் அவ மனசை புரிஞ்சிக்காம அவள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். தப்பு எல்லாம் என்னிடம் தான்” என்று வருந்தினார் பாட்டி.
Part 12
“என் வீராவோட புகைப்படம் எனக்கு என் உயிருக்கு சமம் என்று தெரிந்தும், நீங்க எப்போ இப்படி பண்ணீங்களோ, அதோட உங்களுக்கும் எனக்கும் இருக்குற சொந்தம் முடிஞ்சு போச்சு. நான் போறேன். நான் என் வீரா கூடவே போறேன்." என்று வேகமாக கீழே இறங்கி ஓடிய மகிழினியை வேணு பின் தொடர்ந்தான்.
சில நொடிகளில், "அத்த அத்த. கீழே இறங்கு அத்த. ஐயோ பாட்டி. அத்தையை வந்து பாருங்க" என்று வேணு கத்தும் சத்தம் கேட்டு, பாட்டி கீழே ஓடி வர, பாட்டியை பின் தொடர்ந்து ஓடி வந்தான் கொடிவீரன்.
"என்னடா? என்னாச்சு?" என்று பாட்டி பதற, மகிழினி இருக்கும் அறையின் ஜன்னல் பக்கம் நின்று அழுது கொண்டு இருந்தான் வேணு.
"ஐயோ சித்ரா. கீழ இறங்குமா. இனிமே நான் உன்னை ஒண்ணுமே சொல்லமாட்டேன். என் அம்மா இல்ல. தயவு செய்து கீழே இறங்குமா" என்று பாட்டி அலறினார்.
பாட்டியை பின் தொடர்ந்து வந்த கொடி, மகிழினியின் அறை கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றவன், நாற்காலியின் மேல் ஏறி நின்று இருந்த, மகிழினியின் கையில் வைத்திருந்த புடவையை பிடுங்கி தூரம் வீசியவன், மகிழினியின் கன்னத்தில் ஒரு அரை விட்ட சமயம். கண்கள் கிறங்கி மகிழினி கொடி வீரனின் இதயத்தில் சரிந்தாள்.
அதைக் கண்டு பாட்டி பதறி போன சமயம், "ஐயோ அத்த. என் அத்தைக்கு என்னாச்சு?" என்று வேணு ஒரு பக்கம் கதறினான்.
"தம்பி. என் பேத்திக்கு என்னாச்சுபா?" என்று பாட்டியும் கத்த.
அருகில் இருக்கும் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொண்டு, மகிழினியின் முகத்தில் தண்ணீரை தெளித்து தெளிய வைக்க முயற்சித்தான்.
“ஐயோ என்ன இது? ஏன் என் பேத்தி கண் விழிக்க மாட்டேன்றா. தம்பி எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா. எதாவது செய்” என்றார் பாட்டி.
“பாட்டி. பக்கத்துல எங்காவது கிளினிக் இருக்கா?”
“ஹாங் பக்கத்து தெருவுல இருக்கு தம்பி. இருப்பா நான் போய் ஆட்டோ அழைச்சிட்டு வரேன்.”
“இல்ல பாட்டி. இன்னைக்கும், நாளைக்கும் ஆட்டோ எல்லாம் ஸ்டிரைக். சரி நான் இவங்கள கட்டில்ல படுக்க வச்சிட்டு, அந்த கிளினிக்ல இருந்து டாக்டரை அழைச்சிட்டு வரேன். பார்த்துக்கோங்க.” என்று கொடிவீரன் சொல்லவும், பாட்டி சம்மதமாய் தலையசைக்க, அவன் மருத்துவரை அழைக்கச் சென்றுவிட்டான். “சித்ரா. என்னை பாருமா. பாட்டியை மன்னிச்சுடு தாயி.” என்று பாட்டி தன் அவசர புத்தியை நினைத்து கவலை பட்டவர், மகிழினியின் காலடியில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தார்.
வேணுவுக்கோ இங்கே என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியாமல், தன் அத்தையின் நிலையை கண்டு கலங்கி நின்றான்..
சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்த கொடிவீரன், "பாட்டி. கிளினிக்ல இருக்குற டாக்டர்ஸ் எல்லாம் வீட்டுக்கு வர மாட்டாங்களாம். நம்ம தான் இவங்கள அங்க அழைச்சிட்டு போகணும். நான் கேப் வர சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்" என்று கொடி சொல்லி முடிப்பதற்குள், வாசலில் வண்டி வந்து நின்ற சத்தத்தை கேட்ட உடனே தன் கரங்களால் மகிழினியை தூக்கிக் கொண்டான் கொடிவீரன்.
பாட்டியும் வேணுவும் அவனை பின் தொடர்ந்து செல்ல, சில நிமிடங்களில் அருகில் இருந்த கிளினிக்கில் மகிழினிக்கு முதல் உதவி நடந்து கொண்டிருந்தது.
பாட்டி கண்களில் கண்ணீர் மட்டும் வற்றாமல் பெருக, "பாட்டி. அழாதீங்க பாட்டி. அவங்களுக்கு ஏதும் ஆகாது. அவங்க நல்லா ஆகிடுவாங்க" என்று பாட்டிக்கு ஆறுதல் சொன்னான்.
"ஏன் பாட்டி நீங்க மாமாவோட போட்டோவை கிழிச்சி போட்டிங்க. நீங்க அந்த போட்டோவை கிழிச்சதால தானே அத்த இப்படி எல்லாம் பண்ணாங்க. போங்க பாட்டி நான் இனிமே உங்க கூட பேச மாட்டேன். என் அத்தைக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா, நான் உங்க கூட இருக்கவே மாட்டேன்" என்று சிறுவன் வேணுவும் அழுது கொண்டு இருந்தான்.
"டேய். உன் அத்தைக்கு ஒன்னும் ஆகாதுடா. நீ அழாத" என்று கொடி சிறுவனுக்கு ஆறுதல் சொன்ன தருணம்,
"டாக்டர் உங்கள வர சொல்லுறாரு" என்று செவிலி வந்து சொல்ல, கொடி வீரன் பாட்டி, வேணுவுடன் உள்ளே சென்றான்.
கைகளில் ட்ரிப்ஸ் ஏறிய நிலையில் மகிழினிக்கு சிகிச்சை நடந்து கொண்டு இருக்கும் காட்சியை பார்த்து பாட்டி கதறி அழ, கொடி சமாதானம் செய்தான்.
"இவங்களுக்கு பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. பட் ரொம்ப வீக்கா இருக்காங்க. பிபி ரைஸ் ஆகியிருக்கு. அதோட சாப்பிடாம வேற இருந்து இருக்காங்க போல. நாங்க ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம். இன்னைக்கு நைட் இவங்க இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு காலையில செக் பண்ணிட்டு மேற்கொண்டு என்ன ஏதுன்னு பாக்கலாம்" என்று டாக்டர் சொன்னதும், பாட்டி மருத்துவரை கையெடுத்து கும்பிட்டு தன் நன்றியை தெரிவித்தார்.
“பாட்டி பயப்படாதீங்க. அவங்க நல்லா தான் இருக்காங்க. நீங்க இப்போ அழுது மேற்கொண்டு உங்க உடம்ப கெடுத்துக்காதீங்க. ஏற்கனவே உங்களுக்கு நெஞ்சு வலி வேற இருக்கு. அதனால நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க.
“என்னால எப்படி தம்பி அமைதியா இருக்க முடியும்? அவ நல்லா இருக்கணும்னு தானே நான் இப்பவரை அவளுக்காக வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனா, அவளுக்கு என் அன்பு புரியல. செத்தவனுக்காக என்னை விட்டு போக முடிவு பண்ணிட்டாளேப்பா. என்னால தாங்கிக்கவே முடியலை” என்று வாயை மூடி சத்தம் வராமல் அழுதார்.
“பாட்டி சொல்லுறேன்னு கோச்சிக்காதீங்க. நம்மள பொறுத்த வரை அவங்க கணவர் இறந்துட்டாரு. ஆனா அவங்கள பொறுத்தவரை அவர் இன்னும் அவங்க மனசுல வாழ்ந்துக்கிட்டு தான் இருக்காரு. நீங்க அவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தான் ஆகணும். காலம் எல்லாத்தையும் மாத்தும். முதல்ல நீங்க அவங்கள கல்யாணம் பண்ணச் சொல்லி கம்பல் பண்ணாதீங்க. அவங்கள அவங்க போக்குல விட்டுடுங்க.” என்று மகிழினியின் மன நிலையில் இருந்து கொடிவீரன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும். பாட்டியின் மனதில் நல்லதோர் மாற்றத்தை உண்டாக்கியது.
“பாட்டி. நீங்க உங்க பேத்தி கூட இருங்க. நானும் வேணுவும் போய் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரோம்.”
“இல்ல தம்பி. நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் பாத்துக்குறேன்.”
“என்ன பாட்டி நீங்க. உங்கள இந்த நிலைமையில விட்டுட்டு நான் மட்டும் எப்படி போய் ரெஸ்ட் எடுக்க இயலும்?” என்று சொன்னான்.
“உனக்கு ஏன்பா எங்களால தொல்லை. நாங்க பார்த்துக்கறோம்” என்று கொஞ்சம் தவிப்புடன் சொன்னார் பாட்டி.
“தொல்லை எல்லாம் இல்ல பாட்டி. நீங்க அமைதியா இருங்க. வேணு நீ என்கூட வரியா?” எனக் கேட்டான்.
“ம்... வரேன்.”
“பாட்டி. உங்க மாத்திரை எல்லாம் எங்க இருக்குன்னு வேணுவுக்கு தெரியும்ல? என்று கேட்க,
“எனக்குத் தெரியும்.” என்றான் வேணு.
“சரி. சாவியை வாங்கிகிட்டு என்கூட நீ வா. நம்ம நடந்தே போயிட்டு. வரும் போது வண்டியில வந்துடலாம்.” என்று கொடி சொன்னதும். வேணு அவனுடன் மகிழினியின் வீட்டுக்குச் சென்றான்.
அங்கே இவர்களுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு மீண்டும் கிளினிக்கிற்கு வர, கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவ மகிழிநியைப் பார்த்து கொடிவீரன் பெருமூச்சு விட்டான்.
“பாட்டி. இதுல இட்லி இருக்கு. நீங்க சாப்பிட்டு மாத்திரை போடுங்க.”
“வேணாம் தம்பி. எனக்கு எதுவும் வேண்டாம். இவ இப்படி இருக்கிறப்ப என்னால எப்படி சாப்பிட முடியும்?”
“ஏன் இப்படி பண்ணுறீங்க. நீங்க சாப்பிடாம இருக்குறதால இங்கே எதுவும் மாறாது. பிளீஸ் சாப்பிடுங்க பாட்டி.”
“நீ சாப்பிட்டியாப்பா?”
“நானும் வேணுவும் சாப்பிட்டு தான் உங்களுக்கு இட்லி வாங்கிட்டு வந்தோம். நீங்க சாப்பிடுங்க” என்றான்.
“பாட்டி. அத்தைக்கு பசிக்காதா? அவங்களுக்கு கொடுக்கலை?” என்று அக்கறையாகக் கேட்டான்.
“அவங்களுக்கு ட்ரிப்ஸ் ஏறுது இல்ல. இப்போதைக்கு பசி இருக்காதுடா.” என்று பாட்டிக்குப் பதிலாக கொடிவீரன் பதில் சொன்னான்.
“ஓ... அத்த எப்போ கண் திறப்பாங்க?”
“அவள் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கட்டும். நான் தான் அவ மனசை புரிஞ்சிக்காம அவள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். தப்பு எல்லாம் என்னிடம் தான்” என்று வருந்தினார் பாட்டி.