• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jan 15, 2026
Messages
23
11

"ஹலோ யாருங்க பேசுறது" என்று அந்த நபர் கேட்டதும்.

"நான் மகிழினி பேசுறேன். பழனி அப்பா இருக்காரா?" என்று கேட்டாள்.

"அவருக்கு காலையில திடீர்னு நெஞ்சுவலி வந்துருச்சி. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்மா" என்று அந்த நபர் சொன்னதும்

"என்ன நெஞ்சு வலியா? என்ன சொல்றீங்க? எந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கீங்க?" என்று மகிழினி பதட்டத்துடன் கேட்டாள்.

"ஜிஎச்-ல தான்மா அட்மிட் பண்ணி இருக்கோம். இப்ப நான் கூட அவரை பார்க்க அங்க தான் போக போறேன்" என்று ஆசிரமத்தில் இருக்கும் ஒரு நபர் சொல்ல

"ஐயோ! பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லையே" என்று மகிழினி பதற,

"இல்லமா. டாக்டர் பாத்துட்டு மருந்து எழுதிக் கொடுத்து இருக்காங்க. ஆனா, இன்னைக்கு ஒரு நாள் ஹாஸ்பிடல்லயே தங்க சொல்லி இருக்காங்க. அதான் நான் அவரை அங்க அட்மிட் பண்ணிட்டு, அவருக்கு சாப்பாடு கொண்டு போக வந்தேன்" என்று சொன்னார் அவர்.

"சரி. நீங்க அவரை பார்த்துக்கோங்க. நான் அவரை ஹாஸ்பிடல்ல வந்து பார்க்கிறேன்" என்று சொன்ன மகிழினி கொடியின் கைபேசியுடன் கண்களில் கண்ணீரோடு நின்று இருந்தாள்.

அதே சமயம் கொடி தன் ஆடைகளை மாற்றிக்கொண்டு மகிழினியின் அருகில் வந்து, "என்னங்க பேசிட்டீங்களா?" என்று கேட்டான்.

கொடியின் கைபேசியை அவன் கையில் கொடுத்தவள், "உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் கிளம்புறேன்" என்று கண்களைத் துடைத்துக் கொண்டு வாசலை நோக்கி மகிழினி ஓட,

"இவங்க ஏன் அழுதுகிட்டே போறாங்க. ஐயோ! இப்ப நம்ம ஏதாவது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாங்க. சரி நமக்கு என்ன வந்தது. நம்ம அம்மா சொன்ன மாதிரி, அப்பாவுக்கு நல்லபடியா திதி கொடுத்தாச்சு. அந்த மட்டுக்கு சந்தோஷம்" என்று மீண்டும் கடவுளை சேவித்தபடி கோவிலில் இருந்து வெளியே செல்ல, அங்கே மகிழினி வாசலில் கண்கள் கலங்கி நின்றிருந்தாள்.

அவள் அருகில் சென்றவன், "என்னங்க ஏதாவது பிரச்சனையா? ஏன் அழுதுட்டு இருக்கீங்க?" என்று மனம் தாங்காமல் கேட்டு விட்டான்.

தன் கண்களில் வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட மகிழினி, "ஆமாங்க. கோவிலுக்கு வரதா சொன்னாரு இல்ல பழனி அப்பா, அவருக்கு நெஞ்சு வலி வந்து ஹாஸ்பிடல் சேர்த்து இருக்கிறாங்களாம். அவரைப்போய் பாக்குறதுக்காக தான் ஆட்டோவுக்கு வெயிட் பண்றேன். ஆனா இந்த நேரம் பார்த்து ஒரு ஆட்டோ கூட வரல" என்றாள் மகிழினி.

தன் பைக்கில் ஏறி அமர்ந்த கொடி, அவன் கைபேசி மூலம் வாடகைக் கார் பதிவு பண்ண, சில நொடிகளில் கோவில் வாசலில் கார் வந்து நின்றது.

"ஏங்க நீங்க அழாதீங்க இன்னைக்கு இந்த ஏரியால ஆட்டோ ஓடாது அவங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்ணுறாங்க. சோ நீங்க கேப்ல போயிட்டு வாங்க" என்றான் கொடி.

"ம்... உங்களுக்கு ரொம்ப நன்றி" என்றவள், வாடகை வண்டியில் ஏறி அமர்ந்ததும் டிரைவர் காரை மருத்துவமனை நோக்கி விரட்டினார். மகிழினி மருத்துவமனைக்கு சென்றதும், அங்கே தன் கணவனின் மரியாதைக்குரிய பழனி என்ற நபரை பார்க்க வேகமாக உள்ளே ஓடினாள்

வழியில் உள்ள ஆட்களை விசாரித்த பின்பு பழனி இருக்கும் அறையை கண்டு கொண்டவள், சிகிச்சை அறைக்குள் நுழைய, அங்கே கட்டிலில் படுத்து இருந்தார் பழனி

"அப்பா" என்று அன்பாக அழைத்த மகிழினி, பழனியின் அருகில் சென்றதும். அவர் கண்களை விழித்தவர்

"அம்மாடி. என்னை மன்னிச்சுடுமா. என்னால கோவிலுக்கு வர முடியல" என்று கண்கள் கலங்கினார் பழனி

"அச்சோ இருக்கட்டும். அப்பா நீங்க இப்போ எப்படி இருக்கீங்க? என்ன இது திடிர்ன்னு நெஞ்சு வலி?" என பழனியை தன் தந்தையாக பாவித்து நலம் விசாரித்தாள் மகிழினி

"எனக்கு ஒண்ணுமில்லமா. இதெல்லாம் சும்மா தான். சரி நீ சொல்லு வீரனுக்கு திதி கொடுத்துட்டியா" என்று பழனி கேட்டதும்

"ம்..." என்று சொன்ன மகிழினியின் மனதில் கொடி கையில் இருந்து குளத்தில் விழுந்த பிண்டம் நினைவுக்கு வந்தது

"யாருமா வீரனுக்கு திதி தந்தாங்க?” என்று பழனி கேட்டதும்

"நான் தான் தந்தேன்" என்ற மகிழினி கொடியை பற்றிய விஷயத்தை பழனியிடம் சொல்லாது மறைத்தாள்,

"இந்த மாதிரி சாங்கியம் எல்லாம் பெண்கள் பண்ணக்கூடாதுன்னு சொல்லுவாங்க ஆனா என்ன பண்றது வீரனுக்கு தான் உடன் பிறந்த ஆளுங்க யாருமே இல்லையே" என்று கவலையுடன் சொன்னார் பழனி

"யாரு இருந்தா என்ன, இல்லைனா என்ன, அதான் என் வீரனுக்காக நான் இருக்கேனே. அது போதாதா" என்று மகிழினி சொன்ன வார்த்தைகள் அவள் தன் கணவன் மீது கொண்டுள்ள அன்பை மேலும் வலுப்படுத்தியது.

"சரிம்மா. எல்லாம் நன்மைக்கேன்னு நினைப்போம். எப்படியோ நம்ம வீரன் ஆத்மா சாந்தியடையனும்" என்று கண்கள் மூடி வீரனின் முகத்தை ஒரு நொடி நினைத்து பார்த்த பழனியின் கண்கள் அவரை கேளாமல் கலங்கியது

"அழாதீங்க அப்பா. என் வீரன் எப்பவும் நம்ம கூட தான் இருக்காரு. சரி நீங்க சாப்பிட்டீங்களா. நான் வேணா உங்களுக்கு நைட் டிபன் செய்து கொண்டு வரவா?" என்று மகிழினி பழனியின் உடல் நிலை மீது அக்கறை கொண்டாள்.

"அதெல்லாம் வேணாம்மா. என்னை பார்த்துக்க ஆஸ்ரமத்து ஆளுங்க இருக்காங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நீ நேரத்தோடு கிளம்பி வீட்டுக்கு போ. அப்புறம் உன் பாட்டிக்கு நீ என்னை பார்க்க வந்தது தெரிந்தால், அவங்க உன் மேல தான் கோவப்படுவாங்க" என்று பாட்டியின் மனநிலையை புரிந்து கொண்டு, அவருக்காக பரிந்து பேசினார் பழனி.

"அவங்கள நான் சமாளிச்சுப்பேன் அப்பா. நீங்க கவலைப்படாதீங்க. ஆமா நாளைக்கு நீங்க டிஸ்சார்ஜ் ஆகிடுவீங்க தானே?" என்று மகிழினி கேக்க

"அப்படி தான்மா டாக்டர் சொன்னாரு. எதுவா இருந்தாலும் மறுபடியும் நாளைக்கு காலையில அவரு வந்து என்னை செக் பண்ணா தான் விவரம் தெரியும்" என்று பழனி சொன்னதும் தன் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்த மகிழினி, அந்த பணத்தை மேசை மேல் வைத்தவள்

"அப்பா இந்த பணத்தை செலவுக்கு வச்சிக்கோங்க. கூடிய சீக்கிரமா வீரா பேர்ல இருக்குற இன்சூரன்ஸ் பணம் மொத்தத்தையும், நம்ம ஆஸ்ரமம் அக்கௌன்ட்ல டெபாசிட் பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன்" என்று பணத்தின் மீது நாட்டம் இல்லாத ஆளாக மகிழினி சொன்னதும், அவளின் பெருந்தன்மையை நினைத்து அவரின் உள்ளமும் மகிழ்ந்து இருந்தது.

"நல்லதுமா. அதெல்லாம் பொறுமையா நடக்கட்டும். நீ இப்போ முதல்ல வீட்டுக்கு கிளம்பு. ஆங் அப்புறம் தயவுசெய்து ஒரு செல்போன் வாங்குமா. அந்த மாதிரி உன்கிட்ட ஒரு போன் இல்லாததால தான், என்னால இன்னைக்கு கோவிலுக்கு வர முடியாது, என்ற செய்தியை கூட உனக்கு தெரியப்படுத்த முடியல" என்று பழனி சொன்னதும், அவரை பார்த்து வெறுமையாக சிரித்தாள் மகிழினி.

"சரிப்பா. நான் கிளம்புறேன். எதுக்கும் நாளைக்கு நான் உங்களுக்கு போன் பண்ணி பாத்துட்டே, நம்ம ஆஸ்ரமத்துக்கு வரேன்" என்று சொல்லி மருத்துவமனையில் இருந்து வெளியே வர, இவள் வருகைக்காக காத்து இருந்தான் கொடி.
அவனை பார்த்ததும் முதலில் முகம் மாறிய மகிழினி, ‘இவரு ஏன் இங்க நிக்கிறாரு. யாருக்கு என்னாச்சுன்னு தெரியலையே’ என்று தனக்குள் எண்ணியவள் அவன் அருகில் சென்றாள்.

"வந்துட்டீங்களா. அதோ அங்க ஒரு கேப் நிக்குது பாருங்க. அதுல நீங்க வீட்டுக்கு வீட்டுக்குப் போயிடுங்க" என்று மகிழினியின் முகத்தை பார்க்காமலேயே சொன்னான் கொடிவீரன்.

"நீங்க எப்படி இங்க?” என்று மகிழினி குழப்பதுடன் கேட்டாள்.

"உங்கிட்ட செல்போன் இல்லைன்னு சொன்னிங்க இல்ல. அதான் உங்களுக்கு கேப் எல்லாம் புக் பண்ண முடியாதுன்னு நானும் உங்க பின்னாடியே இங்க வந்தேன்" என்று சொன்னான் கொடி
 
New member
Joined
Jan 15, 2026
Messages
23
"இங்கே கூட ஆட்டோ ஓடலையா?" என்று மகிழினி புரியாது கேட்டாள். கொஞ்சம் சந்தேகம் வந்ததும் உண்மை.

"இல்லிங்க இன்னைக்கும் நாளைக்கும் ஆட்டோ ஸ்ட்ரைக்குங்க" என்றான் அவன்.

"உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் கிளம்புறேன்" என்று சொன்ன மகிழினி மருத்துவமனை வாசலில் நின்று இருந்த வாடகைக் காரில் ஏறியதும் வண்டி புறப்பட, அந்தக் காரை தன் பைக்கில் பின் தொடரந்தான் கொடி.

சில நிமிடங்களில் கார் மகிழினியின் வீட்டு வாசலை சென்றடைய, கொடியும் அந்த காரை பின் தொடர்ந்து வந்தவன், மகிழினியின் வீட்டு வாசலில் இறங்கினான்.

இந்த காட்சியை பார்த்து கொண்டு இருந்த வேணு, "என்ன புலியும் பூவும் ஒண்ணா வருது" என்று சத்தமாக கேட்டான்.

"ஏய் வாயை மூடு". என்று மகிழினி அவன் கன்னத்தில் தட்ட, கொடி எந்த ஒரு உணர்வும் இல்லாமல் மாடியில் உள்ள தன் அறைக்குச் சென்றான்.

மகிழினியின் வருகைக்காக காத்து இருந்த பாட்டி, வரவேற்பறையில் கோவமாக அமர்ந்து இருந்தார்.

"என்ன பாட்டி ரெஸ்ட் எடுக்கலையா?" என்று இயல்பாக கேட்டாள் மகிழினி

"நான் ரெஸ்ட் எடுக்குறது இருக்கட்டும். நீ எங்க போய்ட்டு வர சித்ரா?" என்று கண்களில் கோபத்துடன் கேட்டார்.

"நான் எங்க போய்ட்டு வந்து இருப்பேன்னு உங்களுக்கு தெரியாதா?" என்று பாட்டியை எதிர்க்கேள்வி கேட்டாள்.

"இங்க பாரு சித்ரா. போன கதையை விட்டு தள்ளு. இனி உனக்கு வேற ஒரு வாழ்கை வேணும்னு நான் ஆசைப்படுறேன். அதுவும் உன் நல்லதுக்காக தான்" என்று கெஞ்சும் குரலில் பேசினார் பாட்டி

பாட்டி பேசிய எந்த வார்த்தையும் காதில் விழக்கூடாது என்று முடிவு செய்த மகிழினி, தன் காது மெஷினைக் கழட்டி டேபிளில் வைத்து\ தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்

பேத்தியின் செயலில் அவரின் கோவம் மேலும் அதிகரிக்க, மகிழினியின் அறை கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.

"ஏய் சித்ரா எழுந்துரு. என்ன என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?" என்று அதிக படியான கோவத்தில் கத்தியதும், மகிழினி தன் தலையணை கீழ் இருந்த அவளின் கணவன் வீரன் புகைபடத்தை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று, மல்லி பூ செடிகளின் நடுவில் வீரனின் புகைப்படத்தை வைத்து இவளும் அங்கே அமர்ந்து கொண்டாள்.

"வீரா! இன்னையோட நமக்கு கல்யாணம் முடிந்து இரண்டாம் வருடம் ஆரம்பித்து இருக்கு. உங்களுக்கு நான் என்ன பரிசு தரதுன்னு நைட் எல்லாம் யோசிச்சு பார்த்தேன். உங்களுக்கு இந்த உலகத்துல பிடிச்சது நானும், இந்த மல்லி பூவும் தான். அதான் இன்னைக்கு உங்கள நம்ம ரூம்ல இருந்து இங்க அழைச்சிட்டு வந்து இருக்கேன். நம்ம கொஞ்ச நேரம் இங்கேயே இருந்துட்டு அப்புறமா நம்ம ரூமுக்கு போகலாம்" என்று மகிழினி தன் கணவன் வீரனின் புகைப்படத்தை பார்த்து தனக்கு தானே பேசிக்கொண்டு இருந்தாள்.

இந்த காட்சியை கொடிவீரன் தன் அறையில் இருந்த ஜன்னல் வழியே கவனித்து கொண்டு இருந்தான்.

அதே சமயம் கீழ் இருந்து கோவமாக மாடிக்கு ஏறி வந்த பாட்டியை தொடர்ந்து, வேணுவும் ஓடி வர, பூ செடிகளின் நடுவில் இருந்த வீரனின் புகைப்படத்தைத் தன் வசம் எடுத்த பாட்டி, மகிழினியை ஆளை எரிக்கும் பார்வையில் முறைத்தார்

"பாட்டி என்ன பண்ணுறீங்க? என் வீரா போட்டோவை கொடுங்க" என்று பாட்டியின் கையில் இருந்த படத்தை பிடுங்க பார்த்தாள்.

அவரோ அந்தப் படத்தை மேலும் இறுக்கமாக தன் வசம் பிடித்து கொண்டு, "இந்த புகைப்படம் இருக்குற வரைக்கும் நான் சொல்ற எதையும் நீ கேக்க மாட்ட. அதனால இனி இவன் நினைவா உன் கண் எதிர்ல எதுவும் இருக்கக்கூடாது" என்று சொன்ன பாட்டி. வீரனின் புகைப்படத்தை மகிழினியின் கண் எதிரில் கந்தல் கந்தலாக கிழித்தாள்.

கணவனின் புகைப்படம் தூள் தூளாகப் பறந்ததைக் கண்ட மகிழினி என்ன செய்கிறோம் என்பதை அறியாது கோவத்தில், பாட்டியின் கன்னத்தில் ஒரு அரை விட்டு, "என் வீரா. ஐயோ என் வீரா. என் வீராவை ஏன் இப்படி செய்தீங்க?" என்று வானம் பிளவுபடும் அளவுக்கு கத்தியபடி, கீழே கிடந்த புகைப்படத்தை அள்ளி தன் இதயத்தோடு இணைத்துக் கொண்டு கதறி கதறி அழுதவளை, தன் அறையில் இருந்து பார்த்து கொண்டு இருந்த கொடியின் கண்கள் தானாக கண்ணீர் சிந்தியது.

மகிழினி கொடுத்த அரையில் இருந்து பாட்டி மீளாமல் பேய் அரைந்தது போல நின்று இருந்தார்

"நான் உங்க கண் எதிர்ல இருக்குறதால தானே, உங்களுக்கு நான் இடைஞ்சலா தெரியுறேன். இனி நான் உங்க கூட இருக்கமாட்டேன். நான் போறேன். என் வீராவோட புகைப்படம் என் உயிருக்கு சமம் என்று தெரிந்தும் நீங்க எப்போ இப்படி பண்ணீங்களோ, அதோட உங்களுக்கும் எனக்கும் இருக்குற சொந்தம் முடிஞ்சு போச்சு. நான் போறேன். நான் என் வீரா கூடவே போறேன்" என்று வேகமாக கீழே இறங்கி ஓடிய மகிழினியை வேணு பின் தொடரந்தான்.

சில நொடிகளில், "அத்த... அத்த கீழே இறங்கு அத்த. ஐயோ பாட்டி அத்தையை வந்து பாருங்க" என்று வேணு கத்தும் சத்தம் கேட்டு பாட்டி கீழே ஓடி வர, பாட்டியை பின் தொடர்ந்து கீழே ஓடி வந்தான் கொடி வீரன்.

👉உருவம் சிதைந்தாலும், உடல் எரிந்தாலும், ஒருவர் மீது நாம் கொண்ட உன்னதமான உணர்வுகள் மட்டும் அழிவதில்லை. நாம் மடியும் வரையில்.

Urs

SK💙💛
 
Member
Joined
Feb 8, 2025
Messages
35
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top