Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
மதுரை ரிஜிஸ்டர் ஆபிஸ்:
வழக்கம் போல் அந்த இடம் பரபரப்பாக இருந்தது...ஒரு பக்கம் சைக்கிளில் டீ கேனோடு வந்தவர் டீ டீ என்க,சிலர் அவரிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.
சிலர் தாங்கள் வாங்கிய சொத்துக்களை பத்திரப்பதிவு பண்ணுவதற்காக அங்கே ஒரு பக்கம் காத்திருக்க,இன்னும் சிலர் திருமண உதவித்தொகைக்காகவும் மற்ற அரசு உதவிக்காக விண்ணப்பிப்பதற்காக உட்கார்ந்திருக்க,இடை தரகர்களோ ஒரு பக்கம் அவர்கள் வந்த காரியத்தை விரைவில் முடித்து கொடுப்பதாக பேரம் பேசிக் கொண்டிருந்தனர்...
அப்பொழுது....
வக்கீல் தம்பி அடுத்தது நீங்கள் தான் போகணுமென்று அட்டென்டர் வந்து சொல்லவும்,அங்கு மணமக்களோடு இருந்த மாறனோ சரிங்கண்ணா என்றான்.
மணப்பெண் கோலத்தில் இருப்பவளுக்கு இந்த நிமிடம் வரையிலும் தனது வாழ்க்கையில் நடப்பது உண்மை தானா?இல்லை கனவு ஏதாவது காண்கிறோமா?என்று தனக்குள் எண்ணிக் கொண்டவளுக்கு அங்கிருக்கும் சூழல் உண்மைதான் என்பதை பிடறியில் அடித்த போல உணர்த்திக் கொண்டிருந்தது.
நமக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது?
கனவிலும் இப்படி ஒரு நிகழ்வு நமது வாழ்நாளில் நடக்குமென்பதை கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லையே.
"காதல் வந்தால் மனுசனை எந்த எல்லைக்கும் கொண்டு வந்து விடும் போல னு" எண்ணற்ற கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக் கொண்டு தரையை பார்த்தவாறு நின்றிருந்தாள்.
மேலும் சிறிது நிமிடங்கள் கடந்திருக்க,இளஞ்செழியன்-ஷமீரா தாஸ் என்கும் பெயர்கள் சற்று தள்ளி நின்றவர்களின் காதில் விழவும்,டேய் நம்மை தான் கூப்பிடுறாங்கள் வாடா என்ற மாறன் மற்றவர்களோடு முன்னே செல்ல மணமக்கள் இருவரும் அவர்களின் பின்னே சென்றனர்.
அங்கிருந்த ரிஜிஸ்த்ரர் இருவரின் டாக்குமெண்ஸை சரி பார்த்தவர்,என்ன வக்கீல் சார் ரொம்ப வேண்டியவங்களாயென்று அவர்களோடிருந்த அட்வகேட் தீரனிடம் கேட்க ஆமாம் மேடம்.
சரிங்க சார் எந்த பிரச்சினை வராமல் பார்த்துக்குங்க.ரெண்டு பேரும் மேஜர் தானென்றாலும் மற்றது எல்லாம் வெவ்வேறாக இருக்கென்றவர் இதில் சைன் பண்ணுங்களென்று நோட்டை நீட்ட,மணமகன் இடத்தில் S.இளஞ்செழியனென்று கையெழுத்திட்டான்.
ம்ம் பண்ணுயென்று அருகில் இருப்பவளிடம் செழியன் சொல்ல எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டியவள், M.ஷமீரா தாஸ் என்று அவளும் கையெழுத்திட,மணமக்கள் இருவருக்கும் சாட்சி கையெழுத்தாக மாறன் அவன் மனைவி பானு,அட்வகேட் தீரன் அவன் மனைவி நசீராவும் கையெழுத்து போட்டனர்.
பின்னர்,ரெண்டு பேரும் ஒருவர் பின் ஒருவராக அங்கு உள்ள கேமராவை பார்த்து உட்காருங்களென்றவர் சிஸ்டம் மூலயமாய் இருவரையும் போட்டோ எடுத்தனர்.
கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கள் ரெசிப்ட் வந்துடுமென்று சொல்ல சரிங்க மேடமென்று வெளியே வந்தனர்.
மாறா,எப்படியும் ரெசிப்ட் வர அரை மணி நேரத்திற்கு மேல தான் டா ஆகும்.நாம ஏற்கெனவே பிளான் பண்ணிய போல கோயில்ல போய் கல்யாணத்தை முடிச்சிட்டு வந்துடலாமென்று தீரன் சொன்னான்.
சரி டா போகலாமென்று பார்க்கிங்கிலிருந்த இனோவா காரில் ஏறியவர்கள் அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோயிலை நோக்கி சென்றனர்.
முன்பே பணத்தை கட்டி பதிவு செய்திருந்ததால் ஆபிசில் போய் இவர்கள் வந்த காரணத்தை சொல்ல,அவரோ அங்கிருந்த அய்யரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னார்.
வாங்கோ என்றவாறு அய்யர் போக இவர்களும் அவரின் பின்னே சென்றனர்.
இந்தாங்கோ சாமியென்று தாலியும் மாலையும் இருக்கும் தாம்பாளத்தை பானு நீட்ட,அதை வாங்கிக்கொண்டு அம்மனிடம் சென்றவர் வேதங்கள் ஓதியபடியே மாலையை அம்மனுக்கு காட்டி எடுத்து வந்து இருவரும் போட்டுக்கோங்களென்றார்.
மச்சான் ம்ம் என்று மாறன் சொல்ல தனது இடது பக்கத்தில் நிற்பவளின் கழுத்தில் செழியன் மாலை போட,பாப்பா நீயும் மச்சானுக்கு போடுடா என்றான்.
ம்ம் ணா என்றவளும் மாலையை எடுத்து செழியனின் கழுத்தில் போட்டாள்.
நசீரா மெட்டி எங்கேடியென தீரன் கேட்க,என் கிட்ட தான் இருக்குங்க.
தாலிக்கு அர்ச்சனை செய்து மஞ்சள் குங்குமத்தை வைத்தவர் தாம்பாளத்தோடு வந்து கட்டுங்கோயென்க,பெற்றோரிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டிக்கொண்டு தனது காதலியின் கழுத்தில் மூன்று முடிச்சை போட,இவ்வளவு நேரம் குனிந்திருந்தவளோ தனது கழுத்தில் தாலி ஏறுவதை கண்டு தனது மான்விழிகள் விரிய நிமிர்ந்து பார்க்க,தன்னவளின் கழுத்தில் முடிச்சு போட்டுக் கொண்டே அவளை பார்த்தவன் இந்த பார்வையில தாண்டி விழுந்தேனென்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” என்று அய்யரும் மந்திரத்தை ஓத இவர்களோ பூக்களை தூவி மணமக்கள் இருவரையும் ஆசீர்வதித்தனர்.
அம்பி குங்குமத்தை எடுத்து தாலியிலும் நெற்றியிலும் வைங்கோ என்கவும்,செழியனும் அவர் சொன்னதை கேட்டு தலையாட்டியவன் அதைப்போல செய்தான்.
அண்ணா இந்தாங்களென்று மெட்டி இருக்கும் சிறிய பெட்டியை நசீரா நீட்ட அதை வாங்கியவனோ கீழே குனிந்தான்..
தன்னவளின் பாதத்தை நோக்கி கையை நீட்ட,ஷமிராவோ தனது வலது காலை தூக்கி கணவனின் கையில் வைக்க, மெல்லிய பாதத்தை பிடித்தவன் தன்னவளின் நீண்ட கால் விரல்களில் மெட்டியை போட்டு விட,ஷமீராவிற்கோ தன்னவனின் ஸ்பரிசங்கள் சிலிர்ப்பை கொடுத்தது.
டேய் மச்சான் போதும்டா என் தங்கச்சி கால்ல விழுந்ததென்று மாறன் சிரிக்க,எல்லாம் நேரம் தான் மாமா என்றவாறு எழுந்தான்.
சோழனூர்:
சூரியனும் கிழக்கே உதயமாகுவதற்கு முன்பே வழக்கம் போல் எழுந்த அந்த பெண்மணியும்,ரெஸ்ட் ரூமிற்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவர் வழக்கமாக படிக்கும் பைபிளை எடுத்துக் கொண்டு ஹாலில் இருக்கும் சேரில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தார்...
சிறிது நிமிடங்கள் சென்று படித்ததை மூடி வைத்தவர் கண்ணை மூடிக்கொண்டு ஜெபத்தை செய்து முடித்து விட்டு பைபிளை அது இருக்கும் இடத்திலேயே எடுத்து வைத்தவர்,நேராக கிச்சனிற்குள் சென்று அடுப்பை பற்ற வைத்து பிரிட்ஜில் இருந்த பசும்பாலை எடுத்து சுட வைத்து,மகளுக்கு காபிக்கான பால் தனியாக எடுத்து வைத்து விட்டு தனக்கு டீ போட்டவர் ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டு வந்து சேரில் உட்கார்ந்தவருக்கு அங்கிருந்த காலண்டர் கண்ணில் பட்டது...
இன்னும் இரண்டு நாட்களில் மகளுக்கு பிறந்தநாள் வருகிறதை பார்த்து இந்த முறை அவளுக்காக வாங்கி வைத்த பொருளை நினைத்தவர் இது பார்க்கும் போது கண்டிப்பா உனக்கு பிடிக்குமென்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
நேரமும் கடந்து சென்றது...காலை டிபனை செய்து முடித்தவர் என்ன இவளை காணவில்லையேனு அந்த இரண்டு மாடி கொண்ட வீட்டின் உள்ளே இருக்கும் படியில் ஏறி மேலே வந்தவர்,இந்த பொண்ணு என்ன இன்னும் தூங்குறாயென்றவாறு மாடியில் இருக்கும் மகளின் ரூமின் முன்பு போய் நின்ற எஸ்தர்,ஷமீ ஷமீ என்று கதவை தட்டினார்.
"கதவு திறந்த பாடில்லை".
இவ்வளவு நேரம் மகள் தூங்க மாட்டாளே?என்று நினைத்தவருக்கு ஒருவித பதட்டம் வந்து லாக்கில் கை வைக்க அதுவும் திறந்து கொண்டது.
உள்ளே வெறுமையான பெட் மட்டுமிருக்க கீழேயும் இல்லையே??என்று யோசனையோடு மாடியில் நின்று தோட்டத்தில் எங்கேயாவது மகள் நிற்கிறாளானு தேட,அங்கே பலவகையான செடி கொடிகள் மற்றும் மரங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.
எங்கே போனாளென்று தெரியலையேனு பதறியபடியே கதவை சாத்தி விட்டு கீழே வந்தவர்,தனது போனை எடுத்து மகளின் நம்பருக்கு கால் பண்ண ரிங்டோன் சத்தமோ அந்த ஹாலிலேயே கேட்டது.
எங்கே கேட்குதென்று எஸ்தர் தேட ஷோகேஸிலிருந்து சத்தம் வருவது தெரிந்து கண்ணாடி கதவை விலக்கி பார்க்க அங்கே போனும் அதன் கீழ் மடித்து வைக்கப்பட்ட வெண்மை நிற பேப்பரும் இருந்தது.
ஜீசஸ் என்றவாறு ஒருவித நடுக்கத்தோடு அந்த பேப்பரை எடுத்து படிக்க தொடங்கினார்...
அன்புள்ள அம்மா அப்பாவிற்கு அபாக்கியவதி ஷமீரா எழுதுவது..
இதுவரை என் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த முடிவிலே நானும் இத்தனை வருடங்களாக கடந்து வந்தேன்.எனக்கென்று தனியாக எந்த விருப்பத்தையும் நான் வளர்த்துக்கவில்லை.
வளரத்துக்கவில்லை என்பதை விட எனக்கென்று தனி விருப்பத்தை நீங்கள் இருவரும் வளரவே விடவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
முதன் முதலாக நான் விரும்பிய, என்னை மட்டுமே நேசிக்கும் ஜீவனை எந்த சூழலிலும் என்னால் இழக்க முடியவில்லை.
நானும் கடந்த ஒரு வருடமாய் உங்களிடம் கெஞ்சி,கதறி போராடி பார்த்தும் என் விருப்பத்திற்கு இணங்க உங்களுக்கு மனம் வரவில்லை.
பெற்ற மகளை விட உங்களுக்கு மதமும்,சாதியும் பெரிதாக இருக்கின்றது.இனி இந்த சாக்கடை பேய்ங்களையே கட்டி காப்பாத்துங்கள்.
எனக்கான வாழ்க்கையை நான் தேடி போகின்றேன்.
தயவு செய்து என்னை தேடாதீர்கள்.இருக்கும் நாட்களிலாவது எனக்கு பிடித்தவனோடு என் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொள்கின்றேன்.
ஷமீரா தாஸ்..
மகளின் கடிதத்தை படித்து முடித்தவர் அடி பாவி மகளேயென்று அதிர்ந்தார்....
வனிச்சூர்:
ஏண்டி வானதி உன் மகன் எங்க தான் போயிருக்கான்?.ரெண்டு நாளா ஆள் விலாசமே இல்லையென்று செல்லதுரை தனது மனைவியிடம் சத்தம் போட...
இங்க பாருங்க காலையிலே என் வாயை புடுங்காதீங்க நல்லா இருக்காது சொல்லிட்டேன்.
போற வர இடத்தை அப்பனும் மவனும் நேரம் தேதி தவறாமல் என்கிட்ட சொல்லிட்டு போற போல
முந்தா நாளுல இருந்து இதே பாட்டை பாடிட்டு இருக்கீங்க என்றவாறு மாட்டுக்கு கரைத்த தீவனத்தை எடுத்து போய் கஞ்சி தொட்டியில் ஊற்றிய வானதி,கவனையில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து வந்து காட்ட, வாயில்லாத ஜீவன்களோ வேகவேகமாக குடித்து தனது பசியை போக்கிக் கொண்டிருந்தது.
ஏட்டி உன் மவனுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே?
அவன் கூட சுத்துர பயலுவோலாம் இங்கன தான் கிடக்காணுங்க..உன் அண்ணன் மவனும் எப்பவும் போல வேலைக்கு போறான்...புலிப்படை போல எல்லா எருமைங்களும் ஒன்றாக தான் மேயுமென்று தனது மகன் இளஞ்செழியனை பற்றி யோசனையானார்.
மகனை பற்றி வானதிக்கும் உள்ளுக்குள் கவலையாக தான் இருந்தது.முந்தா நாள் காலை வழக்கம் போல அவன் வேலை பார்க்கும் கம்பெனிக்கு போனவன் மதியவாக்கில் போன் பண்ணி வேலை விஷயமா வெளியூருக்கு போறேன்மா என்றவன் தான்.இதுவரை அவனிடமிருந்து எந்த போனும் வரவில்லை.
மகனின் நெருங்கிய நண்பனான தனது அண்ணன் மகன் கண்ணனிடம் விசாரிக்க,கம்பெனி வேலையா வெளியே போயிருக்கான்.
நீ ஏன் கவலை படுற?அவன் என்ன கொழந்தையாத்தை?
உன் மவன் உலகத்தையே வித்துடுவான் போ...போய் ஊட்டு வேலையை பாரென்று சமாளித்து அனுப்பியவன்,மீண்டும் தனது நண்பனுக்கு கால் பண்ண செழியன் அட்டென் பண்ணிய பாடில்லை.....
ஏட்டி வயித்துக்கு எதாவது போட போறியா இல்லையா என்கும் குரலில் கலைந்தவர்,இதோ வரேங்கயென்று கழுவி உள்ளே போனவர்,சமையற் கட்டிற்குள் சென்று இரவே கிண்டி வைத்த கேப்பை களியோடு,சுண்ட வைத்த மீன் குழம்பையும் எடுத்து வந்து முற்றத்தில் வைக்க செல்லதுரையும் வந்து உட்கார்ந்தார்.
வழக்கம் போல் அந்த இடம் பரபரப்பாக இருந்தது...ஒரு பக்கம் சைக்கிளில் டீ கேனோடு வந்தவர் டீ டீ என்க,சிலர் அவரிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.
சிலர் தாங்கள் வாங்கிய சொத்துக்களை பத்திரப்பதிவு பண்ணுவதற்காக அங்கே ஒரு பக்கம் காத்திருக்க,இன்னும் சிலர் திருமண உதவித்தொகைக்காகவும் மற்ற அரசு உதவிக்காக விண்ணப்பிப்பதற்காக உட்கார்ந்திருக்க,இடை தரகர்களோ ஒரு பக்கம் அவர்கள் வந்த காரியத்தை விரைவில் முடித்து கொடுப்பதாக பேரம் பேசிக் கொண்டிருந்தனர்...
அப்பொழுது....
வக்கீல் தம்பி அடுத்தது நீங்கள் தான் போகணுமென்று அட்டென்டர் வந்து சொல்லவும்,அங்கு மணமக்களோடு இருந்த மாறனோ சரிங்கண்ணா என்றான்.
மணப்பெண் கோலத்தில் இருப்பவளுக்கு இந்த நிமிடம் வரையிலும் தனது வாழ்க்கையில் நடப்பது உண்மை தானா?இல்லை கனவு ஏதாவது காண்கிறோமா?என்று தனக்குள் எண்ணிக் கொண்டவளுக்கு அங்கிருக்கும் சூழல் உண்மைதான் என்பதை பிடறியில் அடித்த போல உணர்த்திக் கொண்டிருந்தது.
நமக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது?
கனவிலும் இப்படி ஒரு நிகழ்வு நமது வாழ்நாளில் நடக்குமென்பதை கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லையே.
"காதல் வந்தால் மனுசனை எந்த எல்லைக்கும் கொண்டு வந்து விடும் போல னு" எண்ணற்ற கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக் கொண்டு தரையை பார்த்தவாறு நின்றிருந்தாள்.
மேலும் சிறிது நிமிடங்கள் கடந்திருக்க,இளஞ்செழியன்-ஷமீரா தாஸ் என்கும் பெயர்கள் சற்று தள்ளி நின்றவர்களின் காதில் விழவும்,டேய் நம்மை தான் கூப்பிடுறாங்கள் வாடா என்ற மாறன் மற்றவர்களோடு முன்னே செல்ல மணமக்கள் இருவரும் அவர்களின் பின்னே சென்றனர்.
அங்கிருந்த ரிஜிஸ்த்ரர் இருவரின் டாக்குமெண்ஸை சரி பார்த்தவர்,என்ன வக்கீல் சார் ரொம்ப வேண்டியவங்களாயென்று அவர்களோடிருந்த அட்வகேட் தீரனிடம் கேட்க ஆமாம் மேடம்.
சரிங்க சார் எந்த பிரச்சினை வராமல் பார்த்துக்குங்க.ரெண்டு பேரும் மேஜர் தானென்றாலும் மற்றது எல்லாம் வெவ்வேறாக இருக்கென்றவர் இதில் சைன் பண்ணுங்களென்று நோட்டை நீட்ட,மணமகன் இடத்தில் S.இளஞ்செழியனென்று கையெழுத்திட்டான்.
ம்ம் பண்ணுயென்று அருகில் இருப்பவளிடம் செழியன் சொல்ல எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டியவள், M.ஷமீரா தாஸ் என்று அவளும் கையெழுத்திட,மணமக்கள் இருவருக்கும் சாட்சி கையெழுத்தாக மாறன் அவன் மனைவி பானு,அட்வகேட் தீரன் அவன் மனைவி நசீராவும் கையெழுத்து போட்டனர்.
பின்னர்,ரெண்டு பேரும் ஒருவர் பின் ஒருவராக அங்கு உள்ள கேமராவை பார்த்து உட்காருங்களென்றவர் சிஸ்டம் மூலயமாய் இருவரையும் போட்டோ எடுத்தனர்.
கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கள் ரெசிப்ட் வந்துடுமென்று சொல்ல சரிங்க மேடமென்று வெளியே வந்தனர்.
மாறா,எப்படியும் ரெசிப்ட் வர அரை மணி நேரத்திற்கு மேல தான் டா ஆகும்.நாம ஏற்கெனவே பிளான் பண்ணிய போல கோயில்ல போய் கல்யாணத்தை முடிச்சிட்டு வந்துடலாமென்று தீரன் சொன்னான்.
சரி டா போகலாமென்று பார்க்கிங்கிலிருந்த இனோவா காரில் ஏறியவர்கள் அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோயிலை நோக்கி சென்றனர்.
முன்பே பணத்தை கட்டி பதிவு செய்திருந்ததால் ஆபிசில் போய் இவர்கள் வந்த காரணத்தை சொல்ல,அவரோ அங்கிருந்த அய்யரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னார்.
வாங்கோ என்றவாறு அய்யர் போக இவர்களும் அவரின் பின்னே சென்றனர்.
இந்தாங்கோ சாமியென்று தாலியும் மாலையும் இருக்கும் தாம்பாளத்தை பானு நீட்ட,அதை வாங்கிக்கொண்டு அம்மனிடம் சென்றவர் வேதங்கள் ஓதியபடியே மாலையை அம்மனுக்கு காட்டி எடுத்து வந்து இருவரும் போட்டுக்கோங்களென்றார்.
மச்சான் ம்ம் என்று மாறன் சொல்ல தனது இடது பக்கத்தில் நிற்பவளின் கழுத்தில் செழியன் மாலை போட,பாப்பா நீயும் மச்சானுக்கு போடுடா என்றான்.
ம்ம் ணா என்றவளும் மாலையை எடுத்து செழியனின் கழுத்தில் போட்டாள்.
நசீரா மெட்டி எங்கேடியென தீரன் கேட்க,என் கிட்ட தான் இருக்குங்க.
தாலிக்கு அர்ச்சனை செய்து மஞ்சள் குங்குமத்தை வைத்தவர் தாம்பாளத்தோடு வந்து கட்டுங்கோயென்க,பெற்றோரிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டிக்கொண்டு தனது காதலியின் கழுத்தில் மூன்று முடிச்சை போட,இவ்வளவு நேரம் குனிந்திருந்தவளோ தனது கழுத்தில் தாலி ஏறுவதை கண்டு தனது மான்விழிகள் விரிய நிமிர்ந்து பார்க்க,தன்னவளின் கழுத்தில் முடிச்சு போட்டுக் கொண்டே அவளை பார்த்தவன் இந்த பார்வையில தாண்டி விழுந்தேனென்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” என்று அய்யரும் மந்திரத்தை ஓத இவர்களோ பூக்களை தூவி மணமக்கள் இருவரையும் ஆசீர்வதித்தனர்.
அம்பி குங்குமத்தை எடுத்து தாலியிலும் நெற்றியிலும் வைங்கோ என்கவும்,செழியனும் அவர் சொன்னதை கேட்டு தலையாட்டியவன் அதைப்போல செய்தான்.
அண்ணா இந்தாங்களென்று மெட்டி இருக்கும் சிறிய பெட்டியை நசீரா நீட்ட அதை வாங்கியவனோ கீழே குனிந்தான்..
தன்னவளின் பாதத்தை நோக்கி கையை நீட்ட,ஷமிராவோ தனது வலது காலை தூக்கி கணவனின் கையில் வைக்க, மெல்லிய பாதத்தை பிடித்தவன் தன்னவளின் நீண்ட கால் விரல்களில் மெட்டியை போட்டு விட,ஷமீராவிற்கோ தன்னவனின் ஸ்பரிசங்கள் சிலிர்ப்பை கொடுத்தது.
டேய் மச்சான் போதும்டா என் தங்கச்சி கால்ல விழுந்ததென்று மாறன் சிரிக்க,எல்லாம் நேரம் தான் மாமா என்றவாறு எழுந்தான்.
சோழனூர்:
சூரியனும் கிழக்கே உதயமாகுவதற்கு முன்பே வழக்கம் போல் எழுந்த அந்த பெண்மணியும்,ரெஸ்ட் ரூமிற்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவர் வழக்கமாக படிக்கும் பைபிளை எடுத்துக் கொண்டு ஹாலில் இருக்கும் சேரில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தார்...
சிறிது நிமிடங்கள் சென்று படித்ததை மூடி வைத்தவர் கண்ணை மூடிக்கொண்டு ஜெபத்தை செய்து முடித்து விட்டு பைபிளை அது இருக்கும் இடத்திலேயே எடுத்து வைத்தவர்,நேராக கிச்சனிற்குள் சென்று அடுப்பை பற்ற வைத்து பிரிட்ஜில் இருந்த பசும்பாலை எடுத்து சுட வைத்து,மகளுக்கு காபிக்கான பால் தனியாக எடுத்து வைத்து விட்டு தனக்கு டீ போட்டவர் ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டு வந்து சேரில் உட்கார்ந்தவருக்கு அங்கிருந்த காலண்டர் கண்ணில் பட்டது...
இன்னும் இரண்டு நாட்களில் மகளுக்கு பிறந்தநாள் வருகிறதை பார்த்து இந்த முறை அவளுக்காக வாங்கி வைத்த பொருளை நினைத்தவர் இது பார்க்கும் போது கண்டிப்பா உனக்கு பிடிக்குமென்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
நேரமும் கடந்து சென்றது...காலை டிபனை செய்து முடித்தவர் என்ன இவளை காணவில்லையேனு அந்த இரண்டு மாடி கொண்ட வீட்டின் உள்ளே இருக்கும் படியில் ஏறி மேலே வந்தவர்,இந்த பொண்ணு என்ன இன்னும் தூங்குறாயென்றவாறு மாடியில் இருக்கும் மகளின் ரூமின் முன்பு போய் நின்ற எஸ்தர்,ஷமீ ஷமீ என்று கதவை தட்டினார்.
"கதவு திறந்த பாடில்லை".
இவ்வளவு நேரம் மகள் தூங்க மாட்டாளே?என்று நினைத்தவருக்கு ஒருவித பதட்டம் வந்து லாக்கில் கை வைக்க அதுவும் திறந்து கொண்டது.
உள்ளே வெறுமையான பெட் மட்டுமிருக்க கீழேயும் இல்லையே??என்று யோசனையோடு மாடியில் நின்று தோட்டத்தில் எங்கேயாவது மகள் நிற்கிறாளானு தேட,அங்கே பலவகையான செடி கொடிகள் மற்றும் மரங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.
எங்கே போனாளென்று தெரியலையேனு பதறியபடியே கதவை சாத்தி விட்டு கீழே வந்தவர்,தனது போனை எடுத்து மகளின் நம்பருக்கு கால் பண்ண ரிங்டோன் சத்தமோ அந்த ஹாலிலேயே கேட்டது.
எங்கே கேட்குதென்று எஸ்தர் தேட ஷோகேஸிலிருந்து சத்தம் வருவது தெரிந்து கண்ணாடி கதவை விலக்கி பார்க்க அங்கே போனும் அதன் கீழ் மடித்து வைக்கப்பட்ட வெண்மை நிற பேப்பரும் இருந்தது.
ஜீசஸ் என்றவாறு ஒருவித நடுக்கத்தோடு அந்த பேப்பரை எடுத்து படிக்க தொடங்கினார்...
அன்புள்ள அம்மா அப்பாவிற்கு அபாக்கியவதி ஷமீரா எழுதுவது..
இதுவரை என் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த முடிவிலே நானும் இத்தனை வருடங்களாக கடந்து வந்தேன்.எனக்கென்று தனியாக எந்த விருப்பத்தையும் நான் வளர்த்துக்கவில்லை.
வளரத்துக்கவில்லை என்பதை விட எனக்கென்று தனி விருப்பத்தை நீங்கள் இருவரும் வளரவே விடவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
முதன் முதலாக நான் விரும்பிய, என்னை மட்டுமே நேசிக்கும் ஜீவனை எந்த சூழலிலும் என்னால் இழக்க முடியவில்லை.
நானும் கடந்த ஒரு வருடமாய் உங்களிடம் கெஞ்சி,கதறி போராடி பார்த்தும் என் விருப்பத்திற்கு இணங்க உங்களுக்கு மனம் வரவில்லை.
பெற்ற மகளை விட உங்களுக்கு மதமும்,சாதியும் பெரிதாக இருக்கின்றது.இனி இந்த சாக்கடை பேய்ங்களையே கட்டி காப்பாத்துங்கள்.
எனக்கான வாழ்க்கையை நான் தேடி போகின்றேன்.
தயவு செய்து என்னை தேடாதீர்கள்.இருக்கும் நாட்களிலாவது எனக்கு பிடித்தவனோடு என் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொள்கின்றேன்.
ஷமீரா தாஸ்..
மகளின் கடிதத்தை படித்து முடித்தவர் அடி பாவி மகளேயென்று அதிர்ந்தார்....
வனிச்சூர்:
ஏண்டி வானதி உன் மகன் எங்க தான் போயிருக்கான்?.ரெண்டு நாளா ஆள் விலாசமே இல்லையென்று செல்லதுரை தனது மனைவியிடம் சத்தம் போட...
இங்க பாருங்க காலையிலே என் வாயை புடுங்காதீங்க நல்லா இருக்காது சொல்லிட்டேன்.
போற வர இடத்தை அப்பனும் மவனும் நேரம் தேதி தவறாமல் என்கிட்ட சொல்லிட்டு போற போல
முந்தா நாளுல இருந்து இதே பாட்டை பாடிட்டு இருக்கீங்க என்றவாறு மாட்டுக்கு கரைத்த தீவனத்தை எடுத்து போய் கஞ்சி தொட்டியில் ஊற்றிய வானதி,கவனையில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து வந்து காட்ட, வாயில்லாத ஜீவன்களோ வேகவேகமாக குடித்து தனது பசியை போக்கிக் கொண்டிருந்தது.
ஏட்டி உன் மவனுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே?
அவன் கூட சுத்துர பயலுவோலாம் இங்கன தான் கிடக்காணுங்க..உன் அண்ணன் மவனும் எப்பவும் போல வேலைக்கு போறான்...புலிப்படை போல எல்லா எருமைங்களும் ஒன்றாக தான் மேயுமென்று தனது மகன் இளஞ்செழியனை பற்றி யோசனையானார்.
மகனை பற்றி வானதிக்கும் உள்ளுக்குள் கவலையாக தான் இருந்தது.முந்தா நாள் காலை வழக்கம் போல அவன் வேலை பார்க்கும் கம்பெனிக்கு போனவன் மதியவாக்கில் போன் பண்ணி வேலை விஷயமா வெளியூருக்கு போறேன்மா என்றவன் தான்.இதுவரை அவனிடமிருந்து எந்த போனும் வரவில்லை.
மகனின் நெருங்கிய நண்பனான தனது அண்ணன் மகன் கண்ணனிடம் விசாரிக்க,கம்பெனி வேலையா வெளியே போயிருக்கான்.
நீ ஏன் கவலை படுற?அவன் என்ன கொழந்தையாத்தை?
உன் மவன் உலகத்தையே வித்துடுவான் போ...போய் ஊட்டு வேலையை பாரென்று சமாளித்து அனுப்பியவன்,மீண்டும் தனது நண்பனுக்கு கால் பண்ண செழியன் அட்டென் பண்ணிய பாடில்லை.....
ஏட்டி வயித்துக்கு எதாவது போட போறியா இல்லையா என்கும் குரலில் கலைந்தவர்,இதோ வரேங்கயென்று கழுவி உள்ளே போனவர்,சமையற் கட்டிற்குள் சென்று இரவே கிண்டி வைத்த கேப்பை களியோடு,சுண்ட வைத்த மீன் குழம்பையும் எடுத்து வந்து முற்றத்தில் வைக்க செல்லதுரையும் வந்து உட்கார்ந்தார்.