• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சோழனூர்:

ஏண்டி நான் தான் அவள் உறவு வேண்டானு சொல்லுறேன்.உன் அண்ணன் என்னவென்றால் அந்த ஓடுகாளியோட பங்ஷனுக்கு போறேனு ஒத்த காலில் நிக்கிறாரே,என்னடி இதெல்லாம்?

உன்னை உதைச்சி உங்கப்பன் வீட்டுக்கு துரத்தாம வீட்டுக்குள்ள வச்சிருக்கேன் பாரு அதான் டி நான் பண்ணிய பெரிய தப்பு என்றவாறு மகி சாப்பிட,எஸ்தரோ எதுவும் பேசாமல் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக கணவனுக்கு பரிமாறினார்.

ஒத்த புள்ளைய ஒழுங்கா வளர்க முடியலை,இவயெல்லாம் பொம்பளையா என்றபடியே மனைவி சமைத்த நண்டை ருசித்து சாப்பிட்டான்.

எஸ்தருக்கோ சூடாக இருக்கும் குழம்பை எடுத்து கணவன் தலையிலே கொட்ட வேண்டும் போல அவ்வளவு ஆத்திரம் வந்தது.

என் மானம் மரியாதை எல்லாவற்றையும் உன் மவள் காத்துல பறக்க விட்டுட்டா டி....என்னை பார்த்தால் பம்மிட்டு போற பயலுங்க எல்லாரும் இன்னைக்கு வாய்க்கு வந்த போல பேசுறாங்கடி.

இதுக்கெல்லாம் யாரு மூல காரணம் நீ பெத்து வச்ச அவளால் தாண்டி என்று திட்டினாலும் வயிறு முட்ட சாப்பிட்டு எழுந்த மகி வாஸ்பேசனில் கையை கழுவிட்டு செல்ல,எஸ்தரோ வரும் அழுகையை அடக்கிக் கொண்டு மீதமுள்ள உணவை எடுத்து மூடி வைத்துவிட்டு சாப்பிட்ட தட்டை மட்டும் கழுவி வைத்தார்...

வயிறு பசித்தாலும் மனதிற்குள் இருக்கும் வேதனையில் சாப்பிடும் எண்ணம் வராமல் தோட்டத்து பக்கமிருக்கும் கதவை திறந்து போய் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூட தன்னை மீறி கண்ணீர் வடிந்து ஓடியது. ..

அப்படியே இந்த மனுஷன் குடும்பத்துல எல்லாம் யோக்கியமா இருக்குறானுங்க? எவங்களும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கவே இல்ல பாரு,என் பொண்ணு தான் அதிசயமா பண்ணிக்கிட்டாளா?

ஏன் இவங்க சித்தப்பா பையன் காதலித்து கல்யாணம் பண்ணிக்கலையா?.இல்ல இவங்க தம்பி மவ தான் எழுத்த வீட்டு பையனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கலையா?அதுக்காக எல்லாரும் உசுர விட்டுட்டாங்களாயென்று மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டவருக்கு வாய் விட்டு கேட்க முடியாத சூழ்நிலை...

ஏனென்றால் எஸ்தருக்கு தற்போதைய போக்கிடம் அண்ணன் வீட்டைத் தவிர வேறு இல்லையே...வாழ்ந்தாலும் செத்தாலும் தலையெழுத்து இந்த வீட்டில் தானே என்னும் உண்மை நிலையை உணர்ந்தார்.

இது தான் தன் தலைவிதி.எத்தனையோ முறை தனது தாய் இந்த திருமணம் வேண்டாம் என்று சொன்னாரே...அவன் சரியான சிடு மூஞ்சி,கோவக்காரன்,உன் குணத்துக்கும் அவனுக்கும் ஒத்து வராது வேண்டாம் எஸ்தர்னு..

அன்று அவர் சொன்னதை கேட்காமல் தன் அத்தை மகன் என்ற எண்ணத்தில் தானே இவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன்.அதுக்கு தான் இன்னைக்கு நான் அனுபவிக்கிறேன்.

ஷமி ஏன் டி இப்படி பண்ணுன?

நான்தான் சொன்னேனே இந்த காதல் கல்யாணம் எல்லாம் வேண்டாம்,உன் அப்பன் ஒத்துக்க மாட்டார் என்று...என்கிட்ட சரிமானு தலையாட்டிட்டு இன்னைக்கு எப்படி இப்படி ஒரு முடிவு எடுக்க உனக்கு மனசு வந்துச்சி?

எதா இருந்தாலும் அம்மா உனக்காக பார்த்து பார்த்து செய்தனே,அப்பா ஊருக்குள்ள இல்லாமல் ஒரு பொம்பளையா இருந்து உன்னை வளர்த்து ஆளாக்கினேனே டி.

நாலு பேரு நாக்கு மேல பல்லு போட்டு ஒரு வார்த்தை உன்னை தவறாக பேசிடக்கூடாது என்பதற்காகத் தானே நீ கேட்கும் முன்பே உனக்கு எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.அதுக்காகவா இந்த அம்மாவுக்கு இப்படி ஒரு நல்ல பேரை வாங்கி வச்சுட்டு போன?.ஒரு நிமிஷம் கூட என் நிலைமையை நினைத்து பார்க்கவில்லையே டி..

உனக்கு எப்படி எல்லாம் கல்யாணம் பண்ணி சீரும் சிறப்புமா பாபு கூட வாழ வைக்கணும்னு நான் கனவு கண்டுக்கொண்டு இருந்தேனே,
என் கனவுல மண்ணள்ளி போட்டுட்டு இன்னைக்கு உன் அப்பன் கிட்ட என்ன வாங்காத பேச்செல்லாம் வாங்க வச்சிட்டு போயிட்டியே டி பாவி..

25 வருஷமா உன்ன பெத்து வளர்த்து பாதுகாத்த எங்களை விட,இன்னைக்கு வந்தவன் உனக்கு பெருசா போயிட்டானா டி?

கடைசி வரைக்கும் அவன் கூட நல்லபடியா நீ வாழ்ந்து காட்டுனாக்க நல்லது.அவன் நல்லவனா கெட்டவனா என்று தெரியாமல் எந்த நம்பிக்கையிலடி நீ போன?

உன் தலையில நீயே மண்ணள்ளி போட்டுக்கிட்டியே டி என்று சத்தமின்றி கதறி அழுதார்.

அப்பொழுது மகளுக்கு நாளைக்கு பிறந்தநாள் என்கும் ஞாபகம் வந்தது. ஐயோ என் பொண்ணுக்கு நாளைக்கு பிறந்தநாளாச்சே.ஒவ்வொரு வருஷமும் என் பொண்ணுக்காக ஆசையா ஏதாச்சும் ஒரு பொருளை வாங்கி சர்ப்ரைசா கொடுப்பேனே..

இந்த வாட்டியும் உனக்கு கொடுப்பதற்கு உன் பேரு எழுதுன டாலரை செய்து வச்சிருக்கேனே,அதை நான் யாருக்கு போய் கொடுப்பேன்??இன்னும் ரெண்டு பிள்ளையா நான் பெத்து வச்சிருக்கேன் உன்ன மறந்து அவங்க கூட நேரத்தை போக்குறதுக்கு..

ஒன்னே ஒன்னு தானே கருவேப்பிலை கொத்து போல பெத்து வெச்சேன்...எதுக்கு ஆண்டவரே எனக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுத்தீங்க என்று கதற.....

அப்பொழுது அண்ணி அண்ணி என தனது நாத்தனாரின் குரல் கேட்கவும், கண்ணை துடைத்தவர் தோட்டத்தில் தான் இருக்கிறேன் வாங்களென்றார்.

தோட்டத்து வழியாக வந்த ராணியும் தனது நாத்தனார் முகத்தை பார்த்து விட்டு எதுக்கு மூஞ்சிய தூக்கி இப்படி வச்சுட்டு இருக்க?

அழுதியா?

அண்ணன் ஏதாச்சும் சொல்லுச்சா?

உன் அண்ணன் எதுவும் சொல்லவில்லை என்றால்
தானே ஆச்சரியப் படணுங்கண்ணி..

என்னமோ நான் அவளை ஓட சொன்ன போல பேசுறாரே...ஏன் உங்க குடும்பத்தில் யாருமே இந்த தப்பு பண்ணலையா சொல்லுங்க?

உங்க சின்ன அண்ணன் பொண்ணு பண்ணலையா?உங்க சின்ன தம்பி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிலையா?அதுக்காக அவங்க எல்லாரையும் வெட்டி போட்டுட்டீங்களா என்கவும்,விடு எஸ்தர்..

கோவத்துல அண்ணன் பேசுது அது குணம் தான் உனக்கு தெரியுமே,நீ ஏன் அதை பெருசா எடுத்துக்குற?.

இப்படி வாழ்க்கை முழுவதும் இதையே சொல்லிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?எல்லாத்துக்கும் நான் பொறுத்துப் போயிட்டே இருக்கணும் அப்படி தானேனு கண்ணை துடைத்துக் கொண்ட எஸ்தர்,சரி சொல்லுங்க அண்ணி..

நானும் உங்க அண்ணனும் உங்க சித்தி கூட நாளைக்கு வனிச்சூருக்கு போகிறோம்.

அதான் எங்க அண்ணன் சொல்லிட்டே தாய்க்கு அடுத்தது தாய் மாமனென்று. இந்த உறவாவது என் பொண்ணுக்கு இருக்கேனு நெனச்சு நான் சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் என்கும்போது எஸ்தரின் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்து ஓடியது..

எல்லாம் ஒரு கால நேரம் தான்..ஆண்டவர் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் இப்படி பண்றாரென்று ராணி சொல்ல... உங்க மருமகள் செஞ்சதுக்கு எதுக்கு அண்ணி ஆண்டவர் மேல பழியை போடணும் என்று விரக்தியாக சிரித்தார்....

அப்படி இல்லைங்கண்ணி.

இன்னார்கு இன்னார் என்பதை ஆண்டவர் எப்பயோ முடிவு பண்ணிட்டாரு...நாம நினைத்தது ஒன்று நடப்பது வேறொன்னு...

மனிதரோட விருப்பமும் அவர் செயலும் ஒன்னாகிட முடியுமா என்க,எஸ்தரோ அதுவும் சரி தானென்றார்.

வனிச்சூர்:

டேய் நீ இரு நான் வாங்கிட்டு வரேன் என்றவாறு வாங்கிக் கொண்டு வர பாபுவோ அவனை முறைத்தபடி கார் நிற்கும் இடத்திற்கு சென்றான்.

பின்னர் இருவரும் அங்கிருந்த மலைப்பாதையின் வழியா போனார்கள்.அடேய் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் யாரையுமே காணுமே?
என்க,ஊருக்குள்ள போய் விசாரிக்கலாம்டா என்று பரத் சொல்லவும் சரிடா என்றான்.

இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கில்லையாடா...ஆமாண்டா சூப்பரா இருக்கென்று இருவரும் அங்கிருந்த மலைகளையும் விவசாய நிலங்களையும் ரசித்துக்கொண்டே அந்த மலையடிவாரத்தின் ஓரமாக பயணம் செய்தனர்.

அரை மணி நேரம் கடந்திருக்க அப்பொழுது அவர்களுக்கு எதிரே ஒரு பெண் கையில் பிரம்புக் கூடையை தூக்கிக்கொண்டு வருவதை பார்த்து அந்த பொண்ணுகிட்ட கேட்கலாமென்று பரத் சொல்ல,சரிடா நான் கேட்கிறேன் என்கவும்,அவனும் காரை ஓரமாக நிறுத்தினான்.

பாப்பா பாப்பா என்று பாபு கூப்பிட அவளோ திரும்பி பார்த்து முறைத்தாள். பாப்பாயென்று கூப்பிட்டதுக்கு எதுக்குடா இந்த பொண்ணு முறைக்குது என்று பாபு சொல்ல,பின்ன...அந்த புள்ளைய பார்த்தா பாப்பா போலவா இருக்கு தடி மாட்டு பயலே என்று முறைத்தான். ..

யோவ் கண்ணு தெரியலையா?என்னை பார்த்தால் பால்வாடி போகும் பிள்ளையாவா இருக்கென்று அங்கிருந்தவள் திட்ட,தங்கச்சி அவன் ஏதோ தெரியாம சொல்லிட்டான்.

நாங்கள் ஊருக்கு புதுசு.நீ தப்பா எடுத்துக்காதம்மா என்று பரத் சொல்லவும் பாபுவை முறைத்தவள் சரிங்கண்ணா எதுக்கு என்னை நிறுத்துனீங்க என்க...ஒன்னும் இல்லமா.இன்னும் தெருவுக்குள்ளே போக எவ்வளவு நேரம் ஆகுமென்றான்.

இன்னும் கொஞ்ச தூரம் போய் திரும்பினாலே தெரு வந்துடுங்கணா என்றாள்.சரிமா என்றவன் காரை ஸ்டார்ட் பண்ணி அங்கிருந்து சொல்ல கண்ணாடி வழியாக அவளை பார்த்த பாபுவோ,ஏன்டா பாப்பா என்று சொன்னதுக்காடா அந்த பொண்ணுக்கு இவ்வளவு கோவம் வருது என்றான்.

அதேபோல் ஐந்து நிமிட பயணத்தில் தெரு ஆரம்பிப்பது தெரிந்தது.அங்கே டீக்கடை ஒன்று இருப்பதை பார்த்து வண்டியை நிறுத்தியவன்,அண்ணா செழியன் வீடு எங்கே இருக்கென்க,இவர்கள் பார்க்க டிப் டாப்பாக இருப்பதால் கூட படித்த பசங்க போல என்று நினைத்தவர் இங்கிருந்து போய் வலது பக்கம் திரும்பினால் நாலாவது பெரிய வீடுப்பா என்றார்.

ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு அதே போல்,அவர் சொன்ன வீட்டின் முன்பு வந்து காரை நிறுத்திவிட்டு இறங்கிய இருவரும் அந்த பெரிய வீட்டின் வாசலில் நின்று செழியன் செழியன் என்று கூப்பிட,தனது மகனின் பெயரை சொல்லி யாரோ கூப்பிடுவதை கேட்ட வானதியோ வெளியே வந்து பார்த்தார்.

வணக்கம்மா செழியன் இல்லைங்களாமா என்கவும் உள்ள வாங்கப்பா என்று வீட்டிற்குள் கூப்பிட்டு போனவர் உக்காருங்கப்பா தண்ணி எடுத்துட்டு வரேனென்று போனார்..

இருவரும் அந்த பெரிய வீட்டை சுற்றிப் பார்த்தார்கள்.சிறிது நிமிடத்தில் வானதியும் இரண்டு சொம்பில் மோர் கலந்து எடுத்துட்டு வந்தவர் இந்தாங்கப்பா குடிங்க என்றார்.

இருவரும் குடித்து முடித்து விட்டு சொம்பை அங்கிருந்த டீபாயின் மேல் வைத்து விட்டு நாங்க செழியனை பார்க்க வந்திருக்கோம் என்க, செழியன் இங்கதான் இருக்கிறான்.

இதோ போன் போட்டு வர சொல்றேன் பா...ஆமா நீங்க அவன் கூட படிச்ச பிள்ளைகளா?.உங்களை இதுக்கு முன்ன நம்ப வீட்டில் பார்த்ததே இல்லையே பா?.

ரெண்டு பேரும் எந்த ஊரு பா?
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பரத் பேச வருவதற்குள் அவன் கையை தடுத்த பாபு,நான் ஷமீராவின் அத்தை பையன் மா என்கவும் அப்படியா தம்பியேன்று ஒரு நொடி அதிர்ந்தார்.

அவள் எங்கம்மா இருக்கிறாளென்க,தம்பி பொம்பள புள்ளைய அவள் இவளென்று இப்படி பேசக்கூடாது பா.அதுவும் இல்லாமல் ஷமீரா இப்போ என் மகனுக்கு பொண்டாட்டி.

மன்னித்துவிடுங்கள் மா.ஷமீராவை கொஞ்சம் வரச் சொல்லுங்க மா என்கவும்,மருமகள் இங்கு இல்லை பா.எங்க அப்பா வீட்டில் இருக்கு.

முறைப்படி இந்த வீட்டுக்கு மருமகளாக கூப்பிட்டு வரணும் என்பதற்கா அங்க கூப்பிட்டு போயிருக்காங்க.அதுதானே மரியாதை என்கவும்,அதைக் கேட்ட பாபுவோ ஆமாம் இந்த மரியாதை ஒன்னு தான் அவளுக்கு கேடு என்று மனதிற்கு திட்டினான்.

இருங்கப்பா செழியனை வர சொல்கிறேன் என்றவர்,தனது போனை எடுத்து மகனுக்கு கால் பண்ண, அட்டென் பண்ணியவனோ என்னம்மா என்றான்...

தம்பி உடனே வீட்டுக்கு வாயா என்க,தாயின் குரலிலிருக்கும் அவசரத்தை உணர்ந்தவன் இதோ வரேம்மா என்று அழைப்பை துண்டித்து விட்டு,அருகிலிருந்த கண்ணனிடம் மச்சி அந்த மடையை கட்டிடு.அம்மா போன் பண்ணுச்சு வீட்டுக்கு போயிட்டு வந்து விடுகிறேனென்று சொல்லிவிட்டு தனது வண்டியில் ஏறி வேகமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

வீட்டின் முன்பு கார் இருப்பதை பார்த்து யார் வந்திருக்கிறார்களென்ற யோசனையோடு வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்தவன் அங்கே இருப்பவனுங்களை பார்த்து வாங்க என்று சொல்லி விட்டு தனது அம்மாவை பார்க்க,உன் பொண்டாட்டியோட அத்தை பையன் என்றார்.

இருவரில் யார் ஷமீராவின் அத்தை பையன் என்று தெரியாமல் செழியன் பார்க்க நான் பரத்,இவன் பாபு.

"பாபு தான் தங்கச்சியோட மாமா பையன்".

நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்டு. துபாயில் ஒன்னா தான் வேலை பார்க்கிறோம்.அப்படியா என்றவன் பொதுவாக நலம் விசாரிக்க ஒத்த வயது உடையவர்கள் என்பதால் இயல்பாக அவர்களால் பேசிக் கொள்ள முடிந்தது.

நான் ஷமீராவை பாக்கணும் என்று பாபு சொல்ல,ஹம் வாங்க போகலாம்...அங்க தாத்தா வீட்ல தான் இருக்கிறாள்.நான் கூட்டிட்டு போறேனென்றவன் அம்மா நாங்க போயிட்டு வரோம் என்க ம்ம் சரிப்பா..

அப்புறம் இளா சாப்பாடு ரெடியா தான் இருக்கு மூவரும் சாப்பிட்டு போகலாமே என்க, இல்லைங்கம்மா வரும்போது தான் ஜூஸ் குடிச்சோம்.அதும் இல்லாமல் இப்போ தானே மோர் வேற குடிச்சோம் அதுவே வயிறு புல்லா இருக்கு.அதனால் சாப்பாடு வேண்டாமென்று நண்பர்கள் இருவரும் சொல்லி விட்டார்கள்.

பக்கத்து தெருவில் தான் தாத்தா வீடு இருக்கு.நான் பைக்ல வரேன் நீங்க கார்ல வந்துடுறீங்களா என்க,சரி நண்பா என்ற பரத் டிரைவர் சீட்டில் உட்கார,பாபுவோ எதுவும் சொல்லாமல் அமைதியாக வந்து உட்கார்ந்தான்.

உள்ளே வாங்களென்று இருவரையும் வீட்டிற்குள் அழைத்துப் போனான்.

தனது பேரனோடு புதிதாக இரண்டு பையன்கள் வருவதை பார்த்த சுமதி பாட்டி வாங்கப்பா உட்காருங்களென்றார்.

அம்மாச்சி இவங்க ஷமீராவோட அத்தை பையன்.இவங்க அவங்களோட ஃப்ரெண்டு என்றவன் எங்கிருக்கா அவ என்கவும்,தோட்டத்தில் உன் அத்தை கூட தான் பேசிட்டு இருக்கா.

இரு கண்ணு நான் போய் வர சொல்றேன் என்றபடி ஆய்ந்து கொண்டிருந்த கீரையை குண்டானில் வைத்து விட்டு எழுந்து தோட்டத்தை நோக்கி சென்றார்.

புவனாவும் ஷமீராவும் தோட்டத்தில் இருக்கும் அவரை கொடியிலிருந்து மதியம் சமையலுக்கு காய் பறித்துக் கொண்டிருக்கும் போது அம்மாடி சமி சமி என்று பாட்டி கூப்பிடுவது கேட்க, இதோ வரேன் பாட்டி என்றாள்.

கையிலிருந்த கூடையை புவனாவிடம் கொடுத்து விட்டு பாட்டியிடம் வர ஆத்தா உன்ன பாக்க இரண்டு தம்பிகள் வந்து இருக்காங்க என்கவும்,என்னை பார்க்க வா?.

யாரு??என்ற யோசனையோடு வீட்டிற்குள் வந்தவள் அங்கிருந்த பரத்தையும் பாபுவையும் பார்த்து அண்ணா-மாமா என்று அதிர்ந்தாள்.

பாபுவோ வாசல் பக்கம் திரும்பி இருந்தான்.பரத்தோ பாட்டி போற திசையில் பார்த்திருக்க,உள்ளே வந்தவளை பார்த்துவிட்டு டேய் மச்சான்,தங்கச்சி வருதுடா என்கவும் அதில் பாபு திரும்ப,சில அடி தூரத்தில் அதிர்ந்து போய் நிற்கும் ஷமீரா தெரிஞ்சாள்.

வந்தவங்களை வாங்கன்னு சொல்லாம எதுக்குத்தா தேங்கி நிக்குற என்று சுமதி பாட்டி சொல்ல ஷமீராவோ மாமா என்றவாறு வேகமாக வர,மனைவியை தான் செழினும் பார்த்துக் கொண்டிருந்தான்.

பாபுவின் முன்பு வந்தவள் எப்போ வந்தீங்க மாமா என்க,அவளை ஒரு நொடி பார்த்துக் கொண்டே எழுந்தவன் ஓங்கி பளார் பளாரென்று அறைய,வாங்கிய அறையில் இரண்டு அடி தள்ளிப் போய் விழுந்தாள்.

அவன் அடிப்பதை பார்த்து தம்பி என்று சுமதி பதற,டேய் என்னடா பண்ற என்று பரத் கத்த,பாபு என்ற செழியனோ எட்டி போய் அவன் சட்டையை இறுக்கி பிடித்தான்.

கணவன் தனது மாமாவின் சட்டையை பிடித்ததை பார்த்த ஷமீராவோ ஐயோ என்ன பண்றீங்க என்று வேகமாக எழுந்து வந்தவள்,கணவனின் கையை தட்டி விட்டு,இருவருக்கும் நடுவில் நின்றவள் ஏன் இப்படி பண்றீங்க?என்ன பழக்கம் இதுவென்று கணவனை கண்டித்தாள்.

"செழியனுக்கோ கொலை வெறி வந்தது".

என் கண்ணு முன்னாடி என் பொண்டாட்டியை அடிக்கிறான் அதை பார்த்துட்டு நான் சும்மா இருப்பதா,இவ என்னனா நம்ம கையை தட்டி விடுகிறாளே என்று அவளைப் பார்த்து முறைக்க,ஷமீராவோ கோபமாக தனது கணவனை பார்த்தவள்,பின்னர் பாபுவின் பக்கம் திரும்பியவள் மாமா,எப்ப வந்தீங்க?.

எப்படி இருக்கீங்க?

உடம்பு நல்லா இருக்கா என்றவள் பின்னர் பரத்தின் பக்கம் திரும்பி வாங்க அண்ணா...எப்ப வந்தீங்க?

ஏண்டி இப்படி பண்ணுன சொல்லு?

ஏன் இப்படி பண்ணினாய்??

உன்னை என் மாமா பொண்ணு போல நினைச்சாடி பழகுனேன் சொல்லுடி? அப்படியா நினைச்சு பழகுனேன்?என்று கோபமாக பாபு கேட்க,இல்லை என்று தலையை ஆட்டினாள்..

எந்த ஒரு விஷயத்தையும் உன்கிட்ட நான் மறைத்ததில்லையே??உன்னால மட்டும் எப்படி டி இவ்ளோ பெரிய காரியத்தை என்கிட்ட சொல்லாம இருக்க முடிந்தது.

உன்ன இந்த கையில் வைத்து தானே பொத்தி பொத்தி வளர்த்தேன்..எப்படி அந்த நம்பிக்கையை உன்னால் உடைக்க முடிந்தது என்று கேட்கும் போது பாபுவின் குரல் உடைந்து விட்டது.

கம்பீரமான ஆண்மகனாய் இருப்பவன் இதோ சிறு பெண்ணிடம் இப்படி உடைந்து போய் நிற்பதை பார்த்து பாசத்திற்கு முன்பு எந்த ஒரு ஆண் மகனும் இப்படி உடைந்து தான் போவானென்றார் சுமதி பாட்டி...

டேய் கொஞ்சம் அமைதியா இருடா என்று பரத் தனது நண்பனின் தோளை தட்டி சொல்ல,என்னடா அமைதியா இருக்க சொல்ற?

சொல்லு?.

இவ்ளோ பெரிய காரியத்தை பண்ணிட்டு வந்து மரம் போல எப்படி நிக்கிறா பாரேன் என்க,மன்னிச்சிடுங்க மாமா என்று அழுகையோடு சொல்பவளை பார்த்தவன்,எத்தனை வருஷமா இவங்களை உனக்கு தெரியும்?.

"எனக்கு மூணு வருஷமா தெரியும் என்றாள்"

ஓஓஓ..!

"மூணு வருஷமா தெரியும்"ஆனா ஒரு நாள் கூட என்கிட்ட சொல்லணும்னு உனக்கு ஞாபகம் வரலையா?அந்த அளவுக்கு நான் உனக்கு தூரமா போயிட்டேனோ...

வெளிநாட்டுக்கு தாண்டி போனேன் ஒன்னும் விண்வெளிக்கு நான் போகவில்லையே?இல்லை ஒரேடியாக அப்படியே செத்து தொலைந்து விடுவேன்னு நினைச்சிட்டியோ என்று வார்த்தைகளால் குதறி எடுத்தான்...

அய்யோஓஓ...மாமா!

அப்படி சொல்லாதீங்கள் என்று எட்டி பாபுவின் வாயை ஷமீரா மூட,தனது மனைவி இன்னொரு ஆண்மகனின் வாயை மூடி நிற்பதை பார்த்த செழியனுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.

கொய்யால தனியா சிக்குடி அப்போது உனக்கு இருக்குடி கச்சேரினு தனக்குள் நினைத்துக் கொண்டான்.

நீங்க யாரும் ஒத்துக்க மாட்டீங்க என்பதால் தான் மாமா உன் கிட்டயும் நான் சொல்லலை....

மாமன் மகள் சொன்னதை கேட்டவன் ஓஓஓ இப்ப மட்டும் ஒத்துக்கிட்டோமா??அதனால உன் இஷ்டத்துக்கு நீயே முடிவு எடுத்த அப்படி தானே டி.

"எனக்கு வேற வழி தெரியலை மாமா".உனக்கும் எனக்கும் வீட்ல கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க. அதனால் தான் நான் இப்படி பண்ண வேண்டியதாக இருந்தது..

அப்போ என்கிட்ட விஷயத்தை சொல்லி இருக்கணும் தானே.இந்த கல்யாணத்தை நிறுத்து எனக்கு தெரியாதா?.இல்லை இதுவரைக்கும் உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளணும் என்னும் எண்ணத்தோட உன்கிட்ட நான் பேசி பழகி இருக்கேனா?.

அப்ப நீ தப்பித்து ஓடி வந்ததுக்கு அர்த்தம் என்னவென்றால்,விருப்பம் இல்லாம உன்ன நான் கல்யாணம் பண்ணிக்க ஒத்த கால்ல நிக்கிற போல தான டி.அங்க எல்லா ஏற்பாடு பண்ணிட்டாங்க நீ இப்படி பண்ணினால் என்ன அர்த்தம்?.

கொஞ்சமாவது குடும்ப மான மரியாதை பத்தி யோசிச்சியா என்க...அந்த நேரம் வெளியே போயிருந்த அன்பரசனும் தம்புசாமி தாத்தாவும் தங்கள் வீட்டில் புதிதாக இரண்டு வாலிப பையனுங்கள் இருப்பதை பார்த்தபடியே உள்ளே வந்தனர்.

அவர்களை பார்த்தவள் கண்ணை துடைத்துவிட்டு மாமா,அண்ணா இவங்க தான் பெரியப்பா.அவங்க தாத்தா என்கவும்,பரத்-பாபு இருவரும் மரியாதை நிமித்தமாக அவர்களை பார்த்து வணக்கம் என்றனர்.

அவர்களும் இருவரையும் பார்த்து வாங்கப்பா உட்காருங்க.எதுக்கு நின்னுட்டு பேசிகிட்டு இருக்கீங்க?

சுமதி பாட்டி தான் புள்ளையோட அத்தை பையனும் இது தம்பியோட நண்பனுமாம் என்க...அப்படியா...வந்து ரொம்ப நேரமாகுதோ என்று விசாரித்தவர் அங்கிருந்த சோபாவை காட்டி உட்கார சொன்னார்.

புவனாவும் வீட்டுக்குள் வர,குடிக்க ஏதாவது கொடுத்திங்களா என்க, அப்பொழுது தான் ஷமீராவிற்கு இதுவரை வீட்டுக்கு வந்த தனது மாமனுக்கும் அண்ணனுக்கும் தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்பது புரிந்தது.

அங்கு வீட்டில் அம்மா மோர் கொடுத்தாங்க குடிச்சிட்டு தான் வந்தோமென்று பரத் சொல்ல,எந்த அம்மா என்று அன்பரசன் யோசனையாக,அதற்கு செழியனோ நம்ம வீட்டிலிருந்து தான் வராங்க மாமா என்றான்.

அப்படியா..!!

"சரிப்பா"நீங்கள் வந்தது ரொம்ப நல்லதா போச்சு.இவங்க இரண்டு பேருக்கும் வரவேற்பு வச்சிருக்கு..புள்ள சார்பா நீங்களும் இந்த பங்ஷன்ல கண்டிப்பா கலந்து கொள்ளனும்.

என்ன பண்றது,நாம் ஒரு கணக்கு போட்டா காலம் ஒரு கணக்கு போடுது.இருவரும் விருப்பப்பட்டு முடிவு எடுத்துட்டாங்க...அதுக்காக நம்பளும் வேண்டாம் என்று தட்டி கழிக்க முடியாதே..

நாள பின்ன நல்லது கெட்டதுக்கு சொந்த பந்தங்கள் முகத்தில் முழிக்கணும்.எங்க காலத்துக்கு அப்புறம் இவங்களுக்கு உறவு வேணுமில்லையா அதுக்கு தான் என்று தம்புசாமி தாத்தா சொல்ல,அதைக்கேட்ட பாபுவோ நீங்க சொல்றது வாஸ்தவம் தான்..

இதை போல விஷயமென்று ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாமே.நானே வீட்டில் இருப்பவர்களிடம் பேசியிருப்பேன்.

ஷமீராவிற்கு பிடித்த வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டியது என்னோட கடமை.என்ன செய்ய,கூட பிறந்தவளா நினைத்து வளர்த்துட்டேன்.

இப்படி சொல்லாமல் பண்ணிடுச்சேயென்று அந்த வருத்தம் மட்டும் தானென்றான்...

வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top