• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

கவிதா மாடிக்கு போய் அக்கா கிட்ட அளவு பிளவுஸ் வாங்கிட்டு வாயேன்று புவனா சொல்ல சரிமா என்றபடி மேலே போனவள் அக்கா அக்கா என்று ரூம் கதவை தட்டினாள்.


ஷமீராவும் கதவை திறக்க, அக்கா என்றவள் வந்த விஷயத்தை சொல்ல, அவளோ எதுக்குடா என்றாள்..

அது தெரியலை கா.அம்மா தான் வாங்கிட்டு வர சொல்லுது என்கவும் சரியென்று கல்யாணத்திற்காக போட்டிருந்த பிளவுஸை எடுத்துக் கொடுத்தாள்.

அதை வாங்கிக்கொண்ட கவிதாவும் கீழே போய் புவனாவிடம் கொடுக்க பக்கத்து தெருவிலிருக்கும் டைலர் வீட்டிற்கு கவிதாவையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

செழியனோ தனது மனைவிக்கு வாங்கிய போனை எடுத்துக் கொண்டு தாத்தா வீட்டுக்கு வந்தான்.சுமதி பாட்டியோடு அவள் மாடியில் மிளகாய் காய வைத்துக் கொண்டிருப்பதால் கணவன் வந்தது தெரியவில்லை.

வீட்டிற்குள்ளே வந்தவன் எங்கே யாரையும் காணும் என்றவாறு கிச்சனில் எட்டி பார்க்க அவன் குரலை கேட்ட ரஞ்சனியோ கவிதாவும் அக்காவும் டெய்லர் கடைக்கு போயிருக்காங்க..

உன் பொண்டாட்டியும் அம்மாச்சியும் மாடியில் மிளகாய் காய வைக்கிறார்கள் என்க...சரிங்கத்தை என்றவாறு படியிலேறி மேலே சென்றான்.

ஷமீராவோ ஆச்சியிடம் பேசிக்கொண்டே மிளகாய்களை காய வைக்கும் போது நெடி ஏறவும் தும்பி கொண்டே இருந்தாள்.

ஆச்சி என்று பல்லை கடித்தவன் என் பொண்டாட்டியை என்ன பாடு படுத்துற? அவளுக்கு இந்த வேலையெல்லாம் தெரியாது..

ஏய் உன்னை யார்டி இங்கு வர சொன்னாயென்று அவளை இழுத்து நிழலில் விட்டு விட்டு அவனே மிளகாய்களை காய வைக்க,எப்பா நான் ஒன்னும் கூப்பிடல...உன் பொண்டாட்டி தான் பா வந்தாள்.

அவ ஒரு கூறு கெட்டவள்..அவளுக்கு இத பற்றி ஒன்னும் தெரியாது.உனக்கு நல்லா தெரியுமில்ல என்கவும் அடேய் எல்லாரையும் இப்படி தாண்டா பொத்தி பொத்தி வளர்த்தாங்க...

அதிசயமா நீ மட்டும் தான் பொண்டாட்டி வளர்க்கிறியா என்கவும்,ஆமாம் அதில் என்ன சந்தேகம்.ஊரிலில்லாத பொண்டாட்டி தான் எனக்கென்று மனைவியை போய் தோளோடு அணைத்து சொல்ல ரொம்ப தாண்டா பண்றனு பேரனை பார்த்து தனது தாவங்கட்டையை இடித்தபடி சொல்லிய பாட்டிக்கும் சிரிப்பு மட்டும் குறையவில்லை.

பின்னர் பாட்டியும் பேரனும் பேசிக்கொண்டே மிளகாய்களை காய வைத்துவிட்டு கீழே வந்தனர்.போய் கையை சோப் போட்டு கழுவிட்டு வாடி என்க,ம்ம் என தலையசைத்துக் கொண்டு சென்றாள்.

சிறிது நிமிடத்தில் அவளும் வர அங்கு டிவியின் மேலிருந்த பார்சலை எடுத்துட்டு வந்து மனைவியின் முன்பு நீட்டினான்.அவளோ யோசனையோடு என்னவென்று பார்த்தாள்.

"பிரித்து தான் பாரேன் மா"

உன் புருஷன் அப்படி என்ன பொக்கிஷம் வாங்கிட்டு வந்துருக்கான்னு என்றவாறு தம்புசாமி தாத்தா வீட்டுக்குள் வர அதானே எங்கிருந்தாலும் இந்த தாத்தன் மூக்குல மட்டும் வேர்த்துடுமேனு முணுமுணுத்தான்.

ஷமீராவோ என்னவா இருக்குமென்ற யோசனையோடு பார்சலை பிரிக்க அதில் புது போன் பாக்ஸ் இருந்தது.

ஓபன் பண்ணி பாருடியென்று செழியன் சொல்ல ம்கூம் என்று தலையை ஆட்டியவள் கணவனிடமே குடுத்து பிரிக்க சொன்னாள்.சிரித்துக் கொண்டே அதை ஓபன் பண்ணியவன் உள்ளேயிருக்கும் போனை எடுத்து மனைவியிடம் நீட்ட மொபைலை பார்த்தவள் எதுக்கு இவ்வளவு ரேட்ல என்க?ஏன் இதுல என்னடி இருக்கு?

நல்லதா வாங்கணுமே டி.

ஏன் மா உன் புருஷன் எவ்வளவு பணத்துல போன் வாங்கியிருக்கான் என்று தாத்தா கேட்க இந்த போனோட விலை 25 ஆயிரம் ரூபாய் தாத்தா என்றாள்...

அப்படியா....பொண்டாட்டிக்கு செலவு பண்றதுக்கு என்ன கணக்கு வேண்டி கிடக்கு.உருப்படியாக தான் உன் புருஷன் செலவு பண்ணிருக்கான்னு சொல்லிக் கொண்டே தனது மீசையை தடவிக்கொண்டு மருமகள் கொடுத்த மோரை வாங்கி குடித்தார்.

இரவு 10 மணிக்கெல்லாம் மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்த பாபு அங்கே பார்மாலிட்டிசை முடித்துக் கொண்டு தனது லக்கேஜோடு வெளியே வந்து நண்பனுக்கு கால் பண்ண,டேய் இங்க தாண்டா இருக்கிறேன்னு பரத்தின் குரல் கேட்டது.

வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?,நலம் டா என்ற பரத்தும் அவனிடம் பேசிக்கொண்டே தனது வீட்டிற்கு அழைத்து போனான்.

ஏற்கனவே பரத் வீட்டிற்கு பாபு வந்திருப்பதால் அவர்களும் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்.பின்னர் இரவு உணவை சாப்பிட்டு விட்டு நண்பர்கள் இருவரும் ரூமிற்குள் வந்தனர்.

ம்ம் என்ன விஷயமென்று பரத் கேட்க,ஷமீராவை பற்றி பாபுவும் சொல்ல,என்னடா சொல்றனு அதிர்ந்தவன்,அது மலை கிராமம் டா.இங்கிருந்து எட்டு மணி நேரம் ஆகும் டா என்க,பாபுவோ அப்படியா என்றான்.

ஆமாடா...விவசாயம் தான் குல தொழில்..பெரிய பெரிய பணக்காரவங்களா இருப்பாங்கடா. ஆனால் பார்க்க அப்படி தெரியாது.

படிப்பறிவு அந்த அளவுக்கு இல்லை... அவங்களாம் காலேஜ் படிக்கணும்னாக்க முன்னாடிலாம் நம்ம மதுரைக்கு தான் வரணும்.இப்போ அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தான் அங்கு ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் கட்டியிருக்கிறார்கள்.

நான் அந்த ஊருக்கு போய் 7 வருஷம் இருக்கும் டா.எப்படி இவ்வளவு தூரத்திலுலிருக்கும் இருவருக்கும் பழக்கமாகிருக்குமென்று யோசனையோடு பரத் கேட்க, அதுதாண்டா எனக்கும் புரியலை.

இது எத்தனை வருஷ பழக்கமென்று தெரியலைடா.எந்த தைரியத்துல கிளம்பி வந்து இருக்கா பாரேன். சட்டப்படி கல்யாணத்தையும் பண்ணிருக்கிறாள் டா.அது மட்டும் இல்லாம இன்னும் மூணு வாரத்துல எனக்கும் அவளுக்கும் வீட்டில் கல்யாணம் ஏற்பாடு வேற பண்ணிருக்காங்க டா.

என்னடா சொல்ற நீ?தங்கச்சினு தானடா சொல்லிக்கிட்டு இருப்பனு பரத் கேட்க...ஆமாடா...இதுங்க என்ன வேலை பண்ணி வச்சிருக்காங்க பாரென்ற பாபுவோ தனது வீட்டினரை திட்டினான்.

சரி சரி படு...காலையில நம்ம கிளம்பிடலாம் என்க,சரிடா என்று மேலும் சிறிது நேரம் இருவரும் பேசி விட்டு படுத்தனர்.

அடுத்த நாள் விடியலும் வழக்கம் போல் உதயமாக பரத்தும் பாபுவும் அவனது அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டு காரை எடுத்தவர்கள் வனிச்சூரை நோக்கி பயணமானார்கள்.

மச்சான் நீ ரூட் சொல்லு நான் கார் ஓட்டுகிறேனென்று பாபு சொல்ல இருக்கட்டும் டா.இது மலைப்பாதை டா.

முன்ன பின்ன இந்த வழியில் ஓட்டி பழக்கம் இருந்தால் தான் பிரச்சினை இல்லாமல் போக முடியும்.போகும் போது நீ பார்த்துட்டு வா.வரும் போது ஓட்டலாம் என்கவும் பாபுவும் அதற்கு சரியென்றான்.

இருவரும் பேசிக்கொண்டே காலை 11 மணிக்கெல்லாம் வனிச்சூருக்கு வந்து சேர்ந்தனர்.இதுதாண்டா சுத்தி இருக்கிற கிராமத்துக்கு பெரிய டவுன்.

இங்கிருந்து ஊருக்குள் போக ஷேர் ஆட்டோவில் போகணும் இல்ல மினி பஸ்ல போகணும்.எப்படியும் போக அரை மணி நேரம் ஆகுமென்றான்.

சரி வா ஜில்லுனு குடிச்சுக்கலாம் என்க...பாபுவோ அங்கிருந்த சூழலைப் சுற்றி பார்க்க மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.

இருவரும் அங்கிருந்த ஜூஸ் கடைக்கு சென்று ஆளுக்கு ஒரு ஜூஸை ஆர்டர் பண்ணி குடித்தனர்.

சரிடா மச்சான் பர்ஸ்ட் டைம் தங்கச்சி வீட்டுக்கு போறோம் ஏதாச்சு வாங்கிட்டு போகலாமே எங்கவும்,ஏண்டா அவ பண்ணிட்டு போன காரியத்துக்கு ஃபார்மாலிட்டிஸ் ரொம்ப முக்கியமா என்று பாபு கேட்க,டேய் அதுக்குன்னு வெறும் கையை வீசிக் கொண்டா போவது..

நீ சும்மா இரு தங்கச்சிக்கு நான் வாங்குகிறேன்டா என்க...உன் தங்கச்சியை பார்த்த உடனே குருத்தெலும்பிலே நல்லா மிதிக்கலாமென்று இருக்கிறேன்.நீ என்னவென்றால் பாசத்தை புழிஞ்சி தள்ளுறியா என்று பல்லை கடித்தான்.

ஏண்டி வந்ததிலிருந்து இப்படி உம்மென்று இருந்தால் என்ன தான் டி அர்த்தம்?.கேட்டு கேட்டு வாய் வலிக்குதுடி என்றாள் கண்மணியின் ஆருயிர் தோழி மலர்விழி....

கண்மணியோ எதுவும் பதில் சொல்லாமல் ஜன்னல் வழியாக தெரியும் தூரத்து வானத்தையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்..

ம்கும்...

இது வேலைக்குச் ஆகாது.இப்போ பாருடி என மனதிற்குள் நினைத்தவள் டேபிளின் மேலிருந்த மர ஸ்கேலை எடுத்து கண்மணியின் தோள்பட்டையில் ஓங்கி ஒன்று வைக்க,அவளோ திரும்பி தோழியை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் சுட்டெரிக்கும் வானத்தை பார்க்க தொடங்கினாள்..

எதேஏஏஏஏ!

அடியேய் பேய் எதாவது புடிச்சிட்டாடி?

வெளங்காதவளே எதையாவது வாயை திறந்து சொல்லி தொலைடி என்று மீண்டும் கோவமாக கத்த,மலரின் அம்மா பத்மாவோ முற்றத்தில் வடகம் பிழிந்து கொண்டிருக்கவும் மகளின் கத்தல் கேட்டு,என்னடி ஆச்சுயென்று வேகமாக அங்கு வர,தாயைப் பார்த்தவள் என்னன்னு தெரியலாமா, வந்ததுல இருந்து உம்மென்றே மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்கா.எதையாச்சும் சொன்னாதானே தெரியும்.

ஏன் புள்ள கண்ணு என்னடி ஆச்சென்று பத்மா கேட்க ஒன்னும் இல்லங்கத்தை என்றாள்.

அடி சண்டாளி...

இவ்வளவு நேரம் கரடியா கத்துனேனடி ஒரு வார்த்தை வாயை திறந்து பதில் சொன்னியாடி என்று மலர் முறைக்க,கரடி கத்தினால் எனக்கு எப்படி கேட்கும் என்றவளோ அத்தை பசிக்குது என்கவும் வாடி கண்ணு சாப்பாடு ரெடியா தானிருக்கு...

உன் மாமா கதம்ப சட்னியும் இட்லியும் கேட்டாரு.சுட்டு வச்சிருக்கேன் வா வா என்று அவள் கையை பிடித்து இழுத்துப் போக,எம்மா குத்துக்கல்லு போல நானும் நிற்கிறேன் எனக்கு பசிக்கும். நானும் இன்னும் சாப்பிடவில்லை என்று மலர் சொல்ல உனக்கு பசிச்சா போய் போட்டு திங்க வேண்டியது தானே?.

நான் என்ன இட்லி சுட்ட குண்டானை தூக்கி இடுப்பில் வச்சிக்கிட்டா அலையுறேன்னு சொல்லிக் கொண்டு கண்மணியோடு வெளியே சென்றார்...

தாய் கிழவி என்று பல்லை கடித்த மலர் எனக்கும் நேரம் வரும் அப்போ உன்னை நான் பல்பு வாங்க வைக்கல என் பேரு மலர்விழி கிடையாதென்று சொல்லிக் கொண்டிருந்தாள்...

"ஏய் வந்து சாப்பிடுடி"

அப்புறம் மேல உன் வீணா போன சபதத்தை போடலாமென்று பத்மாவின் குரல் கேட், என்ன டேமேஜ் பண்றதுக்கு யாருமே வேண்டாம் .பெத்த தாய் நீ ஒரு ஆளு போதும் மா என்று சொல்லிக்கொண்டே அவளும் வந்து உட்கார இருவருக்கும் தட்டில் இட்லியை வைத்து சாம்பார் ஊத்தி கதம்ப சட்னியை வைத்தவர் சாப்பிடுங்க...
பாலு ஆறி போயிருக்கும் சுட வச்சிட்டு வரேன்...சூடா காபி குடிக்கலாம் என்றார்.

ம்மா எனக்கு பூஸ்ட் என்று மலர் சொல்ல அதான் தெரியுமேடி.மூன்று வேலையும் பூஸ்ட் குடிக்க தான் பிறந்திருக்கிறியேனு சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார் ..

பெத்த தாய் கொஞ்சமாச்சும் என்ன மதிக்குதா பாரு?சொந்த வீட்டிலே என் நிலைமை இப்படி இருக்கிறதே ஆண்டவா என்று சொல்லிக் கொண்டே மலரும் சாப்பிட்டாள்...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

ஷமீராவோ போனை ஆன் பண்ண அதில் சிம் கார்ட் போட்டிருப்பது தெரிந்து,புது சிம்மோ என்கவும் ஆமாமென்றான்.


உடனே முதல் கால் தன்னவனுக்கு தான் பண்ணினாள்.ரிங் வரவும் சிரித்துக் கொண்டே போனை எடுத்து பார்க்க அதில் செழியனும் அவளும் இணைந்திருப்பது போல போட்டோ டிஸ்ப்ளேவில் வர அதை தனது மனைவியிடம் காட்டினான்.

பேரனின் செயலை பார்த்துக் கொண்டிருந்தவர் உன் புருஷன் கிட்ட காதல் மன்னன் ஜெமினி கணேசனே தோற்றுவிடுவார் போலனு சிரிக்க இந்த பெருசுக்கு நம்ப கால்களை வாறுவதே வேலை...

சரி வா உன்னிடம் கொஞ்சம் பேசணுமென்று மனைவியை அழைத்துக் கொண்டு மேலேயிருக்கும் ரூமிற்குள் போனவன் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு மனைவியை இறுக்கமாக அணைத்தவாறு அங்கிருந்த பெட்டில் விழுந்தான்...

ஐயோ என்ன பண்றீங்க எல்லாரும் கீழே இருக்காங்களென்று ஷமீரா பதற,ஏண்டி உன்னை கட்டிப்பிடிக்கிறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையாடி என்கவும் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல...
வீட்ல தாத்தா பாட்டிலாம் இருக்காங்க தப்பா நினைக்க போறாங்களே.

அப்படிலாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க ஓவரா கற்பனை பண்ணாத. இப்ப மாமாவுக்கு ஒரு முத்தத்தை குடு என்கவும் எதேஏஏ என்று விழித்தாள்.

அடியேய் உன் புருஷன் ஆன பிறகு தாண்டி கேக்குறேன் காதலிக்கும் போது தான் சுண்டு விரலைகூட தொடவில்லையே.

இப்பதான் சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்.அதும் இரண்டு வாட்டி இதோ மூணாவது முறையும் கல்யாணம் பண்ண போறேன் இதுக்கு கூட முடியாதாடி என்கவும், ஆமாம்...முடியாது அதெல்லாம் வீட்டுக்கு வந்த பிறகுதான்.

சரி நீ கொடுக்க வேண்டாம் நான் கொடுக்கிறேனென்று மனைவி பக்கம் புரண்டவன் அவள் இதழில் புதைந்தான்.நீண்ட முத்தத்தை மனைவிக்கு பரிசாக கொடுத்தவன் இன்னும் கொஞ்ச நேரமிருந்தால் தாத்தன் கத்துவார்டி என்றவாறு அங்கிருந்து சென்றான்.

காலையில் துவைத்து காய போட்ட துணிகளை மாடிக்கு போய் எடுத்து வந்தவளுக்கு நாளைக்கு தன்னுடைய பிறந்தநாள் என்பது ஞாபகம் வந்தது.

எஸ்தரோ மறக்காமல் மகளுக்கு பிடித்த கேசரியை செய்து வைத்திடுவார். ..

மகிக்கு மகளின் பிறந்தநாள்கூட அந்த அளவுக்கு ஞாபகம் இருக்காது.ஆனால் எஸ்தர் ஒவ்வொரு வருடமும் மகளுக்கு ஏதாவது ஒரு பொருளை பரிசாகவும் டிரஸாகவும் வாங்கி கொடுத்து விடுவார்.

அதை எல்லாம் நினைத்தவளுக்கு அழுகையாக வந்தது. போன் பண்ணினால் அம்மா எடுப்பாங்களா என்று நினைத்தவள், எதற்கும் கால் பண்ணலாம்னு முடிவு பண்ணி புது போனிலிருந்து கால் பண்ண அது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. ..

மலர் வீடு:

கண்மணியும் எதுவும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட,இனிமே நான் எதுவுமே கேட்க மாட்டேன்.நீ சொன்னா சொல்லு சொல்லாட்டி போடியென்று சொல்லி விட்டு மலரும் சாப்பிடற வேலையை மட்டும் பார்த்தாள். ..

பத்மாவோ இருவருக்கும் ஆளுக்கு ஒரு தோசை கொண்டு வந்து கொடுக்க,எனக்கு போதும் அத்தை என்ற கண்மணியோ எழுந்து போய் தட்டை கழுவிட்டு வந்தவள் அங்கிருந்த சோபாவில் உட்கார,பத்மாவோ அவளிடம் ஒரு கப் காபியை கொண்டு வந்து நீட்ட, அதை வாங்கியவள் உங்க காபிக்கு நான் எப்போதும் அடிமைங்கத்தை என்று சிரித்துக் கொண்டே குடித்தாள்.

மலருக்கும் அதே போல் பூஸ்ட் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கியவளோ இந்த வனிச்சூரே உன்னுடைய பூஸ்ட்க்கு அடிமைனு டயலாக் பேச கம்முனு குடி டி என்றவர் மீண்டும் வடகம் பிழியும் வேலையை பார்க்கலானார்

அரைமணி நேரம் கடந்திருக்க மலரு நான் அப்பாவுக்கு மதிய சாப்பாடு எடுத்துட்டு போறேன் நீங்க ரெண்டு பேரும் வீட்டை பூட்டிக்கிட்டு இருங்களென்ற பத்மா கணவருக்காக எடுத்து வைத்த சாப்பாட்டு கூடையோடு அங்கிருந்து தோட்டத்தை நோக்கி சென்றார்

மலரோ முதல் நாள் தனது வகுப்பில் மாணவர்களுக்கு வைத்த டெஸ்ட் பேப்பரை திருத்திக் கொண்டிருக்க கண்மணியோ அவளை தான் பார்த்தபடி இருந்தாள்.

தோழியின் பார்வை தன் மேல் இருப்பது தெரிந்து,என்னடி என்னவோ காதலன் காதலியை பார்ப்பது போல குறுகுறுன்னு பார்க்குற என்க,எனக்கும் கண்ணன் அண்ணாக்கும் ஒரே வீட்ல சம்பந்தம் பண்ணலாம்னு இருக்காங்க என்கவும் பேப்பர் திருத்திக் கொண்டிருந்தவளோ அதிர்ந்து போய் கையிலிருந்த பேனாவை தவறவிட்டாள்.

பின்னர் சுதாரித்தவள் அட நாயே இவ்வளவு நல்ல விஷயத்தை வந்த உடனே சொல்றது இல்லையா?

அப்படியா?

அப்போ எனக்கும் அண்ணனுக்கும் அதே வீட்ல கல்யாணம் நடக்கிறது உனக்கு சந்தோசம் தானாயென்று கண்மணி கேட்கவும்,ஆமாண்டி ரொம்ப சந்தோஷம் என்றாள்..

ஓ என்றவாறு சோபாவிலிருந்து எழுந்து வந்தவள் ஓங்கி மலரின் கன்னத்தில் ஒரு அறையை விட்டு,எங்கே உன் மனசாட்சியை தொட்டு சொல்லு உன் மனசுல என் அண்ணன் இல்லைனு மலரின் தோளை பிடித்து உலுக்கி கேட்க மலருக்கு அழுகை தான் வந்ததே தவிர எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

தெரியும்டி..

உன் மனசுல என் அண்ணன் மட்டும் தான் இருக்கு...அதனால் தானே உனக்கு பார்க்கிற மாப்பிள்ளை எல்லாம் ரெண்டு வருஷமா இல்லாத காரணம் காட்டி தட்டி கழித்திக் கொண்டே வர...

இல்லன்னு உன்னால சொல்ல முடியுமா?.

நீயும் நானும் சின்ன வயசுலயிருந்து அப்படி பழகலையேடி.எதா இருந்தாலும் உன்கிட்ட மறைக்காம சொல்லுவேன். ஆனா நீ மட்டும் என் அண்ணனை காதலிக்கிறதை ஏண்டி என்கிட்ட சொல்லவே இல்லையென்று கண்மணி கேட்க சொன்னா நீ எங்கே தப்பா நினைச்சுப்பியோ என்பதால் தாண்டி நான் சொல்லலையென்று அழுதாள்.

அடி தடிமாட்டு நாயே என் அண்ணனுக்கு உன்ன விட நல்ல பொண்ணு எங்கடி கிடைக்கும் சொல்லு...

அப்பா சொன்னதுல இருந்து என் மனசு எவ்வளவு துடிச்சிட்டு இருக்குன்னு எனக்கு தாண்டி தெரியும் என்க,அழுது கொண்டிருந்த மலரும் கண்ணை துடைத்துவிட்டு உன் அண்ணனுக்கு இந்த விஷயம் தெரியுமா என்கவும், தெரியும் டி.ஆனா அண்ணன் கல்யாணம் வேண்டாம் சொல்லுது.

ஏன் மலரு உன் மனசுல இருக்கிற விஷயம் அண்ணனுக்கு தெரியுமா என்கவும் தெரியாதுடி என்றாள்.எவளோ ஒருத்தி என் அண்ணன் வாழ்க்கைக்கு வந்துருவாடி.

நீயும் சொல்ல மாட்டேங்குற. இன்றைக்கே எங்க அண்ணன் கிட்ட இந்த விஷயத்தை சொல்லு...இல்ல நானே போய் சொல்லிடுவேன்.

உன்ன கேக்காம இந்த விஷயத்தை சொல்லக் கூடாதுனு தாண்டி தெரிந்ததிலிருந்து கடந்த மூன்று வருடமாக நானும் அமைதியா இருக்கேன்.

எதேஏஏஏ மூணு வருஷமா அமைதியா இருக்கியா?அப்ப ஏண்டி இத பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேட்கவே இல்லை என்கவும் எப்படி கேட்க முடியும் டி?.

"நீயே என்கிட்ட மறைச்சிட்டியேடி".

அடியே திரும்பத் திரும்ப மறைச்சிட்ட மறைச்சிட்டனு சொல்லாதடி என்று மலர் அழ,மறைச்சிட்ட தானே நீ..அதுல என்ன சந்தேகமென்று தோழியை முறைத்து பார்த்தவள் என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்க கூடாது. அந்த பொண்ணு என் வீட்டுக்கு மருமகளாக வரக்கூடாது நீ தான் வரணும்.

ஒன்னு நீயே சொல்லு இல்ல நானே சொல்லுவேன் இதில் எது என்பதை நீயே முடிவு பண்ணுனு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

சோழனூர்:

ஏப்பா அந்தோணி உன் தங்கச்சி மகளுக்கு என்னதான் சீர் செய்யலாம்னு இருக்கனு சாரதா பாட்டி கேட்க, மச்சான் தான் மவ வேணான்னு சொன்ன போல என்னால அப்படி ஒதுங்க முடியாது சித்தி.

தாய் தகப்பன் இருக்கும் இடத்துல இருந்து தான் என் தங்கச்சியை பாத்துக்கிட்டேன்.இன்னைக்கு அதுக்கு புள்ளனாக்க அது எனக்கும் புள்ள மாதிரி தானே..

அதை உன் பேரன் எனக்கு நல்ல உணர்த்திட்டான்.முறைப்படி என்ன செய்யணுமோ அதை செய்யப் போறேன்.ஊர் உலகம் என்ன பேசும் என்பதை பத்தி எனக்கு கவலை இல்லை என்க...அப்பாடி நல்ல முடிவா எடுத்துருக்கற...

இந்த உலகத்துல சீரோடு போறவளுக்கே நல்ல மதிப்பு மரியாதை இருக்காது.நம்ம விட்டு சிறுக்கி அவ இஷ்டத்துக்கு முடிவு பண்ணிட்டாலும் அவ போன இடம் நல்ல இடமா இருக்கணும்னு தான் மனசு அடிச்சுக்கிட்டு இருக்குப்பானு சாராதா பாட்டி வருத்தமாக சொன்னார்..

அத்தை கவலையே படாத...ரொம்ப தங்கமான பையன்...நல்ல இடத்துல தான் நம்ம புள்ள போயிருக்கு என்ன சாதியும் மதம் எல்லாம் நமக்கு அவங்களுக்கு வேறையா இருக்கு.

மிச்சப்படி எல்லாரும் மனுஷன் தானே...

சாதி மதம் எல்லாத்துக்கும் மனசு தான் காரணமென்று ராணி சொல்ல அது நம்ம ரத்தத்தில் ஊறிப்போனது அதை மாற்ற முடியாது.

எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும். போகும் போது என்னையும் கூப்பிட்டு போவியா அப்பாடி...உன் தங்கச்சி மவள் வாழுற வீட்டை நானும் பார்க்கணும் என்கவும்,அது எப்படி உன்னை கூப்பிடாம போவேன் சித்தி? .

பின்னர் ராணியும் அந்தோணியும் தயாராகி டவுனுக்கு சென்றவர்கள் ஷமீராவுக்கு முறைப்படி தாய்மாமன் சீராக என்ன செய்யணுமோ அத்தனையும் லிஸ்ட் போட்டு வாங்கிட்டு வந்து வீட்டில் வைத்தனர்.

சிறிது நிமிடங்கள் சென்றிருக்க எஸ்தரும் மதியும் அங்கே வந்தனர்.
அவர்களை வாங்களென்க, மாமா நீ செய்யறது எங்கயாச்சி நல்லா இருக்கா?.

அந்த ஓடுகாளி நாய்க்கு எதுக்கு இதெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கயென்னு கோபமாக கத்த,மகி அன்னைக்கு சொன்னதை நான் இன்னைக்கும் உனக்கு சொல்றேன்.

மகள் வேண்டான்னு உன்னால தூக்கி போட முடிந்தது என்னால அப்படி இருக்க முடியாது.நீ வேண்டாம் என்று ஒதுங்கிட்ட அப்படியே இரு எனக்கும் வேண்டான்னு நீ சொல்லாதே என்றார்...

தனது மைத்துனர் சொன்னதை கேட்டவர் ஏன் மாமா என்னை விட உனக்கு அவ முக்கியமா?ஆடு பகை குட்டி உறவா?.

மகி உனக்கு எப்படி நான் சொல்றதுன்னு தெரியலை.என் தங்கச்சி எப்படி முக்கியமோ அதே போல தான் அது வயித்துல பிறந்த பொண்ணும் எனக்கு முக்கியம்.

தாய்க்கு அப்புறம் தாய் மாமன் தான் எல்லா உரிமையும் உள்ளவன் புரியுதா.அடுத்தது தான் மற்ற உறவுகள்.நான் போக தான் போறேன் உனக்கு இஷ்டம் இருந்தாக்க நீயும் வந்து பிள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணு என்க...

என் உசுரு போனாலும் அவ முகத்துல நான் முழிக்க மாட்டேன் மாமா என்று மகி சொல்ல,அப்போ இதோட விட்ரு. இனி இதுல தலையிடாதே என்று அந்தோணியும் கரராக சொல்லிவிட்டார். ...

வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top