Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 485
- Thread Author
- #1
வனிச்சூர்:
நல்ல நேரம் வந்ததும் ஷமீரா-செழியன் இருவரையும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் உட்கார வைத்தனர்.
வீட்டின் மூத்த சுமங்கலி பெண்களான வீராயி-சுமதி பாட்டி இருவரும் முதல் வளையலை எடுத்து பேத்திக்கு போட்டுவிட அதன் பின்னர் வரிசையாக எல்லாம் ஒற்றப்படையில் வளையல் போட்டுவிட்டு தட்டில் இருந்த சாதத்தை அவளுக்கும் செழியனுக்கும் ஊட்டியவர்கள் மஞ்சள் பூக்கள் கலந்த அரிசியை தூவி ஆசீர்வாதம் பண்ணினார்கள்..
மதிய விருந்தை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பலாம் என்ற பேச்சு வந்தது...
பரவால்ல டெலிவரி இங்கேயே ஆகட்டும்.இங்க தானே அவளை செக்கப்பிற்கு கூப்பிட்டு போகிறேனென்று எல்லாருக்கும் முன்பு செழியன் சொல்ல,இல்லைங்க தம்பி முதல் பிரசவம் அம்மா வீட்ல தான் பார்க்கணும்.
அதுதான் உலக வழக்கம் என்று எஸ்தரும் மகியும் சொல்லவும், பரவாயில்லை இதெல்லாம் ஊர் உலகத்துக்கு,நமக்கு எதுக்குங்க அத்தை இந்த சம்பிரதாயமெல்லாம் என்றான்.
கீழே இந்த வாக்குவாதம் போவது தெரியாமல் ரூமில் இருந்த ஷமீராவோ ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஊருக்கு போவதற்காக துணிகள் எல்லாம் பேக்கிங் பண்ணி தயாராக வைத்திருந்த சூட்கேஸை எடுத்து வெளியே வைத்தவள்,போட்டிருந்த பட்டுப்புடவை நகைகளை கழட்டி அங்கிருந்த கபோர்ட்டில் வைத்துவிட்டு இலகுவான புடவையை கட்டிக் கொண்டிருக்கும்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
யாரு என்கவும் நான் தான் டி கதவை திற டி என கடுப்பாக செழியனின் குரல் கேட்கவும்,இதோ வரேங்கள் என்றவாறு போய் கதவு திறக்க,உள்ளே வந்து தாழ்ப்பாள் போட்டவன் கன்னத்திலும் கைகளிலும் மஞ்சள் குங்குமம் பூசி தாய்மையின் பூரிப்பில் பேரழகாக இருக்கும் மனைவியை அணைத்தவன் என்ன டி உன்னை ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றாங்க?
இந்த மண்ணாங்கட்டிலாம் வேணாம் புரியுதா,டெலிவரியை எனக்கு பார்க்க முடியாதா?
"கணவன் சொன்னதை கேட்டவள் அன்னைக்கு தான் என்னமோ சொன்னீங்க மூணு மாசம் நிம்மதியா இருப்பேன்னு"
ஏய் அது விளையாட்டுக்கு சொன்னேன் டி என்றவாறு திரும்பியவனுக்கு அங்கே சூட்கேஸ் இருப்பது தெரிந்து ஓஓஓ,நீ ரெடியா தான் இருக்கியா என்று பல்லை கடித்தான்.
ஒவ்வொரு புருஷனுக்கும் கிடைக்கிற அற்புதமான வாய்ப்புன்னு சொன்னீங்க இப்போ உங்களுக்கும் அது கிடைச்சிருக்கு.நான் இல்லாம நல்லா நிம்மதியா இருங்க என்றாள்.
"அடியேய்..."
ஒரு நிமிஷம் கூட நீ இல்லாம இந்த ரூம்ல என்னால் இருக்க முடியாது.சொல்றதை கேளு டி.நீ ஒன்னும் போக வேண்டாம்.நம்ப இங்கேயே டெலிவரி பாத்துக்கலாம் என்று மனைவியிடம் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது..
ஆஆஆஆ என்று கத்தியவன் கதவை திறக்க அங்கே கண்மணி தான் நின்று கொண்டிருந்தாள்.
என்ன டி என்கவும் நல்ல நேரம் முடிய போகுது.அதுக்குள்ள இங்க இருந்து கிளம்பணுமாம்.ஷமீய கூப்பிட்டு வரச் சொல்றாங்க.
மாமன் மகள் சொன்னதை கேட்டு இதெல்லாம் எவன் டி கண்டுபிடிச்சான்?அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை போடி என்றான்.
இந்த ஈரவெங்காய கதையை போய் உன் தாத்தனுங்க இருக்காங்களே அவங்க கிட்ட சொல்லு,என்கிட்ட சொல்லாத என்ற கண்மணி,ஷமீ மாமா வர சொல்றாங்க டி என்கவும்,இதோ 2 மினிட்ஸில் நான் வரேன் என்றவள் சூட்கேஸை எடுக்க,ஏய்...
நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ கேட்கவே மாட்டேங்குற,நீ இல்லாம நான் எப்படி டி இங்கு இருப்பேன் என்கவும்,யாரு நீ இருக்க மாட்ட?
சும்மா நடிக்காத என்று கண்மணி சொல்லவும்,அடியேய்,அடிச்சி பல்லை ஒடச்சிடுவேன் நீ போடி முதல்ல..என் பொண்டாட்டி கிட்ட பேச விடு டி என்றான்...
அந்த நேரம் எலே அப்பு என்று வீரையன் தாத்தா குரல் கொடுக்க,அப்புச்சி வேற என்று பல்லை கடித்தவன்,உன் இஷ்டத்திற்கு ஊருக்கு கிளம்பிட்டல்ல சரி நல்லபடியா போயிட்டு வா என்றவன்,சூட்கேஸோடு கீழே இறங்கி செல்ல,ஷமீராவும் கண்மணியும் சிரித்துக் கொண்டே வந்தார்கள்.
பின்னர் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து சோழனூருக்கு புறப்பட்டனர்.
கார் ஓட்டிக் கொண்டிருந்த பாபுவிற்கு பின்னாடி சீட்டில் இருக்கும் ஷமீயின் மேல் தான் அவ்வப்போது பார்வை இருந்தது.
இதோ பத்து மாதம் ஆகிவிட்டது இதுவரை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அவளும் அதன் பிறகு அவனிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆனால் தனது மாமன் மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்ட உடனே கோபம் பாதி குறைந்தது. இருந்தும் இப்பொழுது அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு தோணவில்லை. .
ஷமீராவின் அருகில் உட்கார்ந்திருந்த செழியனோ மனைவியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள அந்த கையின் அழுத்தமே அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்பதை அவளுக்கு உணர்த்தியது.
எவ்வளவு பொறுமையாக பேசினாலும் காரில் இருக்கும் பாபுவுக்கும் கண்மணிக்கும் இவர்கள் பேசுவது கேட்கும் என்பதால்,தனது கணவனின் வலது கையை பிடித்தவள் வயிற்று மேல் வைத்துக்கொள்ள அதில் திரும்பி பார்த்தவனிடம் கண்களால் இறஞ்சினாள்.
வீட்ல போய் உனக்கு இருக்கு டி என்று பல்லை கடித்துக் கொண்டு சொல்ல, அவன் உதட்டின் அசைவை வைத்து அவன் என்ன சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டவள்,பாவமாக அவனைப் பார்க்கவும் செழியனோ அவளிடமிருந்து கையை உருவி கொண்டு வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டான்..
கடவுளே இந்த மனுஷனை என்னதான் பண்றதுன்னு தெரியலையே??
என்னமோ அதிசயமா நான் மட்டும் தான் அம்மா வீட்டுக்கு பிரசவத்துக்கு போற போல இப்படி முறுக்கிட்டு உட்கார்ந்திருக்கிறாரே என தனக்குள்ள புலம்பிக் கொண்டாள்.
டெல்லி::
அங்கு என்ன நடக்குதுன்னு தெரியலையே?
அந்த மனுஷனுக்கு என்னையும் என் பிள்ளைகளை விட இரண்டாவது பொண்டாட்டி குடும்பத்தை தான் ரொம்ப பிடிக்கும்.
"இது எனக்கு நல்லாவே தெரியும்"
இந்த மகளுக்கு என்னென்ன சீர் செய்கிறார்னு தெரியவில்லையே என்று புலம்பு கொண்டே கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தார்.
தனது மகனை தூங்க வைத்த ஜூலி சாப்பிடுவதற்காக கிச்சனிற்கு வர அங்கே மானசா எதோ தானாக பேசிக் கொண்டிருப்பதை கேட்டவள்,என்னம்மா தானா பேசிட்டு இருக்கீங்க?
அதைக் கேட்டு என்னத்த டி சொல்லுவேன்,எல்லாம் நம்ம தலையெழுத்து.
அன்னைக்கு அந்த கிழவி உசுரு போய்ட கூடாதுன்னு என்பதை விட,அவளுக்கு நான் நல்லவளாக தெரிந்தால் தான் என்னை வாழ விடுவாள்னு, உங்கப்பனை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சம்மதித்தேன்.
இன்னைக்கு பாரு நம்ம அல்லோலப் பட்டுக்கிட்டு கிடக்கிறோம் என்க,அய்யோ அம்மா,நீங்கள் சொல்றது ஒண்ணுமே புரியலையே என்கும் மகளை பார்த்தவர் உனக்கு என்னதான் புரியுது..
இன்னைக்கு உங்க அப்பாவோட இரண்டாவது மகளுக்கு வளையல்காப்பு டி.குழந்தைக்கு உடம்பு முடியலைனு நீ போகல.மாப்பிள்ளை போயிருக்காரு அவர் வந்த பிறகு தான் எல்லாம் கேட்கணும்.
உனக்கு செஞ்ச அதே அளவுக்கு அங்கு செஞ்சாரா இல்லை எக்ஸ்ட்ரா செஞ்சிருக்காரானு என்கவும்,அதைக் கேட்ட ஜூலியோ தாயை முறைத்துப் பார்க்க,என்னை எதுக்கு டி முறைக்கிற, நான் ஒன்னும் கண்டவன் கிட்ட எல்லாம் கேட்கலையே??
உன்ன பெத்த அப்பன் கிட்ட தானே கேட்கிறேன்.என்னமோ பெருசா சொன்னாரு இருக்கிற சொத்தெல்லாம் பிள்ளைகளுக்கு சமமா பிரிச்சு கொடுப்பேன்னு..
நாள் போகுது ஒண்ணுத்துமே காணோமே என்ற புலம்பிக் கொண்டே மகளுக்கான டிபனை தட்டில் வைத்து கொடுத்தவர் இவ வேற போயிட்டாள்.
ரெண்டாவது பொண்டாட்டிய இந்த மனுஷன் விட மாட்டாரு.என்னை விட அந்த மனைவியை தான் அவருக்கு உசுரு.அப்போ திரும்ப இவர்கள் உறவு தொடருமோ?
அப்ப நம்ம வாழ்க்கை டெல்லியில் தான் முடிஞ்சிடுமா??
நம்ம பிள்ளைகளை அந்த மனுஷன் ஏமாத்திடுவிரோ என்று பைத்தியம் போல மனசுக்குள் பேசிக் கொண்ட மானசாவிற்கு திடீரென்று நெஞ்சு வலி வரவும் அப்படியே சுருண்டு கீழே விழுந்தார்.
ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த ஜூலிக்கு,பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு என்னாச்சு மா என்றவாறு கிச்சனிற்குள் வந்து பார்க்க அங்கே மானசா மயங்கி கிடப்பது தெரிந்தது.
அம்மா அம்மா என்று கத்தியவள் அவர் எழாததால் தனது நாத்தனாரை கூப்பிட்டு வர அதற்குள் பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள்.
பின்னர் அவர்கள் காரில் மானசாவை அழைத்துக் கொண்டு ருத்ரன் தீபன் வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு போய் அட்மிட் பண்ண,ட்ரீட்மென்ட் பண்ணிக் கொண்டிருக்கும் போதே மானசாவின் உயிர் பிரிந்தது.
ஜூலியோ தனது தாயை நினைத்து அழ,குழத்தையை தோளில் போட்டுக் தட்டிக் கொண்டிருந்த ரூபாவும் பக்கத்து வீட்டு பெண்மணியும் ஆறுதலாக தேற்றிக் கொண்டிருக்கும் போது,கதவை திறந்து வெளியே வந்த டாக்டர் அவங்க இறந்துட்டாங்க என்கவும் அம்மா என்று கத்தி கதறினாள்..
ஒரு நிமிடம் ரூபாவிற்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.
பின்னர் அவர்கள் வர வரைக்கும் தான் சமாளிக்க வேண்டும் என்ற உண்மையை புரிந்து கொண்டவள், தனது போனிலிருந்து அவளது அண்ணனுக்கு கால் பண்ணினாள்.
ஏர்போர்ட்டுக்கு வந்து கொண்டிருந்த ருத்ரன் கால் வரும் சத்தம் கேட்டு போனை பார்த்து விட்டு அட்டென் பண்ணியவன் சொல்லு டா?
நாங்கள் கிளம்பிட்டோம் என்க,அண்ணா என்றவள் அழுது கொண்டே மானசா இறந்து போன விஷயத்தை சொல்ல என்ன என்று அதிர்ந்து போனவன், கொஞ்ச நேரம் சமாளி டா நாங்க வந்து விடுகிறோம் என்றவாறு போனை வைத்தவன் தீபனிடம் விஷயத்தை சொல்லிவிட்டு மகிக்கும் ப்ளைட்டில் டிக்கெட் புக் பண்ண சொல்லியவன் உடனே தனது மாமனாருக்கு கால் பண்ணினான்...
காரில் வந்து கொண்டிருந்த மகிக்கு கால் வரும் சத்தம் கேட்கவும்,கையில் இருந்த போனில் பெயரை பார்த்தவர் பெரிய மாப்பிள்ளை தான் என்றவாறு அட்டென்ட் பண்ணியவர் சொல்லுங்க மாப்பிள்ளை,பின்னாடி தானே வரீங்க என்றார்.
அது வந்துங்க மாமா என்றவன் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் ருத்ரன் தடுமாற,சொல்லுங்க மாப்பிள்ளை என்ன ஆச்சு என்று மகி கேட்க,உடனே நீங்க எங்க கூட டெல்லிக்கு வரணும்.
"உங்களுக்கும் டிக்கெட் போட்டுட்டேன் மாமா"
அத்தைக்கு உடம்பு சரி இல்லையாம் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கிறார்கள் என்று விஷயத்தை மாற்றி சொன்னான்.
நல்ல நேரம் வந்ததும் ஷமீரா-செழியன் இருவரையும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் உட்கார வைத்தனர்.
வீட்டின் மூத்த சுமங்கலி பெண்களான வீராயி-சுமதி பாட்டி இருவரும் முதல் வளையலை எடுத்து பேத்திக்கு போட்டுவிட அதன் பின்னர் வரிசையாக எல்லாம் ஒற்றப்படையில் வளையல் போட்டுவிட்டு தட்டில் இருந்த சாதத்தை அவளுக்கும் செழியனுக்கும் ஊட்டியவர்கள் மஞ்சள் பூக்கள் கலந்த அரிசியை தூவி ஆசீர்வாதம் பண்ணினார்கள்..
மதிய விருந்தை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பலாம் என்ற பேச்சு வந்தது...
பரவால்ல டெலிவரி இங்கேயே ஆகட்டும்.இங்க தானே அவளை செக்கப்பிற்கு கூப்பிட்டு போகிறேனென்று எல்லாருக்கும் முன்பு செழியன் சொல்ல,இல்லைங்க தம்பி முதல் பிரசவம் அம்மா வீட்ல தான் பார்க்கணும்.
அதுதான் உலக வழக்கம் என்று எஸ்தரும் மகியும் சொல்லவும், பரவாயில்லை இதெல்லாம் ஊர் உலகத்துக்கு,நமக்கு எதுக்குங்க அத்தை இந்த சம்பிரதாயமெல்லாம் என்றான்.
கீழே இந்த வாக்குவாதம் போவது தெரியாமல் ரூமில் இருந்த ஷமீராவோ ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஊருக்கு போவதற்காக துணிகள் எல்லாம் பேக்கிங் பண்ணி தயாராக வைத்திருந்த சூட்கேஸை எடுத்து வெளியே வைத்தவள்,போட்டிருந்த பட்டுப்புடவை நகைகளை கழட்டி அங்கிருந்த கபோர்ட்டில் வைத்துவிட்டு இலகுவான புடவையை கட்டிக் கொண்டிருக்கும்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
யாரு என்கவும் நான் தான் டி கதவை திற டி என கடுப்பாக செழியனின் குரல் கேட்கவும்,இதோ வரேங்கள் என்றவாறு போய் கதவு திறக்க,உள்ளே வந்து தாழ்ப்பாள் போட்டவன் கன்னத்திலும் கைகளிலும் மஞ்சள் குங்குமம் பூசி தாய்மையின் பூரிப்பில் பேரழகாக இருக்கும் மனைவியை அணைத்தவன் என்ன டி உன்னை ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றாங்க?
இந்த மண்ணாங்கட்டிலாம் வேணாம் புரியுதா,டெலிவரியை எனக்கு பார்க்க முடியாதா?
"கணவன் சொன்னதை கேட்டவள் அன்னைக்கு தான் என்னமோ சொன்னீங்க மூணு மாசம் நிம்மதியா இருப்பேன்னு"
ஏய் அது விளையாட்டுக்கு சொன்னேன் டி என்றவாறு திரும்பியவனுக்கு அங்கே சூட்கேஸ் இருப்பது தெரிந்து ஓஓஓ,நீ ரெடியா தான் இருக்கியா என்று பல்லை கடித்தான்.
ஒவ்வொரு புருஷனுக்கும் கிடைக்கிற அற்புதமான வாய்ப்புன்னு சொன்னீங்க இப்போ உங்களுக்கும் அது கிடைச்சிருக்கு.நான் இல்லாம நல்லா நிம்மதியா இருங்க என்றாள்.
"அடியேய்..."
ஒரு நிமிஷம் கூட நீ இல்லாம இந்த ரூம்ல என்னால் இருக்க முடியாது.சொல்றதை கேளு டி.நீ ஒன்னும் போக வேண்டாம்.நம்ப இங்கேயே டெலிவரி பாத்துக்கலாம் என்று மனைவியிடம் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது..
ஆஆஆஆ என்று கத்தியவன் கதவை திறக்க அங்கே கண்மணி தான் நின்று கொண்டிருந்தாள்.
என்ன டி என்கவும் நல்ல நேரம் முடிய போகுது.அதுக்குள்ள இங்க இருந்து கிளம்பணுமாம்.ஷமீய கூப்பிட்டு வரச் சொல்றாங்க.
மாமன் மகள் சொன்னதை கேட்டு இதெல்லாம் எவன் டி கண்டுபிடிச்சான்?அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை போடி என்றான்.
இந்த ஈரவெங்காய கதையை போய் உன் தாத்தனுங்க இருக்காங்களே அவங்க கிட்ட சொல்லு,என்கிட்ட சொல்லாத என்ற கண்மணி,ஷமீ மாமா வர சொல்றாங்க டி என்கவும்,இதோ 2 மினிட்ஸில் நான் வரேன் என்றவள் சூட்கேஸை எடுக்க,ஏய்...
நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ கேட்கவே மாட்டேங்குற,நீ இல்லாம நான் எப்படி டி இங்கு இருப்பேன் என்கவும்,யாரு நீ இருக்க மாட்ட?
சும்மா நடிக்காத என்று கண்மணி சொல்லவும்,அடியேய்,அடிச்சி பல்லை ஒடச்சிடுவேன் நீ போடி முதல்ல..என் பொண்டாட்டி கிட்ட பேச விடு டி என்றான்...
அந்த நேரம் எலே அப்பு என்று வீரையன் தாத்தா குரல் கொடுக்க,அப்புச்சி வேற என்று பல்லை கடித்தவன்,உன் இஷ்டத்திற்கு ஊருக்கு கிளம்பிட்டல்ல சரி நல்லபடியா போயிட்டு வா என்றவன்,சூட்கேஸோடு கீழே இறங்கி செல்ல,ஷமீராவும் கண்மணியும் சிரித்துக் கொண்டே வந்தார்கள்.
பின்னர் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து சோழனூருக்கு புறப்பட்டனர்.
கார் ஓட்டிக் கொண்டிருந்த பாபுவிற்கு பின்னாடி சீட்டில் இருக்கும் ஷமீயின் மேல் தான் அவ்வப்போது பார்வை இருந்தது.
இதோ பத்து மாதம் ஆகிவிட்டது இதுவரை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அவளும் அதன் பிறகு அவனிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆனால் தனது மாமன் மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்ட உடனே கோபம் பாதி குறைந்தது. இருந்தும் இப்பொழுது அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு தோணவில்லை. .
ஷமீராவின் அருகில் உட்கார்ந்திருந்த செழியனோ மனைவியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள அந்த கையின் அழுத்தமே அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்பதை அவளுக்கு உணர்த்தியது.
எவ்வளவு பொறுமையாக பேசினாலும் காரில் இருக்கும் பாபுவுக்கும் கண்மணிக்கும் இவர்கள் பேசுவது கேட்கும் என்பதால்,தனது கணவனின் வலது கையை பிடித்தவள் வயிற்று மேல் வைத்துக்கொள்ள அதில் திரும்பி பார்த்தவனிடம் கண்களால் இறஞ்சினாள்.
வீட்ல போய் உனக்கு இருக்கு டி என்று பல்லை கடித்துக் கொண்டு சொல்ல, அவன் உதட்டின் அசைவை வைத்து அவன் என்ன சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டவள்,பாவமாக அவனைப் பார்க்கவும் செழியனோ அவளிடமிருந்து கையை உருவி கொண்டு வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டான்..
கடவுளே இந்த மனுஷனை என்னதான் பண்றதுன்னு தெரியலையே??
என்னமோ அதிசயமா நான் மட்டும் தான் அம்மா வீட்டுக்கு பிரசவத்துக்கு போற போல இப்படி முறுக்கிட்டு உட்கார்ந்திருக்கிறாரே என தனக்குள்ள புலம்பிக் கொண்டாள்.
டெல்லி::
அங்கு என்ன நடக்குதுன்னு தெரியலையே?
அந்த மனுஷனுக்கு என்னையும் என் பிள்ளைகளை விட இரண்டாவது பொண்டாட்டி குடும்பத்தை தான் ரொம்ப பிடிக்கும்.
"இது எனக்கு நல்லாவே தெரியும்"
இந்த மகளுக்கு என்னென்ன சீர் செய்கிறார்னு தெரியவில்லையே என்று புலம்பு கொண்டே கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தார்.
தனது மகனை தூங்க வைத்த ஜூலி சாப்பிடுவதற்காக கிச்சனிற்கு வர அங்கே மானசா எதோ தானாக பேசிக் கொண்டிருப்பதை கேட்டவள்,என்னம்மா தானா பேசிட்டு இருக்கீங்க?
அதைக் கேட்டு என்னத்த டி சொல்லுவேன்,எல்லாம் நம்ம தலையெழுத்து.
அன்னைக்கு அந்த கிழவி உசுரு போய்ட கூடாதுன்னு என்பதை விட,அவளுக்கு நான் நல்லவளாக தெரிந்தால் தான் என்னை வாழ விடுவாள்னு, உங்கப்பனை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சம்மதித்தேன்.
இன்னைக்கு பாரு நம்ம அல்லோலப் பட்டுக்கிட்டு கிடக்கிறோம் என்க,அய்யோ அம்மா,நீங்கள் சொல்றது ஒண்ணுமே புரியலையே என்கும் மகளை பார்த்தவர் உனக்கு என்னதான் புரியுது..
இன்னைக்கு உங்க அப்பாவோட இரண்டாவது மகளுக்கு வளையல்காப்பு டி.குழந்தைக்கு உடம்பு முடியலைனு நீ போகல.மாப்பிள்ளை போயிருக்காரு அவர் வந்த பிறகு தான் எல்லாம் கேட்கணும்.
உனக்கு செஞ்ச அதே அளவுக்கு அங்கு செஞ்சாரா இல்லை எக்ஸ்ட்ரா செஞ்சிருக்காரானு என்கவும்,அதைக் கேட்ட ஜூலியோ தாயை முறைத்துப் பார்க்க,என்னை எதுக்கு டி முறைக்கிற, நான் ஒன்னும் கண்டவன் கிட்ட எல்லாம் கேட்கலையே??
உன்ன பெத்த அப்பன் கிட்ட தானே கேட்கிறேன்.என்னமோ பெருசா சொன்னாரு இருக்கிற சொத்தெல்லாம் பிள்ளைகளுக்கு சமமா பிரிச்சு கொடுப்பேன்னு..
நாள் போகுது ஒண்ணுத்துமே காணோமே என்ற புலம்பிக் கொண்டே மகளுக்கான டிபனை தட்டில் வைத்து கொடுத்தவர் இவ வேற போயிட்டாள்.
ரெண்டாவது பொண்டாட்டிய இந்த மனுஷன் விட மாட்டாரு.என்னை விட அந்த மனைவியை தான் அவருக்கு உசுரு.அப்போ திரும்ப இவர்கள் உறவு தொடருமோ?
அப்ப நம்ம வாழ்க்கை டெல்லியில் தான் முடிஞ்சிடுமா??
நம்ம பிள்ளைகளை அந்த மனுஷன் ஏமாத்திடுவிரோ என்று பைத்தியம் போல மனசுக்குள் பேசிக் கொண்ட மானசாவிற்கு திடீரென்று நெஞ்சு வலி வரவும் அப்படியே சுருண்டு கீழே விழுந்தார்.
ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த ஜூலிக்கு,பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு என்னாச்சு மா என்றவாறு கிச்சனிற்குள் வந்து பார்க்க அங்கே மானசா மயங்கி கிடப்பது தெரிந்தது.
அம்மா அம்மா என்று கத்தியவள் அவர் எழாததால் தனது நாத்தனாரை கூப்பிட்டு வர அதற்குள் பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள்.
பின்னர் அவர்கள் காரில் மானசாவை அழைத்துக் கொண்டு ருத்ரன் தீபன் வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு போய் அட்மிட் பண்ண,ட்ரீட்மென்ட் பண்ணிக் கொண்டிருக்கும் போதே மானசாவின் உயிர் பிரிந்தது.
ஜூலியோ தனது தாயை நினைத்து அழ,குழத்தையை தோளில் போட்டுக் தட்டிக் கொண்டிருந்த ரூபாவும் பக்கத்து வீட்டு பெண்மணியும் ஆறுதலாக தேற்றிக் கொண்டிருக்கும் போது,கதவை திறந்து வெளியே வந்த டாக்டர் அவங்க இறந்துட்டாங்க என்கவும் அம்மா என்று கத்தி கதறினாள்..
ஒரு நிமிடம் ரூபாவிற்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.
பின்னர் அவர்கள் வர வரைக்கும் தான் சமாளிக்க வேண்டும் என்ற உண்மையை புரிந்து கொண்டவள், தனது போனிலிருந்து அவளது அண்ணனுக்கு கால் பண்ணினாள்.
ஏர்போர்ட்டுக்கு வந்து கொண்டிருந்த ருத்ரன் கால் வரும் சத்தம் கேட்டு போனை பார்த்து விட்டு அட்டென் பண்ணியவன் சொல்லு டா?
நாங்கள் கிளம்பிட்டோம் என்க,அண்ணா என்றவள் அழுது கொண்டே மானசா இறந்து போன விஷயத்தை சொல்ல என்ன என்று அதிர்ந்து போனவன், கொஞ்ச நேரம் சமாளி டா நாங்க வந்து விடுகிறோம் என்றவாறு போனை வைத்தவன் தீபனிடம் விஷயத்தை சொல்லிவிட்டு மகிக்கும் ப்ளைட்டில் டிக்கெட் புக் பண்ண சொல்லியவன் உடனே தனது மாமனாருக்கு கால் பண்ணினான்...
காரில் வந்து கொண்டிருந்த மகிக்கு கால் வரும் சத்தம் கேட்கவும்,கையில் இருந்த போனில் பெயரை பார்த்தவர் பெரிய மாப்பிள்ளை தான் என்றவாறு அட்டென்ட் பண்ணியவர் சொல்லுங்க மாப்பிள்ளை,பின்னாடி தானே வரீங்க என்றார்.
அது வந்துங்க மாமா என்றவன் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் ருத்ரன் தடுமாற,சொல்லுங்க மாப்பிள்ளை என்ன ஆச்சு என்று மகி கேட்க,உடனே நீங்க எங்க கூட டெல்லிக்கு வரணும்.
"உங்களுக்கும் டிக்கெட் போட்டுட்டேன் மாமா"
அத்தைக்கு உடம்பு சரி இல்லையாம் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கிறார்கள் என்று விஷயத்தை மாற்றி சொன்னான்.