• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
477
வனிச்சூர்:

நல்ல நேரத்தில் சொந்த பந்தங்கள் சூழ பந்தல்காலும் நட்டதும் பந்தல் போடுவதற்கான ஆட்களும் அவரவர் வேலையை தொடங்கினார்கள்.இன்று முதலாவதாக தாய்மாமன் நலங்கு என்று சொல்லி இருந்ததால், வீரையன் தாத்தா குடும்பமும் பரமு வீடும் தான் தம்புசாமி தாத்தா வீட்டிற்கு தாய் மாமன் வீடு என்பதால் இரண்டு குடும்பமும் சேர்ந்து மூன்று கிடாக்களோடு நலங்குக்கு ஊர்வலமாக வந்தார்கள்..

வந்தவர்களை கல்யாண வீட்டினர் வரவேற்து உள்ளே அழைத்தபோக ஒரு பக்கம் மதிய கிடா விருந்து ஊருக்கே தயாரானது..

பின்னர் கண்மணியை கிழக்குப் பார்க்க உட்கார வைத்துவிட்டு,நலுங்கை வீராயி பாட்டி ஆரம்பித்து வைக்க மற்றவர்களும் வரிசையாக ஒற்றைப்படையில் வந்து எண்ணெய் தொட்டு அவள் தலையில் வைத்தவர்கள்,பூக்களை தூவி ஆசீர்வாதம் பண்ணியதும் அவளை மலரோடு குளிக்க அனுப்பி வைத்தார்கள்.

அரை மணி நேரத்தில் குளித்து முடித்தவள் தாய் மாமன் வீட்டில் எடுத்து வந்த புடவையை கட்டிக்கொண்டு வர அவளுக்கு மாலையை போட்ட வீரையன் தாத்தா பின்னர் செல்லதுரை அவர் பரம மூவரும் மாமன் சீராக சேர்ந்து வாங்கிய செயினை கண்மணிக்கு போட்டு விட்டனர்.

பின்னர் மதிய உணவும் தயாராக சாமிக்கு படைத்துவிட்டு உணவை பரிமாறினர்.

அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் சொந்த பந்தங்கள் சேர்ந்து நலுங்கு வைக்க அதோ இதோ என்று நான்கு நாட்கள் ஓடியது.

மறுநாள் பொழுதும் வந்தது.அன்று பொண்ணழைப்பு என்பதால் மாப்பிள்ளை வீட்டினர் மதிய உணவுக்கெல்லாம் இங்கு வந்து விடுவார்கள் என்று சொல்லியிருக்க அதற்கான விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

நேரமும் கடந்து செல்ல மதியம் 12:30 மணிக்கு எல்லாம் சோழனூரில் இருந்து பாபுவின் சித்தப்பா முறை உள்ளவர் அவர் மனைவி ஊர்க்காரர்கள் சிலரோடு பொண்ணழைப்பிற்காக பெரிய பஸ்ஸில் வந்து சேர்ந்தனர்.

வனிச்சூரின் சம்பரதாயபடி பொண்ணுக்கு பரிசம் போட வேண்டும் என்பதால் அதற்காக அவர்கள் எடுத்து வந்த பொருட்களை வைத்து ஹிந்து முறைப்படி சடங்குகள் நடந்தது.

நல்ல நேரம் மதியம் 3.30 மணிக்கு முடிகிறது அந்த நேரத்திற்குள் பெண்ணோடு கிளம்பளாமென மாப்பிள்ளை வீட்டினரிடம் சொல்ல அவர்களோ உங்கள் விருப்பமென்றனர்.

பொண்ணழைப்பிற்காக எடுத்து வந்த புடவையை ப்யூட்டிஷியனும் கண்மணிக்கு கட்டி விட்டதும் அவளை பந்தலுக்கு அழைத்து வந்தார்கள்.

பின்னர் பாபுவின் சித்தியும் அவளுக்கு மாலை போட்டு விட்டு ஆசீர்வாதம் பண்ணியதும் சரிங்க கிளம்பலாம் என்க, இவ்வளவு நேரம் தனக்குள் பொத்தி வைத்த அழுகையை தனது வீட்டினரை கட்டிக்கொண்டு கத்தி கதறி வெளியேற்றினாள்.

ஒரு வழியாக அவளை சமாதானம் படுத்தி இவர்களும் சொந்த பந்தங்களுக்காக இன்னொரு பஸ் ஏற்பாடு பண்ணியிருந்ததால் இரண்டு பஸ்ஸில் ஏறி சோழனூரை நோக்கி புறப்பட்டனர்.

ஷமீராவை காரில் அழைத்து வருவதாக செழியனும் சொல்லியதால் வீட்டு சாவியை அவனிடம் கொடுத்து சென்றனர்.

இரண்டு பொழுது யாரும் இல்லாத வீட்டை பாதுக்காக்க தெரிந்த இருவரை வர வைத்திருந்தவன் அவர்கள் செலவுக்கு பணத்தை கொடுக்கவும், வேண்டாம் தம்பியென்க,இருக்கட்டும் ணா என்றவன் ஆளுக்கு 200 ரூபாய் தனித்தனியாக இருவருக்கும் கொடுத்துவிட்டு மனைவியோடு தங்களது வீட்டிற்கு வந்தான்.

ஓய்...

கிளம்பலாமா டி??

எல்லா எடுத்து வச்சிட்ட தானே??

எதற்கும் ஒரு முறை நல்லா செக் பண்ணிக்க.உன் ஊரு பட்டிக்காடு அங்க ஒண்ணுமே கிடைக்காது என்று மனைவி வம்பு இழுப்பதற்காக சொல்லிக் கொண்டே அங்கிருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.

மாடிப்படியில் ஏறியவளோ இதைக் கேட்டு திரும்பி கணவனை பார்த்து முறைத்தவள் ஆமா நான் பட்டிக்காட்டில் இருந்தேன்.ஐயா பாரின்ல வளர்ந்தார் பாருங்களேன்..

கூகுள் மேப்பில் இல்லாத நம்பர் ஒன் பட்டிக்காடு உங்கள் ஊரு.அவசரத்துக்கு இந்த ஊர்ல இருந்து வெளியில போக முடியுதா?

வண்டியில் வேகமாக போனால் தான் அரைமணி நேரத்தில் போக முடியும்.இல்லைனா உயிர் ஊஞ்சலாடும்,ஆனா என் ஊரில் நடந்து போற தூரம் தான் பஸ் ஸ்டாண்ட்.

அதே தூரம் தான் ஹாஸ்பிடல் மார்க்கெட்னு இன்னும் அத்தியாவசிய தேவைகள் எல்லாம் பத்து நிமிஷ தூரத்தில் இருப்பது பட்டிக்காடா தெரியுது,இந்த கிராமத்து காட்டாணுக்கு என்றவாறு படியில் ஏறி மேலே போனாள்.

மனைவி சொன்னதைக் கேட்டவன் எதே காட்டாணாஆஆ இரு டி வந்து உனக்கு கச்சேரி வச்சுக்கிறேன் என்றவாறு கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு படியில் ஏறி மேல வந்தவன் கதவை திறக்க அது உள் பக்கமாக லாக் பண்ணியிருப்பது தெரிந்தது.

அடிங்கொய்யால முன்னெச்சரிக்கையா டி என்று கதவை தட்டவும் 2 நிமிஷம் இருங்க வந்துடுறேன் என்று அங்கிருந்து குரல் கொடுத்தாள்.

முடியாது டி இப்ப நான் உள்ளே வந்து தான் ஆக வேண்டும் என்று செழியன் பிடிவாதமாக சொல்ல,உங்க அவசரத்திற்கு எல்லாம் கதவை திறக்க முடியாது.

நீங்க ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணித்தான் ஆகணும் என்றவள் கட்டியிருந்த புடவையை அவிழ்த்து அங்கிருந்து கொடியில் போட்டு விட்டு இலகுவான சுடிதார் மாற்றி விட்டு வந்து கதவை திறந்தாள்.

மனைவியை பார்த்து முறைத்தவன் யாரை பார்த்து டி காட்டாண்ணு சொல்ற என்றவாறு மனைவியின் கன்னத்தை பிடித்து கேட்க,உங்களை தான் சொன்னேன் அதிலென்ன சந்தேகமென்றவாறு கணவனின் கையை தட்டி விட்டவள் அங்கிருந்த டிராலி பேகை இழுக்க போக..

எட்டி மனைவியின் கையை பிடித்து இழுத்து நெஞ்சோடு அணைத்தவன் இந்த காட்டன் மேல தாண்டி மயங்கி பித்து பிடித்து போய் நிற்கிற..

"உன் ஆயுசுக்கும் தீராத மயக்கம் டி"

அதற்கு சாட்சியாக தான் உன் கழுத்துலையும் வயிற்றிலும் எனக்கு சொந்தமானது இருக்கே என்றவரே மனைவியின் கழுத்தில் முத்தமிட,நோ என்றவாறு விலக முயன்றாள்.

அவளின் முயற்சி எதனால் என்பது புரிந்து,அவள் காதோடு மீசை முடிகள் குத்துமாறு முகத்தை அசைக்க அய்யோ இளா போதும்... இது போங்கு என்று சிணுங்கினாள்.

சரி சரி கிளம்பலாமா இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் உன் அண்ணன் கரடி பயல் போன் பண்ணுவான் என்கும் போதே செழியன் நம்பருக்கு கால் வரும் சத்தம் கேட்க நான் தான் சொன்னேன் இல்லையா..

எப்படி தான் இந்த கரடி பயலுக்கு வேர்க்குதுன்னு தெரியல என்றவாறு பேண்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்க்க அதில் வெற்றியின் நம்பர் வந்தது..

அட்டென் பண்ணியவன் அந்த பக்கம் அவன் சொன்னதை கேட்டு சரி சரி வா வா என்க,எப்படியும் ஏழு மணிக்கெல்லாம் திருச்சிக்கு வந்துவிடுவேன் என்கவும்,நான் ஏர்போர்ட்டுக்கு வந்துடுறேன் டா என்று சொல்லி போனை வைத்தான்.

பின்னர் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே நிற்கும் இனோவா காரில் ஏறி உட்கார்ந்தவன் போகலாமா என்று பக்கத்தில் இருக்கும் மனைவியை கேட்க,எஸ் டிரைவர் என்றவாறு ஷமீரா சிரிக்க,கொஞ்சம் நஞ்சம் கொழுப்பு இல்லை டி.டெலிவரி ஆகட்டும் பிறகு இருக்கு டி உனக்கு என்கவும் போயா போயா என்றாள்.

சோழனூர்:

சொந்த பந்தங்கள் வெளி ஊரிலிருந்து வந்து கொண்டிருக்க,எஸ்தரின் வருகைக்காக தான் பாபு வீட்டினர் ஆவலாக வழியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மகி இரண்டு நாட்களுக்கு முன்பே வந்துவிட எஸ்தர் ஏன் இன்னும் வரவில்லை என்று தெரிந்தவர்கள் கேட்டனர்.

யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக எஸ்தர் டெல்லியில் வேலை பார்பதை பற்றி சிலரிடம் சொல்லியிருக்க,அதுவும் விஷம் போல எல்லாரிடமும் பரவியது.

அதிகாலையிலே பொண்ணழைப்பிற்காக சிலரை பஸ்ஸில் அனுப்பி வைத்தவர் அடிக்கடி அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை விசாரிக்க தவறவில்லை.

காலை போய் மதியமும் வர ஒரு பக்கம் சொந்தங்களுக்கு மதிய பந்தி நடந்து கொண்டிருக்கும் போது கார் ஒன்று பந்தலுக்கு சற்று தள்ளி வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய எஸ்தர் கம்பீர தோரணையோடு வலது பக்க தோளில் ஹேண்ட் பேகும்,இன்னொரு கையில் டிராலியோடு வருவதை பார்த்த மகி அதிர்ந்து போனார்.

அவரை கண்டு கொள்ளாமல் உள்ளே போனவர் ராணியை தவிர எல்லாரிடமும் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு அவர் வாழ்ந்த வீட்டின் சாவி எங்கே ணா என்க,ராணியும் வீட்டு சாவியை எடுத்து வந்து கொடுத்தார்.

அண்ணா...

ஆயிரம் இருந்தாலும் என் பொண்ணு மருமகன் வந்து போவதற்கு வீடு வேண்டும்.அது நம் மாமனார் உழைப்பில் கட்டியதால் சட்டப்படி எனது மகளுக்கு உரிமையானது.

அதனால் நான் எனது வீட்டில் வாழ போகிறேன் எந்த உரிமையும் கொண்டாடி கொண்டு என் கிட்ட வரக்கூடாது என்றவர்,தனது வீட்டை நோக்கி போக அந்தோணிக்கும் சாரதா பாட்டிக்கும் இப்போது தான் நிம்மதியாக இருந்தது.

மனைவி வீட்டுக்கு வந்துட்டாளே அது போதும் என்ற சந்தோஷமே மகிக்கு பெரிதாக இருந்தது...

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு,தான் திருமணம் செய்துட்டு வந்த வீட்டிற்கு கால் எடுத்து வைத்த எஸ்ருக்கு கடந்து சென்ற நினைவுகள் வர,தலையை உலுக்கி அதையெல்லாம் உதறித் தள்ளியவர் அறைக்குள் போய் தனது லக்கேஜை வைத்துவிட்டு ருத்ரன் தீபனுக்கு ஊருக்கு வந்து சேர்ந்து விட்டதாக கால் பண்ணி சொன்னார்.

பின்னர் தனது பேகில் இருந்த லேப்டாப்பை எடுத்துக்கொண்டு ஹாலில் இருக்கும் சோபாவில் உட்கார்ந்தவர் விட்ட வேலையை தொடங்கலானார்.

நேரமும் கடந்து செல்ல கதவு திறக்கும் சத்தம் கேட்டது ..யார் வருகிறார் என்று அவரின் உள்ளுணர்வு உணர்த்தினாலும் சிறிதும் கண்டு கொள்ளவில்லை..

வீட்டிற்குள் வந்த மகி அங்கிருந்த எஸ்தரை பார்த்து எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றவர்,ஷமீராவுக்காக வாங்கி வைத்திருந்த நகைகள் இருந்த பெட்டியை எடுத்துட்டு வந்து எஸ்தரின் பக்கத்தில் வைத்தவர்,இது நம்ம பொண்ணுக்கு செய்ய வேண்டிய சீருக்காக வாங்கியிருக்கேன்.

இன்னும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் தான் வாங்கணும்.அவங்க வீடு அரண்மனை போல இருக்கு. அதனால காருக்கும் அதுக்கும் சேர்த்து பணமாக கொடுத்து விடலாம் என்று எனக்கு தோணுது.

நீ என்ன சொல்கிறாய்?

லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவர் பெத்த அப்பாவாக உங்க கடமையை நீங்க செய்றீங்க. இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கின்றது என்றவர் ,இவ்வளவு நேரம் வரைந்த டிசைனை ஹிரோஷி நம்பருக்கு அனுப்பிவிட்டு லேப்டாப்பை மூடி வைத்தார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
477
வனிச்சூரில் இருந்து பொண்ணை அழைத்துக் கொண்டு கிளம்பியவர்கள் சோழனூருக்கு வந்து சேர இரவு 10 மணி ஆனது.

ஏர்போர்ட்டுக்கு வந்த செழியன் வெற்றியை அழைத்துக் கொண்டு சோழனூருக்கு செல்லும் வழியில் காரை திருப்ப,டேய் நான் ட்ரைவிங் பண்றேன் என்று டிரைவிங் சீட்டில் உட்கார்ந்தான். செழியனும் வழியை சொல்ல ஷமீரா வீட்டின் முன்பு போய் வெற்றி காரை நிறுத்தவும் வெளியே வந்த எஸ்தர் இரும்பு கதவை திறந்து விட கார் உள்ளே ஓடிப் போய் நின்றது.

தங்கச்சியை எழுப்புடா என்று சொல்லியவாறு வெற்றி கீழே இறங்க செழியனும் முன் பக்க கதவை திறந்து இறங்கியவன் பின்னாடி தூங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பினான். ஷமீ என்ற குரல் கேட்டு அம்மா என்றவாறு திரும்பியவள் அங்கிருந்த எஸ்தரை பார்த்து எப்ப மா வந்த என்றவாறு தாயின் கைய பிடித்துக் கொள்ள,நேரம் ஆயிடுச்சு. காலையில பேசிக்கலாம் என்று வீட்டிற்குள் போனார்.

வெற்றி உனக்கும் மாப்பிள்ளைக்கும் மேல இருக்கிற ரூம்களை சுத்தம் பண்ணிருக்கு என்கவும், வெற்றியும் செழியனும் ஒரே ரூமில் தங்கிக் கொள்கிறோம் என்றவாறு படியில் ஏறி போக,ஷமீராவோ கீழே இருக்கும் அவள் அறைக் கதைவை திறந்து உள்ளே போனாள்.

ரூமிலிருந்த பொருட்கள் அன்று எப்படி வைத்துவிட்டு போனாளோ இன்றும் அப்படியே இருந்தது.

மகளுக்காக காய்ச்சி வைத்திருந்த பாதாம் பாலை மிதமான சூட்டில் எடுத்துட்டு வந்தவர்,இந்தா ஷமீ குடிச்சிட்டு படுடா என்க,
குடு மா என்றபடி வாங்கி குடித்தவள் என்னம்மா உன் புருஷன் வந்திருக்கிறாரா?

ஷமி என்று எஸ்தரோ மகளை முறைக்க, ஆயிரம் தான் இருந்தாலும் உன் புருஷன் இல்லைனு ஆகிடுமா மா சொல்லு என்று சிரிக்கவும்,இப்ப எதுக்கு தேவையில்லாத எல்லாம் பேசிக்கிட்டு? நீ படுத்து ரெஸ்ட் எடு என்றவாறு அங்கிருந்து சென்றார்.

பொண்ணு வீட்டிலிருந்து வந்தவர்கள் இரண்டாவது மாடியில் தங்கி விட்டனர். முதல் தளத்தில் மாப்பிள்ளையின் சொந்தக்காரர்கள் சிலரும் பொண்ணும் தங்க வைக்கப் பட்டிருக்க,நள்ளிரவு ஒரு மணி இருக்கும் அப்பொழுது கண்மணியின் நம்பருக்கு கால் வந்தது.

புது இடம் என்பதாலும் காதலனோடு கல்யாணம் ஆகப்போகிறதே என்பதையெல்லாம் நினைத்து அவளும் தூங்காமல் இருக்க,வைப்ரேஷனில் இருந்த போனை எடுத்து பார்க்கவும் அதில் பாபுவின் நம்பர் வர,அட்டென்ட் பண்ணியவள் ஹலோ என்கவும்,கதவை திறந்து வெளியில வாடி என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

அய்யய்யோ யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்கன்னு தெரியலையே என்று புலம்பிக்கொண்டு எழ,அங்கே மலரும் கவிதாவும் கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க வானதி புவனா ரஞ்சனி பத்மாலாம் தரையில் படுத்திருந்தனர்.

எல்லாரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை புரிந்து கொண்டவள் பூனை நடை போட்டு பொறுமையாக கதவை திறந்து வெளியே போக,அங்கே வாசலில் நின்றவனோ தன்னவளை பார்த்து எட்டி இழுத்து வாயை பொத்தியவன் அப்படியே அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்தான்.

சத்தம் போடாதடி யாராவது எந்திரிச்சு வந்தாக்கா நம்ம மானம் போயிடும் என்று பொறுமையாக அவள் காதில் சொல்லிக்கொண்டு கையை எடுக்க கண்மணியோ பதறிப் போய் இரண்டு அடி தள்ளி நின்றாள்..

என்னவாம் தற்காப்பு கலையோ என்றவாறு அவளை நோக்கி வர அவளும் பின்னாடி நகர்த்து சென்றவள் அங்கிருந்து சுவற்றின் கட்டையில் இடித்து நிற்க,இதுக்கப்புறம் நீ எங்கேயும் போக முடியாது டி என்று அவளின் இரண்டு பக்கமும் கைகளை ஊன்றிக் கொண்டு சொல்ல, கண்மணியோ வெட்கத்தில் கீழே குனிந்து கொண்டாள்.

இன்னும் ஏழு எட்டு மணி நேரத்துல மிசஸ் பாபு ஆகிடுவீங்க சந்தோஷம் தானே என்றவன்,தன்னவளை இழுத்து அணைத்து அவள் உதட்டில் புதைந்தவன் நீண்ட முத்தத்தை கொடுத்தும் பெற்றுக் கொண்டவன் மீதி நாளைக்கு பாத்துக்கலாம்.

இப்போதைக்கு இது போதும் போ என்று சொல்லவும் விட்டால் போதும் டா சாமி என்று வேகமாக படியில் இறங்கி வந்தவள் ரூமிற்குள் போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

"விடியலும் தொடங்கியது"

எல்லாரும் குளித்து தயாராகியவர்கள் அங்கு இருக்கும் ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்றனர்.முதல் திருமணம் இவர்களோடு என்பதால் அதுவும் நல்லபடியாக முடிய பின்னர் ரிசப்ஷன் ஹாலுக்கு சென்றனர்.

எங்கே ஷமீயும் மாப்பிள்ளையும் காணும் என்று எஸ்தரிடம் சொந்தங்கள் எல்லாம் விசாரிக்க,நைட் லேட்டாக தான் வந்தாங்க.இவ்வளவு நேரம் வந்துட்டு இருப்பாங்க என்கும் போது ஷமீராவும் செழியனும் மண்டபத்திற்குள் வர சொந்த பந்தங்கள் எல்லாரும் அவளிடம் நலம் விசாரித்தனர்.

மகியின் பார்வையோ தனது சின்ன மகளின் மேல் தான் இருந்தது.

எப்படியாவது அவளிடம் பேசி நல்லாருக்கியான ஒரு வார்த்தையாவது விசாரிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க,தந்தை ஒருவர் இருக்கும் திசை பக்கமே அவள் திரும்பி கூட பார்க்கவில்லை.

ரிசப்ஷனும் நல்லபடியாக முடிய, மாப்பிள்ளை வீட்டாரில் சில நெருங்கிய சொந்தங்களோடு ஞாயிற்றுக்கிழமை நடக்கும் கல்யாணத்திற்கு கலந்து கொள்வதற்காக வனிச்சூரை நோக்கி புறப்பட்டனர்.

முன்பே மாப்பிள்ளை வீட்டில் சட்டப்படி கல்யாணமும் ரிசப்ஷனும் அது முடிந்து ஞாயிற்றுக்கிழமை ஹிந்து முறைப்படி கோயிலில் தாலி கட்டுவதாக பேசி முடிவு எடுத்திருந்தனர்.

பொண்ணு மாப்பிள்ளை இருவரும் தனி காரில் வந்தார்கள்.

பின்னர் ஒரு வழியாக வனிச்சூருக்கு வந்து சேர விடியற்காலை ஆனது..

அன்றைய பொழுதும் இவ்வளவு தூரம் பயணம் பண்ணிட்டு வந்த அசதியால் ஓய்வெடுப்பதிலே கழிய மறுநாள் காலையில் எல்லாரும் மலையம்மன் கோயில் கூடினர்.

அங்கே ஐயரும் திருமணம் பண்ணி வைக்க தயாராக இருக்க பொண்ணு மாப்பிள்ளை இருவரையும் அங்கு அழைத்து வந்தனர்.

ஒரு பக்கம் மதிய சாப்பாட்டுக்காக விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.

தாலியை கொண்டு போயிட்டு எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க என்று ஐயர் சொல்லவும், வானதியும் அந்த தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு போய் சொந்த பந்தங்கள் எல்லாரிடம் காட்டிட்டு வந்து கொடுக்க தம்பி எடுத்துக் கட்டுங்கோ என்று மந்திரம் ஓதினார்.

அதே போல் தேங்காயின் மேலிருந்த தாலியை எடுத்து தனது காதலியின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு மனைவியாக்கிக் கொள்ள,சொந்த பந்தங்களும் அர்ச்சனை தூவி ஆசீர்வாதம் பண்ணினார்கள்.

அங்கே கோயிலில் ஒரு பக்கம் மேடை போட்டிருப்பதால் பொண்ணு மாப்பிள்ளைக்கு சீர் செய்வதற்காக உறவினர்கள் எல்லாம் வர அவர்களை உபசரித்து வழியனுப்பும் வேலையை மற்றவர்கள் பார்த்துக் கொண்டனர்.

எல்லாம் நல்லபடியாக முடிந்து வீட்டிற்கு வரவே மதியம் நான்கு மணி ஆனது.பின்னர் சம்பிரதாயபடி விளக்கேற்ற சொல்லி சாமி கும்பிட்டவர்கள் போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க என்றனர்.

மறுநாளே பாபுவின் வீட்டார் புது பொண்ணை அழைத்துக் கொண்டு சோழனூருக்கு போவதாக முடிவு பண்ணியிருந்தனர்..

அங்கும் இங்கும் அலைஞ்சதால் கால்கள் இரண்டும் வலி எடுக்க தூக்கம் வராமல் புரண்டு புரண்டு ஷமீரா படுப்பதை பார்த்தவன் என்னடி பண்ணுது என்றவாறு எழ,கால் ரொம்ப வலிக்குது என்றாள்.

பின்னர் மனைவியின் கால்களை பிடித்து விட்டவன் இப்போது எப்படி இருக்கு டி என்க கொஞ்சம் பரவாயில்லை.இன்னும் கொஞ்சம் அமுக்கி விடுங்க என்று ஷமீரா சொல்ல...

எதேஏஏ..

போனா போகட்டும்னு பண்ணினால் வருஷம் முழுவதும் உனக்கு கால் பிடித்து விடும் வேலையை கொடுத்துடுவ போல என்று செழியன் முறைக்க,புருஷனா இது கூட செய்யலன்னாக்க அப்புறம் என்ன தான் அர்த்தம் என்று ஷமீராவும் முறைக்க, சொல்லுவ டி சொல்லுவ என்றவன் முணவிக் கொண்டே கால்களை அமுக்கி விட்டான்.

மறுநாள் காலையும் வர சொந்தபந்தத்திடம் சொல்லிக் கொண்டு கணவனோடு வாழ்க்கையை தொடங்குவதற்காக கண்மணியும் புறப்பட்டு சென்றாள்.

நாட்களும் அதன் போக்கில் நகர்ந்து கொண்டே இருந்தது..

செழியனின் பாடு தான் ஷமீராவிடம் சிக்கிக் கொண்டு பெரும் பாடாக இருந்தது.அவ்வப்போது மூடு மாறும் போதெல்லாம் அவனிடம் கத்தி தீர்க்கவும் கர்ப்பமா இருக்கும் நேரத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று டாக்டர் காஞ்சனா சொல்லி இருந்ததால் வேறு வழி என்று அவனும் கேட்டுக் கொண்டிருந்தான்.

திடீரென்று நைட் இரண்டு மணிக்கு எழுந்திருப்பவள் எனக்கு பசிக்குது சாப்பிடணும் அதுவும் சூடாக தான் வேண்டும் என்க,அதற்காகவே சின்னதாக அடுப்பு சமையல் பாத்திரங்கள் சமைக்க பொருட்கள் எல்லாம் தனது ரூமில் வாங்கிட்டு வந்து வைத்திருந்தான். ..

ஒன்பதாவது மாதமும் ஆரம்பமாக அமாவாசையிலிருந்து நாட்கள் கணக்கு பண்ணி தான் வளையல் போடும் விழா வைக்க வேண்டும் என்பதால் அதற்கான நாளை செல்லத்துரை பார்த்துக் கொண்டிருக்க,புதன்கிழமை நாள் நல்லாருக்கு வானதி என்றவர் அதேபோல் மகிக்கும் எஸ்தருக்கும் போன் பண்ணி விஷயத்தை சொல்ல அவர்களும் சரி என்றனர்

தங்கையின் வீட்டுக்கு வந்த அந்தோணி ஷமீராவின் வளைகாப்புக்கு என்ன பண்ணலாம் என்று கேட்க,சாப்பாடு எல்லாம் இங்கிருந்து சமைத்து எடுத்துப் போனால் கெட்டுப் போயிடுமே ணா.

ஆமா டா என்றவர் செல்லதுரைக்கு கால் பண்ணி சாப்பாடு கதையை கேட்க, சமையல்காரர்களை வைத்து இங்கே சமைத்துக் கொள்வதாகவும் அதற்காக பணத்தை நாங்கள் கொடுத்து விடுறோமென மகி சொல்லியதாக அவர் சொல்ல,அப்படியா என்று ஆச்சரியப்பட்டவர் இதை தனது தங்கையிடம் சொன்னார்.

இந்த அளவுக்கு உன் மனைவியோட அண்ணனுக்கு அறிவு இருக்காணா என்று எஸ்தர் கேட்கவும்,அதைத்தான் என்னாலையும் நம்ப முடியல என்று சிரித்து விட்டார்.

மறுநாள் காலையில் ஷமீராவிற்கு வளைகாப்பு என்பதால் இரவு இரண்டு மணிக்கு எல்லாம் சோழனூரில் இருந்து நெருங்கிய சொந்தங்களோடு மாப்பிள்ளை வீட்டிற்கு புறப்பட்டார்கள். .

திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு பிறகு தனது ஊருக்கு போக போகிறோம் என்பதை நினைக்க கண்மணிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

மனைவியின் முகத்தில் இருக்கும் பூரிப்பை பார்த்தவன் என்ன டி ரொம்ப குஷியா இருக்க போல?

"ஆமா.."

அப்பா அம்மா எல்லாரையும் பார்க்க போறேனே என்கவும் அப்ப என் கூட உனக்கு இருக்கிறது கசக்குதோ என்று முறைத்துக் கொண்டே கேட்க,அட, கூறுகெட்ட மனுஷனா இருப்பீங்களா??

இத்தனை வருஷம் அவங்க கூடயே இருந்து வாழ்ந்து வளர்ந்துட்டு ஒரு மாசம் பிரிஞ்சு இருக்குறது எப்படி இருக்குன்னு எனக்கு தான் தெரியும் என்று கவலையோடு சொல்லவும் மனைவியை கிண்டல் பண்ணதற்காக தான் அப்படி கேட்டான்..

இப்படி அழுவாள் என்பதை எதிர்பார்க்காதவன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியை இழுத்து தனது தோளில் சாய்த்தவன் சாரி டி சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் என்று ஒரு வழியாக சமாதானப்படுத்தி பயணத்தை தொடர்ந்தான்..

வீழ்ந்தேனடி
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top