Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 467
- Thread Author
- #1
டெல்லி:
எங்கே சம்பந்தி வந்ததிலிருந்து பார்க்கிறேன் ஷமீயும் மாப்பிள்ளையையும் ஆளையே காணுமென்றார்.
மருமகள் மாசமா இருக்குங்க அதனால் தான் கூப்பிட்டு வரலையென்று செல்லதுரை சொல்லவும்,அப்படியா என்று சந்தோஷப்பட்டவர் மாப்பிள்ளையோட நம்பரை கொஞ்சம் தாங்கங்கள் என்று பணிவாக கேட்கவும்,அதுக்கு என்னங்க,இதே சொல்லுறேன் என்று தனது மருமகளின் நம்பரை சொன்னார்.
உடனே அந்த நம்பருக்கு மகி கால் பண்ண,மலரோடு பேசிக் கொண்டிருந்த ஷமீராவோ புது நம்பராக இருக்கவும் அட்டென்ட் பண்ணவில்லை.இரண்டு மூன்று முறை கால் பண்ணவும் எடுக்காமல் போக,மாப்பிள்ளை எடுக்க மாட்டேங்கறார் என்கவும்,அது உங்க பொண்ணோட நம்பர் தான் என்று செல்லதுரை சிரித்துக்கொண்டே சொன்னார்.
அப்படிங்களா என்று ஆச்சரியப்பட, பெத்த உனக்கு உன் பொண்ணோட நம்பர் தெரியலையே நீ எல்லாம் ஒரு அப்பா என்று மனசாட்சியோ மகியை கேள்வி கேட்டது.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் ஆண்கள் போய் படுத்துவிட,பெண்களோ மறுநாள் கொடுக்க வேண்டிய வளையல் மஞ்சள் குங்குமம் அடங்கிய கிப்ட் பாக்ஸை ஆளுக்கு ஒரு வேலையாக பேக் பண்ணி கொண்டிருக்கு,ஜூலியிடம் சொல்லி விட்டு எஸ்தரும் தீபன் வீட்டிற்கு வந்துவிட்டார்.
ஒரு வார்த்தையாவது எஸ்தரிடம் பேசிடணுமென நினைத்துக் கொண்டிருந்த மகி திரும்பி மானசாவை பார்க்க அவர் தூங்கி விட்டது தெரிந்தது.
பொறுமையாக கதவை திறந்து வெளியே வந்து பார்க்க இரவு விளக்குகள் மட்டும் ஹாலில் எரிந்து கொண்டிருந்தது.
மற்ற மூன்று ரூம் கதவுகளும் சாத்திருப்பதை பார்த்தவர் யார் எந்த ரூமில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் எப்படி தட்டுவது என்று யோசித்து விட்டு பின்னர் ரூமிற்குள் படுத்துவிட்டார்.
விடியலும் தொடங்க,பெண்கள் முதலில் எழுந்து குளித்து தயாராகி விட,வீட்டில் பூஜை பண்ண வேண்டும் என்று வீராயி பாட்டி சொல்ல,இங்கு பூஜை ரூம் இல்லையே பாட்டி என்று ரூபா சொல்லவும்,அப்பொழுது எஸ்தரோ கீழ விநாயகர் கோவில் இருக்குங்கமா என்றார்.
அது போதும் தாயி என்றவர் வளையல் மற்றும் பூஜை பண்ண வேண்டிய பொருட்களோடு வானதி புவனாவுடன் அப்பார்ட்மெண்டின் தரை தளத்திலிருக்கும் விநாயகர் கோயிலுக்கு செல்ல அந்த நேரம் ஐயரும் அங்கு காலை நேர பூஜை செய்து கொண்டிருந்தார்.
பூஜை முடித்து வந்தவரிடம் தட்டுகளை கொடுத்து அர்ச்சனை பண்ணி தருமாறு சொல்ல,அவரும் அர்ச்சனை பண்ணி சிறிது நிமிடத்திலே கொடுத்தார்.
பின்னர் அதை எடுத்துக் கொண்டு மேலே வர மற்றவர்கள் எல்லாம் தயாராகியதும்,அந்த வில்லாவுக்கு சொந்தமான சிறிய ஹாலில் பங்க்ஷனுக்கான அரேஞ்மெண்ட் நடந்திருக்கவும் அங்கு வந்தனர்.
பின்னர் நல்ல நேரத்தில் ருத்ரன் ஜூலியை அங்கே அலங்கரிக்கப்பட்ட சேரில் உட்கார வைத்த வீராயி பாட்டியும் சுமதி பாட்டியும் அவர்கள் குலதெய்வத்தை வேண்டி விட்டு இருவரும் ஆளுக்கொரு கையில் வளையல் போட்டுவிட்டு அங்கிருந்த ஏழு வகை சாதத்தில் கொஞ்சம் கொஞ்சம் அள்ளி இருவருக்கும் ஊட்டிவிட்டவர்கள் பின்னர் பூக்கள் மஞ்சள் கலந்த அரிசியை தூவி ஆசீர்வாதம் பண்ணினார்கள்.
அப்பார்ட்மெண்டில் இருந்து வந்தவர்களும் இவர்கள் செய்வதை பார்த்து செய்தனர்.
நெருங்கிய சொந்தங்கள் நண்பர்கள் சூழ நல்லபடியாக வளைகாப்பு பங்க்ஷன் முடிந்தது.
எஸ்தர் ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டிருந்ததால் நேரம் ஆகிவிட்டது என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்று விட,எங்கே போகிறாளென்று மகி யோசனையோடு பார்க்க,அந்த நேரம் வானதியோ சம்மந்தி அம்மா எங்க போறாங்க ரூபா?
ஏதாச்சும் வாங்கணுமா என்கவும் இல்லங்கம்மா.அத்தை இங்கே ஒரு பெரிய கம்பெனில டிசைனராக வேலை பார்க்கிறார்கள் என்கவும்,அப்படியா என்று அவர் ஆச்சரியப்பட,மகியோ அதிர்ந்து போனார்.
ஆமாம் மா என்றவள் தனது ஃபோனில் கூகுளை ஓபன் பண்ணி அதில் ரோஷி பிராண்டு டிரஸ்களை எடுத்துக் காட்டியவள் மிகப்பெரிய கம்பெனி என்றும் இங்கு தான் வேலை பார்க்கிறார்கள் என்றாள்.
அப்படியாயென மற்றவர்களும் அதை பார்த்து சந்தோஷப்பட,மனைவிக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பது தெரியாமல் இத்தனை வருஷமாக இருக்கிறோமே என்ற மகியோ உள்ளுக்குள் நொந்து போனார்.
ரூபா சொல்லிய பெயரை வைத்து அவரும் போனில் செக் பண்ண,அதில் அந்த கம்பெனி டிசைனர் லிஸ்டில் எஸ்தர் சாமுவேல் என்ற பெயர் இருக்கவும் இதில் கூட கணவனாக என் பெயரை போடவில்லையே,என்னை தலைமுழுகி விட்டாயா டி...
எப்படி உன்னால முடிஞ்சது?.
நான் எவ்வளவு பேசினாலும் அவ்வளவு அன்போடு என்னை தானே சுத்தி வருவ,அந்த அளவுக்கு என் மேல உனக்கு வெறுப்பு வந்துட்டா என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்ட மகிக்கு எஸ்தரின் விலகளை மட்டும் தாங்கிக்க முடியவில்லை
எப்படியாவது மனைவியை சமாதானம் பண்ணி ஊருக்கு அழைச்சிட்டு போய்விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். மாலை 6 மணிக்கு எல்லாம் கார் வந்து பிருந்தாவனம் வில்லாவில் நிற்க அதிலிருந்து இறங்கி வரும் எஸ்தரை அங்கிருக்கும் பார்க்கிலிருந்து பார்த்த மகி எஸ்தர் என்று கூப்பிட,அவரின் குரல் காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் போனவர் லிப்டில் ஏறி மேலே வந்துவிட்டார்.
கடைசி வரை பேச வாய்ப்பு கொடுக்காத மனைவியை நினைத்து நொந்து போய் அன்று இரவே மானசாவோடு அங்கிருந்து திருச்சிக்கு கிளம்பிவிட்டார்.
வனிச்சூர்:
தூக்கத்திலே மனைவியை அணைப்பதற்காக கையை தூக்கி போட அங்கே பெட் வெறுமையாக இருப்பதை உணர்ந்தவன் எங்கடி போன என்று கண்ணை திறக்காமல் கேட்க எந்த சத்தமும் இல்லை.
அதற்குள்ளே விடிஞ்சிடுச்சா என்றவாறு எட்டி போனை எடுத்து மணியை பார்க்க காலை 7:00 மணி என்று காட்டியது.
என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டோம் என்றவாறு எழுந்தவன் ரெஸ்ட் ரூமிற்குள் சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு குளித்துவிட்டு வெளியே வந்தவன் வேறு டிரெஸ்ஸை மாற்றிக் கொண்டு கீழே வர அங்கே ஷமீராவோ வழக்கமாக செய்யும் வேலைகளை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
ஏன் டி இவ்ளோ சீக்கிரம் எழுந்த என்றவாறு சோபாவில் வந்து உட்கார்ந்தான்.
கிச்சனில் சமையல் வேலையாக இருந்தவள் கணவனுக்கான டீயை எடுத்துட்டு வந்து கொடுக்க,நீ ஏதாவது குடிச்சியா என்றவாறு கப்பை வாங்கி டீபாய் மேல் வைக்க,ஷமீராவோ எந்த பதிலும் சொல்லாமல் இருக்க,ஓஓஓ கோவமா இருக்கிங்களோ பொண்டாட்டி என்றவனோ எட்டி அவள் கையை பிடித்து இழுக்க செழியனின் மேலே வந்து விழுந்தாள்.
என்ன பண்றீங்க என்ற பல்லை கடித்துக் கொண்டு கேட்க,சோபாவில் நன்கு கால் நீட்டி படுத்தவன் அவளின் கால்களை பிண்ணிக் கொண்டு நெஞ்சில் மேல் படுக்க வைத்தவன் கோவம் கீவமெல்லாம் அந்த நிமிஷத்தோட போயிடனும் புரியுதா?
ஏதோ ஒரு வேகத்துல அப்படி பேசிட்டேன்.தப்புதான்.இனிமே அப்படி பேச மாட்டேன் அதுக்காக இப்படி பேசாமல் இருக்கலாமென்று நினைக்காத..
ஏற்கனவே உன் கிட்ட சொல்லிட்டேன் எந்த மனஸ்தாபமாக இருந்தாலும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல தான், அதுக்கப்புறம் அது தொடரவே கூடாது அது குடும்ப வாழ்க்கைக்கு நல்லது இல்லை டி.
கணவன் சொன்னதை கேட்டவள் அது எப்படி நீங்க இஷ்டத்துக்கு பேசுவீங்க எல்லாத்தையும் காதுல வாங்கிட்டு அஞ்சு நிமிஷம் மட்டும் தான் நான் சூடு சொரணையோட இருக்கணும்,மத்த நேரம் எனக்கு எதுவுமே இருக்க கூடாது அப்படித்தானே என்று மூக்கு விடைக்க கேட்கும் மனைவியை ஒரு நொடி பார்த்தவன் பெட்ரூமில் இருக்கும் போது மட்டும் நீ துணி இல்லாம இருந்தா போதும்.
மத்த நேரத்தில் உனக்கு வசதியாக இருக்கும் டிரஸை போட்டுக்கலாமென ஒரு மார்க்கமாக கணவன் சொன்னதை கேட்டவள்,கோபத்தை விட்டு அதிர்ந்து போய் பார்க்க,அதே தாண்டி என்று மனைவியின் கழுத்தை இழுத்தவன் அதிர்ந்து போயிருப்பவளின் உதடுகளை சிறை பிடித்தான்.
நீண்ட முத்த போரை முடித்துக் கொண்டவன் இவ்வளவு ஸ்ட்ராங்கான பூஸ்ட் இருக்கும்போது இப்படி டீ கொண்டு வந்து மாமாவுக்கு கொடுக்கிறியே இதெல்லாம் நல்லாவா இருக்குங்க பொண்டாட்டி என்று கண்ணடித்தான்.
சரியான கேடி நீங்களென்ற ஷமீராவோ அவன் மேலிருந்து எழ முயல,ஹப்பாடா என் பொண்டாட்டிக்கு கோவம் போயிடுச்சு சூப்பர் சூப்பர்.
உன்னை சமாதானப்படுத்த இறுக்கி அணைத்து ஒரு முத்தம் போதும் டி என்று கர்வத்தோடு செழியன் சிரிக்க, ஷமீராவோ கோபமாக கணவனை முறைக்க முயற்சி பண்ணி பிராடு பிராடு என்று வெட்கத்தோடு நெஞ்சில் சாய்ந்து கொண்டு சிரித்து விட்டாள்.
செல்லம் தனியா வீட்ல இருப்பியா டி?
கம்பெனியில் இருந்து மாமா சீக்கிரமா வந்துடுறேன் என்கவும் சரிங்க என்றாள். ஹம், அப்படி ஏதாச்சும்னா பத்மா அத்தை வீட்டுக்கு போயிடுறேன் என்க சரி டி என்றான்.
அதன் பின்னர் செழியனும் கம்பெனிக்கு ரெடியா வர கணவனுக்கு டிபனை பரிமாற,வழக்கம் போல் மனைவியை இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டு அவளுக்கு ஊட்டிக்கொண்டே தானும் சாப்பிட்டவன் பத்திரமா இரு டி என்று சொல்லிவிட்டு வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்
நீட் எக்ஸாம் எழுதுவதற்கான சென்டர் கவிதாவிற்கு மதுரையில் கிடைத்திருக்க,கவிதாவோடு கண்மணியும் மாறன் தீரன் வீட்டிற்கு வந்து விட்டனர்.
தீரனோ தங்கையை அழைத்து போய் சென்டரில் விட்டவன் நல்லபடியா எழுதிட்டு வாடா பாப்பா என்க,சரி ணா என்றாள்.
அதேபோல் எக்ஸாம் எழுதிவிட்டு வெளியே வரவும் தங்கையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.
பின்னர் அங்கே தெரிந்த இடத்திற்கெல்லாம் மாறனும் தீரனும் அவர்கள் மனைவிகளோடு தங்கைகளுக்கு சுற்றி காட்டியவர்கள் அவர்கள் வேண்டாம் என்று சொல்வதைக் கேட்காமல் இஷ்டப்பட்டதெல்லாம் வாங்கி கொடுத்தார்கள்.
டெல்லியில் இருந்தவர்கள் ஒரு வாரம் அங்கு தங்கி சில இடங்களையெல்லாம் சுற்றி பார்த்துவிட்டு வனிச்சூருக்கு புறப்பட்டார்கள்.
மதுரை ஏர்போர்ட்டிற்கு மாலை 4 மணிக்கு அவர்கள் வந்து இறங்க, அவர்களை அழைத்து போக கண்ணனும் வந்திருந்தான்.பின்னர் அவர்களோடு கவிதா கண்மணியையும் அழைத்துக்கொண்டு வனிச்சூருக்கு புறப்பட்டார்கள்.
நாட்களும் யாருக்கும் காத்திடாமல் போக பத்தாவது மாத இறுதியில் ஜூலிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பதினாறாம் நாள் வழக்கமாக செய்யும் மற்ற சடங்குகளை செய்து குழந்தைக்கு வம்சிகிருஷ்ணன் என்று பெயரை சூட்டினார்.
எங்கே சம்பந்தி வந்ததிலிருந்து பார்க்கிறேன் ஷமீயும் மாப்பிள்ளையையும் ஆளையே காணுமென்றார்.
மருமகள் மாசமா இருக்குங்க அதனால் தான் கூப்பிட்டு வரலையென்று செல்லதுரை சொல்லவும்,அப்படியா என்று சந்தோஷப்பட்டவர் மாப்பிள்ளையோட நம்பரை கொஞ்சம் தாங்கங்கள் என்று பணிவாக கேட்கவும்,அதுக்கு என்னங்க,இதே சொல்லுறேன் என்று தனது மருமகளின் நம்பரை சொன்னார்.
உடனே அந்த நம்பருக்கு மகி கால் பண்ண,மலரோடு பேசிக் கொண்டிருந்த ஷமீராவோ புது நம்பராக இருக்கவும் அட்டென்ட் பண்ணவில்லை.இரண்டு மூன்று முறை கால் பண்ணவும் எடுக்காமல் போக,மாப்பிள்ளை எடுக்க மாட்டேங்கறார் என்கவும்,அது உங்க பொண்ணோட நம்பர் தான் என்று செல்லதுரை சிரித்துக்கொண்டே சொன்னார்.
அப்படிங்களா என்று ஆச்சரியப்பட, பெத்த உனக்கு உன் பொண்ணோட நம்பர் தெரியலையே நீ எல்லாம் ஒரு அப்பா என்று மனசாட்சியோ மகியை கேள்வி கேட்டது.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் ஆண்கள் போய் படுத்துவிட,பெண்களோ மறுநாள் கொடுக்க வேண்டிய வளையல் மஞ்சள் குங்குமம் அடங்கிய கிப்ட் பாக்ஸை ஆளுக்கு ஒரு வேலையாக பேக் பண்ணி கொண்டிருக்கு,ஜூலியிடம் சொல்லி விட்டு எஸ்தரும் தீபன் வீட்டிற்கு வந்துவிட்டார்.
ஒரு வார்த்தையாவது எஸ்தரிடம் பேசிடணுமென நினைத்துக் கொண்டிருந்த மகி திரும்பி மானசாவை பார்க்க அவர் தூங்கி விட்டது தெரிந்தது.
பொறுமையாக கதவை திறந்து வெளியே வந்து பார்க்க இரவு விளக்குகள் மட்டும் ஹாலில் எரிந்து கொண்டிருந்தது.
மற்ற மூன்று ரூம் கதவுகளும் சாத்திருப்பதை பார்த்தவர் யார் எந்த ரூமில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் எப்படி தட்டுவது என்று யோசித்து விட்டு பின்னர் ரூமிற்குள் படுத்துவிட்டார்.
விடியலும் தொடங்க,பெண்கள் முதலில் எழுந்து குளித்து தயாராகி விட,வீட்டில் பூஜை பண்ண வேண்டும் என்று வீராயி பாட்டி சொல்ல,இங்கு பூஜை ரூம் இல்லையே பாட்டி என்று ரூபா சொல்லவும்,அப்பொழுது எஸ்தரோ கீழ விநாயகர் கோவில் இருக்குங்கமா என்றார்.
அது போதும் தாயி என்றவர் வளையல் மற்றும் பூஜை பண்ண வேண்டிய பொருட்களோடு வானதி புவனாவுடன் அப்பார்ட்மெண்டின் தரை தளத்திலிருக்கும் விநாயகர் கோயிலுக்கு செல்ல அந்த நேரம் ஐயரும் அங்கு காலை நேர பூஜை செய்து கொண்டிருந்தார்.
பூஜை முடித்து வந்தவரிடம் தட்டுகளை கொடுத்து அர்ச்சனை பண்ணி தருமாறு சொல்ல,அவரும் அர்ச்சனை பண்ணி சிறிது நிமிடத்திலே கொடுத்தார்.
பின்னர் அதை எடுத்துக் கொண்டு மேலே வர மற்றவர்கள் எல்லாம் தயாராகியதும்,அந்த வில்லாவுக்கு சொந்தமான சிறிய ஹாலில் பங்க்ஷனுக்கான அரேஞ்மெண்ட் நடந்திருக்கவும் அங்கு வந்தனர்.
பின்னர் நல்ல நேரத்தில் ருத்ரன் ஜூலியை அங்கே அலங்கரிக்கப்பட்ட சேரில் உட்கார வைத்த வீராயி பாட்டியும் சுமதி பாட்டியும் அவர்கள் குலதெய்வத்தை வேண்டி விட்டு இருவரும் ஆளுக்கொரு கையில் வளையல் போட்டுவிட்டு அங்கிருந்த ஏழு வகை சாதத்தில் கொஞ்சம் கொஞ்சம் அள்ளி இருவருக்கும் ஊட்டிவிட்டவர்கள் பின்னர் பூக்கள் மஞ்சள் கலந்த அரிசியை தூவி ஆசீர்வாதம் பண்ணினார்கள்.
அப்பார்ட்மெண்டில் இருந்து வந்தவர்களும் இவர்கள் செய்வதை பார்த்து செய்தனர்.
நெருங்கிய சொந்தங்கள் நண்பர்கள் சூழ நல்லபடியாக வளைகாப்பு பங்க்ஷன் முடிந்தது.
எஸ்தர் ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டிருந்ததால் நேரம் ஆகிவிட்டது என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்று விட,எங்கே போகிறாளென்று மகி யோசனையோடு பார்க்க,அந்த நேரம் வானதியோ சம்மந்தி அம்மா எங்க போறாங்க ரூபா?
ஏதாச்சும் வாங்கணுமா என்கவும் இல்லங்கம்மா.அத்தை இங்கே ஒரு பெரிய கம்பெனில டிசைனராக வேலை பார்க்கிறார்கள் என்கவும்,அப்படியா என்று அவர் ஆச்சரியப்பட,மகியோ அதிர்ந்து போனார்.
ஆமாம் மா என்றவள் தனது ஃபோனில் கூகுளை ஓபன் பண்ணி அதில் ரோஷி பிராண்டு டிரஸ்களை எடுத்துக் காட்டியவள் மிகப்பெரிய கம்பெனி என்றும் இங்கு தான் வேலை பார்க்கிறார்கள் என்றாள்.
அப்படியாயென மற்றவர்களும் அதை பார்த்து சந்தோஷப்பட,மனைவிக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பது தெரியாமல் இத்தனை வருஷமாக இருக்கிறோமே என்ற மகியோ உள்ளுக்குள் நொந்து போனார்.
ரூபா சொல்லிய பெயரை வைத்து அவரும் போனில் செக் பண்ண,அதில் அந்த கம்பெனி டிசைனர் லிஸ்டில் எஸ்தர் சாமுவேல் என்ற பெயர் இருக்கவும் இதில் கூட கணவனாக என் பெயரை போடவில்லையே,என்னை தலைமுழுகி விட்டாயா டி...
எப்படி உன்னால முடிஞ்சது?.
நான் எவ்வளவு பேசினாலும் அவ்வளவு அன்போடு என்னை தானே சுத்தி வருவ,அந்த அளவுக்கு என் மேல உனக்கு வெறுப்பு வந்துட்டா என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்ட மகிக்கு எஸ்தரின் விலகளை மட்டும் தாங்கிக்க முடியவில்லை
எப்படியாவது மனைவியை சமாதானம் பண்ணி ஊருக்கு அழைச்சிட்டு போய்விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். மாலை 6 மணிக்கு எல்லாம் கார் வந்து பிருந்தாவனம் வில்லாவில் நிற்க அதிலிருந்து இறங்கி வரும் எஸ்தரை அங்கிருக்கும் பார்க்கிலிருந்து பார்த்த மகி எஸ்தர் என்று கூப்பிட,அவரின் குரல் காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் போனவர் லிப்டில் ஏறி மேலே வந்துவிட்டார்.
கடைசி வரை பேச வாய்ப்பு கொடுக்காத மனைவியை நினைத்து நொந்து போய் அன்று இரவே மானசாவோடு அங்கிருந்து திருச்சிக்கு கிளம்பிவிட்டார்.
வனிச்சூர்:
தூக்கத்திலே மனைவியை அணைப்பதற்காக கையை தூக்கி போட அங்கே பெட் வெறுமையாக இருப்பதை உணர்ந்தவன் எங்கடி போன என்று கண்ணை திறக்காமல் கேட்க எந்த சத்தமும் இல்லை.
அதற்குள்ளே விடிஞ்சிடுச்சா என்றவாறு எட்டி போனை எடுத்து மணியை பார்க்க காலை 7:00 மணி என்று காட்டியது.
என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டோம் என்றவாறு எழுந்தவன் ரெஸ்ட் ரூமிற்குள் சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு குளித்துவிட்டு வெளியே வந்தவன் வேறு டிரெஸ்ஸை மாற்றிக் கொண்டு கீழே வர அங்கே ஷமீராவோ வழக்கமாக செய்யும் வேலைகளை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
ஏன் டி இவ்ளோ சீக்கிரம் எழுந்த என்றவாறு சோபாவில் வந்து உட்கார்ந்தான்.
கிச்சனில் சமையல் வேலையாக இருந்தவள் கணவனுக்கான டீயை எடுத்துட்டு வந்து கொடுக்க,நீ ஏதாவது குடிச்சியா என்றவாறு கப்பை வாங்கி டீபாய் மேல் வைக்க,ஷமீராவோ எந்த பதிலும் சொல்லாமல் இருக்க,ஓஓஓ கோவமா இருக்கிங்களோ பொண்டாட்டி என்றவனோ எட்டி அவள் கையை பிடித்து இழுக்க செழியனின் மேலே வந்து விழுந்தாள்.
என்ன பண்றீங்க என்ற பல்லை கடித்துக் கொண்டு கேட்க,சோபாவில் நன்கு கால் நீட்டி படுத்தவன் அவளின் கால்களை பிண்ணிக் கொண்டு நெஞ்சில் மேல் படுக்க வைத்தவன் கோவம் கீவமெல்லாம் அந்த நிமிஷத்தோட போயிடனும் புரியுதா?
ஏதோ ஒரு வேகத்துல அப்படி பேசிட்டேன்.தப்புதான்.இனிமே அப்படி பேச மாட்டேன் அதுக்காக இப்படி பேசாமல் இருக்கலாமென்று நினைக்காத..
ஏற்கனவே உன் கிட்ட சொல்லிட்டேன் எந்த மனஸ்தாபமாக இருந்தாலும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல தான், அதுக்கப்புறம் அது தொடரவே கூடாது அது குடும்ப வாழ்க்கைக்கு நல்லது இல்லை டி.
கணவன் சொன்னதை கேட்டவள் அது எப்படி நீங்க இஷ்டத்துக்கு பேசுவீங்க எல்லாத்தையும் காதுல வாங்கிட்டு அஞ்சு நிமிஷம் மட்டும் தான் நான் சூடு சொரணையோட இருக்கணும்,மத்த நேரம் எனக்கு எதுவுமே இருக்க கூடாது அப்படித்தானே என்று மூக்கு விடைக்க கேட்கும் மனைவியை ஒரு நொடி பார்த்தவன் பெட்ரூமில் இருக்கும் போது மட்டும் நீ துணி இல்லாம இருந்தா போதும்.
மத்த நேரத்தில் உனக்கு வசதியாக இருக்கும் டிரஸை போட்டுக்கலாமென ஒரு மார்க்கமாக கணவன் சொன்னதை கேட்டவள்,கோபத்தை விட்டு அதிர்ந்து போய் பார்க்க,அதே தாண்டி என்று மனைவியின் கழுத்தை இழுத்தவன் அதிர்ந்து போயிருப்பவளின் உதடுகளை சிறை பிடித்தான்.
நீண்ட முத்த போரை முடித்துக் கொண்டவன் இவ்வளவு ஸ்ட்ராங்கான பூஸ்ட் இருக்கும்போது இப்படி டீ கொண்டு வந்து மாமாவுக்கு கொடுக்கிறியே இதெல்லாம் நல்லாவா இருக்குங்க பொண்டாட்டி என்று கண்ணடித்தான்.
சரியான கேடி நீங்களென்ற ஷமீராவோ அவன் மேலிருந்து எழ முயல,ஹப்பாடா என் பொண்டாட்டிக்கு கோவம் போயிடுச்சு சூப்பர் சூப்பர்.
உன்னை சமாதானப்படுத்த இறுக்கி அணைத்து ஒரு முத்தம் போதும் டி என்று கர்வத்தோடு செழியன் சிரிக்க, ஷமீராவோ கோபமாக கணவனை முறைக்க முயற்சி பண்ணி பிராடு பிராடு என்று வெட்கத்தோடு நெஞ்சில் சாய்ந்து கொண்டு சிரித்து விட்டாள்.
செல்லம் தனியா வீட்ல இருப்பியா டி?
கம்பெனியில் இருந்து மாமா சீக்கிரமா வந்துடுறேன் என்கவும் சரிங்க என்றாள். ஹம், அப்படி ஏதாச்சும்னா பத்மா அத்தை வீட்டுக்கு போயிடுறேன் என்க சரி டி என்றான்.
அதன் பின்னர் செழியனும் கம்பெனிக்கு ரெடியா வர கணவனுக்கு டிபனை பரிமாற,வழக்கம் போல் மனைவியை இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டு அவளுக்கு ஊட்டிக்கொண்டே தானும் சாப்பிட்டவன் பத்திரமா இரு டி என்று சொல்லிவிட்டு வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்
நீட் எக்ஸாம் எழுதுவதற்கான சென்டர் கவிதாவிற்கு மதுரையில் கிடைத்திருக்க,கவிதாவோடு கண்மணியும் மாறன் தீரன் வீட்டிற்கு வந்து விட்டனர்.
தீரனோ தங்கையை அழைத்து போய் சென்டரில் விட்டவன் நல்லபடியா எழுதிட்டு வாடா பாப்பா என்க,சரி ணா என்றாள்.
அதேபோல் எக்ஸாம் எழுதிவிட்டு வெளியே வரவும் தங்கையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.
பின்னர் அங்கே தெரிந்த இடத்திற்கெல்லாம் மாறனும் தீரனும் அவர்கள் மனைவிகளோடு தங்கைகளுக்கு சுற்றி காட்டியவர்கள் அவர்கள் வேண்டாம் என்று சொல்வதைக் கேட்காமல் இஷ்டப்பட்டதெல்லாம் வாங்கி கொடுத்தார்கள்.
டெல்லியில் இருந்தவர்கள் ஒரு வாரம் அங்கு தங்கி சில இடங்களையெல்லாம் சுற்றி பார்த்துவிட்டு வனிச்சூருக்கு புறப்பட்டார்கள்.
மதுரை ஏர்போர்ட்டிற்கு மாலை 4 மணிக்கு அவர்கள் வந்து இறங்க, அவர்களை அழைத்து போக கண்ணனும் வந்திருந்தான்.பின்னர் அவர்களோடு கவிதா கண்மணியையும் அழைத்துக்கொண்டு வனிச்சூருக்கு புறப்பட்டார்கள்.
நாட்களும் யாருக்கும் காத்திடாமல் போக பத்தாவது மாத இறுதியில் ஜூலிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பதினாறாம் நாள் வழக்கமாக செய்யும் மற்ற சடங்குகளை செய்து குழந்தைக்கு வம்சிகிருஷ்ணன் என்று பெயரை சூட்டினார்.