Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 459
- Thread Author
- #1
ருத்ரன் வீடு-டெல்லி:
தனது தாயின் சாயலில் இருக்கும் உடன் பிறந்தவளை பார்த்த அருண்,அக்கா என்றான்.
அதில் ஒரு நிமிடம் தடுமாறியவள் வாடா என்று சொல்ல எதுவும் சொல்லாமல் அக்காவை தோளோடு வந்து அணைத்துக் கொண்டவன்,எனக்கு தெரிந்திருந்தால் முன்னாடியே நான் பார்க்க வந்திருப்பேன்.
இன்னைக்கு காலையில் தான் தெரியும்.அதும் நான் மாமாவாக போகிறேன் என்று தெரிஞ்ச உடனே இங்கு கிளம்பி வந்துட்டேன்.
நீ என்ன சாப்பிடுவனு தெரியாது ஏதோ எனக்கு தெரிந்ததை வாங்கிட்டு வந்திருக்கிறேன் என்றவன்,வெளியே இருந்த லக்கேஜை எடுத்து வந்து ஜூலியிடம் நீட்ட,கண்கள் கலங்கியபடி வாங்கிக் கொண்டாள்.
பெற்றவர்களை ஒதுக்க முடிந்த அவளால் இவனை ஒதுக்க முடியாமல் உள்ளுக்குள் தடுமாறியவாறு பரிதாபமாக எஸ்தரை பார்க்க,அவரோ இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றவாறு அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
பின்னர் அவர்களை இயல்பாக்கும் பொருட்டு எதுக்கு எல்லாரும் நின்னுட்டே பேசிட்டு இருக்கீங்க ?
உட்காருங்கப்பா என்று பாயல் சொல்லவும் வாடா வந்து உட்காரு என்று அங்கிருந்த ஷோபாவை காட்டி ஜூலி சொல்ல,ஹம் என்றவாறு அதில் போய் உட்கார்ந்தவனுக்கு எஸ்தர் யார் என்பது தெரியவில்லை.
டீயா காபியா என்று ஜூலி கேட்கவும் ஒன்னும் வேண்டாம்,ஏர்போர்ட்டில் குடிச்சிட்டு தான் வரேன் என்றவன் எல்லாரையும் பார்க்க,பிறகு தான் அவர்கள் யாரையும் அவனுக்கு அறிமுகப்படுத்தாததை புரிந்து கொண்டவள் தனது தலையில் லேசாக தட்டி விட்டு அவங்க தான் என்னுடைய அம்மா எஸ்தர் என்கவும், உன்னுடைய அம்மாவா என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் எஸ்தரை பார்க்க,அவரோ தனது முக மாற்றத்தை மாற்றாமல் இயல்பாகவே நின்றார்.
பிறகு பாயலை ருத்ரன் சித்தி என்றவள் தீபன் ரூபாவை யார் என்று அறிமுகப்படுத்தி வைக்க அவர்களோடு சிரித்த முகமாக பேசிக் கொண்டிருந்தவனுக்கு அவ்வப்போது பார்வை எஸ்தரின் மேல் தான் சென்று வந்தது.
அவரும் அவனிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை,.அவனும் அவரிடம் பேச முன் வரவில்லை.
இப்படியே நிமிடங்கள் கடக்க,சரி சாப்பிட்டுக்கலாம் என்க,கையை கழுவிட்டு வந்து உட்கார்ந்தவர்களுக்கு எஸ்தர் பரிமாற,மற்றவர்கள் பேசிக்கொண்டே சாப்பிட,அருணோ அமைதியாக சாப்பிட்டு எழுந்தான்.
வெளியில பார்க் இருக்கிறதை வரும்போது பார்த்துட்டு வந்தேன்.கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாமா அக்கா என்று ஜூலியை கூப்பிட,அவளிடம் ஏதோ தனிப்பட்ட முறையில் பேச விரும்புகிறான் என்பது மற்றவர்களுக்கும் புரிந்தது.
ஜூலியும் அதை உணர்ந்தவள் சரி வா என்று அவனோடு லிப்ட்டில் ஏறி கீழே வந்தவள் சொல்லு அருண் உன்னோட வொய்ப் எப்படி இருக்காங்க?
குழந்தைகள் இருக்கா?
அவளுக்கும் இது ஏழாவது மாசம் கா.
கொஞ்சம் கூட இப்படி ஒரு விஷயம் நம்ம வாழ்க்கையில நடந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கேட்ட எனக்கு பயங்கர அதிர்ச்சி கா.
நம்ம அப்பா அம்மாவா இப்படின்னு அவ்வளவு வெறுப்பு வருது என்கவும் ஏன்டா இப்படி சொல்ற?
அவங்க சூழ்நிலை என்னவோ நமக்கு அது தெரியாது..என்ன பொல்லாத சூழ்நிலை கா.இரண்டு பேரும் நினைச்சிருந்தா இதெல்லாம் தடுத்திருக்கலாம்.
தேவை இல்லாத மனஸ்தாபங்கள் வராமல் இருந்திருக்குமே என்றவன்,ஆமா,அவர்களுக்கு ஒரு பொண்ணு மட்டும் தானா இல்ல பையனும் உண்டா??
அவன் கேட்பது புரியாமல் யாருக்குடா என்க,அதுதான் அப்பாவுடைய இன்னொரு வைஃப் என்றான்.
அப்பாவுக்கு இன்னொரு வொய்ப் என்றால் அப்போ நமக்கு யார்?
நமக்கும் அவங்களுக்கும் என்னக்கா இருக்கு??
என்னடா இப்படி பேசுற என்று ஜூலி அதிர,ஆமா கா அவங்களுக்கும் நமக்கு என்ன சம்பந்தம் இருக்கு சொல்லு??
நீ ஏன் இப்படி பேசுற?
வேற எப்படி பேச சொல்லுற??
ஆயிரம் குடும்பம் திருட்டுத்தனமாக அப்பா வச்சிருப்பாரு அத்தனை பேரும் அம்மாவாக ஆயிட முடியுமா??
எனக்கு அப்பா அம்மா மேல கோபம் இருக்கு ஒத்துக்கிறேன்.அதுக்காக கண்டவர்களை எல்லாம் அம்மாவாக என்னால ஏத்துக்க முடியாது கா..
அதைக் கேட்டு வெகுண்டவள் இனி எஸ்தர் அம்மாவை பற்றி ஒரு வார்த்தை பேசின நல்லாருக்காது.தம்பின்னு கூட பார்க்க மாட்டேன்
அவங்களை பற்றி உனக்கு என்னடா தெரியும்?
உங்க யாருக்கு அவங்க வேண்டுமோ, வேண்டாமா அது எனக்கு தேவையில்லை.எனக்கு எஸ்தர் அம்மா ரொம்ப முக்கியம்.
அவர்களை ஒருபோதும் என்னால கைவிட முடியாது.அதேபோல் ஷமீரா என் தங்கச்சி..இந்த முடிவுல எந்த மாற்றமும் இல்லை என்றவாறு ஜூலி எழுந்திருக்க, இதற்கு அப்புறம் இதை பற்றி பேசினால் தேவையில்லாத வாக்குவாதம் தான் வரும் என்பதை புரிந்து கொண்டான்.
இருவரின் முகத்தை வைத்து ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கிறது என்பதை மற்றவர்களும் புரிந்து கொண்டு,அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை.
எஸ்தரோ என்ன டிசைன் பண்ணலாம் என்று யோசனை பண்ணிக் கொண்டிருக்கும் போது அந்தோணியிடமிருந்து அவருக்கு கால் வந்தது.
அட்டென்ட் பண்ணியவர் சொல்லு ணா எப்படி இருக்க?பாபு நல்லாருக்கானா சித்தி நல்லா இருக்காங்களா என்றவர் மறந்தும் ராணியை பற்றி விசாரிக்கவில்லை.
நல்லாருக்கோம் டா. முதல் நாள் வேலைக்கு போனது எப்படி இருந்தது??
எனக்கு புடிச்ச வேலை தானே ணா. ஏதோ இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கு அதை சிறப்பாக செய்யணும் ணா.
ஆமா மா...கண்டிப்பாக..உன் முழு திறமையை இதில் காட்டு.மேலும் மேலும் இதில் நீ முன்னேறனும் அதை பார்த்து தான் இந்த அண்ணனோட மனச சந்தோஷப்படணும்.
என்னாலதானே உன் வாழ்க்கை இப்படி போனதே என்பதை நினைச்சு ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு ரண வேதனையா இருக்குமா என்று அந்தோணி வருத்தமாக சொன்னார்.
அய்யோ அண்ணா...நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ணா.கை நிறைய சம்பாதிக்கிறேன் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லைனு சொன்னாங்க.
இனி கௌரவமாக சம்பாதிக்க போகிறேன் என் சொந்தக்கால்ல நிற்க போறேன்.யாரும் எனக்கு ஓசி சோறு போடுறேன்னு சொல்லிக் காட்ட முடியாது என்கும் போது எஸ்தருக்கும் அழுகை வந்தது.
இதையெல்லாம் சற்று ஓரமாக நின்று காதில் வாங்கிய ராணி, என்னாஆஆ அண்ணி வேலைக்கு போறாங்களா என்று அதிர்ந்தவள், இந்த விஷயம் அண்ணனுக்கு தெரியுமா தெரியாதாயென யோசைனையாக,வெளியே போயிருந்த பாபுவும் வீட்டிற்கு வந்தான்.
அப்பாவிடமிருந்து போனை வாங்கியவன் அப்புறம் மேடம், டிசைனர் எஸ்தரின் புகழ் உலகமெங்கும் ஒலிக்கவும் என்றவாறு சிரிக்க, கிண்டலா கண்ணாயென எஸ்தர் சிரிக்க,இந்த சிரிப்பு சத்தத்தை கேட்டு எத்தனை நாட்கள் ஆகுதுங்கத்தை..
எப்போதும் நீங்கள் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் என்றான்.
கோர்ட்:
மறுநாள் கோர்ட் வளாகமே ஒரே பரபரப்பாக இருந்தது.அமர்நாத்துக்கும் அவன் கூட இருந்த மற்ற ஏழு பேருக்கும் என்ன தண்டனை கிடைக்கப் போகுது என்பதை தெரிந்து கொள்ள பத்திரிக்கையாளர்களும் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளின் உறவினர்களும் காத்திருந்தனர்.
எப்படியோ இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அமர்நாத்தின் குடும்பமும் பதறி அடித்து டெல்லிக்கு வந்தார்கள்.
நடந்த விஷயத்தை எல்லாம் அவர்களும் கேள்விப்பட்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.ஆயிரம் தான் குற்றவாளியா இருந்தாலும், எப்படியாவது போராடி அமர்நாத்தை வெளியே கொண்டு வருவதற்கான அத்தனை ஏற்பாடும் அமர்நாத்தின் பையன் பண்ண,அதற்கு எந்த பலனுமில்லாமல் போனது.
இது நேரடியாக பிரதமர் மூலமாக வந்து புகார் என்பதால் யாரும் எதுவும் செய்ய முடியாமல் கைவிரித்தார்கள்
எப்படியாவது என் மகன் என்னை வெளியே எடுத்திடுவான்.இல்லையே அவன் தான் யாத்திரை போயிருக்கானானே...
அப்போ என் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காக எவ்வளவோ விஷயம் பண்ணிருக்கிறேன்.அதில் ஒருவர் நிச்சயமாக என்னை பெயிலில் எடுப்பார்கள்.பிறகு இருக்குடா உங்களுக்கு...
அடியேய்...
அன்றைக்கு என் கையில் இருந்தும் தப்பிச்சிட்ட.இப்போ வசமா சிக்கிட்ட.வயசு போனாலும் இன்னும் தளதளனு தான் டி இருக்க.உன்னை அனுபவிக்காமல் விடமாட்டேன் டி என ஜெயிலுக்கள் இருந்த அமர்நாத் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறான்.
ஆனால் இந்த விஷயம் கேள்வி பட்டதிலிருந்து அவனது நண்பர்கள் மொத்தமாக அவனை விட்டு விலகினர் என்பது இவனுக்கு தெரியவில்லை.
மூன்றாவது வழக்காக அமர்நாத்துடையது கோர்ட்டிற்கு வந்தது.
மரியாதை நிமித்தமாக ஜட்ஜிற்கு வணக்கம் சொன்னார்கள்.
உங்கள் தரப்பிலிருந்து எதாவது சொல்ல விரும்புகிறீர்களா என அமர்நாத்தை கேட்க...எனக்கும் இந்த குற்றத்திற்கும் சம்பந்தம் இல்லைங்க சார்.
நான் இதை பண்ணவில்லை..எனது புகழுக்கு கலங்கம் வர வைப்பதற்காக எதிர்கட்சி ஆட்களோடு சேர்ந்து கொண்டு இவர்கள் செய்த சதியென்றான்.
எஸ் மை லார்ட்...
இவங்க சொல்ற தேதியில் எனது கட்சி காரர் அன்று டெல்லியிலே இல்லை.இதோ அதற்கான சான்று என்று அமர்நாத்தின் வக்கீலும் ஆதாரத்தை நீட்டினான்.
அதை வாங்கி படித்து பார்த்து சிரித்தவர் தனது போனில் எதையோ செக் பண்ணி விட்டு நிமிர்ந்தவர் ஆஹ அன்றைய தினத்தில் உங்கள் கட்சிகாரர் பெங்களூரில் அவருடைய அக்கா வீட்டில் இருந்திருக்கிறார் அப்படி தானே?
"எஸ் மை லார்ட்"
அவரை ஒரு பார்வை பார்த்த ஜட்ஜ்,நீங்கள் சொன்ன தேதியில் எந்த டிராவல்ஸில் இருந்து டிக்கெட் புக் பண்ணுனீங்க?
அதை சொல்லுங்கள்....?
மை லார்ட் 2005 பிப்ரவரி 5 ஆம் தேதி,மிதுன் டிராவல்ஸ்..
ஓஓஓஓஓ...விபத்து நடந்த டேட் என்ன?
அது வந்துங்க லார்ட் என்று அமர்நாத்தின் வக்கீல் தடுமாறியவர், ஹம் விபத்து நடந்த தேதி ஜனவரி 20, 2005 வது வருஷம்
இஸ் ஈட்... பட் நீங்கள் கொடுத்த ஆதாரம் பிப்ரவரி 5.
என்னங்க இதெல்லாம்?
அது வந்துங்க மை லார்ட் ஏதோ பிரிண்டிங் மிஸ்டேக் அதான் என்று பரசுராமன் சொல்ல,ஓஹோ..மிஸ்டர் பரசுராமன் நீங்கள் சொன்ன டிராவல்ஸ் ஓபன் பண்ணியதே 2006 ல்.பிறகு எப்படி 2005 ல் இவர் டிராவல்ஸில் புக் பண்ணியிருக்க முடியுமென்று ஜட்ஜ் கேட்க அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை...
வீழ்ந்தேனடி
தனது தாயின் சாயலில் இருக்கும் உடன் பிறந்தவளை பார்த்த அருண்,அக்கா என்றான்.
அதில் ஒரு நிமிடம் தடுமாறியவள் வாடா என்று சொல்ல எதுவும் சொல்லாமல் அக்காவை தோளோடு வந்து அணைத்துக் கொண்டவன்,எனக்கு தெரிந்திருந்தால் முன்னாடியே நான் பார்க்க வந்திருப்பேன்.
இன்னைக்கு காலையில் தான் தெரியும்.அதும் நான் மாமாவாக போகிறேன் என்று தெரிஞ்ச உடனே இங்கு கிளம்பி வந்துட்டேன்.
நீ என்ன சாப்பிடுவனு தெரியாது ஏதோ எனக்கு தெரிந்ததை வாங்கிட்டு வந்திருக்கிறேன் என்றவன்,வெளியே இருந்த லக்கேஜை எடுத்து வந்து ஜூலியிடம் நீட்ட,கண்கள் கலங்கியபடி வாங்கிக் கொண்டாள்.
பெற்றவர்களை ஒதுக்க முடிந்த அவளால் இவனை ஒதுக்க முடியாமல் உள்ளுக்குள் தடுமாறியவாறு பரிதாபமாக எஸ்தரை பார்க்க,அவரோ இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றவாறு அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
பின்னர் அவர்களை இயல்பாக்கும் பொருட்டு எதுக்கு எல்லாரும் நின்னுட்டே பேசிட்டு இருக்கீங்க ?
உட்காருங்கப்பா என்று பாயல் சொல்லவும் வாடா வந்து உட்காரு என்று அங்கிருந்த ஷோபாவை காட்டி ஜூலி சொல்ல,ஹம் என்றவாறு அதில் போய் உட்கார்ந்தவனுக்கு எஸ்தர் யார் என்பது தெரியவில்லை.
டீயா காபியா என்று ஜூலி கேட்கவும் ஒன்னும் வேண்டாம்,ஏர்போர்ட்டில் குடிச்சிட்டு தான் வரேன் என்றவன் எல்லாரையும் பார்க்க,பிறகு தான் அவர்கள் யாரையும் அவனுக்கு அறிமுகப்படுத்தாததை புரிந்து கொண்டவள் தனது தலையில் லேசாக தட்டி விட்டு அவங்க தான் என்னுடைய அம்மா எஸ்தர் என்கவும், உன்னுடைய அம்மாவா என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் எஸ்தரை பார்க்க,அவரோ தனது முக மாற்றத்தை மாற்றாமல் இயல்பாகவே நின்றார்.
பிறகு பாயலை ருத்ரன் சித்தி என்றவள் தீபன் ரூபாவை யார் என்று அறிமுகப்படுத்தி வைக்க அவர்களோடு சிரித்த முகமாக பேசிக் கொண்டிருந்தவனுக்கு அவ்வப்போது பார்வை எஸ்தரின் மேல் தான் சென்று வந்தது.
அவரும் அவனிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை,.அவனும் அவரிடம் பேச முன் வரவில்லை.
இப்படியே நிமிடங்கள் கடக்க,சரி சாப்பிட்டுக்கலாம் என்க,கையை கழுவிட்டு வந்து உட்கார்ந்தவர்களுக்கு எஸ்தர் பரிமாற,மற்றவர்கள் பேசிக்கொண்டே சாப்பிட,அருணோ அமைதியாக சாப்பிட்டு எழுந்தான்.
வெளியில பார்க் இருக்கிறதை வரும்போது பார்த்துட்டு வந்தேன்.கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாமா அக்கா என்று ஜூலியை கூப்பிட,அவளிடம் ஏதோ தனிப்பட்ட முறையில் பேச விரும்புகிறான் என்பது மற்றவர்களுக்கும் புரிந்தது.
ஜூலியும் அதை உணர்ந்தவள் சரி வா என்று அவனோடு லிப்ட்டில் ஏறி கீழே வந்தவள் சொல்லு அருண் உன்னோட வொய்ப் எப்படி இருக்காங்க?
குழந்தைகள் இருக்கா?
அவளுக்கும் இது ஏழாவது மாசம் கா.
கொஞ்சம் கூட இப்படி ஒரு விஷயம் நம்ம வாழ்க்கையில நடந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கேட்ட எனக்கு பயங்கர அதிர்ச்சி கா.
நம்ம அப்பா அம்மாவா இப்படின்னு அவ்வளவு வெறுப்பு வருது என்கவும் ஏன்டா இப்படி சொல்ற?
அவங்க சூழ்நிலை என்னவோ நமக்கு அது தெரியாது..என்ன பொல்லாத சூழ்நிலை கா.இரண்டு பேரும் நினைச்சிருந்தா இதெல்லாம் தடுத்திருக்கலாம்.
தேவை இல்லாத மனஸ்தாபங்கள் வராமல் இருந்திருக்குமே என்றவன்,ஆமா,அவர்களுக்கு ஒரு பொண்ணு மட்டும் தானா இல்ல பையனும் உண்டா??
அவன் கேட்பது புரியாமல் யாருக்குடா என்க,அதுதான் அப்பாவுடைய இன்னொரு வைஃப் என்றான்.
அப்பாவுக்கு இன்னொரு வொய்ப் என்றால் அப்போ நமக்கு யார்?
நமக்கும் அவங்களுக்கும் என்னக்கா இருக்கு??
என்னடா இப்படி பேசுற என்று ஜூலி அதிர,ஆமா கா அவங்களுக்கும் நமக்கு என்ன சம்பந்தம் இருக்கு சொல்லு??
நீ ஏன் இப்படி பேசுற?
வேற எப்படி பேச சொல்லுற??
ஆயிரம் குடும்பம் திருட்டுத்தனமாக அப்பா வச்சிருப்பாரு அத்தனை பேரும் அம்மாவாக ஆயிட முடியுமா??
எனக்கு அப்பா அம்மா மேல கோபம் இருக்கு ஒத்துக்கிறேன்.அதுக்காக கண்டவர்களை எல்லாம் அம்மாவாக என்னால ஏத்துக்க முடியாது கா..
அதைக் கேட்டு வெகுண்டவள் இனி எஸ்தர் அம்மாவை பற்றி ஒரு வார்த்தை பேசின நல்லாருக்காது.தம்பின்னு கூட பார்க்க மாட்டேன்
அவங்களை பற்றி உனக்கு என்னடா தெரியும்?
உங்க யாருக்கு அவங்க வேண்டுமோ, வேண்டாமா அது எனக்கு தேவையில்லை.எனக்கு எஸ்தர் அம்மா ரொம்ப முக்கியம்.
அவர்களை ஒருபோதும் என்னால கைவிட முடியாது.அதேபோல் ஷமீரா என் தங்கச்சி..இந்த முடிவுல எந்த மாற்றமும் இல்லை என்றவாறு ஜூலி எழுந்திருக்க, இதற்கு அப்புறம் இதை பற்றி பேசினால் தேவையில்லாத வாக்குவாதம் தான் வரும் என்பதை புரிந்து கொண்டான்.
இருவரின் முகத்தை வைத்து ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கிறது என்பதை மற்றவர்களும் புரிந்து கொண்டு,அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை.
எஸ்தரோ என்ன டிசைன் பண்ணலாம் என்று யோசனை பண்ணிக் கொண்டிருக்கும் போது அந்தோணியிடமிருந்து அவருக்கு கால் வந்தது.
அட்டென்ட் பண்ணியவர் சொல்லு ணா எப்படி இருக்க?பாபு நல்லாருக்கானா சித்தி நல்லா இருக்காங்களா என்றவர் மறந்தும் ராணியை பற்றி விசாரிக்கவில்லை.
நல்லாருக்கோம் டா. முதல் நாள் வேலைக்கு போனது எப்படி இருந்தது??
எனக்கு புடிச்ச வேலை தானே ணா. ஏதோ இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கு அதை சிறப்பாக செய்யணும் ணா.
ஆமா மா...கண்டிப்பாக..உன் முழு திறமையை இதில் காட்டு.மேலும் மேலும் இதில் நீ முன்னேறனும் அதை பார்த்து தான் இந்த அண்ணனோட மனச சந்தோஷப்படணும்.
என்னாலதானே உன் வாழ்க்கை இப்படி போனதே என்பதை நினைச்சு ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு ரண வேதனையா இருக்குமா என்று அந்தோணி வருத்தமாக சொன்னார்.
அய்யோ அண்ணா...நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ணா.கை நிறைய சம்பாதிக்கிறேன் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லைனு சொன்னாங்க.
இனி கௌரவமாக சம்பாதிக்க போகிறேன் என் சொந்தக்கால்ல நிற்க போறேன்.யாரும் எனக்கு ஓசி சோறு போடுறேன்னு சொல்லிக் காட்ட முடியாது என்கும் போது எஸ்தருக்கும் அழுகை வந்தது.
இதையெல்லாம் சற்று ஓரமாக நின்று காதில் வாங்கிய ராணி, என்னாஆஆ அண்ணி வேலைக்கு போறாங்களா என்று அதிர்ந்தவள், இந்த விஷயம் அண்ணனுக்கு தெரியுமா தெரியாதாயென யோசைனையாக,வெளியே போயிருந்த பாபுவும் வீட்டிற்கு வந்தான்.
அப்பாவிடமிருந்து போனை வாங்கியவன் அப்புறம் மேடம், டிசைனர் எஸ்தரின் புகழ் உலகமெங்கும் ஒலிக்கவும் என்றவாறு சிரிக்க, கிண்டலா கண்ணாயென எஸ்தர் சிரிக்க,இந்த சிரிப்பு சத்தத்தை கேட்டு எத்தனை நாட்கள் ஆகுதுங்கத்தை..
எப்போதும் நீங்கள் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் என்றான்.
கோர்ட்:
மறுநாள் கோர்ட் வளாகமே ஒரே பரபரப்பாக இருந்தது.அமர்நாத்துக்கும் அவன் கூட இருந்த மற்ற ஏழு பேருக்கும் என்ன தண்டனை கிடைக்கப் போகுது என்பதை தெரிந்து கொள்ள பத்திரிக்கையாளர்களும் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளின் உறவினர்களும் காத்திருந்தனர்.
எப்படியோ இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அமர்நாத்தின் குடும்பமும் பதறி அடித்து டெல்லிக்கு வந்தார்கள்.
நடந்த விஷயத்தை எல்லாம் அவர்களும் கேள்விப்பட்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.ஆயிரம் தான் குற்றவாளியா இருந்தாலும், எப்படியாவது போராடி அமர்நாத்தை வெளியே கொண்டு வருவதற்கான அத்தனை ஏற்பாடும் அமர்நாத்தின் பையன் பண்ண,அதற்கு எந்த பலனுமில்லாமல் போனது.
இது நேரடியாக பிரதமர் மூலமாக வந்து புகார் என்பதால் யாரும் எதுவும் செய்ய முடியாமல் கைவிரித்தார்கள்
எப்படியாவது என் மகன் என்னை வெளியே எடுத்திடுவான்.இல்லையே அவன் தான் யாத்திரை போயிருக்கானானே...
அப்போ என் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காக எவ்வளவோ விஷயம் பண்ணிருக்கிறேன்.அதில் ஒருவர் நிச்சயமாக என்னை பெயிலில் எடுப்பார்கள்.பிறகு இருக்குடா உங்களுக்கு...
அடியேய்...
அன்றைக்கு என் கையில் இருந்தும் தப்பிச்சிட்ட.இப்போ வசமா சிக்கிட்ட.வயசு போனாலும் இன்னும் தளதளனு தான் டி இருக்க.உன்னை அனுபவிக்காமல் விடமாட்டேன் டி என ஜெயிலுக்கள் இருந்த அமர்நாத் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறான்.
ஆனால் இந்த விஷயம் கேள்வி பட்டதிலிருந்து அவனது நண்பர்கள் மொத்தமாக அவனை விட்டு விலகினர் என்பது இவனுக்கு தெரியவில்லை.
மூன்றாவது வழக்காக அமர்நாத்துடையது கோர்ட்டிற்கு வந்தது.
மரியாதை நிமித்தமாக ஜட்ஜிற்கு வணக்கம் சொன்னார்கள்.
உங்கள் தரப்பிலிருந்து எதாவது சொல்ல விரும்புகிறீர்களா என அமர்நாத்தை கேட்க...எனக்கும் இந்த குற்றத்திற்கும் சம்பந்தம் இல்லைங்க சார்.
நான் இதை பண்ணவில்லை..எனது புகழுக்கு கலங்கம் வர வைப்பதற்காக எதிர்கட்சி ஆட்களோடு சேர்ந்து கொண்டு இவர்கள் செய்த சதியென்றான்.
எஸ் மை லார்ட்...
இவங்க சொல்ற தேதியில் எனது கட்சி காரர் அன்று டெல்லியிலே இல்லை.இதோ அதற்கான சான்று என்று அமர்நாத்தின் வக்கீலும் ஆதாரத்தை நீட்டினான்.
அதை வாங்கி படித்து பார்த்து சிரித்தவர் தனது போனில் எதையோ செக் பண்ணி விட்டு நிமிர்ந்தவர் ஆஹ அன்றைய தினத்தில் உங்கள் கட்சிகாரர் பெங்களூரில் அவருடைய அக்கா வீட்டில் இருந்திருக்கிறார் அப்படி தானே?
"எஸ் மை லார்ட்"
அவரை ஒரு பார்வை பார்த்த ஜட்ஜ்,நீங்கள் சொன்ன தேதியில் எந்த டிராவல்ஸில் இருந்து டிக்கெட் புக் பண்ணுனீங்க?
அதை சொல்லுங்கள்....?
மை லார்ட் 2005 பிப்ரவரி 5 ஆம் தேதி,மிதுன் டிராவல்ஸ்..
ஓஓஓஓஓ...விபத்து நடந்த டேட் என்ன?
அது வந்துங்க லார்ட் என்று அமர்நாத்தின் வக்கீல் தடுமாறியவர், ஹம் விபத்து நடந்த தேதி ஜனவரி 20, 2005 வது வருஷம்
இஸ் ஈட்... பட் நீங்கள் கொடுத்த ஆதாரம் பிப்ரவரி 5.
என்னங்க இதெல்லாம்?
அது வந்துங்க மை லார்ட் ஏதோ பிரிண்டிங் மிஸ்டேக் அதான் என்று பரசுராமன் சொல்ல,ஓஹோ..மிஸ்டர் பரசுராமன் நீங்கள் சொன்ன டிராவல்ஸ் ஓபன் பண்ணியதே 2006 ல்.பிறகு எப்படி 2005 ல் இவர் டிராவல்ஸில் புக் பண்ணியிருக்க முடியுமென்று ஜட்ஜ் கேட்க அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை...
வீழ்ந்தேனடி