Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 457
- Thread Author
- #1
டெல்லி-கோர்ட்:
பிறகு அந்த பள்ளத்திலிருந்து ஒரு வழியா குழந்தைகளோடு மேலே ஏறி வந்து பாயல் எங்கே என்று பார்க்கும் போது தான் சற்று தூரத்தில் கிடப்பது தெரிந்தது.
பின் மண்டையில் அடிபட்டு மயங்கி கிடந்த அவங்களை தூக்கிட்டு ரோட்டிற்கு வரும் போது,அந்த வழியாக வந்த வேன் முன்னால் கையை நீட்ட அவர்களும் நிறுத்தினார்கள்.
அதிலிருந்த கிறிஸ்தவ பாதர்கள்
எங்கள் நிலையை பார்த்து வேனில் ஏத்திக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு போனாங்க.அங்கு ட்ரீட்மென்ட் பண்ணும் போது தான் பாயல் கோமாவுக்கு போயிட்டாங்கன்னு டாக்டர் சொன்னார்.
பிறகு அவங்க யாரென்று சொல்லி டாக்டர் கர்ணன் கிட்ட இன்ஃபார்ம் பண்ண சொல்லிட்டு சற்று முன்பு நடந்த விஷயத்தை சொல்லவும் இனி இங்கு இருக்க வேண்டாம்னு குழைந்தைகளோடு நானும் அவர்களோடு தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன்.
கோயம்புத்தூரில் இருக்கும் பவுல் ஆசிரமத்தில் தான் குழந்தைகளோட நானும் இருந்தேன்.பாதர் ஜேக்கப் தான் எங்களுக்கு ஆறுதலாக இருந்தது.
நான் செய்த தப்பெல்லாம் பாதர் கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்ட அவர் எனக்கு பாவமன்னிப்பு கொடுத்தார்.மனம் திருந்தி அவர்களோடு ஊழியத்துக்கு போக ஆரம்பிச்சேன்.
பிறகு அவர் மூலயமாக பைபிள் காலேஜ் படித்து நானும் ஊழியம் பண்ண தொடங்கினேன்.குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வேணும்ங்கிறதுக்காக தான் அவர் மூலமா டெல்லியில் இருக்கும் பெத்தேல் ஆசிரமத்துக்கு அனுப்பி வச்சேன்.
16 வருஷம் ஓடியது ஆனாலும் பாயலுக்கு நினைவு வரவில்லை.கடந்த நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் நான் தூங்கிட்டு இருக்கும்போது எனக்கு கால் வந்துச்சு.
டெல்லியில் இருக்கிற மருத்துவமனையில் இருந்து பேசுறோம்னு சொன்னாங்க,குரல் வேறாக இருக்க கொஞ்சம் பயம் வந்துருச்சி.
சந்துரு தானே என்று கேட்கும் போது தான் அவர்களை நம்பி ம்ம் சொல்லுங்க என்கும் போது பாயலுக்கு நினைவு வந்துருச்சுன்னு சொன்னாங்க..
மறுநாள் நான் டெல்லியில் போய் பாயலை பார்த்தேன்.நல்லவேளை ஆண்டவர் கிருபையால் என்னை நினைவு இருந்தது.
தகுந்த ஆதாரங்கள் இருந்தால் தானே தைரியமாக இறங்க முடியும்?இந்த இருபது வருஷத்தில் எதோதோ பண்ணி அமர்நாத் மினிஸ்டர் ஆகிட்டான்னு தெரிஞ்சது.
அந்த வீடியோ மட்டும் இருந்திருந்தால் இந்த நிமிஷமே அவனுக்கு தண்டனை வாங்கி தந்திருக்கலாம்.அது தான் ஜுப்பில் எரிந்து போயிடுச்சேனு நான் வருத்தமாக சொல்லும் போது,இல்லை ணா என்று பாயல் சொல்லியது.
என்ன மா சொல்றனு நான் அதிர, அன்றைக்கு என்னை ரூமில் அடைத்து வைக்கும் போது வீடியோ கேமராவை அங்கிருந்த டேபிள் மேல் வச்சிட்டு வெளியே பூட்டிட்டு போய்ட்டான்.
கொஞ்ச நேரம் போய் அந்த ரூமிலிருந்து வெளியே போக வழி இருக்கானு நான் செக் பண்ணும் போது இன்னொரு கதவு இருப்பது தெரிந்து,அதை திறந்து பார்க்க தோட்டமென்று தெரிந்தது.
கேமராவை அங்கிருந்த பாலிதீன் கவரில் வைத்து கட்டி எடுத்து போய் தோட்டத்தில் இருந்த மாமரத்தின் கீழ் குழி தோண்டி புதைத்து விட்டு உள்ளே வரும் போது தான் அமர்நாத் வந்துட்டான்.
பிறகு தான் கை கால் கட்டி போட்டுட்டு போயிட்டான்னு பாயல் சொல்லுச்சு.
நாங்கள் ரெண்டு பேரும் மாறு வேடத்தில் அந்த பங்களாவை தேடி போனோம்.
இருபது வருஷத்தில் ஏகப்பட்ட மாற்றம்...அதும் இல்லாமல் பழைய வீடு இல்லை புது பில்டிங்காக இருந்தாலும் அப்போது உள்ள மரங்கள் அப்படியே இருக்க,அதோட பக்கத்தில் இருந்த இடத்தையும் வளைத்து இன்னும் சில மாமரங்கள் தோட்டத்தில் இருப்பதையும்,இப்போது அந்த வீடு அமர்நாத்துக்கு சொந்தமானதுனு வாட்ச்மேன் மூலமாக தெரிந்து கொண்டோம்.
யாரும் இல்லாத நேரத்தில் அங்கு போய் தேடலாமென்று முடிவு பண்ணி கண்காணிச்சுக்கிட்டே இருக்க, நாட்களும் வாரங்களா போய் மாதங்களா ஓடுனதே தவிர எதுவும் நடக்கவில்லை.
இப்படியே ஆறு மாதம் கடந்து போயிடுச்சு அப்பதான் பாதர் ஜேக்கப் இறந்து விட்டதாக எனக்கு செய்தி வந்தது.உடனே நான் பாயல் கிட்ட சொல்லிட்டு தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெரியலை.கடந்த வாரத்தில் சிபிஐ ஆபிசருங்கள் இரண்டு பேர் என்னை பார்க்க ஆசிரமத்திற்கு வந்தார்கள்.
அத்தனை அப்பாவி உயிர்களை அநியாயமாக எடுத்து விட்டு ஊருக்குள் நல்லவனாக சுத்திட்டு இருக்கானே என்று அமர்நாத்தின் மேல் அவ்வளவு கோபம் வந்தது.
நமது குற்றம் வெளியே வந்துவிட்டதே, இதுவரைக்கும் எந்த சாட்சியும் இல்லை என்று இதைப் பற்றி மறந்து போய் நிம்மதியாக இருந்தேனே,இப்படி இருவரும் வந்து நமது அரசியல் வாழ்க்கைக்கு மொத்தமாக சமாதி கட்டி விட்டனரே என்று இருவரையும் கொலை வெறியில் அமர்நாத் பார்த்துக் கொண்டிருந்தான்.
சரி நீங்க போங்க என்று ஃபாதரை போக சொல்லவும் தேங்க்யூ சார் என்றவாறு அவர் வந்து உட்கார்ந்து கொள்ள வழக்கை விசாரித்த ஆபிசர் யார் என்று கேட்க செழியன் வெற்றி கபிலன் மூவரும் கூண்டிற்குள் ஏறினார்கள்.
மூவரையும் பார்த்தவர் சொல்லுங்க ஆபிசர்ஸ்.உங்களுக்கு எப்படி இந்த கேஸ் பற்றி புகார் வந்தது?
பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக சிபிஐக்கு இந்த கேசை பற்றி விசாரிக்க சொல்லி உத்தரவு வந்தது. எங்களுடைய தலைமை அதிகாரி தான் இந்த கேஸை எங்கள் மூவரிடம் ஒப்படைத்தார்கள் என்றனர்.
ஓகே புகார் கொடுத்தது யார்?
கூண்டை விட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாயல் நான் தான் சார் என்கவும் அப்படியா என்றவர் மீதி நடந்த விஷயம் உங்களுக்கு தான் தெரியும்.ஹம் என்ன நடந்தது சொல்லுங்கள் என்றார்.
எஸ் சார் என்றவர் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த வசந்தரா சுந்தரபாண்டியன் எனக்கு நெருங்கிய சிநேகிதி.அவருடைய சொந்த ஊர் கேரளா என்பதும் அவங்க அப்பாவும் முன்னால் கமிஷனர் என்பதும், அவர்கள் வீட்டிற்கு நான் போயிருக்கிறேன் என்பதும் அப்பொழுது எனக்கு ஞாபகம் வந்தது.
பிறகு தோழியின் தந்தையிடம் உதவி கேட்கலாமென்று நானே கேரளாவுக்கு அவர்களை தேடி போக,எல்லாரையும் போல் அங்கிள் ஆன்ட்டியும் எங்கள் குடும்பம் அந்த விபத்தில் இறந்து போயிட்டதாக நினைச்சுட்டு இருந்தவர்கள்,என்னை பார்த்து அதிர்ந்து போயிட்டாங்க.
அவங்க கிட்ட நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி நான் அழும் போதுதான் வசுந்தரா தற்பொழுது கோவை மாவட்டத்தில் கலெக்டராக இருக்கிற விஷயத்தை சொன்னவர்கள் வசு மூலமா இந்த கேசை பற்றி கம்ப்ளைண்ட் கொடுக்கலானு அங்கிள் சொன்னாங்க.
சரி என்று நாங்கள் மூவரும் வசுந்தராவை பார்க்க வந்தோம்.20 வருஷத்துக்கு பிறகு உயிரோடு இருக்கிற என்னை பார்த்து வசுவும் அதிர்ந்து போனாள். பிறகு வசுவின் மூலமாக பிரதமர் அலுவலகத்திற்கு நேர்ல போய் புகார் கொடுத்தோம்.
எந்த ஆதாரமும் இல்லாமல் அமர்நாத்தை விசாரிக்க பர்மிஷன் தர முடியாதுன்னு பிரதமரும் சொல்லிட்டாரு.
என்ன பண்ணலாம் என்று நாங்கள் யோசிக்கும் போது தான் வசுவோட பையன் வெற்றியும் அவரது நண்பர்களான இன்னும் இருவரும் வீட்டுக்கு வந்தனர்.
வசுவின் முகத்தை வைத்து எதுவோ சரியில்லை என்பதை புரிந்து கொண்ட வெற்றி என்னம்மா பிரச்சினை என்க சுருக்கமாக விஷயத்தை சொன்னோம்.
சரி நாங்கள் பார்த்துக்குறோம் என்றார்கள்.இப்படியே 3 மாதம் கடந்திருக்க,அந்த நேரத்தில் தான் அமர்நாத் பையனுக்கு கல்யாணம் ஏற்பாடு நடந்துச்சு.
பிரபலமான ஹோட்டல்ல வரவேற்பு பங்க்ஷன் வைத்திருக்க வாட்ச்மெனை தவிர வீட்ல யாருமே இல்லை என்பது தெரிந்து அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு,வாட்ச்மென் கிட்ட போய் தோட்டத்தில் இருக்கும் மூலிகை செடிகளில் எங்கள் அப்பாவுடைய வைத்தியத்திற்கு கொஞ்சம் தேவைப்படுதுனு
அவனை நம்ப வைத்து விட்டு நான் வெற்றி செழியன் மூவரும் அங்க போய் ஒவ்வொரு மரமாக தோண்டிக் கொண்டே வர,நேரம் கடந்ததே தவிர கேமரா கிடைக்கவில்லை.
இன்னும் இரண்டு மரம் தான் மீதமிருக்க அதில் போய் தேடும் போது தான் ஒரு மரத்தின் கீழே கவர் இருப்பதை கண்டு பிடித்தோம்.
அதை பார்த்த பிறகு தான் எனக்கு உயிரே வந்துச்சு.பாலித்தின் கவருக்குள் இருந்ததால் கேமராவிற்கு எதுவும் ஆகலை.
கேமராவை எடுத்து ஆன் பண்ணி பார்த்தோம் ஆன் ஆகலை.20 வருஷமாக மண்ணுக்குள் இருந்ததாச்சே...பிறகு ஒரு வழியா அதை எடுத்து போய் நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து இதை சரி பண்ணி தரச் சொல்லி கேட்டோம்.
ஒரு வாரத்தில் ரெடியானதாக வீட்டு நம்பருக்கு கால் வந்தது.அதை ஆன் பண்ணி வீடியோவை நாங்கள் பார்த்து விட்டு பிரதமர் கிட்ட எடுத்துட்டு போய் காட்டினோம்.
பிறகு தான் அவர் சிபிஐ கிட்ட என்னுடைய புகாரை விசாரிக்க சொல்லி உத்தரவிட்டார் என்று தனக்கு தெரிந்ததை எல்லாம் பாயல் சொல்லி முடிக்க,இனி நாம தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பது அமர்நாத்திற்கு புரிந்து விட்டது.
ஓகே நீங்க போங்க என்றவர் அங்கிருக்கும் மூன்று அதிகாரிகளையும் பார்த்து சொல்லுங்க இன்வெஸ்டிகேஷன் எங்கிருந்து ஆரம்பித்தீர்கள்?
கேஸ் எங்க கிட்ட வந்ததும் நாங்க முதல்ல அந்த வீடியோவில் இருக்கும் மற்ற ஆட்களை தான் தேடி போனோம். அவங்களையெல்லாம் தேடிப் பிடிச்சு அழைச்சுட்டு வந்து ஒரு இடத்துல வச்சு அவங்க வாயிலிருந்து உண்மையை வரவைக்கிறதுக்கே எங்களுக்கு ஒன்றரை வருஷத்துக்கு மேல தேவைப்பட்டது.
பிறகுதான் அரெஸ்ட் வாரண்ட்டு பர்மிஷன் கொடுத்தார்கள் என்றவர்கள் அவர்களிடம் உள்ள மற்ற ஆதாரங்களையும் கோர்ட்டில் ஒப்படைத்தார்கள்.
முதலில் மற்ற குற்றவாளிகளுடைய வாக்குமூலங்கள் பதிவாகிய வீடியோவை பார்த்த ஜட்ஜ்,அடுத்ததாக இருந்த வீடியோ கேமராவை ஆன் பண்ணி வீடியோவை பார்க்க அதில் வம்சீகனையம் அவர் மனைவியும் அடியாட்கள் பிடித்துக் கொள்ள தனது இடுப்பிலிருந்த கத்தியை எடுத்த அமர்நாத் இருவரின் உயிர் போகும் வரை குத்தினான்.
அப்போது கதவைத் திறந்து வெளியே வந்து இளம் வயது பாயலோ இதை பார்த்து அதிர்ந்து கத்தியவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டவன் இவள் மூலமாக விஷயம் வெளியில சென்றால் நம்ப எல்லாருக்கும் தூக்குதான் என்றவன் ஆளு சோக்கா இருக்கிறாள்.
இனிமே இவள் தான் நமக்கு விருந்து என்றவாறு குத்திய கத்தியை கீழே போட்டவன் எட்டி பாயலை பிடித்து இழுத்து அவள் வாயை பொத்தினான்.
பிறகு அந்த பள்ளத்திலிருந்து ஒரு வழியா குழந்தைகளோடு மேலே ஏறி வந்து பாயல் எங்கே என்று பார்க்கும் போது தான் சற்று தூரத்தில் கிடப்பது தெரிந்தது.
பின் மண்டையில் அடிபட்டு மயங்கி கிடந்த அவங்களை தூக்கிட்டு ரோட்டிற்கு வரும் போது,அந்த வழியாக வந்த வேன் முன்னால் கையை நீட்ட அவர்களும் நிறுத்தினார்கள்.
அதிலிருந்த கிறிஸ்தவ பாதர்கள்
எங்கள் நிலையை பார்த்து வேனில் ஏத்திக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு போனாங்க.அங்கு ட்ரீட்மென்ட் பண்ணும் போது தான் பாயல் கோமாவுக்கு போயிட்டாங்கன்னு டாக்டர் சொன்னார்.
பிறகு அவங்க யாரென்று சொல்லி டாக்டர் கர்ணன் கிட்ட இன்ஃபார்ம் பண்ண சொல்லிட்டு சற்று முன்பு நடந்த விஷயத்தை சொல்லவும் இனி இங்கு இருக்க வேண்டாம்னு குழைந்தைகளோடு நானும் அவர்களோடு தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன்.
கோயம்புத்தூரில் இருக்கும் பவுல் ஆசிரமத்தில் தான் குழந்தைகளோட நானும் இருந்தேன்.பாதர் ஜேக்கப் தான் எங்களுக்கு ஆறுதலாக இருந்தது.
நான் செய்த தப்பெல்லாம் பாதர் கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்ட அவர் எனக்கு பாவமன்னிப்பு கொடுத்தார்.மனம் திருந்தி அவர்களோடு ஊழியத்துக்கு போக ஆரம்பிச்சேன்.
பிறகு அவர் மூலயமாக பைபிள் காலேஜ் படித்து நானும் ஊழியம் பண்ண தொடங்கினேன்.குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வேணும்ங்கிறதுக்காக தான் அவர் மூலமா டெல்லியில் இருக்கும் பெத்தேல் ஆசிரமத்துக்கு அனுப்பி வச்சேன்.
16 வருஷம் ஓடியது ஆனாலும் பாயலுக்கு நினைவு வரவில்லை.கடந்த நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் நான் தூங்கிட்டு இருக்கும்போது எனக்கு கால் வந்துச்சு.
டெல்லியில் இருக்கிற மருத்துவமனையில் இருந்து பேசுறோம்னு சொன்னாங்க,குரல் வேறாக இருக்க கொஞ்சம் பயம் வந்துருச்சி.
சந்துரு தானே என்று கேட்கும் போது தான் அவர்களை நம்பி ம்ம் சொல்லுங்க என்கும் போது பாயலுக்கு நினைவு வந்துருச்சுன்னு சொன்னாங்க..
மறுநாள் நான் டெல்லியில் போய் பாயலை பார்த்தேன்.நல்லவேளை ஆண்டவர் கிருபையால் என்னை நினைவு இருந்தது.
தகுந்த ஆதாரங்கள் இருந்தால் தானே தைரியமாக இறங்க முடியும்?இந்த இருபது வருஷத்தில் எதோதோ பண்ணி அமர்நாத் மினிஸ்டர் ஆகிட்டான்னு தெரிஞ்சது.
அந்த வீடியோ மட்டும் இருந்திருந்தால் இந்த நிமிஷமே அவனுக்கு தண்டனை வாங்கி தந்திருக்கலாம்.அது தான் ஜுப்பில் எரிந்து போயிடுச்சேனு நான் வருத்தமாக சொல்லும் போது,இல்லை ணா என்று பாயல் சொல்லியது.
என்ன மா சொல்றனு நான் அதிர, அன்றைக்கு என்னை ரூமில் அடைத்து வைக்கும் போது வீடியோ கேமராவை அங்கிருந்த டேபிள் மேல் வச்சிட்டு வெளியே பூட்டிட்டு போய்ட்டான்.
கொஞ்ச நேரம் போய் அந்த ரூமிலிருந்து வெளியே போக வழி இருக்கானு நான் செக் பண்ணும் போது இன்னொரு கதவு இருப்பது தெரிந்து,அதை திறந்து பார்க்க தோட்டமென்று தெரிந்தது.
கேமராவை அங்கிருந்த பாலிதீன் கவரில் வைத்து கட்டி எடுத்து போய் தோட்டத்தில் இருந்த மாமரத்தின் கீழ் குழி தோண்டி புதைத்து விட்டு உள்ளே வரும் போது தான் அமர்நாத் வந்துட்டான்.
பிறகு தான் கை கால் கட்டி போட்டுட்டு போயிட்டான்னு பாயல் சொல்லுச்சு.
நாங்கள் ரெண்டு பேரும் மாறு வேடத்தில் அந்த பங்களாவை தேடி போனோம்.
இருபது வருஷத்தில் ஏகப்பட்ட மாற்றம்...அதும் இல்லாமல் பழைய வீடு இல்லை புது பில்டிங்காக இருந்தாலும் அப்போது உள்ள மரங்கள் அப்படியே இருக்க,அதோட பக்கத்தில் இருந்த இடத்தையும் வளைத்து இன்னும் சில மாமரங்கள் தோட்டத்தில் இருப்பதையும்,இப்போது அந்த வீடு அமர்நாத்துக்கு சொந்தமானதுனு வாட்ச்மேன் மூலமாக தெரிந்து கொண்டோம்.
யாரும் இல்லாத நேரத்தில் அங்கு போய் தேடலாமென்று முடிவு பண்ணி கண்காணிச்சுக்கிட்டே இருக்க, நாட்களும் வாரங்களா போய் மாதங்களா ஓடுனதே தவிர எதுவும் நடக்கவில்லை.
இப்படியே ஆறு மாதம் கடந்து போயிடுச்சு அப்பதான் பாதர் ஜேக்கப் இறந்து விட்டதாக எனக்கு செய்தி வந்தது.உடனே நான் பாயல் கிட்ட சொல்லிட்டு தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெரியலை.கடந்த வாரத்தில் சிபிஐ ஆபிசருங்கள் இரண்டு பேர் என்னை பார்க்க ஆசிரமத்திற்கு வந்தார்கள்.
அத்தனை அப்பாவி உயிர்களை அநியாயமாக எடுத்து விட்டு ஊருக்குள் நல்லவனாக சுத்திட்டு இருக்கானே என்று அமர்நாத்தின் மேல் அவ்வளவு கோபம் வந்தது.
நமது குற்றம் வெளியே வந்துவிட்டதே, இதுவரைக்கும் எந்த சாட்சியும் இல்லை என்று இதைப் பற்றி மறந்து போய் நிம்மதியாக இருந்தேனே,இப்படி இருவரும் வந்து நமது அரசியல் வாழ்க்கைக்கு மொத்தமாக சமாதி கட்டி விட்டனரே என்று இருவரையும் கொலை வெறியில் அமர்நாத் பார்த்துக் கொண்டிருந்தான்.
சரி நீங்க போங்க என்று ஃபாதரை போக சொல்லவும் தேங்க்யூ சார் என்றவாறு அவர் வந்து உட்கார்ந்து கொள்ள வழக்கை விசாரித்த ஆபிசர் யார் என்று கேட்க செழியன் வெற்றி கபிலன் மூவரும் கூண்டிற்குள் ஏறினார்கள்.
மூவரையும் பார்த்தவர் சொல்லுங்க ஆபிசர்ஸ்.உங்களுக்கு எப்படி இந்த கேஸ் பற்றி புகார் வந்தது?
பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக சிபிஐக்கு இந்த கேசை பற்றி விசாரிக்க சொல்லி உத்தரவு வந்தது. எங்களுடைய தலைமை அதிகாரி தான் இந்த கேஸை எங்கள் மூவரிடம் ஒப்படைத்தார்கள் என்றனர்.
ஓகே புகார் கொடுத்தது யார்?
கூண்டை விட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாயல் நான் தான் சார் என்கவும் அப்படியா என்றவர் மீதி நடந்த விஷயம் உங்களுக்கு தான் தெரியும்.ஹம் என்ன நடந்தது சொல்லுங்கள் என்றார்.
எஸ் சார் என்றவர் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த வசந்தரா சுந்தரபாண்டியன் எனக்கு நெருங்கிய சிநேகிதி.அவருடைய சொந்த ஊர் கேரளா என்பதும் அவங்க அப்பாவும் முன்னால் கமிஷனர் என்பதும், அவர்கள் வீட்டிற்கு நான் போயிருக்கிறேன் என்பதும் அப்பொழுது எனக்கு ஞாபகம் வந்தது.
பிறகு தோழியின் தந்தையிடம் உதவி கேட்கலாமென்று நானே கேரளாவுக்கு அவர்களை தேடி போக,எல்லாரையும் போல் அங்கிள் ஆன்ட்டியும் எங்கள் குடும்பம் அந்த விபத்தில் இறந்து போயிட்டதாக நினைச்சுட்டு இருந்தவர்கள்,என்னை பார்த்து அதிர்ந்து போயிட்டாங்க.
அவங்க கிட்ட நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி நான் அழும் போதுதான் வசுந்தரா தற்பொழுது கோவை மாவட்டத்தில் கலெக்டராக இருக்கிற விஷயத்தை சொன்னவர்கள் வசு மூலமா இந்த கேசை பற்றி கம்ப்ளைண்ட் கொடுக்கலானு அங்கிள் சொன்னாங்க.
சரி என்று நாங்கள் மூவரும் வசுந்தராவை பார்க்க வந்தோம்.20 வருஷத்துக்கு பிறகு உயிரோடு இருக்கிற என்னை பார்த்து வசுவும் அதிர்ந்து போனாள். பிறகு வசுவின் மூலமாக பிரதமர் அலுவலகத்திற்கு நேர்ல போய் புகார் கொடுத்தோம்.
எந்த ஆதாரமும் இல்லாமல் அமர்நாத்தை விசாரிக்க பர்மிஷன் தர முடியாதுன்னு பிரதமரும் சொல்லிட்டாரு.
என்ன பண்ணலாம் என்று நாங்கள் யோசிக்கும் போது தான் வசுவோட பையன் வெற்றியும் அவரது நண்பர்களான இன்னும் இருவரும் வீட்டுக்கு வந்தனர்.
வசுவின் முகத்தை வைத்து எதுவோ சரியில்லை என்பதை புரிந்து கொண்ட வெற்றி என்னம்மா பிரச்சினை என்க சுருக்கமாக விஷயத்தை சொன்னோம்.
சரி நாங்கள் பார்த்துக்குறோம் என்றார்கள்.இப்படியே 3 மாதம் கடந்திருக்க,அந்த நேரத்தில் தான் அமர்நாத் பையனுக்கு கல்யாணம் ஏற்பாடு நடந்துச்சு.
பிரபலமான ஹோட்டல்ல வரவேற்பு பங்க்ஷன் வைத்திருக்க வாட்ச்மெனை தவிர வீட்ல யாருமே இல்லை என்பது தெரிந்து அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு,வாட்ச்மென் கிட்ட போய் தோட்டத்தில் இருக்கும் மூலிகை செடிகளில் எங்கள் அப்பாவுடைய வைத்தியத்திற்கு கொஞ்சம் தேவைப்படுதுனு
அவனை நம்ப வைத்து விட்டு நான் வெற்றி செழியன் மூவரும் அங்க போய் ஒவ்வொரு மரமாக தோண்டிக் கொண்டே வர,நேரம் கடந்ததே தவிர கேமரா கிடைக்கவில்லை.
இன்னும் இரண்டு மரம் தான் மீதமிருக்க அதில் போய் தேடும் போது தான் ஒரு மரத்தின் கீழே கவர் இருப்பதை கண்டு பிடித்தோம்.
அதை பார்த்த பிறகு தான் எனக்கு உயிரே வந்துச்சு.பாலித்தின் கவருக்குள் இருந்ததால் கேமராவிற்கு எதுவும் ஆகலை.
கேமராவை எடுத்து ஆன் பண்ணி பார்த்தோம் ஆன் ஆகலை.20 வருஷமாக மண்ணுக்குள் இருந்ததாச்சே...பிறகு ஒரு வழியா அதை எடுத்து போய் நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து இதை சரி பண்ணி தரச் சொல்லி கேட்டோம்.
ஒரு வாரத்தில் ரெடியானதாக வீட்டு நம்பருக்கு கால் வந்தது.அதை ஆன் பண்ணி வீடியோவை நாங்கள் பார்த்து விட்டு பிரதமர் கிட்ட எடுத்துட்டு போய் காட்டினோம்.
பிறகு தான் அவர் சிபிஐ கிட்ட என்னுடைய புகாரை விசாரிக்க சொல்லி உத்தரவிட்டார் என்று தனக்கு தெரிந்ததை எல்லாம் பாயல் சொல்லி முடிக்க,இனி நாம தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பது அமர்நாத்திற்கு புரிந்து விட்டது.
ஓகே நீங்க போங்க என்றவர் அங்கிருக்கும் மூன்று அதிகாரிகளையும் பார்த்து சொல்லுங்க இன்வெஸ்டிகேஷன் எங்கிருந்து ஆரம்பித்தீர்கள்?
கேஸ் எங்க கிட்ட வந்ததும் நாங்க முதல்ல அந்த வீடியோவில் இருக்கும் மற்ற ஆட்களை தான் தேடி போனோம். அவங்களையெல்லாம் தேடிப் பிடிச்சு அழைச்சுட்டு வந்து ஒரு இடத்துல வச்சு அவங்க வாயிலிருந்து உண்மையை வரவைக்கிறதுக்கே எங்களுக்கு ஒன்றரை வருஷத்துக்கு மேல தேவைப்பட்டது.
பிறகுதான் அரெஸ்ட் வாரண்ட்டு பர்மிஷன் கொடுத்தார்கள் என்றவர்கள் அவர்களிடம் உள்ள மற்ற ஆதாரங்களையும் கோர்ட்டில் ஒப்படைத்தார்கள்.
முதலில் மற்ற குற்றவாளிகளுடைய வாக்குமூலங்கள் பதிவாகிய வீடியோவை பார்த்த ஜட்ஜ்,அடுத்ததாக இருந்த வீடியோ கேமராவை ஆன் பண்ணி வீடியோவை பார்க்க அதில் வம்சீகனையம் அவர் மனைவியும் அடியாட்கள் பிடித்துக் கொள்ள தனது இடுப்பிலிருந்த கத்தியை எடுத்த அமர்நாத் இருவரின் உயிர் போகும் வரை குத்தினான்.
அப்போது கதவைத் திறந்து வெளியே வந்து இளம் வயது பாயலோ இதை பார்த்து அதிர்ந்து கத்தியவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டவன் இவள் மூலமாக விஷயம் வெளியில சென்றால் நம்ப எல்லாருக்கும் தூக்குதான் என்றவன் ஆளு சோக்கா இருக்கிறாள்.
இனிமே இவள் தான் நமக்கு விருந்து என்றவாறு குத்திய கத்தியை கீழே போட்டவன் எட்டி பாயலை பிடித்து இழுத்து அவள் வாயை பொத்தினான்.