Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 459
- Thread Author
- #1
டெல்லி:
எதிரே உள்ள கூண்டில் நின்று கொண்டிருந்த அமர்நாத் அய்யோ சார் இவங்க யாருன்னு தெரியலை.எதற்காக என் மேல இப்படி ஒரு பொய்யான வழக்கை போடுறாங்களோ??அது கடவுளுக்கு தான் வெளிச்சம்.
நான் ஒரு மினிஸ்டர் என் மேலே இப்படி அபாண்டமாக பழி போடுகிறார்களே,அப்போ அப்பாவி மக்களை என்னென்ன பண்ணுவார்கள் என்று நாடகமாடினான்.
அவன் பேசியதை கேட்ட ஜட்ஜ் அமைதி அமைதி,உங்கள் தரப்பை விசாரிக்கும் போது அப்பொழுது நீங்க சொல்லுங்கள் இப்பொழுது உமாவை விசாரிக்கும்படி அனுமதி தந்தார்.
தேங்க்யூ மை லார்ட், ஹம் சொல்லுங்க மிசஸ் பாயல் உங்களுக்கும் இந்த கேஸிற்கும் என்ன சம்பந்தம்?
எதை வைத்து இது திட்டமிட்ட சதி என்று பிரதமருக்கு லெட்டர் போட்டுருக்கீங்க என்க,அழுது கொண்டிருந்த பாயல் தனது கண்ணீரை கூட துடைக்காமல் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தவர் 20 வருடங்களுக்கு முன்பு தீ விபத்தில் இறந்து போனாரே கமிஷனர் வம்சிகன்,அவருடைய கசின் நான் என்கவும் அதைக் கேட்ட அமர்நாத் இருக்கும் இடத்தை மறந்தவன்,இன்னும் நீ உயிரோட தான் இருக்கியா என்றவனோ அவள் யாரென்று தெரிந்து கொண்டு அதிர்வதை எல்லாருமே பார்த்தனர்.
மிஸஸ் பாயல் நீங்க சொல்ற விஷயம் சாதாரணமானது கிடையாது.அன்று நடந்த தீ விபத்தில் அங்கிருந்த அத்தனை பேரும் உடல் கருகி இறந்துவிட்டதாக ரிப்போர்ட் இருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி உயிரோடு இருந்தீங்க?
அடுத்து நீங்கள் தான் முன்னால் கமிஷனர் வம்சீகனின் கசின் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா என்று அமர்நாத்தின் வக்கீல் கேட்க,எஸ் மை லார்ட் என்ற உமாமகேஸ்வரி தான் எடுத்து வந்த பைலை கொண்டு போய் ரைட்டரிடம் கொடுக்க அவரும் அதை வாங்கி ஜட்ஜிடம் கொடுத்தார்.
அந்த வீடியோவை கோர்ட்டில் பிளே பண்ண,முதலாவதாக இருந்த போட்டோவை காட்டியவர் 1992 ஆம் வருடம் பிப்ரவரி ஐந்தாம் தேதி தமிழ்நாட்டின் விவசாய துறை அமைச்சராக இருந்த சாந்தப்பனின் மகன் குடி போதையில் கார் ஓட்டி போய், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை கொன்றதையும் எந்த அச்சுறுதலுக்கும் பயப்படாமல் முன்னால் வக்கீலாக இருந்த வேதாச்சலம் அவர்கள் வாதாடி வெற்றி பெற்றதற்கு அன்றைய முதல்வராக இருந்த கனியன் அவர்கள் வேதாச்சலத்தையும் அவரது ஜூனியரையும் முதல்வர் அலுவலகத்தில் வர வைத்து பாராட்டிய புகைப்படம்.
அதில் வலது பக்கத்திலிருந்து இரண்டாவதாக இருக்கும் பெண் தான் இந்த பாயல் அப்பொழுது பிரபலமாக இருந்த வேதாச்சலம் அவரிடம் இரண்டு ஆண்டுகளாக ஜூனியர் வக்கீலாக இருந்திருக்கிறார்.
அடுத்த புகைப்படத்தை காட்டியவர் இது டெல்லியில் இருக்கும் மருத்துவமனையில் பாயலுக்கு கொடுத்த பர்த் சர்டிபிகேட்.இது சென்னையில் இருக்கும் புகழ் பெற்ற கல்லூரியில் தனது இளநிலை படிப்பை முடித்த பாயல் கோல்டு மெடல் வாங்கியதற்காக பட்டமளிப்பு விழாவின் போது கவர்னர் அவர்கள் கையால் பாராட்டு மடலை வாங்கிய புகைப்படம்.
இன்னும் பல விதமான போட்டோக்களை காட்டி அது எப்பொழுது எடுத்தது என்று சொல்லும் உமா மகேஸ்வரியை பார்த்த அமர்நாத்தின் வக்கீல் அப்ஜக்ஷன் யுவர் ஆனர்.இப்பொழுது இருக்கும் நிலவரப்படி யார் யார் கூட வேணாலும் போட்டோவை ஒன்றாக இருந்தது போல் தயாரிக்க முடியும்.டெக்னாலஜி அவ்வளவு வளர்ந்து விட்டது.
எனது கட்சிக்காரர் மேல் ஏதோ ஒரு காரணத்திற்காக இப்படி வீண் பழியை சுமத்துகிறார்கள்.அதற்காக அவரோடு சேர்ந்து எதிர்க்கட்சி வக்கிலும் பிரமாதமாக கதையை ஜோடித்துக் கொண்டிருக்கிறார் என்று சிரிக்க...
சைலண்ட் என்று கோவமான ஜட்ஜ் மிஸ்டர் பரசுராம் இவர்கள் கொடுத்த சில போட்டோக்களை இப்போதைய முதல்வர் சக்திவேல் அவர்கள் அனுமதியோடு முதல்வர் அலுவலகத்தில் இருந்து வாங்கியிருப்பதற்கான ஆதாரம் இதில் உள்ளது என்க சாரி மை லார்ட் என்று உட்கார்ந்து கொண்டான்.
உமா மகேஸ்வரி இந்த போட்டோவில் இருக்கும் மிஸ்டர் வேதாச்சலம் உங்களுடைய தந்தை தானே என்று ஜட்ஜ் கேட்க எஸ் அவர் ஆனர்.
அவரின் இரண்டாவது மகள் உமாமகேஸ்வரி சுரேந்திர குமார் நான் தான்.அப்போ பாயலை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்க..
எனது தந்தை பிரபலமான வக்கீலாக இருந்தாலும் அவரிடம் நான் ஜூனியர் ஆக சேரவில்லை.சென்னையில் இருக்கும் ரிட்டையர்டு நீதிபதி தீனதயாளனிடம் தான் ஜூனியராக சேர்ந்து இருந்தேன்.
இரண்டொரு முறை கோர்ட்டுக்கு வரும்போது எனது தந்தையோடு பாயலை பார்த்திருக்கிறேன்.
ஆனால் நான் பேசியது இல்லை.
எனது தந்தையோ 2005 வருடம் ஜனவரி 20 ஆம் தேதி டெல்லியில் சாந்தி சௌவுக் என்ற இடத்தில் நடந்த தீ விபத்தில் அவரது ஜூனியர் பாயலும் அவரது குடும்பமும் இறந்து விட்டதாக சொல்ல அதைக் கேட்டு நான் வருத்தப்பட்டேன்.
பிறகு பாயல் உயிரோடு இருக்கும் விஷயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரியுமென்றார்.
ஓஓஓ என்று தலையசைத்தவர் கண்டினியூ என்க...
மை லார்ட் இன்னொரு முக்கியமான சாட்சியையும் கூண்டுக்குள் வர வைக்கிறேன்.அவரும் இந்த கேஸிற்கு முக்கியமானவர்...ஹம் பர்மிஷன் கிராண்டட் என்றார்.
அங்கிருந்த கூட்டத்தினரில் ஒருவரை பார்த்து உமா தலையசைக்க,பாதர் உடையில் 55 வயது தக்க ஒருவர் வருபவரை பார்த்து யார் இவர் என்று அங்கே சலசலப்பு எழுந்தது.
கூட்டிற்குள் வந்து நிற்கும் பாதரை பார்த்தவன் இவர் யார் என்று அமர்நாத் யோசனையானான்.ஜட்ஜை பார்த்து ப்ரைஸ் த லார்ட் என்றார் பாதர்.
கண்டினியூ மிஸ்சஸ் உமா என்கவும் தேங்க்யூ மை லார்ட் என்றவர் இங்கே கூண்டில் இருக்கும் பாதர் அகஸ்டினிற்கும் எதிர் கூண்டில் இருக்கும் அமர்நாத் அவர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஒரு காலத்தில் இருந்தது என்பதை இருவராலும் மறுக்க முடியாது என்க..
ஜட்ஜ் அய்யா அப்படியெல்லாம் சொல்லாதீங்க இந்த பாதரை இதுவரைக்கும் நான் பார்த்ததே கிடையாது எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமர்நாத் கத்த அமைதி அமைதி என்று ஜட்ஜ் சொல்ல வேறு வழியின்றி வாயை மூடிக் கொண்டான்.
பாதர் அகஸ்டின் உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்கவும் ஜீசஸ் என்றவர் என்னுடைய ஹிந்து பெயர் சத்துரு என்க, இதைக் கேட்ட அமர்நாத் நீயாஆஆஆஆஆ அப்போ நீயும் உயிரோடதான் இருக்கிறியாடா என்று மீண்டும் அவன் அதிர்வதை ஜட்ஜோடு மற்றவர்களும் பார்த்தனர்.
சரி நடந்ததை நீங்கள் சொல்லுங்கள். கண்டிப்பாக என்றவர் 20 வருடங்களுக்கு முன்பு நடந்ததை சொல்லத் தொடங்கினார். .
இருபது வருடங்களுக்கு முன்ப-டெல்லி:
இந்த வாட்டி வந்த கமிஷனர் ரொம்ப ஓவரா தான் பண்றான்.அவனுக்கு ஒரு பாடம் பண்ணா தான் சரியா வரும் என்று அங்கிருந்த அடியாள்கள் கூட்டத்தின் தலைவன் சொல்ல, ஆமா அண்ணா எனக்கு அந்த சான்ஸ் கொடு ணா என்றான் அவனிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த அமர்நாத்.
கண்டிப்பா உனக்கு தான் கொடுப்பேன் நீ கவலையே படாதே என்றவன் சரி இப்பொழுது நமது சரக்கு வரும் அதை போய் எடுத்துட்டு வாங்க என்று சொல்லவும் தலைவனின் உத்தரவை கேட்டு அங்கிருந்து சிட்டாக பறந்து சென்றனர்.
வம்சிகன் டெல்லிக்கு வந்து இரண்டு வருடங்களில் பெரும் அளவுக்கு குற்றங்களும் குறைந்து இருக்க இவர்களுக்கு நான் பெரும் திண்டாட்டமாக இருந்தது.
ஏதாவது ஒரு பொய் வழக்கில் வம்சிகனை மாட்டி விட வேண்டும் என்று இவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தார்கள்.
அப்பொழுது பிரபலமான வைர வியாபாரியை கொல்வதற்கான ஒரு அசைன்மென்ட் இவர்களை தேடி வந்தது.
பணத்திற்காக எதையும் செய்ய தயாராக இருந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ள அதேபோல் பிசினஸ் மீட்டிங் முடித்துவிட்டு வந்து கொண்டிருக்கும் போது ஆள் இல்லாத இடத்தில் அவரை வெட்டி கொலை செய்ய இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.பவன் குமாரின் தலமையில் கொலை நடந்திருப்பதை கண்டுபிடித்த வம்சிகனின் குழு ஆதாரங்களை கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு பண்ணியது.
அவன் கோர்ட்டுக்கு போகக்கூடாது.
இந்த கேசை யார் வெற்றிகரமாக முடித்துவிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு மிகப் பெரிய பரிசை தருவேன் என்று சொல்லவும், கோடிக்கணக்கு சொத்துக்கு பவன்குமார் முதலாளியாக இருக்க தானும் அதைப்போல் முதலாளியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட அமர்நாத் நான் போறேன் என்றான்.
இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போவதை பற்றி சந்துருக்கு தெரியாது.ஒரு மாதத்திற்கு முன்புதான் அவனது தங்கை தற்கொலை பண்ணிக் கொண்டதால் மனம் உடைந்து போனவன் வேலைக்கு வராமல் வீட்டிலேயே இருந்து கொண்டான்.
நாட்கள் சென்று அவனாக வருவான் என்று பவன்குமார் சொல்லிவிட மற்றவர்களும் சந்துருவை போய் தொந்தரவு பண்ணவில்லை.
ஏதோ ஒரு எண்ணத்தில் வீட்டில் படுத்து இருந்த சந்துரு தங்கையின் அறைக்கு போனவன் அவள் தற்கொலை பண்ணுவதற்கு ஏதாச்சும் காரணம் இருக்குமா என்று அவள் ரூமில் இருக்கும் பொருட்களை தேடும்போது அதில் புத்தகங்களுக்கு அடியில் மறைக்கப்பட்டிருந்த சில கிரீட்டிங் கார்டு கிடைத்தது.
அதைப் பார்த்தவன் ஏதாவது காதல் விவகாரமாக தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அதை எடுத்து திறந்து பார்க்க அதில் அன்பு காதலிக்கு உன்னுடைய உயரி என்ற பெயர் இருக்க, யார் இது என யோசனையானான்
ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வரும்போது அதில் நான்காக மதிக்கப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது.
கைகள் நடுங்க அதை எடுத்து பிரித்து படிக்கலானான்..
அன்புள்ள அண்ணா அம்மா என்னை மன்னித்து விடுங்கள் காதல் என்ற பெயரில் மோசமான ஒருவன் கூறுவதை நம்பி எனது வாழ்க்கையை இழந்து விட்டேன்.தற்போது இரண்டு மாத குழந்தை எனது வயிற்றில் வளர என்னை அவன் பொழுதுபோக்கிற்கு பழகினதாக சொல்லியது இல்லாமல் பணத்தை கொடுத்து அதை அழிக்க சொன்னதோடு இன்னும் சில கேவலமான வார்த்தைகளை சொன்னதால் மனம் உடைந்து போய் விட்டேன்.இதற்கு மேல் உயிரோடு இருந்து எந்த பலனும் இல்லை என்பதால் இந்த உலகத்தை விட்டு நான் போகிறேன் என்னை மன்னித்து விடுங்கள்.
அந்த அயோக்கியன் வேறு யாரும் இல்லை ணா.உன்னுடைய நண்பன் அமர்நாத் தான் அந்த துரோகி என்று எழுதியிருந்தது...
எதிரே உள்ள கூண்டில் நின்று கொண்டிருந்த அமர்நாத் அய்யோ சார் இவங்க யாருன்னு தெரியலை.எதற்காக என் மேல இப்படி ஒரு பொய்யான வழக்கை போடுறாங்களோ??அது கடவுளுக்கு தான் வெளிச்சம்.
நான் ஒரு மினிஸ்டர் என் மேலே இப்படி அபாண்டமாக பழி போடுகிறார்களே,அப்போ அப்பாவி மக்களை என்னென்ன பண்ணுவார்கள் என்று நாடகமாடினான்.
அவன் பேசியதை கேட்ட ஜட்ஜ் அமைதி அமைதி,உங்கள் தரப்பை விசாரிக்கும் போது அப்பொழுது நீங்க சொல்லுங்கள் இப்பொழுது உமாவை விசாரிக்கும்படி அனுமதி தந்தார்.
தேங்க்யூ மை லார்ட், ஹம் சொல்லுங்க மிசஸ் பாயல் உங்களுக்கும் இந்த கேஸிற்கும் என்ன சம்பந்தம்?
எதை வைத்து இது திட்டமிட்ட சதி என்று பிரதமருக்கு லெட்டர் போட்டுருக்கீங்க என்க,அழுது கொண்டிருந்த பாயல் தனது கண்ணீரை கூட துடைக்காமல் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தவர் 20 வருடங்களுக்கு முன்பு தீ விபத்தில் இறந்து போனாரே கமிஷனர் வம்சிகன்,அவருடைய கசின் நான் என்கவும் அதைக் கேட்ட அமர்நாத் இருக்கும் இடத்தை மறந்தவன்,இன்னும் நீ உயிரோட தான் இருக்கியா என்றவனோ அவள் யாரென்று தெரிந்து கொண்டு அதிர்வதை எல்லாருமே பார்த்தனர்.
மிஸஸ் பாயல் நீங்க சொல்ற விஷயம் சாதாரணமானது கிடையாது.அன்று நடந்த தீ விபத்தில் அங்கிருந்த அத்தனை பேரும் உடல் கருகி இறந்துவிட்டதாக ரிப்போர்ட் இருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி உயிரோடு இருந்தீங்க?
அடுத்து நீங்கள் தான் முன்னால் கமிஷனர் வம்சீகனின் கசின் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா என்று அமர்நாத்தின் வக்கீல் கேட்க,எஸ் மை லார்ட் என்ற உமாமகேஸ்வரி தான் எடுத்து வந்த பைலை கொண்டு போய் ரைட்டரிடம் கொடுக்க அவரும் அதை வாங்கி ஜட்ஜிடம் கொடுத்தார்.
அந்த வீடியோவை கோர்ட்டில் பிளே பண்ண,முதலாவதாக இருந்த போட்டோவை காட்டியவர் 1992 ஆம் வருடம் பிப்ரவரி ஐந்தாம் தேதி தமிழ்நாட்டின் விவசாய துறை அமைச்சராக இருந்த சாந்தப்பனின் மகன் குடி போதையில் கார் ஓட்டி போய், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை கொன்றதையும் எந்த அச்சுறுதலுக்கும் பயப்படாமல் முன்னால் வக்கீலாக இருந்த வேதாச்சலம் அவர்கள் வாதாடி வெற்றி பெற்றதற்கு அன்றைய முதல்வராக இருந்த கனியன் அவர்கள் வேதாச்சலத்தையும் அவரது ஜூனியரையும் முதல்வர் அலுவலகத்தில் வர வைத்து பாராட்டிய புகைப்படம்.
அதில் வலது பக்கத்திலிருந்து இரண்டாவதாக இருக்கும் பெண் தான் இந்த பாயல் அப்பொழுது பிரபலமாக இருந்த வேதாச்சலம் அவரிடம் இரண்டு ஆண்டுகளாக ஜூனியர் வக்கீலாக இருந்திருக்கிறார்.
அடுத்த புகைப்படத்தை காட்டியவர் இது டெல்லியில் இருக்கும் மருத்துவமனையில் பாயலுக்கு கொடுத்த பர்த் சர்டிபிகேட்.இது சென்னையில் இருக்கும் புகழ் பெற்ற கல்லூரியில் தனது இளநிலை படிப்பை முடித்த பாயல் கோல்டு மெடல் வாங்கியதற்காக பட்டமளிப்பு விழாவின் போது கவர்னர் அவர்கள் கையால் பாராட்டு மடலை வாங்கிய புகைப்படம்.
இன்னும் பல விதமான போட்டோக்களை காட்டி அது எப்பொழுது எடுத்தது என்று சொல்லும் உமா மகேஸ்வரியை பார்த்த அமர்நாத்தின் வக்கீல் அப்ஜக்ஷன் யுவர் ஆனர்.இப்பொழுது இருக்கும் நிலவரப்படி யார் யார் கூட வேணாலும் போட்டோவை ஒன்றாக இருந்தது போல் தயாரிக்க முடியும்.டெக்னாலஜி அவ்வளவு வளர்ந்து விட்டது.
எனது கட்சிக்காரர் மேல் ஏதோ ஒரு காரணத்திற்காக இப்படி வீண் பழியை சுமத்துகிறார்கள்.அதற்காக அவரோடு சேர்ந்து எதிர்க்கட்சி வக்கிலும் பிரமாதமாக கதையை ஜோடித்துக் கொண்டிருக்கிறார் என்று சிரிக்க...
சைலண்ட் என்று கோவமான ஜட்ஜ் மிஸ்டர் பரசுராம் இவர்கள் கொடுத்த சில போட்டோக்களை இப்போதைய முதல்வர் சக்திவேல் அவர்கள் அனுமதியோடு முதல்வர் அலுவலகத்தில் இருந்து வாங்கியிருப்பதற்கான ஆதாரம் இதில் உள்ளது என்க சாரி மை லார்ட் என்று உட்கார்ந்து கொண்டான்.
உமா மகேஸ்வரி இந்த போட்டோவில் இருக்கும் மிஸ்டர் வேதாச்சலம் உங்களுடைய தந்தை தானே என்று ஜட்ஜ் கேட்க எஸ் அவர் ஆனர்.
அவரின் இரண்டாவது மகள் உமாமகேஸ்வரி சுரேந்திர குமார் நான் தான்.அப்போ பாயலை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்க..
எனது தந்தை பிரபலமான வக்கீலாக இருந்தாலும் அவரிடம் நான் ஜூனியர் ஆக சேரவில்லை.சென்னையில் இருக்கும் ரிட்டையர்டு நீதிபதி தீனதயாளனிடம் தான் ஜூனியராக சேர்ந்து இருந்தேன்.
இரண்டொரு முறை கோர்ட்டுக்கு வரும்போது எனது தந்தையோடு பாயலை பார்த்திருக்கிறேன்.
ஆனால் நான் பேசியது இல்லை.
எனது தந்தையோ 2005 வருடம் ஜனவரி 20 ஆம் தேதி டெல்லியில் சாந்தி சௌவுக் என்ற இடத்தில் நடந்த தீ விபத்தில் அவரது ஜூனியர் பாயலும் அவரது குடும்பமும் இறந்து விட்டதாக சொல்ல அதைக் கேட்டு நான் வருத்தப்பட்டேன்.
பிறகு பாயல் உயிரோடு இருக்கும் விஷயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரியுமென்றார்.
ஓஓஓ என்று தலையசைத்தவர் கண்டினியூ என்க...
மை லார்ட் இன்னொரு முக்கியமான சாட்சியையும் கூண்டுக்குள் வர வைக்கிறேன்.அவரும் இந்த கேஸிற்கு முக்கியமானவர்...ஹம் பர்மிஷன் கிராண்டட் என்றார்.
அங்கிருந்த கூட்டத்தினரில் ஒருவரை பார்த்து உமா தலையசைக்க,பாதர் உடையில் 55 வயது தக்க ஒருவர் வருபவரை பார்த்து யார் இவர் என்று அங்கே சலசலப்பு எழுந்தது.
கூட்டிற்குள் வந்து நிற்கும் பாதரை பார்த்தவன் இவர் யார் என்று அமர்நாத் யோசனையானான்.ஜட்ஜை பார்த்து ப்ரைஸ் த லார்ட் என்றார் பாதர்.
கண்டினியூ மிஸ்சஸ் உமா என்கவும் தேங்க்யூ மை லார்ட் என்றவர் இங்கே கூண்டில் இருக்கும் பாதர் அகஸ்டினிற்கும் எதிர் கூண்டில் இருக்கும் அமர்நாத் அவர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஒரு காலத்தில் இருந்தது என்பதை இருவராலும் மறுக்க முடியாது என்க..
ஜட்ஜ் அய்யா அப்படியெல்லாம் சொல்லாதீங்க இந்த பாதரை இதுவரைக்கும் நான் பார்த்ததே கிடையாது எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமர்நாத் கத்த அமைதி அமைதி என்று ஜட்ஜ் சொல்ல வேறு வழியின்றி வாயை மூடிக் கொண்டான்.
பாதர் அகஸ்டின் உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்கவும் ஜீசஸ் என்றவர் என்னுடைய ஹிந்து பெயர் சத்துரு என்க, இதைக் கேட்ட அமர்நாத் நீயாஆஆஆஆஆ அப்போ நீயும் உயிரோடதான் இருக்கிறியாடா என்று மீண்டும் அவன் அதிர்வதை ஜட்ஜோடு மற்றவர்களும் பார்த்தனர்.
சரி நடந்ததை நீங்கள் சொல்லுங்கள். கண்டிப்பாக என்றவர் 20 வருடங்களுக்கு முன்பு நடந்ததை சொல்லத் தொடங்கினார். .
இருபது வருடங்களுக்கு முன்ப-டெல்லி:
இந்த வாட்டி வந்த கமிஷனர் ரொம்ப ஓவரா தான் பண்றான்.அவனுக்கு ஒரு பாடம் பண்ணா தான் சரியா வரும் என்று அங்கிருந்த அடியாள்கள் கூட்டத்தின் தலைவன் சொல்ல, ஆமா அண்ணா எனக்கு அந்த சான்ஸ் கொடு ணா என்றான் அவனிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த அமர்நாத்.
கண்டிப்பா உனக்கு தான் கொடுப்பேன் நீ கவலையே படாதே என்றவன் சரி இப்பொழுது நமது சரக்கு வரும் அதை போய் எடுத்துட்டு வாங்க என்று சொல்லவும் தலைவனின் உத்தரவை கேட்டு அங்கிருந்து சிட்டாக பறந்து சென்றனர்.
வம்சிகன் டெல்லிக்கு வந்து இரண்டு வருடங்களில் பெரும் அளவுக்கு குற்றங்களும் குறைந்து இருக்க இவர்களுக்கு நான் பெரும் திண்டாட்டமாக இருந்தது.
ஏதாவது ஒரு பொய் வழக்கில் வம்சிகனை மாட்டி விட வேண்டும் என்று இவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தார்கள்.
அப்பொழுது பிரபலமான வைர வியாபாரியை கொல்வதற்கான ஒரு அசைன்மென்ட் இவர்களை தேடி வந்தது.
பணத்திற்காக எதையும் செய்ய தயாராக இருந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ள அதேபோல் பிசினஸ் மீட்டிங் முடித்துவிட்டு வந்து கொண்டிருக்கும் போது ஆள் இல்லாத இடத்தில் அவரை வெட்டி கொலை செய்ய இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.பவன் குமாரின் தலமையில் கொலை நடந்திருப்பதை கண்டுபிடித்த வம்சிகனின் குழு ஆதாரங்களை கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு பண்ணியது.
அவன் கோர்ட்டுக்கு போகக்கூடாது.
இந்த கேசை யார் வெற்றிகரமாக முடித்துவிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு மிகப் பெரிய பரிசை தருவேன் என்று சொல்லவும், கோடிக்கணக்கு சொத்துக்கு பவன்குமார் முதலாளியாக இருக்க தானும் அதைப்போல் முதலாளியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட அமர்நாத் நான் போறேன் என்றான்.
இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போவதை பற்றி சந்துருக்கு தெரியாது.ஒரு மாதத்திற்கு முன்புதான் அவனது தங்கை தற்கொலை பண்ணிக் கொண்டதால் மனம் உடைந்து போனவன் வேலைக்கு வராமல் வீட்டிலேயே இருந்து கொண்டான்.
நாட்கள் சென்று அவனாக வருவான் என்று பவன்குமார் சொல்லிவிட மற்றவர்களும் சந்துருவை போய் தொந்தரவு பண்ணவில்லை.
ஏதோ ஒரு எண்ணத்தில் வீட்டில் படுத்து இருந்த சந்துரு தங்கையின் அறைக்கு போனவன் அவள் தற்கொலை பண்ணுவதற்கு ஏதாச்சும் காரணம் இருக்குமா என்று அவள் ரூமில் இருக்கும் பொருட்களை தேடும்போது அதில் புத்தகங்களுக்கு அடியில் மறைக்கப்பட்டிருந்த சில கிரீட்டிங் கார்டு கிடைத்தது.
அதைப் பார்த்தவன் ஏதாவது காதல் விவகாரமாக தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அதை எடுத்து திறந்து பார்க்க அதில் அன்பு காதலிக்கு உன்னுடைய உயரி என்ற பெயர் இருக்க, யார் இது என யோசனையானான்
ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வரும்போது அதில் நான்காக மதிக்கப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது.
கைகள் நடுங்க அதை எடுத்து பிரித்து படிக்கலானான்..
அன்புள்ள அண்ணா அம்மா என்னை மன்னித்து விடுங்கள் காதல் என்ற பெயரில் மோசமான ஒருவன் கூறுவதை நம்பி எனது வாழ்க்கையை இழந்து விட்டேன்.தற்போது இரண்டு மாத குழந்தை எனது வயிற்றில் வளர என்னை அவன் பொழுதுபோக்கிற்கு பழகினதாக சொல்லியது இல்லாமல் பணத்தை கொடுத்து அதை அழிக்க சொன்னதோடு இன்னும் சில கேவலமான வார்த்தைகளை சொன்னதால் மனம் உடைந்து போய் விட்டேன்.இதற்கு மேல் உயிரோடு இருந்து எந்த பலனும் இல்லை என்பதால் இந்த உலகத்தை விட்டு நான் போகிறேன் என்னை மன்னித்து விடுங்கள்.
அந்த அயோக்கியன் வேறு யாரும் இல்லை ணா.உன்னுடைய நண்பன் அமர்நாத் தான் அந்த துரோகி என்று எழுதியிருந்தது...