Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 449
- Thread Author
- #1
திருச்சி:
இது என்னுடைய அப்பாவா?
ஊர் உலகத்துல இல்லாத பெஸ்ட் அப்பா எனக்கு கிடைச்சிருக்கார்னு இத்தனை வருஷம் கர்வமா இருந்தனே அது உண்மை இல்லையா???
கடவுளேஏஏஏ.....!!!
இப்படி ஒரு இடியை இறக்கறதுக்காக தான் என்னை இங்கு வரவைச்சாரா என்று புலம்பி கொண்டிருப்பவனுக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டது.
அவர்கள் முகத்தை கூட பார்க்க விருப்பம் இல்லாமல் வேறு பக்கம் திரும்பியவன் சொல்லுங்க???
இன்னும் ஏதாச்சும் சொல்லனுமா என்கவும் கண்ணா அது வந்து என்று மானசா சொல்ல வர,நீ வாய மூடு என்றவர் அருண் உன்னோட அக்கா ஜூலி கன்சிவா இருக்கிறாள்.
இது ஏழாவது மாசம்...அவளுக்கு வளையல் போடணும்னு உங்க மாமா இப்பதான் டெல்லியில் இருந்து போன் பண்ணி பேசினாங்க என்க,இவ்வளவு நேரம் கோபமாக இருந்தவனோ தற்போது தனது கூட பிறந்தவள் கர்ப்பிணி பெண் என்பதை கேட்டு திடுக்கெட்டு திரும்பியவன் அப்பா நீங்க சொல்றது உண்மையா?.
ஆமாம் பா..
ஜூலி-ஷமீரா பற்றி உன்கிட்ட எதுவுமே சொல்லலை.விஷயத்தை மட்டும் தானே சொன்னேன்.நீ தான் அதுக்குள்ள கோபப்பட்டு எந்திரிச்சு வந்துட்டியே என்று மகனை கண்டனத்தோடு பார்க்க,ஆமா அப்படியே பொள்ளாத சாகசம் பண்ணிருக்கீங்க.அதை ஆர அமர சோபாவில் உட்கார்ந்து கேட்கணுமா என்று முதல் முறையாக தந்தையை எதிர்த்து பேசினான்.
மகனின் வார்த்தைகளோ அம்பு போல் இருவது நெஞ்சில் பாய்ந்தது.அருண் என்று மானசா கூப்பிட,ஒழுங்கு மரியாதையா வாய மூடு..
நீ எல்லாம் பொம்பளையா?
உன்னால எத்தனை பேரு வாழ்க்கை கெட்டு போயிருக்கு??தைரியமா முடிவெடுக்க தெரியாத நீங்க எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிறீங்க?.
உனக்கு ரெண்டு பொண்டாட்டி போல நீ இரண்டு புருஷனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று தனது தாயை பார்த்து கேட்க, அருண் என்று இருவரும் அதிர்ந்து போயினர்.
உங்க வயித்துல பிறந்ததுக்கு இப்படி நல்ல வார்த்தை எல்லாம் நானும் காதில் வாங்கி தான் ஆகணும்.சரி நீங்க எப்படியோ எக்கேடு கெட்டு போங்க உங்கள பத்தி இனிமே நான் எதுவும் நினைக்க போறதில்லை.
எனக்கு தெரிய வேண்டிய விஷயம் இரண்டே இரண்டு தான்.நாளைக்கு இதே சூழலில் நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கிறேன்,உங்க ரெண்டு பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக் கொடுத்துருக்கீங்களே அந்த மாப்பிள்ளைங்க அப்படி செஞ்சா நீங்க அமைதியா இருப்பீங்களா? என்று வார்த்தைகளில் இருவரையும் பந்தாடினான்.
மகனின் ஒவ்வொரு கேள்வியும் செருப்பால் அடிப்பது போல் இருக்க, இருவரும் கூனி குறுகி போனார்கள்.
சரி உங்கம்மா செத்துட்டு போகட்டுமே அதுக்காக உலகம் அழிஞ்சிடுமா?
தம்பி...இது தவறுதான்.அதை நியாயப்படுத்த நாங்க வரலை என்கும் மகியை பார்த்தவன் இப்ப நீங்க அதுதான் பண்ணிட்டு இருக்கீங்க..இதுவரைக்கும் நீங்க பேசினதுக்கு நீங்க செஞ்சதுக்கு ஒரு வார்த்தை எதிர்த்து பேசிருப்பேனா?
ஏன்னா எங்க அப்பா கிட்ட நீதி நேர்மை நியாயம் இருக்குன்னு.என் நண்பர்கள் கிட்ட எங்க அப்பா ஒரு ஜெம்னு சொல்லுவேன்,ஆனால் நீங்கள் அதற்கெல்லாம் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று சொல்லும்போது எப்படி இருக்கு தெரியுமா?
மனசுல இவ்வளவு அழுக்கை வச்சுக்கிட்டு பெரிய நியாயஸ்தர் போல நீங்க எப்படி இருக்கீங்க,எனக்கு அது புரியலை?
அரசியலுக்கு போங்க,அத்தனை தகுதியும் உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறது என மனதில் உள்ள ஆத்திரத்தை எல்லாம் வார்த்தைகளாக கொட்டி தீர்த்தவன்,இனி இதை பற்றி பேசி என்ன ஆக போகுது?
என் அக்கா இருக்கான்னு சொன்னீங்களே அவங்க கிட்ட பேசணும் போன் நம்பர் இருந்தா குடுங்க என்றவாறு அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்தான்.
சரி பா என்ற மகி தனது போனில் இருக்கும் ருத்ரனின் நம்பரை சொல்ல, பாக்கெட்டில் இருக்கும் தனது போனை எடுத்தவன் அந்த நம்பருக்கு டயல் பண்ணினான்.
வனிச்சூர்:
அம்மாவுக்கு எங்க தெரியுமா வேலை கிடைச்சிருக்கு,டிசைனர் ஹிரோஷி கிட்ட டா.ரோஷி டிசைன் கேள்விப்பட்டிருக்கியா?
ஆமாம் என்று அவள் தலையசைக்கவும் அவங்க கிட்ட தான்.வரும் மன்டே ஜாயின்ட் பண்ணனுமென ருத்ரன் சொல்ல வாவ் சூப்பரூஊஊஊ...
"ரொம்ப சந்தோஷமா இருக்குமா"
எனக்கு எப்படி வித விதமா தைச்சு கொடுப்பீங்களோ அதே போல அசந்துங்கம்மா என்று கண்ணீரோடு ஷமீரா சொல்ல,எஸ்தரும் வந்த அழுகையோடு சரி டி ஷமி வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க ??
இங்க எல்லாரும் நல்லா இருக்காங்க மா என்றவள் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தவளுக்கு தனது அம்மாவை நினைத்து பெருமையாக இருந்தது.
இனியாவது அவருக்கு பிடித்ததை அவர் சுதந்திரமாக செய்யட்டும்.அதற்கு எந்த வித தடையும் வராமல் இருந்தால் போதும் ஆண்டவரே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவள், கண்ணை மூடி படுக்க, கணவன் இல்லாத அந்த மெத்தையோ முள் படுக்கைப் போல இருந்தது. .
தாமதமாக தூங்கினாலும் வழக்கம் போல் எழுந்த ஷமீராவும் குளித்து வேறு உடை மாற்றிக் கொண்டு கீழே வந்தவள் அவள் எப்பொழுதும் செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கும் போது தலை சுற்றுவது போல இருந்தது.
வெறும் வயித்தோடு இருக்கிறதால் தான் இப்படி இருக்கின்றது என்று நினைத்தவாறு கிச்சனிற்குள் போனவள் அவளுக்கான காபியை கலந்து இரண்டு வாய் குடிக்கவும் வாந்தி வருவது போல் இருக்க வாயை பொத்திக் கொண்டே வாஷ்பேஷனுக்கு வந்தவள் கடகடவென்று வாந்தி எடுத்தாள்.
அந்த நேரம் மாட்டுக்கு கஞ்சி தண்ணி வைத்து விட்டு வீட்டிற்குள் வந்த வானதி மருமகள் வாந்தி எடுப்பதை பார்த்தவர் அம்மாடி என்ன ஆச்சு என்று பதட்டமாய் வர,வாயை கொப்பளித்து விட்டு முகத்தை துடைத்தவள் என்னன்னு தெரியலங்கத்தை, நல்லா தான் இருந்தேன்..
திடீர்னு வயிற்ற புரட்டி மயக்கம் வர போல இருக்கு அதான் என்க, மருமகள் சொன்னதை கேட்டவர் ஏத்தா நாள் எதாவது தள்ளி போயிருக்க என்று ஆர்வமாக கேட்க தனது மாமியார் சொன்னதை கேட்டு யோசித்துப் பார்த்தாள்.
அட ஆமாம் இரண்டு மாதமாக இன்னும் பீரியட்ஸ் வரவில்லை என்பது புரிந்து ஆமாங்கத்தை என்றவாறு கீழே குனிந்து கொண்டே சொல்லவும் மலையாத்த என் குடும்பத்தை தழைக்க வச்சிட்டியா என்று மருமகளை நெற்றி வழித்து திருஷ்ட்டி முறித்தவர் இதோ வந்துடறேன் என்று வேகமாக வெளியே போனவரோ நான்காவது வீட்டில் இருக்கும் வைத்தியர் அம்மாவை கூப்பிட்டு வந்தார்.
ஷமீராவோ நமக்கு குழந்தையா? உண்மையிலே கன்சிவா இருக்கிறோமா என்று உள்ளுக்குள் ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் கணவனிடம் செல்ல வேண்டுமே என்று தவிப்போடு இருந்தாள்.
ஒருவேளை உடம்பு சரி இல்லாம இப்படி இருக்குமா, நம்மளே ஓவரா கற்பனை பண்ணிக்க கூடாது என்று இன்னொரு பக்கம் யோசனையோடு இருக்கும் போது அந்த ஊரின் பரம்பரை வழியாக வரும் வைத்தியரான காசியம்மாளும் உள்ளே வந்தார்.
என்ன கண்ணு பண்ணுது என்றவாறு அவளின் கையை பிடித்து நாடி பார்த்தவர்,வம்சம் தழைச்சிட்டு வானதி என்கவும்,நெசமாக தானே அண்ணி என்று சந்தோஷத்தில் வானதி கேட்க,ஏ புள்ள...நீ எனக்கு நாத்தனாராக இருந்தாலும் இந்த விஷயத்துல போய் நான் விளையாடுவேனா?
மெய்யாலுமே நம்ம மலையாத்தா புண்ணியத்துல புள்ள உண்டாயிருக்குது.போ வாய்க்கு சர்க்கரை கொண்டு வந்து போடு என்றவர் அங்கிருந்த பூஜை அறையில் இருக்கும் சாமியை பார்த்து அம்மா தாயே நீ தான் துணையாக இருக்க வேண்டும் என்க...
உங்க கையாலே விபூதி எடுத்து வந்து உங்க மகளுக்கு பூசி விடுங்க அண்ணி என்கவும்,அதைவிட எனக்கு வேற வேலை என்ன புள்ள என்றவர் பூஜை அறைக்குள் சென்று அங்கிருந்த மஞ்சள் குங்குமத்தை எடுத்துட்டு வந்து ஷமீராவுக்கு பூசி விட்டவர் ஒரு பொண்ணு நெசமாவே பொண்ணா பூப்பது இரண்டு விஷயத்துல ஆத்தா.
ஒன்னும் பூப்படையுரதும்,அடுத்து அவள் தாயாகிறதிலையும் இருக்கிறது.அனேகமாக உன் மாமியார் ஊருக்கே விருந்து வச்சாலும் வைக்குமென அவர் கிண்டல் பண்ண என் பேரப்பிள்ளை வரப்போகுதே விருந்து போடாம இருப்பானா என்று வானதியும் சிரித்தார்.
எங்க மருமகனையும் அண்ணனையும் காணும் என்றவாறு காசியம்மாள் அங்கிருந்த தூணில் சாய்ந்து உட்கார, வேலை விஷயமா உன் மருமவன் வெளி ஊருக்கு போயிருக்கிறான்.
உங்கண்ணன் வயலுக்கு என்கும் போது,அத்தை என்று தயங்கியவளை பார்த்தவர் என்னத்தா என்க, அவர் வந்த பிறகு சொல்லிக்கலாம், இதால அவரு கவனம் சிதற கூடாது...
அப்படி போடு...என் சித்தப்பன் வூட்டுக்கு ஏத்த மருமகளாக தான் வந்திருக்க ஆத்தா என்ற காசியம்மாள் ஷமீராவின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தவர் நல்ல மனசு ஆத்தா உனக்கு...
எல்லாம் பொம்பளைங்களும் உண்டான உடனே புருஷன் கிட்ட சொல்லி அது வேணும் இது வேணும்னு ஆசைப்படுவார்கள் என்றவர் மேலும் சிறிது நேரம் அவரிடம் பேசி இருந்து விட்டு செல்ல வா, வா புள்ள என்றவாறு மருமகளை கூப்பிட்டு போய் அங்கிருந்து சோபாவில் உட்கார வைத்தவர்,29 வருஷத்துக்கு அப்புறம் இந்த வீட்டுல புள்ள சத்தம் கேட்க போகுது.
நல்லபடியா பெற்று எடுக்க நீயும் சந்தோசமா இருக்கணும். மனசுல எந்த குறையும் வச்சுக்காத.அத்தை என்னடா இப்படி சொல்றனு நினைக்காத உங்க அப்பாகிட்ட போன்ல பேசு அவருக்கு விஷயத்தை முதல்ல சொல்லு..
மாமியார் சொன்னதை கேட்டவள் முதல்ல அவர் வரட்டும்.அவர்கிட்ட சொல்லிக்கிறேன் பிறகு அம்மா அப்பா கிட்ட சொல்றேன்.
ம்ம் அதுவும் சரிதான் என்றவர் நீ இரு நான் வரேன் என்றவரோ கிச்சனுக்குள் போய் வேகவேகமாக சக்கரை பொங்கல் செய்து சாமிக்கு வைத்து விட்டு ஒரு தட்டில் வைத்து மருமகளுக்கு கொண்டு வந்தவர் வாயை திறத்தா என்றவாறு ஒரு வாய் ஊட்டி விட ஷமீராவுக்கோ சந்தோஷத்தில் அழுகை வந்தது.
இது என்னுடைய அப்பாவா?
ஊர் உலகத்துல இல்லாத பெஸ்ட் அப்பா எனக்கு கிடைச்சிருக்கார்னு இத்தனை வருஷம் கர்வமா இருந்தனே அது உண்மை இல்லையா???
கடவுளேஏஏஏ.....!!!
இப்படி ஒரு இடியை இறக்கறதுக்காக தான் என்னை இங்கு வரவைச்சாரா என்று புலம்பி கொண்டிருப்பவனுக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டது.
அவர்கள் முகத்தை கூட பார்க்க விருப்பம் இல்லாமல் வேறு பக்கம் திரும்பியவன் சொல்லுங்க???
இன்னும் ஏதாச்சும் சொல்லனுமா என்கவும் கண்ணா அது வந்து என்று மானசா சொல்ல வர,நீ வாய மூடு என்றவர் அருண் உன்னோட அக்கா ஜூலி கன்சிவா இருக்கிறாள்.
இது ஏழாவது மாசம்...அவளுக்கு வளையல் போடணும்னு உங்க மாமா இப்பதான் டெல்லியில் இருந்து போன் பண்ணி பேசினாங்க என்க,இவ்வளவு நேரம் கோபமாக இருந்தவனோ தற்போது தனது கூட பிறந்தவள் கர்ப்பிணி பெண் என்பதை கேட்டு திடுக்கெட்டு திரும்பியவன் அப்பா நீங்க சொல்றது உண்மையா?.
ஆமாம் பா..
ஜூலி-ஷமீரா பற்றி உன்கிட்ட எதுவுமே சொல்லலை.விஷயத்தை மட்டும் தானே சொன்னேன்.நீ தான் அதுக்குள்ள கோபப்பட்டு எந்திரிச்சு வந்துட்டியே என்று மகனை கண்டனத்தோடு பார்க்க,ஆமா அப்படியே பொள்ளாத சாகசம் பண்ணிருக்கீங்க.அதை ஆர அமர சோபாவில் உட்கார்ந்து கேட்கணுமா என்று முதல் முறையாக தந்தையை எதிர்த்து பேசினான்.
மகனின் வார்த்தைகளோ அம்பு போல் இருவது நெஞ்சில் பாய்ந்தது.அருண் என்று மானசா கூப்பிட,ஒழுங்கு மரியாதையா வாய மூடு..
நீ எல்லாம் பொம்பளையா?
உன்னால எத்தனை பேரு வாழ்க்கை கெட்டு போயிருக்கு??தைரியமா முடிவெடுக்க தெரியாத நீங்க எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிறீங்க?.
உனக்கு ரெண்டு பொண்டாட்டி போல நீ இரண்டு புருஷனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று தனது தாயை பார்த்து கேட்க, அருண் என்று இருவரும் அதிர்ந்து போயினர்.
உங்க வயித்துல பிறந்ததுக்கு இப்படி நல்ல வார்த்தை எல்லாம் நானும் காதில் வாங்கி தான் ஆகணும்.சரி நீங்க எப்படியோ எக்கேடு கெட்டு போங்க உங்கள பத்தி இனிமே நான் எதுவும் நினைக்க போறதில்லை.
எனக்கு தெரிய வேண்டிய விஷயம் இரண்டே இரண்டு தான்.நாளைக்கு இதே சூழலில் நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கிறேன்,உங்க ரெண்டு பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக் கொடுத்துருக்கீங்களே அந்த மாப்பிள்ளைங்க அப்படி செஞ்சா நீங்க அமைதியா இருப்பீங்களா? என்று வார்த்தைகளில் இருவரையும் பந்தாடினான்.
மகனின் ஒவ்வொரு கேள்வியும் செருப்பால் அடிப்பது போல் இருக்க, இருவரும் கூனி குறுகி போனார்கள்.
சரி உங்கம்மா செத்துட்டு போகட்டுமே அதுக்காக உலகம் அழிஞ்சிடுமா?
தம்பி...இது தவறுதான்.அதை நியாயப்படுத்த நாங்க வரலை என்கும் மகியை பார்த்தவன் இப்ப நீங்க அதுதான் பண்ணிட்டு இருக்கீங்க..இதுவரைக்கும் நீங்க பேசினதுக்கு நீங்க செஞ்சதுக்கு ஒரு வார்த்தை எதிர்த்து பேசிருப்பேனா?
ஏன்னா எங்க அப்பா கிட்ட நீதி நேர்மை நியாயம் இருக்குன்னு.என் நண்பர்கள் கிட்ட எங்க அப்பா ஒரு ஜெம்னு சொல்லுவேன்,ஆனால் நீங்கள் அதற்கெல்லாம் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று சொல்லும்போது எப்படி இருக்கு தெரியுமா?
மனசுல இவ்வளவு அழுக்கை வச்சுக்கிட்டு பெரிய நியாயஸ்தர் போல நீங்க எப்படி இருக்கீங்க,எனக்கு அது புரியலை?
அரசியலுக்கு போங்க,அத்தனை தகுதியும் உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறது என மனதில் உள்ள ஆத்திரத்தை எல்லாம் வார்த்தைகளாக கொட்டி தீர்த்தவன்,இனி இதை பற்றி பேசி என்ன ஆக போகுது?
என் அக்கா இருக்கான்னு சொன்னீங்களே அவங்க கிட்ட பேசணும் போன் நம்பர் இருந்தா குடுங்க என்றவாறு அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்தான்.
சரி பா என்ற மகி தனது போனில் இருக்கும் ருத்ரனின் நம்பரை சொல்ல, பாக்கெட்டில் இருக்கும் தனது போனை எடுத்தவன் அந்த நம்பருக்கு டயல் பண்ணினான்.
வனிச்சூர்:
அம்மாவுக்கு எங்க தெரியுமா வேலை கிடைச்சிருக்கு,டிசைனர் ஹிரோஷி கிட்ட டா.ரோஷி டிசைன் கேள்விப்பட்டிருக்கியா?
ஆமாம் என்று அவள் தலையசைக்கவும் அவங்க கிட்ட தான்.வரும் மன்டே ஜாயின்ட் பண்ணனுமென ருத்ரன் சொல்ல வாவ் சூப்பரூஊஊஊ...
"ரொம்ப சந்தோஷமா இருக்குமா"
எனக்கு எப்படி வித விதமா தைச்சு கொடுப்பீங்களோ அதே போல அசந்துங்கம்மா என்று கண்ணீரோடு ஷமீரா சொல்ல,எஸ்தரும் வந்த அழுகையோடு சரி டி ஷமி வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க ??
இங்க எல்லாரும் நல்லா இருக்காங்க மா என்றவள் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தவளுக்கு தனது அம்மாவை நினைத்து பெருமையாக இருந்தது.
இனியாவது அவருக்கு பிடித்ததை அவர் சுதந்திரமாக செய்யட்டும்.அதற்கு எந்த வித தடையும் வராமல் இருந்தால் போதும் ஆண்டவரே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவள், கண்ணை மூடி படுக்க, கணவன் இல்லாத அந்த மெத்தையோ முள் படுக்கைப் போல இருந்தது. .
தாமதமாக தூங்கினாலும் வழக்கம் போல் எழுந்த ஷமீராவும் குளித்து வேறு உடை மாற்றிக் கொண்டு கீழே வந்தவள் அவள் எப்பொழுதும் செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கும் போது தலை சுற்றுவது போல இருந்தது.
வெறும் வயித்தோடு இருக்கிறதால் தான் இப்படி இருக்கின்றது என்று நினைத்தவாறு கிச்சனிற்குள் போனவள் அவளுக்கான காபியை கலந்து இரண்டு வாய் குடிக்கவும் வாந்தி வருவது போல் இருக்க வாயை பொத்திக் கொண்டே வாஷ்பேஷனுக்கு வந்தவள் கடகடவென்று வாந்தி எடுத்தாள்.
அந்த நேரம் மாட்டுக்கு கஞ்சி தண்ணி வைத்து விட்டு வீட்டிற்குள் வந்த வானதி மருமகள் வாந்தி எடுப்பதை பார்த்தவர் அம்மாடி என்ன ஆச்சு என்று பதட்டமாய் வர,வாயை கொப்பளித்து விட்டு முகத்தை துடைத்தவள் என்னன்னு தெரியலங்கத்தை, நல்லா தான் இருந்தேன்..
திடீர்னு வயிற்ற புரட்டி மயக்கம் வர போல இருக்கு அதான் என்க, மருமகள் சொன்னதை கேட்டவர் ஏத்தா நாள் எதாவது தள்ளி போயிருக்க என்று ஆர்வமாக கேட்க தனது மாமியார் சொன்னதை கேட்டு யோசித்துப் பார்த்தாள்.
அட ஆமாம் இரண்டு மாதமாக இன்னும் பீரியட்ஸ் வரவில்லை என்பது புரிந்து ஆமாங்கத்தை என்றவாறு கீழே குனிந்து கொண்டே சொல்லவும் மலையாத்த என் குடும்பத்தை தழைக்க வச்சிட்டியா என்று மருமகளை நெற்றி வழித்து திருஷ்ட்டி முறித்தவர் இதோ வந்துடறேன் என்று வேகமாக வெளியே போனவரோ நான்காவது வீட்டில் இருக்கும் வைத்தியர் அம்மாவை கூப்பிட்டு வந்தார்.
ஷமீராவோ நமக்கு குழந்தையா? உண்மையிலே கன்சிவா இருக்கிறோமா என்று உள்ளுக்குள் ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் கணவனிடம் செல்ல வேண்டுமே என்று தவிப்போடு இருந்தாள்.
ஒருவேளை உடம்பு சரி இல்லாம இப்படி இருக்குமா, நம்மளே ஓவரா கற்பனை பண்ணிக்க கூடாது என்று இன்னொரு பக்கம் யோசனையோடு இருக்கும் போது அந்த ஊரின் பரம்பரை வழியாக வரும் வைத்தியரான காசியம்மாளும் உள்ளே வந்தார்.
என்ன கண்ணு பண்ணுது என்றவாறு அவளின் கையை பிடித்து நாடி பார்த்தவர்,வம்சம் தழைச்சிட்டு வானதி என்கவும்,நெசமாக தானே அண்ணி என்று சந்தோஷத்தில் வானதி கேட்க,ஏ புள்ள...நீ எனக்கு நாத்தனாராக இருந்தாலும் இந்த விஷயத்துல போய் நான் விளையாடுவேனா?
மெய்யாலுமே நம்ம மலையாத்தா புண்ணியத்துல புள்ள உண்டாயிருக்குது.போ வாய்க்கு சர்க்கரை கொண்டு வந்து போடு என்றவர் அங்கிருந்த பூஜை அறையில் இருக்கும் சாமியை பார்த்து அம்மா தாயே நீ தான் துணையாக இருக்க வேண்டும் என்க...
உங்க கையாலே விபூதி எடுத்து வந்து உங்க மகளுக்கு பூசி விடுங்க அண்ணி என்கவும்,அதைவிட எனக்கு வேற வேலை என்ன புள்ள என்றவர் பூஜை அறைக்குள் சென்று அங்கிருந்த மஞ்சள் குங்குமத்தை எடுத்துட்டு வந்து ஷமீராவுக்கு பூசி விட்டவர் ஒரு பொண்ணு நெசமாவே பொண்ணா பூப்பது இரண்டு விஷயத்துல ஆத்தா.
ஒன்னும் பூப்படையுரதும்,அடுத்து அவள் தாயாகிறதிலையும் இருக்கிறது.அனேகமாக உன் மாமியார் ஊருக்கே விருந்து வச்சாலும் வைக்குமென அவர் கிண்டல் பண்ண என் பேரப்பிள்ளை வரப்போகுதே விருந்து போடாம இருப்பானா என்று வானதியும் சிரித்தார்.
எங்க மருமகனையும் அண்ணனையும் காணும் என்றவாறு காசியம்மாள் அங்கிருந்த தூணில் சாய்ந்து உட்கார, வேலை விஷயமா உன் மருமவன் வெளி ஊருக்கு போயிருக்கிறான்.
உங்கண்ணன் வயலுக்கு என்கும் போது,அத்தை என்று தயங்கியவளை பார்த்தவர் என்னத்தா என்க, அவர் வந்த பிறகு சொல்லிக்கலாம், இதால அவரு கவனம் சிதற கூடாது...
அப்படி போடு...என் சித்தப்பன் வூட்டுக்கு ஏத்த மருமகளாக தான் வந்திருக்க ஆத்தா என்ற காசியம்மாள் ஷமீராவின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தவர் நல்ல மனசு ஆத்தா உனக்கு...
எல்லாம் பொம்பளைங்களும் உண்டான உடனே புருஷன் கிட்ட சொல்லி அது வேணும் இது வேணும்னு ஆசைப்படுவார்கள் என்றவர் மேலும் சிறிது நேரம் அவரிடம் பேசி இருந்து விட்டு செல்ல வா, வா புள்ள என்றவாறு மருமகளை கூப்பிட்டு போய் அங்கிருந்து சோபாவில் உட்கார வைத்தவர்,29 வருஷத்துக்கு அப்புறம் இந்த வீட்டுல புள்ள சத்தம் கேட்க போகுது.
நல்லபடியா பெற்று எடுக்க நீயும் சந்தோசமா இருக்கணும். மனசுல எந்த குறையும் வச்சுக்காத.அத்தை என்னடா இப்படி சொல்றனு நினைக்காத உங்க அப்பாகிட்ட போன்ல பேசு அவருக்கு விஷயத்தை முதல்ல சொல்லு..
மாமியார் சொன்னதை கேட்டவள் முதல்ல அவர் வரட்டும்.அவர்கிட்ட சொல்லிக்கிறேன் பிறகு அம்மா அப்பா கிட்ட சொல்றேன்.
ம்ம் அதுவும் சரிதான் என்றவர் நீ இரு நான் வரேன் என்றவரோ கிச்சனுக்குள் போய் வேகவேகமாக சக்கரை பொங்கல் செய்து சாமிக்கு வைத்து விட்டு ஒரு தட்டில் வைத்து மருமகளுக்கு கொண்டு வந்தவர் வாயை திறத்தா என்றவாறு ஒரு வாய் ஊட்டி விட ஷமீராவுக்கோ சந்தோஷத்தில் அழுகை வந்தது.