Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 449
- Thread Author
- #1
செழியன் நினைவுகள்:
காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாதது கூட அவனுக்கு தெரியவில்லை.செழியனின் சிந்தனை முழுவதும் தன்னவளை நல்லபடியாக அழைத்து வந்து,எந்த தடையும் இல்லாமல் கல்யாணம் பண்ண வேண்டும் என்பது மட்டுமே இருக்கவும், எவ்வளவு விரைவாக வர முடியுமோ அவ்வளவு விரைவாக சோழனூருக்கு வந்து சேரும்போது நள்ளிரவு 11 மணியானது.
எப்படியும் தன்னவன் வந்துவிடுவானென்று நம்பிக்கை இருந்ததால் தூங்காமல் ஜன்னல் அருகே நின்று கொண்டு ரோட்டை பார்த்துக் கொண்டிருக்க தூரத்தில் யாரோ வருவது தெரிந்தது..
அந்நேரம் அவளது போன் வைப்ரேஷனாக வேகமாக போய் பெட்டின் மேலிருந்த போனை எடுத்து பார்க்க இளா என்று வந்தது.
உடனே அட்டென்ட் பண்ணியவள் எங்க இருக்கீங்க என்க,உங்க தெருவுக்குள் தான் டி வந்துட்டு இருக்கேன் பால்கனியில் இருந்து உன்னால இறங்கிட முடியுமா?
"ஹம் முயற்சி பண்ணுகிறேன்"
சரி என்று அழைப்பை துண்டித்தான்.
அதற்குள் ஷமீராவோ அவளது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தோடு கீழே போனவள் பொறுமையாக ஷோகேஸ் திறந்து ஃபோனையும் லெட்டரையும் வைத்துவிட்டு மாடிக்கு வந்தவள் கதவை சாற்றி விட்டு பால்கனியில் போய் நிற்க செழியன் கீழே நிற்பது தெரிந்தது.
கொஞ்சம் தள்ளிப்போ என்று சைகையில் சொன்னவன் கையில் இருந்த கவரை தூக்கி பால்கனியில் எறிந்தான்.என்னவென எடுத்துப் பார்க்க அதில் டிரஸ் இருந்தது.
அதை வைத்து அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொண்டவள் வேகமாக உள்ளே போய் கதவை சாற்றிக் கொண்டு அதிலிருந்த ட்ரெஸ்ஸை மாற்றியவள் தான் போட்டிருந்த நகையெல்லாம் கழட்டி அங்கிருந்த கபோர்டில் வைத்துவிட்டு பால்கனிக்கு வந்தவள் கதவை வெளிப்பக்கமாக தாழிட்டாள்.
பின்னர்,அவளது சர்டிபிகேட் ஆதார் கார்டு ஓட்டர் ஐடி உள்ள பைலை மட்டும் தூக்கி எறிய,அதை செழியனும் கேட்ச் பிடித்துக் கொண்டான்.
பின்னர் பொறுமையாக கம்பியின் மேல் ஏறி பக்கத்தில் இருந்த மரக்கிளையில் கால் வைத்து கீழே இறங்க முயல, காம்பவுண்ட் சுவருக்கு இன்னும் சில அடி தூரமிருந்தது.
பயந்து கொண்டே இறங்க அதற்குள் செழியனோ அதன் மேலே ஏறியவன் தன்னவளை எட்டி பிடிக்க,அவனின் தோளை பிடித்துக் கொண்டு காம்பவுண்ட் சுவரில் இறங்கி விட்டாள்.
அதிலிருந்து தரைக்கு ஏழு அடி தூரம் என்பதால் குதிக்க பயம் வர கீழே குதித்தவன் இரு கைகளை நீட்ட குழந்தை போல தாவியவளை இறுக அணைத்தவாறு கீழே இறக்கி விட்டான்.
யாராவது பார்க்கிறார்களா என்று ஒருமுறை இருவரும் பார்த்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக தெருவை தாண்டி வந்தவர்கள் காரில் உட்கார்ந்த பிறகு தான் பெருமூச்சு விட்டனர்.
எதுவும் பேசாமல் காரை எடுத்தவன் வேகமாக அங்கிருந்து மதுரையை நோக்கி புறப்பட்டான்.சோழனூரை தாண்டி ரொம்ப தூரம் வந்தவனோ காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஊப் என்ற ஊதினான்.
சாப்டிங்களா என்க,அதன் பிறகே காலையிலிருந்து அவன் எதுவும் சாப்பிடவில்லை என்பது நினைவிற்கு வந்தது.
நீ சாப்டியா டி?
இல்லைங்க என்றவாறு கீழே குனிந்து கொண்டாள்.ம்ம்...அப்போ நான் மட்டும் சாப்பிடுவேனா டி???அதைக் கேட்டவளோ அதிர்ந்து போய் பார்க்க,உன்னை பாக்குற வரைக்கும் நான் நானா இல்லை.
டீ மட்டும் திருச்சி வந்து குடிச்சேன். நாளைக்கு காலையில ரிஜிஸ்டர் மேரேஜ்.அது முடிஞ்ச பிறகு கோயில்ல கல்யாணம்.உனக்கு தேவையானது எல்லாமே வாங்கி வைத்திருக்கிறேன்.
இப்பொழுது நேரா மாமா வீட்டுக்கு தான் போறோம் சரியா என்கவும் ஷமீராவோ எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தாள்.
ஏண்டி ஒன்றரை வருஷம் கழிச்சு பார்த்திருக்கிறோமே புருஷன்காரனை கட்டி பிடிக்கணும் முத்தம் கொடுக்கணும்னு அந்த இதெல்லாம் எதுவும் கிடையாதா?
அப்படியே கருங்கல் போல உட்கார்ந்திருக்கிறியே டி என்று செழியன் திட்ட,இப்போ இருக்கிற நிலைமையில் இது ரொம்ப முக்கியமா என்று ஷமீரா கேட்க,இதுவும் முக்கியம் தாண்டி என்று அவள் கழுத்தை வளைக்க கையை நீட்ட,அவளோ கதவின் வேறு ஓரம் ஒண்டி போனாள்..
ஓஓஓஓ....!!!
தொட விட மாட்டீங்களோ?
எனக்கு சொந்தமானது டி.இரவு நேரம் சில்லுனு காத்து கைக்கு எட்டும் தூரத்தில் நீ...மனசும் உடம்பும் உன்னை அணைக்க தவிக்குது டி.முடியலை என்க..
அவளோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.சிறிது நொடி அவளை பார்த்தவன் சரி எப்படி இருக்க சொல்லு?
அதற்கு பதில் சொல்லாமல் நீங்க எப்படி இருக்கீங்க என்றாள்..பார்த்தா தெரியலையா டி ராஜா போல இருக்கிறேன் டி..
ஆமா ஆமா...அதுதான் நல்லா தெரியுதே என்று ஷமீரா பல்லை கடிக்க,அதில் சிரித்தவன் உன்னை நினைத்து தாண்டி வாழ்ந்துட்டு இருக்கேன்.பின்ன நல்லா இல்லாம எப்படி இருப்பேன்? என்றான்.
அதிகாலையில் மதுரைக்கு வந்தவன் ஷமீராவோடு வீட்டுக்கு வர அங்கே அவர்கள் நால்வரும் விழித்திருந்தனர்.அவளுக்கு வாங்கிய டிரஸ் நகைகள் அடங்கிய பேகை கொடுத்தவன் போய் அந்த ரூம்ல குளிச்சிட்டு ரெடியாகு என்று சொல்ல சரி என்றாள்..ஷமீராவும் குளித்து தயாராகி முடிக்க, அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
செழியன் தான் என்று நினைத்தவள் கதவை திறக்க அங்கே பானுவும் நசீராவும் நின்றார்கள்.போலமா மா என்க, ஹம் கா என்றாள்.
ஷமீரா நாங்க உனக்கு அக்கா இல்லை அண்ணி என்று இருவரும் சொல்ல சரிங்கண்ணி என்று சிரித்தாள்.
டேய் எருமை மாடு என்ற சத்தம் கேட்கவும் இவ்வளவு நேரம் தனது நினைவுகளில் மூழ்கியிருந்த செழியன் என்னடா என்றான்.
பைத்தியக்காரா ஏர்போர்ட்டுக்கு வந்து எவ்வளவு நேரம் ஆகுது, என்ன தாண்டா நெனச்சிட்டு இருக்க?செவுட்டு முண்டம்..இன்னும் ஒரு மணி நேரத்தில் நமக்கு பிளைட்.
கீழ இறங்கி தொலைடா பன்னியென்று வெற்றி திட்டவும் அதுக்குள்ள ஏர்போர்ட் வந்துட்டோமா என்றவாறு செழியன் இறங்க,கபியும்,வெற்றியும் கொலை வெறியில் பார்த்தனர்.
பின்னர் லக்கேஜோடு உள்ளே போனவர்கள் மற்ற பார்மாலிட்டிஸ் முடித்துக் கொண்டு அவர்களுக்கான பிளைட் வந்ததும் அதில் ஏறினர்.
வானில் பறந்து வந்த விமானமோ மாலை 4 மணிக்கு எல்லாம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
அங்கிருந்து வெளியே வந்தவர்கள் டாக்ஸியில் ஏறி அவர்கள் வீட்டிற்கு செல்ல வசுந்தராவும் சத்தியமூர்த்தியும் கார்டனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
பாருங்களேன் டா இந்த இளஞ் ஜோடிகள் சேட்டையை என்றவாறு கீழே இறங்கிய வெற்றி ஹலோ காய்ஸ் என்று குரல் கொடுக்க இருவரும் திரும்பி பார்த்து ஹாய் சொன்னார்கள்.
அதை பார்த்த வெற்றிக்கு மேலும் வெறி வர இந்த லவ்வர்ஸை என்று பல்லை கடித்தவன், அம்மா என்று வேகமாக கத்த வசுந்தராவும் சுந்தரமூர்த்தியும் அங்கிருந்து எழுந்து வந்தவர்கள் வாங்க பா எப்படி இருக்கீங்க என்க...
நல்லாயில்லன்னு சொன்னால் திரும்ப கூட்டிட்டு போயிட்டு வருவீங்களா என்று வெற்றி முறைக்க ஹி ஹி ஹி ஹி என்று சத்தியமூர்த்தி சிரிக்கவும் கடுப்பேத்தாதப்பா...
இங்க ரெண்டு பேரும் என்னமோ புது லவ்வர்ஸ் போல கொஞ்சி குலாவிட்டு இருக்கீங்க.ஆனால் உங்க பொண்டாட்டி எங்களுக்கு லீவ் தர மாட்டாங்க.இதற்கு தான் எங்களை ஊருக்கு அனுப்புனீங்களா என்கவும் அடேய் வாய மூடுடா என்ற சத்தியமூர்த்திக்கு அந்த வயதிலும் வெட்கம் வந்தது.
பின்னர் வீட்டிற்குள் சென்றவர்கள் அவரவர் அறையில் பிரஷ் ஆகிவிட்டு வர, சூடாக டிபனும் தயாராக இருக்கவும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் சரி காலைல பாக்கலாம் என்கவும் சரி என்று ரூமிற்குள் சென்றுவிட்டனர்.
பெட்டில் சாய்ந்து உட்கார்ந்தவனோ
போனை எடுத்து தனது மனைவிக்கு கால் பண்ணினான்.
வனிச்சூர்:
இரு விழியின் வழியே நீயா வந்து போனது என்ற ரிங்டோன் சத்தத்தில் இதுவரை கடந்த காலத்தில் மூழ்கியிருந்த ஷமீராவோ திடுக்கிட்டு எழுந்து போய் போனை பார்க்க அதில் இளா என்று வரவும் உடனே அட்டென்ட் பண்ணியவள் ஹலோ நல்லபடியா போய் சேர்ந்துட்டீங்களா?
இப்ப எங்க இருக்கீங்க?
சாப்டீங்களா?என்று தொடர்ந்து கேள்விகளை அடுக்க, ஏய் சண்டிராணி கொஞ்சம் நிறுத்தி நிதானமாக பேசு டி. என்னை எங்கே பதில் சொல்ல விடுற?நீயே எல்லா கேள்வி கேட்டுகிட்டு இருக்கியே...
சரி சரி சொல்லுங்க என்கவும் நான் டெல்லிக்கு வந்துட்டேன் டி.இங்கு அத்தை வீட்ல தான் இருக்கிறேன். அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்க?
ஒன்னும் பண்ணலையே என்று ஷமீரா சொல்லவும் அதுதான் தெரியுமே நீ தான் எதுவும் பண்ண மாட்டேங்கறியே டி. எல்லாம் நானே தான் பண்றேன் என்கவும் அய்யோ என்ன பேசுறீங்க என்று ஷமீரா வெட்கப்படுவது அவன் மன கண்ணில் தெரிந்தது.
சரி ஆன்லைன்ல வா என்று சொல்லி உடனே அழைப்பை துண்டித்தவன் மனைவிக்கு வீடியோ கால் பண்ண அந்தப் பக்கம் அட்டென்ட் பண்ணியவள் கணவனை பார்க்க எண்ணற்ற முத்தங்களை அங்கிருந்து மனைவிக்கு வழங்க,ஷமீராவும் பதிலுக்கு ஃபோனில் கொடுக்க இதெல்லாம் நேரில் கொடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்???என்று ஏக்கமாக சொன்னான்.
உங்களை யார் அங்க போ சொன்னா?
வேலையவே கட்டிட்டு அழுக வேண்டியது தானே? உனக்கு எதுக்கு டா குடும்பம் பொண்டாட்டி என்று ஷமீரா திட்ட அடிப்பாவி என்ன டி இப்படி பேசுற என்றான்.
பின்ன வேற என்ன சொல்ல?
போலீஸ்காரனாக இருந்தால் 24 மணி நேரமும் இப்படி தான் சுத்திக்கிட்டு இருக்கணும்.இதுல காதல் வேற உனக்கு கேடு என்றாள்.
என்ன செல்லம் பண்றது..மாமா விரும்பியே இந்த வேலையில் சேர்ந்துருக்கிறேன் டி. இதை விட முடியாது தான???
இந்த கேஸ் மட்டும் முடிச்சிட்டு கொஞ்சம் பிரேக் எடுக்கலாம்னு இருக்கிறேன் டி என்கவும்,நிஜமாவா என்று ஷமீராவும் ஆர்வமாக கேட்க ஆமாண்டி...
"இன்னும் நம்ம ஹனிமூனே போகலை"அது உனக்கு ஞாபகம் இல்லையா என்கவும் எதேஏஏ என்றவள் அதிர, அதேதான் அதேதான்.
பெரிய பிளான் வச்சிருக்கிறேன் அதை கொண்டாடி தீர்த்துட்டு தான் ஊர் பக்கமே வருவோம்.எல்லாத்துக்கும் நீ தயாராக இரு என்க, ச்சீ போங்கள் என்றாள்..
வீழ்ந்தேனடி...
காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாதது கூட அவனுக்கு தெரியவில்லை.செழியனின் சிந்தனை முழுவதும் தன்னவளை நல்லபடியாக அழைத்து வந்து,எந்த தடையும் இல்லாமல் கல்யாணம் பண்ண வேண்டும் என்பது மட்டுமே இருக்கவும், எவ்வளவு விரைவாக வர முடியுமோ அவ்வளவு விரைவாக சோழனூருக்கு வந்து சேரும்போது நள்ளிரவு 11 மணியானது.
எப்படியும் தன்னவன் வந்துவிடுவானென்று நம்பிக்கை இருந்ததால் தூங்காமல் ஜன்னல் அருகே நின்று கொண்டு ரோட்டை பார்த்துக் கொண்டிருக்க தூரத்தில் யாரோ வருவது தெரிந்தது..
அந்நேரம் அவளது போன் வைப்ரேஷனாக வேகமாக போய் பெட்டின் மேலிருந்த போனை எடுத்து பார்க்க இளா என்று வந்தது.
உடனே அட்டென்ட் பண்ணியவள் எங்க இருக்கீங்க என்க,உங்க தெருவுக்குள் தான் டி வந்துட்டு இருக்கேன் பால்கனியில் இருந்து உன்னால இறங்கிட முடியுமா?
"ஹம் முயற்சி பண்ணுகிறேன்"
சரி என்று அழைப்பை துண்டித்தான்.
அதற்குள் ஷமீராவோ அவளது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தோடு கீழே போனவள் பொறுமையாக ஷோகேஸ் திறந்து ஃபோனையும் லெட்டரையும் வைத்துவிட்டு மாடிக்கு வந்தவள் கதவை சாற்றி விட்டு பால்கனியில் போய் நிற்க செழியன் கீழே நிற்பது தெரிந்தது.
கொஞ்சம் தள்ளிப்போ என்று சைகையில் சொன்னவன் கையில் இருந்த கவரை தூக்கி பால்கனியில் எறிந்தான்.என்னவென எடுத்துப் பார்க்க அதில் டிரஸ் இருந்தது.
அதை வைத்து அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொண்டவள் வேகமாக உள்ளே போய் கதவை சாற்றிக் கொண்டு அதிலிருந்த ட்ரெஸ்ஸை மாற்றியவள் தான் போட்டிருந்த நகையெல்லாம் கழட்டி அங்கிருந்த கபோர்டில் வைத்துவிட்டு பால்கனிக்கு வந்தவள் கதவை வெளிப்பக்கமாக தாழிட்டாள்.
பின்னர்,அவளது சர்டிபிகேட் ஆதார் கார்டு ஓட்டர் ஐடி உள்ள பைலை மட்டும் தூக்கி எறிய,அதை செழியனும் கேட்ச் பிடித்துக் கொண்டான்.
பின்னர் பொறுமையாக கம்பியின் மேல் ஏறி பக்கத்தில் இருந்த மரக்கிளையில் கால் வைத்து கீழே இறங்க முயல, காம்பவுண்ட் சுவருக்கு இன்னும் சில அடி தூரமிருந்தது.
பயந்து கொண்டே இறங்க அதற்குள் செழியனோ அதன் மேலே ஏறியவன் தன்னவளை எட்டி பிடிக்க,அவனின் தோளை பிடித்துக் கொண்டு காம்பவுண்ட் சுவரில் இறங்கி விட்டாள்.
அதிலிருந்து தரைக்கு ஏழு அடி தூரம் என்பதால் குதிக்க பயம் வர கீழே குதித்தவன் இரு கைகளை நீட்ட குழந்தை போல தாவியவளை இறுக அணைத்தவாறு கீழே இறக்கி விட்டான்.
யாராவது பார்க்கிறார்களா என்று ஒருமுறை இருவரும் பார்த்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக தெருவை தாண்டி வந்தவர்கள் காரில் உட்கார்ந்த பிறகு தான் பெருமூச்சு விட்டனர்.
எதுவும் பேசாமல் காரை எடுத்தவன் வேகமாக அங்கிருந்து மதுரையை நோக்கி புறப்பட்டான்.சோழனூரை தாண்டி ரொம்ப தூரம் வந்தவனோ காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஊப் என்ற ஊதினான்.
சாப்டிங்களா என்க,அதன் பிறகே காலையிலிருந்து அவன் எதுவும் சாப்பிடவில்லை என்பது நினைவிற்கு வந்தது.
நீ சாப்டியா டி?
இல்லைங்க என்றவாறு கீழே குனிந்து கொண்டாள்.ம்ம்...அப்போ நான் மட்டும் சாப்பிடுவேனா டி???அதைக் கேட்டவளோ அதிர்ந்து போய் பார்க்க,உன்னை பாக்குற வரைக்கும் நான் நானா இல்லை.
டீ மட்டும் திருச்சி வந்து குடிச்சேன். நாளைக்கு காலையில ரிஜிஸ்டர் மேரேஜ்.அது முடிஞ்ச பிறகு கோயில்ல கல்யாணம்.உனக்கு தேவையானது எல்லாமே வாங்கி வைத்திருக்கிறேன்.
இப்பொழுது நேரா மாமா வீட்டுக்கு தான் போறோம் சரியா என்கவும் ஷமீராவோ எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தாள்.
ஏண்டி ஒன்றரை வருஷம் கழிச்சு பார்த்திருக்கிறோமே புருஷன்காரனை கட்டி பிடிக்கணும் முத்தம் கொடுக்கணும்னு அந்த இதெல்லாம் எதுவும் கிடையாதா?
அப்படியே கருங்கல் போல உட்கார்ந்திருக்கிறியே டி என்று செழியன் திட்ட,இப்போ இருக்கிற நிலைமையில் இது ரொம்ப முக்கியமா என்று ஷமீரா கேட்க,இதுவும் முக்கியம் தாண்டி என்று அவள் கழுத்தை வளைக்க கையை நீட்ட,அவளோ கதவின் வேறு ஓரம் ஒண்டி போனாள்..
ஓஓஓஓ....!!!
தொட விட மாட்டீங்களோ?
எனக்கு சொந்தமானது டி.இரவு நேரம் சில்லுனு காத்து கைக்கு எட்டும் தூரத்தில் நீ...மனசும் உடம்பும் உன்னை அணைக்க தவிக்குது டி.முடியலை என்க..
அவளோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.சிறிது நொடி அவளை பார்த்தவன் சரி எப்படி இருக்க சொல்லு?
அதற்கு பதில் சொல்லாமல் நீங்க எப்படி இருக்கீங்க என்றாள்..பார்த்தா தெரியலையா டி ராஜா போல இருக்கிறேன் டி..
ஆமா ஆமா...அதுதான் நல்லா தெரியுதே என்று ஷமீரா பல்லை கடிக்க,அதில் சிரித்தவன் உன்னை நினைத்து தாண்டி வாழ்ந்துட்டு இருக்கேன்.பின்ன நல்லா இல்லாம எப்படி இருப்பேன்? என்றான்.
அதிகாலையில் மதுரைக்கு வந்தவன் ஷமீராவோடு வீட்டுக்கு வர அங்கே அவர்கள் நால்வரும் விழித்திருந்தனர்.அவளுக்கு வாங்கிய டிரஸ் நகைகள் அடங்கிய பேகை கொடுத்தவன் போய் அந்த ரூம்ல குளிச்சிட்டு ரெடியாகு என்று சொல்ல சரி என்றாள்..ஷமீராவும் குளித்து தயாராகி முடிக்க, அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
செழியன் தான் என்று நினைத்தவள் கதவை திறக்க அங்கே பானுவும் நசீராவும் நின்றார்கள்.போலமா மா என்க, ஹம் கா என்றாள்.
ஷமீரா நாங்க உனக்கு அக்கா இல்லை அண்ணி என்று இருவரும் சொல்ல சரிங்கண்ணி என்று சிரித்தாள்.
டேய் எருமை மாடு என்ற சத்தம் கேட்கவும் இவ்வளவு நேரம் தனது நினைவுகளில் மூழ்கியிருந்த செழியன் என்னடா என்றான்.
பைத்தியக்காரா ஏர்போர்ட்டுக்கு வந்து எவ்வளவு நேரம் ஆகுது, என்ன தாண்டா நெனச்சிட்டு இருக்க?செவுட்டு முண்டம்..இன்னும் ஒரு மணி நேரத்தில் நமக்கு பிளைட்.
கீழ இறங்கி தொலைடா பன்னியென்று வெற்றி திட்டவும் அதுக்குள்ள ஏர்போர்ட் வந்துட்டோமா என்றவாறு செழியன் இறங்க,கபியும்,வெற்றியும் கொலை வெறியில் பார்த்தனர்.
பின்னர் லக்கேஜோடு உள்ளே போனவர்கள் மற்ற பார்மாலிட்டிஸ் முடித்துக் கொண்டு அவர்களுக்கான பிளைட் வந்ததும் அதில் ஏறினர்.
வானில் பறந்து வந்த விமானமோ மாலை 4 மணிக்கு எல்லாம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
அங்கிருந்து வெளியே வந்தவர்கள் டாக்ஸியில் ஏறி அவர்கள் வீட்டிற்கு செல்ல வசுந்தராவும் சத்தியமூர்த்தியும் கார்டனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
பாருங்களேன் டா இந்த இளஞ் ஜோடிகள் சேட்டையை என்றவாறு கீழே இறங்கிய வெற்றி ஹலோ காய்ஸ் என்று குரல் கொடுக்க இருவரும் திரும்பி பார்த்து ஹாய் சொன்னார்கள்.
அதை பார்த்த வெற்றிக்கு மேலும் வெறி வர இந்த லவ்வர்ஸை என்று பல்லை கடித்தவன், அம்மா என்று வேகமாக கத்த வசுந்தராவும் சுந்தரமூர்த்தியும் அங்கிருந்து எழுந்து வந்தவர்கள் வாங்க பா எப்படி இருக்கீங்க என்க...
நல்லாயில்லன்னு சொன்னால் திரும்ப கூட்டிட்டு போயிட்டு வருவீங்களா என்று வெற்றி முறைக்க ஹி ஹி ஹி ஹி என்று சத்தியமூர்த்தி சிரிக்கவும் கடுப்பேத்தாதப்பா...
இங்க ரெண்டு பேரும் என்னமோ புது லவ்வர்ஸ் போல கொஞ்சி குலாவிட்டு இருக்கீங்க.ஆனால் உங்க பொண்டாட்டி எங்களுக்கு லீவ் தர மாட்டாங்க.இதற்கு தான் எங்களை ஊருக்கு அனுப்புனீங்களா என்கவும் அடேய் வாய மூடுடா என்ற சத்தியமூர்த்திக்கு அந்த வயதிலும் வெட்கம் வந்தது.
பின்னர் வீட்டிற்குள் சென்றவர்கள் அவரவர் அறையில் பிரஷ் ஆகிவிட்டு வர, சூடாக டிபனும் தயாராக இருக்கவும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் சரி காலைல பாக்கலாம் என்கவும் சரி என்று ரூமிற்குள் சென்றுவிட்டனர்.
பெட்டில் சாய்ந்து உட்கார்ந்தவனோ
போனை எடுத்து தனது மனைவிக்கு கால் பண்ணினான்.
வனிச்சூர்:
இரு விழியின் வழியே நீயா வந்து போனது என்ற ரிங்டோன் சத்தத்தில் இதுவரை கடந்த காலத்தில் மூழ்கியிருந்த ஷமீராவோ திடுக்கிட்டு எழுந்து போய் போனை பார்க்க அதில் இளா என்று வரவும் உடனே அட்டென்ட் பண்ணியவள் ஹலோ நல்லபடியா போய் சேர்ந்துட்டீங்களா?
இப்ப எங்க இருக்கீங்க?
சாப்டீங்களா?என்று தொடர்ந்து கேள்விகளை அடுக்க, ஏய் சண்டிராணி கொஞ்சம் நிறுத்தி நிதானமாக பேசு டி. என்னை எங்கே பதில் சொல்ல விடுற?நீயே எல்லா கேள்வி கேட்டுகிட்டு இருக்கியே...
சரி சரி சொல்லுங்க என்கவும் நான் டெல்லிக்கு வந்துட்டேன் டி.இங்கு அத்தை வீட்ல தான் இருக்கிறேன். அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்க?
ஒன்னும் பண்ணலையே என்று ஷமீரா சொல்லவும் அதுதான் தெரியுமே நீ தான் எதுவும் பண்ண மாட்டேங்கறியே டி. எல்லாம் நானே தான் பண்றேன் என்கவும் அய்யோ என்ன பேசுறீங்க என்று ஷமீரா வெட்கப்படுவது அவன் மன கண்ணில் தெரிந்தது.
சரி ஆன்லைன்ல வா என்று சொல்லி உடனே அழைப்பை துண்டித்தவன் மனைவிக்கு வீடியோ கால் பண்ண அந்தப் பக்கம் அட்டென்ட் பண்ணியவள் கணவனை பார்க்க எண்ணற்ற முத்தங்களை அங்கிருந்து மனைவிக்கு வழங்க,ஷமீராவும் பதிலுக்கு ஃபோனில் கொடுக்க இதெல்லாம் நேரில் கொடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்???என்று ஏக்கமாக சொன்னான்.
உங்களை யார் அங்க போ சொன்னா?
வேலையவே கட்டிட்டு அழுக வேண்டியது தானே? உனக்கு எதுக்கு டா குடும்பம் பொண்டாட்டி என்று ஷமீரா திட்ட அடிப்பாவி என்ன டி இப்படி பேசுற என்றான்.
பின்ன வேற என்ன சொல்ல?
போலீஸ்காரனாக இருந்தால் 24 மணி நேரமும் இப்படி தான் சுத்திக்கிட்டு இருக்கணும்.இதுல காதல் வேற உனக்கு கேடு என்றாள்.
என்ன செல்லம் பண்றது..மாமா விரும்பியே இந்த வேலையில் சேர்ந்துருக்கிறேன் டி. இதை விட முடியாது தான???
இந்த கேஸ் மட்டும் முடிச்சிட்டு கொஞ்சம் பிரேக் எடுக்கலாம்னு இருக்கிறேன் டி என்கவும்,நிஜமாவா என்று ஷமீராவும் ஆர்வமாக கேட்க ஆமாண்டி...
"இன்னும் நம்ம ஹனிமூனே போகலை"அது உனக்கு ஞாபகம் இல்லையா என்கவும் எதேஏஏ என்றவள் அதிர, அதேதான் அதேதான்.
பெரிய பிளான் வச்சிருக்கிறேன் அதை கொண்டாடி தீர்த்துட்டு தான் ஊர் பக்கமே வருவோம்.எல்லாத்துக்கும் நீ தயாராக இரு என்க, ச்சீ போங்கள் என்றாள்..
வீழ்ந்தேனடி...