• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
439
ஷமீரா நினைவுகள்:

காலேஜ் முடிந்து வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்த ஷமீராவிற்கு யாரோ அவள் பெயரை சொல்லி கூப்பிடுவது போல் கேட்கவும் திரும்பிப் பார்க்க அவளின் முன்னால் வந்தவன் ஹலோ ஷமீரா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றான்.

ராஜியும் அவளும் அவனை விசித்திரமாக பார்க்க பிளீஸ் சிஸ்டர் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன் என்றான்.

ஓஓஓஓ என்ற ராஜியும் சரி பேசிட்டு வாடி நான் அங்கு நிற்கிறேன் என்றவாறு சற்று தள்ளி போய் மாடி படியின் அருகே நின்று வேடிக்கை பார்த்தாள்.

ஹம் சொல்லுங்க...

ம்கும்..என் பெயர் சதீஷ் நான் உங்க கூட தான் பஸ்ல வருகிறேன் என்றான்.

ஓஓஓஓ...உங்கள் பெயர் தெரியாது. பட் உங்களை பஸ்ஸில் பார்த்துருக்கேன் சொல்லுங்க என்ன விஷயம்?

அதாவது என்று ஒரு நொடி அமைதியானவன் ரெண்டு வருஷமா நான் உங்களை காதலிக்கிறேன்.இந்த வருஷம் கோர்ஸ் முடிய போகுது அதான் உங்ககிட்ட என் மனசுல இருக்குறதை சொல்ல வந்தேன்...

அதைக் கேட்டவள் அப்படிங்களா,மிஸ்டர் சதீஷ் நான் ஏற்கனவே ஒருத்தர லவ் பண்றேன்.இன்னும் கொஞ்ச நாளில் ஷமீரா இளஞ்செழியனாகிடுவேன்.
என்றவளோ அங்கிருந்து போக இதை எல்லாம் அவனோடு பின்னாடி இருந்த இரண்டு பையன்களும் காதில் வாங்கினார்கள்

அதில் ஒருவனோ என்னாஆஆஆ ஷமீரா அக்கா லவ் பண்றாங்களா?என்று அதிர,அவன் பக்கத்தில் இருந்த நண்பனோ அந்த பொண்ணை உனக்கு தெரியுமாடா எஎன்றான்.

தெரியுமாவா...எங்க ஊரு தாண்டா.அவங்க வீட்ல இருந்து நாலாவது வீடு தான் எங்க வீடு.அந்த அக்காவோட அப்பா பொல்லாதவருடா.
இந்தக்கா லவ் பண்றாங்களே அது தான் எனக்கு ஆச்சரியமா இருக்குடா.ஆனா அவங்க சொன்ன பேர்ல எங்க ஊர்ல யாருமே இல்லையேடா என்றவாறு நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

அப்பொழுது இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அம்மா ஒரு விஷயம் என்றான்.அவரோ என்னடா சொல்லு?.நம்ப ஊரில் இளஞ்செழியன்னு யாராவது இருக்காங்களா?

சிறிது நிமிடம் யோசித்தவர் அப்படி யாரும் இல்லையே பா...ம்ம் மா நம்ப ஷமீரா அக்கா யாரோ ஒருத்தவங்களை லவ் பண்றாங்களாம் மா. இன்னைக்கு எங்க காலேஜ்ல ஒரு பையன் கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க நான் கேட்டேன்...

அந்த பெண்மணியோ அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் ஷமீராவிற்கு நல்லது பண்ணுவதாக நினைத்து மறுநாள் காலை பையனை கல்லூரிக்கு அனுப்பி விட்டவர் நேராக வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அழுத்த, அவர் நேரமோ என்னவோ தெரியவில்லை மகியும் அன்று வீட்டிலிருந்தார்.

கதவை திறந்த எஸ்தர் வாங்கண்ணி என்க, ஒரு முக்கியமான விஷயம் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். உன் சின்ன மருமகன் ஒரு விஷயம் சொன்னா அதைக் கேட்டு ரொம்ப பதறிப் போயிட்டேன் எஸ்தரு.

எங்க அண்ணனுக்கு இது தெரிஞ்சா பெரிய பிரச்சினையாகுமே என்கும் போது ரூமில் இருந்து வெளியே வந்த மகியை பார்த்தவர் அண்ணா என்று அதிர...

வா லீலா... என்ன பிரச்சனை என்க அது வந்து ணா என்று அவர் சொல்ல தயங்க பரவால்ல சொல்லு என்கவும், தனது மகன் சொன்ன விஷயத்தை சொல்லவும் அப்படியா என்று அதிர்ந்து போனார்கள்.சரி லீலா நான் பாத்துக்குறேன் என்றார். எஸ்தருக்கு இன்னும் நம்பவே முடியவில்லை.

நமது மகளா இது?

எந்த ஒரு விஷயத்தையும் தன்னிடம் மறைக்க மாட்டாளே என்று உள்ளுக்குள் அங்கலாய்ப்பாக இருக்க, மகியின் முகத்தை பார்க்கவே ஒரு பக்கம் அவருக்கு பயமாக இருந்தது.

மதியம் சாப்பிடும் நேரத்தில் ஆரம்பித்த மகியோ வார்த்தையாலே எஸ்தரை கொன்றுக் கொண்டிருந்தார். நேரமும் கடக்க மகளின் வருகைக்காக காத்திருந்தனர்.

இன்று நேரமாகவே வகுப்புகள் முடியவும் வீட்டிற்கு வந்த ஷமீராவோ அங்கிருந்த தனது தந்தையை பார்த்து கீழே குனிந்து கொண்டு உள்ளே போக,ஷமீரா என்ற குரலைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றாள்.

வேகமாக வந்தவர் மகளை பளார் பளாறென்று அறைய எதற்காக அடிக்கிறார் என்று தெரியாமல் ஷமீராவும் கண்ணீரோடு நிற்க,உனக்கும் பாபுவிற்கும் கல்யாண பேச்சு வார்த்தை போயிட்டிருக்கே இந்த சூழலில் எவனையோ காதலிக்கிறியாமே என்று கண் மண் தெரியாமல் அடிக்க,வாங்கிய அடியும் கேட்ட செய்தியிலும் அதிர்ந்தவளோ அப்படியே மயங்கி விழுந்தாள்.

மாடியில் காய வைத்த துணியை எடுக்க போயிருந்த எஸ்தரோ அப்போதுதான் கீழே வந்தவர் மயங்கி கிடக்கும் மகளை பார்த்து ஷமி என்றவாறு வேகமாக படியில் இறங்கி வந்தவர் மகளை தூக்க...

ஆமா உன் மகளுக்கு ஆரத்தி எடுத்து கொஞ்சுடி ஊர் மேஞ்சிட்டு வராள் அது தெரியாமல் நீ என்னடி பண்ற என்கவும், இதை பொறுமையாக கேட்டுருக்கலாமே என்க...

என்னடி பொறுமை வேண்டி கிடக்கு. அப்ப நீயும் இதுக்கு உடந்தையா என்று எஸ்தருக்கும் இரண்டு அறையை கொடுத்தார்.

நிறுத்துங்க...

சும்மா இப்படி எல்லாம் பேசாதீங்க என்று அழுது கொண்டே கிச்சனிலிருந்து தண்ணி எடுத்துட்டு வந்து மகள் முகத்தில் தெறிக்க கண்கள் திறந்து பார்த்தவள் அம்மா என்று எஸ்தரை கட்டிக்கொண்டு மனதில் இருப்பதை வெளியே சொல்ல முடியாமல் அழுது கொண்டே இருக்க..

ஏங்க வர முகூர்த்தத்தில் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சிடுங்க அப்பதான் நானும் கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியும் உங்ககிட்ட என்று எஸ்தர் சொல்ல...என்னடி ஆத்தாளும் மகளும் விளையாடுறீங்களா?.

இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு டி. திடீர்னு படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் பண்ணினால் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க?

என் மூஞ்சில காரி துப்ப மாட்டாங்களா?

படிப்பு முடிக்கட்டும் முடிந்த உடனே கல்யாணம் பண்ணி வைத்து விடுகிறேன் என்று அதோடு பேச்சை முடித்தாலும் அதற்கு பிறகு வந்த நாட்களோ ஷமீராவுக்கு மிகவும் கெடுபிடியானது.

அதுவரை பாசமாக இருந்த எஸ்தரோ மகளை ஒவ்வொரு விஷயத்துக்கும் சந்தேகப்பட ஆரம்பித்தார்.

ஷமீராவோ பல்லை கடித்துக் கொண்டு நாட்களை ஒட்டினாள்.பாபு இங்கு வந்த பிறகு அவனிடம் நேரடியாக விஷயத்தை சொல்லி கல்யாணத்தை நிறுத்தலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்க,செழியனிடம் இருந்தும் அவளுக்கு எந்த போன் மெசேஜும் வரவில்லை ...இதை நினைக்க இன்னொரு பக்கம் கவலையாக இருந்தது.

திருச்சி:

காலிங் பெல் சத்தம் கேட்டு மானசா போய் கதவை திறக்க அங்கே நிற்கும் மகனை பார்த்தவர் அருண் என்று அதிர..

நானே மா..

எப்படி மா இருக்க என்றவாறு உள்ளே வந்தவனோ அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவன் அப்பா எங்கே என்கும் போது தோட்டத்தில் இருந்த மகியும் வீட்டிற்குள் வந்தவரோ மகனை பார்த்து வா பா..

நல்லாருக்கியா?

மருமகள் எப்படி இருக்கு?

ரெண்டு பேரும் நல்லாருக்கோம் பா.

சொல்லுங்கப்பா எதுக்கு இவ்ளோ அர்ஜெண்டா வரச் சொன்னீங்க?

ஒரு முக்கியமான விஷயம் பேசறதுக்கு தான் வர சொன்னேன் என்கும்போது இரண்டு கப்பில் காபி எடுத்துட்டு வந்த மானசா,கணவருக்கும் மகனுக்கும் கொடுத்து விட்டு எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தார்.

அருணோ இருவரின் முகத்தை வைத்தே எதுவோ சரியில்லை என்பதை புரிந்து கொண்டான்.

மகன் காபியை குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த மகி தம்பி சில விஷயங்கள் உன் கிட்ட சொல்லணும் அது கேட்ட பிறகு நீ எப்படி எடுத்துக்கிறியோனு தெரியலை.

ஆனா உனக்கு தெரிய வேண்டியது அவசியமும் கட்டாயமும் இருக்கு...

ஹம் சொல்லுங்கப்பா ஏதாவது பிரச்சனையா என்று பதட்டமாக கேட்க, நான் முதல்ல சொல்றேன் பிறகு உனக்கு என்ன கேள்விக்கு தோணுதோ அதை நீ கேளு என்றவர் தனது வாழ்க்கையில் நடந்த அத்தனையும் சொல்லி முடிக்க கேட்டவனோ அதிர்ந்து போனான்.

மகனின் முகத்தை பார்த்தவர் சொல்லு தம்பி நீ என்ன நினைக்கிற?இந்த அப்பா அம்மாவை பற்றி தப்பா தான் நினைச்சுட்டு இருப்ப எனக்கு தெரியும்.இனி இதை மாற்ற முடியாது பா...

அவனோ எதுவும் சொல்லாமல் எழுந்தவன் நேராக தனது அறைக்குள் போய் கதவை பூட்டி கொண்டவன்.

மகன் கோவமாக எதாவது பேசியிருந்தால் கூட பெரிதாக வலியிருந்திருக்காது போல.அவனோ இருவர் முகத்தை கூட பார்க்காமல் முகத்தில் அறைந்த போல் சென்றதோ ஆயிரம் சவுக்கால் அடித்தது போன்று இருந்தது.

சிறிது நிமிடங்கள் அமைதியாக இருந்த மானசா, ஆமாம் எதுக்கு அருணை வர சொன்னீங்க?

யாருக்கு எப்போ என்ன நடக்குமென்று தெரியவில்லை.அதனால் நான் சுயமாக சம்பாதித்ததை என்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்க முடிவு பண்ணிட்டேன்.அதற்காக தான் அருணை வரச் சொல்லிருக்கிறேன்

ஓஓஓஓ...

என் புள்ளைங்களுக்கும் ஷமீராவுக்கும் எப்படி சமமாக பிரிப்பீங்க?

அவளுக்கு ஆண் வாரிசு இல்லை.அப்போ உரிமை என் பையனுக்கு தானே?

அவனாக பார்த்து எதாவது குடுத்தால் வாங்கிக்க சொல்லுங்கள் என்க, வாயை மூடு டி... இன்னொரு வார்த்தை இதை பற்றி நீ பேசுன நான் மனுஷனா இருக்க மாட்டேன்.

பணத்தாசை பிடித்த பேயென்று தெரியாமல் உன்னோடு இத்தனை வருஷம் வாழ்ந்துருக்கனே ச்சை.

இது ஒன்னும் நீ சம்பாதித்ததோ இல்லை உங்கப்பன் வீட்டிலிருந்து எடுத்து வந்த சீதனமோ இல்லை.நம்ப கல்யாணத்திற்கு உங்க வீட்டில் என்ன செலவு பண்ணுனாங்கனு கொஞ்சம் நினைத்து பாரு?.

ஆனால்....

எஸ்தர் அப்படியில்லை..

சீர்வரிசை நகைகளோடு வந்தாள்.27 வருஷத்துக்கு முன்பு அவள் வீட்டில் போட்ட நகைகளை என்கிட்ட கொடுத்தவள் இதுவரை அதை பற்றி கேட்டதில்லை.இனியும் கேட்க மாட்டாள்.

அவள் மனைவியா?

இல்லை பணம் நகை சொத்துனு சுயநலமாக வாழும் நீ மனைவியா?

காதலுக்கு கண்ணு தெரியாதுனு சொல்வாங்களே அதே நிலை தான் நான்.உன் வெள்ளை தோலை பார்த்த எனக்கு உன்னுடைய முழு குணமும் தெரியாமல் போயிற்று.கட்டுன பாவத்துக்கு கடைசிவரை கஞ்சி ஊற்றுவேன்.

நான் என்ன பண்ணனும் பண்ணக்கூடாதுனு சொல்ற வேலையை இனி வச்சிக்காதே,மூன்று பேரும் என் பிள்ளைகள் தான் புரியுதா என்றவாறு தனது ரூமிற்குள் சென்று விட்டார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
439
மதுரை:

ஹப்பாடா நல்லபடியாக வந்த வேலையை முடித்தாச்சு.இனி டெல்லிக்கு போய் வழக்கம் போல குப்பை கொட்ட வேண்டியது தானென்றவாறு அங்கிருந்த சோபாவில் சாய்ந்து உட்காரும் தீபனை முறைத்துக் கொண்டே உள்ளே வந்த ருத்ரன்,ஏன் தடி மாடு இதுக்கு தான் அவ்வளவு சீக்கிரம் ஓடி வந்தாயா என்று திட்டினான்.

அன்று இரவு வனிச்சூரில் இருப்பவர்களிடம் சொல்லிக் கொண்டு டெல்லிக்கு புறப்பட்டார்கள் .

மூன்று மாதங்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்தவர்கள் அவரவர் அறையில் படுத்து விட்டனர்.மறுநாள் சாவகாசமாக எழுந்து வெளியே வர அங்கே எஸ்தர் எல்லாருக்கும் டிபனை தயாராக செய்து வைத்து காத்திருந்தார்.

ஏங்கம்மா மிட் நைட் தான் வந்து படுத்தோம் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே என்றவாறு ஜூலி வந்து அவர் பக்கத்தில் உட்கார இதுல என்ன இருக்கு என்றார்.

அப்பொழுது வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்க நான் பார்க்கிறேன் என்ற தீபனும் கதவை திறக்க அங்கே அவர்கள் அப்பார்ட்மெண்டின் செக்கரட்ரி கொண்டிருந்தார்.

குட் மார்னிங் சார்...

குட் மார்னிங் தீபன்.எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஒரு விஷமாக பாத்துட்டு போகலாம்னு வந்தேன் என்றார்.

உள்ள வாங்க சார் என்றவாறு வழியை விட அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவர் மற்றவர்களிடம் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு எஸ்தர் மா உன்னை தான் பார்க்க வந்தேன்..

ஹம் சொல்லுங்க ணா..

அதாவது மா வருஷா வருஷம் திறமை உள்ளவர்களை ஊக்குவிப்பதற்காக நம்ப வில்லாவில் போட்டிகள் நடத்துறோம்.இந்த முறை டிசைனிங் காம்படீஷன்ல உன் பெயரை நானே கொடுத்துருக்கேன்.

இதன் மூலமாக உன்னுடைய திறமை பற்றி வெளியிலயும் தெரிய ஆரம்பிக்கும்.அது மூலமாக நிறைய ஆபர் வரும் மா.இங்க ஏ பிளாக்கில் பேமஸ் டிசைனர் ஹிரோஷி இருக்காங்க.

ஒவ்வொரு வருடமும் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு அவங்க கம்பெனியில் வேலை தராங்க.ரோஷி பிராண்ட் நேம் கேள்வி பட்டுருக்கியா? அதோடோ ஒனர் தான் மா.

உன் கிட்ட அற்புதமான திறமை இருக்கிறது மா அது மற்றவர்களுக்கும் பயன்படட்டுமே?

இதுவரை அவர் சொல்லியதெல்லாம் கேட்டவர்கள் வாவ் சூப்பர் என்று கையை தட்டி விட்டு தேங்க்யூ அங்கிள் என்று அவர்கள் நால்வரும் சொல்ல இதில் என்ன பிள்ளைகளா இருக்கு...

எஸ்தர் என் தங்கச்சி போல.ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம எல்லாம் தமிழர் இல்லையானு அவர் சிரிக்க இருங்க ணா நான் உங்களுக்கு பிடிச்ச டீ எடுத்துட்டு வரேனென்று கிச்சனுக்குள் போனவர் சூடா டீ கொண்டு வந்து கொடுக்க வாங்கி குடித்தவர் சரி மா அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை போட்டி.நீ தயாராகு ஆல் த பெஸ்ட்..

மிக்க நன்றிங்க அண்ணா.

உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவதற்கு என்னால் ஆன அத்தனை முயற்சி எடுக்கிறேனென்க சரிமா என்றார்.

அம்மா கலக்குங்கள் என்று அவர்கள் நால்வரும் அவருக்கு ஆல் த பெஸ்ட் சொல்ல எஸ்ருக்கும் சிறிது வெட்கம் வந்தது.

இனி நீங்க என்ன பண்றீங்கனாக்க போட்டிக்கு தயாராகுங்கள் மா.

போன்ல பாருங்க...

எல்லாவிதமான டிசைனும் அவங்க விரும்புவாங்க. ஒருமுறை நீங்கள் பார்த்துவிட்டு அதுக்கு தகுந்த போல பிராக்டிஸ் பண்ணுங்க.என்ன மெட்டீரியல் வேணும்னு சொல்லுங்க நானும் தீபனும் வாங்கிட்டு வரோம் என்று ருத்ரன் சொல்ல இருக்கட்டும் பா.

இருப்பதை வைத்து பழகுறேன் என்றவாறு ரூமிற்குள் போனவர் ஏசப்பாஆஆ..முதல் முதலாக ஒரு போட்டிக்கு தயாராகிறேன் வெற்றி தோல்வி அடுத்த பிரச்சினை.

அதில் கலந்து கொள்வதற்காக என்னை ஆசிர்வாதம் பண்ணு பா என்று மனதிற்குள் பிரேயர் பண்ணி விட்டு மிஷினை துடைத்தவர் நோட்டு பென்சில் எடுத்து அவருக்கு தெரிந்த டிசைன்கள் எல்லாம் முதலில் வரைய தொடங்கினர்.

ஒரு வாரமும் எஸ்ருக்கு பெரிதாக எந்த வேலையும் கொடுக்கவில்லை அவரும் ஆர்வமாக போட்டியில் கலந்து கொள்வதற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்க வீட்டு பொறுப்பை ரூபாயும் ஜூலியும் எடுத்துக் கொண்டனர்.

பிருந்தாவனம் வில்லாவோ மின்விளக்கு அலகாரத்தில் ஜெகஜோதியாக ஜொலிக்க போட்டியை காண்பதற்காக அங்கிருப்பவர்களின் நண்பர்கள் சொந்தக்காரர்கள் என்று காரில் வந்த வண்ணமாக இருந்தனர்.

பெரிய கிரவுண்டும் வில்லாவிற்கு பின்னாடி சொந்தமாக இருப்பதால் அதிலேயே மேடை அமைத்து அலங்காரம் எல்லாம் செய்யப்பட்டு அங்கங்கே போட்டி குழுவும் ரெடியாக இருக்க...வழக்கம் போல ஒவ்வொரு போட்டியாக நடந்து கொண்டிருந்தது.

எஸ்தருக்கு கொஞ்சம் படபடப்பாக இருக்க சற்று தூரத்தில் உட்கார்ந்திருந்த பிள்ளைகளோ நெஞ்சில் கையை வைத்து ஆல் இஸ் வெல் ஆல் இஸ் வெல் என்கவும் அவரும் தலையசைத்துவிட்டு பின்னர் முழு கவனத்தை வரைவதில் செலுத்தினார்.

ஒரு வழியாக போட்டி முடிஞ்சு ரிசல்ட் அறிவிக்கும் நேரம் வந்தது.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களை மேடையில் இருப்பவர்கள் வாழ்த்தி பரிசுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் போது அடுத்ததாக யார் அந்த பெஸ்ட் டிசைனர் என்ற அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட இன்னும் ஹிரோஷி மேடத்தை காணவில்லை என்று சொல்லும்போது வீல்ச்சேரில் உட்கார வைத்த பெண்மணியை 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தள்ளிக் கொண்டு வருவது தெரிந்து எல்லாரும் திரும்பி பார்த்து கையை தட்டும் போது தான் எஸ்தரும் திரும்பி பார்த்து அதிர்ந்து போனார் .

வீல் சேரோடு மேடைக்கு வந்த ஹிரோஷி அங்க இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லியவர் யார் அந்த டிசைனரென்று சொல்லி விடலாமா என்க, எல்லாரும் எஸ் என்று கோரசாக கத்தினர்.

செழியன் நினைவுகள்:

அண்ணா,உண்மையிலேயே அமைச்சர் ஆடியபாததோட இரண்டாவது மனைவிதான் இந்த அம்மாவா??

அட ஆமா தம்பி...அதுல உனக்கு என்ன சந்தேகம்? ?

அவர் சம்பந்தமாக எந்த போட்டோவும் இந்த வீட்டில் இல்லையே ணா அதானென்று செழியன் சொல்ல,இவ்வளவு தானா ப்பூஊஊ...

அதுக்குன்னு ஒரு ரூம் இருக்கு அந்த ரூம்ல தான் அவங்க குடும்ப போட்டோவே இருக்கு பா, ஓஓஓ அப்படிங்களா ணா..

இந்த அம்மாக்கு குழந்தைங்க ணா?

இருக்கிறது தம்பி ஒரே ஒரு பையன். அந்த பையன் வெளிநாட்டில் டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கிறான்.பேர் பவித்ரன் பா நல்லா படிக்கிற புள்ளை..

ம்ம் என அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த குண்டு பெண்மணியும் ஒரு டிரேவில் டீ எடுத்துட்டு வந்தவர் இருவருக்கும் கொடுத்துவிட்டு அங்கிருந்த ஷோபாவில் உட்கார்ந்து கொண்டு அம்மா டி பிரியா இங்க வா...

வீட்டுக்கு கெஸ்ட் வந்துருக்காங்க அவங்களை வாங்கனு சொல்றதில்லையா?

இவ்வளவு நேரம் மரம் போல் உட்கார்ந்திருந்தவளோ அந்த குரலில் சாவி கொடுத்த பொம்மை போல் அமைதியாக வந்து அந்த பெண்மணியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

தம்பி இது என்னுடைய பெரிய பொண்ணு சென்னை ஐஐடியில் படிச்சு முடிச்சிருக்காங்க. வரன் தேடிகிட்டு இருக்கோம்.

சரிப்பா உங்களுக்கு எவ்வளவு மூட்டை வேணும் அது சொன்னீங்கன்னா எடுத்துட்டு வர சொல்லிடுவேன்...

எங்களுக்கு 30 ஏக்கர் இருக்குங்க அதுக்கு தகுந்த அளவுக்கு வேணும். அப்படியா என்று அவர் மனதுக்குள் கணக்கு பண்ணியவர் உங்களுக்கு எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கலாம் தம்பி...

சரிங்க மா..முதல்ல நான் கொஞ்சம் சாம்பிள் நெல் எடுத்துக்கிட்டு ஊருக்கு போயி எங்க தாத்தா கிட்ட காட்டுறேன். ஏன்னா அவரு சரின்னு சொன்னால் தான் இந்த விஷயத்துல நான் இறங்க முடியும்...

அப்படிங்களா தம்பி பெரியவங்க சொன்னால் சரியா தான் இருக்கும்.சரி நான் உங்களுக்கு சாம்பிள் கொடுக்க சொல்றேன் என்றவர் அப்புறம் ஏட்டைய்யா கோயிலுக்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சுங்க...

நான் வேலு கிட்ட கொடுத்து அனுப்புறேன் நீங்க நல்லபடியா போயிட்டு வாங்க என்க..இருவரும் அவரிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தவர்கள் வண்டியில் ஏறி ஸ்டேஷனுக்கு வந்தனர்.

அங்கிருந்த இன்ஸ்பெக்டர் வேல்முருகன்,செழியனை பார்த்து சல்யூட் அடிக்க,ஹலோ சார் என்று கை குலுக்கியவன் ஸ்டேஷனில் இருக்கும் கேசுங்களின் நிலமையை விசாரித்துவிட்டு பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் போது செழியனின் போனுக்கு கால் வந்தது..

பாக்கெட்டில் இருந்ததை எடுத்து பார்க்க ட்ரூகாலரில் ஆடியபாதம் என்று தெரியவும் உடனே அட்டென்ட் பண்ணியவன் சற்று தள்ளி போய் நின்று கொண்டு அம்மா டி பிரியா...

அண்ணா என்றவள் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் அந்த பக்கம் கதறி அழுவது கேட்டது.அழாதே,நீ சொன்னால் தான் ரவீந்திரன் எங்கே என்று என்னால் கண்டுபிடிக்க முடியும்..

இதைக் கேட்டு அவள் மேலும் அந்த பக்கம் அழ...பிரியா கொஞ்சம் அழாமல் விஷயத்தை சொல்லு மா.அண்ணா, கடலூர் கிருஷ்ணா ஹாஸ்பிடல்ல டாக்டர் மேகன் இருப்பார்.அவர்கிட்ட போய் நீங்க யாருன்னு சொல்லுங்க ணா மத்த விஷயம் எல்லாம் உங்களுக்கு தானா தெரியும் என்று சொல்லி அந்த பக்கம் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

என்ன விஷயமா இருக்கும்?

ஒருவேளை ரவீந்திரனை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணிருக்காங்களா என்று தனக்குள்ளே பேசிக் கொண்டவன் இன்ஸ்பெக்டரிடம் வந்து கடலூருக்கு போக எவ்வளவு நேரம் ஆகும் என்றவன், அண்ணா கொண்டு வந்து பஸ் ஸ்டாண்ட்ல விடுங்க என்க..

சரிங்க தம்பி என்று அவரும் அவனை அழைத்து வந்து பஸ் ஸ்டாப்பில் விட கடலூருக்கு போகும் பஸ் வரவும் அதில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

ஒரு மணி நேர பயணத்தில் கடலூருக்கு வந்தவன் அங்கே கிருஷ்ணா ஹாஸ்பிடல் எங்கே இருக்கு என்று கேட்டுக் கொண்டு ஆட்டோவில் வந்தவன் ரிசப்ஷனில் உள்ளவரிடம் டாக்டர் மேகனை பார்க்கணும் என்க..

அவர் ஈவ்னிங் தான் வருவார் என்றனர்.

பர்சனலா அவரை நான் பாக்கணும் அவருடைய காண்டாக்ட் நம்பர் குடுங்க என்றான்.அவள் யோசிக்க, பின்னர் தான் போலீஸ் என ஐடி காட்டவும் சரிங்க சார் என்றவள் கம்ப்யூட்டரில் இருந்த டாக்டர் மேகனின் நம்பரை செழியனுக்கு சொன்னாள்.

அவனும் அந்த நம்பருக்கு தனது ஃபோனில் இருந்து கால் பண்ண, நான்காவது ரிங்கிள் அட்டென்ட் பண்ணி ஹலோ என்கும் ஆண் குரல் கேட்கவும், ஹலோ டாக்டர் நான் இளஞ்செழியன் ஐ பி எஸ்.ஒரு கேஸ் விஷயமா உங்களை பார்க்கிறதுக்காக ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கிறேன்...

ஓஓஓஓ... நான் வீட்டில் தான் இருக்கிறேன் உங்களால் வரமுடியுமாயென அவரும் கேட்க,எஸ் டாக்டர் என்றவனிடம் அட்ரஸ் சொன்னார்.

ஓகே டாக்டர் என்று அழைப்பை துண்டித்து வெளியே வந்தவன் அங்கிருந்த ஆட்டோவில் ஏறியவன் அட்ரஸ் சொல்ல,சரிங்க என்றவர் டாக்டர் மேகன் வீட்டை நோக்கி ஆட்டோவை ஓட்டலானார்...

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top