• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சோழனூர்:

அம்மாடி எஸ்தரு...இப்ப என்ன நடந்து போச்சு இப்படி மூக்கை சிந்திக்கிட்டு இருக்குறனு அந்தோணி கேட்க,எதுக்குணா நீயும் இப்படி பண்ணினயென்றார்.


வேறு என்ன பண்ண சொல்ற நீயே சொல்லு?பாபு பேசினதை நீயும் கேட்ட தானே..அண்ணன் தங்கச்சியா நினைக்கிற பிள்ளைகளுக்கு போய் எப்படி கல்யாணத்தை பண்ணி வைக்க முடியும்??

நம்ம உறவை தான் பாக்குறோமே தவிர கடைசி வரைக்கும் வாழ போறது அவங்க..அதை பத்தி யோசிக்கலையே என்கவும் எஸ்தருக்கும் மகிக்கும் அவர் சொல்வது வஸ்தும்தானென்று மனதிற்குள் பட்டது.

ஆனாலும் மகளை ஏனோ அந்த கிராமத்து வீட்டில் வாழ மனம் அனுமதிக்கவில்லை.அதைவிட அவர்களோ இந்து குடும்பம்.இவர்கள் பரம்பரை கிறிஸ்தவர்கள்.

இப்படி இந்து குடும்பத்தில் போய் தனது மகள் திருமணம் பண்ணிக் கொண்டாளென்று சொந்த பந்தங்களுக்கு தெரிந்தால்,அவர்களெல்லாம் தன்னை பற்றி எப்படி நினைப்பார்கள் என்பதே மகிக்கு யோசனையானது.

தனது தங்கை கணவரின் முகத்தை வைத்து சூழலை உணர்ந்து கொண்ட அந்தோணி,ஊருக்காக ஒன்னும் நம்ப வாழலை..யாரு வீட்டுலயும் நடக்காத விஷயம் ஒன்னும் நம்ம வீட்ல நடக்கலையே..

அதான் மகளே வேணாம்னு ரெண்டு பேரும் சொல்லிட்டீங்களே இப்ப மட்டும் எதுக்கு அத பத்தி யோசிக்கிறீங்களென்று கொஞ்சம் கடுப்பாக கேட்க,ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன் மாமா, அப்படியாவது வந்துடுவாள்னு..

ஆனா இவ்வளவு உறுதியாக நிற்கிறாளே...ம்ம் ஏன் மகி விஷயம் தெரிந்த உடனே என் தங்கச்சி என்கிட்ட சொல்லுச்சு.நானும் பாபுகூட கல்யாணத்தை முடித்து விடலாம்ன்னு சொன்னேன்..

நீ என்ன சொன்ன,படிப்பை நிறுத்த வேண்டாம்.திடீர்னு கல்யாணம் பண்ணினால் ஊர் உலகம் தப்பா பேசும்னு..படிப்பும் முடிச்சிது.நம்ப புள்ள மனசுல அந்த பையன் தான் இருக்கிறான் என்பதை அதுவும் தெளிவாக சொல்லுச்சு..

நீ அதை பத்தி ஏதாச்சும் கேட்டியா என்கவும்,எனக்கு அது தேவையில்லாத விஷயமா இருந்துச்சு மாமா...பாபுக்கு தானே நம்ம கல்யாணம் பண்ணலாமென்று இருந்தோமென்று மகி அதையே சொன்னார்..

தனது மைத்துனன் சொன்னதைக் கேட்டு அந்தோணிக்கு கோபம் வந்தது. ஏன் மகி பொண்ணுங்க மனசு என்ன சட்டைனு நினைச்சிட்டியா?

நேரத்திற்கு ஏற்ற போல மாத்திட்டு போறதுக்கு?.

மனசுல ஒருத்தனை நினைச்சு வாழ்ந்திட்டிருக்கும் புள்ளைகிட்ட இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க சொன்னா எப்படி பண்ணிக்கும் சொல்லு...

ஏன் மாமா இது சின்ன வயசுலயே பேசி முடிவு பண்ண விஷயம் தானே..என்னமோ இன்னைக்கு நேத்து முடிவு பண்ணிய போல நீங்களும் பேசுறீங்களே என்கவும்,சின்ன வயசில நம்ப தான் பேசி முடிவு பண்ணினோமே தவிர நம்ம ரெண்டு பிள்ளைகள் கிட்ட இந்த விஷயத்தை பற்றி பேசினோமானு அந்தோணியும் கடுப்பாக கேட்க, மகியோ இல்லையென்றார்.

பையனை பார்த்தால் நல்ல பையன் போல தான் தெரியுது.அதே போல் குடும்பமும் நல்லாதான் இருக்கு.நல்லபடியா வாழட்டும்னு வாழ்த்திட்டு போவோம் வேற என்ன பண்றது சொல்லு என்கவும்,அதன் பின்னர் மகியால் எதுவும் பேச முடியவில்லை.

ஊர் வந்து சேர்வதற்கே அவர்களுக்கு நள்ளிரவு ஆனது.ஷமீரா வீட்டை விட்டு ஓடிப்போன விஷயம் ஊருக்குள் ஓரளவுக்கு பரவ ஆரம்பிக்க எல்லாரும் சாரதாவிடம் வந்து கேட்காமல் இல்லை..

சாரதாவோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைனு சமாளித்துக் கொண்டிருந்தார்..

விடியலும் யாருக்கும் காத்திருக்காமல் தொடங்கியது...

வனிச்சூர்:

ஆமா இல்லாததை நான் சொல்றேன், உடனே வேலு கம்பு தூக்கிட்டு வந்துட்டா என்ன குத்தி கிழிக்கிறதுக்கென்று தாத்தா சொல்ல,தோட்டத்து பக்கம் சென்று கொண்டிருந்த சுமதி பாட்டியோ திரும்பி பார்த்து என்ன அங்கு முணுமுணுப்பு என்க,ஒன்னும் இல்லடி யம்மா நீ போய் குளி என்றார்.

இந்த வீராப்பு எல்லாம் எங்க பாட்டி கிட்ட ஒன்னும் செல்லாது தாத்தானு கவிதா சொல்லவும்,என்ன பண்றது ஆத்தா..ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் ஊட்டுக்கு புருஷன்காரனா இருக்கிறேனே பயந்து தானே ஆகணுமென்று தாத்தாவும் சிரித்தார்.

உங்க மாமன் பொண்டாட்டி ஒரு வாரம் இங்க தான் இருக்க போகுது என்கவும், அப்படியா என்று இருவரும் சந்தோஷப்பட்டனர்.இங்கு மூன்றும் ஆண் பிள்ளைகள் என்பதால் பேச்சு துணைக்கு கவிதாவுக்கும் கண்மணிக்கும் அந்த வீட்டில் அவர்களை தவிர வேற யாருமில்லை.

அம்மாக்கள் இருவரும் எப்போதும் வேலை வேலை என்று இருப்பர்

அதே போல் இருவரும் பிரெஷ் ஆகி வரவும் அவர்களுக்கு டீ டம்ளரை கொடுத்துவிட்டு ஆத்தா ஷமீரா இந்தா காபி.நீ டீ குடிக்க மாட்டன்னு செழியன் சொன்னான் என்றபடியே காபி டம்ளரை புவனா நீட்ட,அதை வாங்கியவளோ தேங்க்ஸ் மா என்றாள்.

அம்மாக்கு என்னம்மா தேங்ஸ்னு வேக வைத்த பயித்தங்காயை ஆளுக்கு ஒரு தட்டில் எடுத்துட்டு வந்து கொடுக்க, அதைப் பார்த்தவுடன் ஷமீராவுக்கு தனது தாயின் நினைவு வந்தது .

அவர்கள் வயலில் விளையும் உளுத்தங்காயை இப்படித்தான் எஸ்தரும் வேக வைத்து கொடுப்பார் .

அதை நினைத்து பார்த்தவளுக்கு கவலையாக இருந்தது. அவள் முகத்தை வைத்தோ எதையோ நினைத்து வருந்துகிறாள் என்பது மற்றவர்களுக்கும் புரிந்ததும் உடனே பேச்சை மாற்றினார்கள்.

ஆமா கா நீங்க எந்த ஊரு என்கவும் சோழனூர் என்றாள்.அந்த ஊரு எங்கே கா இருக்கு?.

சிதம்பரம் பக்கம் என்க...சிதம்பரம் பக்கமாஆஆஆஆ என்று அதிர்ந்த கவிதாவோ,எப்படி மாமாவுக்கும் உங்களுக்கு பழக்கம் ஆச்சி கா??பேஸ்புக்ல ஏதாச்சும் பிரண்டானு கேட்கும் போது,சின்ன குட்டி என்று அதட்டிக் கொண்டு உள்ளே வந்த தனது பெரியப்பாவை பார்த்த கவிதாவிற்கு நடுக்கம் வந்தது.

இரண்டு பொம்பளைங்க இருக்கீங்களே கொஞ்சம் கூட அறிவு இல்லை?.சின்ன புள்ள என்ன பேச்சு பேசுது கண்டிக்காமல் அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களே இதுதான் புள்ள வளர்க்கற லட்சணமானு தனது மனைவியையும் தம்பி மனைவி பார்த்து அன்பரசன் பல்லை கடித்தார்.

பின்னர் மகள் பக்கம் திரும்பியவர் பள்ளிக்கூடம் போனோமா வீட்டுக்கு வந்தோமா படிச்சோமா சாப்பிட்டோமான்னு இருக்கணும்.அதை விட்டு பெரிய பேச்சுல எல்லாம் தலையிட்ட ஊட்டியிலே மிதிச்சிடுவேன் புரியுதா?.

கண்மணி உனக்கு எப்படியோ அப்படித்தான் உன் மாமா பொண்டாட்டியும் என்கவும் சரிப்பா என்றாள்.சத்தமா சொல்லு என்கவும் சரிங்கப்பா ...

ம்ம்...அடுத்த மாசம் தானே உனக்கு பரீட்சை போய் படிக்கிற வேலையை பாரு போ என்றவர் இப்பொழுது பெரிய மகள் பக்கம் திரும்பியவர் கண்மணி என்க சொல்லுங்கப்பா என்றாள்.

உனக்கு 23 வயசு ஆயிடுச்சு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருந்தேன் ஒரு வரன் வந்துருக்கு..அடுத்த வாரம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்களென்று சொல்ல அப்பா என்று அதிர்வாய் சொல்ல,என்ன அண்ணனுங்க போல உனக்கும் ஏதாச்சும் மனசுல ஆசைகள் இருக்கா?.

அப்படி இருந்தால் சொல்லிடு...கடைசி நேரத்துல அவனுங்க போல நீயும் கழுத்தறுக்காதே.

அந்த நேரம் உள்ளே வந்த கண்ணனை பார்த்தவர் இந்த உருப்படாத மாடுக்கும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறது தான் பேச்சு இருக்கு.. ரெண்டு பேருக்கும் ஒரே வீட்டுல தான் சம்பந்தம் பண்ண போகுது என்கவும், எனக்கு இப்போதைக்கு வேண்டாம் பா என்றான்.

மகன் சொன்னதை கேட்டவர் ஏன் உனக்கு என்ன கேடு?

அது வந்து பா கண்மணிக்கு முதல்ல பண்ணலாம்.நான் பொறவு பண்ணிக்கிறேன் என்க..எப்போ நாங்க சுடுகாட்டுக்கு போன பிறகா?.

அம்மாகிட்ட போட்டோ கொடுத்துருக்கேன் வாங்கி பாருங்க. அந்த வீட்ல இருக்குறவங்களுக்கு உங்க ரெண்டு பேரையும் புடிச்சுருச்சு. அவங்களே ஜாதக பொருத்தமும் பாத்துட்டாங்க..

பையன் படிச்சு முடிச்சுட்டு அப்பாவோட பாத்திர கடைய பெரிய கடையாக்கி வியாபாரம் பார்க்கிறான்.நல்லா விசாரிச்சிட்டேன்."பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது".

"நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாப்பிள்ளை".

பொண்ணு உங்க ஸ்கூல்ல தான் டீச்சரா இருக்கு,போட்டோவ பாருங்களென்று உள்ளே போனார்.

அப்பா இப்படி ஒரு குண்டை தூக்கி போடுவார் என்பதை கண்ணனும் கண்மணி எதிர்பார்க்கவில்லை.நேரமும் கடந்து செல்ல இரவு உணவை சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைக்குள் சென்று படுத்து விட்டனர்..

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த ஷமீராவிற்கு தனது அப்பா அம்மா இருவரின் நினைவாகவே இருந்தது.அப்பா கண்டிப்பாக தனது அம்மாவை அடிப்பார்.பாவம் அம்மா என்று நினைக்கும்போது அழுகையாக வந்தது.

காதலிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?.

எனக்கு பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்ககூட எனக்கு உரிமை இல்லையா?.

வாழ்க்கை முழுவதும் இவர்களுக்கு பிடித்த போல வாழணுமென்று நினைக்கிறார்களே?.எனக்கென்று விருப்பம் இருக்க கூடாதானு தனக்குள் பேசிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது...

பெட்டிலிருந்து எழுந்தவள் லைட்டை ஆன் பண்ணிவிட்டு கதவை திறக்க, அங்கே கவிதாவும் அவளுக்கு பின்னே கண்ணனும் நின்றனர்.

உள்ளே வாடா கவி வாங்கணா.உன் புருசன் போன் பண்ணினான் டா.அதான் போனை குடித்துட்டு போகலாம்னு வந்தோம்னு அங்கிருந்து சென்றான்.

பின்னர் கதவை தாழிட்டு உள்ளே வந்து மெத்தையில் உட்கார கால் வரவுய் அட்டென்ட் பண்ணியவள் ம்ம் என்றாள்.

ஓய் பொண்டாட்டி என்னடி பண்ற?.

சாப்டியாடி?.

அங்க உனக்கு பிடிச்சிருக்கு தானேயென்று செழியனும் கேள்வியை அடுக்க...ஷமிராவோ அமைதியாக இருக்கவும்,அடியேய் உன்னை தாண்டி, வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கு?.நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ செவுடி போலயிருந்தா என்னடி அர்த்தமென்று திட்ட,டேய் நிறுத்துடா.

எங்கடா என்ன பேச விட்ட?.

ஒரு கேள்வி கேட்டால் அவங்க பதில் சொல்ற வரைக்கும் அமைதியா இருக்கணும்.இந்த பேசிக் கூட தெரியாதாடா காட்டானென்க
ஹாஹா என்று சிரித்தவன் அல்லிராணி பேக் டூ பார்ம்.

ஏய் கதவை திறடி,எவ்வளவு நேரம் ஒரு மனுசன் குரங்கு போல மரத்தில் இருக்கிறது என்கவும்,ஒரு நிமிடம் கணவன் சொன்னதை கேட்டு குழம்பியவள் வீட்டுக்குள்ள ஏது மரமென்றாள்.

அடியேய் பால்கனி கதவை திறடி என்கவும்,எதேஏஏ என்றவாறு வேகமாக போய் கதவை திறந்தவள் பால்கனியின் அருகில் உள்ள கிரில் கிட்ட நின்றவளோ அங்கிருந்த பாதாம் மரத்தை அன்னார்ந்து பார்க்க அதன் கிளையிலிருந்த செழியனோ பொத்தென்று பால்கனியின் தரையில் குதித்தான்.

ஆஆஆ என கத்தப்போன மனைவியின் வாயை பொத்தியவன்,அணைத்தபடியே உள்ளே வந்து கதவை தாழிட்டு விட்டு மனைவியை இறுக்கமாக அணைத்து அவளின் இதழோடு தனது முரட்டிதழை புதைத்தான்.

மென்மையான இதழை முரட்டுத்தனமாய் மென்னெடுக்க ஷமீக்கு வலித்ததும் தன்னவனின் டி ஷர்ட்டை இறுக்கமாக பிடிக்க அதை உணர்ந்தவன் பின்னர் இதழை விட்டு, தன்னவளை கைகளில் ஏந்தியபடி மெத்தையில் உட்கார்ந்து கொண்டவனோ அவளை தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

ஷமிராவின் காதிற்குள் கணவனின் இதய துடிப்பு ரீங்காரமாய் ஒலித்தது....

சாப்டீங்களா?.

ம்ம்... நீ டி?.

உன்னை இங்க விட்டு அங்கிருக்க மனசு வரலைடி?? அதான் உன்னை பார்க்கணும் போல இருந்துச்சா ஓடி வந்துட்டேன் டி.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சோழனூர்:

விடிந்து வெகு நேரமாகியும்,நால்வரும் ஹாலிலே உட்கார்ந்து இருந்தனரே தவிர,எழுந்து போய் எந்த வேலையும் பார்க்கவில்லை.அப்பொழுது மகி மகினு சாரதா பாட்டி கூப்பிடும் குரல் கேட்கவும்,ராணி தான் எழுந்து போய் கதவை திறந்தார்.


வீட்டுக்குள் வந்தவர் எப்பத்தா வந்தீங்க?

நாங்க வரதுக்கு நைட்டு 12 மணி ஆயிடுச்சிங்கத்தை.

ஷமீரா ஷமீரா என்றவர் எங்கத்தா இவளென்று பாட்டி கேட்க, உங்கள் பேத்திக்கு நாமெல்லாம் வேண்டாமென தலை முழுகிவிட்டாளென்று வருத்தமாக மகி சொன்னார்.

ஐயா மகி என்னையா சொல்லுற என்கவும் பின்னர் அங்கு போனதிலிருந்து நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தவர்,நம்ம உறவே வேண்டாம் என்று அவ்வளவு உறுதியாக இருக்கிறாள்.

எப்படி நான் ஊருக்குள்ள தலை காட்டுவேனென்று மகி கண்கலங்க அய்யா மகி ஓடிபோன சிறுக்கிய நினைச்சு நீ எதுக்கு பா கண்ணு கலங்குற,ஊர்ல இல்லாததையா பண்ணிட்டா?

விட்டு தொலை என்றாலும் பேத்தி போன இடம் எப்படியோனு உள்ளுக்குள் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை..

ஒத்த பொம்பள புள்ளைய ஒழுங்கா வளர்க்க உன் மகளுக்கு கொஞ்சம் கூட யோக்கியதை கிடையாதென்று அங்கே அழுது கொண்டு உட்கார்ந்திருக்கும் மனைவியை பார்த்து மகி கத்த...

ஏய்யா சும்மா பெத்தவளையே குறை சொன்னால் என்ன அர்த்தம்?.24 மணி நேரமும் பொம்பள புள்ளை பின்னாடியே தாய்காரி சுத்திகிட்டே இருக்க முடியுமா சொல்லு என்று கடிந்தார்.

எப்பா அந்தோணி பாபுக்கு இந்த விஷயம் தெரியுமா என்க...ம்ம் பாபு போன் பண்ணினான் சித்தினு அவன் பேசிய விசயத்தை சொல்லிய அந்தோணி,நம்மளும் கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம் தான்.

எதுக்கும் பிள்ளைங்க கிட்ட கேட்டுட்டு கல்யாணத்தை முடிவு பண்ணிருக்கலாம் சித்தி...

இன்னும் மூன்று வாரங்களே இருக்கு இப்ப போய் கல்யாணம் நின்னு போயிடுச்சுன்னு சொன்னாக்க எல்லாரும் என்ன நினைப்பாங்கனு வருத்தமாக சொல்ல...

அதுதான் எனக்கும் யோசனையா இருக்கென்றார் சாரதா பாட்டி..

இப்ப திடீர்னு பொண்ணுக்கு எங்க போறது?பத்திரிகை எல்லாம் அடிச்சாச்சேனு ராணி சொல்லவும்,ஏன் யா அந்தோணி நம்ப ராஜியை பாபுக்கு பார்த்தால் என்னனு பாட்டி சொல்லு,இதை கேட்ட ராணியோ அத்தை அது இந்து குடும்பம்,நம்ம கிறிஸ்டியன் என்றார் .

ஆமா...அது நமக்கு சரிப்பட்டு வராது...

சரி விடு ஏதாச்சு ஒரு காரணத்தை சொல்லி கல்யாணத்தை நிறுத்திட்டோம்னு சொல்லலாம்.ஆனால் நம்ப வீட்டு விஷயம் ஊருக்குள் பரவலாக தெரிய ஆரம்பிச்சுடுச்சு என்கும் போதும்,மகி மகி என்று கூப்பிட்டுக் கொண்டு அவர்கள் பங்காளி வீட்டினர் வீட்டிற்குள் வந்தனர்.

வந்தவர்கள் அங்கு இருந்தவர்களை பார்த்து எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா?.

ஆமா கேள்வி பட்டதெல்லாம் உண்மையா மகியென்று அங்கிருந்து பெரியவர் ஒருவர் கேட்க ஆமா சித்தப்பா.

இது பொம்பள புள்ள விஷயம் சும்மா தாம் தூம்னு எதையும் செஞ்சிட முடியாது...பொறுமையா தான் கையாளனும்.

எந்த ஊரு?என்ன குலம் கோத்திரம்ன்னு தெறியாம இந்த அறிவு கெட்ட நாய் இப்படி பண்ணிட்டு போயிருக்கேனு அவரும் காச்சி மூச்சு என்று கத்தினார்.

பின்னர் அந்தோணி தான் அவரை சமாதானப்படுத்தி அங்கு நடந்த விஷயத்தையும் பாபு பேசியதும் சொல்லவும்,அப்போ அடுத்தது என்ன பண்ணலாம் மகியென்று பெரியவரும் கேட்க,அவ்வளவு தான் சித்தப்பா...இதோட எனக்கு புள்ளையே இல்லைனு தலை முழுக்கிட வேண்டியதுதான் என்று கரராக சொன்னார்.

வனிச்சூர்:

செல்லம் இங்க உனக்கு வசதியாக தானே இருக்குடி என்றவாறு மனைவியின் முகத்தை நிமிர்த்தி கேட்டான்.

எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைங்க...எல்லாரும் நல்லா பேசி அன்பா பழகுறாங்கள்...நான் சாப்டேன்.இந்த நேரத்தில் வந்துருக்கீங்களே என்ன இதெல்லாம்?.

வயசு பொண்ணுங்க இருக்குற வீடு..யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்களென்று கேட்கவும்,மனைவியின் பொறுப்பை கண்டு மெச்சியவன் பொண்டாட்டிய பாக்கணுமென்ற ஆசையில் வந்துட்டேன் டி இதை நான் யோசிக்கவில்லை.

"சரி இப்ப கிளம்புங்க"

காலைல எல்லாரும் இருக்கும் போது வாங்கள்.இப்படி நைட்ல வராதீங்களென்று ஷமீரா சொல்லவும்,மனைவி சொல்வது புரிந்தாலும்,ஏண்டி என் பொண்டாட்டியை பார்க்க வந்தது ஒரு குற்றமா?

ஹலோ மிஸ்டர் புருஷா...பொண்டாட்டிய பார்க்க வந்தது குற்றமில்லை.பட் சார் வந்த நேரம் தான் தவறான நேரம். யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க சொல்லுங்களென்று மீண்டும் அதையே கேட்டாள்...

அடியேய் தெரியாமல் வந்துவிட்டேன். போதுமா விடுடி...

இப்ப என்ன இங்கிருந்து நான் கிளம்பணும் அவ்வளவு தானே டி சரி...எனக்கு கொடுக்க வேண்டியது கொடு நான் கிளம்புறேனென்று சொல்லவும்...கொடுக்க வேண்டியதை கொடுக்கணுமா?.

உங்களோட பொருளை நான் ஒன்னும் எடுத்துட்டு வரலையே சொல்லவும்,எனக்கு சொந்தமானது இங்க தாண்டி இருக்கென்று மனைவியை இறுக்கி அணைத்து அவளின் இதழ்களை காட்டி சொல்ல இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லையென்று பல்லை கடித்தாள்.

வேற எதுக்குடி குறைச்சல் சொல்லு?.

என்ன கலர் மட்டும்தான் இல்லடி.மத்தபடி அறிவில்லையா? இல்ல பாக்க கம்பீரமா இல்லையா நடை இல்லையா உடை இல்லையா என்னடி குறைச்சல் உன் புருஷனுக்கு சொல்லு என்று மனைவியின் தாவங்கட்டையை பிடித்து தன்னை பார்க்க வைத்துக் கொண்டு கேட்க எல்லாம் அதிகமாகதான் இருக்கென்று முணுமுணுத்தாள்...

ஏய் வாய்க்குள்ள என்னடி முணுமுணுப்பு வாய் திறந்து சொல்லு டி . ஐயோ சாமி உங்களுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...நீங்க போயிட்டு நாளைக்கு காலையில வாங்க .

என்னடி இப்படி போ போ என்று விரட்டுற?. உன்ன பாக்குறதுக்காக மனுஷன் எவ்வளவு ஆசையா வந்தேன் இப்படி பண்ற...போடி என்று கோபமாக எழுந்தவன் பால்கனி கதவை திறந்து மரத்தில் தாவி கீழே இறங்கியவனோ திரும்பி கூட பார்க்காமல் வேகமாக அங்கிருந்து சென்றான்.

சிறிது நிமிடங்கள் வரை கணவன் போகும் பாதையை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

இருந்தாலும் பொம்பள பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இப்படி ஒரு சூழலை வளர விடக்கூடாதென்று நினைத்து செய்ததால்,அவளுக்கு இது தவறாக படவில்லை.

கணவன் மனைவி இருவரும் ஆளுக்கொரு அறையில் படுத்திருக்க, சிந்தனைகள் எல்லாம் தங்களின் இணையைப் பற்றிதான் இருந்தது.

சரி போன் பண்ணியாவது பேசலாமென்று நினைத்தவள் கண்ணனின் போனிலிருந்து தன்னவனுக்கு கால் பண்ண,அங்கே கண்ணை மூடி படுத்திருந்த செழியனுக்கு ரிங்டோன் சத்தம் கேட்பதிலே தன்னவள் தான் கால் பண்ணுகிறாள் என்பது புரிந்துவிட்டது.

கடைசி ரிங் கட் ஆவதற்குள் அட்டென்ட் பண்ணியவன் சொல்லுடி என்க, கோவமா என்றாள்.இல்லடி குற்றாலத்தில் குளித்த போல அப்படியே குளுகுளுன்னு இருக்கு போதுமானு கணவன் பல்லை கடிப்பது இந்த பக்கம் ஷமீராவுக்கு கேட்டதும் சிரிப்பு வந்தது.

இப்ப எதுக்கு இவ்வளவு கோவம் என்கவும் ஏண்டி ஒரு மனுஷன் ஆசையா பொண்டாட்டியை பார்க்க வரக்கூடாது சொல்லு?.

ஒரு வருஷமா நான் உன்ன பாக்கவும் இல்ல உன்கிட்ட பேசவும் இல்ல இப்ப பொண்டாட்டியா இருக்கிறியேனு வந்தது குற்றமா?.

காதலிக்கும் போது தான் விரலை தொடாத,முடியை தொடாதனு இல்லாத கண்டிஷன் போட்டியே அதை மீறினேனா?.

உன்னை பாக்கணும்னு ஆசைப்பட்டு தானே வந்தேன்.இந்த நேரத்தில் அங்கு வந்த எனக்கு சீக்கிரம் வீட்டுக்கு போக தெரியாதா?அங்கேயே உன் கூட குடும்ப பண்றதுக்கா வந்த போல மொகரைய தூக்கி வச்சிட்டு இருக்க...

போய் உன் வேலை மயிற பாருடி...இருக்கிற கடுப்பில் நான் எதாச்சும் பேசிட போறேனென்று சொல்லிவிட்டு அழைப்பை கட் பண்ணிவிட்டான்.

ஆதவன் கிழக்கே உதயமாகும் முன்னரே கோழி கூவும் சத்தம் கேட்டு ஷமீராவுக்கு தூக்கம் கலைந்தது.என்ன இவ்வளவு கோழி கூவுதென்று ரெஸ்ட் ரூமிற்குள் சென்றாள்.

வெளியே பார்க்க இந்த வீடு பழமையாக இருந்தாலும் எல்லா வசதிகளோடும் கட்டி இருக்கிறார்கள் என்றவாறு பல் துலக்கி முகத்தை கழுவியவளுக்கு வழக்கத்தை விட சீக்கிரமாக எழுந்ததால் வயிறு ஏதோ கபகபன்னு இருப்பது போலிருக்கவும்,சூடாக காபி குடித்தால் நல்லா இருக்குமே என்கும் எண்ணம் வந்தது.

நம்ம இஷ்டத்துக்கு எப்படி இங்கே போய் காபி போட்டு குடிப்பதென்று யோசனை பண்ணிக் கொண்டிருக்கும் போது வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டு பால்கனியிலிருந்து எட்டிப் பார்க்க,அங்கே ரஞ்சனி வாசலில் சாணம் தெளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

என்ன அதுக்குள்ளே அம்மா எந்திரிச்சிட்டாங்க என்றவாறு படியிலிறங்கி கீழே வர,அங்கிருந்த புவனாவோ என்ன மா தூக்கம் வரலையானு கேட்க ஆமாங்கம்மா என்றாள்.

அப்படியா சரி இரு...பால் கறக்க தான் போறேன்,கொஞ்ச நேரத்தில் சூட காபி போட்டு கொடுக்கிறேன் என்கவும், அம்மா நானும் ஏதாவது வேலை செய்கிறேனே என்றாள்.

அப்படியா சரி கண்ணு...

இதை ஏன் கேட்டுக்கிட்டு...இது உன்னோட வீடு.நீ என்ன வேணாலும் செய்,உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க.உனக்கு என்ன வேணுமோ நீ யார்கிட்ட வேணா கேளு மனசுல எதையும் போட்டு வருத்திக்காதே மா...

இன்னைக்கு வெள்ளிக்கிழமை வீடெல்லாம் துடைச்சிட்டு சாமி ரூம் சுத்தம் பண்ணனும் எங்கவும், பூஜை ரூமெல்லாம் சுத்தம் செய்து பழக்கம் இல்லாததால்,வீடு துடைக்கிறேன் மா. பூஜை அறை பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாதென்றாள்.

ஏம்மா உங்க வீட்ல சாமி கும்பிட மாட்டீங்கள.அது வந்து நம்ப வீட்டில் கிறிஸ்டியன் என்றாள்.

அப்படியா....கிறிஸ்டியன் பொண்ணா நீ?.

ஆனா நெத்தில பொட்டு வச்சிருக்கியேமானு புவனாவும் சந்தேகமாக கேட்க.. இது உங்க மருமகன் வாங்கி கொடுத்தாரு மா.

"அவர்தான் வைக்க சொன்னாரென்றாள்"

ஓ பொண்டாட்டியை நல்லா பயிற்சி கொடுத்து தான் கூப்பிட்டு வந்துருக்கானானு சிரித்தவர்,பால் வாலியையும் வெண்ணெய் கிண்ணத்தையும் எடுத்துக்கொண்டு தோட்டத்துக் கதவை திறந்து மாட்டு கொட்டைக்கு சென்றார்.

ஷமீராவோ துடப்பத்தை எடுத்து வீட்டை கூட்ட ஆரம்பிக்க அதுவோ அனுமார் வால் போல் நீண்டு கொண்டே சென்றது.

எப்பா எவ்வளவு பெரிய வீடுயென நினைத்துக் கொண்டு கூட்டி முடிக்கவும் ரஞ்சனியும் வாசலில் சாணம் தெளித்து கூட்டி கோலம் போட்டு உள்ளே வந்தவர் அங்கிருந்த ஷமீராவை பார்த்து என்னமா எந்திரிச்சிட்டியா?.

தூக்கம் சரியா வரலையோ?புது இடம் என்பதால் அப்படி இருக்கும் என்கவும்,ஆமாங்க மா கோழிகள் வேறு சத்தம் போட்டுட்டே இருந்துச்சா அந்த சத்தத்தில் எந்திருச்சிட்டேன் மா..

செழியன் இங்கு வந்து தங்கும் போதெல்லாம் இப்படி தான் எந்திரிச்சி வருபவன் என் ரூமுக்கு கீழயே ஏன் கோழியை கவுத்து போடுறீங்கள்,
மனுஷனை தூங்க விடாம பண்றீங்களேனு சத்தம் போடுவானென்று சிரித்தவர் நீ உட்காருடா நான் இதெல்லாம் பண்றேனென்றார்..

இல்லங்கம்மா நானும் பண்றேனே...எனக்கு எப்படி பண்ணனும் எனபதை சொல்லிக் கொடுங்கள் என்கவும் சரி நீ வீட்டை துடை.... பிறகு நான் பண்றதை பார்த்து நீ கத்துக்கோ என்றார்.

வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top