Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 439
- Thread Author
- #1
இருவரின் நினைவுகள்:
ஏய்...இப்பயாவது உன்னுடைய பெயர் சொல்லு டி...
தனது கண்ணை மூடியவளோ ஷமீரா தாஸ் என்க... நோ...ஷமீரா இளஞ்செழியன் என்றவன் சொல்லும் போது அவளையும் மீறி அவள் உதட்டில் சிரிப்பு வரவும் அதை ரசித்தவன் மனசில் இவ்வளவு ஆசை இருக்கு இருந்தாலும் பிடிவாதமா இருக்க இல்லையா?
எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நான் இருக்கிறேன் டி.நிச்சயமா உன்னை கைவிட மாட்டேன்.என்னை நம்பி வா டி என்க,அதைக்கேட்டு பட்டென்று கண்களை திறந்தவள் நம்பிக்கை இல்லாமல் தான் உங்களை தேடி நான் வந்தேனா என்று கோவத்தில் வார்த்தையை விட்டாள்..
அதைக் கேட்டவன் ஹா ஹா என்று சிரித்துவிட்டு அப்படி போட அரிவாள்...என் பொண்டாட்டி வாயாலே உண்மை வந்துடுச்சா சூப்பர் டி சூப்பர் டி.
எனக்கு வரும் ஆத்திரத்துக்கு அந்த உதட்டை புடிச்சி கடிக்கணும் போல வருது.இருந்தாலும் தொட விட மாட்டேங்கறியே டி???
உன்னோட அனுமதி இல்லாம கண்டிப்பா நான் உன்னை தொட மாட்டேன்.அதாவது நீ மிசஸ் செழியனாக ஆகும் வரைக்கும் தான் இந்த டீலிங்.அதுக்கப்புறம் நான் தொட்டது மிச்சம் தான் உன்னோடது புரியுதா???
அவனின் வார்த்தைகளை கேட்டு அவள் முகம் சிவப்பதை கண்டவன்,சண்டாள சிறுக்கி கொல்றாளே?
இப்படியே இவள் கழுத்தில் மூணு முடிச்சு போட்டு கையோடு இழுத்துட்டு போயிடலாமா என்று நினைக்க,அதைக் கேட்டவனின் மனசாட்சியோ அடப்பாவி என்றது.
பிறகு தன்னைத்தானே தேற்றியவன், என்னங்க மேடம் புடவை கட்டிட்டு வந்துருக்கீங்க??
எனக்காக தானே??
ம்கும் இல்லை என்றாள்.
அப்படியா...!!!
அப்ப இந்த புடவை எனக்காக கட்டவில்லை..சரி நீ கிளம்பு டி நேரம் ஆகுது.
அதில் பாவமாக அவனை நிமிர்ந்து பார்க்க,ரொம்ப நேரமா உன் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்கிறது டி.உன் காதில் கேட்கலையா ?
அப்போ என்னோட அருகாமையில் நீ உலகத்தை மறக்கிற தானே...ஐ லவ் யூ மை டியர் என்றவன் ஒரு நிமிஷம் கண்ணை மூடு டி..
அவளோ ஏனென்று பார்வையால் கேட்கவும் தயவுசெய்து கண்ணால பேசாதடி,சத்தியமா என்னால தாங்க முடியலை.நீ வேற அம்சமா புடவை கட்டிட்டு வந்துருக்க.
உன்னோட வளைவு நெளிவுலாம் என்னை பித்து புடிக்க வைக்குது.உன்னை பொண்டாட்டியாக்கும் வரையில் நான் நல்லவனா இருக்க பார்க்கிறேன்.
இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்கு இருந்தால் சத்தியமா இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.முழுசா உன்ன வீட்டுக்கு அனுப்பனும்னு பார்க்கிறேன்.
என்னை காமுகனாக்கிடாத கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிட்டுருக்கேன் சீக்கிரம் கிளம்பி போ,இல்லை அதுக்கு பிறகு உன் விருப்பம் என்கவும்,அதைக் கேட்டவளோ அதிர்ந்து போய் இரண்டு அடி தள்ளி போனாள்.
இதைப் பார்த்து சிரித்தவன் அதான் சொல்லிட்டேனே உன் விருப்பம் இல்லாமல் தொட மாட்டேனு.பயப்படாம வா டி...
நோஓஓஓ...முடியாது என்றாள்
"என் பிரண்டு வராள்" பாய் என்று ஓடிவிட்டாள்.
ஷமீராவும் ராஜியும் அங்கு இருக்கும் கடைகளை எல்லாம் ஒரு சுத்து சுற்றியவர்கள் என்னென்ன வேண்டுமோ வாங்கி விட்டு,அவரவருக்கு பிடித்ததை வாங்கி சாப்பிட்டு விட்டு அங்கே இருப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே வரும்போது ராஜியின் போனுக்கு கால் வந்தது.
அப்பா தான் டி என்றவாறு அட்டென் பண்ணியவள் ஓகே பா இதோ என்றாள்.பின்னர் இருவரும் கார் நிற்கும் இடத்திற்கு சென்று பின் சீட்டில் ஏறியதும் ஊரை நோக்கி புறப்பட்டனர்.
ஷமீராவின் நினைவுகளோ தன்னவனிடம் தான் இருந்தது.
சில மாதங்களாகவே செழியனின் நினைவுகள் அவளை வாட்டி எடுக்க,ஒரு வாரம் பாஸ்டிங் பிரேயர் போட்டவள் ஜூசஸிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தாள்.
அதாவது போன ஆண்டு எப்படி எதிர்பாராமல் அவனை சந்தித்தாளோ அதேபோல் இந்த முறையும் அதே கடையில் அவனை நான் சந்தித்தால் எனக்காக தான் அவனை நீங்கள் அனுப்பி இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இல்லை என்றால் என் மனதில் உள்ள ஆசையை அதோடு அழித்து விடுகிறேன் ஏசப்பா என்று மனதிற்குள் வேண்டியிருந்தாள்.
ஒரு பக்கம் மனம் அவன் வரக்கூடாது என்றாலும் இன்னொரு பக்கமும் அவன் வந்திருக்க வேண்டும் என்று பாடாய்படுத்தியது.
அதேபோல அவன் இருப்பதை பார்த்து சந்தோஷத்தில் அழுகை வர,அதை அடக்கிக் கொள்ளப் படாத பாடுபட்டாள்.
என்னம்மா தேவையானது எல்லாம் வாங்கிட்டீங்களா என்று ராஜியின் அம்மா கேட்க அதில் நிகழ்வுக்கு வந்தவள் ஆமாங்க மா.
இன்னும் ஒரு மாசத்துக்கு இந்த கடை இருக்கும் அவ்வப்போது தேவையானதை வாங்கிட வேண்டியதுதான் என்று ராஜு சொல்லவும் அடிப்பாவி இதுக்கு தான் நீ காலேஜுக்கு போறியா என்று மகளை முறைக்க,வாய்ப்பு கிடைக்கும்போது இதெல்லாம் அனுபவிச்சுக்கணும் மா.
உனக்கு எங்கே இதெல்லாம் தெரியப்போகுது என்று அவள் சிரிக்கவும் வீட்டுக்கு வாடி தொடப்பத்தாலே சாத்துறேன் என்றார்.
இவர்களோடு அரட்டை அடித்தபடி வந்தாலும் செழியன் ஊருக்கு கிளம்பி இருப்பானா? கிளம்பிருக்க மாட்டானா என்ற சிந்தனை மட்டும் ஷமீராவை விட்டு போகவில்லை.
அரை மணி நேர பயணத்தில் சோழனூருக்கு வந்தவர்கள் வாடா ஷமி இருந்துட்டு காலையில போகலாம் என்று வேதாச்சலமும் அவர் மனைவியும் சொல்ல,இருக்கட்டும் பா.
அம்மா மட்டும் தனியாக இருக்காங்களே...அதுவும் சரி என்றவர்களா அவளை கொண்டு வந்து வீட்டில் விட்டவர்கள் சிறிது நிமிடம் எஸ்தரிடிடம் பேசி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
தன் வாங்கிட்டு வந்த பொருட்களை எல்லாம் ஷமீரா காட்ட,மகளின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்தவர் எப்போதும் உன் முகத்தில் இந்த சந்தோஷம் குறையாமல் இருக்கணும் ஷமீ...
நீ இருக்கும் போது எனக்கு என்னமா கவலை என்றாள்.
எல்லா நேரமும் அம்மா உன் கூட இருக்க மாட்டேன்.திடீர் என்று எனக்கு ஒன்னு ஆயிடுச்சுனாக்க நீயே தனியா இந்த உலகத்துல வாழ பழகிக்கணும் என்க, ஏன் மா இப்படி சொல்ற என்கும் போது ஷமீராவுக்கு கண்கள் கலங்கியது.
எதார்த்தத்தை சொல்கிறேன் இது தான் வாழ்க்கை.எல்லாத்துக்கும் தகுந்த போல நம்மளை நாமே பழகிக்கணும் புரியுதா என்கவும் கண்ணீரோடு தலையை அசைக்கும் மகளை பார்த்த எஸ்தருக்கு வேதனையாக தான் இருந்தது. .
சிறிது நாட்களாக ஏதோ ஒரு சம்பவம் வீட்டில் நடக்கப்போகுது என்பது மட்டும் அவர் மனதில் உருத்துக்கொண்டே இருப்பதால்தான் திடீர்னு நமக்கு ஏதாவது ஆகிவிட்டால் மகள் யாரும் இல்லை என்று உடைந்து போக கூடாது என்பதற்காக இப்படி பேசி தைரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சரி வா ஷமி சாப்பிடலாம்...
ஐயோ அம்மா வேண்டாம்.பஜ்ஜி அப்பளம் அது இதுனு சாப்பிட்டது வயிறு ஃபுல்லா இருக்கு எனக்கு ஒண்ணுமே வேண்டாம் என்றவள் கீழே இருக்கும் ரூமில் டிரஸ்சை மாற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் டிவியை ஆன் பண்ணி சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்க பின்னர் தூக்கம் வருவது போல் இருக்கும் ஆப் பண்ணி விட்டு கீழே இருக்கும் ரூமிற்குள் படுத்து விட்டாள்.
குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்த செழியன் நேரடியாக அவள் வீட்டுக்கு போகலாமா என்று யோசிக்கும் போது அவன் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க யார் என்று பார்த்தவன் வசுந்தரா மேடம் என்று வரவும் உடனே அட்டென்ட் பண்ணியவன் எஸ் மேடம் என்க..
அந்த பக்கம் அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை.எஸ் மேடமென்று அழைப்பை கட் பண்ணியவன் தனது வாட்ஸ் அப்பில் செக் பண்ண,அதில் ஒரு கேஸுடைய சில டீடெயில்ஸை வசுந்தரா அனுப்பியிருந்தார்.
அதெல்லாம் படித்து பார்த்தவன் அவருக்கு பதிலை அனுப்பிவிட்டு அந்த கேஸ் சம்பந்தமாக விசாரிக்க அன்று இரவே மதுரைக்கு பஸ் ஏறினான்.
அதிகாலையில் வந்தவனோ வழக்கமாக தங்கும் லாட்ஜிக்கு சென்றவன் குளித்து தயாராகி கீழே இருக்கும் ஹோட்டலுக்கு வந்தவன் டீயும் இரண்டு வடையையும் வர வைத்து சாப்பிட்டு எழுந்தவன் பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தவனோ அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறியவன் தெரு பேரை சொல்லி அங்கு போக சொன்னான்.
அரை மணி நேரத்தில் அவர் சொன்ன வ உ சி தெருவுக்குள் ஆட்டோவும் நுழைந்தது.அங்கே இருந்த டீ கடையில் ரவீந்திரனின் வீடு எங்கே இருக்கின்றது என்று கேட்க அவர்களோ இவனை அதிர்ச்சியாக பார்த்தனர்.
எதுக்கு எல்லாரும் இப்படி பாக்குறீங்க??என்க..
தம்பி ரவீந்திரன் வீட்டில் தான் யாருமே இல்லையே???
நீங்க இப்படி தேடி வந்திருக்கீங்கன்னு அமைச்சருக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினையாகும்.சீக்கிரம் இங்கிருந்து போங்க தம்பி என்று அங்கிருந்தவர்கள் சொல்ல,நான் ரவீந்திரன் கூட படிச்சவன்.
ஒரு வேலை விஷயமா அவனை தேடி வந்திருக்கேன் என்று செழியனும் விஷயத்தை மாற்றி சொன்னான்.
ஐயோ தம்பி ரவீந்திரன் எங்கேன்னே தெரியலப்பா.அமைச்சர் பொண்ணை ரவீந்திரன் காதலிச்சதாக பிரச்சனை ஆகி ஊர விட்டு போயிட்டாங்க.
இப்ப ரவீந்திரன் எங்க இருக்காங்கன்னு தெரியல அவங்க அப்பா அம்மாவும் பக்கத்து ஊர்ல தங்கியிருக்காங்கப்பா நீ சீக்கிரம் கிளம்பு என்பவர்களிடம் அவர்களை நான் பார்க்க முடியுமா என்றான்.
தம்பி நீங்க உண்மையிலேயே அமைச்சரோட ஆளு தானே என்க..அய்யோ..பக்கத்து ஊரு தான் என்னோட சொந்த ஊருங்க என்று தனது பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டு எடுத்துக்காட்டவும் அதில் வனிச்சூர் அட்ரஸ் இருக்க,அதில் ஒருவர் இந்தாப்பா தம்பி வீரையன்-தம்புசாமி யை தெரியுமா???
அட..அவங்க ரெண்டு பேரும் என்னோட தாத்தாங்க என்றவன் அவர்களோடு எடுத்திருந்த போட்டோக்களை காட்டிய பிறகே அவனை நம்பியவர்கள் நைட் 11 மணிக்கு வாப்பா என்று அனுப்பி வைத்தார்கள்.
ஏய்...இப்பயாவது உன்னுடைய பெயர் சொல்லு டி...
தனது கண்ணை மூடியவளோ ஷமீரா தாஸ் என்க... நோ...ஷமீரா இளஞ்செழியன் என்றவன் சொல்லும் போது அவளையும் மீறி அவள் உதட்டில் சிரிப்பு வரவும் அதை ரசித்தவன் மனசில் இவ்வளவு ஆசை இருக்கு இருந்தாலும் பிடிவாதமா இருக்க இல்லையா?
எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நான் இருக்கிறேன் டி.நிச்சயமா உன்னை கைவிட மாட்டேன்.என்னை நம்பி வா டி என்க,அதைக்கேட்டு பட்டென்று கண்களை திறந்தவள் நம்பிக்கை இல்லாமல் தான் உங்களை தேடி நான் வந்தேனா என்று கோவத்தில் வார்த்தையை விட்டாள்..
அதைக் கேட்டவன் ஹா ஹா என்று சிரித்துவிட்டு அப்படி போட அரிவாள்...என் பொண்டாட்டி வாயாலே உண்மை வந்துடுச்சா சூப்பர் டி சூப்பர் டி.
எனக்கு வரும் ஆத்திரத்துக்கு அந்த உதட்டை புடிச்சி கடிக்கணும் போல வருது.இருந்தாலும் தொட விட மாட்டேங்கறியே டி???
உன்னோட அனுமதி இல்லாம கண்டிப்பா நான் உன்னை தொட மாட்டேன்.அதாவது நீ மிசஸ் செழியனாக ஆகும் வரைக்கும் தான் இந்த டீலிங்.அதுக்கப்புறம் நான் தொட்டது மிச்சம் தான் உன்னோடது புரியுதா???
அவனின் வார்த்தைகளை கேட்டு அவள் முகம் சிவப்பதை கண்டவன்,சண்டாள சிறுக்கி கொல்றாளே?
இப்படியே இவள் கழுத்தில் மூணு முடிச்சு போட்டு கையோடு இழுத்துட்டு போயிடலாமா என்று நினைக்க,அதைக் கேட்டவனின் மனசாட்சியோ அடப்பாவி என்றது.
பிறகு தன்னைத்தானே தேற்றியவன், என்னங்க மேடம் புடவை கட்டிட்டு வந்துருக்கீங்க??
எனக்காக தானே??
ம்கும் இல்லை என்றாள்.
அப்படியா...!!!
அப்ப இந்த புடவை எனக்காக கட்டவில்லை..சரி நீ கிளம்பு டி நேரம் ஆகுது.
அதில் பாவமாக அவனை நிமிர்ந்து பார்க்க,ரொம்ப நேரமா உன் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்கிறது டி.உன் காதில் கேட்கலையா ?
அப்போ என்னோட அருகாமையில் நீ உலகத்தை மறக்கிற தானே...ஐ லவ் யூ மை டியர் என்றவன் ஒரு நிமிஷம் கண்ணை மூடு டி..
அவளோ ஏனென்று பார்வையால் கேட்கவும் தயவுசெய்து கண்ணால பேசாதடி,சத்தியமா என்னால தாங்க முடியலை.நீ வேற அம்சமா புடவை கட்டிட்டு வந்துருக்க.
உன்னோட வளைவு நெளிவுலாம் என்னை பித்து புடிக்க வைக்குது.உன்னை பொண்டாட்டியாக்கும் வரையில் நான் நல்லவனா இருக்க பார்க்கிறேன்.
இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்கு இருந்தால் சத்தியமா இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.முழுசா உன்ன வீட்டுக்கு அனுப்பனும்னு பார்க்கிறேன்.
என்னை காமுகனாக்கிடாத கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிட்டுருக்கேன் சீக்கிரம் கிளம்பி போ,இல்லை அதுக்கு பிறகு உன் விருப்பம் என்கவும்,அதைக் கேட்டவளோ அதிர்ந்து போய் இரண்டு அடி தள்ளி போனாள்.
இதைப் பார்த்து சிரித்தவன் அதான் சொல்லிட்டேனே உன் விருப்பம் இல்லாமல் தொட மாட்டேனு.பயப்படாம வா டி...
நோஓஓஓ...முடியாது என்றாள்
"என் பிரண்டு வராள்" பாய் என்று ஓடிவிட்டாள்.
ஷமீராவும் ராஜியும் அங்கு இருக்கும் கடைகளை எல்லாம் ஒரு சுத்து சுற்றியவர்கள் என்னென்ன வேண்டுமோ வாங்கி விட்டு,அவரவருக்கு பிடித்ததை வாங்கி சாப்பிட்டு விட்டு அங்கே இருப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே வரும்போது ராஜியின் போனுக்கு கால் வந்தது.
அப்பா தான் டி என்றவாறு அட்டென் பண்ணியவள் ஓகே பா இதோ என்றாள்.பின்னர் இருவரும் கார் நிற்கும் இடத்திற்கு சென்று பின் சீட்டில் ஏறியதும் ஊரை நோக்கி புறப்பட்டனர்.
ஷமீராவின் நினைவுகளோ தன்னவனிடம் தான் இருந்தது.
சில மாதங்களாகவே செழியனின் நினைவுகள் அவளை வாட்டி எடுக்க,ஒரு வாரம் பாஸ்டிங் பிரேயர் போட்டவள் ஜூசஸிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தாள்.
அதாவது போன ஆண்டு எப்படி எதிர்பாராமல் அவனை சந்தித்தாளோ அதேபோல் இந்த முறையும் அதே கடையில் அவனை நான் சந்தித்தால் எனக்காக தான் அவனை நீங்கள் அனுப்பி இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இல்லை என்றால் என் மனதில் உள்ள ஆசையை அதோடு அழித்து விடுகிறேன் ஏசப்பா என்று மனதிற்குள் வேண்டியிருந்தாள்.
ஒரு பக்கம் மனம் அவன் வரக்கூடாது என்றாலும் இன்னொரு பக்கமும் அவன் வந்திருக்க வேண்டும் என்று பாடாய்படுத்தியது.
அதேபோல அவன் இருப்பதை பார்த்து சந்தோஷத்தில் அழுகை வர,அதை அடக்கிக் கொள்ளப் படாத பாடுபட்டாள்.
என்னம்மா தேவையானது எல்லாம் வாங்கிட்டீங்களா என்று ராஜியின் அம்மா கேட்க அதில் நிகழ்வுக்கு வந்தவள் ஆமாங்க மா.
இன்னும் ஒரு மாசத்துக்கு இந்த கடை இருக்கும் அவ்வப்போது தேவையானதை வாங்கிட வேண்டியதுதான் என்று ராஜு சொல்லவும் அடிப்பாவி இதுக்கு தான் நீ காலேஜுக்கு போறியா என்று மகளை முறைக்க,வாய்ப்பு கிடைக்கும்போது இதெல்லாம் அனுபவிச்சுக்கணும் மா.
உனக்கு எங்கே இதெல்லாம் தெரியப்போகுது என்று அவள் சிரிக்கவும் வீட்டுக்கு வாடி தொடப்பத்தாலே சாத்துறேன் என்றார்.
இவர்களோடு அரட்டை அடித்தபடி வந்தாலும் செழியன் ஊருக்கு கிளம்பி இருப்பானா? கிளம்பிருக்க மாட்டானா என்ற சிந்தனை மட்டும் ஷமீராவை விட்டு போகவில்லை.
அரை மணி நேர பயணத்தில் சோழனூருக்கு வந்தவர்கள் வாடா ஷமி இருந்துட்டு காலையில போகலாம் என்று வேதாச்சலமும் அவர் மனைவியும் சொல்ல,இருக்கட்டும் பா.
அம்மா மட்டும் தனியாக இருக்காங்களே...அதுவும் சரி என்றவர்களா அவளை கொண்டு வந்து வீட்டில் விட்டவர்கள் சிறிது நிமிடம் எஸ்தரிடிடம் பேசி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
தன் வாங்கிட்டு வந்த பொருட்களை எல்லாம் ஷமீரா காட்ட,மகளின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்தவர் எப்போதும் உன் முகத்தில் இந்த சந்தோஷம் குறையாமல் இருக்கணும் ஷமீ...
நீ இருக்கும் போது எனக்கு என்னமா கவலை என்றாள்.
எல்லா நேரமும் அம்மா உன் கூட இருக்க மாட்டேன்.திடீர் என்று எனக்கு ஒன்னு ஆயிடுச்சுனாக்க நீயே தனியா இந்த உலகத்துல வாழ பழகிக்கணும் என்க, ஏன் மா இப்படி சொல்ற என்கும் போது ஷமீராவுக்கு கண்கள் கலங்கியது.
எதார்த்தத்தை சொல்கிறேன் இது தான் வாழ்க்கை.எல்லாத்துக்கும் தகுந்த போல நம்மளை நாமே பழகிக்கணும் புரியுதா என்கவும் கண்ணீரோடு தலையை அசைக்கும் மகளை பார்த்த எஸ்தருக்கு வேதனையாக தான் இருந்தது. .
சிறிது நாட்களாக ஏதோ ஒரு சம்பவம் வீட்டில் நடக்கப்போகுது என்பது மட்டும் அவர் மனதில் உருத்துக்கொண்டே இருப்பதால்தான் திடீர்னு நமக்கு ஏதாவது ஆகிவிட்டால் மகள் யாரும் இல்லை என்று உடைந்து போக கூடாது என்பதற்காக இப்படி பேசி தைரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சரி வா ஷமி சாப்பிடலாம்...
ஐயோ அம்மா வேண்டாம்.பஜ்ஜி அப்பளம் அது இதுனு சாப்பிட்டது வயிறு ஃபுல்லா இருக்கு எனக்கு ஒண்ணுமே வேண்டாம் என்றவள் கீழே இருக்கும் ரூமில் டிரஸ்சை மாற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் டிவியை ஆன் பண்ணி சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்க பின்னர் தூக்கம் வருவது போல் இருக்கும் ஆப் பண்ணி விட்டு கீழே இருக்கும் ரூமிற்குள் படுத்து விட்டாள்.
குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்த செழியன் நேரடியாக அவள் வீட்டுக்கு போகலாமா என்று யோசிக்கும் போது அவன் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க யார் என்று பார்த்தவன் வசுந்தரா மேடம் என்று வரவும் உடனே அட்டென்ட் பண்ணியவன் எஸ் மேடம் என்க..
அந்த பக்கம் அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை.எஸ் மேடமென்று அழைப்பை கட் பண்ணியவன் தனது வாட்ஸ் அப்பில் செக் பண்ண,அதில் ஒரு கேஸுடைய சில டீடெயில்ஸை வசுந்தரா அனுப்பியிருந்தார்.
அதெல்லாம் படித்து பார்த்தவன் அவருக்கு பதிலை அனுப்பிவிட்டு அந்த கேஸ் சம்பந்தமாக விசாரிக்க அன்று இரவே மதுரைக்கு பஸ் ஏறினான்.
அதிகாலையில் வந்தவனோ வழக்கமாக தங்கும் லாட்ஜிக்கு சென்றவன் குளித்து தயாராகி கீழே இருக்கும் ஹோட்டலுக்கு வந்தவன் டீயும் இரண்டு வடையையும் வர வைத்து சாப்பிட்டு எழுந்தவன் பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தவனோ அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறியவன் தெரு பேரை சொல்லி அங்கு போக சொன்னான்.
அரை மணி நேரத்தில் அவர் சொன்ன வ உ சி தெருவுக்குள் ஆட்டோவும் நுழைந்தது.அங்கே இருந்த டீ கடையில் ரவீந்திரனின் வீடு எங்கே இருக்கின்றது என்று கேட்க அவர்களோ இவனை அதிர்ச்சியாக பார்த்தனர்.
எதுக்கு எல்லாரும் இப்படி பாக்குறீங்க??என்க..
தம்பி ரவீந்திரன் வீட்டில் தான் யாருமே இல்லையே???
நீங்க இப்படி தேடி வந்திருக்கீங்கன்னு அமைச்சருக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினையாகும்.சீக்கிரம் இங்கிருந்து போங்க தம்பி என்று அங்கிருந்தவர்கள் சொல்ல,நான் ரவீந்திரன் கூட படிச்சவன்.
ஒரு வேலை விஷயமா அவனை தேடி வந்திருக்கேன் என்று செழியனும் விஷயத்தை மாற்றி சொன்னான்.
ஐயோ தம்பி ரவீந்திரன் எங்கேன்னே தெரியலப்பா.அமைச்சர் பொண்ணை ரவீந்திரன் காதலிச்சதாக பிரச்சனை ஆகி ஊர விட்டு போயிட்டாங்க.
இப்ப ரவீந்திரன் எங்க இருக்காங்கன்னு தெரியல அவங்க அப்பா அம்மாவும் பக்கத்து ஊர்ல தங்கியிருக்காங்கப்பா நீ சீக்கிரம் கிளம்பு என்பவர்களிடம் அவர்களை நான் பார்க்க முடியுமா என்றான்.
தம்பி நீங்க உண்மையிலேயே அமைச்சரோட ஆளு தானே என்க..அய்யோ..பக்கத்து ஊரு தான் என்னோட சொந்த ஊருங்க என்று தனது பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டு எடுத்துக்காட்டவும் அதில் வனிச்சூர் அட்ரஸ் இருக்க,அதில் ஒருவர் இந்தாப்பா தம்பி வீரையன்-தம்புசாமி யை தெரியுமா???
அட..அவங்க ரெண்டு பேரும் என்னோட தாத்தாங்க என்றவன் அவர்களோடு எடுத்திருந்த போட்டோக்களை காட்டிய பிறகே அவனை நம்பியவர்கள் நைட் 11 மணிக்கு வாப்பா என்று அனுப்பி வைத்தார்கள்.