• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
431
ஷமீரா நினைவுகள்:

அம்மாடி சாமி கும்பிட்டு நீங்க ரெண்டு பேரும் அங்க இருக்குற கடையெல்லாம் சுத்தி பார்த்துட்டு இருங்கடா.

நம்ம பக்கத்து வீட்டிலிருக்கும் கமலாவுக்கு குழந்தை பிறந்துருக்கு.நானும் அம்மாவும் சீர்காழிக்கு போய் பார்த்துட்டு வரும் போது உங்களை கூப்பிட்டு போயிடுறோம் என்று வேதாச்சலம் சொல்ல அவளுங்களும் சரிங்க பா என்றாளுங்கள்.

அப்பொழுது அவளையும் மீறி தனது நெஞ்சில் மேல் ஷமீரா கையை வைக்க அவள் மனசாட்சியோ யாருக்காக நீ வரயென்று எனக்கு நல்லாவே தெரியும் டி.

என்னதான் உன் மனசை மூடி மறைக்க நினைத்தாலும் அதுக்குள்ள இருக்கிற அந்த காதல் உணர்வு மேல வந்து தான் தீரும்.அவன் வருவான் என்ற எண்ணத்தில் தானே வர?

அப்படிலாம் ஒன்னும் இல்லையே என்று மனதிற்குள் அவள் சொல்லிக்கொள்ள, அப்படியா?

அப்ப ஏன் திடீர்னு புடவை கட்டிட்டு வர?

உனக்கு தான் புடவை கட்டலாம் பிடிக்காதே?

சும்மா தோணுச்சு அதான் என்றவளை பார்த்து சிரித்த மனசாட்சி, உனக்கா தோணுச்சு இதை நான் நம்பனுமா?

இவ்வளவு நேரம் உன் மனசு என்ன தெரியுமா சொல்லிக்கிட்டு இருந்துச்சி இவங்க எல்லாம் இருக்கும்போது எப்படி அந்த கூட்டத்தில் அவனை தேடி அலைகிறது என்று, எங்கே இது உண்மை இல்லைன்னு உன் மனசாட்சியை தொட்டு சொல்லு என்க..

ஷமீராவால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.அவள் வருவது செழியனுக்காக மட்டும் தான் என்பது அவள் உள் மனம் மட்டுமே அறிந்த உண்மை.

ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அவனை காண வருகிறாள்.அவன் வருவானா வரமாட்டானா என்பது தெரியவில்லை.ஆனால் அவனுக்காக மட்டுமே வருகிறாள்.

காரை சில அடி தள்ளியே பார்க்கிங் பார்த்து நிறுத்திவிட்டு நால்வரும் கோயிலை நோக்கி வரும் போது ஷமீரா மட்டும் தனது பார்வையால் எங்கேயாவது அவன் தென்படுகிறானா என்று தேடாமல் இல்லை.
கூட்டத்தை தான் டி ஒருவழியாக கோயிலுக்குள் சென்றனர்.

ஷமீரா கிறிஸ்டியன் மதத்தை சேர்ந்தவள்.அவள் சாமி கும்பிடமாட்டாள் என்பதால் நான் இங்கு வேடிக்கை பார்க்கிறேன் நீங்கள் முடிச்சிட்டு வாங்களென்க...

"சரி ஷமீ பத்ரமா இரு டா"

எதாவதுனா உடனே கால் பண்ணு டா என்று வேதாசலம் சொல்ல,சரிங்கப்பா என்றவள் அவர்கள் கோயிலின் நுழைவு வாயிலின் உள்ளே போகும் வரை அங்கையே நின்றாள்.

அங்கிருந்த கூட்டத்தில் அவர்கள் மூவரும் கலந்ததும் கூட்டத்தினை விலக்கிக் கொண்டு தரிசன கடையை நோக்கி வத்தவள்,முதன் முதலாக அவனை சந்தித்த கடையின் உள்ளே நுழைந்தவளோ அங்கிருந்தவனை பார்த்து திகைத்தாள்.

அவனை பார்த்த சந்தோஷத்தில் இதுவரை ஒருவிதமான அலைப்புறுதலோடு இருந்தவளின் முகமோ அவளையும் மீறி பிரகாசிக்க,இதழ் பிரியாமல் சிரிப்பும் வந்தது.

செழியன் நினைவுகள்:

சார் காபி இல்லை டீ?

ஐயோ சார் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..

என்னோட வேலைக்காக நீங்க வந்துருக்கீங்க.உங்களை நான் தான் கவனிக்கணும் என்கவும்,
அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார். உங்களை விட வயசுல ரொம்ப சின்ன பையன் நீங்க என்னை செழியன் என்றே கூப்பிடலாம் என்கவும் இருக்கட்டும் சார். உங்க வேலைக்கு நான் மரியாதை கொடுக்கணுமே என்றார்.

ஜேம்ஸ் சொன்னதைக் கேட்டவன் சார் நம்ம ரெண்டு பேருமே தமிழ்நாட்டுக்காரங்க எப்படி பார்த்தாலும் தாயா பிள்ளையா தான் இருப்போம்.நமக்குள்ள என்ன சார் மரியாதை கேடு என்க, அதைக் கேட்டு அவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

சரிங்க தம்பி நம்ம போகலாமா என்கவும்,இன்னும் பத்து நிமிஷத்துல சரக்கு வந்துடும் சார் வந்த பிறகு நம்ம கிளம்பலாமே என்றான்.அப்படிங்களா சரிங்க தம்பி ஒன்னும் பிரச்சனை இல்லை என்றவர் பொதுவாக இருவரை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரம் செழியனின் போனிற்கு கால் வரவும் டிரைவர் தான் பண்றார்னு நினைக்கிறேன் என்றவாறு அங்கே டேபிளில் மேல் வைத்திருந்த போனை எடுத்து பார்க்க அதில் டிரைவரின் நம்பர் வந்தது.

ஒரு நிமிஷம் சார் என்று அட்டென்ட் பண்ணியவன்,சொல்லு ணா?எங்க இருக்கீங்க என்கவும் டிரைவரும் அந்த பக்கமிருந்து இருக்கும் இடத்தை சொல்லவும் அப்படிங்களா சரிங்க ணா. இதோ ஒரு அஞ்சு நிமிஷத்துல நான் வந்துடுறேன் என்று அழைப்பை துண்டித்தவன் வாங்க சார் சரக்கு வந்துடுச்சு என்றான்.

பின்னர் இருவரும் ரூமில் இருந்து கீழே வரவும் அந்த மெயின் ரோட்டில் இடது பக்கமாய் தமிழ்நாட்டு எண் குறித்த ஈச்சர் லாரி நின்று கொண்டிருந்தது.

சார் நீங்க எப்படி வந்தீங்க?

அதற்கு ஜேம்ஸோ நான் காரில் வந்தேன் தம்பி...அப்படிங்களா நான் டிரைவர் கூட லாரில வந்துடுறேன்.நீங்க முன்னாடி போய் வழிய காட்டுங்களேன்.

பரவால்ல தம்பி..என் கூடவே கார்ல வாங்க.நம்மை டிரைவரும் பாலோ பண்ணிட்டு வருவாரே பா...ஓஓஓ தேங்க்யூ சார் என்றவன் ஜேம்ஸோடு முன் சீட்டில் காரில் உட்காரவும் டிரைவரும் காரை பின் தொடர்ந்து வந்தார்.

ஏங்க சார் எப்படி திடீர்னு உங்களுக்கு இந்த ஊர்ல இவ்ளோ பெரிய மால் திறக்கணும்னு தோணுச்சு?

ஹா ஹா என்று சிரித்தவர் நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தான் படிச்சேன் தம்பி.இங்க உள்ள ஒரு புகழ்பெற்ற ஹோட்டலின் பெயரைச் சொன்னவர் முதல்ல அங்கதான் எனக்கு 5000 சம்பளத்தில் வேலை கிடைத்தது.

"நானும் நம்ப ஊரிலிருந்து இங்க வந்துட்டேன் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஹோட்டலோட சீப் செப்பானேன்"

என்னோட மனைவியும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தான் படிச்சிருக்காள் என்றவாறு சிரித்தவரை பார்த்தவன், என்ன சார் லவ் மேரேஜா?

ஹா ஹா ஹா...எனக்கு லவ் கிடையாது. என்கிட்ட ட்ரெய்னிங் வந்த பொண்ணுதான்.என்னமோ தெரியலை இந்த மொகரைய புடிச்சிடுச்சி.எங்க அப்பா அம்மா கிட்ட நேர்ல வந்து அவங்க அப்பாவும் அண்ணனும் பேசினாங்க.

மறுக்க எனக்கும் காரணம் இல்லை. பிறகு அரேஜ் மேரேஜ் ஆயிடுச்சு அப்புறம் இங்க தனியா ஒரு ஹோட்டல் வச்சு ரன் பண்ணிட்டு இருந்தாள்.நல்ல நிலைமைக்கு வந்தோம்.கொஞ்சம் கொஞ்சமா அப்படி பணம் சேர்த்து தான் இந்த இடத்தை வாங்கி போட்டோம்.

இதுல ஒரு மால் கட்டணும்னு தோணுச்சு.அதில் நமது தமிழ்நாட்டில் விளையிற எல்லா பொருளும் கிடைக்கும்னு எண்ணம் வரவும்,இங்கு மசாலா பொருட்களுக்கு நல்லா டிமாண்ட்.

அப்படி எது நம்பர் ஒன்னா இருக்குன்னு பார்க்கும்போது தான் கேகே மசாலா என்று நிறைய பேர் ரெபர் பண்ணுனாங்கள்.பிறகுதான் உங்க ஓனர் கிருஷ்ணகுமாரை காண்டாக்ட் பண்ணினேன்.

அவர் தான் உங்களோட நம்பர் கொடுத்தார் தம்பி.எதா இருந்தாலும் நீங்க செழியன் கிட்ட கேட்டுக்குங்கனு என்கவும்,அதை கேட்டு சிரித்தவன் அந்த கம்பெனியில் வேலை பார்க்கிறதுக்காக நான் சொல்லலை சார் உண்மையிலேயே எங்கள் கம்பெனி மசாலா உலகத்தரத்தில் நம்பர் ஒன்னுன்னு நான் ரொம்ப பெருமையா சொல்லுவேன்.

அங்கு வேலைக்கு சேர்ந்து இதோட மூணு வருஷம் ஆயிடுச்சு இதுவரைக்கும் ஒரு குறைகள் எங்க மசாலாவை பற்றி யாரும் சொன்னது கிடையாது.

இந்தியாவில் மட்டும் இல்லை வெளிநாட்டிலும் போய் சர்வே எடுத்தோம்.

ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னதுனா சார்,நான் ஸ்கூல் போகும் போதெல்லாம் பார்ப்பேன்.சின்ன குடிசையில அங்க மசாலா தயாரிப்பாங்க.இன்றைக்கு கடல் போல பறந்து விரிந்திருக்கிறது.

இந்த அளவு வளர்ச்சிக்கு காரணமே சாரோட பாட்டி கண்ணம்மாள் அம்மா தான். பாட்டி தான் சின்னதா ஆரம்பிச்சாங்க.அது இப்போது குடும்ப தொழிலாக மாறி எங்கையோ உயர்ந்து நிக்குது..

நீங்களும் பாருங்கள் உங்கள் மால்ல எங்கள் கம்பெனி பொருள் எப்படி ஓஹோனு ஓடுதென பேசிக் கொண்டே மாலுக்கு வந்தனர்.

வாங்க தம்பி சுற்றி பார்க்கலாமென ஜேம்ஸ் கூப்பிட,ஒரு நிமிஷம் சார் என்றவனோ லாரி டிரைவரிடம் வந்தவன் அண்ணா இந்தாங்க...முதலில் போய் சாப்பிட்டு வாங்க பிறகு சரக்கை இறக்கி வைக்கலாமென பணத்தை நீட்டினான்.

எலே தம்பி கையில பணம் இருக்குல, நீ போய் உன் சோலிய பாரும் என்றவரை பார்த்து முறைத்தவன்,என்ன ணா முன்னால் காதலி இருக்கும் ஊருக்குள் வந்ததும் நம்ப ஊர் பாஷை வருதென்று செழியன் சிரிக்க..

அட பாவி...

நீயெல்லாம் தம்பியா?

உன் அண்ணிகாரி லைன்ல இருக்காடா...

ஏன் டா ஏன்?

அய்யோ மாலா செழியன் சும்மா கிண்டல் பண்ணுறான் டி.உன் புருஷன் மனதில் நீ மட்டும் தான் டி என்னை நம்புடி என்று கெஞ்ச,அந்த பக்கமிருந்த மாலா,யாரு நீயா?

எங்கக்காவை காதலிச்சிட்டு என்னை கட்டின ஆள் தானே??உன் யோக்கியதை எனக்கு தெரியும்.வீட்டுக்கு வாயா உனக்கு இருக்கென்று போனை வைக்க...

சந்தோஷமா டா?

நீ வந்த வேலை முடிஞ்சிட்டுல போ ராசா போ என்கவும்,அவர் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்தவன்,ஏன் ணா உனக்கா அண்ணியை சமாதானம் பண்ண தெரியாது?

அதைக் கேட்டவரும் சிரித்து விட்டார்.

மத்தவங்களையும் கூப்பிட்டு போய் சாப்பிட்டு வாங்களென்றவனோ அவர் பாக்கெட்டில் பணத்தை வைத்து விட்டு மால் உள்ளே போனவனோ
அஞ்சு மாடியையும் சுற்றி பார்த்துவிட்டு கீழே வர ஒரு மணிநேரம் ஆனது.

லாரியில் இருந்த மசாலா பொருட்களை அதற்குறிய இடத்தில் வேலையாட்களும் இறங்கி வைத்தனர்.

லிஸ்டில் இருந்த போல எல்லாம் வந்து விட்டதாயென மீண்டும் ஒருமுறை செக் பண்ணிய செழியன்,அனைத்தும் சரியாக இருக்கவும் லாரி டிரைவரை பார்த்தவன் சரிங்கணா நீங்கள் நல்லபடியாக ஊருக்கு கிளம்புங்களென்க, ஜேம்ஸோ லாரியில் வந்தவர்களுக்கு ஆளுக்கு தல 500 ரூபாய் கொடுக்க அதை வாங்கியவர்கள் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

பின்னர் ஜேம்ஸிடம் பொருட்கள் வந்து சேர்ந்து விட்டதாக வவுச்சரில் கையெழுத்தை வாங்கியதும்,அவரோ அதற்குறிய பணத்தை செக்-கில் எழுதி கொடுத்தார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
431
செழியன்-ஷமீரா நினைவுகள்:

சரிங்க தம்பி இன்னைக்கு லஞ்ச் நம்ப வீட்டில் தான் நீங்கள் கண்டிப்பாக வரணுமென்க,அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சாரென்பவனை பார்த்தவர்,நம்ப ஊர் புள்ளை.உங்க அய்யா போல கூப்பிடுறேன் வா பா.என்னமோ தெரியலை உன்னை வேற ஆளா பாக்க மனசு வரலை..

அதன் பிறகு செழியனால் மறுத்து பேச முடியாமல் போகவும் சரிங்க சார் என்றவன் ஓனருக்கு கால் பண்ணிட்டு வரேனேன்று சற்று தள்ளி வந்தவன் அவனின் பாஸ்க்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல,சரி செழியா நல்லபடியா வந்து சேருங்க என்கவும் ஓகே சார் என்றவன் இதுபோல ஜேம்ஸ் அவங்க வீட்டுக்கு கூப்பிடறாங்க என்றான்.

நம்ம ஊர்காரவங்க தானே போயிட்டு வாங்க நட்புரீதியா பழக்கம் வச்சிக்கிறது நல்லது தானே.பிசினஸ் அடுத்தது. முதல்ல அவங்க நம்ப தமிழ்நாடு ஆச்சே என்பதை கேட்டவன் ஓகே சார் என்றவாறு அழைப்பை துண்டித்தான்.

லிப்டில் ஏறி ஏழாவது மாடியில் இருக்கும் வீட்டிற்கு போக ஜேம்சின் மனைவி ரோசியும் வாங்க தம்பி என்று அன்போடு வரவேற்து,அவர் சமைத்து வைத்த உணவை பரிமாறு செழியனும் ரசித்து சாப்பிட்டவன் ஒரு நிமிஷம் சார் இதோ வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு வெளியே போனவன் சிறிது நிமிடத்தில் இரண்டு பை நிறைய ஸ்நாக்ஸை வாங்கிட்டு வந்தவன் வெறுங் கையோட வந்துட்டேன் கா.

சார் எங்கேயாவது காரை நிறுத்துவாங்கன்னு பார்த்தேன் நிறுத்தவே இல்லை என்றான்.

எதுக்கு தம்பி இதெல்லாம் என்க, இதெல்லாம் நம்ம பண்பாடு தானேங்க கா என்க..அவன் அக்கா என்று அழைத்தில் ரோஸியோ மனம் குளிர்ந்து போனார்.

நான் ஊருக்கு கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தான் தங்கியிருக்கும் லாட்ஜுக்கு வந்தவன் சிறிது நேரம் படுத்திருந்து விட்டு பின்னர் ரெடியா ஏர்போர்ட்டுக்கு வந்தான்.

சிதம்பரம்-ஆனி திருமஞ்சனம்:

விடியற்காலையில் சிதம்பரத்திற்கு வந்தவன் முன்பு தங்கி இருந்த ஓட்டலில் ரூம் போட்டவன் குளித்து தயாராகி காலையிலேயே கோயிலுக்கு போனவன் அங்கிருந்து நடராஜரை பார்த்து எனக்கு அவள்தான் என்று எழுதியிருந்தால் இன்னைக்கு நிச்சயமாக எனக்காக அவள் வருவாள்.

இல்லையென்றால் உன்னோடு சித்தம் என்று சொல்லிவிட்டு கோயிலை ஒரு முறை சுத்தி வந்தவன் எந்த கடையில் அவளை சந்தித்து தனது மனதில் உள்ள விருப்பத்தை சொன்னானோ அந்த கடையின் முன்பு காத்திருக்க தொடங்கினான்.

கடைகாரரோ அவனை பார்த்துக் கொண்டேயிருந்தவர் என்ன தம்பி ரொம்ப நேரம் நிக்கிறீர்கள் என்க..

ஒன்னும் இல்லை ணா என்று செழியன் சிரிக்க என்ன தம்பி காதலா என்கவும், ஆமாங்க ணா என்றவன் பின்னர் சுருக்கமாக விஷயத்தை சொல்ல, அப்படியா உங்கள் காதல் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி என்றவர் வாங்க தம்பி உள்ள வந்து உட்காருங்கள்..

பரவாயில்லை ணா.வியாபாரம் நடக்கும் இடத்தில் நான் வேற நந்தி போல என்க,அட என்ன தம்பி பொல்லாத வியாபாரம் எப்பயும் நடக்கிறது தானே என்றவர் செழியனுக்கு ஒரு சேர் எடுத்து போட காலை போய் மதியமும் போய் மாலை வேலையும் வந்தது.

செழியன் தம்பி காலையிலிருந்து வெறும் டீ மட்டும் குடித்துக்கொண்டு எதுவுமே சாப்பிடாம இருக்கீங்களே? இது நல்லாவா இருக்கிறது?

நம்ம பக்கத்து கடையில தான் மிளகாய் பஜ்ஜி எல்லாம் போட்டுருக்காங்க நான் கடை பையனை வாங்கிட்டு வர சொல்றேன் சாப்பிடலாம் என்க, பரவால்லை ணா இருக்கட்டும் என்றான்.

அட இருக்கட்டும் தம்பி நாளை பின்ன ஊரு பக்கம் கடை போட வந்தா அப்ப நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டிங்களா??

கண்டிப்பாக வாங்க ணா.

நம்ம ஊர்ல திருவிழா வெகு விமர்சனம் நடக்கும்.

சுற்றி இருக்கிற 22 கிராமத்துக்கும் நம்ம ஊரு கோயிலில் தான் திருவிழா. அதனால ஒரு மாசத்துக்கு மேல வரைக்கும் கடை போட்டுருப்பாங்க நல்ல சம்பாதிக்கலாம் .

இந்த முறை நம்ம கோவில் கொடைக்கு நீங்க கண்டிப்பா வரணும் என்றவன் அவரிடம் நோட்டை வாங்கி தனது அட்ரஸை எழுதியவன் மதுரைக்கு வந்துட்டு சொல்லுங்க ணா.அதுக்கு பிறகு நான் உங்களை ஆளு வச்சி அழைத்திட்டு போறேன்.

சரி தம்பி என்றவர் அதே போல் கடையில் வேலை செய்யும் ஒரு பையனை விட்டு வடை பஜ்ஜி வாங்கிட்டு வர சொல்ல,அவருடன் பேசியவாறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறவனுக்கு முதன் முதலில் அவளை பார்த்தபோது இதயத் துடிப்பு எப்படி துடித்ததோ அதேபோல் இப்பொழுதும் வேகமாக துடிப்பது போல் இருக்கவும் சேரிலிருந்து எழுந்தவன் அவள் எந்த இடத்தில் நின்று பொருள்களை தேடினாளோ அதே இடத்தில் போய் நின்று கொண்டு கையை கட்டி ஒருவித ஆர்வமாக வாசல் பக்கம் பார்த்தவனோ அங்கு வருபவளை கண்டு அசந்து போனான்.

அவனைப் பார்த்த உடனே அவள் முகத்தில் ஒருவித பிரகாசம் வருவதை செழியனும் கவனிக்க மறுக்கவில்லை.

ஆஹா..அப்ப இவளும் நம்ம தேடி தவித்திருக்கா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவனுக்கு தன்னவளை பார்த்த உடனே இதுவரை இருந்த மனநிலை மாறி சிரிப்பு வரவும் வேகமாக அவளிடம் போக இதை எல்லாம் கடையில் இருந்தவர்களோடு ஓனரும் பார்த்து விட்டு செழியன் தம்பி ம்ம் என்றார்.

ஒரு அடி இடைவெளி விட்டு அவளின் முன்னால் வந்து நின்றவன் அவள் கண்ணை பார்த்துக் கொண்டே,கடைக்கு பின்னாடி வா என்று சொல்லி முன்னே நடக்க,ஷமீராவோ ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல அவன் பின்னாளை வந்தாள்.

கடைக்கு பின்னாடி சிறு குடிசை போல டெண்டு இருந்தது.அதன் உள்ளே கடை ஓனரின் மனைவியும் அவரின் குழந்தைகளும் இருந்தனர்.இவர்களை பார்த்து தம்பி இது தான் நீங்க சொன்ன பொண்ணா?

ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் அற்புதமா இருக்கு தம்பி என்றவர் நாசுக்காக அங்கிருந்து பிள்ளைகளை அழைத்துக் கொண்டு முன்பக்கம் செல்ல,நூலளவு இடைவெளி விட்டு ஷமீராவின் அருகில் வந்தவன் எனக்காக தானே வந்தாய் என்க, இல்லை என்று தலையசைத்தாள்.

பொய் சொல்லாத டி?

நீ எனக்காக தான் வந்திருக்க.அது எனக்கு நல்லா தெரியும் எங்கே உன் மனசாட்சி தொட்டு சொல்லு ஒரு நாள் கூட நீ என்னை நினைத்து பார்க்கவில்லை?

எனக்காக ஏங்கி தவிர்க்கவில்லை என்று செழியன் கேட்கவும்,கீழே குனிந்து கொண்டவளின் கண்ணில் இருந்து இரு துளி கண்ணீர் தரையில் சிந்தியது.

நான் சும்மாதான் வந்தேன் உங்களை ஒன்னும் நான் பாக்க வரவில்லையே என்று கெத்தாக சொல்லவும்,அப்படியா நான்தான் உன்னை தப்பா புரிஞ்சுகிட்டன் போல...

இந்த இடைப்பட்ட நாளில் ஏதோ ஒரு மூலையில் உன் மனசுல என்னை பற்றிய எண்ணங்கள் வந்திருக்கும்னு நெனச்சு இங்க வந்துட்டேன் இனிமே உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன் என்றவனோ வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்.

சில நொடிகளுக்குப் பிறகே செழியன் அங்கிருந்து போனதை உணர
கண்ணில் கண்ணீர் ஆராய் வழிந்து ஓட முகத்தை மூடிக்கொண்டு அவள் அழவும் ஓய் பொண்டாட்டி..
எனக்காக தான டி அழுகிற என்கும் குரல் மிக அருகில் கேட்கவும் கண்ணீரோடு திரும்பியவள் அங்கிருந்த செழியனின் மேலே இடித்து நின்றாள்.

இந்தக் கண்ணீர் எனக்கானது டி அதை புரிஞ்சிக்காத அளவுக்கு நான் ஒன்னும் பால் குடிக்கும் குழந்தை இல்லையே?

உன் மனசு முழுவதும் நான் இருக்கிறேன் டி.ஆனால் அதை ஒத்துக்கொள்ள உனக்கு வீம்பு.ஏதோ ஒரு காரணத்துக்காக தான் என்னை விட்டு விலகி இருக்கணும்னு நினைக்கிற அது என்ன விஷயம் னு சொல்லு?

உன்னோட பாயிண்ட் நியாயமாக இருந்தா நிச்சயமா நான் விலகிடுறேன். அதில் எனக்கு விருப்பம் கிடையாது ஆனால் உனக்காக நான் தள்ளி இருக்கிறேன் என்க,அதைக் கேட்டு அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்தாள்.

அவளின் கண்களை பார்த்தவன், உள்ளுக்குள் வலிக்குது தானே? நான் விட்டுட்டு போக கூடாதுன்னு உன் உள்மனசு அடிச்சிக்கிது டி.ஆனால் என்னை ஏத்துக்க உனக்கு மனசு வரமாட்டேங்குது...

இன்னும் ஒரு இன்ச் அசைந்தான் என்றால் நிச்சயமாக ஷமீராவின் மேல் சாய்ந்தவாறு நிற்பான் என்பது புரிந்து, ப்ளீஸ் கொஞ்சம் தள்ளி நில்லுங்களென்று ஷமீரா சொல்லவும்,அவளை ரசனையோடு பார்த்தவன் ஏன் இப்படி நின்றால் என்ன பண்ணுது?

உனக்கு தான் என் மேல ஒரு பீலிங் இல்லையே மரம் போல என்னை கடந்து போக வேண்டியது தானே டி..

அப்படி என்னால் கடந்து போக முடியலையே என்றாள்.

ஓஓஓ பிறகு என்ன டி?

என்னை கல்யாணம் செய்துக்கொள்ள உனக்கு என்ன டி கஷ்டம் சொல்லு? என்ன பிரச்சனைனு சொல் என்று கோவமாக செழியன் கேட்க,
அதன் பிறகு தனது மதத்தை பற்றியும் தந்தையின் மத வெறியை பற்றியும் சொல்ல ப்பூஊஊ இவ்வளவு தானா டி...

பாரினர்ஸே நம்ம தமிழ்நாட்டுல உள்ளவர்களை காதலித்து கல்யாணம் பண்ணிக்கிறாங்களே,நீ கிறிஸ்டியன் தானே இருந்துட்டு போ.. குடும்பம் நடத்துவதற்கு நான் ஆம்பள நீ பொம்பள அது போதும் டி என்றவன் அவளை பார்த்துக்கொண்டே ஒரு மார்க்கமாக சொல்லவும் அவளுக்கு வெட்கம் வந்து கீழே குனிந்து கொண்டாள்.

சத்தியமா என்னால கையை கட்டிட்டு வேடிக்கை பார்க்க முடியலை டி.அட்லீஸ்ட் ஒரு கிஸ்ஸாவது அடிச்சுக்கட்டுமா?

அய்யோஓஓஓ முடியாது என்று தலையசைக்க,ஆறு மாசம் ஆகுது டி ஒவ்வொரு நாளும் கனவுல வந்து என்னை எப்படி எல்லாம் பாடப்படுத்துற தெரியுமா?

நமக்கு கல்யாணம் ஆகி ரெட்டை புள்ளை கூட இருக்கு தெரியுமா???ப்ளீஸ் ஒன்னே ஒன்னு டி என்று அவள் கன்னத்தை தொடப்போக,ஷமீராவோ தனது முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

ஏன் நான் உன்னை தொடக்கூடாது என்று கோவமாக செழியன் கேட்க, ப்ளீஸ் இப்போதைக்கு நீங்க என்னை தொடாதீங்க..நீங்க தொட்டிங்களென்றால் சத்தியமா நான் உருகி போயிடுவேனென்று முகத்தை மூடிக் கொண்டாள்.

தன்னவளின் வாயிலிருந்து கேட்ட வார்த்தைகளின் குறிப்பில்,இறக்கையின்றி வானத்தில் பறப்பது போலானவனோ யாஹூ என்று கத்தியவன் ப்ளீஸ் ஒரே ஒருமுறை உன்னை கட்டி பிடிச்சிக்கட்டுமா?

நோஓஓ...முடியாது என்றாள்,

ஒரு முறை டி...

வேற எதுவும் வேணாம் இறுக்கமா உன்னை நெஞ்சோடு அணைச்சுக்கிறேன் அது போதும் மத்ததெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்குறேன்னு சொல்வதை கேட்டு அதிர்ந்து விழிப்பவளை கண்டவன்,அப்படி பாக்காத டி...

"இந்த விழிகளிரண்டில் தான் டி நான் விழுந்தேன்" கொல்லுறடி என்று நெஞ்சின் மேல் குத்திக் கொண்டான்..

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top