Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 429
- Thread Author
- #1
ஷமீராவின் நினைவுகள்:
அவன் அனுப்பும் மெசேஜை மட்டும் படித்துக் கொண்டே வர,பெரிய சண்டிராணியாக தான் டி இருக்கிற...இரு டி உன் திமிரையெல்லாம் அடக்கிடுறேன் என்று செழியன் அனுப்பவும்,அதை படித்தவர்களுக்கு அவளையும் மீறி சிரிப்பு வந்தது.
தனது ரூமிற்கு போனவளோ முதலில் போனை சைலண்டில் வைத்தவள் ப்ரஷாகிவிட்டு வெளியே வர இந்தா ஷமீ, ரோஸி தான் என்றவாறு மகளிடம் போனை நீட்ட,அதை வாங்கியவள் சித்தி எப்படி இருக்கீங்க என்று பரஸ்பரம் நலம் விசாரித்தனர்..
பின்னர் தம்பி தங்கைகளிடம் பேசிவிட்டு போனை வைத்த உடனே கால் வர,அதில் மகியின் நம்பர் வரவும் இந்தா மா உன் புருஷனென்று போனை கொடுத்தவள், கிச்சனிற்குள் சென்று என்ன இருக்கென்று பார்க்க,சூடாக சாதமும் மீன் குழம்பு,அவளுக்காக மீன் வறுவலும் தயாராக இருக்க...
ஆஹா ஆஹா..
எஸ்தரோட மீன் குழம்பை அடித்துக் கொள்ள இனி எவனாவது பிறந்து தான் வரணுமென்று சொல்லிக்கொண்டே தனக்கு தேவையானதை தட்டில் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர...
அங்கே எஸ்தரோ கணவரின் கேள்விக்கு ம்ம் என்றாலும் முகம் மட்டும் சோகமாக இருப்பது தெரிந்தது.
நிச்சயமாக போனிற்கு தான் சண்டை வந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டவள் சாப்பிடும் வேலையை பார்க்க..
ஒருவழியாக பேசிவிட்டு போனை வைத்த எஸ்தர் ஆண்டவரேஏஏஏஏ... என்க..என்னமா எவன் கிட்ட ஆத்தாளும் மகளும் போன்ல கதையடிச்சிங்கனு உன் புருஷன் கேட்டுருப்பாரே?
மகள் சொன்னதை கேட்ட எஸ்தருக்கு சுருக்கென்றது. தாயின் முகத்தை பார்த்தவள் இது தான் நடந்திருக்குமென்று தெரியாத அளவுக்கு நான் இல்லை மா.நல்லவேளை கடவுள் என்னை உன் வயிற்றில் பொண்ணாக பிறக்க வைத்தார்.
நான் மட்டும் பையனாக பிறந்திருந்தால் நீ தினமும் தீக்குளிக்கணும் மா.இந்த விஷயத்தில் நீ ரொம்ப கொடுத்து வைத்தவளென்று உள்ளுக்குள் கதறியவள் சாதத்தை அள்ளி வாயில் வைக்க,பிடித்தமான உணவோ விஷம் போல உள்ளுக்குள் இறங்கியது.
மகள் சாப்பிடும் வரை அமைதியாக இருந்த எஸ்தர் ஷமீ என்க,சொல்லுமா என்றவாறு அவரின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
இந்த வருஷத்தோடு பாபுவிற்கு 27 வயசாகுது.உனக்கும் பாபுக்கும் நிச்சயம் பண்ணலாம்னு எங்கண்ணன் சொல்லிட்டு இருக்கு டி என்கவும், வழக்கம் போல் இந்த வார்த்தையை கேட்டால் எதுவும் நினைக்காமல் அமைதியாக இருப்பவளுக்கு,இப்போது கல்யாண பேச்சு வந்ததும் செழியனின் நினைவுகள் தானாக ஓடி வந்தது.
அவள் சிந்தனையோ அவனை பார்த்த நாளை நோக்கி போக,மகள் கேட்டுக் கொண்டிருக்கிறாளென,பாபு அவளை எப்படியெல்லாம் பார்த்துக் கொள்வான் என்று அவனின் குணங்களைப் பற்றி சொல்லியவர்,அதனால இந்த வருஷம் நிச்சயம் பண்ணிடலாம்னு இருக்கு டி..
இதுவரை கனவில் மூழ்கியிருந்தவளுக்கு கடைசி வார்த்தை மட்டும் அவள் காதில் விழ,ஏன் மா அவசரப்படுறீங்க?நான் இந்த வீட்ல இருக்கிறது உனக்கு இடைஞ்சலா இருக்கா என்கவும்,...
அடியேய் என்னடி பேசுற?
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு பெத்து வச்சிருக்கேன்.உன்னை நல்லபடியா என் அண்ணன் கையில ஒப்படைச்சிட்டாக்க என் உயிர் நிம்மதியாக போயிடும்.
உன்னை தவிர வேற எனக்குன்னு யாரு இருக்கா சொல்லு?என்று கண் கலங்கியபடி எஸ்தர் சொல்ல,
ஷமீராவுக்கும் அதைக் கேட்டு அழுகை தான் வந்தது.ஆனால் மனம் ஏனோ பாபுவை கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதிக்கவில்லையே என்ன செய்ய? ?
தந்தையின் சந்தேக புத்தி பற்றி எந்த வயதில் தெரிந்ததோ அன்றிலிருந்து அவளுக்கு ஆண்கள் மேல் வெருப்பு வந்ததும்,கல்யாணம் என்ற வார்த்தைக்கு தனது வாழ்க்கையில் இடமில்லை என்று அவள் மனதிற்குள் முடிவெடுத்து விஷயம் அவளைத் தவிர யாருக்கும் தெரியாதே?
அதனால் தானே பாபுக்கும் அவளுக்கும் கல்யாணம் என்று சிறுவயதில் இருந்து சொல்லும் போதெல்லாம் அதை ஒரு பொருட்டாக காதில் வாங்காமல் இருந்து கொண்டிருக்கிறாள்.
அப்படி உள்ளவளின் எண்ணத்தில் யாரென்று தெரியாத ஒருவன் சலனத்தை கொண்டு வந்ததை நினைத்து அவன் மேல் கோபமும் வந்தது.
அதே நேரம் அவளின் மனநிலையை நினைத்து அழுகையும் வந்தது.
மகளின் முகத்தை பார்த்த எஸ்தர் பாபு ரொம்ப நல்லவன் டி.அதை நான் சொல்லித்தான் உனக்கு தெரியனுமா சொல்லு?
நீ பிறந்த அன்னைக்கே பாபுவிற்கு நீதான் உனக்கு பாபு தான்னு எங்க அண்ணன் முடிவு பண்ணிடுச்சு. கண்டிப்பா எங்க அண்ணனோட பேச்சை உங்க அப்பா தட்ட மாட்டாரு அது உனக்கே நல்லா தெரியும் தானே ஷமீ??
எங்க அண்ணனுக்கும் வேற யாரு இருக்கா சொல்லு? அவருக்கு இருக்கிறது ஒரே வாரிசு தானே.தங்கச்சி மகள் நீ அந்த வீட்டுக்கு போனால் கடைசி காலத்துல அவங்களுக்கு உதவியாக இருக்கும்..
இந்த வருஷம் பாபு ஊருக்கு வரேன்னு சொல்லிருக்கிறான்.வந்த பிறகு அந்த ஆண்டவர் புண்ணியத்துல எல்லாம் நல்லபடியா நடந்தால் சந்தோஷம்.
சரி நீ போய் படு என்றவர் வெளிக்கதவை பூட்டிவிட்டு அவர் அறைக்குள் செல்ல,இடி விழுந்த நிலையில் மேலே இருக்கும் தனது அறைக்குள் வந்த ஷமீராவுக்கு என்ன பண்ணுவது என்று ஒன்றுமே புரியவில்லை..
பாபுவின் மேல் அவளுக்கு இதுவரை அதுபோல ஒரு எண்ணம் வரவில்லை. வீட்டில் தொடர்ந்து இதே பேச்சு வந்து கொண்டே இருக்க,கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இத்தனை வருஷம் அமைதியாக இருந்தது ஒருவிதத்தில் தப்போ என்று இப்பொழுது யோசித்துப் பார்த்தவளுக்கு பாபுவுடன் பேசினால் ஒரு விதத்தில் ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்தவள் தனது ஃபோனில் இருந்து பாபுவின் நம்பருக்கு ஹாய் மாமா என்று மெசேஜ் அனுப்பினாள்.
சிறு நிமிடத்தில் அவனிடமிருந்து கால் வர அட்டென் பண்ணியவளிடம் சொல்லுடா பாப்பா?எப்படி இருக்கடா என்றான்.
நான் நல்லாருக்கேன் மாமா நீங்க எப்படி இருக்கீங்க என்று பரஸ்பரம் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.
பின்னர் அவளின் படிப்பு பற்றி கேட்க நல்லா போகுது மாமா என்கவும் அவனின் வேலையை பற்றிய ஷமீரா கேட்க அவனும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்..
அப்புறம் டி காலேஜ்ல நல்லா சைட் அடிக்கிறியா? பஸ்ல வேற தினமும் போற நிறைய ஹேண்ட்ஸம் பாய்ஸ்களை பார்த்திருப்பியே என்று பாபு சிரிக்க... மாமா என்று கோவமாக ஷமீரா சொல்ல...
அட ஆமாம் நீ ஒரு ரோபோட் என்பதை மறந்துட்டேன் டி.என்ன பொண்ணோ போ என்றவன் மேலும் சிறிது நிமிடங்கள் பேசியவன் சரி டா பாப்பா நேரம் ஆயிடுச்சு குட் நைட் டா என்க,சரி மாமா பாய் என்றவாறு அழைப்பை துண்டித்தாள்.
செழியன் நினைவுகள்:
என்னடா ஊருக்கு கிளம்பலாமா வேண்டாமா?
இப்படி புடிச்சு வச்ச பிள்ளையார் போல உக்காந்திருந்தா என்ன அர்த்தம் என்க, கிளம்பலாம் கிளம்பலாம் என்று விரக்தியாக செழியன் சொல்லவும்,மச்சி நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத டா.அந்த பிள்ளைக்கு விருப்பம் இல்லைனா விட்டுவிடுடா. எதுக்கு தொந்தரவு பண்ணிக்கிட்டு???
நம்ம சாதிசனத்துல ஊர் உலகத்தில் வேற பொண்ணா கிடைக்காது என்று அன்பு சொல்லவும்,அதைக்கேட்ட செழியனோ,இன்னொருவாட்டி இந்த சாதி,சனம் மயிறு மட்டைனு பேசுன எனக்கு செம்ம கோவம் வந்துரும் டா.
அதெல்லாம் தூக்கி குப்பையில் போடுங்கடா.படிச்ச நம்பளே இன்னும் இதை தூக்கிக்கொண்டு திரிஞ்சால் நம்ம குடும்பத்தில் இருக்கிறவங்களை என்ன சொல்றது சொல்லு?
காலம் காலமா அதே குண்டு சட்டியில் தானே குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கிறோம்.நல்லா முடிவு பண்ணி தான் இந்த விஷயத்துல நான் இறங்கிருக்கிறேன் டா.
முடிஞ்சா நண்பனா எனக்கு கூட இருங்கள்.இல்லை புடிக்கலைன்னா ஒதுங்கி இருங்கடா அது போதும்.அதை விட்டுட்டு இப்படி எல்லாம் பேசாதீங்கடா என்க...
ஓஓஓ என்ற கண்ணனோ அன்புவிடம் கண்ணை காட்டிவிட்டு செழியனின் பக்கத்தில் உட்கார்ந்தவன், உண்மையிலேயே நீ என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க மாட்ட தானே டா?
திரும்பி அவனை பார்த்த செழியன், சத்தியமாக கண்மணியை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் டா.
நிஜமா தானே ஆமா டா நம்ம மலையாத்தா சத்தியமா இவளை தான் டா கட்டுவேனென்க...
அப்பாடா நல்ல வேளை என் தங்கச்சி தப்பிச்சிது.அதுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் என்கவும், இதுவரை இருந்த மனநிலை மாறி இப்பொழுது கொலைவெறியில் செழியன் முறைக்க,மத்தவனுங்களோ அதைக் கேட்டு சத்தமாக சிரித்து விட்டார்கள். ..
ஏன் டா இப்போ உன் விளங்காத தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைப்பது தான் முக்கியமா?
நான் எவ்வளவு சீரியஸாக பேசிட்டு இருக்கிறேன் உனக்கு கிண்டல் மயிறு கேட்குதென்று எழுந்தவனோ கண்ணனின் முதுகில் எட்டி ஒரு உதைவிட அய்யோ என்றவாறு கீழே விழுந்தான்.
ஏன் டா ஏன்???
கால் தானா அது?
"ஆத்தாடி"
குருத்தெலும்பு நொருங்கிடுச்சே...
நல்ல வேளை நான் பொண்ணா பொறக்கலை டா.இல்லை உன் தலையில் என்னை கட்டிடுவாங்களென்பவனை முறைத்த செழியன்,இங்கு ஒரு கொலை விழ போகுது பாருங்கடா என்றவாறு எழுந்து போய் கண்ணாடி பார்த்தவன் சரி வாங்கடா கிளம்பலாமென்று அவன் பேகை எடுக்க,மற்ற நண்பர்களும் லக்கேஜோடே கீழே வந்தனர்.
பின்னர் ரூம் வெக்கேட் பண்ணி விட்டு பேசிக் கொண்டே பஸ் ஸ்டாண்டிற்கு வர அவர்கள் ஏற வேண்டிய பஸ்ஸும் தயாராக இருக்கவும்,வெற்றி- கபிலிடனிடம் சொல்லிக்கொண்டு இவர்கள் பஸ்ஸில் ஏறவும்,சிறிது நிமிடத்தில் மதுரையை நோக்கி அந்த பிரைவேட் பஸ் புறப்பட்டது.
பொதுவாகவே இரவு நேர பயணத்தை ரொம்பவே விரும்பும் செழியனுக்கு, இந்த முறை எதையும் ரசிக்க மனம் வரவில்லை.
சிறிது நேரம் கண்ணை மூடி சீட்டில் சாய்ந்திருந்தவன் பஸ் ஹாரன் சத்தத்தில் கண் திறக்க,அருகில் உட்கார்ந்திருக்கும் நண்பன் தூங்கி விட்டது தெரிந்தது.
பின்னர் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தவன் தன்னவளின் வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் செக் பண்ண,அவள் ஆன் லைனில் இருப்பது தெரிந்தது.
அவன் அனுப்பும் மெசேஜை மட்டும் படித்துக் கொண்டே வர,பெரிய சண்டிராணியாக தான் டி இருக்கிற...இரு டி உன் திமிரையெல்லாம் அடக்கிடுறேன் என்று செழியன் அனுப்பவும்,அதை படித்தவர்களுக்கு அவளையும் மீறி சிரிப்பு வந்தது.
தனது ரூமிற்கு போனவளோ முதலில் போனை சைலண்டில் வைத்தவள் ப்ரஷாகிவிட்டு வெளியே வர இந்தா ஷமீ, ரோஸி தான் என்றவாறு மகளிடம் போனை நீட்ட,அதை வாங்கியவள் சித்தி எப்படி இருக்கீங்க என்று பரஸ்பரம் நலம் விசாரித்தனர்..
பின்னர் தம்பி தங்கைகளிடம் பேசிவிட்டு போனை வைத்த உடனே கால் வர,அதில் மகியின் நம்பர் வரவும் இந்தா மா உன் புருஷனென்று போனை கொடுத்தவள், கிச்சனிற்குள் சென்று என்ன இருக்கென்று பார்க்க,சூடாக சாதமும் மீன் குழம்பு,அவளுக்காக மீன் வறுவலும் தயாராக இருக்க...
ஆஹா ஆஹா..
எஸ்தரோட மீன் குழம்பை அடித்துக் கொள்ள இனி எவனாவது பிறந்து தான் வரணுமென்று சொல்லிக்கொண்டே தனக்கு தேவையானதை தட்டில் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர...
அங்கே எஸ்தரோ கணவரின் கேள்விக்கு ம்ம் என்றாலும் முகம் மட்டும் சோகமாக இருப்பது தெரிந்தது.
நிச்சயமாக போனிற்கு தான் சண்டை வந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டவள் சாப்பிடும் வேலையை பார்க்க..
ஒருவழியாக பேசிவிட்டு போனை வைத்த எஸ்தர் ஆண்டவரேஏஏஏஏ... என்க..என்னமா எவன் கிட்ட ஆத்தாளும் மகளும் போன்ல கதையடிச்சிங்கனு உன் புருஷன் கேட்டுருப்பாரே?
மகள் சொன்னதை கேட்ட எஸ்தருக்கு சுருக்கென்றது. தாயின் முகத்தை பார்த்தவள் இது தான் நடந்திருக்குமென்று தெரியாத அளவுக்கு நான் இல்லை மா.நல்லவேளை கடவுள் என்னை உன் வயிற்றில் பொண்ணாக பிறக்க வைத்தார்.
நான் மட்டும் பையனாக பிறந்திருந்தால் நீ தினமும் தீக்குளிக்கணும் மா.இந்த விஷயத்தில் நீ ரொம்ப கொடுத்து வைத்தவளென்று உள்ளுக்குள் கதறியவள் சாதத்தை அள்ளி வாயில் வைக்க,பிடித்தமான உணவோ விஷம் போல உள்ளுக்குள் இறங்கியது.
மகள் சாப்பிடும் வரை அமைதியாக இருந்த எஸ்தர் ஷமீ என்க,சொல்லுமா என்றவாறு அவரின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
இந்த வருஷத்தோடு பாபுவிற்கு 27 வயசாகுது.உனக்கும் பாபுக்கும் நிச்சயம் பண்ணலாம்னு எங்கண்ணன் சொல்லிட்டு இருக்கு டி என்கவும், வழக்கம் போல் இந்த வார்த்தையை கேட்டால் எதுவும் நினைக்காமல் அமைதியாக இருப்பவளுக்கு,இப்போது கல்யாண பேச்சு வந்ததும் செழியனின் நினைவுகள் தானாக ஓடி வந்தது.
அவள் சிந்தனையோ அவனை பார்த்த நாளை நோக்கி போக,மகள் கேட்டுக் கொண்டிருக்கிறாளென,பாபு அவளை எப்படியெல்லாம் பார்த்துக் கொள்வான் என்று அவனின் குணங்களைப் பற்றி சொல்லியவர்,அதனால இந்த வருஷம் நிச்சயம் பண்ணிடலாம்னு இருக்கு டி..
இதுவரை கனவில் மூழ்கியிருந்தவளுக்கு கடைசி வார்த்தை மட்டும் அவள் காதில் விழ,ஏன் மா அவசரப்படுறீங்க?நான் இந்த வீட்ல இருக்கிறது உனக்கு இடைஞ்சலா இருக்கா என்கவும்,...
அடியேய் என்னடி பேசுற?
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு பெத்து வச்சிருக்கேன்.உன்னை நல்லபடியா என் அண்ணன் கையில ஒப்படைச்சிட்டாக்க என் உயிர் நிம்மதியாக போயிடும்.
உன்னை தவிர வேற எனக்குன்னு யாரு இருக்கா சொல்லு?என்று கண் கலங்கியபடி எஸ்தர் சொல்ல,
ஷமீராவுக்கும் அதைக் கேட்டு அழுகை தான் வந்தது.ஆனால் மனம் ஏனோ பாபுவை கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதிக்கவில்லையே என்ன செய்ய? ?
தந்தையின் சந்தேக புத்தி பற்றி எந்த வயதில் தெரிந்ததோ அன்றிலிருந்து அவளுக்கு ஆண்கள் மேல் வெருப்பு வந்ததும்,கல்யாணம் என்ற வார்த்தைக்கு தனது வாழ்க்கையில் இடமில்லை என்று அவள் மனதிற்குள் முடிவெடுத்து விஷயம் அவளைத் தவிர யாருக்கும் தெரியாதே?
அதனால் தானே பாபுக்கும் அவளுக்கும் கல்யாணம் என்று சிறுவயதில் இருந்து சொல்லும் போதெல்லாம் அதை ஒரு பொருட்டாக காதில் வாங்காமல் இருந்து கொண்டிருக்கிறாள்.
அப்படி உள்ளவளின் எண்ணத்தில் யாரென்று தெரியாத ஒருவன் சலனத்தை கொண்டு வந்ததை நினைத்து அவன் மேல் கோபமும் வந்தது.
அதே நேரம் அவளின் மனநிலையை நினைத்து அழுகையும் வந்தது.
மகளின் முகத்தை பார்த்த எஸ்தர் பாபு ரொம்ப நல்லவன் டி.அதை நான் சொல்லித்தான் உனக்கு தெரியனுமா சொல்லு?
நீ பிறந்த அன்னைக்கே பாபுவிற்கு நீதான் உனக்கு பாபு தான்னு எங்க அண்ணன் முடிவு பண்ணிடுச்சு. கண்டிப்பா எங்க அண்ணனோட பேச்சை உங்க அப்பா தட்ட மாட்டாரு அது உனக்கே நல்லா தெரியும் தானே ஷமீ??
எங்க அண்ணனுக்கும் வேற யாரு இருக்கா சொல்லு? அவருக்கு இருக்கிறது ஒரே வாரிசு தானே.தங்கச்சி மகள் நீ அந்த வீட்டுக்கு போனால் கடைசி காலத்துல அவங்களுக்கு உதவியாக இருக்கும்..
இந்த வருஷம் பாபு ஊருக்கு வரேன்னு சொல்லிருக்கிறான்.வந்த பிறகு அந்த ஆண்டவர் புண்ணியத்துல எல்லாம் நல்லபடியா நடந்தால் சந்தோஷம்.
சரி நீ போய் படு என்றவர் வெளிக்கதவை பூட்டிவிட்டு அவர் அறைக்குள் செல்ல,இடி விழுந்த நிலையில் மேலே இருக்கும் தனது அறைக்குள் வந்த ஷமீராவுக்கு என்ன பண்ணுவது என்று ஒன்றுமே புரியவில்லை..
பாபுவின் மேல் அவளுக்கு இதுவரை அதுபோல ஒரு எண்ணம் வரவில்லை. வீட்டில் தொடர்ந்து இதே பேச்சு வந்து கொண்டே இருக்க,கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இத்தனை வருஷம் அமைதியாக இருந்தது ஒருவிதத்தில் தப்போ என்று இப்பொழுது யோசித்துப் பார்த்தவளுக்கு பாபுவுடன் பேசினால் ஒரு விதத்தில் ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்தவள் தனது ஃபோனில் இருந்து பாபுவின் நம்பருக்கு ஹாய் மாமா என்று மெசேஜ் அனுப்பினாள்.
சிறு நிமிடத்தில் அவனிடமிருந்து கால் வர அட்டென் பண்ணியவளிடம் சொல்லுடா பாப்பா?எப்படி இருக்கடா என்றான்.
நான் நல்லாருக்கேன் மாமா நீங்க எப்படி இருக்கீங்க என்று பரஸ்பரம் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.
பின்னர் அவளின் படிப்பு பற்றி கேட்க நல்லா போகுது மாமா என்கவும் அவனின் வேலையை பற்றிய ஷமீரா கேட்க அவனும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்..
அப்புறம் டி காலேஜ்ல நல்லா சைட் அடிக்கிறியா? பஸ்ல வேற தினமும் போற நிறைய ஹேண்ட்ஸம் பாய்ஸ்களை பார்த்திருப்பியே என்று பாபு சிரிக்க... மாமா என்று கோவமாக ஷமீரா சொல்ல...
அட ஆமாம் நீ ஒரு ரோபோட் என்பதை மறந்துட்டேன் டி.என்ன பொண்ணோ போ என்றவன் மேலும் சிறிது நிமிடங்கள் பேசியவன் சரி டா பாப்பா நேரம் ஆயிடுச்சு குட் நைட் டா என்க,சரி மாமா பாய் என்றவாறு அழைப்பை துண்டித்தாள்.
செழியன் நினைவுகள்:
என்னடா ஊருக்கு கிளம்பலாமா வேண்டாமா?
இப்படி புடிச்சு வச்ச பிள்ளையார் போல உக்காந்திருந்தா என்ன அர்த்தம் என்க, கிளம்பலாம் கிளம்பலாம் என்று விரக்தியாக செழியன் சொல்லவும்,மச்சி நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத டா.அந்த பிள்ளைக்கு விருப்பம் இல்லைனா விட்டுவிடுடா. எதுக்கு தொந்தரவு பண்ணிக்கிட்டு???
நம்ம சாதிசனத்துல ஊர் உலகத்தில் வேற பொண்ணா கிடைக்காது என்று அன்பு சொல்லவும்,அதைக்கேட்ட செழியனோ,இன்னொருவாட்டி இந்த சாதி,சனம் மயிறு மட்டைனு பேசுன எனக்கு செம்ம கோவம் வந்துரும் டா.
அதெல்லாம் தூக்கி குப்பையில் போடுங்கடா.படிச்ச நம்பளே இன்னும் இதை தூக்கிக்கொண்டு திரிஞ்சால் நம்ம குடும்பத்தில் இருக்கிறவங்களை என்ன சொல்றது சொல்லு?
காலம் காலமா அதே குண்டு சட்டியில் தானே குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கிறோம்.நல்லா முடிவு பண்ணி தான் இந்த விஷயத்துல நான் இறங்கிருக்கிறேன் டா.
முடிஞ்சா நண்பனா எனக்கு கூட இருங்கள்.இல்லை புடிக்கலைன்னா ஒதுங்கி இருங்கடா அது போதும்.அதை விட்டுட்டு இப்படி எல்லாம் பேசாதீங்கடா என்க...
ஓஓஓ என்ற கண்ணனோ அன்புவிடம் கண்ணை காட்டிவிட்டு செழியனின் பக்கத்தில் உட்கார்ந்தவன், உண்மையிலேயே நீ என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க மாட்ட தானே டா?
திரும்பி அவனை பார்த்த செழியன், சத்தியமாக கண்மணியை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் டா.
நிஜமா தானே ஆமா டா நம்ம மலையாத்தா சத்தியமா இவளை தான் டா கட்டுவேனென்க...
அப்பாடா நல்ல வேளை என் தங்கச்சி தப்பிச்சிது.அதுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் என்கவும், இதுவரை இருந்த மனநிலை மாறி இப்பொழுது கொலைவெறியில் செழியன் முறைக்க,மத்தவனுங்களோ அதைக் கேட்டு சத்தமாக சிரித்து விட்டார்கள். ..
ஏன் டா இப்போ உன் விளங்காத தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைப்பது தான் முக்கியமா?
நான் எவ்வளவு சீரியஸாக பேசிட்டு இருக்கிறேன் உனக்கு கிண்டல் மயிறு கேட்குதென்று எழுந்தவனோ கண்ணனின் முதுகில் எட்டி ஒரு உதைவிட அய்யோ என்றவாறு கீழே விழுந்தான்.
ஏன் டா ஏன்???
கால் தானா அது?
"ஆத்தாடி"
குருத்தெலும்பு நொருங்கிடுச்சே...
நல்ல வேளை நான் பொண்ணா பொறக்கலை டா.இல்லை உன் தலையில் என்னை கட்டிடுவாங்களென்பவனை முறைத்த செழியன்,இங்கு ஒரு கொலை விழ போகுது பாருங்கடா என்றவாறு எழுந்து போய் கண்ணாடி பார்த்தவன் சரி வாங்கடா கிளம்பலாமென்று அவன் பேகை எடுக்க,மற்ற நண்பர்களும் லக்கேஜோடே கீழே வந்தனர்.
பின்னர் ரூம் வெக்கேட் பண்ணி விட்டு பேசிக் கொண்டே பஸ் ஸ்டாண்டிற்கு வர அவர்கள் ஏற வேண்டிய பஸ்ஸும் தயாராக இருக்கவும்,வெற்றி- கபிலிடனிடம் சொல்லிக்கொண்டு இவர்கள் பஸ்ஸில் ஏறவும்,சிறிது நிமிடத்தில் மதுரையை நோக்கி அந்த பிரைவேட் பஸ் புறப்பட்டது.
பொதுவாகவே இரவு நேர பயணத்தை ரொம்பவே விரும்பும் செழியனுக்கு, இந்த முறை எதையும் ரசிக்க மனம் வரவில்லை.
சிறிது நேரம் கண்ணை மூடி சீட்டில் சாய்ந்திருந்தவன் பஸ் ஹாரன் சத்தத்தில் கண் திறக்க,அருகில் உட்கார்ந்திருக்கும் நண்பன் தூங்கி விட்டது தெரிந்தது.
பின்னர் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தவன் தன்னவளின் வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் செக் பண்ண,அவள் ஆன் லைனில் இருப்பது தெரிந்தது.