• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
425
செழியன் நினைவுகள்:

அவள் வீட்டிற்கு செல்லும் வழி மெயின் ரோடு என்பதால் ஆட்களின் நடமாட்டம் இருக்கவும் மற்றவர்களுக்கு சந்தேகம் வராதவாறு செழியனும் அவளை பின்தொடர்ந்து வந்தவன் அவள் வலது பக்கம் திரும்பி தெருவுக்குள் நுழைவதை பார்த்து சற்று தள்ளியே நின்றான்.

அங்கிருந்து போனவள் முதலாவதாக இருக்கும் மாடி வீட்டின் இரும்பு கதவை திறந்து நுழைவதை பார்த்தவன் ஓஓஓ இது தான் மாமனார் வீடா...

ஆள் பெரிய இடம் போலவே...???

சரி எப்படியோ இவள் தான் என் பொண்டாட்டி என்றவன் வந்த வழியில் திரும்பி பஸ் ஸ்டாண்டிற்கு வந்தவனோ சிதம்பரம் செல்லும் பஸ்ஸில் ஏறி உட்காரவும் அவன் நண்பர்களிடமிருந்து ஏராளமான அழைப்பு வந்து கொண்டேயிருந்தது.

அட்டென்ட் பண்ணினால் ரொசரொசமாக நண்பர்கள் திட்டுவார்களென்று தெரியும் என்பதால் சிறுது நிமிடங்கள் சென்று வெற்றியின் அழைப்பை ஏற்றவன் சொல்லு மச்சி என்க...

அங்கு சரமாரியாக வாய்க்க வந்தபடி எல்லாரும் திட்ட உன் தங்கச்சியை பாலோ பண்ணி வந்தேன்டா என்றதுமே டேய் சீரியஸா நீ அந்த விஷயத்தில் இறங்கிட்டியா என்று அதிர்ந்து போய் நண்பர்கள் கேட்க...

ஆமா டா. அவள் கிட்டயும் சொல்லிட்டேன்.என்றைக்கு இருந்தாலும் என் பொண்டாட்டி அவ தான் ஊர் மட்டும் தான் தெரியுது இன்னும் பேரு தெரியலை.

இப்பதான் பஸ் ஏறியிருக்கேன் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவேன் சாப்பாடு வாங்கி வைங்க என்று சொல்லி அழைப்பை துண்டித்து சீட்டில் சாய்ந்து கண்ணை மூடியவனுக்கு முதல் நாள் பார்த்தவளின் முகமே மன அடுக்கில் வந்து சென்றது.

எந்த பொண்ணு மேலும் வராது அந்த உணர்வு யாரென்று தெரியாத ஒருத்தியை பார்த்த உடனே வந்ததை நினைத்து அவனுக்கே அவனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது...
பின்னர் லாட்ஜிக்கு வர நண்பர்களோ அவனை கொலைவெறியில் பார்த்தனர்.

டேய் செழியா இவனுங்க கையில் சிக்குன உன்னை நார்நாராக கிழிச்சிடுவானுங்கள்.சூதானம் டா என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் மச்சான் தொண்டை ரொம்ப காயுது கூலிங்கா தண்ணி வாங்கி வாடா என்றவாறு ரெஸ்ட் ரூமிற்குள் டவலோடு நுழைந்து கொள்ள...

நாதாரி பயலே.. வெளியே வாடா உன் சங்கிலே மிதிக்கிறேனென்ற அன்பு, நான் போய் வாங்கிட்டு வரேன்.நான் வந்த பிறகு தான் டா சம்பவம் என்க அவர்களும் டன் என்று கையை நீட்டினர்.

சிறிது நிமிடத்தில் பிரஷ் ஆகி வெளியே வந்த செழியன் போட்டிருந்த துணிகளை அங்கிருந்த சேரின் மேல் வைத்தவன் இன்னொரு டவலை எடுத்து தலையை துவட்ட,நண்பர்களோ அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் பார்ப்பது கண்ணாடி வழியாக அவனுக்கும் தெரிந்தது என்னமோ பிளான் பண்ணிட்டானுங்க..

சரி சமாளிப்போம் என்று சொல்லிக் கொள்ள, டேய் ஒழுங்கு மரியாதையா சொல்லு, யார் அந்த பொண்ணு???

இத்தனை வருஷமா சிதம்பரம் பக்கமே திரும்பாதவன் இப்ப மட்டும் என்ன புதுசா ஆருத்ர தரிசன பாக்கணும்னு ஒத்தகாலில் நின்று எங்களை இழுத்துட்டு வந்த? என்று இன்னொரு நண்பன் கேட்க சுத்தம் என்று தலையில் கைய வைத்தவன் சத்தியமா அவளை எனக்கு தெரியாதுடா.

நேத்து தான் டா கோயில்ல பார்த்தேன்.என்னமோ தெரியலை ஆயுசு முழுவதும் அவ கூட வாழனும்னு மனசு அடிச்சிக்கிது.இதுவரை எந்த புள்ளையையாவது இப்படி சொல்லிருக்கேனா சொல்லுங்க டா?

செழியனின் வார்த்தைகளை கேட்டவனுங்கள் அப்போ அந்த புள்ளை தான் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டியா டா என்கும் போது கதவை திறந்து உள்ளே வந்த அன்பு,இந்தா ராசா...

நாயா பேயா அலைஞ்சிட்டு வந்திருக்க இதை குடிச்சி உன் சூட்டை குறைடா என்றவாறு பாட்டிலை தூக்கி செழியன் மேல் எறிய,அதை கேட்ச் பிடித்தவன் காதலிக்கிறது அவ்வளவு பெரிய குற்றமா டா?

ஊர் உலகத்தில் யாரும் பண்ணாததையா நான் பண்ணிட்டேனென்றவாறு நண்பர்களை பார்த்து முறைத்தான்.

ஷமீரா நினைவுகள்:

இவனா என்ற அதிர்ந்தவள் மெசேஜை பார்க்காமல் கவனத்தை படிப்பில் செலுத்த முயல,மெசேஜோ தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் பீப் சவுண்டில் கடுப்பானவள் ஓபன் பண்ண..

ஹலோ பொண்டாட்டி...

நல்லபடியா வீட்டுக்கு போய் சேர்ந்துட்ட சந்தோசம் டி.அந்த பஸ்ட் வீடு தான் என் மாமனார் வீடு போல..? என்று குடும்பத்தில் யாரெல்லாம் என்று செழியனும் கேள்விகளை கேட்டு அனுப்பியிருக்க..

இவனுக்கு எப்படி நம்ம வீடு தெரிஞ்சது என்று அதிர்ந்து போனவள் வேகமாக எழுந்து பால்கனி கதவை திறந்து சுற்றி பார்க்க அங்கு அவன் இருப்பது போல் தெரியவில்லை. ..

நொடிகள் சென்று என்னடி என்னைதான் தேடுற போல என்ற மெசேஜ் வரவும் அதில் மேலும் ஷாக்கானவள்,இப்பொழுது அந்த நம்பருக்கு பதில் அனுப்ப தொடங்கினாள்..

ஹலோ இடியட்..

ஹூ ஆர் யூ மேன்?

எதுக்கு தேவை இல்லாம எனக்கு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கீங்க?

மிஸ்டர் இளஞ்செழியன் எங்க வீடு உனக்கு எப்படி தெரியும்?

"ஹா ஹா ஹா மாட்டினியாடி என் பிஸ்தா"

என்னை தான் உனக்கு தெரியாதுனு சொன்ன,பிறகு என் பெயர் எப்படி தெரியும் டி என்றான்.

அட ஆண்டவரே...

மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்துட்ட கதையாகிடுச்சே ஷமீரா என்று தனக்குள்ளே முணவிக் கொண்டவள் இங்க பாருங்க நீங்க தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க...

எனக்கு இந்த காதல் கீதலெல்லாம் சுத்தமாக பிடிக்காது.தயவு செய்து என்னை தொந்தரவு பண்ணாதீங்க என்று ஷமீரா அனுப்ப..

ஏய்...நான் உன்னை காதலிக்கிறேன்னு எங்கடி சொன்னேன்?

அப்போ உனக்கு என் மேல காதல் வந்துடுச்சு போல என்று அந்த பக்கம் இருந்து செழியன் பதில் அனுப்ப அய்யோ அய்யோ என தனது தலையில் அடித்துக் கொண்டாள்.

என்னோட பேரு கூட உங்களுக்கு தெரியாது என்ன பத்தி எந்த ஒரு பேக்ரவுண்டும் தெரியாம இது என்ன பைத்தியக்காரத்தனமாக பண்ணிட்டு இருக்கீங்க?

இது என்ன சினிமாவா?

ரியல் லைஃப்...கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்குங்க என்கவும்,மனசு கேட்க மாட்டேங்குது நான் என்னடி பண்றது?
உன்ன விட அழகியெல்லாம் பார்த்தவன் டி.

உன்னை எவன் டி என் கண்ணு முன்னாடி வர சொன்னது என்று அந்த பக்கமிருந்து செழியன் பொரிந்து தள்ள..அதைக் கேட்ட ஷமீராவுக்கு ஆத்திரம் வர,அப்ப அவளுங்க பின்னாடியே போக வேண்டியது தானே எதுக்கு என்ன ஃபாலோ பண்றீங்க என்க..

ஓஹோ என் பொண்டாட்டிக்கு பொசசிவ்னஸ் வந்திருச்சாச்சே உன்னை தவிர யாரையும் ஃபாலோ பண்றது கிடையாது இனிமே என் முழு டார்கெட்டும் நீதான் டி..

"நான் ஒன்னும் ரோடு சைடு ரோமியோ இல்லை டி"

நீ தான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன்.இப்ப என்னதான் பண்ண சொல்ற சொல்லு பார்க்கலாம்?

ஓஓஓஓ...

நான் சொல்வதை செய்றிங்களா???

ஹம் டி சொல் இப்பவே உன் கழுத்தில் தாலி கட்டனுமா நான் ரெடி தான் என்றான்...

அதை படித்தவளுக்கு கண்ணை கட்டியது.நான் எந்த டிபார்ட்மென்ட்ல படிக்கிறேன் என்று கரெக்டா கண்டு பிடிச்சு நாளைக்கு வாங்க.. அப்போ நீங்க சொல்ற விஷயம் உண்மைன்னு நான் நம்புறேன் என்க..

அதை படித்தவன் அப்படியா சரி..அப்படி நான் வந்துட்டேன் என்றால் அதன் பிறகு உன் வாழ்க்கையில் என் முடிவு தான் ஓகே வா???நீ பேச்சு மாறக்கூடாது இதுக்கு சரி சொல்...

ஓகே டன்.. அவ்வளவு பெரிய யுனிவர்சிட்டியில் எங்கே நம்மளை கண்டுபிடிக்க போறான் என்ற மிதப்பில் ஷமீராவும் அதற்கு ஒத்துக்கொண்டாள்.

ஓகே டி செல்லம்.அப்படி நான் வந்து உன்னை பார்த்துட்டேன் அந்த நிமிஷத்தில் இருந்து நீ எனக்கு சொந்தமானவள்.அப்படி அன்றைய பொழுது நான் உன்னை கண்டுபிடிக்க முடியலைனா அதன் பிறகு உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன் டி.

ஆஹான்...நாளைக்கு என்ன நடக்குமென்று பார்க்கலாம் பாய் என்று சொல்லி போனை வைத்தவளுக்கு அதன் பிறகு படிக்க தோன்றவில்லை.

கண்ணை மூடிப் படுத்தவளுக்கு அவன் நினைவாகவே இருக்கவும் ஐயோ கடவுளே நேத்து தான் பார்த்தேன்.இப்படி என்னை பாடப் படுத்துறியே டா என்று புலம்பிக் கொண்டவள் ஒரு வழியாக தூங்கினாள்.

விடியலும் வந்தது....

இன்று காலை எட்டு மணிக்கு கம்ப்யூட்டர் லேப் என்பதால் வேகவேகமாக காலேஜிற்கு தயாரானவளுக்கு மதிய உணவை பேக் பண்ணிய எஸ்தர் மகளின் பேகில் வைக்க சரி மா பாய் என்றவாறு வெளியே சென்றாள்.

கால் மணி நேர நடை பயணத்தில் பஸ் ஸ்டேண்டிற்கு வர பஸ்ஸும் அங்கு தயாராக இருக்க அதில் ஏறி உட்கார்ந்தவள் ராஜிக்கு மெசேஜ் பண்ண அவளும் வந்துட்டு இருப்பதாக சொன்னாள்.

அதே போல பஸ் எடுக்கும் நேரத்தில் ராஜியும் வர அவளுக்கும் சீட் பிடித்திருக்க அதில் உட்கார்ந்தவள் இந்த 8 மணி லேப் வந்தாலே கடுப்பா வருது டி.நல்லா தூக்கம் வருது பாரு டி.அறை தூக்கத்தில் எழுந்து குளிச்சு கிளம்பி ஓடிவரோம்.எவன் தான் இந்த படிப்பை கண்டுபிடித்தானோ என்று ராஜி புலம்ப,அதைக் கேட்டவளோ வழக்கம்போல் அமைதியாக சிரித்தாள்.

பேசிக்கொண்டே இருவரும் சிதம்பரம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர்.பஸ் ஸ்டாப்பில் இருந்து கல்லூரிக்கு 10 நிமிடம் நடந்து போகும் தூரம் தான். லேப் இருக்கும் பிளாக்கை நோக்கி செல்லும் போது முதல் நாள் இரவு இளஞ்செழியனிடம் சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது.

பைத்தியக்காரன் போல என்னை தேடி இன்னைக்கு நல்லா சுத்த போரடா..ஏமாந்து போ..இனிமே என் வாழ்க்கையில் நீ வராதே என்று சொன்னாலும் மனதில் ஓரம் சுருக்கென்ற வலி வந்தது.

முறைமாமன் பாபு மேல் வராது அந்த உணர்வு யார் என்று தெரியாதவன் ஒருவனை நேருக்கு நேராக பார்த்த அந்த நிமிடத்தில் அவள் மனதிற்குள் அவனால் சலனம் வந்தது என்பதோ மறுக்க முடியாத உண்மை.

தந்தையின் குணம் தெரிந்தவளோ இதுபோல் ஆசைகளை மனதிற்கு வளர்க்க கூடாது என்பதற்காக தான் பள்ளிக்கூடத்தில் இருந்தே தன்னை ஒரு கூட்டிற்குள் அடைத்துக் கொண்டு, அதற்கு ஏற்ற போல வாழளானாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
425
செழியன்-நினைவுகள்..

நண்பன் சொன்னதை கேட்டவர்கள் அப்போ கண்மணி என்க..

கண்மணிக்கு என்ன?நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான்.

நிஜமா தானேனு அன்பு கேட்க, ஆமா டா.இது என் மாமியா நாகாம்மா மேல சத்தியம் டா என்க, இதைக் கேட்டு நண்பர்கள் சிரித்து விட்டனர்.

இவள் தான் என் பொண்டாட்டி அதாவது உங்களுடைய தங்கச்சி என்று போனில் இருக்கும் போட்டோவை காட்ட, அடப்பாவி இது எப்படா எடுத்த?

எல்லாம் நேற்றே எடுத்துட்டேன் டா என்று சிரித்தான்.பின்னர் சாப்பிட்டு ரூமிற்கு வந்தவர்கள் லைட் ஆப் பண்ணி படுத்துவிட்டனர்.சிறிது நிமிடம் அவர்களோடு இவனும் தூங்குவது போல பாவலா பண்ணினான்.

பின்னர் தனது போனை எடுத்தவன் பொண்டாட்டி என்று சேவ் பண்ணிருக்கும் நம்பருக்கு மெசேஜ் பண்ணினான்.ஆனால் எந்த பதிலும் வரவில்லை.

சிறிது நொடிகள் சென்று இப்போ பாரு டி என அவள் வீட்டை பார்த்ததை வைத்து மெசேஜ் பண்ண,அதில் பதறிப் போய் ஷமீரா ரிப்ளே பண்ணவும் பேச்சுவார்த்தை சுவாரசியமாக போக அவளோ பேச்சை வளர்க்க விரும்பாமல் வார்த்தையை துண்டிப்பது தெரிந்தது..

விருப்பம் இல்லாத ஒருத்தியை ஏற்றுக் கொள்வது தவறு என்றாலும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமாயென்று கேட்கும் போது அவள் கண்ணில் பிரமிப்பு வந்ததும் அவனை ஆழ்ந்து ரசித்த பார்வையும் கண்டுகொண்ட பிறகு அவளை பாலோ பண்ண தொடங்கினான்.

வாய் வார்த்தை வாக்குவாதமாக அப்போ நாளைக்கு என்னை தேடி கண்டுபிடித்து வா என அவள் சேலஞ்ச் பண்ண அதை ஏற்றுக் கொண்டவன் கண்டிப்பா டி.இதில் நான் ஜெயித்தே காட்டுவேன் டி என்று உள்ளுக்குள் சூளுறைத்துக் கொண்டவன் ஓகே என்று மொபைலை வைத்துவிட்டு கண்ணை மூடியவனுக்கு கண்கள் கட்டியது.

அவ்வளவு பெரிய யுனிவர்சிட்டியில் இவளை எப்படி தேடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அவள் கையில் இருக்கும் போனில் இரண்டு கை விரல்களாலும் டைப் பண்ணுவது ஞாபகம் வந்தது.

கண்டிப்பாக டைப்பிங் தெரிந்தவர்களால் தான் இவ்வளவு வேகமாக டைப் பண்ண முடியும்.அப்போ அது சம்பந்தப்பட்ட கோர்ஸ் படிக்கலாம் என்க...அவன் மனசாட்சியோ ஏன் டா மற்றவர்கள் டைப்பிங் கத்துக்க மாட்டாங்களா என்றது..

வழக்கம்போல் தனது மனதிற்கும் மூளைக்கும் வாதாட,மனமே கடைசியில் ஜெயித்தது.கண்டிப்பா அவள் கம்ப்யூட்டர் சம்பந்தமான ஏதோ ஒரு பாடம்தான் படிக்கிறாள் என்பதை உறுதியாக நம்பியவன்,அதேபோல் மறுநாள் காலையில் எழுந்து குளித்து தயாராக நண்பர்களோ பிச்சாவரம் போக தயாராகியவர்கள்,போகலாமா டா என்கும் போது நீங்க போங்கடா நான் வரலை என்றான்.

மாப்பிள்ளை என்னடா இதெல்லாம் என்று வெற்றி முறைக்க,இல்லடா இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சுக்கிட்டு தான் இந்த ஊரை விட்டு கிளம்புவது என்று செழியன் சொல்லவும் மேலும் அவனை பற்றி தெரிந்ததால் வற்புறுத்த மனமின்றி நண்பர்கள் அங்கிருந்து செல்லவும் இவனும் ஆட்டோவில் ஏறி யுனிவர்சிட்டிக்கு வந்தான்.

கம்ப்யூட்டர் சம்பந்தமான பாடப்பிரிவுகள் உள்ள பில்டிங் எது என்று ஆட்டோகாரரிடம் கேட்க நான் கூப்பிட்டு போறேனென்றார்.

சிறிது நிமிடத்தில் அங்கு வந்தவர் இதற்குள் தான் தம்பி.அது தான் கம்ப்யூட்டர் டிப்பார்ட்மெண்ட் என்று கையை காட்ட,தேங்க்ஸ் ணா என்றவன் ஆட்டோவிற்கான பணத்தை கொடுத்து விட்டு அங்கிருந்த கேட் வழியாக உள்ளே போனான்.

சுற்றியுள்ள பில்டிங்குகளை பார்த்தவனோ ஒரு நிமிடம் மலைத்தவன் இத்தனை பில்டிங்கிள் அவள் கிளாஸை எப்படிடா தேடுவது என்றாலும்,காதலுக்கு முன்னால் இது பெரிதாக அவனுக்கு தெரியவில்லை.

ஒவ்வொரு பில்டிங்கிளும் தேடி அலைய நேரம் போனதே தவிர எந்த வகுப்பிலும் அவள் இருப்பது போல் தெரியவில்லை.

அதோ இதோ என நேரமும் ஓடிக்கொண்டே இருந்தது.

மதிய உணவைகூட சாப்பிட மறந்தவன் அங்கிருந்த அத்தனை பில்டிங்கிள் இருக்கும் ஒவ்வொரு ப்ளோரிலும் உள்ள வகுப்பில் தேடி தேடி தவித்து போனவனுக்கு தொண்டை வறண்டது.

கையில் கட்டியிருக்கும் வாட்சில் மணியை பார்க்க மாலை 4 என்று காட்டியது.படியிலிறங்கி வந்தவனுக்கு எதிரில் கேண்டீன் இருப்பது தெரிந்தது.

அங்கு போய் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி குடித்து விட்டு கண்ணை மூடி யோசித்தவன் இன்னும் இரண்டு பில்டிங் தான் இருக்கிறது.அதில் ஒன்றில் தான் தன்னவள் இருக்கிறாள் என்பதை நம்பினான்.

அம்மா மலையாத்தா ஏதோ ஒரு காரணத்துக்காக தான் நீ என்னை இங்கு அனுப்பிருக்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.

எனக்கு சரியான திசையை காட்டு மா என்றவாறு கண்களை திறக்கும் போது எதிர் பில்டிங்கிளிருந்து மாணவர்கள் வெளியே போவது தெரிந்தது.

ஓகே என்றவாறு அதனுள் போக சில வகுப்புகள் காலியாக இருந்தது.சிலர் அங்கங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.அப்படியே செகண்ட் ஃப்ளோருக்கு வந்தவன் ஒவ்வொரு கிளாஸ் ரூமாக பார்த்துக் கொண்டே வர அங்கே பெரும்பாலான வகுப்பறை எல்லாம் காலியாக இருக்கவும்,ஒரு வகுப்பில் மட்டும் யாரோ ஒருவள் உட்கார்ந்திருக்கும் பின் தோற்றம் தெரிந்தது.

வேகமாக போனவன் ஜன்னல் வழியாக அவளை பார்க்க குற்றால சாரல் மழை நெஞ்சுக்குள் வீசியது.வேகமாக துடிக்கும் தனது நெஞ்சின் மேல் கையை வைத்தவன் மலையாத்தா உன் கருணையோ கருணை ..

இனி என்ன நடந்தாலும் இவள் தான் என் பொண்டாட்டி.இதுல எந்த மாற்றமும் கிடையாது என்று தன்னை நிதானம் பண்ணிக் கொண்டவன் "உன்னை பார்த்த பின்பு தான் நானாக இல்லையே என்ற பாடலை விசிலில் பாடியபடி கிளாஸிற்கு வந்தான்".

ஷமீராவின் நினைவுகள்:

கம்ப்யூட்டர் லேப் முடித்து வெளியே வந்தவளுங்கள் அடுத்தது என்ன பண்ணலாம் என்று அங்கிருந்த மரத்தின் நிழலில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதற்கு பிறகு மதியம் மூணு மணிக்கு தான் கிளாஸ் என்பதால் சினிமாக்கு போகலாமா என்று மற்ற தோழிகள் கேட்க சரி போகலாம் என்றவளுங்கள் மதியம் 12 மணி காட்சிக்கு கல்லூரிக்கு வரும் வழியில் இருக்கும் தியேட்டருக்கு சென்று விட்டாளுங்கள்.

தோழிகளோடு அரட்டை அடித்துக் கொண்டு படத்தைப் பார்த்தாலும் செழியன் வந்து தேடுவானா? தேட மாட்டானா என்ற சிந்தனை தான் ஷமீராவின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

மூன்று மணி நேரம் படம் முடிந்து வெளியே வந்தவர்களோ வேகமாக நடந்து கிளாஸிற்கு வந்தவளுங்கள் அங்கிருந்த மற்ற தோழிகளிடம் படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, கிளாசுக்கு பேராசிரியர் வரவும் வகுப்பும் ஆரம்பமானது. .

அந்த ஒரு வகுப்பும் அவர்கள் டீன் எடுப்பதால் லீவ் எடுக்க முடியாது அதனால் இந்த வகுப்பை மட்டும் வேறு வழியின்றி மாணவர்களும் அட்டென்ட் பண்ணுவார்கள்.

அவரும் பாடத்தை முடித்து விட்டு வெளியே செல்ல மற்றவர்கள் வீட்டிற்கு கிளம்பவும்,ராஜியோ தனது அத்தை வீட்டிற்கு போவதாக காலையிலே ஷமீராவிடம் சொல்லிவிட்டாள்.

சரி டி பார்த்து போ என்றவாறு அவளும் சென்று விட்டாள்.

இப்போது கிளாஸில் ஷமீரா மட்டுமே உட்கார்ந்திருந்தாள்.அடுத்த பஸ் மாலை 5.15 என்பதால் கொஞ்ச நேரம் கழித்து கிளம்பளாமென்று போனை பார்த்துக் கொண்டிருக்கும் போது விசில் சத்தம் கேட்டு நிமிர்ந்தவளோ அங்கு நிற்பவனை பார்த்து அதிர்ந்து போனாள்..

ஓய் பொண்டாட்டி...!!!

எதிர் பார்க்கவில்லை தானே???

ஹா ஹா ஹா..

இந்த செழியன் கிட்ட சேலஞ் பண்ணுற???பட் இதுவும் நல்லா தான் டி இருக்கு என்றவாறு அவளை நோக்கி வர,அதிர்ச்சியில் இருந்தவளோ அவன் சொன்னதைக் கேட்டு சடாரென்று எழுந்தவள் பின்னாடியே நகர்ந்து போய் அங்கிருந்த சுவரில் இடித்து நிற்க...

வெல்....

இவ்வளவு தான் உன் வீரமாடி சண்டி ராணி?

நீ வைத்த டாஸ்கில் நான் தான் வின்னர்..

சோ...

சோ...

இந்த நிமிஷத்திலிருந்து உன் எண்ணம் இந்த மனசு என்றவாறு அவளை தொட வர,ஷமீராவோ பயந்து போய் கண்களை மூடிக் கொண்டாள்.

சிறிது நிமிடங்கள் கடந்தும் எந்த எதிர்வினையும் இல்லாமல் இருப்பதை உணர்ந்து கண்களை திறந்தவளோ, இருவருக்கும் இடையில் ஒரு அடி இடைவெளியோடு நீண்ட கரங்களை அவளுக்கு அரண் போன்று சுவரில் பதித்து தன்னை ரசனையோடு பார்ப்பவனை கண்டு தடுமாறியவளோ பார்வையை வேறு பக்கம் திரும்பிக் கொள்ள...

சூடான மூச்சுக்காற்று காதோரம் விழ,பதறி போய் திரும்பியவளோ நூலிடை இடைவெளியில் இருக்கும் அவனின் ரோமம் துளிர்த்த கன்னத்தில் பட்டும் படாமலும் உரச,அவளையும் மீறி நடுக்கம் வந்தது.

சொல்...

உன் பேர் என்ன??

உங்க அப்பா-அம்மா பேர்?

கூட பிறந்தவர்கள்?

என்ன படிக்கிற?

எப்போ நம்ப கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாமென அவன் கேள்விகளை அடுக்க,இவளுக்கோ வார்த்தைகள் வெளிவராமல் சண்டிதனம் பண்ணியது.

ம்ம்...

உன்னை தான் டி கேட்கிறேன்..

நீயா சொன்னால் நல்லது.. இல்லையென்று அவள் பக்கம் திரும்பவும்,கம்பி போன்ற தாடியின் உரசலில் உடலில் ஏதோ ரசாயன மாற்றங்கள் உருவாகுவதை ஷமீராவும் உணர்ந்து கொண்டாள்..

சொல்லமாட்டியோ என்றவாறு அவள் கழுத்தில் இருக்கும் ஐடி கார்டை எடுக்க போக,பெண்ணவளோ தன்னை குறுக்கிக் கொண்டாள்.

அதன் பின்னரே அவளை ஊன்றி கவனிக்க...அவளின் உதடுகள் தந்தியடிப்பதும்,தன்னை பார்க்க முடியாமல் அவள் தவிப்பதை உணர்ந்தவன் மேலும் அவளை சோதிக்காமல் விலகினான்...

அதன் பின்னரே இயல்பாக மூச்சு விட்டவள் அவன் வேறு பக்கம் திரும்பி நிற்பதை கண்டு வேகமாக தனது பேகை எடுத்துக் கொண்டு வெளியே ஓட,காலடி சத்தம் கேட்டு திரும்பியவனுக்கு அவள் ஓடுவது தெரிந்தது...

வேகமாக படியிலிறங்கி கிரவுண்ட் ப்ளோருக்கு வந்தவள் மெயின் கேட்டிற்கு வரவும் அந்த வழியாக ஆட்டோ ஒன்று வர அதில் ஏறி பஸ் ஸ்டாண்ட் வந்தவளுக்கு படபடப்பு குறையவில்லை.

தோளில் மாட்டிருக்கும் பேகை ஒரு கையால் இறுக்கமாக பிடித்து தன்னை நிதானம் படுத்திக் கொண்டிருக்கும் போது அவள் ஊருக்கு செல்வதற்கான பஸ் வரவும் வேகமாய் போய் அதில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

சிறிது நிமிடத்தில் பஸ் எடுக்கவும் என்னடி தப்பிச்சு ஓடி வந்துட்டியா என்று குரல் கேட்டு அதிர்ந்து போய் திரும்ப அங்கே செழியனோ புருவத்தை மேலே தூக்கி அசைத்து என்ன என்க..நீங்களா என்று அவள் உதடுகள் முணுமுணுப்பது அவனுக்கு நன்கு கேட்டது.

ஐயோ..தெரிந்தவர் யாராவது பஸ்ஸில் பார்த்துவிட்டால் வீட்டில் சொல்லிடுவார்களே என்ற பயம் வரவும் முன் பக்கம் திரும்பி கொண்டாள்.

ஒழுங்கா பதில் சொல்லு டி.இல்லை உங்க வீட்டுக்கு வந்து இப்பவே பொண்ணு கேட்பேன் என்று மெசேஜ் அனுப்ப, அதை படித்தவளுக்கு
திக்கென்றிருந்தது.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top