Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 421
- Thread Author
- #1
ஷமீரா நினைவுகள்:
அதன் பின்னர் ஒரு வாரம் வழக்கமாய் காலேஜிற்கு போயிட்டு வந்தவள். அன்று வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசனத்திற்காக உள்ளூர் பொது விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தவளோ தனது அம்மாவை அழைத்துக் கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்றாள்.
அங்கு சித்தப்பா பிள்ளைகளோடு டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது எஸ்தரின் போனுக்கு கால் வர,ஷமீ உங்க அப்பா தாண்டி பண்றாரு என்றபடி அட்டென்ட் பண்ணியவர் ம்ம் சொல்லுங்க...
அந்த பக்கம் இருந்த மதி ஏய் எங்க தான் போய் தொலைஞ்சீங்க ஆத்தாளும் மகளும்?மனுஷன் வீட்ல இல்லனா இப்படித்தான் ஊர் மேய்விங்களா?
அய்யோஓஓஓ...
எங்க சித்தி வீட்டுல தாங்க இருக்குறோம்.ஷமீராவுக்கு இன்னைக்கு காலேஜ் லீவு.அதான் சித்தியை பாத்துட்டு வரலாம்னு நானும் அவளும் வந்தோம்...
எஸ்தர் சொன்னதை கேட்ட மகி அப்படியா...சரி அங்கேயே இரு நான் வரேன் என்று அழைப்பை துண்டித்தார்.
சிறிது நிமிடத்தில் உள்ளே வந்த மகி அங்கிருந்து தனது அத்தையை பார்த்து நலம் விசாரித்தவர் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
தனது தந்தையை பார்த்த உடனே ரூமிற்குள் போய் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்ட ஷமீராவிற்கு ஜெயில் வாழ்க்கை தான் ஞாபகம் வந்தது.
வேகவேகமாக மதிய சமையலை செய்து கொண்டிருந்த எஸ்தர் டீ போட்டு கொண்டு போய் கணவருக்கு கொடுத்தவர் வரேன்னு ஒரு வார்த்தை சொல்லவே இல்லைங்களே??
ஏண்டி நான் வீட்டுக்கு வர கூடாதா?
உன்கிட்ட சொல்லிட்டு தான் வரணுமா?
ஏன் வேற எவனையாவது எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தியோ என்று வார்த்தைகளை சிதற விட,கேட்ட எஸ்தருக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது.
சிறிது நேரம் ரூமில் படுத்திருந்த ஷமீரா பின்னர் கதவைத் திறந்து பொறுமையாக எட்டிப் பார்க்க ஹாலில் டிவி ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது.
ஓஓஓ அவர் தான் டிவி பார்க்கிறார் போல என்று நினைத்தவள் கிச்சனுக்குள் சென்று எதாவது பண்ணனுமா மா?
"ஆமா ஷமீ" என்கவும் தாய்க்கு உதவி செய்தாள்.
ஷமீ நீ சாப்பிட்டுக்க என்று மகளுக்கு அங்கேயே தட்டில் போட்டு கொடுக்க, அவளும் வேகமாக சாப்பிட்டுவிட்டு தனது ரூமிற்குள் போய் அடைந்து கொண்டாள்.
கணவருக்கான உணவை எடுத்துப் போய் டைனிங் டேபிள் வைக்க டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்ட மகி,இன்னும் கொஞ்ச நேரம் கழித்து நீயும் உன் மகளும் கிளம்புங்க சிதம்பரம் வரைக்கும் போயிட்டு வரலாம்..
கிறிஸ்துமஸ்-நியூ இயர் வந்தது டிரஸ் வாங்கி கொடுக்க முடியலை.வேலை விஷயமா நான் வெளியில போயிட்டேனேனு வாய் கூசாமல் பொய் சொல்ல...
மகியின் மனசாட்சியோ அடப்பாவி திருச்சில தானடா சுத்திகிட்டு இருந்த நீ எங்கடா வெளியூருக்கு போன என்றது...
சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்த எஸ்தர் மகளின் ரூம் கதவைத் தட்ட சிறிது நிமிடத்தில் கதவை திறந்தவளிடம்,சிதம்பரத்துக்கு போகணும் உங்க அப்பா கூப்பிடுறார் டி.
நான் எதுக்கு மா?
அதான் தினமும் போயிட்டு வரேனே என்று தனது தாய்க்கு மட்டும் காதில் விழும் படி சொல்ல...
அய்யோ ஷமீஈஈஈ... கிளம்பு டி, இல்லன்னா இதுக்கும் அந்த மனுஷன் கத்துவார்.டிரஸ் எடுக்க கூப்பிடுறார் டி.ரெடியாகு போ..
அதைக் கேட்டு முறைத்தவள் கிறிஸ்துமஸ்- நியூ இயர் முடிஞ்சி இப்ப பொங்கலே வரப்போகுது இப்ப எதுக்கு உன் புருஷனுக்கு இந்த டிராமா?என்னமோ பண்ணி தொலை என்றவாறு உள்ளே போனவள் வேண்டா வெறுப்புமாக தயாராகினாள்.
வாழ்க்கையில் என்னைக்கு தான் எனக்கு சுதந்திரம் கிடைக்குமோ அது அந்த ஆண்டவருக்கு தான் வெளிச்சம்.
எதுக்கு தான் ஆண்டவரே என்னை இந்த உலகத்துல படைச்சீங்க என்று புலம்பியபடி தயாராகியவள் கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்துக் கொண்டிருக்கும்போது ராஜி கோவிலுக்கு கூப்பிட்ட விஷயம் ஞாபகம் வர,ஒருவேளை போயிருப்பாளா என்று யோசனை செய்தபடியே மொபைல் எடுத்து ராஜிக்கு கால் பண்ணினாள்.
இரண்டாவது ரிங்கிள் அட்டென்ட் பண்ணியவள் சொல்லுடி??
என்னடி பண்ணிட்டிருக்க???
கோயிலுக்கு தாண்டி கிளம்பிட்டு இருக்கேன் என்க..அப்படியா நானும் அங்கு தாண்டி வரேன் என்று ஷமீரா சொல்ல, என்னடி சொல்ற என்று அந்த பக்கம் உள்ளவள் அதிர்ந்து போய் கேட்க, ஆமாடி ஹிட்லர் வந்திருக்கிறார்..
என்னன்னே தெரியல திடீர்னு சிதம்பரத்துக்கு கூப்பிடுறாரு என்கவும் அப்படியா..அப்ப ஒண்ணா போய்டலாமா?
சரி டி நான் அம்மா கிட்ட சொல்லி பார்க்கிறேன் என்றவள் போனை வைத்துவிட்டு கதவை திறந்து வெளியே போக அங்கே எஸ்தர் தலைசீவிக் கொண்டிருப்பது தெரிந்தது.
அம்மா என்றவாறு போனவள் அவரிடம் விஷயத்தை சொல்ல அப்படியா நல்லது தானே இரு அப்பாகிட்டயும் சொல்றேன் என்றவர் என்னங்க என்றவாறு அங்கிருந்த ரூம் கதவை திறந்து உள்ளே போய் விஷயத்தை சொல்ல...
சிறிது நொடிகளில் வெளியே வந்தவர் ராஜி கிட்ட ரெடியா இருக்க சொல்லு ஷமீ.போகும்போது கூட்டிட்டு போலாம்னு சொல்லிட்டாரு.
சரி மா என்றவள் தனது தோழிக்கும் விஷயத்தை சொல்லிவிட்டாள்.
பின்னர் தயாராகி வெளியே வந்தவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு காரில் போகும் வழியில் ராஜீ வீட்டினரையும் காரில் ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்றனர்.
அப்புறம் மகி வேலையெல்லாம் எப்படி போகுது என்று ராஜிவின் அப்பா வேதாச்சலம் கேட்க,அட ஏன் வேதா அதை கேட்கிற உசுரு போகுதுடா. பேசாமல் நாலு மாட்டை வாங்கி மேய்ச்சிட்டு வீட்டிலேயே நிம்மதியா இருக்கலாம் போல டா...
அவர்கள் இருவரும் அவர்கள் இருவரின் வேலையை பற்றி பேசிக்கொண்டே வரேன் தாய்மார்கள் இருவரும் அவர்கள் குடும்ப கதையையும், ஷமீ-ராஜி இருவரும் பின்னாடி இருக்கும் சீட்டில் உட்கார்ந்து கொண்டவளுங்கள் வேடிக்கை பார்த்தபடி வந்தனர்.
அரை மணி நேர பயணத்தில் சிதம்பரத்துக்கு வந்து சேர்ந்தனர் சரி நீங்க இருங்க நாங்க பர்சேஸ் முடிச்சுட்டு வரும்போது உங்களை பிக்கப் பண்ணிக்கிறோம் என்று மகி சொல்லவும் ராஜியோ தனது தோழியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏன் ராஜி நீயும் வாயேன் மா.ஷமீக்கு டிரஸ் எடுத்த பிறகு உங்க ரெண்டு பேரையும் இங்க கொண்டு வந்து விடுறேன்.நீங்க முடிச்சிட்டு வாங்க பிறகு ஒன்னாவே நம்ப ஊருக்கு போயிடலாம் என்று மகி சொல்லவும், ராஜி நீயும் ஷமீயும் இங்கு வந்ததும் கால் பண்ணுங்க நானும் அம்மாவும் உள்ளே போறோமென்ற வேதாச்சலம் சொல்ல,சரிங்கப்பா என்றவள் காரில் உட்கார்ந்து கொண்டாள்.
பின்னர் அங்கிருக்கும் பிரபலமான ஜவுளி கடைக்கு அழைத்துப் போனவர் எஸ்தர்- ஷமீராவுக்கு தேவையான துணியை வாங்கி கொடுத்துவிட்டு ராஜீ உனக்கு தேவையானதை வாங்கிக்கோ என்க,எனக்கு ஒன்னும் வேண்டாம்ப்பா. பொங்கலுக்காக நேத்து தான் பர்சேசிங் பண்ணினோமென்றாள்.
அப்படியா சரி வாங்க என்று அவர்களை அழைத்துக் கொண்டு வந்தவர் கோயில் பக்கம் ஒரே கூட்டமாக இருப்பதால் கார் அந்த பக்கம் போகாது என்பதால் சற்று தள்ளியே காரை நிறுத்திய மகி நீங்க ரெண்டு பேரும் போங்க.
முடிச்சிட்டு போன் பண்ணுங்க என்கவும் உள்ளே இருக்கும் சந்தோஷத்தை வெளியே காட்டிக்காத ஷமீ எப்போதும் போல் முகத்தை வைத்துக் கொண்டு ராஜியோடு இறங்கி சென்றாள்..
செழியன் நினைவுகள்:
ஏய் தடிமாடுகளா மணி நாலாக போகுது. எந்திரிச்சு குளிச்சிட்டு வாங்கடா..வந்தது கோயிலுக்கு ஆனா நாலு சென பன்னியும் தூங்க வந்த போல இங்க வந்து தூங்குறீங்க எந்திரிங்கடா என்று நால்வரின் முதுகிலும் ஓங்கி ஒரு அடியை செழியன் வைக்க,அதில் பதறி அடித்து எழுந்தவர்கள் ஏன் டா மாப்பி வாயால சொன்னா நாங்களே எந்திரிக்க மாட்டோமா என்க..செழியனோ அவர்களை முறைத்து பார்த்தான்.
சும்மா மச்சி சோக்கு சோக்கு என்றவனுங்கள் குளித்து தயாராக, பின்னர் ஏழு பேரும் அங்கிருந்து கோயிலுக்கு சென்றனர்.
எங்கு பாத்தாலும் கூட்டமாகவே இருந்தது..
ஒரு வழியாக அந்த கூட்டத்தில் புகுந்து உள்ளே போனவர்கள் தரிசனம் பண்ணுவதற்காக காத்திருக்கும் போது தற்செயலாக வலது பக்கம் திரும்பிய செழியனோ அங்கே வருபவளை பார்த்து அசந்து போனான்
அவளிடமிருந்து அவனால் பார்வையை விளக்க முடியவில்லை,அவள் கூட வரும் தோழியிடம் சிரித்து பேசிக்கொண்டு வருவதை பார்த்தவனுக்கு இதயத் துடிப்புகள் வேகமாக எகரி துடித்தது.
இதுவரை எந்த பெண்ணையும் பார்த்து தோன்றாத உணர்வுகள் எல்லாம் அவளை பார்த்த மாத்திறத்திலேயே வர சுற்றத்தை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,சாமி கும்பிடுவதை விட்டுவிட்டு இதோ வந்துடுறேன் நீங்க கும்பிட்டு வாங்கடா என்று சொல்லிக்கொண்டு நண்பர்கள் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக கூட்டத்தில் இருந்து விலகி அவளை பின் தொடர்ந்து சென்றான்..
இவன் தேடி வந்த பெண்ணோ அவள் தோழியோடு முன்னே போனவள் அங்கிருந்த கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே வரும்போது வேகமாக கூட்டத்தை விலக்கி அவர்களின் அருகில் வந்தான்.
தோழியோடு இருந்தவளோ நீ இங்க பார்த்துக் கொண்டிரு நான் அந்த கடையில் பார்க்கிறேன் என்று பக்கத்து கடைக்கு செல்ல அவள் பின்னாடியே வந்தவன் எஸ்கியூஸ் மி என்க,அதில் திரும்பியவளின் நீண்ட கூந்தலோ அவன் முகத்தில் பட கண்ணை மூடி ரசித்தான்..
இதைப் பார்த்தவளோ இவன் என்ன பைத்தியமா என்று நினைத்துக்கொண்டு கடையினுள்ளே செல்ல பின்னர் சுதாரித்த செழியன் வேகமாக அவளை தேட கடையினுள் இருப்பது தெரிந்தது..
சுற்றி பார்த்துக் கொண்டே போனவன் அவளின் அருகில் சென்று எஸ் கியூஸ் மீ நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா என்க..
திடீரென்று காதின் அருகில் கேட்ட விஷயத்தில் அதிர்ந்து போய் திரும்பியவள் அங்கிருந்தவன் மேலே இடித்து நின்றாள்..
என்னோட பேரு இளஞ்செழியன் ஊர் வனிச்சூர். நாளைக்கு காலையில உனக்காக இந்த கோயிலோட தெற்கு வாசல் பக்கம் காத்திருப்பேன். நீ வரணும் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று அவள் கண்களை பார்த்து சொல்ல..
இவ்வளவு நேரம் அவன் பேசியதை கேட்டு அதிர்வில் இருந்தவளோ எதுவும் சொல்லாமல் அங்கிருந்த தோழியை தேடி சென்று விட,செழியனும் அவளை பாலோ பண்ணிக்கொண்டு தான் வந்தான்.
இதற்கு நடுவில் அவனது நண்பர்களும் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இவனை தேடி வந்தனர்..
அதன் பின்னர் ஒரு வாரம் வழக்கமாய் காலேஜிற்கு போயிட்டு வந்தவள். அன்று வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசனத்திற்காக உள்ளூர் பொது விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தவளோ தனது அம்மாவை அழைத்துக் கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்றாள்.
அங்கு சித்தப்பா பிள்ளைகளோடு டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது எஸ்தரின் போனுக்கு கால் வர,ஷமீ உங்க அப்பா தாண்டி பண்றாரு என்றபடி அட்டென்ட் பண்ணியவர் ம்ம் சொல்லுங்க...
அந்த பக்கம் இருந்த மதி ஏய் எங்க தான் போய் தொலைஞ்சீங்க ஆத்தாளும் மகளும்?மனுஷன் வீட்ல இல்லனா இப்படித்தான் ஊர் மேய்விங்களா?
அய்யோஓஓஓ...
எங்க சித்தி வீட்டுல தாங்க இருக்குறோம்.ஷமீராவுக்கு இன்னைக்கு காலேஜ் லீவு.அதான் சித்தியை பாத்துட்டு வரலாம்னு நானும் அவளும் வந்தோம்...
எஸ்தர் சொன்னதை கேட்ட மகி அப்படியா...சரி அங்கேயே இரு நான் வரேன் என்று அழைப்பை துண்டித்தார்.
சிறிது நிமிடத்தில் உள்ளே வந்த மகி அங்கிருந்து தனது அத்தையை பார்த்து நலம் விசாரித்தவர் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
தனது தந்தையை பார்த்த உடனே ரூமிற்குள் போய் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்ட ஷமீராவிற்கு ஜெயில் வாழ்க்கை தான் ஞாபகம் வந்தது.
வேகவேகமாக மதிய சமையலை செய்து கொண்டிருந்த எஸ்தர் டீ போட்டு கொண்டு போய் கணவருக்கு கொடுத்தவர் வரேன்னு ஒரு வார்த்தை சொல்லவே இல்லைங்களே??
ஏண்டி நான் வீட்டுக்கு வர கூடாதா?
உன்கிட்ட சொல்லிட்டு தான் வரணுமா?
ஏன் வேற எவனையாவது எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தியோ என்று வார்த்தைகளை சிதற விட,கேட்ட எஸ்தருக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது.
சிறிது நேரம் ரூமில் படுத்திருந்த ஷமீரா பின்னர் கதவைத் திறந்து பொறுமையாக எட்டிப் பார்க்க ஹாலில் டிவி ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது.
ஓஓஓ அவர் தான் டிவி பார்க்கிறார் போல என்று நினைத்தவள் கிச்சனுக்குள் சென்று எதாவது பண்ணனுமா மா?
"ஆமா ஷமீ" என்கவும் தாய்க்கு உதவி செய்தாள்.
ஷமீ நீ சாப்பிட்டுக்க என்று மகளுக்கு அங்கேயே தட்டில் போட்டு கொடுக்க, அவளும் வேகமாக சாப்பிட்டுவிட்டு தனது ரூமிற்குள் போய் அடைந்து கொண்டாள்.
கணவருக்கான உணவை எடுத்துப் போய் டைனிங் டேபிள் வைக்க டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்ட மகி,இன்னும் கொஞ்ச நேரம் கழித்து நீயும் உன் மகளும் கிளம்புங்க சிதம்பரம் வரைக்கும் போயிட்டு வரலாம்..
கிறிஸ்துமஸ்-நியூ இயர் வந்தது டிரஸ் வாங்கி கொடுக்க முடியலை.வேலை விஷயமா நான் வெளியில போயிட்டேனேனு வாய் கூசாமல் பொய் சொல்ல...
மகியின் மனசாட்சியோ அடப்பாவி திருச்சில தானடா சுத்திகிட்டு இருந்த நீ எங்கடா வெளியூருக்கு போன என்றது...
சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்த எஸ்தர் மகளின் ரூம் கதவைத் தட்ட சிறிது நிமிடத்தில் கதவை திறந்தவளிடம்,சிதம்பரத்துக்கு போகணும் உங்க அப்பா கூப்பிடுறார் டி.
நான் எதுக்கு மா?
அதான் தினமும் போயிட்டு வரேனே என்று தனது தாய்க்கு மட்டும் காதில் விழும் படி சொல்ல...
அய்யோ ஷமீஈஈஈ... கிளம்பு டி, இல்லன்னா இதுக்கும் அந்த மனுஷன் கத்துவார்.டிரஸ் எடுக்க கூப்பிடுறார் டி.ரெடியாகு போ..
அதைக் கேட்டு முறைத்தவள் கிறிஸ்துமஸ்- நியூ இயர் முடிஞ்சி இப்ப பொங்கலே வரப்போகுது இப்ப எதுக்கு உன் புருஷனுக்கு இந்த டிராமா?என்னமோ பண்ணி தொலை என்றவாறு உள்ளே போனவள் வேண்டா வெறுப்புமாக தயாராகினாள்.
வாழ்க்கையில் என்னைக்கு தான் எனக்கு சுதந்திரம் கிடைக்குமோ அது அந்த ஆண்டவருக்கு தான் வெளிச்சம்.
எதுக்கு தான் ஆண்டவரே என்னை இந்த உலகத்துல படைச்சீங்க என்று புலம்பியபடி தயாராகியவள் கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்துக் கொண்டிருக்கும்போது ராஜி கோவிலுக்கு கூப்பிட்ட விஷயம் ஞாபகம் வர,ஒருவேளை போயிருப்பாளா என்று யோசனை செய்தபடியே மொபைல் எடுத்து ராஜிக்கு கால் பண்ணினாள்.
இரண்டாவது ரிங்கிள் அட்டென்ட் பண்ணியவள் சொல்லுடி??
என்னடி பண்ணிட்டிருக்க???
கோயிலுக்கு தாண்டி கிளம்பிட்டு இருக்கேன் என்க..அப்படியா நானும் அங்கு தாண்டி வரேன் என்று ஷமீரா சொல்ல, என்னடி சொல்ற என்று அந்த பக்கம் உள்ளவள் அதிர்ந்து போய் கேட்க, ஆமாடி ஹிட்லர் வந்திருக்கிறார்..
என்னன்னே தெரியல திடீர்னு சிதம்பரத்துக்கு கூப்பிடுறாரு என்கவும் அப்படியா..அப்ப ஒண்ணா போய்டலாமா?
சரி டி நான் அம்மா கிட்ட சொல்லி பார்க்கிறேன் என்றவள் போனை வைத்துவிட்டு கதவை திறந்து வெளியே போக அங்கே எஸ்தர் தலைசீவிக் கொண்டிருப்பது தெரிந்தது.
அம்மா என்றவாறு போனவள் அவரிடம் விஷயத்தை சொல்ல அப்படியா நல்லது தானே இரு அப்பாகிட்டயும் சொல்றேன் என்றவர் என்னங்க என்றவாறு அங்கிருந்த ரூம் கதவை திறந்து உள்ளே போய் விஷயத்தை சொல்ல...
சிறிது நொடிகளில் வெளியே வந்தவர் ராஜி கிட்ட ரெடியா இருக்க சொல்லு ஷமீ.போகும்போது கூட்டிட்டு போலாம்னு சொல்லிட்டாரு.
சரி மா என்றவள் தனது தோழிக்கும் விஷயத்தை சொல்லிவிட்டாள்.
பின்னர் தயாராகி வெளியே வந்தவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு காரில் போகும் வழியில் ராஜீ வீட்டினரையும் காரில் ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்றனர்.
அப்புறம் மகி வேலையெல்லாம் எப்படி போகுது என்று ராஜிவின் அப்பா வேதாச்சலம் கேட்க,அட ஏன் வேதா அதை கேட்கிற உசுரு போகுதுடா. பேசாமல் நாலு மாட்டை வாங்கி மேய்ச்சிட்டு வீட்டிலேயே நிம்மதியா இருக்கலாம் போல டா...
அவர்கள் இருவரும் அவர்கள் இருவரின் வேலையை பற்றி பேசிக்கொண்டே வரேன் தாய்மார்கள் இருவரும் அவர்கள் குடும்ப கதையையும், ஷமீ-ராஜி இருவரும் பின்னாடி இருக்கும் சீட்டில் உட்கார்ந்து கொண்டவளுங்கள் வேடிக்கை பார்த்தபடி வந்தனர்.
அரை மணி நேர பயணத்தில் சிதம்பரத்துக்கு வந்து சேர்ந்தனர் சரி நீங்க இருங்க நாங்க பர்சேஸ் முடிச்சுட்டு வரும்போது உங்களை பிக்கப் பண்ணிக்கிறோம் என்று மகி சொல்லவும் ராஜியோ தனது தோழியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏன் ராஜி நீயும் வாயேன் மா.ஷமீக்கு டிரஸ் எடுத்த பிறகு உங்க ரெண்டு பேரையும் இங்க கொண்டு வந்து விடுறேன்.நீங்க முடிச்சிட்டு வாங்க பிறகு ஒன்னாவே நம்ப ஊருக்கு போயிடலாம் என்று மகி சொல்லவும், ராஜி நீயும் ஷமீயும் இங்கு வந்ததும் கால் பண்ணுங்க நானும் அம்மாவும் உள்ளே போறோமென்ற வேதாச்சலம் சொல்ல,சரிங்கப்பா என்றவள் காரில் உட்கார்ந்து கொண்டாள்.
பின்னர் அங்கிருக்கும் பிரபலமான ஜவுளி கடைக்கு அழைத்துப் போனவர் எஸ்தர்- ஷமீராவுக்கு தேவையான துணியை வாங்கி கொடுத்துவிட்டு ராஜீ உனக்கு தேவையானதை வாங்கிக்கோ என்க,எனக்கு ஒன்னும் வேண்டாம்ப்பா. பொங்கலுக்காக நேத்து தான் பர்சேசிங் பண்ணினோமென்றாள்.
அப்படியா சரி வாங்க என்று அவர்களை அழைத்துக் கொண்டு வந்தவர் கோயில் பக்கம் ஒரே கூட்டமாக இருப்பதால் கார் அந்த பக்கம் போகாது என்பதால் சற்று தள்ளியே காரை நிறுத்திய மகி நீங்க ரெண்டு பேரும் போங்க.
முடிச்சிட்டு போன் பண்ணுங்க என்கவும் உள்ளே இருக்கும் சந்தோஷத்தை வெளியே காட்டிக்காத ஷமீ எப்போதும் போல் முகத்தை வைத்துக் கொண்டு ராஜியோடு இறங்கி சென்றாள்..
செழியன் நினைவுகள்:
ஏய் தடிமாடுகளா மணி நாலாக போகுது. எந்திரிச்சு குளிச்சிட்டு வாங்கடா..வந்தது கோயிலுக்கு ஆனா நாலு சென பன்னியும் தூங்க வந்த போல இங்க வந்து தூங்குறீங்க எந்திரிங்கடா என்று நால்வரின் முதுகிலும் ஓங்கி ஒரு அடியை செழியன் வைக்க,அதில் பதறி அடித்து எழுந்தவர்கள் ஏன் டா மாப்பி வாயால சொன்னா நாங்களே எந்திரிக்க மாட்டோமா என்க..செழியனோ அவர்களை முறைத்து பார்த்தான்.
சும்மா மச்சி சோக்கு சோக்கு என்றவனுங்கள் குளித்து தயாராக, பின்னர் ஏழு பேரும் அங்கிருந்து கோயிலுக்கு சென்றனர்.
எங்கு பாத்தாலும் கூட்டமாகவே இருந்தது..
ஒரு வழியாக அந்த கூட்டத்தில் புகுந்து உள்ளே போனவர்கள் தரிசனம் பண்ணுவதற்காக காத்திருக்கும் போது தற்செயலாக வலது பக்கம் திரும்பிய செழியனோ அங்கே வருபவளை பார்த்து அசந்து போனான்
அவளிடமிருந்து அவனால் பார்வையை விளக்க முடியவில்லை,அவள் கூட வரும் தோழியிடம் சிரித்து பேசிக்கொண்டு வருவதை பார்த்தவனுக்கு இதயத் துடிப்புகள் வேகமாக எகரி துடித்தது.
இதுவரை எந்த பெண்ணையும் பார்த்து தோன்றாத உணர்வுகள் எல்லாம் அவளை பார்த்த மாத்திறத்திலேயே வர சுற்றத்தை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,சாமி கும்பிடுவதை விட்டுவிட்டு இதோ வந்துடுறேன் நீங்க கும்பிட்டு வாங்கடா என்று சொல்லிக்கொண்டு நண்பர்கள் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக கூட்டத்தில் இருந்து விலகி அவளை பின் தொடர்ந்து சென்றான்..
இவன் தேடி வந்த பெண்ணோ அவள் தோழியோடு முன்னே போனவள் அங்கிருந்த கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே வரும்போது வேகமாக கூட்டத்தை விலக்கி அவர்களின் அருகில் வந்தான்.
தோழியோடு இருந்தவளோ நீ இங்க பார்த்துக் கொண்டிரு நான் அந்த கடையில் பார்க்கிறேன் என்று பக்கத்து கடைக்கு செல்ல அவள் பின்னாடியே வந்தவன் எஸ்கியூஸ் மி என்க,அதில் திரும்பியவளின் நீண்ட கூந்தலோ அவன் முகத்தில் பட கண்ணை மூடி ரசித்தான்..
இதைப் பார்த்தவளோ இவன் என்ன பைத்தியமா என்று நினைத்துக்கொண்டு கடையினுள்ளே செல்ல பின்னர் சுதாரித்த செழியன் வேகமாக அவளை தேட கடையினுள் இருப்பது தெரிந்தது..
சுற்றி பார்த்துக் கொண்டே போனவன் அவளின் அருகில் சென்று எஸ் கியூஸ் மீ நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா என்க..
திடீரென்று காதின் அருகில் கேட்ட விஷயத்தில் அதிர்ந்து போய் திரும்பியவள் அங்கிருந்தவன் மேலே இடித்து நின்றாள்..
என்னோட பேரு இளஞ்செழியன் ஊர் வனிச்சூர். நாளைக்கு காலையில உனக்காக இந்த கோயிலோட தெற்கு வாசல் பக்கம் காத்திருப்பேன். நீ வரணும் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று அவள் கண்களை பார்த்து சொல்ல..
இவ்வளவு நேரம் அவன் பேசியதை கேட்டு அதிர்வில் இருந்தவளோ எதுவும் சொல்லாமல் அங்கிருந்த தோழியை தேடி சென்று விட,செழியனும் அவளை பாலோ பண்ணிக்கொண்டு தான் வந்தான்.
இதற்கு நடுவில் அவனது நண்பர்களும் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இவனை தேடி வந்தனர்..