Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 417
- Thread Author
- #1
வனிச்சூர்:
நைட் நீ உன் வீட்டுக்காரர் கிட்ட யார் யாருக்கு எவ்வளவு சொத்து பிரிக்க வேண்டும் என்று பேசுனியே எல்லாத்தையும் நான் கேட்டேன்.
உன்னை பொறுத்த வரைக்கும் சுயநலம் சுயநலம் சுயநலம் உன் பையன் உன் பொண்ணு உன் புருஷன் என்ன பிறவியோ நீ எல்லாம்..
உங்களை சந்தித்தை நினைக்க எனக்கு வெக்கமா இருக்கு என்றவள்,என்னங்க கொஞ்சம் வெளியில நடந்துட்டு வரலாமா???
வா என்றவன் மனைவியை நோக்கி கையை நீட்ட அதில் தனது கையை வைக்க,இறுக்கமாக பிடித்த ருத்ரன் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்றான்..
நேரமும் கடந்து செல்ல குற்ற உணர்ச்சி மேலோங்க மானசாவோடு மகியும் ஊருக்கு கிளம்பினார்.
தயாராகி வந்த எஸ்தரோ தனது கையில் இருக்கும் நகைகளை அங்கிருந்த டேபிளின் மேல் வைத்தவர் இது என் கையில் கிடைத்த பணத்தில் சிறுக சிறுக சேர்த்து வைத்து வாங்கியதில் 20 பவுன் இருக்கு.
என்னுடைய ரெண்டு பெண்ணுக்கும் இந்த அம்மாவோட சீதனம்.. நீங்கள் மறுக்காமல் வாங்கிக்கணும் சம்பந்தி. என் உயிர் இருக்கும் வரை என்னால் முடிந்த சீரை இவங்களுக்கு நான் பண்ணிடுறேன்.பெரிய மனது பண்ணி இதை வாங்கிக்கணுமென்றார்.
ஜூலியும் ஷமீராவும் தாய் சொன்னதை கேட்டு கலங்கியவளுங்கள் அம்மா என்றவாறு அழுகையோடு அவரை அணைத்துக் கொண்டனர்.
இது என்னவிதமான பாசமென்று பிரமித்த செல்லதுரை தம்பதிகள், சம்பந்தியம்மா உங்கள் விருப்பம் போல இரண்டு மகளுக்கு பிறக்கும் பேரப்பிள்ளைக்கு இது சீதனமாக இருக்கட்டுமென்றனர்.
சரிங்க பா நாங்க கிளம்புறோம் என்க, நல்லபடியாக போயிட்டு வாங்க பா என்றவர்கள் அவர்களை அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்த செல்லதுரை அம்மாடி ஒருவாய் டீ குடுத்தா என்றவாறு சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தார்.
இதோங்க மாமா என்றவாறு கிச்சனுக்கு போன ஷமீராவும் மாமனார் மாமியாருக்கு டீ போட்டு சிறிது நிமிடத்தில் எடுத்துட்டு வந்து கொடுக்க, உட்காருமா என்று அங்கிருந்து சோபாவை காட்டினார்.
இருக்கட்டும் மாமா என்று நின்று கொண்டிருந்தாள்.ம்ம்..நடந்து போனதை யாராலும் மாற்ற முடியாது சம்பந்தி என்ன சூழ்நிலையில் இருந்தாரோ என்பது அவருக்கு தான் தெரியும்.எட்ட இருந்து பார்க்கிற நமக்கு எது சரி எது தப்புன்னு முழுசா தெரியாது இல்லையா???
இதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காதே.காலம் எல்லா காயத்தையும் ஆத்தும்.நீ சந்தோஷமா இந்த வீட்டில் வாழ்வதில தான் இருக்கு உங்க அம்மாவோட சந்தோஷம்.அது உனக்கு புரியுதுதானே?
மாமனார் சொன்னதைக் கேட்டவள் ஆமாம் மாமா என்று தலையசைத்தாள்.
ராவுக்கு தோசை மட்டும் தான் ஊத்திக்கணும்.கண்மணி வத்த குழம்பும் கறி குழம்பும் கொடுத்து அனுப்பி இருக்கிறாள்.மாமாவுக்கு சாப்பாடு இருக்கு.
தோசை மட்டும் தானே பொறுமையாவே செஞ்சிக்கலாம் நீ போய் கொஞ்ச நேரம் படுத்தா போ என்று வானதி சொல்ல சரிங்கத்தை என்றவள் டீ குடித்த கிளாஸ் எல்லாம் கிச்சனில் கழுவி வைத்துவிட்டு அவளுக்கும் காஃபியை கலந்து எடுத்துக் கொண்டு ரூமிற்குள் வந்தவள் சோபாவில் உட்கார்ந்து குடித்து முடித்தவளின் பார்வையோ அங்கே சுவரில் பெரியதாக மாட்டப் பட்டிருக்கும் போட்டோவில் விழுந்தது. .
அந்த போட்டோவை பார்த்தவளுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு கணவனை சந்தித்த நிகழ்வுகள் மனக்கண்ணில் வந்தது .
அதேபோல் காரில் போய்க் கொண்டிருந்தது செழியனும் தனது போனை பார்க்க அதில் மனைவியுடன் எடுத்த விதவிதமாக போட்டோக்கள் இருக்கவும் ஒவ்வொன்றாக ரசித்து பார்த்துக் கொண்டே வந்தான்.
அப்பொழுது...
அண்ணா ஷமீயையும் கூப்பிட்டு வந்திருக்கலாமே என்று ஜனனி கேட்க, கூப்பிட்டு வந்திருக்கலாம் தாண்டா கேஸ் விஷயமா வரும்போது அவ கூட கண்டிப்பா நேரம் கொடுக்க முடியாது.
உடனே தாம் தூம்னு குதிப்பாள்.
இந்த கேஸ் முடிஞ்சால் கொஞ்சம் பிரேக் கிடைக்கும் இல்லையா,அப்ப ஒரு டூர் பிளான் பண்ணிருக்கேன் என்கவும், அப்படி போடு என்றனர்.
செழியனின் எண்ணங்களும் ஷமீராவை சந்தித்த நாளை நோக்கி ஓடியது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு..
செழியன் நினைவுகள்-வனிச்சூர்:
இன்னும் கொஞ்சம் சோறு யா?
"அய்யோ மா போதும்"
உன் அண்ணன் மகன் இலை காலியாக இருக்கு பாரு அதில் கொட்டு,எனக்கு போதும்.ஆனாலும் என் ஜிகிடி வீராயி வைக்குற போல உனக்கு மீன் குழம்பு வைக்கும் பக்குவம் வரலைமா என்றவாறு எழுந்த செழியன் சாப்பிட்ட இலையை எடுத்து போய் மாட்டுக்கு வைத்தவன் வாய்க்காலில் ஓடும் நீரில் கையை கழுவி வாய் கொப்பளிக்க அவன் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.
இடுப்பில் சொருகியிருந்த போனை எடுத்து பார்த்தவன் அட்டன் பண்ணி ம்.. நாளன்னைக்கு நேர்ல பாக்கலாம் டா...ரெண்டு ரூம் போடு போதும் என்க..
அந்த பக்கமிருந்தவனோ செழியன் சொன்னதை கேட்டு சரி டா என்று அழைப்பை துண்டித்தான்.
யோசனையோடு நடந்து வந்தவனோ அங்கிருந்த மர நிழலில் துண்டை விரித்து படுக்க,ஏ தடி மாடு இப்போ தான் டா சாப்ட,அதுக்குள்ள படுக்குற,எந்திரிடா என்றவாறு வ்வாவ்வ்வ் என்ற பெரிய ஏப்பத்தோடு எழுந்த கண்ணன் உன் கை பக்குவமே தனி வானதி.
அதனால் தான் இன்னும் உன் கூட மாமா குப்பை கொட்டுறார் என்றவாறு கையை கழுக,அண்ணன் மகனை முறைத்த வானதி,அப்படியே உன் நோமனுக்கு கீழ தெருல இருந்து மேல தெரு வரைக்கும் வரிசையா நின்னாளுவோ,இந்த நொய்யா வேண்டும்னு நான் ஒத்த காலில் நின்னேன் பாரேன்...
போனா போகட்டும் அத்தமவன்னு நான் தான் டா கட்டிகிட்டேன். இல்லை தன்ராஜ் மாமா போல கட்டாகாளியாக தான் உன் நோமா சுத்திக்கிட்டு கிடப்பார்.
என்ன என் தலை உருளுது என்றவாறு தரையில் உட்கார்ந்த செல்லதுரைக்கு வாழை இலையை வைத்து அதன் மேல் உணவை பரிமாற,நீ சாப்டியானு மனைவியிடம் கேட்டவாறு சாப்பிட்டார்.
அது எப்படி மாமா நீ சாப்டாம அத்தை சாப்பிடும்?
எனக்கு ரொம்ப வருஷமா ஒரு சந்தேகம் மாமா???
இன்னைக்கு அதை கேட்டு தெரியாமல் விடுவதில்லை.. ஏன் மாமா எதுக்கு இந்த ரவுடி பொம்பளைய கல்யாணம் பண்ணுன?
சொந்தத்தில் தான் அத்தனை அத்தைங்க இருக்காங்களா?அவங்களை எல்லாம் விட்டுட்டு இந்த அம்மாவை கட்ட என்ன காரணம் என்க...
சாப்பிட்டுக் கொண்டிருந்த வானதியோ தனது அண்ணன் மகனை பார்த்து முறைத்தவர்,அலேய் சின்னவனே அந்த சொம்பு எடுத்தேன் மண்டைய பொளந்துடுவேன் டா..
பார்த்தியா மாமா...நீ எவ்வளவு பொறுமைசாலி ஆனால் உனக்கு வாய்த்தது அடங்கா பிடாரி..வேதனை மாமா என்றவாறு வராத கண்ணீரை கண்ணன் துடைக்க..
அந்தக் கொடுமையே என்னத்தடா மாப்பிள்ளை சொல்றது?என் கிரகம் உன் அத்தக்காரி பிறந்த அன்னைக்கே எனக்குன்னு சொல்லிட்டாங்க..
பத்துமாவுக்கும் இவளுக்கும் இரண்டு வயசு தான் வித்தியாசம்.பத்துமா அக்காவை தானே உன் பெரிய மாமனுக்கு கட்டிருக்கு.அப்புறம் ஒரே வீட்ல ரெண்டு பொண்ணு எடுக்க கூடாதுனு சொல்லிட்டாங்க.
மற்றவர்கள் சின்ன பொண்ணா இருக்கு.இல்லைனா பெரிய பொண்ணா இருக்குங்கடா..ஆனா டா வயசு ஆகினாலும் அத்த மகளுங்க இன்னும் அழகு தாண்டா என்று செல்லத்துரை தனது மீசையை தடவிக்கொண்டு சிரிக்க, ஓஓஓஓ..!!!!
"மீசை நரைத்து போனாலும் கிழவனுக்கு ஆசை விடலை போல"
இப்பவும் ஒன்னும் கெட்டு போகலையே, போய் கட்டிக்க வேண்டியது தானே யாரு வேண்டாம் என்று சொன்னாரென வானதி முறைக்க..
அது எப்படி???
நான் ஏகபத்னி விரதனாச்சே.என் குடும்பத்தில் யாராவது இரண்டு பொண்டாட்டி கட்டிருக்காங்களா சொல்லு பாக்கலாம்??
என் பாட்டன் பூட்டன்ல இருந்து என் சித்தப்பா நான் வரைக்கும் ஒரு பொண்டாட்டி தான் கட்டிருக்கிறோம். ஒருவேளை உன் குடும்பத்தில் இருக்கலாம் யாருக்கு தெரியும் என்றார்..
மாமா என்று கண்ணன் முறைக்க அட ஆமா நீ அந்த குடும்பம் தானே மருமகனே,நான் அதை மறந்துட்டேன் டா என்று சிரித்தார்.
ஆமா என் குடும்பத்துல தான் ஆளுக்கு ரெண்டு பொண்டாட்டி வச்சிக்கிட்டு இருக்காங்க இவங்க குடும்பம் அப்படியே யோக்கியம்..ஏன் உங்க சித்தப்பா இன்னமும் வெள்ளையம்மா அத்தையை சுத்தி சுத்தி வரலையா?அந்த சங்கதி எல்லாம் எங்களுக்கு தெரியாதா என்க..
அடியேய் பொறுமையா பேசுடி...
என் சின்னத்தா அங்கதான் நிக்குது பாரு.அது காதில் விழுந்துச்சு என் அப்பனுக்கு(சித்தப்பா) இருக்கிற நாலு மசுரையும் ஆஞ்சு எடுத்துடும் டி..
ம்கும் இல்லன்னா மட்டும் அத்தைக்கு உங்க நொத்தப்பனை பற்றி தெரியாதா என்ற வானதி தனது தாவரங்கட்டையில் முகத்தை இடித்துக் காட்டியப்படி சொல்ல. .
மரத்தின் கீழே படுத்திருந்த செழியன் ஏண்டா நாரதரே உன்னால முடிஞ்சதை இழுத்து விட்டுட்டியா டா..
இப்ப ஏன் அப்புச்சியும் அப்பாயியும் சண்டை புடிச்சுகிட்டு நிக்கணும் நீ கை கட்டி சிரிக்கணும் அப்படித்தானே என்றவன் பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து கண்ணனின் மேல் எறிய..
கல்லும் பொதிரென்று முதுகில் வந்து விழவும் வலியில் ஐயோ என்று கத்தியவன் கொலைகார பாவி ஏன்டா இப்படி என்று திரும்பி செழியனை முறைக்க,எத்திரிச்சி வந்து வாய்லையே மிதிச்சிருக்கணும் டா.போனா போகட்டும்னு இதோட விடுறேன்.
சண்டால பயலே என்னடா வேலை பாக்குற?
உன் வேலையை பாருடா எடுபட்ட பயலே..என் மாமன் கிட்ட நான் பேசுறேன் உன்னை எவன்டா மூக்கை நுழைக்க சொல்றது?,நீ சொல்லு மாமா வயசு பையன்ல எந்தெந்த அத்தையை சைட் அடிச்ச என்கவும்,அதை கேட்டு செல்லதுரைக்கு சிரிப்பு வந்துவிட்டது
வானதியோ கொலைவெறியில் கணவனை முறைக்க,எலே மருமகனே இதெல்லாம் தனியா சொல்ல வேண்டியது.பொறவு சொல்றேன் இல்லை உன் அத்தைகாரி சாமியாடிடுவாள்.
இந்த வயசுல பொண்டாட்டி கோச்சிட்டு போனால் நல்லாருக்காது.அதனால் இந்த பேச்சை இப்போது விடுடா என்றவாறு எழுந்து போய் கையை கழுவியவர்,இன்னைக்குள்ள இந்த வயலை முடிக்க சொல்லு வானதி..
பொம்பளைங்க ஊர் கதைய தான் பேசுதுங்க.. வேலை ஆகுற போல தெரியலை என்றவர்,பக்கத்து வயதில் இருக்கும் நண்பனை பார்க்க சென்றார்.
வீழ்ந்தேனடி....
நைட் நீ உன் வீட்டுக்காரர் கிட்ட யார் யாருக்கு எவ்வளவு சொத்து பிரிக்க வேண்டும் என்று பேசுனியே எல்லாத்தையும் நான் கேட்டேன்.
உன்னை பொறுத்த வரைக்கும் சுயநலம் சுயநலம் சுயநலம் உன் பையன் உன் பொண்ணு உன் புருஷன் என்ன பிறவியோ நீ எல்லாம்..
உங்களை சந்தித்தை நினைக்க எனக்கு வெக்கமா இருக்கு என்றவள்,என்னங்க கொஞ்சம் வெளியில நடந்துட்டு வரலாமா???
வா என்றவன் மனைவியை நோக்கி கையை நீட்ட அதில் தனது கையை வைக்க,இறுக்கமாக பிடித்த ருத்ரன் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்றான்..
நேரமும் கடந்து செல்ல குற்ற உணர்ச்சி மேலோங்க மானசாவோடு மகியும் ஊருக்கு கிளம்பினார்.
தயாராகி வந்த எஸ்தரோ தனது கையில் இருக்கும் நகைகளை அங்கிருந்த டேபிளின் மேல் வைத்தவர் இது என் கையில் கிடைத்த பணத்தில் சிறுக சிறுக சேர்த்து வைத்து வாங்கியதில் 20 பவுன் இருக்கு.
என்னுடைய ரெண்டு பெண்ணுக்கும் இந்த அம்மாவோட சீதனம்.. நீங்கள் மறுக்காமல் வாங்கிக்கணும் சம்பந்தி. என் உயிர் இருக்கும் வரை என்னால் முடிந்த சீரை இவங்களுக்கு நான் பண்ணிடுறேன்.பெரிய மனது பண்ணி இதை வாங்கிக்கணுமென்றார்.
ஜூலியும் ஷமீராவும் தாய் சொன்னதை கேட்டு கலங்கியவளுங்கள் அம்மா என்றவாறு அழுகையோடு அவரை அணைத்துக் கொண்டனர்.
இது என்னவிதமான பாசமென்று பிரமித்த செல்லதுரை தம்பதிகள், சம்பந்தியம்மா உங்கள் விருப்பம் போல இரண்டு மகளுக்கு பிறக்கும் பேரப்பிள்ளைக்கு இது சீதனமாக இருக்கட்டுமென்றனர்.
சரிங்க பா நாங்க கிளம்புறோம் என்க, நல்லபடியாக போயிட்டு வாங்க பா என்றவர்கள் அவர்களை அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்த செல்லதுரை அம்மாடி ஒருவாய் டீ குடுத்தா என்றவாறு சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தார்.
இதோங்க மாமா என்றவாறு கிச்சனுக்கு போன ஷமீராவும் மாமனார் மாமியாருக்கு டீ போட்டு சிறிது நிமிடத்தில் எடுத்துட்டு வந்து கொடுக்க, உட்காருமா என்று அங்கிருந்து சோபாவை காட்டினார்.
இருக்கட்டும் மாமா என்று நின்று கொண்டிருந்தாள்.ம்ம்..நடந்து போனதை யாராலும் மாற்ற முடியாது சம்பந்தி என்ன சூழ்நிலையில் இருந்தாரோ என்பது அவருக்கு தான் தெரியும்.எட்ட இருந்து பார்க்கிற நமக்கு எது சரி எது தப்புன்னு முழுசா தெரியாது இல்லையா???
இதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காதே.காலம் எல்லா காயத்தையும் ஆத்தும்.நீ சந்தோஷமா இந்த வீட்டில் வாழ்வதில தான் இருக்கு உங்க அம்மாவோட சந்தோஷம்.அது உனக்கு புரியுதுதானே?
மாமனார் சொன்னதைக் கேட்டவள் ஆமாம் மாமா என்று தலையசைத்தாள்.
ராவுக்கு தோசை மட்டும் தான் ஊத்திக்கணும்.கண்மணி வத்த குழம்பும் கறி குழம்பும் கொடுத்து அனுப்பி இருக்கிறாள்.மாமாவுக்கு சாப்பாடு இருக்கு.
தோசை மட்டும் தானே பொறுமையாவே செஞ்சிக்கலாம் நீ போய் கொஞ்ச நேரம் படுத்தா போ என்று வானதி சொல்ல சரிங்கத்தை என்றவள் டீ குடித்த கிளாஸ் எல்லாம் கிச்சனில் கழுவி வைத்துவிட்டு அவளுக்கும் காஃபியை கலந்து எடுத்துக் கொண்டு ரூமிற்குள் வந்தவள் சோபாவில் உட்கார்ந்து குடித்து முடித்தவளின் பார்வையோ அங்கே சுவரில் பெரியதாக மாட்டப் பட்டிருக்கும் போட்டோவில் விழுந்தது. .
அந்த போட்டோவை பார்த்தவளுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு கணவனை சந்தித்த நிகழ்வுகள் மனக்கண்ணில் வந்தது .
அதேபோல் காரில் போய்க் கொண்டிருந்தது செழியனும் தனது போனை பார்க்க அதில் மனைவியுடன் எடுத்த விதவிதமாக போட்டோக்கள் இருக்கவும் ஒவ்வொன்றாக ரசித்து பார்த்துக் கொண்டே வந்தான்.
அப்பொழுது...
அண்ணா ஷமீயையும் கூப்பிட்டு வந்திருக்கலாமே என்று ஜனனி கேட்க, கூப்பிட்டு வந்திருக்கலாம் தாண்டா கேஸ் விஷயமா வரும்போது அவ கூட கண்டிப்பா நேரம் கொடுக்க முடியாது.
உடனே தாம் தூம்னு குதிப்பாள்.
இந்த கேஸ் முடிஞ்சால் கொஞ்சம் பிரேக் கிடைக்கும் இல்லையா,அப்ப ஒரு டூர் பிளான் பண்ணிருக்கேன் என்கவும், அப்படி போடு என்றனர்.
செழியனின் எண்ணங்களும் ஷமீராவை சந்தித்த நாளை நோக்கி ஓடியது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு..
செழியன் நினைவுகள்-வனிச்சூர்:
இன்னும் கொஞ்சம் சோறு யா?
"அய்யோ மா போதும்"
உன் அண்ணன் மகன் இலை காலியாக இருக்கு பாரு அதில் கொட்டு,எனக்கு போதும்.ஆனாலும் என் ஜிகிடி வீராயி வைக்குற போல உனக்கு மீன் குழம்பு வைக்கும் பக்குவம் வரலைமா என்றவாறு எழுந்த செழியன் சாப்பிட்ட இலையை எடுத்து போய் மாட்டுக்கு வைத்தவன் வாய்க்காலில் ஓடும் நீரில் கையை கழுவி வாய் கொப்பளிக்க அவன் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.
இடுப்பில் சொருகியிருந்த போனை எடுத்து பார்த்தவன் அட்டன் பண்ணி ம்.. நாளன்னைக்கு நேர்ல பாக்கலாம் டா...ரெண்டு ரூம் போடு போதும் என்க..
அந்த பக்கமிருந்தவனோ செழியன் சொன்னதை கேட்டு சரி டா என்று அழைப்பை துண்டித்தான்.
யோசனையோடு நடந்து வந்தவனோ அங்கிருந்த மர நிழலில் துண்டை விரித்து படுக்க,ஏ தடி மாடு இப்போ தான் டா சாப்ட,அதுக்குள்ள படுக்குற,எந்திரிடா என்றவாறு வ்வாவ்வ்வ் என்ற பெரிய ஏப்பத்தோடு எழுந்த கண்ணன் உன் கை பக்குவமே தனி வானதி.
அதனால் தான் இன்னும் உன் கூட மாமா குப்பை கொட்டுறார் என்றவாறு கையை கழுக,அண்ணன் மகனை முறைத்த வானதி,அப்படியே உன் நோமனுக்கு கீழ தெருல இருந்து மேல தெரு வரைக்கும் வரிசையா நின்னாளுவோ,இந்த நொய்யா வேண்டும்னு நான் ஒத்த காலில் நின்னேன் பாரேன்...
போனா போகட்டும் அத்தமவன்னு நான் தான் டா கட்டிகிட்டேன். இல்லை தன்ராஜ் மாமா போல கட்டாகாளியாக தான் உன் நோமா சுத்திக்கிட்டு கிடப்பார்.
என்ன என் தலை உருளுது என்றவாறு தரையில் உட்கார்ந்த செல்லதுரைக்கு வாழை இலையை வைத்து அதன் மேல் உணவை பரிமாற,நீ சாப்டியானு மனைவியிடம் கேட்டவாறு சாப்பிட்டார்.
அது எப்படி மாமா நீ சாப்டாம அத்தை சாப்பிடும்?
எனக்கு ரொம்ப வருஷமா ஒரு சந்தேகம் மாமா???
இன்னைக்கு அதை கேட்டு தெரியாமல் விடுவதில்லை.. ஏன் மாமா எதுக்கு இந்த ரவுடி பொம்பளைய கல்யாணம் பண்ணுன?
சொந்தத்தில் தான் அத்தனை அத்தைங்க இருக்காங்களா?அவங்களை எல்லாம் விட்டுட்டு இந்த அம்மாவை கட்ட என்ன காரணம் என்க...
சாப்பிட்டுக் கொண்டிருந்த வானதியோ தனது அண்ணன் மகனை பார்த்து முறைத்தவர்,அலேய் சின்னவனே அந்த சொம்பு எடுத்தேன் மண்டைய பொளந்துடுவேன் டா..
பார்த்தியா மாமா...நீ எவ்வளவு பொறுமைசாலி ஆனால் உனக்கு வாய்த்தது அடங்கா பிடாரி..வேதனை மாமா என்றவாறு வராத கண்ணீரை கண்ணன் துடைக்க..
அந்தக் கொடுமையே என்னத்தடா மாப்பிள்ளை சொல்றது?என் கிரகம் உன் அத்தக்காரி பிறந்த அன்னைக்கே எனக்குன்னு சொல்லிட்டாங்க..
பத்துமாவுக்கும் இவளுக்கும் இரண்டு வயசு தான் வித்தியாசம்.பத்துமா அக்காவை தானே உன் பெரிய மாமனுக்கு கட்டிருக்கு.அப்புறம் ஒரே வீட்ல ரெண்டு பொண்ணு எடுக்க கூடாதுனு சொல்லிட்டாங்க.
மற்றவர்கள் சின்ன பொண்ணா இருக்கு.இல்லைனா பெரிய பொண்ணா இருக்குங்கடா..ஆனா டா வயசு ஆகினாலும் அத்த மகளுங்க இன்னும் அழகு தாண்டா என்று செல்லத்துரை தனது மீசையை தடவிக்கொண்டு சிரிக்க, ஓஓஓஓ..!!!!
"மீசை நரைத்து போனாலும் கிழவனுக்கு ஆசை விடலை போல"
இப்பவும் ஒன்னும் கெட்டு போகலையே, போய் கட்டிக்க வேண்டியது தானே யாரு வேண்டாம் என்று சொன்னாரென வானதி முறைக்க..
அது எப்படி???
நான் ஏகபத்னி விரதனாச்சே.என் குடும்பத்தில் யாராவது இரண்டு பொண்டாட்டி கட்டிருக்காங்களா சொல்லு பாக்கலாம்??
என் பாட்டன் பூட்டன்ல இருந்து என் சித்தப்பா நான் வரைக்கும் ஒரு பொண்டாட்டி தான் கட்டிருக்கிறோம். ஒருவேளை உன் குடும்பத்தில் இருக்கலாம் யாருக்கு தெரியும் என்றார்..
மாமா என்று கண்ணன் முறைக்க அட ஆமா நீ அந்த குடும்பம் தானே மருமகனே,நான் அதை மறந்துட்டேன் டா என்று சிரித்தார்.
ஆமா என் குடும்பத்துல தான் ஆளுக்கு ரெண்டு பொண்டாட்டி வச்சிக்கிட்டு இருக்காங்க இவங்க குடும்பம் அப்படியே யோக்கியம்..ஏன் உங்க சித்தப்பா இன்னமும் வெள்ளையம்மா அத்தையை சுத்தி சுத்தி வரலையா?அந்த சங்கதி எல்லாம் எங்களுக்கு தெரியாதா என்க..
அடியேய் பொறுமையா பேசுடி...
என் சின்னத்தா அங்கதான் நிக்குது பாரு.அது காதில் விழுந்துச்சு என் அப்பனுக்கு(சித்தப்பா) இருக்கிற நாலு மசுரையும் ஆஞ்சு எடுத்துடும் டி..
ம்கும் இல்லன்னா மட்டும் அத்தைக்கு உங்க நொத்தப்பனை பற்றி தெரியாதா என்ற வானதி தனது தாவரங்கட்டையில் முகத்தை இடித்துக் காட்டியப்படி சொல்ல. .
மரத்தின் கீழே படுத்திருந்த செழியன் ஏண்டா நாரதரே உன்னால முடிஞ்சதை இழுத்து விட்டுட்டியா டா..
இப்ப ஏன் அப்புச்சியும் அப்பாயியும் சண்டை புடிச்சுகிட்டு நிக்கணும் நீ கை கட்டி சிரிக்கணும் அப்படித்தானே என்றவன் பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து கண்ணனின் மேல் எறிய..
கல்லும் பொதிரென்று முதுகில் வந்து விழவும் வலியில் ஐயோ என்று கத்தியவன் கொலைகார பாவி ஏன்டா இப்படி என்று திரும்பி செழியனை முறைக்க,எத்திரிச்சி வந்து வாய்லையே மிதிச்சிருக்கணும் டா.போனா போகட்டும்னு இதோட விடுறேன்.
சண்டால பயலே என்னடா வேலை பாக்குற?
உன் வேலையை பாருடா எடுபட்ட பயலே..என் மாமன் கிட்ட நான் பேசுறேன் உன்னை எவன்டா மூக்கை நுழைக்க சொல்றது?,நீ சொல்லு மாமா வயசு பையன்ல எந்தெந்த அத்தையை சைட் அடிச்ச என்கவும்,அதை கேட்டு செல்லதுரைக்கு சிரிப்பு வந்துவிட்டது
வானதியோ கொலைவெறியில் கணவனை முறைக்க,எலே மருமகனே இதெல்லாம் தனியா சொல்ல வேண்டியது.பொறவு சொல்றேன் இல்லை உன் அத்தைகாரி சாமியாடிடுவாள்.
இந்த வயசுல பொண்டாட்டி கோச்சிட்டு போனால் நல்லாருக்காது.அதனால் இந்த பேச்சை இப்போது விடுடா என்றவாறு எழுந்து போய் கையை கழுவியவர்,இன்னைக்குள்ள இந்த வயலை முடிக்க சொல்லு வானதி..
பொம்பளைங்க ஊர் கதைய தான் பேசுதுங்க.. வேலை ஆகுற போல தெரியலை என்றவர்,பக்கத்து வயதில் இருக்கும் நண்பனை பார்க்க சென்றார்.
வீழ்ந்தேனடி....