• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
414
டெல்லி பிரதமர் அலுவலகம்:

சார் உங்களை பார்க்க வசுந்தரா சுந்தரபாண்டியன் மேடம் வந்திருக்காங்களென்று பிரதமரின் உதவியாளர் சொல்லவும்,ஹம் வரச்சொல்லுங்க என்றவரோ கையிலிருந்த பைலை படிக்க தொடங்கினார்.

சிறிது நொடிகள் சென்று குட் மார்னிங் சார் என்கும் கம்பீரமான குரலை கேட்டு நிமிர்ந்து பார்த்தவர் வாங்க...

"உட்காருங்கள்"

தேங்க்யூ சார் என்றவாறு சேரில் உட்கார்ந்தவர் தான் கையோடு எடுத்து வந்த பைலை நீட்டவும்,அமைதியான புன்னகையுடன் வாங்கிய பிரதமர்,கேஸ் குளோஸ் அவ்வளவு தானே என்றவாறு பைலை திறந்து படித்து முடித்தபின் கையெழுத்திட்டார்.

இது தான் உங்களுடைய லாஸ்ட் கேஸ் இல்லையா?

எஸ் சார்..

ஹம்..

உங்களை போன்ற வீராங்கனைகள் நம் நாட்டிற்கு மிகமிக அவசியம்.மூன்று தலைமுறையாக உங்கள் குடும்பம் நம் நாட்டிற்கு சேவை செய்கிறீர்கள் இன்னும் அது தொடரணும்.

"கண்டிப்பாகங்க சார் என்றவாறு எழுந்து வணக்கம் வைத்த வசுந்தரா பைலோடு வெளியே வந்தவர் அடுத்து என்னனென்ன பண்ண வேண்டும் என்பதை ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததால் அதன்படி யார் யாருக்கு என்னென்ன இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கணுமோ அத்தனையும் கொடுத்தவர் எந்த காரணம் கொண்டும் இந்த மிஷன் வெளியே தெரியக்கூடாது என்று கண்டிப்பாக சொல்ல எஸ் மேடம் என்றனர்..

ஓகே என்றவர் அமர்நாத் உன்னோட ஆட்டம் முடியப்போகுது.எத்தனை கோயிலுக்கு போனாலும் உன் பாவம் தீராது.

இனி உன் பணமும் இப்போ போக போற கடவுளும் உன்னை காப்பாற்ற போவதில்லை என்று மனதிற்கு சொல்லிக் கொண்டவர் மூவருக்கும் கால் பண்ணினார்..

அப்பொழுது தான் தூங்கி எழுந்து ப்ரஷாகி ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வெற்றி,செழியன், கபிலன் மூவருக்கும் வசுந்தராவிடமிருந்து கான்ப்ரன்ஸ் கால் வர,அதான நாம கொஞ்சம் சந்தோஷமா இருந்தால் இந்த மேடம்கு மூக்கு வேர்த்துவிடுமே என்றவாறு அட்டென் பண்ணினானுங்கள்.

என்ன பாய்ஸ் என்ஜாய்மெண்ட் முடிந்ததா?

அதான் வயிறு எரிந்து கால் பண்றிங்களேங்கத்தை என்று கபிலன் சிரிக்க...ஹாஹாஹா என்றவர் அவனுங்களிடம் விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு எஸ் மேடம் என்றவனுங்கள் அழைப்பை துண்டித்தனர்.

வீட்டிலிருந்தவர்களோ அவர்கள் முகத்தை பார்த்து என்ன ஆச்சு என்கவும்,இவனுங்க விஷயத்தை சொல்ல அப்படியா உடனே புறப்படுங்கள் பா.

அசுரனை வேட்டையாட வேண்டிய நேரம் வந்துடுச்சி,நல்லபடியாக முடிச்சிட்டு வாங்க பா என்கவும் சரியென்றானுங்கள்.

நான் வீட்டுக்கு போயிட்டு ரெடியாகி வரேனென்ற செழியனிடம் இரு அப்பு உன் அத்தை டீ தண்ணி வக்கிது குடிச்சிட்டு போயா என்க..

இருக்கட்டும் அம்மாச்சி என்றவாறு வெளியே வந்தவன் தனது புல்லட்டில் ஏறி வீட்டை நோக்கிச் சென்றான்.

செழியன் வீடு:

எஸ்தர் உள்ளே போகாமல் வெளியேவே நின்று விட்டு மகளிடம் வந்து விட நேரமும் கடந்து செல்ல மானசாவிற்கு விழிப்பு வந்தது.

அதை பார்த்த தீபன் ஆண்ட்டி இப்போது எப்படி இருக்கென்று அவரின் கையை பிடித்து பல்ஸ் செக் பண்ண..
எட்டி தீபனின் கன்னத்தை தடவியவர் நீங்கள் இந்த உலகத்தில் இருந்தும் இத்தனை வருஷம் தெரியலையே என்று அழுக...

ஏய் மானசா....!

"திரும்ப ஆரம்பிக்காத"நம்ப பொண்ணை பார்க்கலாம் வா என்க...பட்டுஊஊஊ என்றவாறு எழுந்தவர் வேகமாக ஹாலுக்கு வர அங்கே எஸ்தரின் மடியில் ஜூலி படுத்திருக்க,இடது பக்க தோளில் ஷமீரா சாய்ந்திருந்தாள்.

இதை பார்த்த மானசாவிற்கு எஸ்தரின் மேல் பொறாமை வந்தது..அந்த கடுப்பில் பட்டுஊஊஊ என்று கத்த, கண்ணை மூடி படுத்திருந்தவளோ அந்த சத்தத்தில் பதறியடித்து எழவும்,ஆண்ட்டி என்ற ருத்ரன் ஷீ ஈஸ் மை வைப்...

எதுக்கு இப்படி கத்துறிங்க?.

இங்கே தானே இருக்கிறாள் என்றவாறு மனைவிடம் வந்து அவளின் தோளில் கையை போட்டவன்,உனக்கு இவங்க கிட்ட இப்போது பேசியே ஆகணுமா டி?

கணவனின் கண்டன குரலை கேட்டவள் ஹம்... ஆம் ஆல் ரைட் என்றவாறு ருத்ரனின் கையை பிடித்தவள் ம்ம் சொல்லுங்க?.ஏற்கனவே கல்யாணம் ஆகி உங்களுக்கு குழந்தை இருக்கும் போது எதற்காக அதை மறைத்து எங்கம்மாவை இரண்டாவது கல்யாணம் பண்ணுனிங்க? சொல்லுங்க டேட்?

ஏய் அர்ச்சனா(ஜூலிக்கு அவள் அம்மா வைத்த பெயர்)என்னை தான் டி உங்க டேட் முதலில் மேரேஜ் பண்ணியதென்று கோவமாக மானசா சொல்ல...

நான் உங்களை பற்றி கேட்கவில்லை!

என்னுடைய எஸ்தர் அம்மாவை பற்றி கேட்கிறேன் என்கவும்,ஜூலி சொன்னதை கேட்ட மானசா உன்னை பத்து மாதம் சுமந்து பெத்தவள் நான்.
எதோ மூணாவது மனுஷன் போல பேசுறியே டி...

அதான குடும்பமாக வளர்ந்திருந்தால் உனக்கு அம்மா அப்பா என்ற பாசமிருக்கும்.நீ தான் அனாதை நாயாக ஆசிரமத்தில் வளர்ந்திருக்கியே உனக்கு எங்கே டி எங்கள் அன்பு புரியப்போகுதுனு வாயை மூடுவதற்குள், மானசாஆஆ என்று கத்திய மகியோ அத்தனை பேருக்கு முன்னாடியே பளார் பளாரென்று அறைந்தவர் ச்சை...நீயெல்லாம் தாயா டி?

அவள் பத்து மாசம் சுமக்களை,ஆனால் எதோ ஒரு சூழலில் தாயா மாறியிருக்காள்.அது தான் டி தாய் பாசம்.

ஆனால் நீ?.

மானசாவோ கணவரை அதிர்ந்து போய் பார்க்க..

மோசமான பேய் டி...

உன்னை பார்க்கவே அருவருப்பாக இருக்கு..

உன்னோட எண்ணம் என்ன தெரியுமா எங்கே எஸ்தர் மீண்டும் என் வாழ்க்கையில் வந்துருவாளோனு...சரி தான?.ம்கும்...

என் பொண்டாட்டி உன்னை போல யார் கூட வேண்டுமானாலும் புருஷனை பங்கு போடும் ஆளில்லை டி. 26 வருஷத்துக்கு முன்பு நான் கட்டிய தாலி அவள் கழுத்தில் இல்லாத போதே அவளை பொறுத்தவரை நான் செத்துட்டேன் பார்த்த உடனே புரிந்து கொண்டேன்..

நானில்லை,இனி யார் சொன்னாலும் என் பொண்டாட்டி என் கூட வாழ மாட்டாள்,போதுமா.இனி உனக்கு நிம்மதி தானே?. என் வாழ்க்கையில் இவ்வளவு நடக்க நீ ஒருத்தி மட்டுமே காரணம்...

ஒழுங்கு மரியாதையா வாயை மூடிக்கொண்டு இரு..இல்லை என்று மகி பல்லை கடிக்க...,

டேடி...

உங்க ரெண்டு பேருடைய நாடகத்தை நிறுத்துங்கள்... நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கள் அது போதுமென்ற ஜூலியோ தனது தந்தையை பார்க்க...

மகி தனது சின்ன மகளை பார்க்கவும்...இது எனக்கு தேவையில்லாத ஒன்றென்று நினைத்த ஷமீராவோ அங்கிருந்து மேலே செல்ல...

போகும் மகளை குற்ற உணர்ச்சியோடு பார்த்தவர் தன்னை நிதானம் பண்ணிக்கொண்டு டெல்லியில் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சென்னைக்கு வந்ததும் தாயிற்கு இந்த விஷயம் தெரிந்து பிரச்சினை ஆனது வரை சொல்லியர் அடுத்ததை சொல்ல முடியாமல் இப்போது தடுமாறினார்.

இதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஜூலி,பிறகு நடந்ததை சொல்லுங்கள் டேடி...

ம்ம் என்றவர் மானாசாவின் முடிவால் விருப்பமின்றி தனது தம்பி காதலித்த அத்தை மகளை குற்ற உணர்ச்சியோடு கல்யாணம் பண்ணியதும்,அவரோடு வாழ விருப்பம் இல்லாமல் இரண்டு வருடங்களாக சண்டை வம்பென்று நாட்களை கடத்த, எஸ்தருக்கு குழந்தை இல்லை என்பதை சுட்டிக்காட்டி தனது தாய் கொடுமை படுத்துவது தெரிந்து அதன் பின்னர் மனைவியாக மனம் ஏற்றுக் கொண்டு வாழ்ந்ததை சொல்லி முடிக்க...எஸ்தரும் ஜூலியும் அற்ப புழுபோல மகியையும் மானசாவையும் பார்க்க..அவர்களோ கீழே குனிந்து கொண்டனர்.

ச்சை எவ்வளவு பெரிய சுயநலவாதி. ...

உங்க அம்மா ஆசைப்பட்டாங்க என்பதற்காக என் வாழ்க்கையை கெடுக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தாங்கள்?

ம்கும் ஆம்பிள்ளை தானே.

ஆயிரம் பெண்ணை கட்டிக் கொண்டாலும் இல்லை வைத்துக் கொண்டாலும் குற்றமில்லை இல்லையா?.

எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம எப்படி இத்தனை வருஷம் என் கூட வாழ முடிஞ்சதுன்னு நினைச்சு பார்க்க என்னாலே ஜீரணிக்க முடியவில்லை.

பரவாயில்லை காலம் கடந்தே உண்மை தெரிஞ்சிருக்கு என்றவாறு மகளை தேடி எஸ்தர் செல்ல,பட்டு கிட்டுனு தயவுசெய்து என்னை தேடி வராதிங்க..

இதையெல்லாம் மறந்து உங்களை அப்பா அம்மாவாக ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு நான் வந்த பிறகு உங்களை தேடி வரேன்...

ஆனால் எப்போதும் எனக்கு அம்மா என்றால் அது எஸ்தர் அம்மா இதில் எந்த மாற்றமும் இல்லை என்ற ஜூலியோ வாங்க போகலாமென்று கீழே இருக்கும் அவர்கள் அறையை நோக்கி கணவனோடு சென்றாள்..

முகத்தை மூடிக்கொண்டு மானசா கதறி அழவும்,மகியோ அதை கண்டுகொள்ளவில்லை..

ரூமிற்குள் வந்த ஜூலியோ தனது கணவனை இறுக்கி அணைக்க,நீ பேசியது சரி டி.இதோட விட்டுறு.நான் இருக்கிறேன் இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு குழைந்த வர போகுது இந்த சொந்தம் போதாதா?

"எஸ்தர் அம்மா பாவங்க"

திட்டமிட்டு அவங்க வாழ்க்கையில் இப்படி துரோகம் பண்ணிருக்காங்களே??இனி ஷமீயும் அம்மாவும் என்னை பழைய போல பார்ப்பார்களா??என் யோசனை இப்போதைக்கு இதுதாங்க..

ஏய் பைத்தியம்...

அத்தையும் ஷமீராவும் மாற வாய்ப்பேயில்லை டி என்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்க,நான் பார்க்கிறேனென்ற ருத்ரனோ கதவை திறக்க,அங்கே ஷமீரா தான் நின்றிருந்தாள்.

மாமா,அக்காவை கூப்பிட்டு சாப்பிட வாங்க..இவ்வளவு நேரம் வரைக்குமா பட்னியா இருப்பது??

எல்லாருக்கும் உங்க தம்பி தான் சாப்பாடு எடுத்து வந்தார் வாங்க.

சரி மா..

நீ எடுத்து வை..

அத்தைக்கு?

டைனிங் ஹால்ல தான் இருக்காங்க மாமா என்றவாறு ஷமீரா திரும்பி போக,நான் சொன்னேனடி...வா என்றவாறு மனைவியை அழைத்துக்கொண்டு அங்கு வர மனமேயின்றி கடமைக்கு சாப்பிட்டு எழுந்தனர்...

யார் என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க நான் வந்தே தான் தீருவேன் என்று கிழக்கே ஆதவனும் உதயமாக ஆரம்பமானான்..

காலிங் பெல் சத்தம் கேட்டு வேகமாக போய் கதவை திறந்தவள் அங்கிருந்த கணவனைப் பார்த்து வந்து விட்டீர்களா என்ற போது அவள் முகமோ ஆயிரம் வாட்ஸ் பல்புகள் போல பிரகாசிக்க,
என்ன டி சண்டி ராணி..

புருஷனை ரொம்ப தேடுனியா என்றவாறு உள்ளே வந்தவன் டீ எடுத்துட்டு நம்ப ரூமிற்கு வா என்று சொல்லிக் கொண்டு மேலே இருக்கும் அறைக்கு சென்று விட்டான்
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
414
கிச்சனிற்கு வந்தவளோ ஏற்கெனவே வைத்திருந்த டீயில் இஞ்சி ஏலக்காய் தட்டி போட்டு கொதிக்க வைத்து இறக்கியவள் டம்ளரில் எடுத்துக் கொண்டு மாடியில் இருக்கும் ரூம் கதவை திறந்து போக,செழியனும் ரெஸ்ட் ரூமிலிருந்து ப்ரஷாகி வெளியே வந்தவன்,மனைவியின் புடவை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு டீயை வாங்கி குடித்தவன், செல்லம் உடனே நான் டெல்லி கிளம்பணும் டி...

"ஹையர் ஆபிசர் ஆர்டர்"

சோ...

கேஸ் முடித்து நான் வர ஒன் வீக் மேல ஆகும்.அதுக்கு தேவையான டிரஸ் பேக் பண்ணு டி என்றவாறு மனைவியை இழுத்து மடியில் உட்கார வைத்தவன், இத்தனை வருஷமாக இந்த நாளுக்காக தான் டி காத்திருந்தேன்.

"அதற்கான நேரம் வந்துவிட்டது"

உனக்கு இங்கு இருக்க போர் அடித்தால் நீ தாத்தா வீட்டில் போய் இரு.அம்மாவும் இதான் சொல்வாங்க...

சீக்கிரம் வந்துடுறேன் சரியா என்றவாறு மனைவியின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்தபடி கேட்க..

கணவன் இவ்வளவு நேரம் சொன்னதையெல்லாம் கேட்டவளோ ம்கும்... இப்படி பண்ணிக்கிட்டு கேட்டால் என்னாத்த சொல்லுவது???என்று முணுமுணுக்க...

ஓய்...!!!

என்னடி முணவுற?

வாயை திறந்து சொன்னால் தானே தெரியுமென்று மனைவியின் காதை செல்லகடி கடித்தவாறு கேட்க..

யோவ் போலீஸ்...

சும்மா இரு யா...

என்னை விட்டால் தானே உங்களுக்கான டிரஸை பேங்கிங் பண்ண முடியும்?

ம்ம்..அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான வேலை இருக்கு டி...

மாமா வர ஒன் வீக் ஆகும் சோ என்றவாறு மனைவியின் இதழ்களை சிறைபிடித்தவன் பின் வாக்கிலேயே பெட்டில் சரிந்தான்.

ஜூலி, ருத்ரன்,ரூபா, மூணு பேரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த மகி,பட்டு உன் தங்கச்சி எங்கே?

"கூப்பிடு"

உங்கள் ரெண்டு பேய்கிட்டயும் நான் பேசணும் என்றவாறு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவர் வழக்கம் போல எஸ்தர் டீ கொண்டு வா என்க..

சற்று தள்ளி நின்ற மானசாவிற்கும் கிச்சனில் இருந்த எஸ்தருக்கும் இது காதில் விழுந்தது...

வேகமாக உள்ளே போன மானசா,நீங்கள் வீட்டை விட்டு போனதிலிருந்து அவருக்கு என் பெயரே மறந்து விட்டது.எதற்கு எடுத்தாலும் எஸ்தர் எஸ்தர்னு உங்கள் பெயரை தான் சொல்றார்.இதற்காக நானும் சண்டை போட்டேன்.. இப்பவும் அவர் உங்களை தான் கூப்பிடுறார் பாருங்களேன்.

எஸ்தரோ எதுவும் சொல்லாமல் டீயை வடிகட்டி மானாசாவின் முன்பு நீட்ட,அவரோ திகைத்தவாறு வாங்கியவர் கணவருக்கு டீ யை கொண்டு போய் நீட்டினார்.

வாங்கி ஒரு வாய் குடித்தவருக்கு எஸ்தர் போட்ட டீ என்பது தெரிந்து திரும்பி கிச்சனை பார்க்க அங்கே வெறுமையான வாசல் அவரை பார்த்து இளக்காரமாக சிரித்தது...

தலையை துவட்டிக் கொண்டே மனைவியை பார்த்து கண்ணடிக்க,ஷமீராவோ கணவனை முறைத்தாள்.

என்ன டி லுக்..?

டைமாகுது சீக்கிரமா டிபன் ரெடி பண்ணு போடி என்றவாறு மேலே போர்த்தியிருந்த டவலை எடுக்க, ஐயோஓஓஓ என்றவாறு கதவை திறந்து வெளியே ஓடும் மனைவியை பார்த்து சத்தமாக சிரித்தவன் பின்னர் தயாரானான்.

கீழே வந்த ஷமீராவோ சங்கடமாக கிச்சனிற்குள் வர,அங்கிருந்த ரூபாவோ ஷமீ டிபனை கொண்டு போய் டேபிளில் வை.இன்னும் ரெண்டு தோசை தான் நான் முடிச்சிடுறேன்..

சரிங்கண்ணி என்றவள் ஹாட்பாக்ஸை கொண்டு போய் டைனிங் டேபிளில் வைக்க சிறிது நிமிடத்தில் ஷூ-வின் டக் டக்கென சத்தம் கேட்டு திரும்ப, கம்பீரமாக இறங்கி வந்த செழியனை கண்ட மகியோ வாயை பிளந்து பார்க்கவும்,மௌனமாக சிரித்துக்கொண்டே வந்தவன் "ஷமீரா" என்க...

இதோங்க என்றவாறு வந்தவள் டிபனை பரிமாற,சாப்பிட்டு முடித்தவன் ருத்ரன்-தீபனிடம் டெல்லிக்கு போகும் விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போது இரண்டு தாத்தாக்களும் குடும்பமாக வந்தனர்.

கண்ணு என்ற வீரையன் தாத்தா பூஜையறைக்கு செல்ல ஷூவை கழட்டியவன் சாமியறைக்கு முன்பு கை கூப்பி நிற்க,சூடத்தை ஏற்றி சாமிக்கு காட்டி விட்டு வெளியே வந்தவர் நீ தொட்டகாரியம் அத்தனையும் நம்ப மலையாத்தா புண்ணியத்தில் வெற்றியாக முடியட்டுமென்று விபூதி குங்குமத்தை செழியனோடு மற்றவர்களுக்கும் பூசி விட்டார்.

ஆசீர்வாதம் பண்ணு அப்புச்சி என்றவாறு தாத்தா பாட்டி காலில் விழுந்தவனை தூக்கி விட்டனர்.

அதே போல தனது தாய்வழி தாத்தா பாட்டி காலில் விழ அவர்களும் ஆசீர்வாதம் பண்ண...

சரி நாங்க கிளம்புறோம்.

பத்திரமாக இருங்களென்க...

ஏலேய் இது வைரம் பாய்ந்த தேக்கு டா வந்துட்டான் இப்போது எங்களுக்கு கூறு சொல்ல..போடா விளக்கெண்ணெய் என தம்புசாமி தாத்தா திட்ட...

தாத்தாஆஆஆஆ என்று பல்லை கடித்தான்..

அப்பொழுது மகனைப் பார்த்த செல்லதுரை அவனது மாமனாரிடம் சொல்லிட்டு போக சொல்ல,எதுக்கு பா என்றான்.

"ம் என கண்டிப்போடு பார்த்தார்"

மகியிடம் போனவன் சரிங்க மாமா நான் கிளம்புகிறேன் என்க,அவனது கம்பீரத்திலே பாதி அடி வாங்கியிருந்தவர் இப்பொழுது அவனின் கணீரென்ற குரலில் தன்னையும் அறியாமல் காட் பிளஸ் யூ மாப்பிள்ளை என்க...

தேங்க்யூ மாமா என்றவாறு எஸ்தரிடம் வந்தவன் அனாவசியமாக மனசை போட்டு குழப்பிக்காதிங்கத்தை.
என்றைக்கு இருந்தாலும் ஜூலி-ஷமீரா இருவருக்கும் நீங்க அம்மா அதை யாராலும் மாற்ற முடியாது என்றவனோ அங்கிருந்த மானசா மற்றும் மகியை பார்த்தவன்,தாய் புள்ள உறவு பெத்து எடுத்தா தான் என்பது கிடையாது.

"தாயென்று உணர்வும் அம்மா என்ற எண்ணமும் அவங்கவங்க மனசுல இருந்தா போதும்".

நான் போயிட்டு வரேங்கத்தை,ஹம் நீங்கள் நல்லபடியா போயிட்டு வாங்க மாப்பிள்ளை என்றவாறு சந்தோஷத்தில் எஸ்தர் கண்கலங்க..

மானசாவை பார்த்தவன் ம்கும் என்று தொண்டை கணைத்து உடம்பை பார்த்துக்கோங்க அத்தை.என்ன நடக்கணுமோ அது நடந்து தான் தீரும் நடந்ததை பேசி ஒன்னும் புண்ணியம் இல்லை ஃப்ரீயா விடுங்க...

அவரும் சரி பா என்று தலையசைத்தார்.

ஷமீராவோ கணவனை பரிதவிப்போடு பார்த்துக் கொண்டிருக்க, வேண்டாம் என்று தலையசைத்தவனை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது.

அடி வாங்குவடி என்று விரலைக் காட்டி சொல்ல கண்ணீர் வடிய வலுக்கட்டாயமாக வர வைத்த சிரிப்பில் கணவனை பார்க்க,அதில் தன்னை தொலைத்தவன் சிரித்தவாறு காரில் ஏறி கடமையை நிறைவேற்ற புறப்பட்டான்.

கண்ணிலிருந்து கார் மறையும் வரைக்கும் வாசலில் நின்றிருந்தவள் உள்ளே போனாள்.

அப்பொழுது...

சம்பந்தி என்னோட ரெண்டு பொண்ணுங்களும் ஒரே வீட்டில் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்காங்க.அவங்களுக்கு செய்ய வேண்டிய எதையுமே நான் முறைப்படி இதுவரைக்கும் செய்யலை.

"இப்போதைக்கு பெத்தவனா என்னுடைய கடமையை நான் செய்ய விரும்புகிறேன்"

அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அங்கு இருப்பவர்களை பார்த்து மகி சொல்ல...

இங்க பாருங்க சம்பந்தி நம்ம கிட்ட இன்னும் நாலு தலைமுறைக்கு தேவையான சொத்து இருக்கு.என் குடும்பத்தில் பொண்ணு எடுத்ததும் சரி பொண்ணு கொடுத்ததும் சரி அது வேணும் இது வேணும்னு நாங்க இதுவரைக்கும் கேட்டது கிடையாது. எங்களுக்கு பொண்ணு மட்டும் தான் வேணும்.

உங்கள் பொண்ணுங்களுக்கு நீங்க என்ன செய்றிங்களோ அது உங்களோட விருப்பம் எங்களுக்கும் அதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை என்று கறாராக வீரையன் தாத்தா சொல்ல...

எனக்கு எதுவும் வேண்டாமென்று ஜூலி-ஷமீரா ஒரே நேரத்தில் சொன்னாளுங்கள்.

மகள்கள் இருவரையும் அடிப்பட்ட பார்வையில் மகி பார்க்க..அவளுங்களோ கல் போல நின்றாளுங்கள்.

உங்களுக்கு வேண்டாம் ஆனால் என் பொண்ணுங்களுக்கு நான் செய்ய ஆசைப்படுகிறேன்.இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று மகி தனது மகள்களை கேட்க...

அவரை பார்த்து இளக்காரமாக சிரித்த ஷமீரா,கொஞ்ச நாளைக்கு முன்னாடி இதே இடத்தில் இத்தனை பேருக்கு முன்னாடி நீங்கள் பேசிய வார்தைகளை மறந்து விட்டீர்களோ?

அன்றைக்கு சொன்னது தான் இப்போதும் சொல்கிறேன்.எந்த சூழ்நிலையிலும் உதவி என்றோ இல்லை மகளென்ற உரிமை கொண்டாடிக் கொண்டு உங்களை தேடி வரமாட்டேன்.

உங்கள் சொத்து எனக்கு தேவையில்லை என்றவள் வேறு எதுவும் உங்களிடம் பேச இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியவாறு அங்கிருந்து உள்ளே சென்று விட்டாள்.

ஷமீராவை பார்த்த மகி பாத்தியா நான் பெத்த பொண்ணு எப்படி இருக்கு உன் மகள் பத்தியா எவ்வளவு திமிரா போறா என்க..

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த எஸ்தர் இவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை இதோட வாய மூடிக்கங்க என்றவர் அங்கிருந்தவர்களை பார்த்தவர் சம்பந்தி நீங்க கொஞ்சம் உள்ள இருங்க இவர்கிட்ட நான் பேச வேண்டிய விஷயம் இருக்கு, தப்பா நினைக்காதீர்கள்..

இல்லம்மா வயல்ல எங்களுக்கு வேலை இருக்கு அத சொல்லிட்டு,அப்படியே செழியனை அனுப்புறதுக்காக தான் நாங்க வந்தோம்.மதிய சாப்பாடு அங்கு பண்ணிடுவாங்க நீங்க எங்க வீட்டுக்கு வந்துடுங்க என்ற தம்புசாமி தாத்தா நம்ம கிளம்பலாமா மச்சான் என்க,வா மச்சான்னு அங்கிருந்து வெளியேறினார்.

அவர்கள் வாசல் தாண்டி போகும் வரை அமைதியாக இருந்த எஸ்தர் சொல்லுங்க இன்னும் எத்தனை வருஷம் தான் என் பொண்ணு என் பொண்ணு என் பொண்ணுனு??

நான் மட்டும் என்ன வானத்திலிருந்து குதிச்சு வந்தா புள்ள பெத்துக்கிட்டேன்?

அதுல உங்களுக்கு பங்கு இல்லைய??

நான் என்ன குந்தி தேவியா?

எதற்கெடுத்தாலும் உன் பொண்ணு உன் பொண்ணு... நான் தான் பெத்த தாய். பின்ன எனக்கு இல்லாத உரிமை வேற எவனுக்கு இருக்கு சொல்லுங்க நல்ல மனுஷனாவும் நடந்துக்கவில்லை,
பெத்த அப்பனாவே நடந்துக்க துப்பில்லை உங்களுக்கெல்லாம் குடும்பம் பாரம்பரியம் மயிரு மண்ணாங்கட்டினு வீர வசனம் த்தூஊஊஊ..

என்னை பொறுத்தவரை நீங்க செத்துப் போய் ரொம்ப நாள் ஆகுது.மனைவி என்று எந்த காலத்திலும் உரிமை கொண்டாடிவிட்டு அந்த வீட்டு வாசப்படி ஏற மாட்டேன்.அதே போல நீங்களும் அந்த உரிமையோடு வராதீங்க.

என் பொண்ணுக்கு நல்ல இடத்துல வாழ்க்கை கிடைச்சிருக்கு மகாராணி போல என் மருமகனும் அவங்க வீட்டினரும் என் பொண்ணை பார்த்துப்பாங்க.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு நீங்க எங்க வாழ்க்கையில வராம இருந்தாலே போதுமென்று உள்ளே போனார்.

அற்ப புழுவை போல் பார்த்த ஜூலி இத்தனை வருஷம் எப்படி அப்பா அம்மா இல்லாமல் இருந்தேனோ அது அப்படியே இருக்கட்டும்.என்னோட புருஷன் சம்பாதிக்கிறது எனக்கு போதும் உங்களிடம் இருந்து எனக்கு எதுவுமே வேண்டாம் என்றவாறு தனது தாயிடம் வந்தவள் நீயெல்லாம் ஒரு பெண்....

உன் வயித்துல பிறந்ததுக்கு உண்மையில் நான் வெட்கப்படுகிறேன். இருவரும் நல்ல மனுஷனாகவும் இல்லை,நல்ல அப்பா அம்மாவாகவும் இல்லை...

என்ன இப்படி பேசுகிறேன்னு குழப்பமாக இருக்கிறதா?

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top