Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 407
- Thread Author
- #1
ஜூலி இருக்கும் ரூம் கதவை திறந்த ருத்ரன் வாங்க அங்கிள் என்க...
படபடப்போடு உள்ளே வந்த மகியோ அங்கிருந்த தனது மனைவியை பார்த்தவர் எஸ்தர்..
எங்கே டி போன?
உன்னை தேடி எங்கெல்லாம் அலைந்தேன் தெரியுமா என்பவரோ தனது முதல் மகள் அங்கே அதிர்வோடு இதை பார்த்துக் கொண்டிருப்பதை கவனிக்கவில்லை.
வேகமாக போய் மனைவியின் கையை பிடித்தவர் சொல்லு எஸ்தர் எங்கடி போன?எதா இருந்தாலும் கூட இருந்து சண்டை போட்டுருக்க வேண்டியதுதானே?
நம்ம பொண்ணு என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்கிறாளே என்று மனம் வருந்தி சொல்ல,தன்னை பிடித்திருக்கும் கையை உதறிய எஸ்தர் நீங்க பேசிட்டு இருங்க நான் வெளியே போகிறேன் என்று அங்கிருந்து கதவை திறந்து வெளியே போன பிறகுதான் எதற்காக இந்த ரூமிற்கு வந்தோம் என்பதே மகிக்கு புரிந்தது.
அந்த அதிர்ச்சியில் திரும்பி பெட்டை பார்க்க அங்கு உட்கார்ந்திருந்த பெண்ணோ மானசாவின் வாலிப வயது முகஜாடையில் இருப்பளை கண்டவர் பட்டூஊஊ என்று கத்தியவாறு மகளை தோளோடு அணைத்துக் கொண்டு கத்தி கதறினார்...
தன்னை அப்பா என்று முதல் முதலில் அழைத்து ஜீவனாச்சே..கடந்து 25 வருடங்களாக எந்த மகள் உயிரோடு இல்லை என்று நினைத்து வேதனைப்பட்டாரோ அதே மகள் இன்று உயிரோடு இருப்பதை பார்த்தவருக்கு அழுகையை அடக்க முடியவில்லை. .
அந்தப் பிரத்தியோக அழைப்பான பட்டு என்றவாறு அவள் கன்னத்தை ஏந்த,இந்த குரலை கேட்க எத்தனை வருடங்கள் ஏங்கினேன் என்பது புரிந்த ஜூலியும் டாடி என்று மகியின் இடுப்போடு கட்டிக்கொண்டு அழுதாள்.
அந்த நேரம் கதவைத் திறந்து உள்ளே வந்த ஷமீரா அங்கே மகியும் ஜூலியும் அழுது கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு இங்கு என்ன நடக்குது என்று ஒன்னும் புரியவில்லை...
கதவு சத்தம் கேட்டு திரும்பிய ருத்ரனும் ரூபாவும் அங்கு ஷமீராவை எதிர்பார்க்காததால் அவளை பாவமாக பார்க்க,பெரு மூச்சு விட்ட தீபன் வேகமாக வந்து ஷமீராவை தோளோடு அணைத்தவன் பாப்பா என்க..அவனுக்கு தொண்டை அடைத்தது.
அண்ணா என்கும் போது ஷமீராவிற்கு வார்த்தைகள் தடுமாற,ஜூலியோட அப்பாவும் அங்கிள் தான் டா.
அதைக் கேட்டு என்னாஆஆஆ என்று அதிர்ந்த ஷமீராவோ தனது நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு அவர்களை தான் பார்த்தாள்...
பட்டு...ஏன்டா இந்த அப்பாவை தேடி வரல?
மறந்துட்டியா டா என்று அழுது கொண்டே மகி கேட்க,டேடி நீங்க உயிரோடு இருக்கிற விஷயமே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கு தெரியும்...
அம்மா பா என்று பரிதவிப்போடு ஜூலி கேட்க உன் அம்மாவும் இங்கு வந்துருக்கா.உன்னை நினைத்து அழாத நாளில்லை டா பட்டு என்றவாறு மகளின் கன்னம் கிள்ளி எண்ணற்ற முத்தங்களை கொடுத்தவர் இரு நான் போய் அவளை கூப்பிட்டு வருகிறேன் என்று வேகமாக எழுந்து கண்ணை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கும் பொழுது தான் அங்கே ஷமீராவோ தீபனின் அணைப்பில் அதிர்வோடு இதையெல்லாம் பார்த்து கண்ணீர் வடிய நின்று கொண்டிருப்பது தெரிந்தது...
எந்த மகளுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியக்கூடாது என்று நினைத்தாரே அவளே இதையெல்லாம் பார்த்தவாறு நிற்க...இதைக் கண்ட மகியோ தனது இரண்டாவது மகளை பார்த்து பேயறைந்த போல அதிர்ந்து போய் நின்றார்..
அவருக்கு ஒன்று தெரியவில்லை அவளுக்கு இந்த விஷயம் தெரிந்து பல ஆண்டுகள் ஆகின்றது என்கும் உண்மை...
சற்று முன்னர் ஜூலியிடம் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டார் என்பதை பார்த்த ஷமீராவுக்கு ஒரு நாள் கூட தனது தந்தை தன்னிடம் ஆசையாக பேசிருப்பாரா?
இல்ல அன்பாக தனது தலையாக தடவியிருப்பாரா??ஒரு வாய் சாதமாவது ஊட்டியிருப்பாரா என்பதை நினைக்க எரிமலை உள்ளுக்குள் கொதிப்பது போல இருந்தது.
இந்த சூழலை கையாண்டு தான் ஆக வேண்டும் என்கும் உண்மை புரிந்த மகி அம்மாடி ஷமீரா என்று அவளை நோக்கி வர தீபனிடமிருந்து விலகியவள் அண்ணா நிச்சயதார்த்தம் ஆரம்பிக்க போகுது மேடைக்கு வர சொல்றாங்க என்று சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியே போய்விட்டாள். .
கண்ணில் இரண்டு பக்கமும் ஆறு போல் கண்ணீர் வடிந்தோட வரும் மகளை சற்று தள்ளி இருந்து பார்த்து எஸ்தரோ வாயை மூடி அழ,வேகமாக தனது அம்மாவிடம் வந்தவள் அவரை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, மகள் அழுவது அவருக்கு புரிந்தது. .
இதை நான் எதிர்பார்க்கலையே என்று அவரும் அழுக,ஷமீரா ஷமீரா என்கும் செழியனின் குரல் கேட்டு இருவரும் கண்ணை துடைத்துக் கொண்டனர்.
உள்ளே வந்தவன் அவர்களை பார்த்து இங்க தான் இருக்கியா தாத்தா வீட்ல கூப்பிடுறாங்க வா என்று சொல்லி அவர்களின் வேதனையான முகத்தை கவனிக்காமல் வெளியே போய் விட்டான்
முதல்ல பாபு கண்மணி நிச்சயதார்த்தம் முடியட்டும்.அதன் பிறகு எதா இருந்தாலும் பேசிக்கலாம் மா என்று
ஷமீரா சொல்ல,தனது மகளின் முதிர்ச்சியான வார்த்தையை கேட்டவர் ரொம்ப மெச்சூர் ஆயிட்ட ஷமீ என்று சொல்லிக் கொண்டே மகளின் கைய பிடித்தவாறு வெளியே வந்தார்...
அங்கிருந்த சொந்த பந்தங்களோ எஸ்தரை பார்த்து அதிர்ந்தவர்கள் எப்ப வந்த என்க..கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன் என்று ஒருவராக பேசி எல்லாரையும் சமாளித்தார்.
தனது தங்கையை பார்த்த அந்தோணிக்கு கண்கள் கலங்கியது. எங்கே நீ வர மாட்டியோ என்று நினைத்து விட்டேனே என்று மனதிற்குள் பேசிக்கொள்ள,நான் எப்படி ணா வராமல் இருப்பேன் என்று அவரும் தனது கண்களாலே அண்ணனுக்கு பதில் சொன்னார். ..
ராணியோ வேகமாக வந்து எஸ்தரின் கையை பிடிக்க வர நாசுக்காக அவரிடம் இருந்து விலகிப் போனவர் அங்கிருந்த ஜேம்ஸ் குடும்பத்துடன் சாரதா பாட்டி இருப்பதை பார்த்து அவர்களோடு இணைந்து உட்கார்ந்து கொண்டார்..
எஸ்தரை பார்த்த ஜேம்ஸ்க்கு கண்கள் கலங்க,தனது அத்தை மகனை நீண்ட மாதங்களுக்கு பிறகு பார்த்தவர் நல்லா இருக்கீங்களா மாமா என்கும் போதே எஸ்தருக்கும் அழுகை வந்து
வார்த்தைகளும் தடுமாறியது.
தனது தொண்டையை கணைத்து சரி பண்ணிய ஜேம்ஸ் உன் மருமகன் நிச்சயதார்த்தம் நல்லபடியா முடியட்டும் அப்புறம் பேசிக்கலாம் என்க..
அவரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரோஸி தனது கணவருக்கு மட்டும் காதில் விழுவது போல,என்னங்க உங்கள் ஒன்சைடு காதலியை பார்த்தாச்சா??
அதைக் கேட்ட ஜேம்ஸிற்கு சிரிப்பு வரவும்,திரும்பி மனைவி பார்த்து செல்லமாக முறைக்க,உங்க காதல் கதை எல்லாம் எனக்கு தெரியும்.நான் அந்த டைரிய படிச்சிட்டேன்.ஆனாலும் இத்தனை வருடம் அதை காட்டிக்காம இருந்தேன் என்று கணவரின் தலையில் பெரிய குண்டை தூக்கி போட்டார்.
அதைக் கேட்ட ஜேம்ஸ்,அடி பாவிஈஈஈ!!!
இதை அப்படியே மனசுல போட்டு புதைச்சிடு டி!!
இல்லை குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் வரும்...
"ஆஹான்"
அத்தை மகளை பார்த்ததும் அய்யாக்கு அப்படியே பத்து வயது குறைந்த போல முகம் பளபளக்குது...
பட் இன்னமும் உங்களுக்கு அக்கா மேல காதல் இருக்கு தானே??
அதனால் தானே தமிழ்நாட்டுக்கு வரமாட்டேங்குறிங்க?
மனைவியின் கண்களை பார்த்த ஜேம்ஸ் என்றைக்கு உனக்கு புருஷனானேனோ அப்போதிலிருந்து உன்னை மட்டும் தான் டி லவ் பண்ணுறேன்.எஸ்தர் மேல எனக்கு இருப்பது என் அத்தை மகள் என்ற எண்ணம் மட்டுமே போதுமா மிசஸ் ஜேம்ஸ்!!!
நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே?
காதல் இருக்கா?,இல்லையா???
சே எஸ் ஆர் நோ புருஷா...
"ஏய் ரோஸி அடி வாங்க போற டி"
எந்த நேரத்தில் என்ன பேச்சு பேசிட்டு இருக்க டி?அடிச்சு பல்லெல்லாம் உடைச்சிடுவேன் என்று சொல்லும்போது ஜேம்ஸ்க்கு சிரிப்பு வர, டேய் திருட்டு புருஷா,உன்னை பற்றி எனக்கு தெரியும் டா என்று அவர் காதில் மட்டும் விழும்படி ரோசி சொல்ல,ஐ லவ் யூ டி என்கவும்...அந்த வார்த்தையிலே ரோசி அமைதியானார்..
மாப்பிள்ளையோட தாய் மாமா மேடைக்கு வாங்க என்கவும்
அந்தோணியோ தனது மகனின் தாய்மாமனாக இருவரையும் தான் சொல்வார்.ஜேம்ஸ் ரோசியை கூப்பிட்டு போ.
உன் அண்ணன் எதோ போன் வந்ததுனு வெளியே போயிருக்கான்.நீங்கள் முதலில் போங்க என்கவும் அண்ணாவும் வந்துரட்டுமே மாமா என்றவாறு வாசலை பார்க்க..உன் அண்ணன் வருவான் நீ போடா என்றார்
சம்பிரதாயபடி சில சடங்குகள் செய்து முடித்ததும் பொண்ணு மாப்பிள்ளையை மேடைக்கு வர சொன்னார்கள்.
கோட் சூட்டில் கம்பீரமாக மேடைக்கு வந்த பாபு அங்கே இருப்பவர்களை பார்த்து வணக்கம் சொல்லியவன் அலங்கரிக்கப்பட்ட சேரில் உட்கார, சிறிது நிமிடத்தில் தேவலோக அழகி போல மேடைக்கு வந்த கண்மணியும் பெரியவர்களை பார்த்து வணக்கம் வைத்தவள் ஒருவித படபடப்போடு பாபுவின் பக்கத்தில் உள்ள இடத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்தாள்.
அவளுக்கு மட்டும் கேட்கும்படி ரொம்ப அழகா இருக்கடி என்று பாபு பேச…
அப்பொழுது மேடைக்கு வந்த பரத் வருஷம் முழுவதும் என் தங்கச்சி கிட்ட தான் பேச போற,கொஞ்ச நேரம் வாயை தான் மூடேன் டா.லொடலொடன்னு ஓட்ட பானைல நண்டு விட்ட போல பேசிட்டு இருக்கிற...
ஐயரே வாழைப்பழம் ஆப்பிள் ஆரஞ்சு ஏதாச்சும் இருந்தா இந்த மாப்பிள்ளைகார பயலுக்கு கொடுங்க தின்னுட்டு வாய மூடிட்டு இருக்கட்டும் என்க...அதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்து விட்டனர்.
பின்னர் மருமகளுக்காக வாங்கிட்டு வந்த மோதிரத்தையும் நெக்லஸை மேடைக்கு எடுத்துட்டு வந்த ராணியோ மகனிடம் கொடுத்து மோதிரம் போட சொல்ல,கண்மணியோ தனது வலது பக்க கைகளை நீட்டினாள்.
அந்த வெண்டை விரல்களை பிடித்தவனோ மோதிரத்தை போட்டு விட்டான் பின்னர் ராணியும் தனது மருமகளுக்கு அந்த நெக்லஸை போட்டு விட்டார்.
அதேபோல் கண்மணியின் அண்ணனுங்கள் மச்சான் முறைக்காக பாபுக்கு கையிலும் கழுத்திலும் விரல்களிலும் தங்க நகைகளை போட்டு விட பின்னர் இரண்டு ஊர் முக்கியஸ்தர்களின் முன்னிலையில் அவர்கள் திருமணம் நிச்சயதார்த்தத்தின் ஓலை வாசிக்கப்பட்டது.
நிச்சயதார்த்தமும் நல்லபடியாக முடிந்தது...!
படபடப்போடு உள்ளே வந்த மகியோ அங்கிருந்த தனது மனைவியை பார்த்தவர் எஸ்தர்..
எங்கே டி போன?
உன்னை தேடி எங்கெல்லாம் அலைந்தேன் தெரியுமா என்பவரோ தனது முதல் மகள் அங்கே அதிர்வோடு இதை பார்த்துக் கொண்டிருப்பதை கவனிக்கவில்லை.
வேகமாக போய் மனைவியின் கையை பிடித்தவர் சொல்லு எஸ்தர் எங்கடி போன?எதா இருந்தாலும் கூட இருந்து சண்டை போட்டுருக்க வேண்டியதுதானே?
நம்ம பொண்ணு என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்கிறாளே என்று மனம் வருந்தி சொல்ல,தன்னை பிடித்திருக்கும் கையை உதறிய எஸ்தர் நீங்க பேசிட்டு இருங்க நான் வெளியே போகிறேன் என்று அங்கிருந்து கதவை திறந்து வெளியே போன பிறகுதான் எதற்காக இந்த ரூமிற்கு வந்தோம் என்பதே மகிக்கு புரிந்தது.
அந்த அதிர்ச்சியில் திரும்பி பெட்டை பார்க்க அங்கு உட்கார்ந்திருந்த பெண்ணோ மானசாவின் வாலிப வயது முகஜாடையில் இருப்பளை கண்டவர் பட்டூஊஊ என்று கத்தியவாறு மகளை தோளோடு அணைத்துக் கொண்டு கத்தி கதறினார்...
தன்னை அப்பா என்று முதல் முதலில் அழைத்து ஜீவனாச்சே..கடந்து 25 வருடங்களாக எந்த மகள் உயிரோடு இல்லை என்று நினைத்து வேதனைப்பட்டாரோ அதே மகள் இன்று உயிரோடு இருப்பதை பார்த்தவருக்கு அழுகையை அடக்க முடியவில்லை. .
அந்தப் பிரத்தியோக அழைப்பான பட்டு என்றவாறு அவள் கன்னத்தை ஏந்த,இந்த குரலை கேட்க எத்தனை வருடங்கள் ஏங்கினேன் என்பது புரிந்த ஜூலியும் டாடி என்று மகியின் இடுப்போடு கட்டிக்கொண்டு அழுதாள்.
அந்த நேரம் கதவைத் திறந்து உள்ளே வந்த ஷமீரா அங்கே மகியும் ஜூலியும் அழுது கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு இங்கு என்ன நடக்குது என்று ஒன்னும் புரியவில்லை...
கதவு சத்தம் கேட்டு திரும்பிய ருத்ரனும் ரூபாவும் அங்கு ஷமீராவை எதிர்பார்க்காததால் அவளை பாவமாக பார்க்க,பெரு மூச்சு விட்ட தீபன் வேகமாக வந்து ஷமீராவை தோளோடு அணைத்தவன் பாப்பா என்க..அவனுக்கு தொண்டை அடைத்தது.
அண்ணா என்கும் போது ஷமீராவிற்கு வார்த்தைகள் தடுமாற,ஜூலியோட அப்பாவும் அங்கிள் தான் டா.
அதைக் கேட்டு என்னாஆஆஆ என்று அதிர்ந்த ஷமீராவோ தனது நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு அவர்களை தான் பார்த்தாள்...
பட்டு...ஏன்டா இந்த அப்பாவை தேடி வரல?
மறந்துட்டியா டா என்று அழுது கொண்டே மகி கேட்க,டேடி நீங்க உயிரோடு இருக்கிற விஷயமே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கு தெரியும்...
அம்மா பா என்று பரிதவிப்போடு ஜூலி கேட்க உன் அம்மாவும் இங்கு வந்துருக்கா.உன்னை நினைத்து அழாத நாளில்லை டா பட்டு என்றவாறு மகளின் கன்னம் கிள்ளி எண்ணற்ற முத்தங்களை கொடுத்தவர் இரு நான் போய் அவளை கூப்பிட்டு வருகிறேன் என்று வேகமாக எழுந்து கண்ணை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கும் பொழுது தான் அங்கே ஷமீராவோ தீபனின் அணைப்பில் அதிர்வோடு இதையெல்லாம் பார்த்து கண்ணீர் வடிய நின்று கொண்டிருப்பது தெரிந்தது...
எந்த மகளுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியக்கூடாது என்று நினைத்தாரே அவளே இதையெல்லாம் பார்த்தவாறு நிற்க...இதைக் கண்ட மகியோ தனது இரண்டாவது மகளை பார்த்து பேயறைந்த போல அதிர்ந்து போய் நின்றார்..
அவருக்கு ஒன்று தெரியவில்லை அவளுக்கு இந்த விஷயம் தெரிந்து பல ஆண்டுகள் ஆகின்றது என்கும் உண்மை...
சற்று முன்னர் ஜூலியிடம் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டார் என்பதை பார்த்த ஷமீராவுக்கு ஒரு நாள் கூட தனது தந்தை தன்னிடம் ஆசையாக பேசிருப்பாரா?
இல்ல அன்பாக தனது தலையாக தடவியிருப்பாரா??ஒரு வாய் சாதமாவது ஊட்டியிருப்பாரா என்பதை நினைக்க எரிமலை உள்ளுக்குள் கொதிப்பது போல இருந்தது.
இந்த சூழலை கையாண்டு தான் ஆக வேண்டும் என்கும் உண்மை புரிந்த மகி அம்மாடி ஷமீரா என்று அவளை நோக்கி வர தீபனிடமிருந்து விலகியவள் அண்ணா நிச்சயதார்த்தம் ஆரம்பிக்க போகுது மேடைக்கு வர சொல்றாங்க என்று சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியே போய்விட்டாள். .
கண்ணில் இரண்டு பக்கமும் ஆறு போல் கண்ணீர் வடிந்தோட வரும் மகளை சற்று தள்ளி இருந்து பார்த்து எஸ்தரோ வாயை மூடி அழ,வேகமாக தனது அம்மாவிடம் வந்தவள் அவரை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, மகள் அழுவது அவருக்கு புரிந்தது. .
இதை நான் எதிர்பார்க்கலையே என்று அவரும் அழுக,ஷமீரா ஷமீரா என்கும் செழியனின் குரல் கேட்டு இருவரும் கண்ணை துடைத்துக் கொண்டனர்.
உள்ளே வந்தவன் அவர்களை பார்த்து இங்க தான் இருக்கியா தாத்தா வீட்ல கூப்பிடுறாங்க வா என்று சொல்லி அவர்களின் வேதனையான முகத்தை கவனிக்காமல் வெளியே போய் விட்டான்
முதல்ல பாபு கண்மணி நிச்சயதார்த்தம் முடியட்டும்.அதன் பிறகு எதா இருந்தாலும் பேசிக்கலாம் மா என்று
ஷமீரா சொல்ல,தனது மகளின் முதிர்ச்சியான வார்த்தையை கேட்டவர் ரொம்ப மெச்சூர் ஆயிட்ட ஷமீ என்று சொல்லிக் கொண்டே மகளின் கைய பிடித்தவாறு வெளியே வந்தார்...
அங்கிருந்த சொந்த பந்தங்களோ எஸ்தரை பார்த்து அதிர்ந்தவர்கள் எப்ப வந்த என்க..கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன் என்று ஒருவராக பேசி எல்லாரையும் சமாளித்தார்.
தனது தங்கையை பார்த்த அந்தோணிக்கு கண்கள் கலங்கியது. எங்கே நீ வர மாட்டியோ என்று நினைத்து விட்டேனே என்று மனதிற்குள் பேசிக்கொள்ள,நான் எப்படி ணா வராமல் இருப்பேன் என்று அவரும் தனது கண்களாலே அண்ணனுக்கு பதில் சொன்னார். ..
ராணியோ வேகமாக வந்து எஸ்தரின் கையை பிடிக்க வர நாசுக்காக அவரிடம் இருந்து விலகிப் போனவர் அங்கிருந்த ஜேம்ஸ் குடும்பத்துடன் சாரதா பாட்டி இருப்பதை பார்த்து அவர்களோடு இணைந்து உட்கார்ந்து கொண்டார்..
எஸ்தரை பார்த்த ஜேம்ஸ்க்கு கண்கள் கலங்க,தனது அத்தை மகனை நீண்ட மாதங்களுக்கு பிறகு பார்த்தவர் நல்லா இருக்கீங்களா மாமா என்கும் போதே எஸ்தருக்கும் அழுகை வந்து
வார்த்தைகளும் தடுமாறியது.
தனது தொண்டையை கணைத்து சரி பண்ணிய ஜேம்ஸ் உன் மருமகன் நிச்சயதார்த்தம் நல்லபடியா முடியட்டும் அப்புறம் பேசிக்கலாம் என்க..
அவரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரோஸி தனது கணவருக்கு மட்டும் காதில் விழுவது போல,என்னங்க உங்கள் ஒன்சைடு காதலியை பார்த்தாச்சா??
அதைக் கேட்ட ஜேம்ஸிற்கு சிரிப்பு வரவும்,திரும்பி மனைவி பார்த்து செல்லமாக முறைக்க,உங்க காதல் கதை எல்லாம் எனக்கு தெரியும்.நான் அந்த டைரிய படிச்சிட்டேன்.ஆனாலும் இத்தனை வருடம் அதை காட்டிக்காம இருந்தேன் என்று கணவரின் தலையில் பெரிய குண்டை தூக்கி போட்டார்.
அதைக் கேட்ட ஜேம்ஸ்,அடி பாவிஈஈஈ!!!
இதை அப்படியே மனசுல போட்டு புதைச்சிடு டி!!
இல்லை குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் வரும்...
"ஆஹான்"
அத்தை மகளை பார்த்ததும் அய்யாக்கு அப்படியே பத்து வயது குறைந்த போல முகம் பளபளக்குது...
பட் இன்னமும் உங்களுக்கு அக்கா மேல காதல் இருக்கு தானே??
அதனால் தானே தமிழ்நாட்டுக்கு வரமாட்டேங்குறிங்க?
மனைவியின் கண்களை பார்த்த ஜேம்ஸ் என்றைக்கு உனக்கு புருஷனானேனோ அப்போதிலிருந்து உன்னை மட்டும் தான் டி லவ் பண்ணுறேன்.எஸ்தர் மேல எனக்கு இருப்பது என் அத்தை மகள் என்ற எண்ணம் மட்டுமே போதுமா மிசஸ் ஜேம்ஸ்!!!
நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே?
காதல் இருக்கா?,இல்லையா???
சே எஸ் ஆர் நோ புருஷா...
"ஏய் ரோஸி அடி வாங்க போற டி"
எந்த நேரத்தில் என்ன பேச்சு பேசிட்டு இருக்க டி?அடிச்சு பல்லெல்லாம் உடைச்சிடுவேன் என்று சொல்லும்போது ஜேம்ஸ்க்கு சிரிப்பு வர, டேய் திருட்டு புருஷா,உன்னை பற்றி எனக்கு தெரியும் டா என்று அவர் காதில் மட்டும் விழும்படி ரோசி சொல்ல,ஐ லவ் யூ டி என்கவும்...அந்த வார்த்தையிலே ரோசி அமைதியானார்..
மாப்பிள்ளையோட தாய் மாமா மேடைக்கு வாங்க என்கவும்
அந்தோணியோ தனது மகனின் தாய்மாமனாக இருவரையும் தான் சொல்வார்.ஜேம்ஸ் ரோசியை கூப்பிட்டு போ.
உன் அண்ணன் எதோ போன் வந்ததுனு வெளியே போயிருக்கான்.நீங்கள் முதலில் போங்க என்கவும் அண்ணாவும் வந்துரட்டுமே மாமா என்றவாறு வாசலை பார்க்க..உன் அண்ணன் வருவான் நீ போடா என்றார்
சம்பிரதாயபடி சில சடங்குகள் செய்து முடித்ததும் பொண்ணு மாப்பிள்ளையை மேடைக்கு வர சொன்னார்கள்.
கோட் சூட்டில் கம்பீரமாக மேடைக்கு வந்த பாபு அங்கே இருப்பவர்களை பார்த்து வணக்கம் சொல்லியவன் அலங்கரிக்கப்பட்ட சேரில் உட்கார, சிறிது நிமிடத்தில் தேவலோக அழகி போல மேடைக்கு வந்த கண்மணியும் பெரியவர்களை பார்த்து வணக்கம் வைத்தவள் ஒருவித படபடப்போடு பாபுவின் பக்கத்தில் உள்ள இடத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்தாள்.
அவளுக்கு மட்டும் கேட்கும்படி ரொம்ப அழகா இருக்கடி என்று பாபு பேச…
அப்பொழுது மேடைக்கு வந்த பரத் வருஷம் முழுவதும் என் தங்கச்சி கிட்ட தான் பேச போற,கொஞ்ச நேரம் வாயை தான் மூடேன் டா.லொடலொடன்னு ஓட்ட பானைல நண்டு விட்ட போல பேசிட்டு இருக்கிற...
ஐயரே வாழைப்பழம் ஆப்பிள் ஆரஞ்சு ஏதாச்சும் இருந்தா இந்த மாப்பிள்ளைகார பயலுக்கு கொடுங்க தின்னுட்டு வாய மூடிட்டு இருக்கட்டும் என்க...அதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்து விட்டனர்.
பின்னர் மருமகளுக்காக வாங்கிட்டு வந்த மோதிரத்தையும் நெக்லஸை மேடைக்கு எடுத்துட்டு வந்த ராணியோ மகனிடம் கொடுத்து மோதிரம் போட சொல்ல,கண்மணியோ தனது வலது பக்க கைகளை நீட்டினாள்.
அந்த வெண்டை விரல்களை பிடித்தவனோ மோதிரத்தை போட்டு விட்டான் பின்னர் ராணியும் தனது மருமகளுக்கு அந்த நெக்லஸை போட்டு விட்டார்.
அதேபோல் கண்மணியின் அண்ணனுங்கள் மச்சான் முறைக்காக பாபுக்கு கையிலும் கழுத்திலும் விரல்களிலும் தங்க நகைகளை போட்டு விட பின்னர் இரண்டு ஊர் முக்கியஸ்தர்களின் முன்னிலையில் அவர்கள் திருமணம் நிச்சயதார்த்தத்தின் ஓலை வாசிக்கப்பட்டது.
நிச்சயதார்த்தமும் நல்லபடியாக முடிந்தது...!