Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 404
- Thread Author
- #1
வனிச்சூர்:
வீட்டிற்கு பக்கத்திலே பெரிய காலியிடம் இருப்பதால் அதிலேயே நிச்சயதார்த்தம் நடப்பதற்காக பந்தல் போடப்பட்டிருந்து.
வீட்டின் முன்னால் வந்து கார் நிற்க,அதிலிருந்து இறங்கிய எஸ்தருக்கோ ஒரு பக்கம் மனது குற்ற உணர்ச்சியாக இருக்க,ஆனால் வீட்டினரோ அவரை மரியாதையோடு வரவேற்து நலம் விசாரிக்கவும் அதன் பிறகு இயல்பானர்.
எங்கே ஷமீராவை காணுமென விசாரிக்க இப்போது தான் வீட்டுக்கு போயிருக்கு மா.இரு மா வரச் சொல்கிறேனென்று சுமதி பாட்டி சொல்ல,இல்லைங்க மா...
நான் போய் நேரில் பார்ப்பது தான் மரியாதை...
ஜூலி நீயும் ரூபாவும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கள் நான் போய் ஷமிய பார்த்துட்டு வருகிறேன் என்று சொல்ல,அம்மா சட்டப்படி சம்மந்தி வீட்டுக்கு நம்ம தான் போகணும்.வா ஜூலி போயிட்டு வரலாம் என்று தீபன் கூப்பிட,ஓஹோ அப்படியா சங்கதி நல்லது நல்லது என்று ருத்ரனும் ரூபாவும் சிரித்தனர்.
பின்னர் மூவரும் ஷமீரா வீட்டிற்காக வாங்கிய தின்பண்டங்களோடு பக்கத்து தெருவில் இருக்கும் செழியனின் வீட்டிற்கு வர,அப்பொழுதுதான் செல்லதுரையும் வானதியும் விஷேசம் நடக்கும் வீட்டிற்கு போக வெளியே வந்தவர்கள் வாசலில் கார் வந்து நிற்பதை பார்த்தது யார் என்று பார்க்க எஸ்தர் இறங்கி வருவது தெரிந்தது.
வா மா என்று செல்லத்துரை அன்பாக அழைக்க,வானதியோ வாங்க சம்பந்தி என்க..தன்னை எப்படி எதிர்நோக்குவார்களோ என்று ஒரு பக்கம் யோசனையோடு இருந்து எஸ்தருக்கு இவர்களின் இந்த அழைப்பு அதிர்ச்சியாக இருந்தது
மாமா இதுதான் எங்க அம்மா இதுதான் என் தங்கச்சி ஜூலி,உங்கள் மகன் ருத்ரன் மனைவி என்கவும் அப்படியா வா தாயி என்றவர் உள்ள வாங்க என்று அழைத்துப் போனவர்கள் அங்கிருந்த சோபாவில் உட்கார சொன்னவர்,வானதி மருமகளை கூப்பிடு..
அதற்கு முன்ன வந்தவங்களுக்கு மோர் கலக்கி கொண்டுட்டு வா என்கவும் எஸ்தருக்கோ முதன் முதலில் இந்த வீட்டுக்கு வந்தபோது நடந்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.
பழைய கதையை கிண்டாமல் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்க மூவருக்கும் மோர் கலக்கி எடுத்துட்டு வந்த வானதி இந்தாங்கண்ணி குடிங்க என்கவும்,அவரின் உரிமையான அந்த அழைப்பு எஸ்ருக்கு மனதிற்கு நிறைவை கொடுத்தது.
உங்க மருமகள் நல்லா குடும்பம் பண்றாளா??
எல்லார்கூடையும் நல்லா பழகுறாளா?
அங்க தனியாவே பிறந்து வளர்ந்து பழக்கப்பட்டவள்.இங்கு உள்ள சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் உங்க மருமகளுக்கு தெரியாது.ஆனால் ஒருமுறை சொல்லி கொடுத்தாள் கற்றுப்பாள்.
அவளால் யாருக்கும் ஒன்னும் சங்கடமில்லையே என்று வருத்தம் கலந்து ஒரு தாயாக பரிதவிப்போடு எஸ்தர் கேட்க...ஐயையோ ஏன் இப்படி?
மருமகள் மேல எந்த குறையும் இல்லைங்கண்ணி.செழியன் பொண்டாட்டியை தெரியாதவங்க சொந்தக்காரங்க யாருமே இருக்க மாட்டாங்க.
அதை நாங்க சொல்றதை விட நாலு பேர் சொல்லி நீங்கள் கேட்டால் தான் உங்களுக்கே பெருமையா இருக்கும் என்று செல்லதுரை சொல்லும் போது வெளியே போயிட்டு வீட்டிற்குள் வந்த செழியனோ அங்கிருந்தவர்களை பார்த்து சற்று அதிர்ந்து போனோன்.
பின்னர் வாங்கத்தை வா மச்சான் வாடா ஜூலி என்று நலம் விசாரிக்க, வரோங்க தம்பி நல்லா இருக்கீங்களா என்றார்.
தீபனோ போலி போலிசூஊஊசூஊஊஊ என்றவாறு செழியனை அணைத்தவன் என்ன மாப்பி,என் தங்கச்சி நிச்சயதார்த்தத்தில் ஒரு புடி புடிக்கலாம்னு வயிறு ரொம்ப காய போட்டு இருக்கியோ என்கவும், ஏண்டா சொல்ல மாட்ட...
எங்க வீட்ல என்ன சாப்பாடு இல்லையாடா?உன் தொங்கச்சி பங்ஷன்ல சாப்பிட ஒத்த காலில் நிக்கிறேனென்று மாமனும் மச்சானும் கலாய்த்துக்கொண்டதை கேட்க அவர்களுக்கு சிரிப்பு வந்தது.
அப்பொழுது எஸ்தரோ சம்பந்தி உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் இத நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல.என்றைக்காச்சும் ஒரு நாளைக்கு இந்த விஷயம் தெரிஞ்சு நீங்க என் பொண்ணை தவறாக நினைக்க கூடாது என்கும் போது அங்கு வந்த கண்ணன் எல்லாரும் மதியம் சாப்பாடு சாப்பிடுவதற்கு வர சொல்றாங்க வாங்க...அப்புறம் பேசிக்கலாம் என்றான்.
அதோட அந்த பேச்சும் நின்று விட்டது.
மதிய உணவு பரிமாற,கேளி காலாட்டக்களோடு சாப்பிட்டு முடித்தவர்கள் சாயந்திரம் நடக்க போகும் நிச்சயதார்த்தத்துக்கு தயாரானார்கள்.
நேரமும் கடந்து செல்ல மாப்பிள்ளை வீட்டினர் ஊருக்குள் வந்து விட்டதாக யாரோ வந்து சொல்லவும்,குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு அழைத்துவர வேண்டும் என்று தம்புசாமி தாத்தா சொல்ல, பெரிய மாமாவும் தொரை மச்சானும் அங்கே போயிருக்கிறார்கள் பா என்று கனலரசன் சொல்ல அவரும் சரியென்றார்.
பஸ் வருவதை பார்த்த வீரையன் தாத்தாவும் செல்லதுரையும் கையை காட்டி நிறுத்தினார்கள.
பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி வந்த அந்தோணி வணக்கம் எப்படி இருக்கீங்க என்க,நல்லா இருக்கோம் வாங்க நம்ம குல தெய்வத்தை கும்பிட்டு போகலாம் என்கவும்,பெண் வீட்டினர் பண்பாடு என்பதால் அவர்கள் கிறிஸ்டியனாக இருந்தாலும் கீழே இறங்கி போக கண்மணிக்காக வாங்கிட்டு வந்த புடவை மற்றும் சீர்வரிசையை பொருட்களை எடுத்துட்டு வந்து சாமிக்கு முன்னாடி வைக்கவும் பூசாரியும் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி அம்மனுக்கு காட்டிவிட்டு மஞ்சள் குங்குமத்தை எடுத்து வந்து புடவையின் மேல் வைத்தவர் தீர்க்க சுமங்கலியா நீடூழி வாழ்க என்று வாழ்த்தினார்.
பின்னர் வாங்க என்று அவர்களை அழைத்துக் கொண்டு இவர்கள் வண்டியில் முன்னாடி சென்றார்கள்.
பத்து நிமிட பயணத்தில் தெருவுக்குள் நுழைந்த பஸ்ஸோ வீட்டுக்கு முன்னால் பந்தல் போட்டிருப்பதை பார்த்து சில அடி தள்ளியே பஸ்ஸை நிறுத்தினார்கள்.
மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட்டாங்க என்று யாரோ ஒருவர் சொல்லவும் பட்டாசு சத்தம் விண்ணை பிளக்க,அங்கே ஒரே பரபரப்பானது.
பஸ்ஸிலிருந்து இறங்கியவர்களோ மேளதாளம் இசைக்க,சீர்வரிசை தட்டோடு கண்மணியின் வீட்டை நோக்கி வரவாசலில் நின்று குடும்பமாக வரவேற்தனர்..
மகிக்கோ எஸ்தரை பற்றி கேட்டால் என்ன சொல்வது என்று ஒரே யோசனையாகவே இருந்தது.அதுவும் இல்லாமல் அவரிடம் இங்கு இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ என்று ஒரு பக்கமும் சங்கடமாக இருக்க..,
நீயும் நானும் ஒரே குணம் கிடையாது என்பதை செல்லதுரை தம்பதிகளும் செழியனின் சொந்தக்காரர்களும் அவரை இன்முகமாக வரவேற்து நலம் விசாரிக்க,அவருக்கே அவரை நினைத்து கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக இருந்தது.
தான் இங்கு வந்திருக்கும் போது எப்படி எல்லாம் பேசி சென்றோம் என்பதை நினைத்தவர்,தனது மகள் அம்மா எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது என்று ஒரு பக்கம் உள்ளுக்குள் பயமா இருக்கவும்,எங்கேயாவது மகள் கண்ணில் படுகிறாளா என்று அவரும் அங்கே இங்கேயென தேட,அங்கு இருப்பது போல் தெரியவில்லை.
கண்மணிக்கு அவள் ரூமிலே பியூட்டிஷியன் அலங்காரம் பண்ணிக் கொண்டிருக்க ஷமீரா எஸ்தர் கவிதாவும் அங்கிருந்தனர்.
சோழனூரிலிருந்து வந்து விட்டனர் என்பதை கேள்விப்பட்டார்கள் தவிர கீழே வரவில்லை.எஸ்தருக்கோ மகியின் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை. ஃபங்ஷன் நடக்கும்போது சொந்த பந்தங்களை பார்த்து நலம் விசாரித்துக் கொள்ளலாம் என்று அவரும் அமைதியாகவே அங்கு உட்கார்ந்திருந்தார்.
தனது தாயின் முகத்தை பார்த்த ஷமீராவோ கீழே போகலையா மா என கண்களால் ஜாடை காட்ட,இருக்கட்டும் என்று தலையசைத்தார்..
உறவினர்களோ அங்கிருந்து சொந்த பந்தங்களையும் விட்டு வசதியையும் பார்த்து அந்தோணிக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் கிடைத்திருக்கு என்று சிலர் பெருமையாகவும் சிலர் உள்ளுக்குள் பொறாமை பட்டனர்..
ஆமா மகி எங்கே உன் மகள் மருமகனை காணும் என்று சோழனூரிலிருந்து வந்தவர்கள் கேட்க,அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மகியோ தனது நெற்றியை தடவ...,
அந்த நேரம் அங்கு வந்த செழியன் அவர்களை பார்த்து வணக்கம் என்றவன்,வாங்கப்பா என்று அந்தோணியின் கையை பிடிக்க,எந்திரிச்சி அவன் தோளில் கையை போட்டவர் இதுதான் மாமா உங்க பேத்தியோட புருஷன்,என் தங்கச்சியோட மருமகன்,என்னோட இன்னொரு பையன் இளஞ்செழியன் ஐபிஎஸ் ஆபிசர் என்று அந்தோணி பெருமையோடு சொல்ல..
என்னாது நம்ப ஷமியோட வீட்டுக்காரர் போலீசாஆஆஆ என்று சொந்தங்கள் மட்டும் இல்லை மகியும் அதிர்ந்து போனார்.
மகனை முறைத்தவாறு அங்கு வந்து செல்லதுரை உன் பொண்டாட்டியை கூப்பிட்டு வாப்பா என்க,தந்தையின் முகத்தை பார்த்தவன் பின்னர் மகியிடம் வாங்க மாமா என்று கையைக் கூப்பி சொல்ல,அதிர்வில் இருந்த மகியோ வரேங்க மாப்பிள்ளை என்றவர் நல்லா இருக்கீங்களா?ஷமீரா நல்லாருக்காளா?
ரொம்ப நல்லாருக்கா என்றவன் இதோ வரச் சொல்றேன் என்றவாறு உள்ளே போனான்.
மாடிக்கு வந்தவன் கண்மணியின் ரூம் கதவை தட்ட,உள்ளே இருந்த கவிதாவோ அனேகமாக அந்த விருமாண்டியாக தான் கா இருக்கும் என்று சொல்லிக் கொண்டே போய் கதவை திறக்கவும்,அங்கு செழியன் நிற்பதை பார்த்தவள் நான் தான் சரியா சொன்னேன் இல்லையா...
பொண்டாட்டியை பார்க்காமல் இந்த மனுஷனால இருக்கவே முடியாது பாருங்கள் என்க..
ஆமா டி அறைவேக்காடு,முதலில் என் பொண்டாட்டிய வர சொல்லு டி வாயாடி..
அலங்காரம் பண்ணுவதற்கு உதவி செய்து கொண்டிருந்த ஷமீராவோ இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு கணவனிடம் வந்தவள் என்னங்க?
சீக்கிரம் கீழ வாடி...!!
உங்க ஊர்ல இருந்து எல்லாரும் வந்திருக்கிறார்கள்.அப்பா வேற முறைக்கிறார் என்கவும்,ஹம் என்றவளோ கணவனோடு கீழே இறங்கி வந்தாள்
வெளியே போன் பேசிக் கொண்டிருந்த ஜேம்ஸ் உள்ளே வர அவரை தனது சின்ன மச்சானென்று சம்பந்தி வீட்டினருக்கு அந்தோணி அறிமுகம் பண்ண,அவரிடம் நலம் விசாரித்து பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் போது மனைவியோடு அங்கு வந்த செழியனை பார்த்த ஜேம்ஸோ,செழியன் நீங்களா என்று அதிர... அவனுக்கும் அங்கிருந்த ஜேம்ஸை பார்த்து அதிர்வாகத்தான் இருந்தது...
ஷமீராவோ தனது சொந்தபந்தங்களை பார்த்த சந்தோஷத்தில் கண்கலங்க, அவர்களோ அவளை தேற்றினர்.ஆனால் மறந்தும் மகி பக்கம் அவள் திரும்பவேயில்லை.
மகியின் பார்வை முழுவதும் மகளின் மேல் தான் இருந்தது.
வீட்டிற்கு பக்கத்திலே பெரிய காலியிடம் இருப்பதால் அதிலேயே நிச்சயதார்த்தம் நடப்பதற்காக பந்தல் போடப்பட்டிருந்து.
வீட்டின் முன்னால் வந்து கார் நிற்க,அதிலிருந்து இறங்கிய எஸ்தருக்கோ ஒரு பக்கம் மனது குற்ற உணர்ச்சியாக இருக்க,ஆனால் வீட்டினரோ அவரை மரியாதையோடு வரவேற்து நலம் விசாரிக்கவும் அதன் பிறகு இயல்பானர்.
எங்கே ஷமீராவை காணுமென விசாரிக்க இப்போது தான் வீட்டுக்கு போயிருக்கு மா.இரு மா வரச் சொல்கிறேனென்று சுமதி பாட்டி சொல்ல,இல்லைங்க மா...
நான் போய் நேரில் பார்ப்பது தான் மரியாதை...
ஜூலி நீயும் ரூபாவும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கள் நான் போய் ஷமிய பார்த்துட்டு வருகிறேன் என்று சொல்ல,அம்மா சட்டப்படி சம்மந்தி வீட்டுக்கு நம்ம தான் போகணும்.வா ஜூலி போயிட்டு வரலாம் என்று தீபன் கூப்பிட,ஓஹோ அப்படியா சங்கதி நல்லது நல்லது என்று ருத்ரனும் ரூபாவும் சிரித்தனர்.
பின்னர் மூவரும் ஷமீரா வீட்டிற்காக வாங்கிய தின்பண்டங்களோடு பக்கத்து தெருவில் இருக்கும் செழியனின் வீட்டிற்கு வர,அப்பொழுதுதான் செல்லதுரையும் வானதியும் விஷேசம் நடக்கும் வீட்டிற்கு போக வெளியே வந்தவர்கள் வாசலில் கார் வந்து நிற்பதை பார்த்தது யார் என்று பார்க்க எஸ்தர் இறங்கி வருவது தெரிந்தது.
வா மா என்று செல்லத்துரை அன்பாக அழைக்க,வானதியோ வாங்க சம்பந்தி என்க..தன்னை எப்படி எதிர்நோக்குவார்களோ என்று ஒரு பக்கம் யோசனையோடு இருந்து எஸ்தருக்கு இவர்களின் இந்த அழைப்பு அதிர்ச்சியாக இருந்தது
மாமா இதுதான் எங்க அம்மா இதுதான் என் தங்கச்சி ஜூலி,உங்கள் மகன் ருத்ரன் மனைவி என்கவும் அப்படியா வா தாயி என்றவர் உள்ள வாங்க என்று அழைத்துப் போனவர்கள் அங்கிருந்த சோபாவில் உட்கார சொன்னவர்,வானதி மருமகளை கூப்பிடு..
அதற்கு முன்ன வந்தவங்களுக்கு மோர் கலக்கி கொண்டுட்டு வா என்கவும் எஸ்தருக்கோ முதன் முதலில் இந்த வீட்டுக்கு வந்தபோது நடந்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.
பழைய கதையை கிண்டாமல் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்க மூவருக்கும் மோர் கலக்கி எடுத்துட்டு வந்த வானதி இந்தாங்கண்ணி குடிங்க என்கவும்,அவரின் உரிமையான அந்த அழைப்பு எஸ்ருக்கு மனதிற்கு நிறைவை கொடுத்தது.
உங்க மருமகள் நல்லா குடும்பம் பண்றாளா??
எல்லார்கூடையும் நல்லா பழகுறாளா?
அங்க தனியாவே பிறந்து வளர்ந்து பழக்கப்பட்டவள்.இங்கு உள்ள சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் உங்க மருமகளுக்கு தெரியாது.ஆனால் ஒருமுறை சொல்லி கொடுத்தாள் கற்றுப்பாள்.
அவளால் யாருக்கும் ஒன்னும் சங்கடமில்லையே என்று வருத்தம் கலந்து ஒரு தாயாக பரிதவிப்போடு எஸ்தர் கேட்க...ஐயையோ ஏன் இப்படி?
மருமகள் மேல எந்த குறையும் இல்லைங்கண்ணி.செழியன் பொண்டாட்டியை தெரியாதவங்க சொந்தக்காரங்க யாருமே இருக்க மாட்டாங்க.
அதை நாங்க சொல்றதை விட நாலு பேர் சொல்லி நீங்கள் கேட்டால் தான் உங்களுக்கே பெருமையா இருக்கும் என்று செல்லதுரை சொல்லும் போது வெளியே போயிட்டு வீட்டிற்குள் வந்த செழியனோ அங்கிருந்தவர்களை பார்த்து சற்று அதிர்ந்து போனோன்.
பின்னர் வாங்கத்தை வா மச்சான் வாடா ஜூலி என்று நலம் விசாரிக்க, வரோங்க தம்பி நல்லா இருக்கீங்களா என்றார்.
தீபனோ போலி போலிசூஊஊசூஊஊஊ என்றவாறு செழியனை அணைத்தவன் என்ன மாப்பி,என் தங்கச்சி நிச்சயதார்த்தத்தில் ஒரு புடி புடிக்கலாம்னு வயிறு ரொம்ப காய போட்டு இருக்கியோ என்கவும், ஏண்டா சொல்ல மாட்ட...
எங்க வீட்ல என்ன சாப்பாடு இல்லையாடா?உன் தொங்கச்சி பங்ஷன்ல சாப்பிட ஒத்த காலில் நிக்கிறேனென்று மாமனும் மச்சானும் கலாய்த்துக்கொண்டதை கேட்க அவர்களுக்கு சிரிப்பு வந்தது.
அப்பொழுது எஸ்தரோ சம்பந்தி உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் இத நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல.என்றைக்காச்சும் ஒரு நாளைக்கு இந்த விஷயம் தெரிஞ்சு நீங்க என் பொண்ணை தவறாக நினைக்க கூடாது என்கும் போது அங்கு வந்த கண்ணன் எல்லாரும் மதியம் சாப்பாடு சாப்பிடுவதற்கு வர சொல்றாங்க வாங்க...அப்புறம் பேசிக்கலாம் என்றான்.
அதோட அந்த பேச்சும் நின்று விட்டது.
மதிய உணவு பரிமாற,கேளி காலாட்டக்களோடு சாப்பிட்டு முடித்தவர்கள் சாயந்திரம் நடக்க போகும் நிச்சயதார்த்தத்துக்கு தயாரானார்கள்.
நேரமும் கடந்து செல்ல மாப்பிள்ளை வீட்டினர் ஊருக்குள் வந்து விட்டதாக யாரோ வந்து சொல்லவும்,குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு அழைத்துவர வேண்டும் என்று தம்புசாமி தாத்தா சொல்ல, பெரிய மாமாவும் தொரை மச்சானும் அங்கே போயிருக்கிறார்கள் பா என்று கனலரசன் சொல்ல அவரும் சரியென்றார்.
பஸ் வருவதை பார்த்த வீரையன் தாத்தாவும் செல்லதுரையும் கையை காட்டி நிறுத்தினார்கள.
பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி வந்த அந்தோணி வணக்கம் எப்படி இருக்கீங்க என்க,நல்லா இருக்கோம் வாங்க நம்ம குல தெய்வத்தை கும்பிட்டு போகலாம் என்கவும்,பெண் வீட்டினர் பண்பாடு என்பதால் அவர்கள் கிறிஸ்டியனாக இருந்தாலும் கீழே இறங்கி போக கண்மணிக்காக வாங்கிட்டு வந்த புடவை மற்றும் சீர்வரிசையை பொருட்களை எடுத்துட்டு வந்து சாமிக்கு முன்னாடி வைக்கவும் பூசாரியும் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி அம்மனுக்கு காட்டிவிட்டு மஞ்சள் குங்குமத்தை எடுத்து வந்து புடவையின் மேல் வைத்தவர் தீர்க்க சுமங்கலியா நீடூழி வாழ்க என்று வாழ்த்தினார்.
பின்னர் வாங்க என்று அவர்களை அழைத்துக் கொண்டு இவர்கள் வண்டியில் முன்னாடி சென்றார்கள்.
பத்து நிமிட பயணத்தில் தெருவுக்குள் நுழைந்த பஸ்ஸோ வீட்டுக்கு முன்னால் பந்தல் போட்டிருப்பதை பார்த்து சில அடி தள்ளியே பஸ்ஸை நிறுத்தினார்கள்.
மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட்டாங்க என்று யாரோ ஒருவர் சொல்லவும் பட்டாசு சத்தம் விண்ணை பிளக்க,அங்கே ஒரே பரபரப்பானது.
பஸ்ஸிலிருந்து இறங்கியவர்களோ மேளதாளம் இசைக்க,சீர்வரிசை தட்டோடு கண்மணியின் வீட்டை நோக்கி வரவாசலில் நின்று குடும்பமாக வரவேற்தனர்..
மகிக்கோ எஸ்தரை பற்றி கேட்டால் என்ன சொல்வது என்று ஒரே யோசனையாகவே இருந்தது.அதுவும் இல்லாமல் அவரிடம் இங்கு இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ என்று ஒரு பக்கமும் சங்கடமாக இருக்க..,
நீயும் நானும் ஒரே குணம் கிடையாது என்பதை செல்லதுரை தம்பதிகளும் செழியனின் சொந்தக்காரர்களும் அவரை இன்முகமாக வரவேற்து நலம் விசாரிக்க,அவருக்கே அவரை நினைத்து கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக இருந்தது.
தான் இங்கு வந்திருக்கும் போது எப்படி எல்லாம் பேசி சென்றோம் என்பதை நினைத்தவர்,தனது மகள் அம்மா எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது என்று ஒரு பக்கம் உள்ளுக்குள் பயமா இருக்கவும்,எங்கேயாவது மகள் கண்ணில் படுகிறாளா என்று அவரும் அங்கே இங்கேயென தேட,அங்கு இருப்பது போல் தெரியவில்லை.
கண்மணிக்கு அவள் ரூமிலே பியூட்டிஷியன் அலங்காரம் பண்ணிக் கொண்டிருக்க ஷமீரா எஸ்தர் கவிதாவும் அங்கிருந்தனர்.
சோழனூரிலிருந்து வந்து விட்டனர் என்பதை கேள்விப்பட்டார்கள் தவிர கீழே வரவில்லை.எஸ்தருக்கோ மகியின் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை. ஃபங்ஷன் நடக்கும்போது சொந்த பந்தங்களை பார்த்து நலம் விசாரித்துக் கொள்ளலாம் என்று அவரும் அமைதியாகவே அங்கு உட்கார்ந்திருந்தார்.
தனது தாயின் முகத்தை பார்த்த ஷமீராவோ கீழே போகலையா மா என கண்களால் ஜாடை காட்ட,இருக்கட்டும் என்று தலையசைத்தார்..
உறவினர்களோ அங்கிருந்து சொந்த பந்தங்களையும் விட்டு வசதியையும் பார்த்து அந்தோணிக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் கிடைத்திருக்கு என்று சிலர் பெருமையாகவும் சிலர் உள்ளுக்குள் பொறாமை பட்டனர்..
ஆமா மகி எங்கே உன் மகள் மருமகனை காணும் என்று சோழனூரிலிருந்து வந்தவர்கள் கேட்க,அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மகியோ தனது நெற்றியை தடவ...,
அந்த நேரம் அங்கு வந்த செழியன் அவர்களை பார்த்து வணக்கம் என்றவன்,வாங்கப்பா என்று அந்தோணியின் கையை பிடிக்க,எந்திரிச்சி அவன் தோளில் கையை போட்டவர் இதுதான் மாமா உங்க பேத்தியோட புருஷன்,என் தங்கச்சியோட மருமகன்,என்னோட இன்னொரு பையன் இளஞ்செழியன் ஐபிஎஸ் ஆபிசர் என்று அந்தோணி பெருமையோடு சொல்ல..
என்னாது நம்ப ஷமியோட வீட்டுக்காரர் போலீசாஆஆஆ என்று சொந்தங்கள் மட்டும் இல்லை மகியும் அதிர்ந்து போனார்.
மகனை முறைத்தவாறு அங்கு வந்து செல்லதுரை உன் பொண்டாட்டியை கூப்பிட்டு வாப்பா என்க,தந்தையின் முகத்தை பார்த்தவன் பின்னர் மகியிடம் வாங்க மாமா என்று கையைக் கூப்பி சொல்ல,அதிர்வில் இருந்த மகியோ வரேங்க மாப்பிள்ளை என்றவர் நல்லா இருக்கீங்களா?ஷமீரா நல்லாருக்காளா?
ரொம்ப நல்லாருக்கா என்றவன் இதோ வரச் சொல்றேன் என்றவாறு உள்ளே போனான்.
மாடிக்கு வந்தவன் கண்மணியின் ரூம் கதவை தட்ட,உள்ளே இருந்த கவிதாவோ அனேகமாக அந்த விருமாண்டியாக தான் கா இருக்கும் என்று சொல்லிக் கொண்டே போய் கதவை திறக்கவும்,அங்கு செழியன் நிற்பதை பார்த்தவள் நான் தான் சரியா சொன்னேன் இல்லையா...
பொண்டாட்டியை பார்க்காமல் இந்த மனுஷனால இருக்கவே முடியாது பாருங்கள் என்க..
ஆமா டி அறைவேக்காடு,முதலில் என் பொண்டாட்டிய வர சொல்லு டி வாயாடி..
அலங்காரம் பண்ணுவதற்கு உதவி செய்து கொண்டிருந்த ஷமீராவோ இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு கணவனிடம் வந்தவள் என்னங்க?
சீக்கிரம் கீழ வாடி...!!
உங்க ஊர்ல இருந்து எல்லாரும் வந்திருக்கிறார்கள்.அப்பா வேற முறைக்கிறார் என்கவும்,ஹம் என்றவளோ கணவனோடு கீழே இறங்கி வந்தாள்
வெளியே போன் பேசிக் கொண்டிருந்த ஜேம்ஸ் உள்ளே வர அவரை தனது சின்ன மச்சானென்று சம்பந்தி வீட்டினருக்கு அந்தோணி அறிமுகம் பண்ண,அவரிடம் நலம் விசாரித்து பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் போது மனைவியோடு அங்கு வந்த செழியனை பார்த்த ஜேம்ஸோ,செழியன் நீங்களா என்று அதிர... அவனுக்கும் அங்கிருந்த ஜேம்ஸை பார்த்து அதிர்வாகத்தான் இருந்தது...
ஷமீராவோ தனது சொந்தபந்தங்களை பார்த்த சந்தோஷத்தில் கண்கலங்க, அவர்களோ அவளை தேற்றினர்.ஆனால் மறந்தும் மகி பக்கம் அவள் திரும்பவேயில்லை.
மகியின் பார்வை முழுவதும் மகளின் மேல் தான் இருந்தது.