Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 400
- Thread Author
- #1
செழியன் வீடு:
கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு மேலே இருக்கும் ரூமிற்கு வந்து பார்க்க ஷமீராவோ நன்கு தூக்கத்தில் இருப்பது தெரிந்தது.
பிளான் பண்ணி தூங்கிருக்கா போல இருக்கட்டும்!!
எத்தனை நாளைக்கு தான் இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவனு நானும் பாக்க தாண்டி போறேன் என்று புலம்பிக்கொண்டு அவளின் பக்கத்தில் வந்து படுத்தவன் அவளை அணைத்துக் கொண்டு கண்ணை மூட சிறிது நிமிடத்தில் அவனும் தூங்கிவிட்டான்.
விடியலும் வழக்கம் போல் தொடங்க எழுந்து குளித்தவள் துணிகளை எல்லாம் துவைத்து மாடியில் காய போட்டு விட்டு கீழே வர காலை 6 மணியானது.
பின்னர் வழக்கமான வேலைகளை செய்து முடித்தவள் டீ போட்டு எடுத்துக் கொண்டு மாடிக்கு போக செழியனும் அப்பதான் ரெஸ்ட் ரூமில் இருந்து வந்தான்.
கணவன் முன்பு டீயை நீட்ட,ஏன் வாயை திறந்து குடிங்களென்று சொன்னால் உன் வாயில இருக்கு முத்து கொட்டிடுமாடி?.
வழக்கம்போல் அவள் அமைதியாக இருக்கவும் ரொம்ப தாண்டி பண்ற என்றவாறு டீயை வாங்கி குடித்தவன் தாத்தா வீட்டுக்கு போகணும் கிளம்பு என்றவனோ டீ கப்பை எடுத்துக் கொண்டு கீழே சென்று விட்டான்.
சிறிது நிமிடத்தில் ஷமீராவும் கிளம்பி வந்தவள் அத்தை
அங்கு தாத்தா வீட்டிற்கு போயிட்டு வரேன் என்கவும் சரி சரி.கழுத்தில் இன்னொரு செயின் போட்டு போ.யாராவது வந்து போவாங்க என்க..
இன்னொரு செயினாஆஆ என்று அவள் இழுக்க மௌனமாக சிரித்தவர் ஆமாம் ஆமாம்.அதோட அந்த கழுத்தை ஒட்டி போடுற அட்டிகையும் போட்டு போ என்றவாறு கிச்சனிற்குள் சென்றார்.
அய்யோஓஓஓ!
இவ்வளவு நகையை போட்டுகிட்டு எப்படி போகயென அவள் புலம்புவதை கேட்டவன் நாளைக்கு பங்ஷன்ல போட்டுக்கலாம்.இப்போதைக்கு இது போதும் வா டி என்றவாறு வெளியே போக ஷமீராவும் அவன் பின்னாடி சென்றாள்.
செழியன் புல்லட்டை ஸ்டார்ட் பண்ண பின்னாடி ஏறி உட்கார்ந்தாள்.பின்னர் இருவரும் தாத்தா வீட்டுக்கு வந்தனர்.
வாசலிலே அவளை இறக்கி விட்டவன் நீ உள்ளே போ நான் வரேனென்று அங்கிருந்து சென்றான்.
வீட்டிற்குள் வந்த ஷமீராவிடம் நலம் விசாரித்தவர்கள் பின்னர் மற்ற வேலைகளை பார்க்க தொடங்க நேரமும் கடந்து சென்றது.அம்மாடி ஊர்க்காரர்களுக்கு சொல்லணுமே என்றவாறு சுமதி பாட்டி பூ தொடுக்க இன்னும் அன்பும் கனலும் வரலையை சுமதி.
ஆம்பிளைங்க இல்லாமல் பொம்பள மட்டும் போய் சொன்னா நல்லாவா இருக்குமென்று தம்புசாமி தாத்தா கேட்கும் போது வெளியே போயிருந்த ஆண்களும் வீட்டிற்கு வந்தனர்.
கண்மணி டீ எடுத்து வா டி என்றவாறு சோபாவில் உட்கார்ந்த செழியன்,மாமா காய்கறி மளிகை சாமான் காலையிலே வந்துடும்.
"இந்தாங்க மீதி பணம்"
அந்த ரேகா பியூட்டிஷியனுக்கும் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துட்டேன்.அப்போது தான் இவளை கொஞ்சமாவது பாக்குற போல இருக்கும் என்க...
பேரன் சொன்னதை கேட்ட தம்புசாமி தாத்தா,எலேய் எடுபட்ட பயலே என் பேத்திக்கு என்னடா குறைச்ச??உன் மொகர கட்டைய விட என் பேத்தி அழகா தான்டா இருக்குது என்கும் போது...
ஆமா ஆமா..!!
இந்த நொய்யோட பேத்தி உலக அழகி போட்டில கலந்துக்கிட்டு 50 பரிசு வாங்கி இருக்கு என் பேர மூஞ்சி தேஞ்ச திருவோடு போல இருக்கு என்றவாறு வீரையன் தாத்தா வீட்டிற்குள் வர அதுல என்ன சந்தேகம்???
உன் பேரன் மொகரையும் பாரு என் பேத்தி மொகரையும் பாரு யா. .!!
உனக்கெல்லாம் பொண்ணு கொடுத்ததே பெருசு மச்சான் என்று தம்புசாமி தாத்தா சிரிக்க,என் தலையெழுத்து யா..!!
அத்தமவ நொத்தமவனு உன் தங்கச்சியை கட்டி அனுபவிக்கிறேன் என்று வீரையன் தாத்தா முறைக்க...
அவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை யாரு யா என்கூட வாழ சொன்னது என்றவாறு விருமாயி பாட்டி உள்ளே வர,அடக்கடவுளே இந்த கொலகாறி பின்னாடி வருவதை மறந்துட்டேனே..
சும்மாவே தாளிப்பா!!!
இப்ப சொல்லவே வேணாம் என்று வீரையன் தாத்தா புலம்புவதை கேட்டு மற்றவர்களும் சிரித்து விட்டனர்.
சரி எல்லாருக்கும் சொல்ல போகலாமா என்று வீரையன் தாத்தா கேட்க போகலாம் மாமா என்ற அன்பரசன் அம்மா நீ வீட்ல இரு நாங்கள் போயிட்டு வந்துடுறோமென்க சரியா என்றார்..
பின்னர் அவர்கள் எல்லாம் கிளம்பி ஊரில் உள்ள அங்காளி பங்காளி கொண்டான் கொடுத்தான் வீட்டினருக்கெல்லாம் கண்மணி நிச்சயத்திற்கு வர சொல்லி சொல்லிவிட்டு வீட்டிற்கு வருவதற்கே இரவு 9 மணி ஆனது.
கண்மணியும் கவிதாவும் அவர்களுக்கெல்லாம் டிபனை செய்து தயாராக வைத்திருக்க இவர்களும் கையை கழுவிட்டு வந்து உட்கார புவனாவும் ரஞ்சனியும் பரிமாற,ஷமீரா சூடாக தோசை போட்டு கொடுக்கவும் கண்மணி எடுத்து வந்து தந்தாள்.
ஆண்கள் சாப்பிட்டு முடித்து வெளியே இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க,பெண்களும் சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை கழுவி வைக்க,அரைச்ச மருதாணியை எடுத்து வந்த புவனாவோ அவர்களை போட்டுக்க சொல்ல,ஷமீராவோ நான் அங்கு போய் போட்டுக்கிறேனென்றாள்
அக்கா...!!
நீ இங்கையே தங்கேன்.. நாம ஜாலியா இருக்கலாமே கா என்று கவிதா கேட்க,ஷமீராவிற்கும் தங்க ஆசை தான்.ஆனால் கணவன் என்ன சொல்வானோ என்று யோசனையானாள்..
அந்த நேரம் அவளை வீட்டுக்கு அழைத்துப் போக உள்ளே வந்த செழியனும் கவிதா சொன்னதைக் கேட்டவன் ரொம்ப நல்ல காரியம் பண்ணுன டி உன் அக்கா இங்கேயே இருக்கட்டும் நான் அங்கு நிம்மதியா தூங்குவேன் என்று அந்த சூழ்நிலையை இயல்பாக்கினான்.
அடிபொலி அடிபொலி...
அதான் விருமாண்டி சொல்லிட்டாரே பிறகு என்ன கா..வா வா நாம மாடிக்கு போகலாமென்று ஷமீராவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கவிதா போக,கண்மணியோ மருதாணி கிண்ணத்தோடு அவளுங்களுக்கு பின்னாடி சென்றாள்
போகும் மனைவியை தான் செழியனும் பார்த்துக் கொண்டிருந்தான்.ஒரு வார்த்தை வேண்டாம் என்று சொல்கிறாளா பாரு என்று முணவியன்,சரி சுமதி நான் காலையில் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு அவனும் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டான்.
மாடிக்கு வந்தவளோ புல்லட் சத்தம் கேட்டு ரோட்டை பார்க்க கணவன் போவது தெரிந்தது.சிறிது நொடிகள் சென்று வண்டியை நிறுத்தியவன் திரும்பி மாடியை பார்க்க...
அதற்குள் கணவனின் செயலை சுதாரித்தவளோ பின்னாடி தள்ளி போக செழியனுக்கு வெறுமையான மொட்டை மாடி மட்டுமே தெரிந்தது.ப்ச் என்றவாறு வேகமாக அங்கிருந்து சென்றான்.
மகன் மட்டும் வீட்டுக்குள் வருவதை பார்த்த வானதி,எங்கே இளா உன் பொண்டாட்டி?
நீ மட்டும் வர??
அது வந்து மா உன் மருமவளுங்க கூட இருக்கட்டும்னு வந்துட்டேன்.
ம்ம்...சரி பா.
இதை போல விஷேச நேரத்தில் எல்லாரும் ஒரு இடத்தில் இருப்பது நல்லாருக்கும்.நீ என்ன பண்ணுற உன் பொண்டாட்டிக்கு மாத்து துணி எடுத்துட்டு காலையிலேயே போ..
சரி மா என்றவன் மேலே இருக்கும் ரூமிற்குள் வர மனைவி இல்லாத அறையோ வெறுமையாக இருப்பது போல தோணவும் தன்னவளின் மேலே அவ்வளவு ஆத்திரம் வந்தது.
பொதிரென்று மெத்தையில் விழுந்தவனை பார்த்த மனசாட்சி ஏன்டா உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா??
இத்தனை வருஷமா இந்த கட்டிலில் தனியா தானே படுத்திருந்த??
என்னமோ பிறந்ததிலிருந்து உன் பொண்டாட்டி கூடயே இருந்த போல ஓவரா பண்றியே... முதல்ல உன் பொண்டாட்டியை சமாதானப்படுத்துற வழிய பாருடா? ??
இல்லனாக்க அவளுக்கு இருக்கிற கோபத்துக்கு மாச கணக்குல அங்கே தங்குனாலும் தங்கிடுவாள் என்க, அதைக் கேட்டவன் கண்டிப்பா நீ சொல்றது உண்மைதான் அவள் தாங்குவாள்..
நாளைக்கு இங்க வந்து தானே ஆகணும்.அப்ப அவளுக்கு இருக்கு என்று சொல்லிக் கொண்டு புரண்டு புரண்டு படுத்தவன் ஒருவழியாக தூங்கினான்.
முதலில் கண்மணியின் இரண்டு கைகளிலும் மருதாணி போட்டு முடித்ததும் பின்னர் ஷமீராவுக்கு கவிதா போட்டு விட கவிதாவோ தன் ஒரு கையில் போட்டுக் கொண்டிருக்கும் போது புவனாவும் ரஞ்சனியும் மாடிக்கு வந்தனர்.
இன்னும் முடியலையா??
சாரல் வேற அதிகமா வீசுது!!
நாளைக்கு பங்க்ஷன் இருக்கே மா..மருதாணி வேற போட்டுக்கிட்டு இருக்கீங்க ரொம்ப குளிர்ச்சி என்றவர் கவிதாவின் இன்னொரு கையிலும் மருதாணி போட்டு விட,ரஞ்சனியும் போட்டுக்கொண்டார்..
நான் கீழே போய் மருதாணி போட்டுக்குறேன் என்ற புவனா அவர்களின் சிறு வயது ஞாபகங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.
பின்னர் கீழே வந்து கண்மணியின் ரூம் கதவை திறந்து விட மூணு பேரும் ஆளுக்கு ஒரு பக்கமா தரையில் படுத்துக் கொண்டாளுங்கள்.
வெகு நேரம் அரட்டை அடித்தவளுங்கள் பின்னர் தூங்கினாளுங்கள்.வழக்கம் போல எழுந்த ஷமீராவோ ரெஸ்ட் ரூமிற்குள் சென்று கையை கழுவி விட்டு பார்க்க மருதாணியோ கோவை பழம் போல சிவந்திருந்தது.
பின்னர் குளித்து வெளியே வந்தவளோ
கண்மணி ரூமில் இருக்கும் கபோர்டை திறந்தவள் அவளின் நைட்டியை போட்டுக் கொண்டிருக்கும் போது ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறக்கும் அங்கே ரஞ்சனி நின்று கொண்டிருந்தார்...
சொல்லுங்க மா என்க..
இந்தா டா உன் புருசன் துணி எடுத்து வந்துருக்கானென்று நீட்ட,சரிங்கமா என்று வாங்கியவள் அதிலிருந்த புடவையை கட்டிக் கொண்டு வேகமாக கீழே வர அங்கு செழியனோ சோபாவில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது....
வெகு நேரம் வரையிலும் ஷமீராவும் தூக்கமின்றி தான் தவித்தாள்.அவளுக்கும் கணவனை விட்டு இங்கு தங்கியது மனதிற்குள் ஒரு மாதிரியாகவே இருந்தது.
ஆனால் இவ்வளவு அதிகாலையிலே கணவன் வருவான் என்பதை எதிர் பார்க்கவில்லை.ரஞ்சனி சொல்லியதும் வேகமாக புடவை கட்டிக்கொண்டு படியில் இறங்கியவள் பின்னர் நிதானமாக வருவதை போல வர..
செழியனோ கொலுசு சத்தம் கேட்டு திரும்பி பார்க்க மனைவி வருவது தெரிந்தது.காலையிலேயே ஊட்டி ரோஜா போல சும்மா கும்முனு இருக்கிறாளே...
சண்டாள சிறுக்கி நாலு அஞ்சு நாளா தொடக்கூட விடலையே இன்னைக்கு வாடி என்று மனதிற்குள்ளே முணவிக் கொண்டிருந்தான்.
இந்தா டா காபி என்று புவனா கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி குடித்தவள் அம்மா நான் வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன் என்க
அவரோ சரி மா என்றார்.
கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு மேலே இருக்கும் ரூமிற்கு வந்து பார்க்க ஷமீராவோ நன்கு தூக்கத்தில் இருப்பது தெரிந்தது.
பிளான் பண்ணி தூங்கிருக்கா போல இருக்கட்டும்!!
எத்தனை நாளைக்கு தான் இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவனு நானும் பாக்க தாண்டி போறேன் என்று புலம்பிக்கொண்டு அவளின் பக்கத்தில் வந்து படுத்தவன் அவளை அணைத்துக் கொண்டு கண்ணை மூட சிறிது நிமிடத்தில் அவனும் தூங்கிவிட்டான்.
விடியலும் வழக்கம் போல் தொடங்க எழுந்து குளித்தவள் துணிகளை எல்லாம் துவைத்து மாடியில் காய போட்டு விட்டு கீழே வர காலை 6 மணியானது.
பின்னர் வழக்கமான வேலைகளை செய்து முடித்தவள் டீ போட்டு எடுத்துக் கொண்டு மாடிக்கு போக செழியனும் அப்பதான் ரெஸ்ட் ரூமில் இருந்து வந்தான்.
கணவன் முன்பு டீயை நீட்ட,ஏன் வாயை திறந்து குடிங்களென்று சொன்னால் உன் வாயில இருக்கு முத்து கொட்டிடுமாடி?.
வழக்கம்போல் அவள் அமைதியாக இருக்கவும் ரொம்ப தாண்டி பண்ற என்றவாறு டீயை வாங்கி குடித்தவன் தாத்தா வீட்டுக்கு போகணும் கிளம்பு என்றவனோ டீ கப்பை எடுத்துக் கொண்டு கீழே சென்று விட்டான்.
சிறிது நிமிடத்தில் ஷமீராவும் கிளம்பி வந்தவள் அத்தை
அங்கு தாத்தா வீட்டிற்கு போயிட்டு வரேன் என்கவும் சரி சரி.கழுத்தில் இன்னொரு செயின் போட்டு போ.யாராவது வந்து போவாங்க என்க..
இன்னொரு செயினாஆஆ என்று அவள் இழுக்க மௌனமாக சிரித்தவர் ஆமாம் ஆமாம்.அதோட அந்த கழுத்தை ஒட்டி போடுற அட்டிகையும் போட்டு போ என்றவாறு கிச்சனிற்குள் சென்றார்.
அய்யோஓஓஓ!
இவ்வளவு நகையை போட்டுகிட்டு எப்படி போகயென அவள் புலம்புவதை கேட்டவன் நாளைக்கு பங்ஷன்ல போட்டுக்கலாம்.இப்போதைக்கு இது போதும் வா டி என்றவாறு வெளியே போக ஷமீராவும் அவன் பின்னாடி சென்றாள்.
செழியன் புல்லட்டை ஸ்டார்ட் பண்ண பின்னாடி ஏறி உட்கார்ந்தாள்.பின்னர் இருவரும் தாத்தா வீட்டுக்கு வந்தனர்.
வாசலிலே அவளை இறக்கி விட்டவன் நீ உள்ளே போ நான் வரேனென்று அங்கிருந்து சென்றான்.
வீட்டிற்குள் வந்த ஷமீராவிடம் நலம் விசாரித்தவர்கள் பின்னர் மற்ற வேலைகளை பார்க்க தொடங்க நேரமும் கடந்து சென்றது.அம்மாடி ஊர்க்காரர்களுக்கு சொல்லணுமே என்றவாறு சுமதி பாட்டி பூ தொடுக்க இன்னும் அன்பும் கனலும் வரலையை சுமதி.
ஆம்பிளைங்க இல்லாமல் பொம்பள மட்டும் போய் சொன்னா நல்லாவா இருக்குமென்று தம்புசாமி தாத்தா கேட்கும் போது வெளியே போயிருந்த ஆண்களும் வீட்டிற்கு வந்தனர்.
கண்மணி டீ எடுத்து வா டி என்றவாறு சோபாவில் உட்கார்ந்த செழியன்,மாமா காய்கறி மளிகை சாமான் காலையிலே வந்துடும்.
"இந்தாங்க மீதி பணம்"
அந்த ரேகா பியூட்டிஷியனுக்கும் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துட்டேன்.அப்போது தான் இவளை கொஞ்சமாவது பாக்குற போல இருக்கும் என்க...
பேரன் சொன்னதை கேட்ட தம்புசாமி தாத்தா,எலேய் எடுபட்ட பயலே என் பேத்திக்கு என்னடா குறைச்ச??உன் மொகர கட்டைய விட என் பேத்தி அழகா தான்டா இருக்குது என்கும் போது...
ஆமா ஆமா..!!
இந்த நொய்யோட பேத்தி உலக அழகி போட்டில கலந்துக்கிட்டு 50 பரிசு வாங்கி இருக்கு என் பேர மூஞ்சி தேஞ்ச திருவோடு போல இருக்கு என்றவாறு வீரையன் தாத்தா வீட்டிற்குள் வர அதுல என்ன சந்தேகம்???
உன் பேரன் மொகரையும் பாரு என் பேத்தி மொகரையும் பாரு யா. .!!
உனக்கெல்லாம் பொண்ணு கொடுத்ததே பெருசு மச்சான் என்று தம்புசாமி தாத்தா சிரிக்க,என் தலையெழுத்து யா..!!
அத்தமவ நொத்தமவனு உன் தங்கச்சியை கட்டி அனுபவிக்கிறேன் என்று வீரையன் தாத்தா முறைக்க...
அவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை யாரு யா என்கூட வாழ சொன்னது என்றவாறு விருமாயி பாட்டி உள்ளே வர,அடக்கடவுளே இந்த கொலகாறி பின்னாடி வருவதை மறந்துட்டேனே..
சும்மாவே தாளிப்பா!!!
இப்ப சொல்லவே வேணாம் என்று வீரையன் தாத்தா புலம்புவதை கேட்டு மற்றவர்களும் சிரித்து விட்டனர்.
சரி எல்லாருக்கும் சொல்ல போகலாமா என்று வீரையன் தாத்தா கேட்க போகலாம் மாமா என்ற அன்பரசன் அம்மா நீ வீட்ல இரு நாங்கள் போயிட்டு வந்துடுறோமென்க சரியா என்றார்..
பின்னர் அவர்கள் எல்லாம் கிளம்பி ஊரில் உள்ள அங்காளி பங்காளி கொண்டான் கொடுத்தான் வீட்டினருக்கெல்லாம் கண்மணி நிச்சயத்திற்கு வர சொல்லி சொல்லிவிட்டு வீட்டிற்கு வருவதற்கே இரவு 9 மணி ஆனது.
கண்மணியும் கவிதாவும் அவர்களுக்கெல்லாம் டிபனை செய்து தயாராக வைத்திருக்க இவர்களும் கையை கழுவிட்டு வந்து உட்கார புவனாவும் ரஞ்சனியும் பரிமாற,ஷமீரா சூடாக தோசை போட்டு கொடுக்கவும் கண்மணி எடுத்து வந்து தந்தாள்.
ஆண்கள் சாப்பிட்டு முடித்து வெளியே இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க,பெண்களும் சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை கழுவி வைக்க,அரைச்ச மருதாணியை எடுத்து வந்த புவனாவோ அவர்களை போட்டுக்க சொல்ல,ஷமீராவோ நான் அங்கு போய் போட்டுக்கிறேனென்றாள்
அக்கா...!!
நீ இங்கையே தங்கேன்.. நாம ஜாலியா இருக்கலாமே கா என்று கவிதா கேட்க,ஷமீராவிற்கும் தங்க ஆசை தான்.ஆனால் கணவன் என்ன சொல்வானோ என்று யோசனையானாள்..
அந்த நேரம் அவளை வீட்டுக்கு அழைத்துப் போக உள்ளே வந்த செழியனும் கவிதா சொன்னதைக் கேட்டவன் ரொம்ப நல்ல காரியம் பண்ணுன டி உன் அக்கா இங்கேயே இருக்கட்டும் நான் அங்கு நிம்மதியா தூங்குவேன் என்று அந்த சூழ்நிலையை இயல்பாக்கினான்.
அடிபொலி அடிபொலி...
அதான் விருமாண்டி சொல்லிட்டாரே பிறகு என்ன கா..வா வா நாம மாடிக்கு போகலாமென்று ஷமீராவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கவிதா போக,கண்மணியோ மருதாணி கிண்ணத்தோடு அவளுங்களுக்கு பின்னாடி சென்றாள்
போகும் மனைவியை தான் செழியனும் பார்த்துக் கொண்டிருந்தான்.ஒரு வார்த்தை வேண்டாம் என்று சொல்கிறாளா பாரு என்று முணவியன்,சரி சுமதி நான் காலையில் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு அவனும் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டான்.
மாடிக்கு வந்தவளோ புல்லட் சத்தம் கேட்டு ரோட்டை பார்க்க கணவன் போவது தெரிந்தது.சிறிது நொடிகள் சென்று வண்டியை நிறுத்தியவன் திரும்பி மாடியை பார்க்க...
அதற்குள் கணவனின் செயலை சுதாரித்தவளோ பின்னாடி தள்ளி போக செழியனுக்கு வெறுமையான மொட்டை மாடி மட்டுமே தெரிந்தது.ப்ச் என்றவாறு வேகமாக அங்கிருந்து சென்றான்.
மகன் மட்டும் வீட்டுக்குள் வருவதை பார்த்த வானதி,எங்கே இளா உன் பொண்டாட்டி?
நீ மட்டும் வர??
அது வந்து மா உன் மருமவளுங்க கூட இருக்கட்டும்னு வந்துட்டேன்.
ம்ம்...சரி பா.
இதை போல விஷேச நேரத்தில் எல்லாரும் ஒரு இடத்தில் இருப்பது நல்லாருக்கும்.நீ என்ன பண்ணுற உன் பொண்டாட்டிக்கு மாத்து துணி எடுத்துட்டு காலையிலேயே போ..
சரி மா என்றவன் மேலே இருக்கும் ரூமிற்குள் வர மனைவி இல்லாத அறையோ வெறுமையாக இருப்பது போல தோணவும் தன்னவளின் மேலே அவ்வளவு ஆத்திரம் வந்தது.
பொதிரென்று மெத்தையில் விழுந்தவனை பார்த்த மனசாட்சி ஏன்டா உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா??
இத்தனை வருஷமா இந்த கட்டிலில் தனியா தானே படுத்திருந்த??
என்னமோ பிறந்ததிலிருந்து உன் பொண்டாட்டி கூடயே இருந்த போல ஓவரா பண்றியே... முதல்ல உன் பொண்டாட்டியை சமாதானப்படுத்துற வழிய பாருடா? ??
இல்லனாக்க அவளுக்கு இருக்கிற கோபத்துக்கு மாச கணக்குல அங்கே தங்குனாலும் தங்கிடுவாள் என்க, அதைக் கேட்டவன் கண்டிப்பா நீ சொல்றது உண்மைதான் அவள் தாங்குவாள்..
நாளைக்கு இங்க வந்து தானே ஆகணும்.அப்ப அவளுக்கு இருக்கு என்று சொல்லிக் கொண்டு புரண்டு புரண்டு படுத்தவன் ஒருவழியாக தூங்கினான்.
முதலில் கண்மணியின் இரண்டு கைகளிலும் மருதாணி போட்டு முடித்ததும் பின்னர் ஷமீராவுக்கு கவிதா போட்டு விட கவிதாவோ தன் ஒரு கையில் போட்டுக் கொண்டிருக்கும் போது புவனாவும் ரஞ்சனியும் மாடிக்கு வந்தனர்.
இன்னும் முடியலையா??
சாரல் வேற அதிகமா வீசுது!!
நாளைக்கு பங்க்ஷன் இருக்கே மா..மருதாணி வேற போட்டுக்கிட்டு இருக்கீங்க ரொம்ப குளிர்ச்சி என்றவர் கவிதாவின் இன்னொரு கையிலும் மருதாணி போட்டு விட,ரஞ்சனியும் போட்டுக்கொண்டார்..
நான் கீழே போய் மருதாணி போட்டுக்குறேன் என்ற புவனா அவர்களின் சிறு வயது ஞாபகங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.
பின்னர் கீழே வந்து கண்மணியின் ரூம் கதவை திறந்து விட மூணு பேரும் ஆளுக்கு ஒரு பக்கமா தரையில் படுத்துக் கொண்டாளுங்கள்.
வெகு நேரம் அரட்டை அடித்தவளுங்கள் பின்னர் தூங்கினாளுங்கள்.வழக்கம் போல எழுந்த ஷமீராவோ ரெஸ்ட் ரூமிற்குள் சென்று கையை கழுவி விட்டு பார்க்க மருதாணியோ கோவை பழம் போல சிவந்திருந்தது.
பின்னர் குளித்து வெளியே வந்தவளோ
கண்மணி ரூமில் இருக்கும் கபோர்டை திறந்தவள் அவளின் நைட்டியை போட்டுக் கொண்டிருக்கும் போது ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறக்கும் அங்கே ரஞ்சனி நின்று கொண்டிருந்தார்...
சொல்லுங்க மா என்க..
இந்தா டா உன் புருசன் துணி எடுத்து வந்துருக்கானென்று நீட்ட,சரிங்கமா என்று வாங்கியவள் அதிலிருந்த புடவையை கட்டிக் கொண்டு வேகமாக கீழே வர அங்கு செழியனோ சோபாவில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது....
வெகு நேரம் வரையிலும் ஷமீராவும் தூக்கமின்றி தான் தவித்தாள்.அவளுக்கும் கணவனை விட்டு இங்கு தங்கியது மனதிற்குள் ஒரு மாதிரியாகவே இருந்தது.
ஆனால் இவ்வளவு அதிகாலையிலே கணவன் வருவான் என்பதை எதிர் பார்க்கவில்லை.ரஞ்சனி சொல்லியதும் வேகமாக புடவை கட்டிக்கொண்டு படியில் இறங்கியவள் பின்னர் நிதானமாக வருவதை போல வர..
செழியனோ கொலுசு சத்தம் கேட்டு திரும்பி பார்க்க மனைவி வருவது தெரிந்தது.காலையிலேயே ஊட்டி ரோஜா போல சும்மா கும்முனு இருக்கிறாளே...
சண்டாள சிறுக்கி நாலு அஞ்சு நாளா தொடக்கூட விடலையே இன்னைக்கு வாடி என்று மனதிற்குள்ளே முணவிக் கொண்டிருந்தான்.
இந்தா டா காபி என்று புவனா கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி குடித்தவள் அம்மா நான் வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன் என்க
அவரோ சரி மா என்றார்.