Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
வனிச்சூர்:
என்ன மாமா பண்றீங்களென்று ஷமீராவின் அப்பா கத்த,நீ சும்மா இரு மகி...புள்ளை உறவு வேண்டாம்னு நீ சொல்லிட்ட...
உனக்காக என் தங்கச்சி மவளை வேண்டாமென்று தூக்கி போட முடியாது புரியுதா என்று கடுமையாக பேசியவர்,உங்க பையன் தான் பெருசுன்னு எங்களையெல்லாம் உதறி தள்ளிட்டு வந்திருக்கு .எந்த அளவுக்கு நல்லபடியா பார்த்துக்கணுமோ,அப்படி நீங்க பார்த்திருப்பீங்கன்னு நம்பி இங்கிருந்து போறேன்.
நாளைக்கு உங்களால என் பொண்ணுக்கொரு பிரச்சனை என்றால் நிச்சயமா நான் மனுசனா இருக்க மாட்டேன்...இதை மனதில் வச்சிக்குங்களென்று கடுமையாக சொல்ல...
அப்படி ஒரு சூழ்நிலை ஒரு காலமும் உங்க பொண்ணுக்கு வராது.உங்க பொண்ணு உங்க வீட்டில் இருந்ததை விட என் மகன் மகாராணியாக அவன் பொண்டாட்டிய வச்சு பார்த்துப்பான்.அந்த அளவுக்கு என் பையனுக்கு தெம்பு இருக்குங்களென்றார் வானதி.
எது...இந்த ஓட்டு வீட்ல உங்க மகன் மகாராணியா வச்சு பார்த்துப்பானோனு இளக்காரமாக எஸ்தர் சொல்ல..எம்மா வெளியில பாத்துட்டு இது ஓட்டு வீடுன்னு சொல்றியோ?முதல்ல வீட்டு உள்ளார போய் ஒவ்வொன்னையும் பார்த்துட்டு வந்து சொல்லுமா .
மாளிகை போல வீடு கட்டி வச்சிருக்கோம்... எங்க வீட்ட பார்த்து அசந்து போகாத ஆளு இந்த சுற்று வட்டார கிராமத்துல ஒருத்தவங்களும் கிடையாது மா என்று வீரையன் சொல்ல,உண்மையிலேயே அந்த வீட்டில் உள்ள மர அலங்கார பொருள்களும் ஒவ்வொரு தூணிலிருக்கும் சித்திரங்களுமே அவர்களுக்கு வியப்பை கொடுத்தது என்பது மறுக்க முடியாத நிஜம்.
அதான் அப்பா அம்மா வேண்டாமென்று சொல்லி விட்டாளே இனி இங்கென்ன வேலை என்றவாறு கோபமாக மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு மகி வெளியே சென்று விட மற்றவர்களும் ஷமீராவை பார்த்து விட்டு வீட்டில் இருப்பவர்களிடம் தலையசைத்தபடி அங்கிருந்து சென்றனர்.
வீட்டில் இருந்தவர்களுக்கு இப்பொழுது தான் மழை பெய்து விட்டது போலிருந்தது.அழுது கொண்டிருந்த மனைவியை தோளோடு அணைத்து சமாதானம் பண்ணிக் கொண்டிருக்கும் பேரனை பார்த்து,செழியா உள்ள கூட்டிட்டு போ என்று தம்பிசாமி சொல்லவும் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மேலேயிருக்கும் ரூமிற்குள் வந்தவன் அவளை சமாதானப்படுத்தி பார்க்க,அவளோ அழுகையை நிறுத்தாததால் அழுது கொண்டிருப்பவளின் உதட்டோடு தனது வலிமையான உதட்டை புதைத்தான்.
முதன் முதலாக தன்னவனிடமிருந்து கிடைக்கும் இதழ் முத்தத்தை கண்டு அதிர்ந்து போனவளோ கண்கள் விரிய கணவனை பார்க்க ஒரு கையால் மனைவியை தன்னோடு இறுக்கியன் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து கொண்டு அவள் உதட்டிலே தனது கோபத்தையும் அவளின் மன வலியையும் தீர்த்துக் கொண்டிருந்தான்.
வானதி அந்த காலண்டர் எடுத்துட்டு வா என்க,சரிங்க மாமா என்றவர் அங்கே சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்ததை எடுத்துட்டு வந்து கொடுக்க அதில் அடுத்த முகூர்த்த தேதியை பார்த்தவர் இன்னும் எட்டு நாள்ல இந்த மாசத்துக்கான கடைசி முகூர்த்தம் வருது ...
அன்னைக்கு நம்ம மலையம்மன் கோயில்ல வரவேற்பு காரியத்தை வச்சுக்கலாம்.அது சரியா இருக்கும் என்க,வேற வழி செஞ்சிதானே ஆகணும் மாமா என்றார்.
மகனுக்கு செய்கிறதை நல்ல மனசோடு செய்.இன்னும் நாலு அஞ்சு ஒன்னும் நீ பெத்து வைக்கல.என் அண்ணன் குடும்பத்தோட அடுத்த தலைமுறை வாரிசு...
இதற்கு மனநிறைவோடு செய்ற போல இருந்தாக்க இதுல நீ கலந்து இல்லன்னா ஒதுங்கி இரு என்கவும், தனது சின்ன மாமனாரின் கண்டிப்பான வார்த்தையை கேட்டவர் சரிங்க மாமானு வானதி சொல்லவும் துரை நீ என்னடா சொல்ற?எதுவுமே பேசாமல் கல்ல முழுங்கினவன் போல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்?
அதான் நீயே முடிவு எடுத்துட்டியேப்பா, அப்புறம் வேற என்னத்த நான் சொல்ல போறேன்?சொந்த பந்தங்களை வர வச்சி நல்லபடியா செஞ்சுடலாம் பா.
அப்ப அதுவரைக்கும் புள்ளைய நான் வீட்டுக்கு கூப்பிட்டு போய் வச்சிருக்கிறேனென்ற தம்புசாமி அங்கிருந்து பேரனுக்கு குரல் கொடுக்க மனைவியோடு இதழ் போரிலிருந்தவன் தனது தாத்தாவின் குரலில் அவளிடமிருந்து மனமின்றி விலகியவன் தனது தலை முடியை கோதிக்கொண்டு கீழே வந்தான்.
சொல்லு தாத்தா என்க...செழியா வரும் 20 ஆம் தேதியில் இரண்டு பேருக்கும் நம்ம மலையம்மன் கோவில் தாலி பிரிச்சு கோக்கும் காரியம் வச்சிருக்கு. அதுவரைக்கும் பொண்ண அங்க கூட்டிட்டு போறோமென்கவும், என்ன புதுசா இல்லாத வேலை பண்ற...
அதெல்லாம் எப்படி நடந்துக்கனுமென்று எங்களுக்கு தெரியும்.அவ இங்கையே இருக்கட்டுமென்று செழியன் வேகமாக சொல்ல,அடேய் அது அதுக்கு சடங்கு சம்பிரதாயம் இருக்குடா.
முன்னோர்கள் எதுக்கு இதெல்லாம் செஞ்சு வச்சுருக்காங்கனு வீரையன் சத்தம் போட செழியனாலும் தனது அப்புச்சி பேச்சை கேட்டு ஒன்னும் சொல்ல முடியவில்லை....
போய் அந்த புள்ளைய கூப்பிட்டு வா டா.
ம்ம்..கூட்டிட்டு வரேனென்று பல்லை கடித்துக் கொண்டு மாடிக்கு போனவன் கதவை திறந்து உள்ளே போய் தன்னவளிடம் விஷயத்தை சொல்ல அவளும் சரி என்றாள்...
என்னடி உனக்கு அவ்வளவு சந்தோஷமா என்னை விட்டு தனியா போய் இருக்கிறதுக்கென்க,அவளோ எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் செழியனுக்கு கோவம் வந்தது.
கட்டிலின் மேல் உட்கார்ந்திருக்கும் மனைவியின் கையை பிடித்து இழுத்து தன்னோடு அணைத்தவன்,ஏண்டி போக மாட்டேன்னு பேச்சுக்கு கூட ஒரு வார்த்தை சொல்லாமல்,உடனே சரினு சொல்லுறனு இறுக்க, வலியில் லேசாக முகத்தை சுளித்தாள்.
எலேய் இன்னும் என்ன பண்றனு தம்புசாமி குரல் கொடுக்க,இந்த தாத்தன் வேற என பல்லை கடித்தவன் மனைவிக்கு அவசர அவசரமாக எண்ணற்ற முத்தங்களை பரிசாக கொடுத்தவன்,பேகை எடுத்துட்டு வா என்றவாறு வெளியே போக சிரித்துக் கொண்டே முகத்தில் இருக்கும் ஈரத்தை துடைத்தவள் கணவன் பின்னே நடந்து கீழே வந்தாள்.
ஆத்தா நம்ப ஊட்டுக்கு போகலாம்.... மொறப்படி நீ இந்த ஊட்டுக்கு மருமவளா வருவதுதான் உனக்கு கௌரவம் என்க,சரிங்க தாத்தா என்றாள்.
பின்னர் பேரனையும் பேரன் பொண்டாட்டியையும் அழைத்துக்கொண்டு பக்கத்து தெருவிலிருக்கும் தனது வீட்டை நோக்கி சென்றவர் ஐந்து நிமிட நடை பயணத்தில் அந்த பெரிய வீட்டிற்கு வந்த தம்புசாமி,சுமதி சுமதியென மனைவியை கூப்பிட்டார்..
சமையல் கட்டில் இரண்டு மருமகள்களோடு வேலையாக இருந்தவர் உங்க மாமனார் கூப்பிடுறாரு கேட்டுட்டு வரேனென்று மருமகளிடம் சொல்லிக் கொண்டு வெளியே வர,அங்கே தனது பேரனும் பேத்தியும் நிற்பதை பார்த்து யாத்தி என்றவர்....அம்மாடி புவனா புவனா என்று தனது பெரிய மருமகளை கூப்பிட மாமியாரின் குரலை கேட்டு அவரும் வாசலுக்கு வர வேகமாக போய் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வா மா என்றார்...
சரிங்க அத்தை என்று உள்ளே போனவர் ரஞ்சனி நம்ப செழியனும் அவன் பொண்டாட்டியும் வந்திருக்காங்களென்று தனது ஓரகத்திக்கு குரல் கொடுத்துக்கொண்டு ஆலத்தைக் கரைத்து எடுத்து வந்து மாமியாரிடம் நீட்டினார்..
அதை வாங்கியவர் தனது பேரனுக்கும் பேத்திக்கும் மூன்று சுற்று சுத்தி பொட்டு வைத்தவர் உள்ள வாயா,வலது கால எடுத்து வச்சு வாமா என்கவும் தனது தாய் பிறந்த வீட்டிற்கு மனைவியோடு உள்ளே போனான்.
இருவரையும் அங்கிருந்த சோபாவில் உட்கார சொல்லிய சுமதி,ஆத்தா ரஞ்சனி பாலும் பழமும் எடுத்துட்டு வா என்று இரண்டாவது மருமகளுக்கு சொல்ல,சரிங்க அத்தைனு சிறிது நிமிடத்தில் பாலும் பழமும் கரைத்து எடுத்துட்டு வர அதை வாங்கி பேரனுக்கு கொடுத்தவர் நீ குடிச்சிட்டு பிள்ளைக்கு குடுயா என்றார்.
தனது அம்மாச்சியின் பேச்சை மறுக்க முடியாமல் குடித்துவிட்டு மனைவிக்கு கொடுக்க,இருக்கும் மனநிலையில் அதை குடிக்க அவளுக்கு விருப்பமில்லை.இருந்தாலும் பெரியவர்களுக்காக என்பதால் கொஞ்சூண்டு குடித்துவிட்டு மீதம் வைத்து விட்டாள்.
அதற்குள் வெளியே பரமசிவத்திடம் பேசிக் கொண்டிருந்த தம்புசாமி தாத்தாவும் வீட்டின் உள்ளே வந்தவர் அம்மா புவனா-ரஞ்சனி, செழியன் பொண்டாட்டிக்கு அடுத்த வாரம் நம்ம கோயில்ல தாலி பிரிச்சி கோக்குறதுக்காக முடிவு பண்ணிருக்கு.
அதுவரைக்கும் புள்ளை இந்த வீட்டுல தான் இருக்கும் என்கவும் சரிங்க மாமா என்றனர்.
அப்புறம் இன்னொரு விஷயம்,நம்ப கண்மணிய செழியனுக்கு கட்ட உங்க எல்லாருக்கும் எண்ணம் இருந்துச்சுனு எனக்கு நல்லா தெரியும்.யாருக்கு யாரோ அதுபடி தான் நடக்கும்.
அந்த கோவத்த மனசுல வச்சுக்கிட்டு நடந்துக்கிட்டீங்கனாக்க அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேனென்று கரராக சொல்ல,மாமனாரின் கோபத்தை தெரிந்தவர்களோ அப்படி எல்லாம் இல்லை,இதும் நம்ப புள்ளைதானே மாமாயென்று இருவரும் சொல்ல மருமகளுங்களின் வார்த்தையை கேட்டவரோ வழக்கம்போல் அவர்கள் எண்ணி மனதிற்குள் பெருமைப்பட்டார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஷமீராவோ அருகில் உட்கார்ந்திருந்த கணவனை நிமிர்ந்து பார்க்க,மனைவியின் பார்வையை படித்த செழியனோ ஆத்தாடி....இவளிடம் கண்மணி விஷயத்தை பற்றி இதுவரை சொல்லவே இல்லையேனு திருதிருவென்று முழித்தான்.
செழியா,பிள்ளைக்கு மேல இருக்குற அந்த ரூம காட்டுனு தம்புசாமி சொல்ல சரி தாத்தா என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு மாடியிலிருக்கும் ரூமிற்கு போனான்.
வெளியே பார்க்க ஓட்டு வீடு போலிருந்தாலும் உள்ளே வந்து பார்த்தால் சின்ன அரண்மனை போல அழகாகயிருந்தது.
அந்த வீட்டை ரசித்த படியே ஷமீராவும் படியில் ஏறி மேலேயிருக்கும் ரூமிற்கு வந்தாள்.கதவை திறந்து விட்டவன் இது நாங்க வந்தா தங்குறதுனு மனைவியிடம் சொல்ல சரி என்றாள்.
அத்தைங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்கடி...அதற்கும் அவள் எந்த பதிலும் சொல்லவில்லை தலை மட்டும் ஆட்டினாள்.என்னடி நான் பேசிட்டு இருக்கேன் எதுவுமே பேச மாட்டுறனு மனைவியின் தாடையை பிடித்து கேட்க யார் இந்த கண்மணி என்கவும் ஹா ஹா ஹா என்று சிரித்தவன் என்னடி பொறாமை வந்துவிட்டதோ?.
நான் ஒன்னும் அப்படி எல்லாம் கேட்கவில்லையே அவங்க ரெண்டு பேர்ல யாரோட பொண்ணு கண்மணி என்று தெரியலை.அதுக்கு தான் கேட்டேன்.ஓவரா சீன் போடாதீங்களென்றாள்.
மனைவியிடம் இருக்கும் அந்த துடுக்கத்தனம் திரும்புவதை பார்த்து விட்டு,அவளை தன்னோடு இறுக்கமாக அணைத்தவன் உங்க அப்பா அம்மா பேசுனதை நினைச்சு வருத்தமா இருக்காடி என்க..அவளோ எதுவும் சொல்லாமல் கணவனின் நெஞ்சின் மேல் சாய்ந்து கொண்டாள்.
போக போக எல்லாம் சரியாகிவிடும் என்கவும்,நீங்கள் அப்படி நினைச்சுட்டு இருக்கீங்களா?எங்க அப்பாவ பத்தி உங்களுக்கு தெரியாது.
என்ன மாமா பண்றீங்களென்று ஷமீராவின் அப்பா கத்த,நீ சும்மா இரு மகி...புள்ளை உறவு வேண்டாம்னு நீ சொல்லிட்ட...
உனக்காக என் தங்கச்சி மவளை வேண்டாமென்று தூக்கி போட முடியாது புரியுதா என்று கடுமையாக பேசியவர்,உங்க பையன் தான் பெருசுன்னு எங்களையெல்லாம் உதறி தள்ளிட்டு வந்திருக்கு .எந்த அளவுக்கு நல்லபடியா பார்த்துக்கணுமோ,அப்படி நீங்க பார்த்திருப்பீங்கன்னு நம்பி இங்கிருந்து போறேன்.
நாளைக்கு உங்களால என் பொண்ணுக்கொரு பிரச்சனை என்றால் நிச்சயமா நான் மனுசனா இருக்க மாட்டேன்...இதை மனதில் வச்சிக்குங்களென்று கடுமையாக சொல்ல...
அப்படி ஒரு சூழ்நிலை ஒரு காலமும் உங்க பொண்ணுக்கு வராது.உங்க பொண்ணு உங்க வீட்டில் இருந்ததை விட என் மகன் மகாராணியாக அவன் பொண்டாட்டிய வச்சு பார்த்துப்பான்.அந்த அளவுக்கு என் பையனுக்கு தெம்பு இருக்குங்களென்றார் வானதி.
எது...இந்த ஓட்டு வீட்ல உங்க மகன் மகாராணியா வச்சு பார்த்துப்பானோனு இளக்காரமாக எஸ்தர் சொல்ல..எம்மா வெளியில பாத்துட்டு இது ஓட்டு வீடுன்னு சொல்றியோ?முதல்ல வீட்டு உள்ளார போய் ஒவ்வொன்னையும் பார்த்துட்டு வந்து சொல்லுமா .
மாளிகை போல வீடு கட்டி வச்சிருக்கோம்... எங்க வீட்ட பார்த்து அசந்து போகாத ஆளு இந்த சுற்று வட்டார கிராமத்துல ஒருத்தவங்களும் கிடையாது மா என்று வீரையன் சொல்ல,உண்மையிலேயே அந்த வீட்டில் உள்ள மர அலங்கார பொருள்களும் ஒவ்வொரு தூணிலிருக்கும் சித்திரங்களுமே அவர்களுக்கு வியப்பை கொடுத்தது என்பது மறுக்க முடியாத நிஜம்.
அதான் அப்பா அம்மா வேண்டாமென்று சொல்லி விட்டாளே இனி இங்கென்ன வேலை என்றவாறு கோபமாக மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு மகி வெளியே சென்று விட மற்றவர்களும் ஷமீராவை பார்த்து விட்டு வீட்டில் இருப்பவர்களிடம் தலையசைத்தபடி அங்கிருந்து சென்றனர்.
வீட்டில் இருந்தவர்களுக்கு இப்பொழுது தான் மழை பெய்து விட்டது போலிருந்தது.அழுது கொண்டிருந்த மனைவியை தோளோடு அணைத்து சமாதானம் பண்ணிக் கொண்டிருக்கும் பேரனை பார்த்து,செழியா உள்ள கூட்டிட்டு போ என்று தம்பிசாமி சொல்லவும் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மேலேயிருக்கும் ரூமிற்குள் வந்தவன் அவளை சமாதானப்படுத்தி பார்க்க,அவளோ அழுகையை நிறுத்தாததால் அழுது கொண்டிருப்பவளின் உதட்டோடு தனது வலிமையான உதட்டை புதைத்தான்.
முதன் முதலாக தன்னவனிடமிருந்து கிடைக்கும் இதழ் முத்தத்தை கண்டு அதிர்ந்து போனவளோ கண்கள் விரிய கணவனை பார்க்க ஒரு கையால் மனைவியை தன்னோடு இறுக்கியன் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து கொண்டு அவள் உதட்டிலே தனது கோபத்தையும் அவளின் மன வலியையும் தீர்த்துக் கொண்டிருந்தான்.
வானதி அந்த காலண்டர் எடுத்துட்டு வா என்க,சரிங்க மாமா என்றவர் அங்கே சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்ததை எடுத்துட்டு வந்து கொடுக்க அதில் அடுத்த முகூர்த்த தேதியை பார்த்தவர் இன்னும் எட்டு நாள்ல இந்த மாசத்துக்கான கடைசி முகூர்த்தம் வருது ...
அன்னைக்கு நம்ம மலையம்மன் கோயில்ல வரவேற்பு காரியத்தை வச்சுக்கலாம்.அது சரியா இருக்கும் என்க,வேற வழி செஞ்சிதானே ஆகணும் மாமா என்றார்.
மகனுக்கு செய்கிறதை நல்ல மனசோடு செய்.இன்னும் நாலு அஞ்சு ஒன்னும் நீ பெத்து வைக்கல.என் அண்ணன் குடும்பத்தோட அடுத்த தலைமுறை வாரிசு...
இதற்கு மனநிறைவோடு செய்ற போல இருந்தாக்க இதுல நீ கலந்து இல்லன்னா ஒதுங்கி இரு என்கவும், தனது சின்ன மாமனாரின் கண்டிப்பான வார்த்தையை கேட்டவர் சரிங்க மாமானு வானதி சொல்லவும் துரை நீ என்னடா சொல்ற?எதுவுமே பேசாமல் கல்ல முழுங்கினவன் போல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்?
அதான் நீயே முடிவு எடுத்துட்டியேப்பா, அப்புறம் வேற என்னத்த நான் சொல்ல போறேன்?சொந்த பந்தங்களை வர வச்சி நல்லபடியா செஞ்சுடலாம் பா.
அப்ப அதுவரைக்கும் புள்ளைய நான் வீட்டுக்கு கூப்பிட்டு போய் வச்சிருக்கிறேனென்ற தம்புசாமி அங்கிருந்து பேரனுக்கு குரல் கொடுக்க மனைவியோடு இதழ் போரிலிருந்தவன் தனது தாத்தாவின் குரலில் அவளிடமிருந்து மனமின்றி விலகியவன் தனது தலை முடியை கோதிக்கொண்டு கீழே வந்தான்.
சொல்லு தாத்தா என்க...செழியா வரும் 20 ஆம் தேதியில் இரண்டு பேருக்கும் நம்ம மலையம்மன் கோவில் தாலி பிரிச்சு கோக்கும் காரியம் வச்சிருக்கு. அதுவரைக்கும் பொண்ண அங்க கூட்டிட்டு போறோமென்கவும், என்ன புதுசா இல்லாத வேலை பண்ற...
அதெல்லாம் எப்படி நடந்துக்கனுமென்று எங்களுக்கு தெரியும்.அவ இங்கையே இருக்கட்டுமென்று செழியன் வேகமாக சொல்ல,அடேய் அது அதுக்கு சடங்கு சம்பிரதாயம் இருக்குடா.
முன்னோர்கள் எதுக்கு இதெல்லாம் செஞ்சு வச்சுருக்காங்கனு வீரையன் சத்தம் போட செழியனாலும் தனது அப்புச்சி பேச்சை கேட்டு ஒன்னும் சொல்ல முடியவில்லை....
போய் அந்த புள்ளைய கூப்பிட்டு வா டா.
ம்ம்..கூட்டிட்டு வரேனென்று பல்லை கடித்துக் கொண்டு மாடிக்கு போனவன் கதவை திறந்து உள்ளே போய் தன்னவளிடம் விஷயத்தை சொல்ல அவளும் சரி என்றாள்...
என்னடி உனக்கு அவ்வளவு சந்தோஷமா என்னை விட்டு தனியா போய் இருக்கிறதுக்கென்க,அவளோ எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் செழியனுக்கு கோவம் வந்தது.
கட்டிலின் மேல் உட்கார்ந்திருக்கும் மனைவியின் கையை பிடித்து இழுத்து தன்னோடு அணைத்தவன்,ஏண்டி போக மாட்டேன்னு பேச்சுக்கு கூட ஒரு வார்த்தை சொல்லாமல்,உடனே சரினு சொல்லுறனு இறுக்க, வலியில் லேசாக முகத்தை சுளித்தாள்.
எலேய் இன்னும் என்ன பண்றனு தம்புசாமி குரல் கொடுக்க,இந்த தாத்தன் வேற என பல்லை கடித்தவன் மனைவிக்கு அவசர அவசரமாக எண்ணற்ற முத்தங்களை பரிசாக கொடுத்தவன்,பேகை எடுத்துட்டு வா என்றவாறு வெளியே போக சிரித்துக் கொண்டே முகத்தில் இருக்கும் ஈரத்தை துடைத்தவள் கணவன் பின்னே நடந்து கீழே வந்தாள்.
ஆத்தா நம்ப ஊட்டுக்கு போகலாம்.... மொறப்படி நீ இந்த ஊட்டுக்கு மருமவளா வருவதுதான் உனக்கு கௌரவம் என்க,சரிங்க தாத்தா என்றாள்.
பின்னர் பேரனையும் பேரன் பொண்டாட்டியையும் அழைத்துக்கொண்டு பக்கத்து தெருவிலிருக்கும் தனது வீட்டை நோக்கி சென்றவர் ஐந்து நிமிட நடை பயணத்தில் அந்த பெரிய வீட்டிற்கு வந்த தம்புசாமி,சுமதி சுமதியென மனைவியை கூப்பிட்டார்..
சமையல் கட்டில் இரண்டு மருமகள்களோடு வேலையாக இருந்தவர் உங்க மாமனார் கூப்பிடுறாரு கேட்டுட்டு வரேனென்று மருமகளிடம் சொல்லிக் கொண்டு வெளியே வர,அங்கே தனது பேரனும் பேத்தியும் நிற்பதை பார்த்து யாத்தி என்றவர்....அம்மாடி புவனா புவனா என்று தனது பெரிய மருமகளை கூப்பிட மாமியாரின் குரலை கேட்டு அவரும் வாசலுக்கு வர வேகமாக போய் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வா மா என்றார்...
சரிங்க அத்தை என்று உள்ளே போனவர் ரஞ்சனி நம்ப செழியனும் அவன் பொண்டாட்டியும் வந்திருக்காங்களென்று தனது ஓரகத்திக்கு குரல் கொடுத்துக்கொண்டு ஆலத்தைக் கரைத்து எடுத்து வந்து மாமியாரிடம் நீட்டினார்..
அதை வாங்கியவர் தனது பேரனுக்கும் பேத்திக்கும் மூன்று சுற்று சுத்தி பொட்டு வைத்தவர் உள்ள வாயா,வலது கால எடுத்து வச்சு வாமா என்கவும் தனது தாய் பிறந்த வீட்டிற்கு மனைவியோடு உள்ளே போனான்.
இருவரையும் அங்கிருந்த சோபாவில் உட்கார சொல்லிய சுமதி,ஆத்தா ரஞ்சனி பாலும் பழமும் எடுத்துட்டு வா என்று இரண்டாவது மருமகளுக்கு சொல்ல,சரிங்க அத்தைனு சிறிது நிமிடத்தில் பாலும் பழமும் கரைத்து எடுத்துட்டு வர அதை வாங்கி பேரனுக்கு கொடுத்தவர் நீ குடிச்சிட்டு பிள்ளைக்கு குடுயா என்றார்.
தனது அம்மாச்சியின் பேச்சை மறுக்க முடியாமல் குடித்துவிட்டு மனைவிக்கு கொடுக்க,இருக்கும் மனநிலையில் அதை குடிக்க அவளுக்கு விருப்பமில்லை.இருந்தாலும் பெரியவர்களுக்காக என்பதால் கொஞ்சூண்டு குடித்துவிட்டு மீதம் வைத்து விட்டாள்.
அதற்குள் வெளியே பரமசிவத்திடம் பேசிக் கொண்டிருந்த தம்புசாமி தாத்தாவும் வீட்டின் உள்ளே வந்தவர் அம்மா புவனா-ரஞ்சனி, செழியன் பொண்டாட்டிக்கு அடுத்த வாரம் நம்ம கோயில்ல தாலி பிரிச்சி கோக்குறதுக்காக முடிவு பண்ணிருக்கு.
அதுவரைக்கும் புள்ளை இந்த வீட்டுல தான் இருக்கும் என்கவும் சரிங்க மாமா என்றனர்.
அப்புறம் இன்னொரு விஷயம்,நம்ப கண்மணிய செழியனுக்கு கட்ட உங்க எல்லாருக்கும் எண்ணம் இருந்துச்சுனு எனக்கு நல்லா தெரியும்.யாருக்கு யாரோ அதுபடி தான் நடக்கும்.
அந்த கோவத்த மனசுல வச்சுக்கிட்டு நடந்துக்கிட்டீங்கனாக்க அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேனென்று கரராக சொல்ல,மாமனாரின் கோபத்தை தெரிந்தவர்களோ அப்படி எல்லாம் இல்லை,இதும் நம்ப புள்ளைதானே மாமாயென்று இருவரும் சொல்ல மருமகளுங்களின் வார்த்தையை கேட்டவரோ வழக்கம்போல் அவர்கள் எண்ணி மனதிற்குள் பெருமைப்பட்டார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஷமீராவோ அருகில் உட்கார்ந்திருந்த கணவனை நிமிர்ந்து பார்க்க,மனைவியின் பார்வையை படித்த செழியனோ ஆத்தாடி....இவளிடம் கண்மணி விஷயத்தை பற்றி இதுவரை சொல்லவே இல்லையேனு திருதிருவென்று முழித்தான்.
செழியா,பிள்ளைக்கு மேல இருக்குற அந்த ரூம காட்டுனு தம்புசாமி சொல்ல சரி தாத்தா என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு மாடியிலிருக்கும் ரூமிற்கு போனான்.
வெளியே பார்க்க ஓட்டு வீடு போலிருந்தாலும் உள்ளே வந்து பார்த்தால் சின்ன அரண்மனை போல அழகாகயிருந்தது.
அந்த வீட்டை ரசித்த படியே ஷமீராவும் படியில் ஏறி மேலேயிருக்கும் ரூமிற்கு வந்தாள்.கதவை திறந்து விட்டவன் இது நாங்க வந்தா தங்குறதுனு மனைவியிடம் சொல்ல சரி என்றாள்.
அத்தைங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்கடி...அதற்கும் அவள் எந்த பதிலும் சொல்லவில்லை தலை மட்டும் ஆட்டினாள்.என்னடி நான் பேசிட்டு இருக்கேன் எதுவுமே பேச மாட்டுறனு மனைவியின் தாடையை பிடித்து கேட்க யார் இந்த கண்மணி என்கவும் ஹா ஹா ஹா என்று சிரித்தவன் என்னடி பொறாமை வந்துவிட்டதோ?.
நான் ஒன்னும் அப்படி எல்லாம் கேட்கவில்லையே அவங்க ரெண்டு பேர்ல யாரோட பொண்ணு கண்மணி என்று தெரியலை.அதுக்கு தான் கேட்டேன்.ஓவரா சீன் போடாதீங்களென்றாள்.
மனைவியிடம் இருக்கும் அந்த துடுக்கத்தனம் திரும்புவதை பார்த்து விட்டு,அவளை தன்னோடு இறுக்கமாக அணைத்தவன் உங்க அப்பா அம்மா பேசுனதை நினைச்சு வருத்தமா இருக்காடி என்க..அவளோ எதுவும் சொல்லாமல் கணவனின் நெஞ்சின் மேல் சாய்ந்து கொண்டாள்.
போக போக எல்லாம் சரியாகிவிடும் என்கவும்,நீங்கள் அப்படி நினைச்சுட்டு இருக்கீங்களா?எங்க அப்பாவ பத்தி உங்களுக்கு தெரியாது.