Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 398
- Thread Author
- #1
திருச்சி:
கண்ணீரோடு நின்ற மானசாவோ சற்று முன்னர் நடந்தது கனவா இல்லை நிஜமா என்று யோசனையோடே கன்னத்தை தடவி பார்க்க இன்னும் வலிப்பது போல இருந்தது.
என்னுடைய புகழா இது??
என்னை அடிச்சிட்டாரா??
நிஜமா இது????
ஆமா... கல்யாணம் ஆகி 31 வருஷம் ஆகுது இதுவரை ஒரு வார்த்தை கடிந்து பேசாதவர் இன்றைக்கு எஸ்தருக்காக என்னை அடிச்சிட்டாரா என்று நினைக்கையில் மேலும் அழுகை வந்தது.
"கணவன் பேசிய வார்த்தைகள் எல்லாம் உண்மை தானே"
அவர் எவ்வளவோ சொன்னாரே இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் என் மனசுல நீ மட்டும் தான் இருக்க,அநியாயமாக எஸ்தரோட வாழ்க்கையை கெடுக்க வேணாம் என்று,நான் தானே கேட்கவில்லை..
அவங்க அம்மாவை அவரால் சமாளிக்க முடியாதா எதற்கு இப்படி ஒரு முடிவு எடுத்தேன்???
எந்த பொண்ணும் தனது புருஷனை பங்கு போட விரும்ப மாட்டாளே,அப்போ எனக்கு உண்மையாகவே இவர் மேலும் காதல் இல்லையா???
நான் எப்படி இந்த செயலுக்கு துணிந்தேன்???
எஸ்தர் வீட்டை விட்டு விட்டு போனதுக்கு காரணம் கண்டிப்பாக இவருக்கு இன்னொரு கல்யாணம் ஆயிடுச்சு என்று தெரிந்துதான் இதை என்னால உணர முடியுது.
அவரால் இதை தாங்கிக்கொள்ள முடியாது போது நான் எப்படி என்னோட புருஷனை இன்னொரு பொண்ணுகூட பங்கு போட சம்மதித்தேன்???
அய்யோஓஓஓ....!!!
அவர் சொன்ன அத்தனை வார்த்தைகளையும் மறுக்க முடியாத உண்மையாச்சே.தான் தானே இத்தனைக்கும் காரணம் என்பதை இத்தனை வருடங்களுக்கு பிறகு உணர்ந்தார்.
இத்தனை வருடமாக கணவர் தன்னிடம் பாசமாகத்தான் இருந்தார் தான் கேட்ட அத்தனையும் வாங்கி கொடுத்தாரே அப்போ எஸ்தருக்கும் அதே உரிமை இருக்கும் தானே.
அவளை எப்படி ஒண்ட வந்தவள் என்று சொல்ல முடியும்???ஊர் அறிய தாலி கட்டிய மனைவி என்ற ஸ்தானம் எஸ்தருக்கு தானே இருக்கிறது.அவர் சொன்னது போல என்னுடைய விஷயம் தெரிந்தால் என்னை தானே இரண்டாம் தாரம் என்று சொல்லுவார்கள் என்னும் உண்மை புரிந்து அழும் போது அவர் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.
கண்ணை துடைத்துக்கொண்டு அங்கு டேபிள் மேல் இருந்த ஃபோனை எடுத்து பார்க்க அவரின் மகன் அருண் கால் பண்ணுவது தெரிந்தது.
அட்டென்ட் பண்ணியவர் சொல்லுப்பா???ரெண்டு பேரும் நல்லாருக்கீங்களா என்று கேள்விகளை அடுக்க.. உங்க பேரப்பிள்ளை நல்லா நல்லாருக்கு போதுமா.சண்டேனு இப்போது தான் தூங்கி எந்திரிச்சிருக்காள் மா என்க,சரிப்பா என்றவர் மேலும் சிறிது நிமிடம் மகனிடம் பேசி விட்டு போனை வைத்தார்.
வனிச்சூர்:
அண்ணா நான் எந்த தப்பும் பண்ணலைனு கண்மணி அழுது கொண்டே சொல்ல,தங்கையை முறைத்தவன் நீ தப்பு பண்ணினேனு நான் இப்போது சொன்னேனா?
இந்த விஷயத்தை ஏன் சொல்லலைனு தான் கேட்கிறேன்,உனக்கு அது புரியுதா? இல்லையா என்றவாறு சின்ன தங்கச்சியிடம் திரும்பியவன் நீ என்ன கவி சங்கதி??
அண்ணனின் கோவமான முகத்தை பார்த்த கவிதாவோ அய்யோ அண்ணா...!
"அப்படி எதுவும் இல்லை"
தாத்தா கிட்ட சொன்ன போல நான் டாக்டர் ஆவது தான் என் லட்சியம். நீங்களா பார்த்து எந்த பயலை கட்டி வைத்தாலும் எனக்கு சம்மதம் ணா.தாராளமாக என்னை நீங்கள் நம்பலாமென பதற்றமாக சொன்னாள்.
அவள் சொன்ன தோரணையில் கோவமாக இருந்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது..
பேத்தி சொன்னதை கேட்ட தாத்தாவோ,ஏ சின்ன கழுதை உன் கிட்ட படிக்கிறத கதையை பத்தி தான் கேட்குது.உனக்கு முன்னாடி பிறந்த ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் ஆகல,அதுக்குள்ள உனக்கு கல்யாணம் ஆசை வந்துடுச்சா?
அய்யா அன்பு இந்த கழுதைக்கும் மாப்பிள்ளை பாரு...நீ படிப்ப மூட்டை கட்டிட்டு போய் புருசன் வூட்டுல ஆக்கி போடு என்கவும்,ஐயோ தாத்தா அப்படி எல்லாம் முடிவு எடுக்காதே..
நான் உண்மையிலேயே படிச்சு டாக்டர் ஆகணுமென்று கவிதா பதற,அதை சொல்லாதே செயலில் செய்து காட்டு அப்போது பாக்கலாமென்றார் தம்புசாமி தாத்தா.
"கண்டிப்பாக செய்து காட்டுவேன் தாத்தா "
நம்ப டீலிங் போல உங்க அப்பாவோட அந்த ஏழு பவுனு பதக்கம் எனக்கு தான் என்கவும் டாக்டராகி காட்டு இதே கையால உனக்கு கொடுக்கிறேன் என்றார்.
அப்பா அம்மாஸ் அண்ணா அக்கா நீங்க எல்லாரும் சாட்சி,தாத்தாவோட அந்த பரம்பரை செயின் எனக்கு தான் சொல்லிட்டேன் என்கவும்,ஏ சின்ன கழுதை போய் படிக்கிற வேலையை பாரு என்று கனலரசன் சொல்லவும் விட்டால் போதும் டா சாமியென அங்கிருந்து ஓடி விட்டாள்.
கண்மணி என்று கோபமாக கனலரசன் கூப்பிட,தந்தையின் குரலை கேட்டவள் அழுது கொண்டே சொல்லுங்க பா என்க...
எல்லா பிரச்சனையும் உங்களாலே தீர்த்துக்க முடியாது.பெத்தவங்கள் எதுக்கு இருக்கோம் சொல்லு இது பெருசா போய் முடிஞ்சிருச்சினாக்க குடும்ப மான மரியாதை எல்லாம் காத்துல பறக்கும்.
அது தெரிஞ்சும் நீ அமைதியா இருக்கிறியே எவ்வளவு நெஞ்சழுத்தம்???எனக்கு வந்த கோபத்திற்கு உன்னை நல்லா பெல்டாலே சாத்தலாம்னு தான் இருந்தேன்.
அதுக்கு முன்னாடியே உன் அண்ணன் என்கிட்ட இருந்து காப்பாத்திட்டான். அதனால் தான டா இவ்வளவு வேகமா வந்து நீ அடிச்ச என்று மகனை முறைக்கவும் அது வந்து பா என்று கண்ணன் தடுமாற..போங்க போய் வேலையை பாருங்க.
நீங்க ரெண்டு பேரும் அந்த அடுப்படி, குழம்பு,சோறு மாட்டிற்கு தீவனம் வைக்கிறது இதையே பாத்துட்டு இருங்க புள்ளைங்களை எல்லாம் கவனிச்சுடாதீங்க என்று பல்லை கடிக்கவும்,புவனாவும் ரஞ்சனியும் கீழே குனிந்து கொண்டார்கள்.
அப்பொழுது வயல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுமதி எல்லாரும் ஹாலில் நிற்பதை பார்த்து ஏன் உங்க அப்பா எதாச்சு சொன்னாரா?
இப்படி நின்னுட்டே இருக்கீங்களே என்றவாறு முற்றத்தில் உட்கார,ஏய் வந்த உடனே என் வாயை தான் புடுங்குவியா?
எனக்கு வேற வேலையே கிடையாதா உன் பிள்ளையையும் பேரப்பிள்ளை மருமகளுங்களை ஏதாச்சு சொல்லிகிட்டே தான் இருப்பானா என்று தம்புசாமி தாத்தா மனைவியை முறைக்க,
அது என்ன சந்தேகம் என்றவர் ஆத்தாடி என்றவாறு அங்கிருந்த தூணில் சாய்ந்தவர் அப்பொழுதுதான் அழுது கொண்டிருக்கும் பேத்தியை பார்த்தார்.
ஆத்தா என்ன ஆச்சு ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க?யாரு என்ன சொன்னா என்று பதற,யாரும் சொல்லலையே என்கும் பேரனை பார்த்தவர் நீ தான்டா புள்ளைய ஏதாச்சு சொல்லிருப்ப,இன்னொரு வூட்டுக்கு வாழ போற புள்ள இப்படி கண்ண கசகிட்டு நின்னா நல்லாவா இருக்கென்று பேரனை முறைத்தார்.
அந்த நேரம் அன்பரசனும் வீட்டுக்குள் வர மற்றவர்களுக்கோ அவரின் கோபத்தை பற்றி தெரிந்ததால் பயம் வந்தது.
சுமதி பாட்டிக்கு எதுவும் தெரியாது என்பதால் என்ன ஆச்சு ரஞ்சனி புடிச்சு வச்ச புள்ளையார் போல இருக்கீங்க என்க..
உள்ளே வந்த அன்பரசன் கண்ணு இந்தாடா என்று கையில் இருந்த பையை நீட்டினார்.
வேறு பக்கம் திரும்பி கண்களைத் துடைத்துக்கொண்டு வேகமாக வந்து கண்மணி வாங்க,இதுல சூடாக போண்டா பஜ்ஜி இருக்கு டா.எல்லாருக்கும் கொடு.
அப்படியே உன் கையால இஞ்சி டீ போட்டு எடுத்துட்டு வா தல ரொம்ப வலிக்குது.என்னா வெயிலு என்றவாறு அங்கே இருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தவர்,கனலு புள்ளைக்கு நகையை எடுத்துட்டு வந்துட்டியா டா?
ஆமா ணா..
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம் என்று கனலரசன் சொல்லவும் சரி டா.நானும் சமையலுக்கு,பந்தல் அலங்காரம் அப்புறம் மேளத்துக்கு சொல்லிட்டேன்.
ரொம்ப வருஷத்துக்கு பிறகு நம்ப வீட்டில் நடக்கப் போற முதல் விசேஷம். அது சிறப்பா இருக்கணும் கனலு...
மகன்கள் பேசுவதை கேட்ட சுமதி பாட்டி,எய்யா அன்பு அப்படியே தீரன் பொண்டாட்டிக்கு 5 மாசத்துல செய்யுற சடங்கு செஞ்சிடலாம் யா..
"நம்ப வூட்டு வாரிசு"
எதுக்கு குறை வச்சுக்கிட்டு?
நாலு பேரு நாக்கு மேல பல்லை போட்டு பேசக்கூடாது.கொஞ்சம் யோசிய்யா என்று பெரிய மகனிடம் சொல்ல, ம்ம் சரிம்மா உன்னோட விருப்பம் தான்.
என்ன செய்யணுமோ தாராளமா நல்லபடியா செய்யுங்கள்.அதுக்கு முன்னாடி அந்த பொண்ணோட வீட்டுக்கு நம்ம நேர்ல போய் பேசுறது நல்லது.நீங்க என்னப்பா சொல்றீங்க என்று தம்புசாமியிடம் கேட்க கண்டிப்பா அன்பு,போய் பேசிய தான் ஆகணும். பெரிய புள்ள நிச்சயதார்த்த முடியட்டும் போகலாம் யா...
இவர்கள் பேசிக் கொண்டிருக்க கண்மணியும் எல்லாருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தவள்,இந்தா பாட்டி என்கும் போது பேத்தியின் முகத்தை பார்த்தவர் என்ன கண்ணு உன் கன்னம் இப்படி சிவந்துருக்கு? என்ன ஆச்சு என்கவும் எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து நின்றாள்.
----
பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட இருவரும் மதிய உணவுக்கெல்லாம் மதுரைக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருக்கும் பிரபலமான ஹோட்டலுக்கு அழைத்து போனவன் மனைவிக்கு பிடித்தமான உணவை ஆர்டர் பண்ண,சிறிது நிமிடத்தில் உணவும் வந்தது.
இப்போவாது வாயை திறப்பாளென்று செழியன் பார்க்க,ஷமீராவோ தனக்கு தேவையானதை எடுத்து வைத்து சாப்பிட தொடங்கினாள்..
பாவி...!!
"ரொம்ப பண்றாளே"
இவளை மலையிறக்குறதுக்குள் நாக்கு வறண்டு போயிடும் போல..
அய்யோ செழியா ஏதாவது பண்ணி அவளை சமாதானம் பண்ணுடா. இல்லை இதான் சாக்குனு உன் பொண்டாட்டி தனியாவே படுக்க போய்டுவாள்.
"அப்புறம் உன் லட்சியம் அதான் 10 குழந்தைகள் பிளான் ஸ்வாகா தான் "
சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் சூதானம் டா என தனக்குள் பேசிக்கொண்டே வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடிக்க,
அவன் எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவளோ அங்கிருந்த பேரரை கூப்பிட்டு மின்ட் மொஜிட்டோ ஒன்னு என்கவும், சார் உங்களுக்கு என்று செழியனிடம் கேட்க..
வேண்டாம் பில்லு கொண்டு வாங்க என்று சொல்லிவிட்டு மனைவியை பார்த்து முறைத்துக் கொண்டே கை கழுவ சென்றான்.
பின்னர் சாப்பிட்டதற்கான பணத்தை கொடுத்து விட்டு காரில் ஏறி மீண்டும் பயணத்தை தொடர்ந்தவர்கள் வனிச்சூரின் எல்லைக்குள் வரும் போது மாலை 6 மணி ஆனது..
கண்ணீரோடு நின்ற மானசாவோ சற்று முன்னர் நடந்தது கனவா இல்லை நிஜமா என்று யோசனையோடே கன்னத்தை தடவி பார்க்க இன்னும் வலிப்பது போல இருந்தது.
என்னுடைய புகழா இது??
என்னை அடிச்சிட்டாரா??
நிஜமா இது????
ஆமா... கல்யாணம் ஆகி 31 வருஷம் ஆகுது இதுவரை ஒரு வார்த்தை கடிந்து பேசாதவர் இன்றைக்கு எஸ்தருக்காக என்னை அடிச்சிட்டாரா என்று நினைக்கையில் மேலும் அழுகை வந்தது.
"கணவன் பேசிய வார்த்தைகள் எல்லாம் உண்மை தானே"
அவர் எவ்வளவோ சொன்னாரே இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் என் மனசுல நீ மட்டும் தான் இருக்க,அநியாயமாக எஸ்தரோட வாழ்க்கையை கெடுக்க வேணாம் என்று,நான் தானே கேட்கவில்லை..
அவங்க அம்மாவை அவரால் சமாளிக்க முடியாதா எதற்கு இப்படி ஒரு முடிவு எடுத்தேன்???
எந்த பொண்ணும் தனது புருஷனை பங்கு போட விரும்ப மாட்டாளே,அப்போ எனக்கு உண்மையாகவே இவர் மேலும் காதல் இல்லையா???
நான் எப்படி இந்த செயலுக்கு துணிந்தேன்???
எஸ்தர் வீட்டை விட்டு விட்டு போனதுக்கு காரணம் கண்டிப்பாக இவருக்கு இன்னொரு கல்யாணம் ஆயிடுச்சு என்று தெரிந்துதான் இதை என்னால உணர முடியுது.
அவரால் இதை தாங்கிக்கொள்ள முடியாது போது நான் எப்படி என்னோட புருஷனை இன்னொரு பொண்ணுகூட பங்கு போட சம்மதித்தேன்???
அய்யோஓஓஓ....!!!
அவர் சொன்ன அத்தனை வார்த்தைகளையும் மறுக்க முடியாத உண்மையாச்சே.தான் தானே இத்தனைக்கும் காரணம் என்பதை இத்தனை வருடங்களுக்கு பிறகு உணர்ந்தார்.
இத்தனை வருடமாக கணவர் தன்னிடம் பாசமாகத்தான் இருந்தார் தான் கேட்ட அத்தனையும் வாங்கி கொடுத்தாரே அப்போ எஸ்தருக்கும் அதே உரிமை இருக்கும் தானே.
அவளை எப்படி ஒண்ட வந்தவள் என்று சொல்ல முடியும்???ஊர் அறிய தாலி கட்டிய மனைவி என்ற ஸ்தானம் எஸ்தருக்கு தானே இருக்கிறது.அவர் சொன்னது போல என்னுடைய விஷயம் தெரிந்தால் என்னை தானே இரண்டாம் தாரம் என்று சொல்லுவார்கள் என்னும் உண்மை புரிந்து அழும் போது அவர் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.
கண்ணை துடைத்துக்கொண்டு அங்கு டேபிள் மேல் இருந்த ஃபோனை எடுத்து பார்க்க அவரின் மகன் அருண் கால் பண்ணுவது தெரிந்தது.
அட்டென்ட் பண்ணியவர் சொல்லுப்பா???ரெண்டு பேரும் நல்லாருக்கீங்களா என்று கேள்விகளை அடுக்க.. உங்க பேரப்பிள்ளை நல்லா நல்லாருக்கு போதுமா.சண்டேனு இப்போது தான் தூங்கி எந்திரிச்சிருக்காள் மா என்க,சரிப்பா என்றவர் மேலும் சிறிது நிமிடம் மகனிடம் பேசி விட்டு போனை வைத்தார்.
வனிச்சூர்:
அண்ணா நான் எந்த தப்பும் பண்ணலைனு கண்மணி அழுது கொண்டே சொல்ல,தங்கையை முறைத்தவன் நீ தப்பு பண்ணினேனு நான் இப்போது சொன்னேனா?
இந்த விஷயத்தை ஏன் சொல்லலைனு தான் கேட்கிறேன்,உனக்கு அது புரியுதா? இல்லையா என்றவாறு சின்ன தங்கச்சியிடம் திரும்பியவன் நீ என்ன கவி சங்கதி??
அண்ணனின் கோவமான முகத்தை பார்த்த கவிதாவோ அய்யோ அண்ணா...!
"அப்படி எதுவும் இல்லை"
தாத்தா கிட்ட சொன்ன போல நான் டாக்டர் ஆவது தான் என் லட்சியம். நீங்களா பார்த்து எந்த பயலை கட்டி வைத்தாலும் எனக்கு சம்மதம் ணா.தாராளமாக என்னை நீங்கள் நம்பலாமென பதற்றமாக சொன்னாள்.
அவள் சொன்ன தோரணையில் கோவமாக இருந்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது..
பேத்தி சொன்னதை கேட்ட தாத்தாவோ,ஏ சின்ன கழுதை உன் கிட்ட படிக்கிறத கதையை பத்தி தான் கேட்குது.உனக்கு முன்னாடி பிறந்த ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் ஆகல,அதுக்குள்ள உனக்கு கல்யாணம் ஆசை வந்துடுச்சா?
அய்யா அன்பு இந்த கழுதைக்கும் மாப்பிள்ளை பாரு...நீ படிப்ப மூட்டை கட்டிட்டு போய் புருசன் வூட்டுல ஆக்கி போடு என்கவும்,ஐயோ தாத்தா அப்படி எல்லாம் முடிவு எடுக்காதே..
நான் உண்மையிலேயே படிச்சு டாக்டர் ஆகணுமென்று கவிதா பதற,அதை சொல்லாதே செயலில் செய்து காட்டு அப்போது பாக்கலாமென்றார் தம்புசாமி தாத்தா.
"கண்டிப்பாக செய்து காட்டுவேன் தாத்தா "
நம்ப டீலிங் போல உங்க அப்பாவோட அந்த ஏழு பவுனு பதக்கம் எனக்கு தான் என்கவும் டாக்டராகி காட்டு இதே கையால உனக்கு கொடுக்கிறேன் என்றார்.
அப்பா அம்மாஸ் அண்ணா அக்கா நீங்க எல்லாரும் சாட்சி,தாத்தாவோட அந்த பரம்பரை செயின் எனக்கு தான் சொல்லிட்டேன் என்கவும்,ஏ சின்ன கழுதை போய் படிக்கிற வேலையை பாரு என்று கனலரசன் சொல்லவும் விட்டால் போதும் டா சாமியென அங்கிருந்து ஓடி விட்டாள்.
கண்மணி என்று கோபமாக கனலரசன் கூப்பிட,தந்தையின் குரலை கேட்டவள் அழுது கொண்டே சொல்லுங்க பா என்க...
எல்லா பிரச்சனையும் உங்களாலே தீர்த்துக்க முடியாது.பெத்தவங்கள் எதுக்கு இருக்கோம் சொல்லு இது பெருசா போய் முடிஞ்சிருச்சினாக்க குடும்ப மான மரியாதை எல்லாம் காத்துல பறக்கும்.
அது தெரிஞ்சும் நீ அமைதியா இருக்கிறியே எவ்வளவு நெஞ்சழுத்தம்???எனக்கு வந்த கோபத்திற்கு உன்னை நல்லா பெல்டாலே சாத்தலாம்னு தான் இருந்தேன்.
அதுக்கு முன்னாடியே உன் அண்ணன் என்கிட்ட இருந்து காப்பாத்திட்டான். அதனால் தான டா இவ்வளவு வேகமா வந்து நீ அடிச்ச என்று மகனை முறைக்கவும் அது வந்து பா என்று கண்ணன் தடுமாற..போங்க போய் வேலையை பாருங்க.
நீங்க ரெண்டு பேரும் அந்த அடுப்படி, குழம்பு,சோறு மாட்டிற்கு தீவனம் வைக்கிறது இதையே பாத்துட்டு இருங்க புள்ளைங்களை எல்லாம் கவனிச்சுடாதீங்க என்று பல்லை கடிக்கவும்,புவனாவும் ரஞ்சனியும் கீழே குனிந்து கொண்டார்கள்.
அப்பொழுது வயல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுமதி எல்லாரும் ஹாலில் நிற்பதை பார்த்து ஏன் உங்க அப்பா எதாச்சு சொன்னாரா?
இப்படி நின்னுட்டே இருக்கீங்களே என்றவாறு முற்றத்தில் உட்கார,ஏய் வந்த உடனே என் வாயை தான் புடுங்குவியா?
எனக்கு வேற வேலையே கிடையாதா உன் பிள்ளையையும் பேரப்பிள்ளை மருமகளுங்களை ஏதாச்சு சொல்லிகிட்டே தான் இருப்பானா என்று தம்புசாமி தாத்தா மனைவியை முறைக்க,
அது என்ன சந்தேகம் என்றவர் ஆத்தாடி என்றவாறு அங்கிருந்த தூணில் சாய்ந்தவர் அப்பொழுதுதான் அழுது கொண்டிருக்கும் பேத்தியை பார்த்தார்.
ஆத்தா என்ன ஆச்சு ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க?யாரு என்ன சொன்னா என்று பதற,யாரும் சொல்லலையே என்கும் பேரனை பார்த்தவர் நீ தான்டா புள்ளைய ஏதாச்சு சொல்லிருப்ப,இன்னொரு வூட்டுக்கு வாழ போற புள்ள இப்படி கண்ண கசகிட்டு நின்னா நல்லாவா இருக்கென்று பேரனை முறைத்தார்.
அந்த நேரம் அன்பரசனும் வீட்டுக்குள் வர மற்றவர்களுக்கோ அவரின் கோபத்தை பற்றி தெரிந்ததால் பயம் வந்தது.
சுமதி பாட்டிக்கு எதுவும் தெரியாது என்பதால் என்ன ஆச்சு ரஞ்சனி புடிச்சு வச்ச புள்ளையார் போல இருக்கீங்க என்க..
உள்ளே வந்த அன்பரசன் கண்ணு இந்தாடா என்று கையில் இருந்த பையை நீட்டினார்.
வேறு பக்கம் திரும்பி கண்களைத் துடைத்துக்கொண்டு வேகமாக வந்து கண்மணி வாங்க,இதுல சூடாக போண்டா பஜ்ஜி இருக்கு டா.எல்லாருக்கும் கொடு.
அப்படியே உன் கையால இஞ்சி டீ போட்டு எடுத்துட்டு வா தல ரொம்ப வலிக்குது.என்னா வெயிலு என்றவாறு அங்கே இருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தவர்,கனலு புள்ளைக்கு நகையை எடுத்துட்டு வந்துட்டியா டா?
ஆமா ணா..
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம் என்று கனலரசன் சொல்லவும் சரி டா.நானும் சமையலுக்கு,பந்தல் அலங்காரம் அப்புறம் மேளத்துக்கு சொல்லிட்டேன்.
ரொம்ப வருஷத்துக்கு பிறகு நம்ப வீட்டில் நடக்கப் போற முதல் விசேஷம். அது சிறப்பா இருக்கணும் கனலு...
மகன்கள் பேசுவதை கேட்ட சுமதி பாட்டி,எய்யா அன்பு அப்படியே தீரன் பொண்டாட்டிக்கு 5 மாசத்துல செய்யுற சடங்கு செஞ்சிடலாம் யா..
"நம்ப வூட்டு வாரிசு"
எதுக்கு குறை வச்சுக்கிட்டு?
நாலு பேரு நாக்கு மேல பல்லை போட்டு பேசக்கூடாது.கொஞ்சம் யோசிய்யா என்று பெரிய மகனிடம் சொல்ல, ம்ம் சரிம்மா உன்னோட விருப்பம் தான்.
என்ன செய்யணுமோ தாராளமா நல்லபடியா செய்யுங்கள்.அதுக்கு முன்னாடி அந்த பொண்ணோட வீட்டுக்கு நம்ம நேர்ல போய் பேசுறது நல்லது.நீங்க என்னப்பா சொல்றீங்க என்று தம்புசாமியிடம் கேட்க கண்டிப்பா அன்பு,போய் பேசிய தான் ஆகணும். பெரிய புள்ள நிச்சயதார்த்த முடியட்டும் போகலாம் யா...
இவர்கள் பேசிக் கொண்டிருக்க கண்மணியும் எல்லாருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தவள்,இந்தா பாட்டி என்கும் போது பேத்தியின் முகத்தை பார்த்தவர் என்ன கண்ணு உன் கன்னம் இப்படி சிவந்துருக்கு? என்ன ஆச்சு என்கவும் எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து நின்றாள்.
----
பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட இருவரும் மதிய உணவுக்கெல்லாம் மதுரைக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருக்கும் பிரபலமான ஹோட்டலுக்கு அழைத்து போனவன் மனைவிக்கு பிடித்தமான உணவை ஆர்டர் பண்ண,சிறிது நிமிடத்தில் உணவும் வந்தது.
இப்போவாது வாயை திறப்பாளென்று செழியன் பார்க்க,ஷமீராவோ தனக்கு தேவையானதை எடுத்து வைத்து சாப்பிட தொடங்கினாள்..
பாவி...!!
"ரொம்ப பண்றாளே"
இவளை மலையிறக்குறதுக்குள் நாக்கு வறண்டு போயிடும் போல..
அய்யோ செழியா ஏதாவது பண்ணி அவளை சமாதானம் பண்ணுடா. இல்லை இதான் சாக்குனு உன் பொண்டாட்டி தனியாவே படுக்க போய்டுவாள்.
"அப்புறம் உன் லட்சியம் அதான் 10 குழந்தைகள் பிளான் ஸ்வாகா தான் "
சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் சூதானம் டா என தனக்குள் பேசிக்கொண்டே வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடிக்க,
அவன் எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவளோ அங்கிருந்த பேரரை கூப்பிட்டு மின்ட் மொஜிட்டோ ஒன்னு என்கவும், சார் உங்களுக்கு என்று செழியனிடம் கேட்க..
வேண்டாம் பில்லு கொண்டு வாங்க என்று சொல்லிவிட்டு மனைவியை பார்த்து முறைத்துக் கொண்டே கை கழுவ சென்றான்.
பின்னர் சாப்பிட்டதற்கான பணத்தை கொடுத்து விட்டு காரில் ஏறி மீண்டும் பயணத்தை தொடர்ந்தவர்கள் வனிச்சூரின் எல்லைக்குள் வரும் போது மாலை 6 மணி ஆனது..