• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
394
வனிச்சூர்:

நிச்சயதார்த்தத்திற்கான வேலையை ஆளுக்கு ஒன்றாக பிரித்துக் கொண்டனர்.

சொந்த பந்தங்களுக்கு நேரில் போய் சொல்லும் வேலையை கண்ணனும் புவனாவும் பார்த்துக்கொள்ள,லாக்கரில் இருக்கும் நகையை எடுத்துட்டு வர ரஞ்சனியும் கனலரசனும் பேங்கிற்கு போனார்கள்.

இருவரும் நகைகளை எடுத்துக்கொண்டு கொண்டு வெளியே வரும் போது இரண்டு பேர் ஹெல்மெட் போட்டுக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தானுங்கள்.

முதலில் அதை கவனிக்காத கனலரசன் கண்ணாடியை சரி செய்யும் போது அவர்கள் வருவதை பார்த்தவருக்கு எதுவும் தோன்றவில்லை.

வனிச்சூருக்கு உள்ளே திரும்பும் மலை அடிவாரத்தில் வண்டியை திருப்பி சிறிது தூரம் சென்ற பிறகு தற்செயலாக கண்ணாடி பார்க்க,அந்த ஹெல்மெட் போட்டவர்கள் அவர்கள் பின்னே வருவது கனலரசனுக்கு தெரிந்தது.

ஏய் ரஞ்சனி,யாரோ ரெண்டு பேர் நம்மள ஃபாலோ பண்ணிகிட்டே வராங்க,கண்ணனுக்கு போன் போடு...

கணவர் சொன்னதைக் கேட்டு பயந்து போன ரஞ்சனி திரும்பி பார்பதற்குள் திரும்பாத போன மட்டும் எடுத்து கால் பண்ணு என்கவும்,அதேபோல் பையில் இருந்த ஃபோனை எடுத்து கண்ணனுக்கு கால் பண்ண,அம்மா உங்க பின்னாடி தான் வந்துட்டு இருக்கேன் திரும்பி பாரு என்றான்.

திரும்பியவர் ஏங்க கொஞ்சம் வண்டியை நிறுத்துங்கள் என்கவும் கனலரசனும் வண்டியை நிறுத்த,அந்த பைக்கில் வந்தவர்களும் சற்று தள்ளி நிறுத்தவும் அவர்களுக்கு பின்னாடி வந்த கண்ணனோ அவனுங்களுக்கு அருகில் வந்தவன் எட்டி பின்னாடி இருந்தவனின் கழுத்தை பிடித்து இழுத்தான்.

கண்ணனின் பின்னாடி உட்கார்ந்திருந்த தம்புசாமி தாத்தாவும் வண்டியில் இருந்து இறங்கி போனவர்,எதுக்குடா தொடர்ந்து வறீங்கள் என்கவும், அவனுங்களோ அங்கிருந்து தப்பிக்க முயல,ரெண்டு பேருக்கும் புடரியில் இரண்டு அடியை விட்டார்.வாங்கிய அடியில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தானுங்கள்.

அவர்களிடம் வந்த கனலரசன் இரண்டு பேரின் ஹெல்மெட்டை கழட்டி யார்ரா நீங்க?எதுக்கு எங்கள ஃபாலோ பண்ணிட்டு வறீங்க?

நானும் கண்மணியும் நாலு வருஷமாக காதலிக்கிறோம்.நீங்க எப்படி வேற இடத்தில நிச்சயம் பண்ணலாம் என்கவும்,இதை கேட்டு கோவம் வந்த கண்ணனோ ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறையை விட்டவன்,என் தங்கச்சி உன்னை காதலிச்சிதா?.அடிச்சு பல்லெல்லாம் பேத்துடுவேன். யாருடா நீங்க என்றான்.

ஏய் சின்னவனே என்ன பண்ற என்ற தம்புசாமி ஏலே யார் நீங்க?எங்க வந்து என்ன பேசிட்டு இருக்கீங்க?

பொம்பள புள்ள விஷயம் பேரு கெட்டு போச்சி தோலை உரிச்சிடுவேன் டா..அய்யோ தாத்தா நான் நிஜமா தான் சொல்றேன்.நானும் கண்மணியும் மூணு வருஷமா உயிருக்குயிரா காதலிக்கிறோம் என்று மீண்டும் சொல்ல,தனது பல்லை கடித்து கோபத்தை கட்டுப்படுத்திய கண்ணன் அதுக்கு ஏதாச்சு ஆதாரம் இருக்கா காட்டு?முதல்ல என் தங்கச்சிக்கு போன் பண்ணி பேசு என்கவும் அவனோ திருத்திருவென்று முழித்தான்.

இதை பார்த்த கனலரசன் அவர் பங்குக்கு இரண்டு அறையை விட்டவர் எவ்வளவு திமிரு இருந்தாக்க என் பொண்ணு மேல பழிய போடுறீங்க யார்ரா நீங்க என்கவும்,அவரின் அதட்டலில் பயந்தவன் சார் நான் கண்மணியை காதலிக்கிறேன்.

என்னோட காதலை சொல்லி இரண்டு வருஷம் ஆகுது எனக்கு சம்மதிக்கலை.அதான் நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தலாம்னு வந்தோம்.

இதை கேட்டவர்களுக்கு கோவம் வர ஏன் டா பொம்பள புள்ள வாழ்க்கையில இப்படி விளையாட நினைக்கிறீங்களே நீ எல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறந்தவனா என்ற தம்புசாமி தாத்தாவோ அவர் பங்குக்கு இரண்டு அறையை விட்டவர் முதல்ல உன் அப்பன் போன் நம்பர் குடு என்க...அய்யோ அதெல்லாம் வேண்டாம் என்று அவன் பதற..

இப்ப கொடுக்க போறியா இல்லையா என்றார்.

ஏன் டா உன் கூட வந்ததுக்கு என்னையும் அப்பா கிட்ட மாட்டி விட்டியே டா .அவருக்கு மட்டும் இது தெரிஞ்சது என் தோலை உரிச்சிடுவார்டா என்று கூட வந்த நண்பனோ பயந்து கொண்டு சொல்ல,

இப்ப யோசிச்சு ஒன்னும் புண்ணியமில்லை.நம்பர் கொடுக்க போறியா இல்லையானு தாத்தா மிரட்ட,அதில் பயந்து போனவனுங்கள் அவரவரின் அப்பா நம்பரை கொடுக்க,கனலு அந்த நம்பருக்கு போன் போடுயா என்றார்.

மேதினூர்:

"அட இதை நான் யோசிக்கவில்லையே",உனக்கு எங்க டி அந்த அளவுக்கு அறிவு இருக்கென்று செழியன் சிரிக்க,அதான் அறிவு இல்லனு தெரிஞ்சிதே,பிறகு எதுக்கு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க என்று ஷமீரா முறைக்க...

"தலையெழுத்து டி தலையெழுத்து"

ஆஹான்.நான் ஒன்னும் ஒத்த காலில் நிக்கலையேனு ஷமீராவும் கோவமாக சொன்னாள்.

"ம்ம்"

நீ நிக்கலை தான் டி.பொண்டாட்டியா உன்னை நினைச்சிட்டேன்.விட்டுட்டு போக மனசு வரலை.எத்தனையோ பொண்ணுங்களை எங்க அப்பா அம்மா பார்த்தாங்க.அந்த மூணு வருஷமா எவளையும் கட்டிக்கிறதுக்கு எனக்கு மனசு வரலையே..

"நீ கல்நெஞ்சக்காரி"

உன் அப்பன் எவனையாவது மாப்பிள்ளையா கொண்டுட்டு வந்து மிரட்டி இருந்தாக்க ஹாயா கட்டிட்டு போயிருப்ப டி.

கணவன் சொன்னதை கேட்டு ஷமீராவுக்கு ஆத்திரம் வந்தது.ஒழுங்கு மரியாதையாக என்னை கீழே இறக்கி விடுங்க என்கவும்,உண்மைய சொன்ன உடனே கோவம் வந்திருச்சா டி என்று சிரித்தான்

என்ன பத்தி எவ்வளவு கீழ்த்தரமா நினைச்சுட்டு இருக்கீங்க,மரியாதையா இறக்கி விடுங்கள் என்று கத்தினாள்..

ஏய் உன் மனசாட்சியை தொட்டு சொல்லு டி?உன் அப்பா மிரட்டினாக்க நீ கல்யாணம் பண்ணிருக்க மாட்டியா என்கவும்,அதில் வெகுண்டவள் அப்படி நினைத்திருந்தால் எப்பயோ பாபு மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு துபாயில் செட்டிலாகிருக்க மாட்டேனா? என்று வாயை மூடுவதற்குள்,என்ன டி சொன்ன என்றவாறு தனது கையிலிருந்தவளை கீழே இறங்கி விட்டவன் பளார் பளாரென்று அறைந்தான்.

ஷமீராவோ வாங்கிய அறையில் தலை சுற்றி போய் தரையில் விழ,எத்தனை முறை உன் கிட்ட சொல்லிருக்கேன் என்னை தவிர வேறு எந்த மயிரானை பற்றியும் உன் கூட,கனவிலையும் சரி கற்பனை ஏன் விளையாட்டுக்கு கூட இணைத்து பேசக் கூடாதுனு.

அது புரிந்தும் இப்படி பேசுறியே உன்னை என்ன டி பண்ணலாமென்று அவளை நோக்கி நடந்து வர,வேட்டையாட துடிக்கும் புலி போல இருப்பவனை கண்டவளுக்கு பயம் வரவும் பின்னாடியே நகர்ந்து போக,ஓஓஓ உனக்கு துபாய் மாப்பிள்ளை கேட்குதோ என்றவன் இரண்டே எட்டில் அவள் கால்களுக்கு இடையே இருக்கும் புடவையின் மேல் தனது ஷூ கால் வைக்க,ஷமீராவால் அங்கிருந்து நகர முடியவில்லை.

கோவத்தில் திட்டியிருக்கானே தவிர இதுவரை கை நீட்டி அடித்ததில்லை.
இன்று ஒவ்வொரு அறையும் "இடி போல் விழ கன்னம் இரண்டும் எரிந்தது".

தெ தெ தெரியாமல் சொ சொ சொல்லிட்டேங்க என்று திக்கி திணறி சொல்பவளின் கழுத்தை எட்டிப் பிடித்து தூக்கியவனை பார்க்கவே பெண்ணவளுக்கு கை கால் தடதடவென நடுங்கியது.

நான் உன் கிட்ட பேச ஆரம்பித்து நாலு வருஷம் ஆகப் போகிறது.இதுவரை உன்னை தவிர வேற எவளையாவது விளையாட்டிற்காக கூட என்னோடு இணைத்து சொல்லிருக்கேனா டி?

கணவனின் கேள்வியில் இல்லை என்று தலையசைத்தாள்.

ஹம்... !!

உன்னை தவிர இன்னொருத்தியை ரசித்து உன் கிட்ட சொல்லிருக்கேனா...?

"அதற்கும் இல்லையென்றாள்"

என் மனசுல அப்படி ஒரு எண்ணம் இதுவரை வரலை.இனி வராது.ஆனால் என்றவன் அவளின் முந்தானையை பிடித்து இழுக்க,இரண்டு சுத்து சுத்தியவள் தடுமாறி கீழ விழுந்தாள்...

கையிலிருந்த புடவையை தூக்கி எறிந்து விட்டு நிதானமாக அவளை நோக்கி வந்தவன்,ஒரு விஷயத்தை ஒரு முறை சொல்லலாம் ஏன் இரண்டு முறை கூட சொல்லலாம்..

உன் கிட்ட எத்தனையோ முறை சொல்லியிருக்கேன் இப்படி பேசாதனு, இருந்தும் உன் வாயில் இதைப்போல வார்த்தைகள் வருதென்றால் தப்பு உன் கிட்ட இல்லை...நீ எனக்கானவள் என்பதை உனக்கு நன்கு பதிய வைக்காத என் மேல்தான் குற்றம் இல்லையா..

சோஓஓஓ...

இன்னைக்கு உன் எண்ணத்திலும் மனசுலையும் நல்லா பதியுமென்றவாறு எட்டி அவளின் கையை பிடித்து தூக்கியவன் அங்கிருந்த கதவை இடது காலால் எட்டி உதைக்க,அதுவோ படாரென்று திறந்து கொண்டது.

வேகமாக உள்ளே போனவனோ கையிலிருந்தவளை அங்கிருந்த பெட்டில் தூக்கி போட்டவன் வேங்கை போல அவள் மீது பாய்ந்தான்.

கணவனின் செயல்கள் முரட்டுதனமாக இருக்கவும் பிளீஸ் வேண்டாமென்று வலியில் பெண்ணவள் கதறினாள்.ஆனால் அதையெல்லாம் செழியன் சட்டை பண்ணவேயில்லை.

"துபாய் கேட்குது துபாய்"

ஏன் இந்தியால இருக்கவனெல்லாம் ஆம்பிளை இல்லையாடி என்று கர்ஜித்தவன்,இருக்கும் கோவத்தில் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் கடித்து குதறியவனோ ஓய்ந்து போய் படுக்க,கிழக்கில் இருந்த சூரியன் மேற்கே மறைந்து போய் வெகு நேரமாகியிருந்தது.

கிழிந்த நாராய் கிடந்தவளுக்கு அங்கு இங்கு திரும்ப முடியவில்லை.உச்சி முதல் பாதம் வரையிலும் சொல்லொன்னா வலிகளாக இருக்கவும் கண்ணீரோ ஆறாக ஓடியது.

தொண்டை வறட்சியாக இருக்கவும் தட்டு தடுமாறி எழுந்தவளின் கையை அவன் பிடிக்க,எங்கே மீண்டும் விட்டதை கணவன் தொடரப் போகிறானோ என்று அதிர்ந்து போய் ஷமீரா திரும்ப,நீ என்னவள் டி.உன்னை யாருக்கும் விட்டு தரமாட்டேன் டி என்று தூக்கத்தில் சொல்லிக் கொண்டே திரும்பி படுத்தான்.

பொங்கி வந்த அழுகையை வாயை மூடி மறைத்தவள்,மெதுவாக பெட்டிலிருந்து கீழே இறங்கி நின்றவளுக்கு கால்கள் தடுமாறியது.அறை முழுவதும் இருட்டாக இருக்க குருட்டு நம்பிக்கையில் கைகளால் துலாவிக் கொண்டே கதவின் அருகில் வந்தவள் சத்தமின்றி கதவை திறக்க எங்கும் இருட்டாக இருந்தது.

சுவற்றில் எரியும் டேஞ்சர் லைட் வெளிச்சத்தை வைத்து இருட்டிலே நடந்து போய் சுவிட்ச் ஆன் பண்ண வெளிச்சம் வந்தது.

பின்னர் கிச்சனிற்குள் போய் தண்ணீர் குடித்து ரூமிற்குள் வருவதற்குள் பாதி ஜீவன் போய் விட்டது.ஒருவழியாக பெட்டில் வந்து படுத்தவளோ மன சோர்வும் உடல் வலியும் தூக்கத்தை கொடுக்க சிறிது நிமிடத்திலே தன்னை மறந்து தூங்கினாள்.

பசி வயிற்றை பிரட்டி எடுக்கவும் பெட்டில் படுத்திருந்தவனோ எழுந்து உட்கார அறை முழுவதும் இருட்டாக இருக்கவும்,எழுந்து போய் சுவிட்சை தேடி ஆன் பண்ணியவனுக்கு அங்கிருந்த கோலமோ நடந்ததை நினைவூட்டியது.

அய்யோ என்றவாறு வேகமாக போனவன் ஒருகளித்து படுத்திருப்பவளின் முகத்தை பார்த்து இரண்டடி பின்னாடி வந்தவன், நானா இப்படி...!

மிருகத்தை விட கேவலமாக நடந்திருக்கிறேனே என்று தன்னையே அறைந்து கொண்டவன் வேதனையோடு மனைவியின் முகத்தை பார்க்க கைவிரல் தடங்களும் நகக் கீரல்களும் அவனை குற்றவாளி போல பார்த்தனர்.

பின்னர் கதவை திறந்து கிச்சனிற்குள் சென்றவன் வெதுவெதுப்பாக தண்ணீரை சூடு பண்ணி அதில் டெட்டால் கலந்து எடுத்து வந்தவன் கழட்டி எறிந்திருந்த பனியனை எடுத்து நீரில் முக்கி அதை பிழிந்தவன் மனைவியின் முகத்தை துடைக்க எரிச்சலில் முகத்தை சுருக்கினாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
394
தூக்கம் கலைந்து கண் விழித்தவளோ தன்னை அணைத்து படுத்திருக்கும் வலிமையான கையை விலக்கி விட்டு, எழுந்து ரெஸ்ட் ரூமிற்குள் போனவள் ஹுட்டரை ஆன் பண்ணி குளிக்க,நீர் பட்ட இடங்களெல்லாம் பற்றி எரிந்தது.

பொங்கி வந்த அழுகையை நீரோடு கரைத்து விட்டு ஒரு வழியாக குளித்து வெளியே வந்தவள்,மாற்றுடை எடுப்பதற்கு தங்களது பேகை தேட, அதுவோ அங்கு ஓரமாக இருப்பது தெரிந்தது.

குளித்ததே பாதி சோர்வு நீங்கியது போல இருக்க,ஜிப்பை திறந்து உடையை எடுத்து மாற்றியவள் ஈர கூந்தலை துண்டால் கொண்டையிட்டுக் கொண்டு கதவை திறந்து வெளியே வந்தவள் கிச்சனிற்குள் சென்று பிரிட்ஜை திறந்து பார்க்க,அத்தியாவசிய பொருட்களோ ப்ரஷாகவே இருந்தது.

பால் எடுத்து அடுப்பில் வைத்தவள் சிம்மில் போட்டு விட்டு வாசல் கதவை திறந்து பார்க்க மேக மூட்டம் போல பனி போர்வை போர்தியிருக்க,மெல்லிய குளிர் உடலை ஊடுருவ,ஸ்சாஆஆ என்று கன்னத்தில் கையை வைத்தவாறு படியிலிறங்கி கீழே வந்தவளோ ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்து,ஆஆஆ என்று அலறியடித்து உள்ளே ஓடி போனவள்,கதவை தாழிட்டு மேல் மூச்சு வாங்க நின்றாள்.

பெட்டில் படுத்திருந்தவனோ தன்னவளின் அலறல் சத்தம் கேட்டு பதறி அடிச்சு எழுந்து வந்து பார்க்க, அங்கே ஷமீராவோ கதவின் மேல் சாய்ந்து நிற்பது தெரிந்தது.

என்ன டி ஆச்சு என்று வேகமாக வந்து அவளின் கன்னத்தை பிடித்து கேட்க,ஷமீராவோ எதுவும் சொல்லாமல் அவன் கையை தட்டி விட்டு அங்கிருந்து உள்ளே போய் விட்டாள்.

மனைவியின் இந்த உதாசீனம் மனதிற்குள் சுருக்கென்ற வலியை கொடுத்தாலும்,தான் நடந்து கொண்ட செயலால் தானே தன் மீது இவ்வளவு கோபமாக இருக்கிறாள்,எப்படியாவது மனைவியை சமாதானப் படுத்திடலாமென்று நினைத்தவன் கதவை திறந்து பார்க்க,அங்கே இருந்த இருவரும் அவர்களின் கால்களை தூக்கி செழியனின் நெஞ்சின் மேல் வைத்தனர்.

டைகர்-ஜானி உங்களை பார்த்து தான் பயந்துட்டாளா என்று சிரித்துக் கொண்டே அவர்கள் தலையை தடவி விட்டவன்,வெளியே வந்து அந்த இடத்தை ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு அவர்களை சங்கிலியில் கட்டி போட்டு உள்ளே போய் கதவை சாத்தியவன் மனைவி எங்கே என்று தேட ஷமீரா கிச்சனில் இருப்பது தெரிந்தது.

வேகமாக உள்ளே போனவன் பின்புறமாய் மனைவியை அணைத்துக் கொண்டு,தன்னவளின் ஈர கூந்தலில் வாசம் பிடித்தவன்,அவள் தோள் பட்டையில் முகத்தை வைத்துக் கொண்டு சாரி டி...

ஏதோ ஒரு கோபத்தில் அப்படி நடந்து கொண்டேன்.மன்னிச்சிடு.உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்னு எனக்கு நல்லா தெரியுது என்க,அவளோ எதுவும் பதில் சொல்லாமல் அடுப்பிலிருந்து இறக்கிய டீயை வடிகட்டி அங்கிருந்த கிச்சன் மேடையில் வைத்துவிட்டு அவனிடமிருந்து விலகிப் போக,

எட்டி மனைவியின் கையை பிடித்து இழுக்கவும் வேகமாக வந்து செழியனின் மேல் மோதி நின்றவளுக்கு முதுகு பகுதி ஏதோ பாறையில் மோதிய போல வலியை கொடுத்தது.

அதான் தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றேனே மன்னிச்சிடு.கோவத்துல தான் அப்படி நடந்து விட்டேன்.உன்னை யாருக்கும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது டி.நீ அப்படி சொன்ன உடனே எனக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சு அவ்வளவுதான்..

பொறாமை-பொசசிவ் இப்படி எது வேண்டுமானாலும் வச்சுக்கலாம் டி. நமக்கு குழந்தைகள் பிறந்து வந்தாலும் முதலில் நீ எனக்கு தான் டி சொந்தம்.சினிமாடிக்கா எனக்கு சொல்ல வராது.

"இந்த உலகத்தில் கடைசி மூச்சு வரைக்கும் நீயிருந்தால் நான் இருப்பேன்"

"நீ இல்லை என்ற சூழல் வருவதற்கு முன்பே நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன் டி".

கணவன் சொல்வதை கேட்டவளோ எனக்கென்னவென்று எந்த எதிர்வினையும் காட்டாமல் பிடித்து வைத்த பிள்ளையார் போல அப்படியே நின்றாள்.

"பிளீஸ் பேசு டி"

"பொறுக்கி "

கொழுப்பெடுத்தவன் அப்படி இப்படினு திட்டு டி.இப்படி அமைதியாக இருக்காதே முடியலை டி.

"இனி இப்படி நடந்துக்க மாட்டேன் "

ஒரு முறை உன் புருஷனை மன்னிச்சிடு டி என்று மனைவியிடம் செழியன் கெஞ்சி கொண்டிருக்கும் போது அவன் போனிற்கு கால் வரும் ரிங் டோன் சத்தம் கேட்டது.

"ப்ச்"

காலையிலே எந்த பைத்தியம் கால் பண்ணுதோ என்றவாறு மனைவியிடமிருந்து விலகி போய் போனை எடுத்து பார்க்க கண்ணன் என்பது தெரிந்து,அட்டென் பண்ணியவன் என்னடா என்க...

எதுக்கு இப்படி குறைக்கிற?

பசில இருக்கியோ?

அனல் இங்கு வரைக்கும் அடிக்குதுடா என்று வாயை மூடுவதற்குள்,வாய்க்கு வந்தபடி எல்லாம் சொல்லி செழியன் திட்ட,டேய் நிறுத்துடா நிறுத்துடா சத்தியமா முடியல டா.காதுல ரத்தம் வருது டா என்று அந்த பக்கமிருந்து கண்ணன் கத்தினான்...

எதுக்கு நாயே காலையிலே போன் பண்ணி உயிரை வாங்கி தொலையிர?,என்ன விஷயம் சொல்லித் தொலை?எனக்கு இங்கு ஏகப்பட்ட வேலை இருக்கு.

ஓ...!!

அப்ப நான் வேலை வெட்டி இல்லாம தான் உனக்கு போன் பண்றேன்னு நெனச்சிட்டு இருக்கியோ,வீணா போன பயலே..

உன் தாத்தன் தான் போன் பண்ண சொல்லி உயிரை வாங்கிட்டு இருக்காரு.

"ஒரு நிமிஷம் இருடா என்க"சில நொடிகளில் அப்பு என்ற குரல் கேட்க சொல்லு தாத்தா,எப்படி இருக்க?

ம்ம்...

எனக்கென்னைய்யா உன் மவனை தூக்கி கொஞ்சும் வரைக்கும் திடமா தான் இருப்பேன்.இன்னும் 5 நாள்ல நம்ப வூட்ல கண்மணி நிச்சயம் இருக்கு உனக்கு ஞாபகம் இருக்கு தானே?

உன் பொண்டாட்டியோட சொந்த பந்தமெல்லாம் வருவாங்க,அவங்க பார்வை முழுசும் உன் மேல தான் இருக்கும்.உன் மாமனார் எதாவது முறுக்கி கிட்டு போனாலும் நீ மொவரைய காட்டாம இருக்கணும். அதுக்கு தான் சின்னவனை போன் போட சொன்னேன்.

புள்ளை நல்லாருக்கு தானே?

உன் கோவத்தை ஒன்னும் அது கிட்ட காட்டலையே?

அப்படியே என் மாமனார் போல தான் நீ என்க...

ம்கும் இதுல பெரும ஒன்னுதான் கேடுயென்று கண்ணன் முணுமுணுத்தான்.

"சரி அப்பு"

"உடம்பை பார்த்துக்க"

நான் வச்சிரட்டுமா,சரிங்க தாத்தாயென்று அழைப்பை துண்டித்தவன் ஷமீராவை தேடி கிச்சனிற்குள் வர அவள் அங்கு இல்லை.

அவனுக்கான டீ சமையல் மேடையில் மூடியிருந்தது.

ஏன் கையில கொண்டு வந்து கொடுக்க மாட்டாளோ?இவளை கடிச்சு குதறிடவா போறேனென்று முணவ,அடேய் நல்லவனே ரா முழுவதும் அதாண்டா பண்ணுன என்று அவன் மனசாட்சி சொல்லியது.

அதானே வாய்ப்பு எப்ப கிடைக்கும் என் மூக்கை உடைக்கலான்னு எங்க இருந்தாலும் ஓடி வந்துரு..ச்சை போய் தொலையென்று மனசாட்சியை விரட்டியவன் அங்கிருந்த டீ காப்பை எடுத்துக்கொண்டு மனைவியை தேட, அவள் வீட்டிற்குள் எங்கேயும் இருப்பது போல் தெரியவில்லை.

எங்கு போனாள் என்ற யோசனையோடு தோட்டத்து பக்கம் வந்து பார்க்க அங்கே கதவு திறந்திருப்பது தெரிந்தது.

ஓய் சண்டிராணி எங்க டி இருக்கிற என்றவாறு படியிலிறங்கி கீழே வர, ஷமீராவோ அங்கிருந்த இயற்கை சூழலை பார்த்து மலைத்து நிற்பது தெரிந்தது.

வேகமாக டீயை குடித்துவிட்டு அங்கிருந்த படிக்கட்டில் கப்பை வைத்தவன்,மனைவியை நோக்கி வந்து அவளை கையில் ஏந்தி கொள்ள,அதில் நிகழ்வுக்கு வந்தவள் கீழ இறங்க முடியல கொஞ்ச நேரம் சும்மா இரு டி உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்.

"தாத்தா தான் கால் பண்ணுனாரு"

கண்மணிக்கு வர ஏழாம் தேதி நிச்சயதார்த்தம் இல்லையா அது சொல்றதுக்கு தான்...

இந்த இடம் எப்படி இருக்கு??

என்னோட ஒரு வருஷ சம்பள பணத்தை சேர்த்து வச்சு தான் இந்த இடத்தை வாங்குனேன்.குறைஞ்ச விலையில் வருதுன்னு வெற்றி சொன்னானா சரினு வாங்கி போட்டுட்டேன்.

பில்டிங் கட்டுவதற்கு பணம் இல்லை. சம்பளத்தில் தான் லோன் போட்டு கட்டினேன்.

நாலு வருஷமா வாங்கற சம்பளம் எல்லாம் லோனுக்கு தான் போயிட்டு இருக்கு.இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல கடன் அடைந்துவிடும் டி.

என் பொண்டாட்டியா நீ வந்த பிறகு உனக்கு அசைக்க முடியாத கிஃப்ட் குடுக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.இந்த வீட்டுக்கு தளபூஜை பண்ணிட்டு தான் நான் அங்கு வந்தேன்.

அப்பதான் உன்னை பார்த்தேன்.சோ இந்த இடம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்றவாறு அவளை தூக்கிக்கொண்டே உள்ளே இருக்கும் படியின் வழியாக மேலே வந்தவன்,கையிலிருந்தவளை கீழே இறக்கி விட்டு,அவளின் கண்ணை பொத்தியபடி நடத்தி கூப்பிட்டு போக...

இந்த மனுஷன் எங்கே கூப்பிட்டு போறார்?

பில்டப் எல்லாம் பயங்கரமா இருக்கு!

செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லையென்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.

சோழனூர்:

சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்று பாபுவின் நிச்சயதார்த்த விஷயத்தை சொல்லிட்டு வரும் போது,கார் ஒன்று வீட்டின் முன்னால் வந்து நிற்க,யாரென்று பார்த்துக் கொண்டே அந்தோணி வர,காரிலிருந்து ராணியின் சின்னம்மா பையனும் அந்தோணியின் சின்னத்தை பையனாகிய ஜேம்ஸின் குடும்பம் தான் இறங்கினர்.

வா மச்சானென்று ஜேம்ஸின் கையை பிடித்தவர்,அவன் மனைவி பிள்ளைகளை வாங்க என்று சொல்லிக் கொண்டு வீட்டிற்குள் போனார்.

அவர்களை பார்த்த சாரதா பாட்டி அப்பாடி என்று கையை பிடிக்க,ஏத்தை இவ்வளவு நடந்திருக்கிறது ஒரு வார்த்தை சொல்லுறது இல்லையா,நான் என்ன செத்தா போயிட்டேன்?

வேற மாநிலத்திற்கு வேலைக்கு தான் போனேன்.அதுக்காக தண்ணி தெளிச்சி விட்டுறதா என்று சத்தம் போட...

நம்ப தலையெழுத்து வேற என்னைய்யா பண்ணயென கண் கலங்கினார்.

ஏன் கா நீயும் ஒரு பொண்ணு தானே,இதே மாமா செஞ்சிருந்தா சும்மா இருப்பியா?

அப்பவே அத்தை வேண்டாம்னு சொல்லுச்சி,எஸ்தர் கிட்ட பெரியம்மா என்னலாம் சொல்லி சம்மதிக்க வச்சிதோ அது அந்த ஆண்டவருக்கு தான் வெளிச்சம்.வர கோவத்துக்கு உங்க ரெண்டு பேரையும் வெட்டி போடலாம்னு ஆத்திரம் வருது.

என்ன பண்ணி தொலைய கூட பிறந்த பொறப்பா போயிட்டீங்களே என்று ஆத்திரத்தில் கையை மடக்கிய ஜேம்ஸ் அங்கிருந்த சுவற்றில் குத்த...

ஐயா...

வேணாம் யா.

"போனதை பேசி பொழப்பு ஆகாது யா "

உன் மருமவனுக்கு மனசார மாலையெடுத்து போடுயா ராசாயென ஜேம்ஸின் கையை பிடித்து பரிதவிப்போடு சாரதா பாட்டி சொல்ல,வேற என்ன பண்ண முடியும்

"அதுக்கு தானே வந்திருக்கேன்"

பாபு எங்கே?

பரத் ஊர்ல இருந்து வரான்.அவனை கூப்பிட டவுனுக்கு போயிருக்கானென்றனர்.

ஜேம்ஸ் காபி எடுத்துட்டு வரேன் டா என்று ராணி சொல்ல,நிமிர்ந்து தனது சகோதரியை பார்த்தவர்,நீ உட்காரு என்று தனது மனைவியின் பக்கம் திரும்ப,கணவரின் பார்வை புரிந்து இதோங்க என்றவாறு எழுந்து கிச்சனிற்குள் சென்றார்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top