Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 392
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
ஷமீ நான் எங்கேயும் போயிடல புரியுதா, உன் அண்ணன் அக்கா அண்ணி மாமா கூட தான் இருக்கிறேன்.திரும்ப அந்த வீட்டுக்கு நான் போவேன்னு உறுதியா சொல்ல முடியாது.
உனக்கும் வந்து போவதற்கு தாய் வீடு வேணும் இல்லையா?
இத்தனை நாளா நீ ஒத்த பொண்ணா இருந்த,இன்னைக்கு உனக்கு அண்ணன் அக்கா இருக்கிறார்கள்.நல்லது கெட்டதுக்கு இனிமே எனக்கு அப்புறம் இவங்க தான், அவங்களுக்கும் நீதான் புரிஞ்சி நடந்துக்க.
குடும்பத்தோட கௌரவம் வீட்டு மருமக கையில தான் இருக்கு அதை மறந்து விடக்கூடாது.நல்லதோ கெட்டதோ அனுசரிச்சு போக கத்துக்க.நீ ஒத்த மகளா அங்கு வாழ்ந்த.உன்னை இளவரசி போல நான் வளர்த்தேன்.
ஆனால் இங்கு நீ அந்த வீட்டுக்கு மருமக தான் அதே இளவரசி தோரணையோடு அங்கு வாழ்ந்தால் அது நல்லா இருக்காது.உன்னோட பொறுப்பு எதுவோ அதை உணர்ந்து யாரோட மனமும் கோணாமல் நடந்துக்கணும் புரியுதா?.
நீ எந்த அளவுக்கு இங்க நடந்துக்குறியோ அப்படித்தான் பாபுவும் கண்மணியை பார்த்துப்பான் உன்னோட மட்டும் போகல அது கண்மணிக்கும் தொடரும்.
தம்பி உங்களுக்கும் இதை தான் சொல்றேன்.நீங்க எப்படி என் பொண்ணை பாத்துக்குறீர்களோ அந்த அளவுக்கு தான் உங்க பொண்ணையும் பாபு பார்த்துப்பான்.இதுதான் நிதர்சனம்.
பாபுக்கு இந்த உலகத்திலே யாரை ரொம்ப பிடிக்குமென்று கேட்டால் யோசிக்காமல் ஷமியை தான் சொல்வான்.பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கணும்னு விதி இருக்கிறது.
சின்ன சின்ன பிரச்சனைகள் புருஷன் பொண்டாட்டிக்குள்ளும் குடும்பத்துலையும் வரும்.அதை பெருசு படுத்தாமல் பெரியவங்க சொல்றதுக்கு தாழ்ந்து போகலாம் தப்பே கிடையாது. இரண்டு பேரும் சீக்கிரம் நல்ல விஷயத்தை சொல்லுங்க என்கவும் கண்டிப்பாகங்கத்தை என்றான் .
பின்னர் அவர்களிடம் சொல்லிக் கொண்டு ருத்ரனும் தீபனும் அவர்களின் மனைவியோடு எஸ்தரையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டானுங்கள்.
அப்பாடா ஒரு வழியா எல்லா பிரச்சனையும் ஓஞ்சு போயிடுச்சுடா மச்சான் என்றவாறு அங்கிருந்த சோபாவில் வெற்றி உக்கார,கரெக்டாக அந்த நேரம் வசுந்தராவிடமிருந்து ஃபோன் வந்தது.
அதானே மனுஷன் நிம்மதியா இருந்தால் உன் அத்தைக்கு பொறுக்காதே என்று சொல்லிக் கொண்டு அட்டென்ட் பண்ணியவன் சொல்லு மா என்க,வெற்றி என்கும் வசுந்தராவின் குரலை வைத்து அது அபிசியல் விஷயம் என்பது தெரிந்து எஸ் மேடம்.
கேஸ் பற்றிய சில விஷயங்களை வெற்றியிடமும் செழியனிடமும் அவர் பேசிக் கொண்டிருக்கு ஷமீராவோ மாடியில் துவைத்து காய வைத்த துணிகளை எடுத்துக் கொண்டு ரூமிற்கு வரவும் ஜனனியின் பையன் சக்திவேலோ அத்தை அத்தை என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.
வாங்க கண்ணா என்கவும் எனக்கு மேகி வேணும் அம்மா செஞ்சு தர மாட்டேங்குறாள்.நீ செஞ்சு கொடுத்தை என்று அழ,அச்சோ இதுக்கு ஏன் செல்ல குட்டி அழறிங்க என்றவாறு கையிலிருந்த துணியை கீழே போட்டுவிட்டு பிள்ளையை தூக்கியவள் மேகி தானே இதோ அத்தை செஞ்சு கொடுக்கிறேன் வாங்க என்று தூக்கிக் கொண்டு கிச்சனுக்கு போனவள் அங்கிருந்த கிச்சன் மேடையில் தூக்கி சக்தியை உட்கார வைத்தாள்.
பின்னர் கோதுமை மாவை எடுத்து தண்ணீர் ஊத்தி பிசைந்தவள் அதை இடியாப்பம் போல் பிழிந்து கொதிக்கிற வெந்நீரில் போட்டு எடுக்கவும் அதோ நூடுல்ஸ் போல தனித்தனியாக வந்தது. பின்னர் அதற்காக காய்கறிகள் எல்லாம் வெட்டி மசாலா பண்ணி ரெடி பண்ணி நூடுல்ஸ் செய்து முடிக்க ஆஹா என்ன ஒரு வாசனை என்றவாறு செழியனும் கிச்சனிற்குள் வந்தான்.
மாமா இது எனக்காக தான் எங்க அத்தை செஞ்சா உனக்கு கிடையாது என்று சக்தி சொல்ல,அடேய் அவ என் பொண்டாட்டி டா.எனக்காக தான்டா செஞ்சாள் என்று சிறு குழந்தையிடம் வம்பு வளர்க்க,கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா சின்ன குழந்தைகிட்ட போய் இப்படி போட்டியா என்று ஷமீரா முறைக்க,நீ தாண்டி வம்புக்கு வர மாட்டேங்குற..
அதனால தாண்டி மருமகன் கிட்ட சண்டை போடறேன் என்று கண்ணடித்து சொன்னான்.ஆஆஆ என்று பல்லை கடித்தவள் தட்டை தூக்க,எனக்கும் எடுத்துட்டு வாடி பசிக்குது என்றான்.
ஆமா இவரு சின்ன குழந்தை பாருங்களேன் என்க,அதுல என்ன டி சந்தேகம் என்கவும்,பேசாம போங்க இல்லன்னா கொதிக்கிர பால் எடுத்து மேலேயே ஊத்திடுவேன்..
ரொம்ப தாண்டி என்னை மிரட்டுற என்று முறைத்துக் கொண்டு வெளியே போக,அந்த நேரம் மாடுகளை தொழுவத்தில் கட்டி விட்டு வீட்டிற்குள் வந்த ஜனனியோ என்ன ஒரே மசாலா வாசனையாக இருக்கிறது ணா என்கவும்,உன் நாத்தனார் என்னமோ பண்றாள் டா என்றவாறு செழியன் சோபாவில் உட்கார்ந்தான்.
சக்தி என்கிட்ட நூடுல்ஸ் கேட்டான் ணா. நான் செஞ்சு தர மாட்டேன்னு சொன்னேன்.அதான் ஷமீரா கிட்ட கேட்டு இருக்கான் போல என்கவும் ஆமாங்கண்ணி நூடுல்ஸ் தான் பட் வீட் நூடுல்ஸ் என்றபடியே அங்கு வந்த ஷமீரா சொல்ல,அடிப்பாவி என்னைக்காவது எனக்கு செஞ்சு கொடுத்திருக்கியாடின்னு முறைத்தான்.
ஷமீராவோ சிரித்துக்கொண்டு ஆளுக்கு ஒரு தட்டில் நூடுல்ஸ் போட்டு எடுத்துட்டு வந்து கொடுக்கவும் அதை சாப்பிட்டவர்களோ ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினர்.
டேஸ்ட் வித்தியாசமா இருக்கே ஷமீ,
இது எதுல செஞ்ச?நான்தான் நூடுல்ஸ் வாங்கி வைக்கலையே என்று ஜனனி கேட்க,அது வந்துங்க அண்ணி கோதுமை மாவில் தான் செஞ்சேன் என்றாள்.
என்னது கோதுமை மாவா என்று மற்றவர்கள் அதிர்ச்சியா கேட்க,என் பொண்டாட்டி பெரிய "செப்"டா சமையல்ல அடிச்சுக்க முடியாது என்று செழியன் சொல்லவும்,உன் பெருமை பீத்தலை கொஞ்சம் நிறுத்து முதலில் என் தங்கச்சி கிட்ட ரெசிபி கேட்கிறேன்.
உன் தங்கச்சிக்கு யூஸ் ஆகும் என்று வெற்றி சொல்லவும் ஜனனியோ கணவனை முறைத்து பார்த்தாள்.
உண்மையை தான டி சொல்றேன். என் தங்கச்சிக்கிட்ட தெரிஞ்சுக்க இதுவரைக்கும் கோதுமையில நூடுல்ஸ் செஞ்சு நீ கொடுத்திருக்கிறாயா என்க,இல்லை என்றாள்.அதனால் தான் டி சொல்கிறேன்.
அம்மாடி உன் அண்ணிகாரிக்கு கொஞ்சம் அந்த ரெசிபி சொல்லிக் கொடு டா.அண்ணனும் கொஞ்சம் வாய்க்கு ருசியான நல்ல சாப்பாடு சாப்பிடுகிறேன் என்க...
வத்த குழம்பு வச்சு குடு டி கருவாட்டு குழம்பு வச்சு குடு டி மீன் குழம்பு வச்சி குடு டி என்று நீ வருவீங்கள் தானே குழம்பு சட்டியை தூக்கி உங்க மண்டைய பொளக்குறேன் பாருங்கள் என்று ஜனனி திட்ட,அதை இன்னைக்கே செய்யலாம் டா தப்பே கிடையாது என்று செழியன் சொல்லவும்,அட கொலைகாரப் பாவி அவளுக்கு தெரியாது இவன் எடுத்து கொடுக்கிறான் பாரு என்று செழியனை வெற்றி முறைக்க..
அப்புறம் வெற்றி உன் தங்கச்சியை கூப்பிட்டு நானும் அங்கே கிளம்பறேன் என்கவும் சரி பார்த்து போயிட்டு வா. இங்கு வீட்டுக்கு வந்துட்டு தானே போவ என்க ஆமாடா என்றான்.
பின்னர் இருவரும் தயாராகி கீழே வர, ஜனனி ஜனனி என்று வெற்றி கூப்பிட இதேங்க என்றவள் சாமி ரூமில் இருந்து ஒரு தாம்பாளத்தை எடுத்து வர, அதில் பட்டு புடவை பட்டு வேஷ்டி சட்டை குங்குமம் பூ பழங்களோடு நகை பெட்டியும் இருந்தது.
இருவரும் இணைந்து ஷமீராவுக்கும் இளஞ்செழியனுக்கும் கொடுக்க அதை வாங்கிக் கொண்டனர்.எதுக்கு ணா இந்த பார்மாலிட்டிஸெல்லாம் என்க,பொறந்த பெண் அப்பா வீட்டில் இருந்து கையை வீசிக்கொண்டு போகக் கூடாது.இது நம்ம குடும்ப வழக்கம் டா.
அப்பா அம்மா இங்க இருந்தாக்க அவங்க வேற போல செய்வாங்க.அந்த ரெண்டு காதல் புறாக்களும் டெல்லியில சுத்திக்கிட்டு இருக்குங்க.அவங்க வந்த பிறகு உங்களை விருந்துக்கு கூப்பிடுவார்கள் டா.
"ஹம் சரிங்க அண்ணா"
ஏதாச்சும் இவன் வாலாட்டினால் சொல்லு டா.உன் அண்ணனும் போலீஸ்காரன் தான் என்கவும்,கண்டிப்பாக அண்ணா என்று ஷமீரா சிரிக்க..அடேய் உன் தங்கச்சியே நாலு போலீஸ்காரிக்கு சமம்.
அவளுக்கு எதுவும் தெரியாது நீ வேற சொல்லிக் கொடுக்கிறியா ஏண்டா ஏன் இப்படி என்று செழியன் முறைக்க, ஆயிரம் தான் இருந்தாலும் மனைவியோட அண்ணன் உதைக்கிற போல வராது டா.
வெற்றியின் பையன் சக்தியோ அத்தையை விட மாட்டேன் என்று அழ, சக்தி குட்டி மாமா ஒரு பயங்கர ப்ராசஸ்ல இருக்கிறேன்.அப்போ தான் உங்களுக்கு ஒரு புது பார்பிடால் போல குட்டி பாப்பா வரும் என்க,ஷமீராவோ கணவனின் இடுப்பில் தனது முழங்கையை விட்டு இடிக்க,அடியேய் உண்மையான தான டி சொல்றேன். நான் என்ன பொய்யா டி சொல்றேன்.
உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா சின்ன குழந்தை கிட்ட என்ன பேச்சு பேசுறீங்க என்று ஷமீரா பல்லை கடிக்க, எல்லாம் நல்ல பேச்சு தான் பேசுறேன்.
நீ இப்படி பேசியே நேரத்தை ஒட்டாதே கிளம்பு டி என்று மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவன் நண்பனிடமும் ஜனனியிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் காரில் ஏறி அங்கிருந்து மேதினூர் என்னும் ஊரை நோக்கி புறப்பட்டனர்.
போகும் வழி எங்கும் விவசாய பூமியாக இருக்க அதை எல்லாம் ரசித்து பார்த்துக் கொண்டே ஷமீராவும் வந்தாள்.
மனைவியின் முகத்தில் இருக்கும் பூரிப்பை பார்த்தவன் என்ன டி இந்த இடம் பிடித்திருக்கிறதா என்க,பார்க்க ரொம்ப அழகா இருக்குங்க.எல்லாமே விவசாய நிலம் தான் போல என்கவும்,ஆமாடி செல்லம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு வா என்கவும் அப்படியா..உங்களுக்கு எப்படி இந்த இடம் தெரியுமென்று கேட்க..
அதெல்லாம் அங்க போய் சொல்றேன் நீ வாடி.எல்லாத்தையும் இங்கையே கேட்காதே என்கவும்..அதானே நீங்கள் ஒன்னுத்தையும் சொல்லிடாதீங்க.
உன்னிடம் ஒரு விஷயத்தை கேட்க மறந்துட்டேன் டி.உனக்கு இந்த வேலை புடிச்சிருக்கா செல்லம்?எனக்கு ரொம்ப பிடிச்சதால் தான் நான் இந்த வேலைக்கு போனேன் டி.
அதை விட வம்சி அப்பாவோட இறப்பு பத்தி தாத்தா சொல்லும் போது எனக்கு அந்த வயசுலையே சந்தேகமா தான் இருந்தது.
ஷமீ நான் எங்கேயும் போயிடல புரியுதா, உன் அண்ணன் அக்கா அண்ணி மாமா கூட தான் இருக்கிறேன்.திரும்ப அந்த வீட்டுக்கு நான் போவேன்னு உறுதியா சொல்ல முடியாது.
உனக்கும் வந்து போவதற்கு தாய் வீடு வேணும் இல்லையா?
இத்தனை நாளா நீ ஒத்த பொண்ணா இருந்த,இன்னைக்கு உனக்கு அண்ணன் அக்கா இருக்கிறார்கள்.நல்லது கெட்டதுக்கு இனிமே எனக்கு அப்புறம் இவங்க தான், அவங்களுக்கும் நீதான் புரிஞ்சி நடந்துக்க.
குடும்பத்தோட கௌரவம் வீட்டு மருமக கையில தான் இருக்கு அதை மறந்து விடக்கூடாது.நல்லதோ கெட்டதோ அனுசரிச்சு போக கத்துக்க.நீ ஒத்த மகளா அங்கு வாழ்ந்த.உன்னை இளவரசி போல நான் வளர்த்தேன்.
ஆனால் இங்கு நீ அந்த வீட்டுக்கு மருமக தான் அதே இளவரசி தோரணையோடு அங்கு வாழ்ந்தால் அது நல்லா இருக்காது.உன்னோட பொறுப்பு எதுவோ அதை உணர்ந்து யாரோட மனமும் கோணாமல் நடந்துக்கணும் புரியுதா?.
நீ எந்த அளவுக்கு இங்க நடந்துக்குறியோ அப்படித்தான் பாபுவும் கண்மணியை பார்த்துப்பான் உன்னோட மட்டும் போகல அது கண்மணிக்கும் தொடரும்.
தம்பி உங்களுக்கும் இதை தான் சொல்றேன்.நீங்க எப்படி என் பொண்ணை பாத்துக்குறீர்களோ அந்த அளவுக்கு தான் உங்க பொண்ணையும் பாபு பார்த்துப்பான்.இதுதான் நிதர்சனம்.
பாபுக்கு இந்த உலகத்திலே யாரை ரொம்ப பிடிக்குமென்று கேட்டால் யோசிக்காமல் ஷமியை தான் சொல்வான்.பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கணும்னு விதி இருக்கிறது.
சின்ன சின்ன பிரச்சனைகள் புருஷன் பொண்டாட்டிக்குள்ளும் குடும்பத்துலையும் வரும்.அதை பெருசு படுத்தாமல் பெரியவங்க சொல்றதுக்கு தாழ்ந்து போகலாம் தப்பே கிடையாது. இரண்டு பேரும் சீக்கிரம் நல்ல விஷயத்தை சொல்லுங்க என்கவும் கண்டிப்பாகங்கத்தை என்றான் .
பின்னர் அவர்களிடம் சொல்லிக் கொண்டு ருத்ரனும் தீபனும் அவர்களின் மனைவியோடு எஸ்தரையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டானுங்கள்.
அப்பாடா ஒரு வழியா எல்லா பிரச்சனையும் ஓஞ்சு போயிடுச்சுடா மச்சான் என்றவாறு அங்கிருந்த சோபாவில் வெற்றி உக்கார,கரெக்டாக அந்த நேரம் வசுந்தராவிடமிருந்து ஃபோன் வந்தது.
அதானே மனுஷன் நிம்மதியா இருந்தால் உன் அத்தைக்கு பொறுக்காதே என்று சொல்லிக் கொண்டு அட்டென்ட் பண்ணியவன் சொல்லு மா என்க,வெற்றி என்கும் வசுந்தராவின் குரலை வைத்து அது அபிசியல் விஷயம் என்பது தெரிந்து எஸ் மேடம்.
கேஸ் பற்றிய சில விஷயங்களை வெற்றியிடமும் செழியனிடமும் அவர் பேசிக் கொண்டிருக்கு ஷமீராவோ மாடியில் துவைத்து காய வைத்த துணிகளை எடுத்துக் கொண்டு ரூமிற்கு வரவும் ஜனனியின் பையன் சக்திவேலோ அத்தை அத்தை என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.
வாங்க கண்ணா என்கவும் எனக்கு மேகி வேணும் அம்மா செஞ்சு தர மாட்டேங்குறாள்.நீ செஞ்சு கொடுத்தை என்று அழ,அச்சோ இதுக்கு ஏன் செல்ல குட்டி அழறிங்க என்றவாறு கையிலிருந்த துணியை கீழே போட்டுவிட்டு பிள்ளையை தூக்கியவள் மேகி தானே இதோ அத்தை செஞ்சு கொடுக்கிறேன் வாங்க என்று தூக்கிக் கொண்டு கிச்சனுக்கு போனவள் அங்கிருந்த கிச்சன் மேடையில் தூக்கி சக்தியை உட்கார வைத்தாள்.
பின்னர் கோதுமை மாவை எடுத்து தண்ணீர் ஊத்தி பிசைந்தவள் அதை இடியாப்பம் போல் பிழிந்து கொதிக்கிற வெந்நீரில் போட்டு எடுக்கவும் அதோ நூடுல்ஸ் போல தனித்தனியாக வந்தது. பின்னர் அதற்காக காய்கறிகள் எல்லாம் வெட்டி மசாலா பண்ணி ரெடி பண்ணி நூடுல்ஸ் செய்து முடிக்க ஆஹா என்ன ஒரு வாசனை என்றவாறு செழியனும் கிச்சனிற்குள் வந்தான்.
மாமா இது எனக்காக தான் எங்க அத்தை செஞ்சா உனக்கு கிடையாது என்று சக்தி சொல்ல,அடேய் அவ என் பொண்டாட்டி டா.எனக்காக தான்டா செஞ்சாள் என்று சிறு குழந்தையிடம் வம்பு வளர்க்க,கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா சின்ன குழந்தைகிட்ட போய் இப்படி போட்டியா என்று ஷமீரா முறைக்க,நீ தாண்டி வம்புக்கு வர மாட்டேங்குற..
அதனால தாண்டி மருமகன் கிட்ட சண்டை போடறேன் என்று கண்ணடித்து சொன்னான்.ஆஆஆ என்று பல்லை கடித்தவள் தட்டை தூக்க,எனக்கும் எடுத்துட்டு வாடி பசிக்குது என்றான்.
ஆமா இவரு சின்ன குழந்தை பாருங்களேன் என்க,அதுல என்ன டி சந்தேகம் என்கவும்,பேசாம போங்க இல்லன்னா கொதிக்கிர பால் எடுத்து மேலேயே ஊத்திடுவேன்..
ரொம்ப தாண்டி என்னை மிரட்டுற என்று முறைத்துக் கொண்டு வெளியே போக,அந்த நேரம் மாடுகளை தொழுவத்தில் கட்டி விட்டு வீட்டிற்குள் வந்த ஜனனியோ என்ன ஒரே மசாலா வாசனையாக இருக்கிறது ணா என்கவும்,உன் நாத்தனார் என்னமோ பண்றாள் டா என்றவாறு செழியன் சோபாவில் உட்கார்ந்தான்.
சக்தி என்கிட்ட நூடுல்ஸ் கேட்டான் ணா. நான் செஞ்சு தர மாட்டேன்னு சொன்னேன்.அதான் ஷமீரா கிட்ட கேட்டு இருக்கான் போல என்கவும் ஆமாங்கண்ணி நூடுல்ஸ் தான் பட் வீட் நூடுல்ஸ் என்றபடியே அங்கு வந்த ஷமீரா சொல்ல,அடிப்பாவி என்னைக்காவது எனக்கு செஞ்சு கொடுத்திருக்கியாடின்னு முறைத்தான்.
ஷமீராவோ சிரித்துக்கொண்டு ஆளுக்கு ஒரு தட்டில் நூடுல்ஸ் போட்டு எடுத்துட்டு வந்து கொடுக்கவும் அதை சாப்பிட்டவர்களோ ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினர்.
டேஸ்ட் வித்தியாசமா இருக்கே ஷமீ,
இது எதுல செஞ்ச?நான்தான் நூடுல்ஸ் வாங்கி வைக்கலையே என்று ஜனனி கேட்க,அது வந்துங்க அண்ணி கோதுமை மாவில் தான் செஞ்சேன் என்றாள்.
என்னது கோதுமை மாவா என்று மற்றவர்கள் அதிர்ச்சியா கேட்க,என் பொண்டாட்டி பெரிய "செப்"டா சமையல்ல அடிச்சுக்க முடியாது என்று செழியன் சொல்லவும்,உன் பெருமை பீத்தலை கொஞ்சம் நிறுத்து முதலில் என் தங்கச்சி கிட்ட ரெசிபி கேட்கிறேன்.
உன் தங்கச்சிக்கு யூஸ் ஆகும் என்று வெற்றி சொல்லவும் ஜனனியோ கணவனை முறைத்து பார்த்தாள்.
உண்மையை தான டி சொல்றேன். என் தங்கச்சிக்கிட்ட தெரிஞ்சுக்க இதுவரைக்கும் கோதுமையில நூடுல்ஸ் செஞ்சு நீ கொடுத்திருக்கிறாயா என்க,இல்லை என்றாள்.அதனால் தான் டி சொல்கிறேன்.
அம்மாடி உன் அண்ணிகாரிக்கு கொஞ்சம் அந்த ரெசிபி சொல்லிக் கொடு டா.அண்ணனும் கொஞ்சம் வாய்க்கு ருசியான நல்ல சாப்பாடு சாப்பிடுகிறேன் என்க...
வத்த குழம்பு வச்சு குடு டி கருவாட்டு குழம்பு வச்சு குடு டி மீன் குழம்பு வச்சி குடு டி என்று நீ வருவீங்கள் தானே குழம்பு சட்டியை தூக்கி உங்க மண்டைய பொளக்குறேன் பாருங்கள் என்று ஜனனி திட்ட,அதை இன்னைக்கே செய்யலாம் டா தப்பே கிடையாது என்று செழியன் சொல்லவும்,அட கொலைகாரப் பாவி அவளுக்கு தெரியாது இவன் எடுத்து கொடுக்கிறான் பாரு என்று செழியனை வெற்றி முறைக்க..
அப்புறம் வெற்றி உன் தங்கச்சியை கூப்பிட்டு நானும் அங்கே கிளம்பறேன் என்கவும் சரி பார்த்து போயிட்டு வா. இங்கு வீட்டுக்கு வந்துட்டு தானே போவ என்க ஆமாடா என்றான்.
பின்னர் இருவரும் தயாராகி கீழே வர, ஜனனி ஜனனி என்று வெற்றி கூப்பிட இதேங்க என்றவள் சாமி ரூமில் இருந்து ஒரு தாம்பாளத்தை எடுத்து வர, அதில் பட்டு புடவை பட்டு வேஷ்டி சட்டை குங்குமம் பூ பழங்களோடு நகை பெட்டியும் இருந்தது.
இருவரும் இணைந்து ஷமீராவுக்கும் இளஞ்செழியனுக்கும் கொடுக்க அதை வாங்கிக் கொண்டனர்.எதுக்கு ணா இந்த பார்மாலிட்டிஸெல்லாம் என்க,பொறந்த பெண் அப்பா வீட்டில் இருந்து கையை வீசிக்கொண்டு போகக் கூடாது.இது நம்ம குடும்ப வழக்கம் டா.
அப்பா அம்மா இங்க இருந்தாக்க அவங்க வேற போல செய்வாங்க.அந்த ரெண்டு காதல் புறாக்களும் டெல்லியில சுத்திக்கிட்டு இருக்குங்க.அவங்க வந்த பிறகு உங்களை விருந்துக்கு கூப்பிடுவார்கள் டா.
"ஹம் சரிங்க அண்ணா"
ஏதாச்சும் இவன் வாலாட்டினால் சொல்லு டா.உன் அண்ணனும் போலீஸ்காரன் தான் என்கவும்,கண்டிப்பாக அண்ணா என்று ஷமீரா சிரிக்க..அடேய் உன் தங்கச்சியே நாலு போலீஸ்காரிக்கு சமம்.
அவளுக்கு எதுவும் தெரியாது நீ வேற சொல்லிக் கொடுக்கிறியா ஏண்டா ஏன் இப்படி என்று செழியன் முறைக்க, ஆயிரம் தான் இருந்தாலும் மனைவியோட அண்ணன் உதைக்கிற போல வராது டா.
வெற்றியின் பையன் சக்தியோ அத்தையை விட மாட்டேன் என்று அழ, சக்தி குட்டி மாமா ஒரு பயங்கர ப்ராசஸ்ல இருக்கிறேன்.அப்போ தான் உங்களுக்கு ஒரு புது பார்பிடால் போல குட்டி பாப்பா வரும் என்க,ஷமீராவோ கணவனின் இடுப்பில் தனது முழங்கையை விட்டு இடிக்க,அடியேய் உண்மையான தான டி சொல்றேன். நான் என்ன பொய்யா டி சொல்றேன்.
உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா சின்ன குழந்தை கிட்ட என்ன பேச்சு பேசுறீங்க என்று ஷமீரா பல்லை கடிக்க, எல்லாம் நல்ல பேச்சு தான் பேசுறேன்.
நீ இப்படி பேசியே நேரத்தை ஒட்டாதே கிளம்பு டி என்று மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவன் நண்பனிடமும் ஜனனியிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் காரில் ஏறி அங்கிருந்து மேதினூர் என்னும் ஊரை நோக்கி புறப்பட்டனர்.
போகும் வழி எங்கும் விவசாய பூமியாக இருக்க அதை எல்லாம் ரசித்து பார்த்துக் கொண்டே ஷமீராவும் வந்தாள்.
மனைவியின் முகத்தில் இருக்கும் பூரிப்பை பார்த்தவன் என்ன டி இந்த இடம் பிடித்திருக்கிறதா என்க,பார்க்க ரொம்ப அழகா இருக்குங்க.எல்லாமே விவசாய நிலம் தான் போல என்கவும்,ஆமாடி செல்லம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு வா என்கவும் அப்படியா..உங்களுக்கு எப்படி இந்த இடம் தெரியுமென்று கேட்க..
அதெல்லாம் அங்க போய் சொல்றேன் நீ வாடி.எல்லாத்தையும் இங்கையே கேட்காதே என்கவும்..அதானே நீங்கள் ஒன்னுத்தையும் சொல்லிடாதீங்க.
உன்னிடம் ஒரு விஷயத்தை கேட்க மறந்துட்டேன் டி.உனக்கு இந்த வேலை புடிச்சிருக்கா செல்லம்?எனக்கு ரொம்ப பிடிச்சதால் தான் நான் இந்த வேலைக்கு போனேன் டி.
அதை விட வம்சி அப்பாவோட இறப்பு பத்தி தாத்தா சொல்லும் போது எனக்கு அந்த வயசுலையே சந்தேகமா தான் இருந்தது.