• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
390
வனிச்சூர்:

தன்னவன் தான் மாப்பிள்ளை என்பது தெரிந்ததும் மலருக்கு கூடை பூக்களை தலையில் கொட்டியது போல இருக்க, வேகமாக ரூமிற்குள் வந்தவளுக்கு சந்தோஷத்தில் அழுகை வந்தது.

அவள் பின்னாடியே வந்த கண்மணி என்னடி கல்யாணத்தை நிறுத்திடலாமா?,இதைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த மலரோ எதுவும் சொல்லாமல் தோழியை அணைத்துக் கொண்டாள்.

அடியே பன்னாட இதை என் அண்ணனுக்கு பண்ணாலும் புண்ணியம் உண்டு.என்னை ஏண்டி கட்டி பிடிக்கிற போடி நாயே என்று சிரித்துக் கொண்டே தனது தோழியை விலக்க,ஏண்டி ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல..இவங்க பண்ற அலப்பறைய பார்த்து நெஞ்சு எப்படி தாருமாறா துடிச்சிட்டு இருந்தது தெரியுமா என்று அழுது கொண்டே மலர் கேட்க..

ஏண்டி விளக்கெண்ண நாயே..உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் என் அண்ணனுக்கு பொண்டாட்டினா அது நீ தான்னு.இவ்ளோ சந்தோஷமா வந்தேனே அப்பவாவது புரிஞ்சுக்கறது இல்ல,அடிச்சை நீ தான் சரியான டியூப்லைட் ஆச்சே,உன் மண்டையில ஒரு மண்ணு மசாலாவும் கிடையாது.

உன்ன கட்டிக்கிட்டு என் அண்ணன் என்ன பாடு பட போகுதோ என்கும் போகுது அம்மாடி கண்மணி மலரை கூட்டிட்டு அங்க வர சொல்றாங்கத்தா என்று சொந்தக்கார பெண்மணி ஒருத்தர் வந்து சொல்ல,அழுது கொண்டிருந்தவளோ கண்ணை துடைத்துக்கொண்டு கண்மணியோடு முற்றத்திற்கு வந்தாள்.

இதுவரை இருந்த மனநிலை மாறி தாம்பாளத்தில் இருந்த புடவையை எடுத்து பார்த்து விழிகள் விரிய அதிர, என்ன டி நல்லாருக்கா என்று கண்மணி கேட்கவும், ஹம் சூப்பரா இருக்கே டி.

அப்போ யார் செலக்ட் பண்ணிருப்பாங்க சொல்லு பார்க்கலாம்?.

உன் அண்ணன் தானே என்கவும் எப்படி இவ்ளோ சரியா கண்டுபிடிச்சனு கண்மணி அதிர்ச்சியாக தனது தோழியை பார்த்தாள்.அது எல்லாம் அப்படித்தான் என்றவாறு புடவையை கட்டிக் கொண்டு எப்படி இருக்கு டி என்று கண்ணாடியை பார்த்துக் கொண்டே கேட்க ,ஏதோ பரவாயில்லை என்று சொல்லவும் என்ன டி ரொம்ப சலித்துக்கொள்கிறாய், உனக்கு அண்ணி நான்.வாலையெல்லாம் ஒட்ட நறுக்கிடுவேன்..

பாரு டா...

புள்ள பூச்சிக்கு ரொம்ப தான் கொடுக்க முளைச்சிடுச்சுனு சிரித்தவள் மலரோடு வெளியே வர அங்கே இரண்டு சேர் போடப்பட்டிருந்தது.ஒன்றில் கண்ணன் உட்கார்ந்து இருக்க,மற்றொன்றை காட்டி இதுல உட்காருத்தானு மலரிடம் சொல்ல, கண்ணனின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவளுக்கு படபடப்பாக இருந்தது.

சுமதி வீராயி ஆரம்பிச்சு வைங்கத்தா என்கவும் இரண்டு பாட்டிகளும் அங்கிருந்த சந்தனத்தை தொட்டு பேரனுக்கும் பேத்திக்கும் கைகளிலும் கன்னங்களிலும் தடவி விட்டவர்கள், பின்னர் குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசி விட்டு இருவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பூக்களை தூவி ஆசீர்வாதம் பண்ணினர்.

மற்றவர்களும் அதே போல் சடங்குகளை செய்ய இரண்டு வீட்டினரும் தட்டை மாற்றிக் கொண்டு கண்ணன் மலரின் திருமணத்தை நெருங்கிய சொந்த பந்தங்களின் முன்னிலையில் உறுதிப்படுத்தினர்.

வேக வேகமாக எல்லாத்தையும் தயார் பண்ணினாலும் கண்ணனோ போட்டோகிராபரை மறக்காமல் வர வைத்திருந்தான்.இருவரையும் விதவிதமான போட்டோக்கள் எடுத்து தள்ள இதையெல்லாம் செழியனும் ஷமீராவும் வீடியோ காலில் பார்த்து ரசித்தனர்.

சாப்பிடலாம் என்று சொல்ல,வீட்டின் நடுவில் பெரிய முற்றம் என்பதால் அதில் வரிசையாக இலையை போட்டு சமைத்ததை பரிமாற சந்தோஷமாக சாப்பிட்டனர்.பொண்ணு மாப்பிள்ளை இருவரையும் ஒன்றாக வர வைத்து அவர்களுக்கு இலைய போட்டு பரிமாற மலருக்கு தான் கண்ணன் பக்கத்தில் இருக்கும் போது ஒருவித நடுக்கமாகவே இருந்தது.

அவளின் அவஸ்தையை ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டே கண்ணனும் சாப்பிட்டான்.

பின்னர் மலர் வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் எல்லாரும் அங்கிருந்து சென்றார்கள்.

கடவுள் புண்ணியத்துல எப்படியோ மலருக்கு நல்ல குடும்பத்தில் சம்பந்தம் கிடைச்சிருச்சு என்று தெரிந்தவர் ஒருவர் வந்து வீட்டில் பேசிக் கொண்டிருக்கு ஆமா அதுல என்ன சந்தேகம்...

பத்மாவோட அப்பாவும் புவனா,ரஞ்சனியோவோட அம்மாவும் சித்தப்பா-பெரியப்பா மக்கள் இல்லையா,சொந்த பந்தம் எப்படி விட்டு போயிடும் என்று பேசிக்கொண்டனர்.

மலரு,ஏற்கனவே ரெண்டு பொண்ணு வெளியில இருந்து வந்திருந்தாலும் நீ நம்ம உள்ளூருக்குள்ளே வளர்ந்தவ. சொந்த பந்தங்களை எல்லாரையும் நீ தான் அனுசரித்து போகணும் சரியா என்று அவளுக்கு அந்த பெண்மணிகளும் அறிவுரை சொல்ல அவளும் சரிங்கா அப்பத்தா என்று கேட்டுக் கொண்டாள்.

தனது ரூமிற்கு வந்த கண்ணனோ கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தனது ஃபோனில் இருந்த ஒரு நம்பரை தேடி எடுத்தவன் அதற்கு கால் பண்ணினான்.

கட்டியிருந்த புடவையில் வியர்வை உலர்ந்து விட்டது தெரிந்து அதை மடித்து வைத்துக் கொண்டிருக்கும்போது மலரின் செல்போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.

எட்டி டேபிள் மேலிருந்து போனை எடுத்து பெயரை பார்த்தவள் கண்ணை கசக்கி விட்டு தான் காண்பது கனவா இல்லை நினைவா என்று அதிர்ச்சியாக நின்றாள்.

பொள்ளாச்சி:

புது இடம் என்பதால் ஷமீராவுக்கு அவ்வளவாக தூக்கம் வரவில்லை.
எட்டி போனை எடுத்து மணியை பார்க்க அதிகாலை ஐந்தரை என்று காட்டியது.இனி என்னத்த தூங்குவது என்று தன்னை அணைத்து படுத்திருக்கும் கணவனின் கையை விலக்கி விட்டு எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு போனவள் குளித்து வேறு உடைய மாற்றிக்கொண்டு கீழே வர.அங்கே ஜனனியும் பாயலும் டீ குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

காலடி சத்தம் கேட்டு இருவரும் பார்க்க அதுக்குள்ள எந்திரிச்சிட்டிங்களா என்றவாறு கீழே வந்தவளிடம் காபி எடுத்துட்டு வரட்டுமா ஷமீரா என்று ஜனனி கேட்க,இருக்கட்டும்ங்க அண்ணி நான் எடுத்துக்கிறேன் நீங்க உட்காருங்க என்று கிச்சனிற்குள் சென்றவள் தனக்கு தேவையான காபியை கலக்கி எடுத்துட்டு வந்து அவர்களோடு பேசிக்கொண்டே காபி குடித்துக் கொண்டிருந்தாள்.

ஆன்ட்டி முகத்துல ஒருவித தேஜஸ் தெரியுது என்று ஜனனி சொல்ல பாயலுக்கு அந்த வயதிலும் வெட்கம் வந்தது.

ஏய் வாலு என்று சிரிக்க.. இவ்வளவு நேரமெல்லாம் அங்கிள் எழுந்து வந்திருக்கனுமே,காதலியை பார்க்காம இன்னும் எப்படி தூங்குறார் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தன்ராஜ் அங்கு வந்தவர்.

குட் மார்னிங் டா என்று சொல்லிக் கொண்டு பாயலின் பக்கத்தில் வந்து உட்கார,மாமா டீ எடுத்துட்டு வரட்டுமா என்று ஷமீரா கேட்க எடுத்துட்டு வாம்மா என்றார்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க ஜனனியும் ஷமியும் காலை டிபன் செய்து கொண்டிருக்கும் போது எஸ்தரும் அவர்களோடு வந்து இணைந்து கொண்டார்.

அப்பொழுது வேகமாக ஒரு கார் வந்து வாசலில் நின்றது.

வெளியில் உள்ள திண்ணை உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர்கள் யார் என்று பார்க்க,அதுல இருந்து அந்தோணி பாபு சாரதா பாட்டி மூவரும் இறங்கி வந்தனர் .

அவர்களை பார்த்த செழியன் எந்திருச்சு வாங்க பாட்டி வாங்க பா வா பங்காளி என்க,உன் அத்தை எங்கப்பா இருக்கு என்று அந்தோணி கேட்க,உள்ள தான் பா என்றான்.

மற்றவர்களும் அவர்களோடு வீட்டுக்கு வர சமைத்தவைகளை எடுத்துட்டு வந்து டைனிங் டேபிள் வைக்கும்போது தற்செயலாக நிமிர்த்து பார்த்த எஸ்தர் தனது அண்ணனையும் சித்தியையும் கண்டவர் அதிர்ந்து போய் அப்படியே நின்று விட்டார்.

அம்மாடி எஸ்தரூஊஊ என்று தனது வயதையும் மறந்த சாரதா பாட்டி வேகமாக வந்து அக்கா மகளின் கையை பிடிக்க அதில் நிகழ்வுக்கு வந்தவர் சித்தி என்று அவரை அணைத்துக் கொண்டு அழுதார்.

எங்கதா போயிருந்த உன்னை தேடி தேடி நாங்க செத்துப் போனோமே சாமி. ஒரு முறையாவது இந்த ஆத்தாலையும் அண்ணனையும் நினைச்சு பாத்தியா என்று அழுது கொண்டு சாரதா பாட்டி கேட்க,மன்னிச்சிடு சித்தி என்றவர் தனது தங்கையை பார்த்து சந்தோஷத்தில் கண்ணீரோடு நிற்கும் அந்தோணியிடம் போனவர் அண்ணா என்று அழ..

ஏண்டா இப்படி பண்ணுன?

அண்ணன் உசுரோடு தானே இருக்கிறேன் என்று தங்கையின் கையை பிடித்து கண்ணீர் விட்டவர் உன்னை பார்த்த பிறகு தான் எனக்கு உசுரே வந்துச்சு.

ஆயிரம் இருந்தாலும் அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா ஆத்தா,இந்த பாவியாலதான உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு என்று அவரும் அழுக இப்ப எதுக்கு எல்லாரும் இப்படி அழுவுறீங்க?

வாங்க வந்து உட்காருங்கள் என்ற வெற்றி மற்றவர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தான்.

போய் கையை கழுவிட்டு வாங்க டிபன் சாப்பிடலாம் என்கவும் எல்லாரும் ஒன்னாக உட்கார்ந்து பேசிக்கொண்டு சாப்பிட்டனர்.செழியா உன் சித்தியை கூப்பிட்டு நானும் ஊருக்கு கிளம்பறேன் யா,சரிப்பா நல்லபடியா போயிட்டு வாங்க என்று அவர்களுக்கு விடை கொடுக்க தன்ராஜ் தனது காதலியை அழைத்துக் கொண்டு வனிச்சூரை நோக்கி சென்றார்.

மாமா என்று அங்கிருந்த பாபுவை ஷமீரா கூப்பிட நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து வெளியே சென்று விட்டான்.

விடு எல்லாம் சரியாயிடும் என்று வெற்றி சொல்ல ஷமீராவும் கண்ணீரோடு தலையசைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

சரிடா நாங்களும் கிளம்புறோம் என்று கபிலன் சொல்ல பார்த்து போங்கள் என்க,கபிலனோ மனைவி மகனோடு வெற்றி வீட்டில் இருக்கும் இன்னொரு கார் எடுத்துக் கொண்டு சதுர்வேதமங்கலத்தை நோக்கி புறப்பட்டான்.

மற்றவர்கள் ஊரை சுற்றி பார்க்க சென்று விட, இப்பொழுது வீட்டில் இவர்கள் நால்வர் மட்டுமே இருக்க எதற்கு வீட்டை விட்டுப் போன என்கவும்..

துரோகியோடு இத்தன வருஷமா வாழ்ந்திருக்கிறேனே சித்தி என்றவர் மகிக்கு இன்னொரு குடும்பம் இருக்கிற விஷயம் தெரிந்தது பற்றி சொல்லி அழ, அந்த படுபாவி இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கலையே என்று அவரும் அழுதார்.

அண்ணி எப்படி இருக்காங்க?

அந்த துரோகியும் தான் கூட்டு களவாணி,அவளுக்கும் அவன் அண்ணனுக்கு கல்யாணம் ஆகி குடும்ப இருக்கிற விஷயம் தெரியும் என்க...என்னம்மா சொல்ற என்று அதிர்ந்து போய் எஸ்தர் பார்க்க...ஆமா தா. அந்த சிறுக்கியும் நம்மகிட்ட உண்மையை சொல்லலையே எல்லாமே துரோகியா இருந்திருக்கிறார்களே என்று அழுதார்..

சரி ...கொஞ்சம் உங்கள் ஒப்பாரியை தான் நிறுத்துங்களேன்,ஏன் பா நம்ம ஊருக்கு கிளம்பலாமா என்று பாபு கேட்க அப்பொழுது மார்க்கெட் போனவர்களும் வந்து சேர்ந்தனர்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
390
வனிச்சூர்:

முதல் கால் கட்டாக மீண்டும் அழைப்பு வரவும் அதில் மை லைஃப் என்ற பெயரோடு கண்ணனின் நம்பரில் இருந்து மீண்டும் கால் வந்தது.

ரிங்டோன் சத்தத்தில் சுதாரித்தவள் அட்டென்ட் பண்ணி எதுவும் சொல்லாமல் காதில் வைக்க,என்ன டி போனை எடுக்க உனக்கு இவ்வளவு நேரமானு கண்ணனின் குரல் கம்பீரமாக கேட்கவும் மலரோ தன்னவனின் குரலில் மயங்கி போய் நின்றாள்.

ஓய்..

இருக்கியா? இல்லையா டி?

மீண்டும் அந்த பக்கம் அமைதியாக இருக்கவும்,உன்ன தாண்டி கேட்கிறேன், ஏழு ஊர் வாய் பேசுவ,இப்ப என்ன ஊமை கோட்டான் போல இருக்கிற?வாயை திறந்து சொல்லு டி என்று கொஞ்சம் கோவமாக கண்ணன் கேட்க, ம்ம் கேட்டுகிட்டு தான் இருக்கேன்னு பொறுமையாக மலர் சொல்லவும் யாருகிட்ட டி பம்புற??உன் வாயை பத்தி எனக்கு தெரியாதா கொய்யால...

அப்புறம் மலரு புடவை உனக்கு புடிச்சிருக்கா?.ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள்.ஓஓஓ..அது யாரு செலக்ட் பண்ணினார்கள்னு தெரியுமா?.

ஹம் தெரியுமே என்றாள்...

இந்தாருயா....

அப்போ போட்டிருந்த பிளவுஸ் யாரு வாங்குனானு தெரியுமா?என அடுத்த கேள்வியை கேட்க,அத்தை இல்லைனா கண்மணி தான் வாங்கி இருப்பாங்க...

போடி விளக்கெண்ணெய் நான் தாண்டி என்க....எதேஏஏஏ என்று அவள் அதிர்வது அந்த பக்கம் இருப்பவனுக்கு கேட்க, சிரித்துக் கொண்டே தனது மீசையை முறுக்கி விட்டவன் ஏழு எட்டு வருஷமா உன்ன பாத்துட்டு இருக்கேனே உன்னோட அளவு எனக்கு தெரியாதாடியென மலரின் தலையில் பெரிய குண்டை தூக்கி போட்டான்.

அதைக் கேட்டவளோ என்ன சொல்றிங்க? உண்மையிலேயே நீங்கள் தான் பேசுவதா?

நானே தான் டி.

இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்காக அங்க அரசி குளத்துட்ட காத்துட்டு இருப்பேன் வந்து சேரு என்கவும் அய்யோ முடியாது நான் வரமாட்டேன் என்றாள்.உன்னை வாடின்னு சொன்னேன் என்று சொல்லிவிட்டு அந்த பக்கமிருந்து அழைப்பை துண்டித்திருந்தான்.

ஐயோ கடவுளே...!!

நடப்பது உண்மையா பொய்யான்னு தெரியலையே?இந்த சீடு மூஞ்சி சித்தப்பங்கிட்ட இப்படி ஒரு குணத்தை எதிர்பார்க்கலையே மலரு,இப்போ என்ன டி பண்றது?வர சொல்றாங்களே என்று புலம்பிக் கொண்டு போனை பார்க்க அதில் மணி மாலை 4 என்று காட்டியது.

நேரமும் கடந்து செல்ல கண்ணனிடமிருந்து மலருக்கு கால் வர,அவளோ பயந்துகிட்டு அட்டென்ட் பண்ணவே இல்லை.நாலைந்து முறை கால் வந்தும் அவள் எடுக்காமல் போக அதன் பிறகு அவனிடம் இருந்து அழைப்பு வரவில்லை.

தம்புசாமி வீடு:

ஏன் அன்பு நிச்சயதார்த்தத்திற்கு இன்னும் 15 நாள் தான் இருக்கு. புள்ளைங்க ரெண்டு பேருக்கும் துணி வாங்கணுமேயா என்று சாப்பிட்டுக் கொண்டு தம்புசாமி கேட்க, ஆமாம் பா..அவங்க இன்னும் எதுவும் போன் பண்ணி சொல்லலையே நம்மளா எப்படி கேட்கிறது..

ம்ம்..அதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் தான் பிள்ளைக்கு சாக்கெட்(ஜாக்கெட்) தைக்கனும் இல்லையா...

நீ என்ன பண்ற சாப்பிட்டு முடிச்சுட்டு சம்பந்தி வீட்டுக்கு போன் பண்ணி மாப்பிள்ளையோட அளவ கேளு.
நம்ம மதுரையிலையோ இல்ல மாப்ள எங்க விருப்பப்படுறாரோ அங்கையே அவருக்கு துணி வாங்கிடலாம் என்க சரிப்பா என்றார்.

அதேபோல் சாப்பிட்டு முடித்த அன்பரசன் அந்தோணியின் நம்பருக்கு கால் பண்ணினார்.

அந்த பக்கம் அட்டென்ட் பண்ணியவர் வணக்கம் சம்பந்தி எப்படி இருக்கீங்க என்று இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

நானே உங்களுக்கு போன் பண்ணலாம்னு இருந்தேங்க சம்பந்தி என்று அந்தோணி சொல்ல, அப்படிங்களா...!!

சொல்லுங்க சம்பந்தி என்ன விஷயம் என்றார். நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு பிள்ளைங்களுக்கு துணி எடுக்கணுமே என்கவும் நானும் அதுக்கு தான் போன் பண்ணினேன்.

மாப்பிள்ளைக்கு துணி வாங்கணுமே எங்க வாங்கணும்னு சொன்னீங்கனாக்க அங்க வருவோம் என்கவும் அப்படிங்களா,நாள்,கிழமை எங்களுக்கு இல்லை.நீங்க அதெல்லாம் பார்ப்பீங்க.

உங்களுக்கு எங்க வசதி படுதோ சொல்லுங்க அங்கையே நாங்க வந்து விடுகிறோம் என்று அந்தோணி சொல்லவும் இரண்டு பேருக்குமே பொதுவான இடம் நம்ப மதுரை தாங்க. அப்ப அங்கேயே வாங்கி விடலாமா?

சரிங்க தாராளமா வாங்கிடலாம் நீங்க நாள் மட்டும் எப்பணு பார்த்து சொல்லிடுங்க நாங்க வந்து விடுகிறோம் என்றவர் பின்னர் பொதுவாக பேசிவிட்டு போனை வைத்தார்.

அவங்க கிட்ட பேசிட்டன் பா.நல்ல நாள் பாத்து சொல்ல சொல்றாங்க.

அப்படியா??

அந்த கேலண்டர் எடுத்துட்டு வா என்று தம்புசாமி சொல்ல,மகனும் எடுத்து வந்து கொடுக்கவும் திருப்பி முகூர்த்த நாளை பார்த்தவர் வர புதன்கிழமை அன்னைக்கு நல்ல நாளா இருக்கு.

பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவாங்க.
அன்னைக்கு போயிடலாம் என்கவும் சரிங்க பா.போன் பண்ணி சொல்றேன் என்றவர் அதேபோல அந்தோணிக்கு விஷயத்தை சொல்ல சரிங்க சம்பந்தி என்றார்.

விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் தம்புசாமி சொல்ல கண்மணியோ தன்னவனை பார்க்கப் போகிறோமே என்ற குஷியில் இருந்தாள்..

மூன்று நாட்களும் வேகமாக ஓட நெருங்கிய சொந்தங்களை மட்டும் கூப்பிட்டுக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டனர்.

பொள்ளாச்சி:

மார்க்கெட்டுக்கு போனவர்கள் வீட்டிற்கு வந்துவிட பின்னர் அவர்கள் வாங்கிட்டு வந்த பொருட்களை வைத்து மதிய உணவும் தடபுடலாக தயாரானது.

சாப்பிடலாம் என்று எஸ்தர் கூப்பிட டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்தனர். அனைவருக்கும் எஸ்தரும் ஜனனியும் பரிமாற, நீங்களும் உட்காருங்கம்மா தேவையானதை போட்டுக்கலாம் என்று அந்தோணி சொல்லவும் மற்றவர்களும் அதற்கு ஆமாம் என்றனர்.

பேசிக்கொண்டே சாப்பிடும்போது இன்னைக்கு நாங்க ஊருக்கு கிளம்புறோம் பா என்க...அண்ணா ஜூலி மாசமா இருக்கு.இப்ப என்னால ஊருக்கு வர முடியாது என்கவும், தங்கையை ஒரு பார்வை பார்த்த அந்தோணி சரி மா உன்னோட விருப்பம்.

பெரிய மக கூடயா இல்லை சின்னமவ கூட இருக்கிறியோ தாராளமா இரு. எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை. அப்பப்போ அண்ணனை நீ வந்து பார்த்துட்டு போ அது போதும்.

அதை நீ எனக்கு சொல்லனுமா அண்ணா என்றவர் சித்தி உடம்ப கவனி என்க, உன்னை பற்றிய கவலை தான் எனக்கு பெருசா இருந்தது.இனிமேல் என்னத்தா என்றார்.

பின்னர் புதிதாக கிடைத்த பேரப்பிள்ளைகளுக்கும் ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டு அந்தோணி சாரதா பாட்டி பாபு மூவரும் அங்கிருந்து சோழனூருக்கு புறப்பட்டனர்.

ஷமீராவோ தூரத்தில் போகும் காரையே கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருக்க அவளை தோளோடு அணைத்த செழியன் விடு டி.இன்னும் கொஞ்ச நாள்ல அவன் கோவம் சரியாயிடும் என்க...அப்படி ஆனால் நல்லது தான்.

மாமா கிட்ட பேசாம இருப்பது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா என்று ஷமீரா அழ,அப்படியா..!!!

அப்போ என்கிட்ட பேசாம இருந்தியே உனக்கு கஷ்டமே இல்லையான்னு கோபமாக செழியன் கேட்க,நிமிர்ந்து கணவனை ஒரு முறை முறைத்தவள் தோளின் மேலிருந்த கையை தட்டி விட்டு அங்கிருந்து விடுவிடுவென்று மேலே இருக்கும் ரூமிற்குள் சென்று விட்டாள்.

ஏண்டா இப்படி என்று ருத்ரன் கேட்க பின்ன என்ன ணா..ஓயாம மாமா பேசுல மண்ணாங்கட்டி பேசலைனு,இது தெரிஞ்ச விஷயம் தானே சும்மா புலம்பி சாவடிக்கிறாள்.உனக்கு என்ன ஜூலி நல்ல பிள்ளை... பிரச்சனை இல்லை...

தம்பி சொன்னதை கேட்டவன் ஏன் டா நீ வேற...இந்த துன்பத்துக்காக தான் பாதி நேரம் ஹாஸ்பிடல் இருக்கிறேன் என்கவும்,என்ன சொன்னீங்க என்ற சத்தம் கேட்க,ருத்திரனோ அதிர்ந்து போய் திரும்பி பார்க்க,அங்கே ஜூலியோ இடுப்பில் கையை வைத்துக் கொண்டு கணவனை தான் முறைத்தபடி நின்றாள்.

செத்தடா மாப்பு என்று வெற்றி சிரிக்க ஏன்டா இப்படி?...

நீ எவ்வளவு தங்கமான பொண்டாட்டி உன்னை பாக்காம ஹாஸ்பிடல்லா எனக்கு முக்கியம் சொல்லு என்கவும், இனிமே ஏதாச்சுமா பேசினீங்க நல்லா இருக்காது என்று சொல்லிவிட்டு ஜூலி அங்கிருந்து கோவமாக போக சந்தோசமா டா உனக்கு....

உன் பொண்டாட்டி கோவிச்சிட்டு போன போல என் பொண்டாட்டியும் போயிட்டாள்.இப்போ போய் கெஞ்சி அவளை சமாதானப் படுத்தணும்.வந்து சேர்ந்திருக்கான் பாரு தம்பி என்று செழியனை திட்டுவிட்டு செல்லம் செல்லம் செல்லமென்று ஜூலியின் பின்னாலே ருத்ரனும் வேகமாக சென்றான்.

சோழனூர்:

போன் வந்ததுன்னு திடீர்னு கிளம்பி மூணு பேரும் போனாங்க.எங்க போறேன்னு ஒரு வார்த்தை சொல்லலை.நேத்து போனவங்க இதுவரைக்கும் ஒரு போன் கூட பண்ணலையே என்று புலம்பி கொண்டு தோட்டத்தை கூட்டிக் கொண்டிருக்கும் போது காரின் ஹாரன் சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்த ராணி வேகமாக போய் இரும்பு கேட்டை திறந்து விட,காரும் உள்ளே வந்து நின்றது.

மூவரும் இறங்கி வருவதைப் பார்த்தவர் எங்கதான் போனீங்க?ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே என்று ராணி கேட்க,அவசியமாக உன்கிட்ட சொல்லணும் தான் என்றபடியே பாபு உள்ளே போய் விட்டான்.

மகனின் வார்த்தைகள் சுருக்கென்று இருக்க ராணியின் முகம் சுருங்கிவிட்டது. ராணியை கண்டு கொள்ளாமல் அந்தோணியும் சாரதா பாட்டியும் உள்ளே போக கையில் இருந்த தொடப்பத்தை கீழே போட்டுவிட்டு வீட்டிற்குள் வந்தவர் டீ வைக்கட்டுமா என்று கேட்கும் போது பாபு கிச்சனிலிருந்து வெளியே வந்தவன் அப்பா டீயா இல்லை காபியா என்றான்.

தம்பி நான் வைக்கிறேன்பா நீ உட்காரு என்கவும் உன் கிட்ட நான் கேட்டனா? என்று முகத்தில் அடித்தபோல பாபு பதில் சொல்ல,ராணியோ மகனை பாவமாக பார்த்தார்.

அப்புறம் வர புதன்கிழமை அன்னைக்கு என் மருமகளுக்கு புடவை எடுக்க போகணும்.தாய் என்கிற ஒரு சம்பிரதாயத்துக்காக மட்டும் தான் உன்னை நான் கூப்பிடுறேன்.

நீ வந்தாலும் ஏன் வந்தாய் என்று நான் கேட்க போறது கிடையாது.நீ வரலைன்னாலும் நான் கவலைப்படுவது கிடையாது.உன் அண்ணனுக்கு சொல்லிடு,தாய்மாமனா வாய மூடிகிட்டு இருக்கிற போல இருந்தால் மட்டும் வரச்சொல்லு.

அங்க வந்து உன் அண்ணன் எதாவது கீலகம் பண்ண நின்றான் மரியாதை கெட்டு போயிடும் என்று சொல்லிய அந்தோணி,எழுந்து ரூமிற்குள் சென்று விட்டார்.

கணவர் சொன்னதை கேட்டு ராணிக்கு அழுகையாக வந்தது.தான் செய்தது தவறு என்றாலும் இவர்களின் உதாசினத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அழுகையோடு அத்தை என்று சாரதா பாட்டியை கூப்பிட,சொல்லு ராணி என்ன?..

எங்க போனீங்க அத்தை?

ஒரு வார்த்தை கூட சொல்லிட்டு போகலை என்கவும்,சொல்லிட்டு போக வேண்டிய சூழ்நிலை இல்ல அதனால சொல்லலை.நீங்க எல்லாம் சொல்லிட்டு தான் பண்ணுனீங்களா என்று அவர் பங்குக்கும் கேட்க,வாயை மூடிக்கொண்டார்.

வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top