Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 379
- Thread Author
- #1
சென்னை ஹை கோர்ட்:
தனது மகளை பார்த்த ஆடியபாதத்தின் மனைவியே ஐயோ பிரியா என்று மகளை கட்டிக்கொண்டு கதறி அழுதார்.
அவளோ எதுவும் பேசாமல் கல்லு போல நிற்க,படுபாவி என் பொண்ணு வாழ்க்கையை இப்படி அழிச்சிட்டானே..நாசமா போறவன் இப்படி பண்ணிருப்பான்னு எனக்கு தெரியாதே..தெரிஞ்சிருந்தா எங்கேயாவது போய் வாழுங்கள் என்று உங்களை அனுப்பி இருப்பனே என்று நெஞ்சிலே அடித்துக் கொண்டு அழுதார்.
மூணு மாசம் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு இருந்தேன் மா
அதையும் உன் புருஷன் அழிச்சிட்டாரே என்று அழுதாள்.
ஐயோ ஐயோ ஐயோ பெத்த தாய் நான் உயிரோட இருந்தும் என் பொண்ணுக்கு என்ன ஆச்சுனே தெரியாம இருந்திருக்கிறேனே,அய்யோ கடவுளே இன்னும் இந்த உசுரு எனக்கு எதுக்கு வைத்திருக்கிற என்று தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.
அவரை சமாதானப்படுத்திய ரவீந்திரனின் அம்மா,வாங்க இனிமேல் நம்ம பொண்ணு கூட ஒன்றாக இருக்கலாமென்க,அழுது கொண்டே தலையசைத்தார்.
பின்னர் நால்வரும் அங்கிருந்து கிளம்பும்போது பிரியா ஒரு நிமிஷம் என்று உமா கூப்பிடவும் சொல்லுங்க மேடம் என்றாள்.திரும்ப உன்னை வேலையில் ஜாயின் பண்ணிக்க சொல்லிருக்காங்க.
உங்கள் பாஸ் கிட்ட நான் பேசிட்டேன் என்கவும் ரொம்ப நன்றிங்க மேடம் என்றாள்.பின்னர் நால்வரும் புது வாழ்க்கையை தொடங்க அங்கிருந்து கேரளாவை நோக்கி சென்றனர்.
ஆடியபாதத்தை ஜெயிலில் ஒப்படைத்துவிட்டு மற்ற பார்மாலிட்டிசையும் முடித்த செழியன் ஊப் என்று பெருமூச்சு விட்டு, தனது மேல் அதிகாரியான வசிந்தராவிற்கும் கால் பண்ணி விஷயத்தை சொல்ல வெல்டன் மை பாய்.
தேங்க்யூ மேடம் என்கவும் சரி செழியன் நீங்க போய் வீட்ல இருக்கவங்களை சமாதானப்படுத்துங்கள் என்க, இப்பொழுது அதிகாரியாக சொல்றீங்களா என்கவும்,நோ ஆண்ட்டியாக தான் சொல்றேன் என்று சிரித்தார்.
"அட போங்க ஆண்ட்டி"
என் பொண்டாட்டி பேசக்கூட மாட்டேங்குறாள் என்கவும்,திருமண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று வசந்தரா சிரிக்க,அங்கிளுடைய வேதனை இப்பதான் எனக்கு புரியுது என்றான்.
அடப்பாவி..!!
என் காலையே வார்றியேடா என்று அந்த பக்கம் வசுந்தரா சிரிக்க நீங்க மட்டும் எங்களை வாரவில்லையா என்றான்.சரி சரி போய் பத்து நாள் பிரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணு.
அதுக்கப்புறம் அந்த கேஸ் பாருங்கள் என்க,ஓகே மேடம் என்று ஃபோனை வைத்தவனோ அங்கிருந்து தனது ஆபிஸுக்கு வந்தவன் மதுரைக்கு போவதற்காக பிளைட்டில் டிக்கெட் புக் பண்ணி விட்டு ஊருக்கு போவதற்கு தயாரானான்.
அவனை கண்ணப்பன் கொண்டு வந்து ஏர்போர்ட்டில் விட நீங்க போங்க ணா. நான் பார்த்துக் கொள்கிறேன் என்க, சரிங்க தம்பி பார்த்து போங்கள் என்றார்.
அவனுக்கான பிளைட் வந்ததும் அதில் ஏறி மதுரைக்கு வந்து சேர்ந்தான்.
"செழியனுக்காக கண்ணனும் காத்திருந்தான்".
செழியன் மதுரைக்கு வரும் விஷயத்தை சொல்லி ஏர்போர்ட்டிற்கு வந்து விட்டான். இரவு உணவை மதுரையில் சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.
கேஸ் பற்றி கண்ணன் விசாரிக்க நடந்தது எல்லாம் அவனும் சொல்லவும் பதவியில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய பாவத்தை பண்ணிருக்கானே பரதேசி பயல் என்று கண்ணனும் திட்டிக் கொண்டிருந்தான்.
ஆமாடா அந்த பொண்ணை பாக்குவதற்கு ரொம்ப பாவமா இருக்குடா என்று செழியன் சொல்ல, என்னடா பண்றது ?எல்லாரும் உன்னை போல தைரியசாலியா இருப்பாங்களா என்கவும்,ஓஓஓ வஞ்சப்புகழ்ச்சியா?
எட்டி மிதித்தேன் முகரை எல்லாம் பேந்துட்டு போயிடும் என்று செழியன் திட்ட,போலீஸ்காரன் புத்தியெல்லாம் வெளியில வச்சுக்க,என்கிட்ட வேண்டாம் மச்சி.தங்கச்சி புருஷன்னு பார்க்கிறேன் இல்ல நார பயலே ரொசரொமாக கேட்பேன் என்று கண்ணனும் திட்டினான்.
இருவரும் பேசிக் கொண்டே ஊருக்குள் வந்து சேர விடியற்காலை ஆனது.
வனிச்சூர்:
பூக்கடை திறந்து இருப்பாங்க பூ வாங்கிட்டு போகலாம்.காரை கோயில் பக்கம் விடு என்க,ஏண்டா இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா என்றான்.
டேய் ..
புதுசா கல்யாணம் ஆனவன் பொண்டாட்டிக்கு பூ இல்லாம போனால் அது தெய்வ குத்தம் ஆயிடும் உனக்கு எங்க அதெல்லாம் புரியப்போகுது என்க...மச்சி நீ ஏதாச்சும் பண்ணிட்டு போ தயவுசெய்து அட்வைஸ் மட்டும் பண்ணாதடா,அந்த துன்பத்தை தாங்க முடியலை டா..
அனுபவசாலி சொன்னா கேட்டுக்கடா என்று சிரித்துக்கொண்டே கோயிலுக்கு அருகில் இருக்கும் பூக்கார அக்காவிடம் சென்றவன் மூணு மொழம் மல்லிகைப்பூ கொடுங்கள் என்கவும் செழியன் தம்பி நீங்க போலீசாமே என்றார்.
அதுக்குள்ள உங்களுக்கு தெரிஞ்சிடுச்சா கா என்க,நம்ப சுற்றுவட்டாரம் எல்லாம் இதே பேச்சா தான் இருக்கு தம்பி என்று சொல்லவும் அப்படியா கா என்று சிரித்தான்.
அரைமணி நேர பயணத்தில் இருவரும் தெரு எல்லைக்குள் வரும்போது பட்டாசு சத்தம் காதை பிளந்தது.
எந்த கிழமாச்சும் புட்டுகிடுச்சா? ஊருக்குள்ள இப்படி பட்டாசு சத்தம் கேக்குது.போதாதற்கு மேள சத்தம் வேற இப்படி கேக்குது.நம்ம ஊர்ல இருக்கிற தாத்தனுங்க எல்லாம் இன்னும் நாலு கல்யாணம் பண்ற போல தெம்பா தானே இருக்கிறார்கள் என்றான்.
என்னவா இருக்கும் என்று யோசனையோடு அவர்கள் வீடு இருக்கும் தெருவுக்கு வந்த பிறகுதான் வேட்டு சத்தம் அவன் வீட்டில் கேட்கிறது என்பது புரிந்து, என்னடா இதெல்லாமென்று கண்ணனை முறைக்க,இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சாமி.
உன் தாத்தானுங்க ரெண்டு பேரும் பண்ணுற அலப்பறை சத்தியமாக தாங்க முடியலைடா என்று கண்ணன் சொல்ல ஓ பொறாமையா என்று சிரித்தான்.
வீட்டின் முன்பு வந்து கார் நிற்கவும் சரவெடி அணுகுண்டு சத்தம் வானத்தைப் பிளப்பது போல் கேட்டது.செழியனோ தனது காதை பொத்திக் கொண்டான்.
தம்புசாமி தாத்தாவும், வீரையன் தாத்தாவும் பேரனை பார்க்க ஆவலுடன் தங்களது மீசையை முறுக்கிக் கொண்டு நிற்க,அவனோ காக்கி உடையில் இல்லாமல் ஃபார்மல் ட்ரெஸ்ஸில் இறங்கி வருவதை பார்த்து மூஞ்சி தொங்கி போனது.ஆனால் பேரனின் கம்பீரமா அதை அவர்களிடமிருந்து துடைத்தது.
அம்மாடி ஆரத்தி எடுத்துட்டு வாங்கள் என்று உள்ளார குரல் கொடுக்க பாட்டிகள் இருவரும் ஆரத்தி தட்டோடு வந்து பேரனுக்கு மூன்று சுத்து சுற்றி நெற்றியில் பொட்டு வைத்தவர்கள் உள்ள வா யா என்க...
மேளதாள சத்தத்தோடு வீட்டிற்குள் போனவன் தன்னவளை தேட எல்லாரும் அங்கு இருக்க ஷமீரா மட்டும் அங்கில்லை.
வெற்றியும் கபிலனும் இரண்டு பக்கம் செழியனை அணைத்துக் கொண்டு வாழ்த்துக்கள் டா என்கவும்,மகிழ்ச்சிடா மகிழ்ச்சிடா என்று அவர்களை அணைத்துக் கொண்டான்.
பின்னர் அங்கிருந்த ருத்ரன் தீபன் இருவரையும் அன்போடு பார்க்க அவர்களும் வந்து அணைத்துக் கொண்டனர்.
தனது தந்தை வழி இரத்த உறவை அணைக்கும் போது ருத்ரன் கலங்கினான்.அண்ணா அதான் நான் இருக்கேன் இல்ல,தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று செழியன் சொல்ல ருத்ரனுக்கு வார்த்தையே வரவில்லை.
மச்சான் தயவு செய்து கொஞ்சம் உங்க பாறையை தூக்கங்களேன் தோள்பட்டை ரொம்ப வலிக்குது என்று தீபன் சொல்ல அந்த தொணியில் இறுக்கம் மறந்து சிரித்து விட்டனர்.
பின்னர் அனைவரிடமும் பரஸ்பரம் நலம் விசாரித்தவன் வீட்டினர்களிடம் மன்னிப்பு கேட்க,விடுப்பா நம்ம குடும்பத்திற்காக தானே இந்த வேலைக்கு போயிருக்க என்று அவனை சமாதானம் பண்ணினர்.
நீங்க எல்லாம் சமாதானம் ஆயிட்டீங்க என் பொண்டாட்டி தான் என்னை என்ன பண்ண காத்திருக்கான்னு தெரியலை என்று அவன் முணுமுணுப்பது பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெற்றிக்கு கேட்க சங்கு தாண்டி மாப்பி என்றான்.
இன்னைக்கு ஊருக்கே விருந்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கு என்று வீரையன் தாத்தா சொல்ல அப்புச்சி எதுக்கு இந்த அலப்பறை பண்ணிட்டு இருக்க என்று முறைத்தான்.
நீ சும்மா இரு டா.
என் புள்ள போலீஸ்னா சும்மாவா என்றார்.சரி மச்சான் நாம கோயிலுக்கு கிளம்பலாம்.மதிய சாப்பாடுக்கு எல்லாரும் வர சொல்லி இருக்கிறோம் அதை பாக்கலாமென்று தாத்தாக்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
ஐயா குளிச்சிட்டு வா சாமி கும்பிடலாம் என்கவும்,விட்டா போதும் என்று படியில் ஏறி மேலே வந்தவன் ஒரு நொடி தயங்கி விட்டு கதவை திறக்க அங்கே ஷமீரா இருப்பது போல் தெரியவில்லை.
கதவை தாழ்ப்பாள் போட்டவன் பால்கனி கதவு திறந்திருப்பதை பார்த்துவிட்டு அங்கதான் இருக்கிறாள் போல என்று பொறுமையாக வந்து எட்டிப் பார்க்க ஷமீராவோ அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கால்களை கட்டி அதில் முகத்தை புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
மனைவியை அந்த கோலத்தில் பார்த்தவன் தாங்காத வலியோடு வேகமாய் போய் அவளை அள்ளி தூக்கியவன் செல்லமே ஏன் டி இப்படி இருக்க என்று நெஞ்சோடு அணைத்துக் கொள்ள ஷமீராவோ ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசவில்லை.
உனக்கு என்னடி ஆச்சு?
ஏன் இப்படி இருக்கயென்று வலியுடன் கேட்கும் கணவனை வெறுமையான பார்வையில் பார்க்கவும் அந்த பார்வையில் அவன் துடிதுடித்து போனான்.
தயவு செய்து என்னை இப்படி பார்க்காதடி.உன் கண்ணில் எனக்கான காதல் மட்டும் தான் தெரியணும்.இந்த வெறுமை வேண்டாம் சத்தியமா என்னால தாங்க முடியல என்று வருத்தமாக சொல்ல...
நான் உனக்கு அவ்வளவு தூரமா போயிட்டேனா?
ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தோணவே இல்லையா என்கும் போது ஷமீராவுக்கு அழுகை வந்தது.
நீ வேற நான் வேற இல்லைன்னு சொல்லுவிங்களே இப்ப ரெண்டு பேரும் வேற வேறனு காட்டிட்டீங்களே என்க ஐயோ செல்லம் அப்படி இல்லை டி. உனக்கு பிடிக்காதுனு நினைச்சு தாண்டி இதுல பற்றி நான் சொல்லலை.
என்னை மன்னித்துவிடு என்க,அவளோ எதுவும் சொல்லாமல் தேம்பித் தேம்பி அழுகவும் மனைவியின் முகத்தை பார்த்தவன் பட்டென்று அவள் உதட்டோடு தனது உதட்டை புதைத்துக் கொண்டு அந்த மெத்தையில் சரிந்தான்.
ஊடல் முடிந்த கூடல் என்றுமே இனிமை தரும் என்பது போல மனைவியின் மனக்காயங்களை தனது பாணியில் செழியன் போக்கினான்.
கீழே இருந்தவர்களோ நாம போகலாம் என்று இரண்டு காரில் ஏறி கோயில் திடலில் நடக்கும் விருந்துக்கு சென்று விட,இன்னொரு சாவியால் வீட்டை பூட்டிக் கொண்டு செல்லதுரையும் வானதியும் மீதமுள்ளவர்களோடு காரில் ஏறி சென்றனர்.
தனது மகளை பார்த்த ஆடியபாதத்தின் மனைவியே ஐயோ பிரியா என்று மகளை கட்டிக்கொண்டு கதறி அழுதார்.
அவளோ எதுவும் பேசாமல் கல்லு போல நிற்க,படுபாவி என் பொண்ணு வாழ்க்கையை இப்படி அழிச்சிட்டானே..நாசமா போறவன் இப்படி பண்ணிருப்பான்னு எனக்கு தெரியாதே..தெரிஞ்சிருந்தா எங்கேயாவது போய் வாழுங்கள் என்று உங்களை அனுப்பி இருப்பனே என்று நெஞ்சிலே அடித்துக் கொண்டு அழுதார்.
மூணு மாசம் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு இருந்தேன் மா
அதையும் உன் புருஷன் அழிச்சிட்டாரே என்று அழுதாள்.
ஐயோ ஐயோ ஐயோ பெத்த தாய் நான் உயிரோட இருந்தும் என் பொண்ணுக்கு என்ன ஆச்சுனே தெரியாம இருந்திருக்கிறேனே,அய்யோ கடவுளே இன்னும் இந்த உசுரு எனக்கு எதுக்கு வைத்திருக்கிற என்று தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.
அவரை சமாதானப்படுத்திய ரவீந்திரனின் அம்மா,வாங்க இனிமேல் நம்ம பொண்ணு கூட ஒன்றாக இருக்கலாமென்க,அழுது கொண்டே தலையசைத்தார்.
பின்னர் நால்வரும் அங்கிருந்து கிளம்பும்போது பிரியா ஒரு நிமிஷம் என்று உமா கூப்பிடவும் சொல்லுங்க மேடம் என்றாள்.திரும்ப உன்னை வேலையில் ஜாயின் பண்ணிக்க சொல்லிருக்காங்க.
உங்கள் பாஸ் கிட்ட நான் பேசிட்டேன் என்கவும் ரொம்ப நன்றிங்க மேடம் என்றாள்.பின்னர் நால்வரும் புது வாழ்க்கையை தொடங்க அங்கிருந்து கேரளாவை நோக்கி சென்றனர்.
ஆடியபாதத்தை ஜெயிலில் ஒப்படைத்துவிட்டு மற்ற பார்மாலிட்டிசையும் முடித்த செழியன் ஊப் என்று பெருமூச்சு விட்டு, தனது மேல் அதிகாரியான வசிந்தராவிற்கும் கால் பண்ணி விஷயத்தை சொல்ல வெல்டன் மை பாய்.
தேங்க்யூ மேடம் என்கவும் சரி செழியன் நீங்க போய் வீட்ல இருக்கவங்களை சமாதானப்படுத்துங்கள் என்க, இப்பொழுது அதிகாரியாக சொல்றீங்களா என்கவும்,நோ ஆண்ட்டியாக தான் சொல்றேன் என்று சிரித்தார்.
"அட போங்க ஆண்ட்டி"
என் பொண்டாட்டி பேசக்கூட மாட்டேங்குறாள் என்கவும்,திருமண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று வசந்தரா சிரிக்க,அங்கிளுடைய வேதனை இப்பதான் எனக்கு புரியுது என்றான்.
அடப்பாவி..!!
என் காலையே வார்றியேடா என்று அந்த பக்கம் வசுந்தரா சிரிக்க நீங்க மட்டும் எங்களை வாரவில்லையா என்றான்.சரி சரி போய் பத்து நாள் பிரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணு.
அதுக்கப்புறம் அந்த கேஸ் பாருங்கள் என்க,ஓகே மேடம் என்று ஃபோனை வைத்தவனோ அங்கிருந்து தனது ஆபிஸுக்கு வந்தவன் மதுரைக்கு போவதற்காக பிளைட்டில் டிக்கெட் புக் பண்ணி விட்டு ஊருக்கு போவதற்கு தயாரானான்.
அவனை கண்ணப்பன் கொண்டு வந்து ஏர்போர்ட்டில் விட நீங்க போங்க ணா. நான் பார்த்துக் கொள்கிறேன் என்க, சரிங்க தம்பி பார்த்து போங்கள் என்றார்.
அவனுக்கான பிளைட் வந்ததும் அதில் ஏறி மதுரைக்கு வந்து சேர்ந்தான்.
"செழியனுக்காக கண்ணனும் காத்திருந்தான்".
செழியன் மதுரைக்கு வரும் விஷயத்தை சொல்லி ஏர்போர்ட்டிற்கு வந்து விட்டான். இரவு உணவை மதுரையில் சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.
கேஸ் பற்றி கண்ணன் விசாரிக்க நடந்தது எல்லாம் அவனும் சொல்லவும் பதவியில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய பாவத்தை பண்ணிருக்கானே பரதேசி பயல் என்று கண்ணனும் திட்டிக் கொண்டிருந்தான்.
ஆமாடா அந்த பொண்ணை பாக்குவதற்கு ரொம்ப பாவமா இருக்குடா என்று செழியன் சொல்ல, என்னடா பண்றது ?எல்லாரும் உன்னை போல தைரியசாலியா இருப்பாங்களா என்கவும்,ஓஓஓ வஞ்சப்புகழ்ச்சியா?
எட்டி மிதித்தேன் முகரை எல்லாம் பேந்துட்டு போயிடும் என்று செழியன் திட்ட,போலீஸ்காரன் புத்தியெல்லாம் வெளியில வச்சுக்க,என்கிட்ட வேண்டாம் மச்சி.தங்கச்சி புருஷன்னு பார்க்கிறேன் இல்ல நார பயலே ரொசரொமாக கேட்பேன் என்று கண்ணனும் திட்டினான்.
இருவரும் பேசிக் கொண்டே ஊருக்குள் வந்து சேர விடியற்காலை ஆனது.
வனிச்சூர்:
பூக்கடை திறந்து இருப்பாங்க பூ வாங்கிட்டு போகலாம்.காரை கோயில் பக்கம் விடு என்க,ஏண்டா இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா என்றான்.
டேய் ..
புதுசா கல்யாணம் ஆனவன் பொண்டாட்டிக்கு பூ இல்லாம போனால் அது தெய்வ குத்தம் ஆயிடும் உனக்கு எங்க அதெல்லாம் புரியப்போகுது என்க...மச்சி நீ ஏதாச்சும் பண்ணிட்டு போ தயவுசெய்து அட்வைஸ் மட்டும் பண்ணாதடா,அந்த துன்பத்தை தாங்க முடியலை டா..
அனுபவசாலி சொன்னா கேட்டுக்கடா என்று சிரித்துக்கொண்டே கோயிலுக்கு அருகில் இருக்கும் பூக்கார அக்காவிடம் சென்றவன் மூணு மொழம் மல்லிகைப்பூ கொடுங்கள் என்கவும் செழியன் தம்பி நீங்க போலீசாமே என்றார்.
அதுக்குள்ள உங்களுக்கு தெரிஞ்சிடுச்சா கா என்க,நம்ப சுற்றுவட்டாரம் எல்லாம் இதே பேச்சா தான் இருக்கு தம்பி என்று சொல்லவும் அப்படியா கா என்று சிரித்தான்.
அரைமணி நேர பயணத்தில் இருவரும் தெரு எல்லைக்குள் வரும்போது பட்டாசு சத்தம் காதை பிளந்தது.
எந்த கிழமாச்சும் புட்டுகிடுச்சா? ஊருக்குள்ள இப்படி பட்டாசு சத்தம் கேக்குது.போதாதற்கு மேள சத்தம் வேற இப்படி கேக்குது.நம்ம ஊர்ல இருக்கிற தாத்தனுங்க எல்லாம் இன்னும் நாலு கல்யாணம் பண்ற போல தெம்பா தானே இருக்கிறார்கள் என்றான்.
என்னவா இருக்கும் என்று யோசனையோடு அவர்கள் வீடு இருக்கும் தெருவுக்கு வந்த பிறகுதான் வேட்டு சத்தம் அவன் வீட்டில் கேட்கிறது என்பது புரிந்து, என்னடா இதெல்லாமென்று கண்ணனை முறைக்க,இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சாமி.
உன் தாத்தானுங்க ரெண்டு பேரும் பண்ணுற அலப்பறை சத்தியமாக தாங்க முடியலைடா என்று கண்ணன் சொல்ல ஓ பொறாமையா என்று சிரித்தான்.
வீட்டின் முன்பு வந்து கார் நிற்கவும் சரவெடி அணுகுண்டு சத்தம் வானத்தைப் பிளப்பது போல் கேட்டது.செழியனோ தனது காதை பொத்திக் கொண்டான்.
தம்புசாமி தாத்தாவும், வீரையன் தாத்தாவும் பேரனை பார்க்க ஆவலுடன் தங்களது மீசையை முறுக்கிக் கொண்டு நிற்க,அவனோ காக்கி உடையில் இல்லாமல் ஃபார்மல் ட்ரெஸ்ஸில் இறங்கி வருவதை பார்த்து மூஞ்சி தொங்கி போனது.ஆனால் பேரனின் கம்பீரமா அதை அவர்களிடமிருந்து துடைத்தது.
அம்மாடி ஆரத்தி எடுத்துட்டு வாங்கள் என்று உள்ளார குரல் கொடுக்க பாட்டிகள் இருவரும் ஆரத்தி தட்டோடு வந்து பேரனுக்கு மூன்று சுத்து சுற்றி நெற்றியில் பொட்டு வைத்தவர்கள் உள்ள வா யா என்க...
மேளதாள சத்தத்தோடு வீட்டிற்குள் போனவன் தன்னவளை தேட எல்லாரும் அங்கு இருக்க ஷமீரா மட்டும் அங்கில்லை.
வெற்றியும் கபிலனும் இரண்டு பக்கம் செழியனை அணைத்துக் கொண்டு வாழ்த்துக்கள் டா என்கவும்,மகிழ்ச்சிடா மகிழ்ச்சிடா என்று அவர்களை அணைத்துக் கொண்டான்.
பின்னர் அங்கிருந்த ருத்ரன் தீபன் இருவரையும் அன்போடு பார்க்க அவர்களும் வந்து அணைத்துக் கொண்டனர்.
தனது தந்தை வழி இரத்த உறவை அணைக்கும் போது ருத்ரன் கலங்கினான்.அண்ணா அதான் நான் இருக்கேன் இல்ல,தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று செழியன் சொல்ல ருத்ரனுக்கு வார்த்தையே வரவில்லை.
மச்சான் தயவு செய்து கொஞ்சம் உங்க பாறையை தூக்கங்களேன் தோள்பட்டை ரொம்ப வலிக்குது என்று தீபன் சொல்ல அந்த தொணியில் இறுக்கம் மறந்து சிரித்து விட்டனர்.
பின்னர் அனைவரிடமும் பரஸ்பரம் நலம் விசாரித்தவன் வீட்டினர்களிடம் மன்னிப்பு கேட்க,விடுப்பா நம்ம குடும்பத்திற்காக தானே இந்த வேலைக்கு போயிருக்க என்று அவனை சமாதானம் பண்ணினர்.
நீங்க எல்லாம் சமாதானம் ஆயிட்டீங்க என் பொண்டாட்டி தான் என்னை என்ன பண்ண காத்திருக்கான்னு தெரியலை என்று அவன் முணுமுணுப்பது பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெற்றிக்கு கேட்க சங்கு தாண்டி மாப்பி என்றான்.
இன்னைக்கு ஊருக்கே விருந்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கு என்று வீரையன் தாத்தா சொல்ல அப்புச்சி எதுக்கு இந்த அலப்பறை பண்ணிட்டு இருக்க என்று முறைத்தான்.
நீ சும்மா இரு டா.
என் புள்ள போலீஸ்னா சும்மாவா என்றார்.சரி மச்சான் நாம கோயிலுக்கு கிளம்பலாம்.மதிய சாப்பாடுக்கு எல்லாரும் வர சொல்லி இருக்கிறோம் அதை பாக்கலாமென்று தாத்தாக்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
ஐயா குளிச்சிட்டு வா சாமி கும்பிடலாம் என்கவும்,விட்டா போதும் என்று படியில் ஏறி மேலே வந்தவன் ஒரு நொடி தயங்கி விட்டு கதவை திறக்க அங்கே ஷமீரா இருப்பது போல் தெரியவில்லை.
கதவை தாழ்ப்பாள் போட்டவன் பால்கனி கதவு திறந்திருப்பதை பார்த்துவிட்டு அங்கதான் இருக்கிறாள் போல என்று பொறுமையாக வந்து எட்டிப் பார்க்க ஷமீராவோ அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கால்களை கட்டி அதில் முகத்தை புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
மனைவியை அந்த கோலத்தில் பார்த்தவன் தாங்காத வலியோடு வேகமாய் போய் அவளை அள்ளி தூக்கியவன் செல்லமே ஏன் டி இப்படி இருக்க என்று நெஞ்சோடு அணைத்துக் கொள்ள ஷமீராவோ ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசவில்லை.
உனக்கு என்னடி ஆச்சு?
ஏன் இப்படி இருக்கயென்று வலியுடன் கேட்கும் கணவனை வெறுமையான பார்வையில் பார்க்கவும் அந்த பார்வையில் அவன் துடிதுடித்து போனான்.
தயவு செய்து என்னை இப்படி பார்க்காதடி.உன் கண்ணில் எனக்கான காதல் மட்டும் தான் தெரியணும்.இந்த வெறுமை வேண்டாம் சத்தியமா என்னால தாங்க முடியல என்று வருத்தமாக சொல்ல...
நான் உனக்கு அவ்வளவு தூரமா போயிட்டேனா?
ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தோணவே இல்லையா என்கும் போது ஷமீராவுக்கு அழுகை வந்தது.
நீ வேற நான் வேற இல்லைன்னு சொல்லுவிங்களே இப்ப ரெண்டு பேரும் வேற வேறனு காட்டிட்டீங்களே என்க ஐயோ செல்லம் அப்படி இல்லை டி. உனக்கு பிடிக்காதுனு நினைச்சு தாண்டி இதுல பற்றி நான் சொல்லலை.
என்னை மன்னித்துவிடு என்க,அவளோ எதுவும் சொல்லாமல் தேம்பித் தேம்பி அழுகவும் மனைவியின் முகத்தை பார்த்தவன் பட்டென்று அவள் உதட்டோடு தனது உதட்டை புதைத்துக் கொண்டு அந்த மெத்தையில் சரிந்தான்.
ஊடல் முடிந்த கூடல் என்றுமே இனிமை தரும் என்பது போல மனைவியின் மனக்காயங்களை தனது பாணியில் செழியன் போக்கினான்.
கீழே இருந்தவர்களோ நாம போகலாம் என்று இரண்டு காரில் ஏறி கோயில் திடலில் நடக்கும் விருந்துக்கு சென்று விட,இன்னொரு சாவியால் வீட்டை பூட்டிக் கொண்டு செல்லதுரையும் வானதியும் மீதமுள்ளவர்களோடு காரில் ஏறி சென்றனர்.