• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
379
சென்னை ஹை கோர்ட்:

தனது மகளை பார்த்த ஆடியபாதத்தின் மனைவியே ஐயோ பிரியா என்று மகளை கட்டிக்கொண்டு கதறி அழுதார்.

அவளோ எதுவும் பேசாமல் கல்லு போல நிற்க,படுபாவி என் பொண்ணு வாழ்க்கையை இப்படி அழிச்சிட்டானே..நாசமா போறவன் இப்படி பண்ணிருப்பான்னு எனக்கு தெரியாதே..தெரிஞ்சிருந்தா எங்கேயாவது போய் வாழுங்கள் என்று உங்களை அனுப்பி இருப்பனே என்று நெஞ்சிலே அடித்துக் கொண்டு அழுதார்.

மூணு மாசம் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு இருந்தேன் மா
அதையும் உன் புருஷன் அழிச்சிட்டாரே என்று அழுதாள்.

ஐயோ ஐயோ ஐயோ பெத்த தாய் நான் உயிரோட இருந்தும் என் பொண்ணுக்கு என்ன ஆச்சுனே தெரியாம இருந்திருக்கிறேனே,அய்யோ கடவுளே இன்னும் இந்த உசுரு எனக்கு எதுக்கு வைத்திருக்கிற என்று தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.

அவரை சமாதானப்படுத்திய ரவீந்திரனின் அம்மா,வாங்க இனிமேல் நம்ம பொண்ணு கூட ஒன்றாக இருக்கலாமென்க,அழுது கொண்டே தலையசைத்தார்.

பின்னர் நால்வரும் அங்கிருந்து கிளம்பும்போது பிரியா ஒரு நிமிஷம் என்று உமா கூப்பிடவும் சொல்லுங்க மேடம் என்றாள்.திரும்ப உன்னை வேலையில் ஜாயின் பண்ணிக்க சொல்லிருக்காங்க.

உங்கள் பாஸ் கிட்ட நான் பேசிட்டேன் என்கவும் ரொம்ப நன்றிங்க மேடம் என்றாள்.பின்னர் நால்வரும் புது வாழ்க்கையை தொடங்க அங்கிருந்து கேரளாவை நோக்கி சென்றனர்.

ஆடியபாதத்தை ஜெயிலில் ஒப்படைத்துவிட்டு மற்ற பார்மாலிட்டிசையும் முடித்த செழியன் ஊப் என்று பெருமூச்சு விட்டு, தனது மேல் அதிகாரியான வசிந்தராவிற்கும் கால் பண்ணி விஷயத்தை சொல்ல வெல்டன் மை பாய்.

தேங்க்யூ மேடம் என்கவும் சரி செழியன் நீங்க போய் வீட்ல இருக்கவங்களை சமாதானப்படுத்துங்கள் என்க, இப்பொழுது அதிகாரியாக சொல்றீங்களா என்கவும்,நோ ஆண்ட்டியாக தான் சொல்றேன் என்று சிரித்தார்.

"அட போங்க ஆண்ட்டி"

என் பொண்டாட்டி பேசக்கூட மாட்டேங்குறாள் என்கவும்,திருமண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று வசந்தரா சிரிக்க,அங்கிளுடைய வேதனை இப்பதான் எனக்கு புரியுது என்றான்.

அடப்பாவி..!!

என் காலையே வார்றியேடா என்று அந்த பக்கம் வசுந்தரா சிரிக்க நீங்க மட்டும் எங்களை வாரவில்லையா என்றான்.சரி சரி போய் பத்து நாள் பிரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணு.

அதுக்கப்புறம் அந்த கேஸ் பாருங்கள் என்க,ஓகே மேடம் என்று ஃபோனை வைத்தவனோ அங்கிருந்து தனது ஆபிஸுக்கு வந்தவன் மதுரைக்கு போவதற்காக பிளைட்டில் டிக்கெட் புக் பண்ணி விட்டு ஊருக்கு போவதற்கு தயாரானான்.

அவனை கண்ணப்பன் கொண்டு வந்து ஏர்போர்ட்டில் விட நீங்க போங்க ணா. நான் பார்த்துக் கொள்கிறேன் என்க, சரிங்க தம்பி பார்த்து போங்கள் என்றார்.

அவனுக்கான பிளைட் வந்ததும் அதில் ஏறி மதுரைக்கு வந்து சேர்ந்தான்.

"செழியனுக்காக கண்ணனும் காத்திருந்தான்".

செழியன் மதுரைக்கு வரும் விஷயத்தை சொல்லி ஏர்போர்ட்டிற்கு வந்து விட்டான். இரவு உணவை மதுரையில் சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.

கேஸ் பற்றி கண்ணன் விசாரிக்க நடந்தது எல்லாம் அவனும் சொல்லவும் பதவியில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய பாவத்தை பண்ணிருக்கானே பரதேசி பயல் என்று கண்ணனும் திட்டிக் கொண்டிருந்தான்.

ஆமாடா அந்த பொண்ணை பாக்குவதற்கு ரொம்ப பாவமா இருக்குடா என்று செழியன் சொல்ல, என்னடா பண்றது ?எல்லாரும் உன்னை போல தைரியசாலியா இருப்பாங்களா என்கவும்,ஓஓஓ வஞ்சப்புகழ்ச்சியா?

எட்டி மிதித்தேன் முகரை எல்லாம் பேந்துட்டு போயிடும் என்று செழியன் திட்ட,போலீஸ்காரன் புத்தியெல்லாம் வெளியில வச்சுக்க,என்கிட்ட வேண்டாம் மச்சி.தங்கச்சி புருஷன்னு பார்க்கிறேன் இல்ல நார பயலே ரொசரொமாக கேட்பேன் என்று கண்ணனும் திட்டினான்.

இருவரும் பேசிக் கொண்டே ஊருக்குள் வந்து சேர விடியற்காலை ஆனது.

வனிச்சூர்:

பூக்கடை திறந்து இருப்பாங்க பூ வாங்கிட்டு போகலாம்.காரை கோயில் பக்கம் விடு என்க,ஏண்டா இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா என்றான்.

டேய் ..

புதுசா கல்யாணம் ஆனவன் பொண்டாட்டிக்கு பூ இல்லாம போனால் அது தெய்வ குத்தம் ஆயிடும் உனக்கு எங்க அதெல்லாம் புரியப்போகுது என்க...மச்சி நீ ஏதாச்சும் பண்ணிட்டு போ தயவுசெய்து அட்வைஸ் மட்டும் பண்ணாதடா,அந்த துன்பத்தை தாங்க முடியலை டா..

அனுபவசாலி சொன்னா கேட்டுக்கடா என்று சிரித்துக்கொண்டே கோயிலுக்கு அருகில் இருக்கும் பூக்கார அக்காவிடம் சென்றவன் மூணு மொழம் மல்லிகைப்பூ கொடுங்கள் என்கவும் செழியன் தம்பி நீங்க போலீசாமே என்றார்.

அதுக்குள்ள உங்களுக்கு தெரிஞ்சிடுச்சா கா என்க,நம்ப சுற்றுவட்டாரம் எல்லாம் இதே பேச்சா தான் இருக்கு தம்பி என்று சொல்லவும் அப்படியா கா என்று சிரித்தான்.

அரைமணி நேர பயணத்தில் இருவரும் தெரு எல்லைக்குள் வரும்போது பட்டாசு சத்தம் காதை பிளந்தது.

எந்த கிழமாச்சும் புட்டுகிடுச்சா? ஊருக்குள்ள இப்படி பட்டாசு சத்தம் கேக்குது.போதாதற்கு மேள சத்தம் வேற இப்படி கேக்குது.நம்ம ஊர்ல இருக்கிற தாத்தனுங்க எல்லாம் இன்னும் நாலு கல்யாணம் பண்ற போல தெம்பா தானே இருக்கிறார்கள் என்றான்.

என்னவா இருக்கும் என்று யோசனையோடு அவர்கள் வீடு இருக்கும் தெருவுக்கு வந்த பிறகுதான் வேட்டு சத்தம் அவன் வீட்டில் கேட்கிறது என்பது புரிந்து, என்னடா இதெல்லாமென்று கண்ணனை முறைக்க,இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சாமி.

உன் தாத்தானுங்க ரெண்டு பேரும் பண்ணுற அலப்பறை சத்தியமாக தாங்க முடியலைடா என்று கண்ணன் சொல்ல ஓ பொறாமையா என்று சிரித்தான்.

வீட்டின் முன்பு வந்து கார் நிற்கவும் சரவெடி அணுகுண்டு சத்தம் வானத்தைப் பிளப்பது போல் கேட்டது.செழியனோ தனது காதை பொத்திக் கொண்டான்.

தம்புசாமி தாத்தாவும், வீரையன் தாத்தாவும் பேரனை பார்க்க ஆவலுடன் தங்களது மீசையை முறுக்கிக் கொண்டு நிற்க,அவனோ காக்கி உடையில் இல்லாமல் ஃபார்மல் ட்ரெஸ்ஸில் இறங்கி வருவதை பார்த்து மூஞ்சி தொங்கி போனது.ஆனால் பேரனின் கம்பீரமா அதை அவர்களிடமிருந்து துடைத்தது.

அம்மாடி ஆரத்தி எடுத்துட்டு வாங்கள் என்று உள்ளார குரல் கொடுக்க பாட்டிகள் இருவரும் ஆரத்தி தட்டோடு வந்து பேரனுக்கு மூன்று சுத்து சுற்றி நெற்றியில் பொட்டு வைத்தவர்கள் உள்ள வா யா என்க...

மேளதாள சத்தத்தோடு வீட்டிற்குள் போனவன் தன்னவளை தேட எல்லாரும் அங்கு இருக்க ஷமீரா மட்டும் அங்கில்லை.

வெற்றியும் கபிலனும் இரண்டு பக்கம் செழியனை அணைத்துக் கொண்டு வாழ்த்துக்கள் டா என்கவும்,மகிழ்ச்சிடா மகிழ்ச்சிடா என்று அவர்களை அணைத்துக் கொண்டான்.

பின்னர் அங்கிருந்த ருத்ரன் தீபன் இருவரையும் அன்போடு பார்க்க அவர்களும் வந்து அணைத்துக் கொண்டனர்.

தனது தந்தை வழி இரத்த உறவை அணைக்கும் போது ருத்ரன் கலங்கினான்.அண்ணா அதான் நான் இருக்கேன் இல்ல,தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று செழியன் சொல்ல ருத்ரனுக்கு வார்த்தையே வரவில்லை.

மச்சான் தயவு செய்து கொஞ்சம் உங்க பாறையை தூக்கங்களேன் தோள்பட்டை ரொம்ப வலிக்குது என்று தீபன் சொல்ல அந்த தொணியில் இறுக்கம் மறந்து சிரித்து விட்டனர்.

பின்னர் அனைவரிடமும் பரஸ்பரம் நலம் விசாரித்தவன் வீட்டினர்களிடம் மன்னிப்பு கேட்க,விடுப்பா நம்ம குடும்பத்திற்காக தானே இந்த வேலைக்கு போயிருக்க என்று அவனை சமாதானம் பண்ணினர்.

நீங்க எல்லாம் சமாதானம் ஆயிட்டீங்க என் பொண்டாட்டி தான் என்னை என்ன பண்ண காத்திருக்கான்னு தெரியலை என்று அவன் முணுமுணுப்பது பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெற்றிக்கு கேட்க சங்கு தாண்டி மாப்பி என்றான்.

இன்னைக்கு ஊருக்கே விருந்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கு என்று வீரையன் தாத்தா சொல்ல அப்புச்சி எதுக்கு இந்த அலப்பறை பண்ணிட்டு இருக்க என்று முறைத்தான்.

நீ சும்மா இரு டா.

என் புள்ள போலீஸ்னா சும்மாவா என்றார்.சரி மச்சான் நாம கோயிலுக்கு கிளம்பலாம்.மதிய சாப்பாடுக்கு எல்லாரும் வர சொல்லி இருக்கிறோம் அதை பாக்கலாமென்று தாத்தாக்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர்.

ஐயா குளிச்சிட்டு வா சாமி கும்பிடலாம் என்கவும்,விட்டா போதும் என்று படியில் ஏறி மேலே வந்தவன் ஒரு நொடி தயங்கி விட்டு கதவை திறக்க அங்கே ஷமீரா இருப்பது போல் தெரியவில்லை.

கதவை தாழ்ப்பாள் போட்டவன் பால்கனி கதவு திறந்திருப்பதை பார்த்துவிட்டு அங்கதான் இருக்கிறாள் போல என்று பொறுமையாக வந்து எட்டிப் பார்க்க ஷமீராவோ அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கால்களை கட்டி அதில் முகத்தை புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

மனைவியை அந்த கோலத்தில் பார்த்தவன் தாங்காத வலியோடு வேகமாய் போய் அவளை அள்ளி தூக்கியவன் செல்லமே ஏன் டி இப்படி இருக்க என்று நெஞ்சோடு அணைத்துக் கொள்ள ஷமீராவோ ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசவில்லை.

உனக்கு என்னடி ஆச்சு?

ஏன் இப்படி இருக்கயென்று வலியுடன் கேட்கும் கணவனை வெறுமையான பார்வையில் பார்க்கவும் அந்த பார்வையில் அவன் துடிதுடித்து போனான்.

தயவு செய்து என்னை இப்படி பார்க்காதடி.உன் கண்ணில் எனக்கான காதல் மட்டும் தான் தெரியணும்.இந்த வெறுமை வேண்டாம் சத்தியமா என்னால தாங்க முடியல என்று வருத்தமாக சொல்ல...

நான் உனக்கு அவ்வளவு தூரமா போயிட்டேனா?

ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தோணவே இல்லையா என்கும் போது ஷமீராவுக்கு அழுகை வந்தது.

நீ வேற நான் வேற இல்லைன்னு சொல்லுவிங்களே இப்ப ரெண்டு பேரும் வேற வேறனு காட்டிட்டீங்களே என்க ஐயோ செல்லம் அப்படி இல்லை டி. உனக்கு பிடிக்காதுனு நினைச்சு தாண்டி இதுல பற்றி நான் சொல்லலை.

என்னை மன்னித்துவிடு என்க,அவளோ எதுவும் சொல்லாமல் தேம்பித் தேம்பி அழுகவும் மனைவியின் முகத்தை பார்த்தவன் பட்டென்று அவள் உதட்டோடு தனது உதட்டை புதைத்துக் கொண்டு அந்த மெத்தையில் சரிந்தான்.

ஊடல் முடிந்த கூடல் என்றுமே இனிமை தரும் என்பது போல மனைவியின் மனக்காயங்களை தனது பாணியில் செழியன் போக்கினான்.

கீழே இருந்தவர்களோ நாம போகலாம் என்று இரண்டு காரில் ஏறி கோயில் திடலில் நடக்கும் விருந்துக்கு சென்று விட,இன்னொரு சாவியால் வீட்டை பூட்டிக் கொண்டு செல்லதுரையும் வானதியும் மீதமுள்ளவர்களோடு காரில் ஏறி சென்றனர்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
379
மகி நினைவுகள்:

ஆரம்பத்தில் இருந்தே மகியின் குணம் எஸ்தரின் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எஸ்தருக்கோ மகியின் நினைவுகள் மனதிற்குள் இனிமையாக இருக்க அவளோ இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாள்.

ஒரு நல்ல நாளில் சொந்தங்கள் சூழ அந்தோணி ராணியின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி பூம்புகாரில் நடந்தது.பின்னர் பெண் வீட்டில் வரவேற்பை வைத்தனர்.

இதுவரை தனது சித்தி லில்லிசாரதா வீட்டில் தங்கியிருந்த அந்தோணியோ குடும்பமாய் ஆகிவிட்டதை நினைத்து பக்கத்தில் ஒரு இடம் விலைக்கு வரவும் தனது சம்பாத்தியத்தில் அந்த இடத்தை வாங்கியவர் தற்போது அதில் சிறிதாக ஒரு குடிசை மட்டும் போட்டு அதில் மனைவியோடு குடியேறினார்.

புதுமணத் தம்பதிகளுக்கு அவர்கள் வாழ்க்கை இனிமையாக சென்றது.10வது மாதத்தில் அழகான ஆண் குழந்தையும் பெற்றெடுத்து டேவிட் பாபு என்று பெயரை வைத்தனர்.

மானசாவுக்கும் டெலிவரி ஆக அவளும் பையனை பெற்றாள்.அவனுக்கு அருண் என்று பெயரை வைத்தனர்.பேரனை பார்ப்பதற்காக ராணியை மட்டும் அழைத்துக் கொண்டு சாராளும் சென்னைக்கு வந்திருந்தார்.

அப்பொழுதுதான் அண்ணனுக்கு ஒரு குடும்பம் இருக்கிற விஷயமே ராணிக்கும் தெரிந்தது.எக்காரணத்தை கொண்டும் இதை உன் வீட்டுக்காரரிடம் சொல்லிக் கூடாது.

அப்படி சொன்னால் நிச்சயமாக உனக்கு அந்தோணி கூட வாழ்க்கை கடைசி வரைக்கும் நிலைக்காது என்று மகளை மேரி பயமுறுத்த,கணவன் மயக்கத்தில் இருந்தவளோ கண்டிப்பாக சொல்ல மாட்டேன் என்று தாய்க்கு சத்தியம் பண்ணிவிட்டாள்.

ஆபிரகாமுக்கும் இந்த விஷயம் தெரியாமல் தாயும் மகளும் பார்த்துக் கொண்டனர்.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இருவரும் மகியை பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்னைக்கு வந்து மானசாவையும் அவள் குழந்தையும் பார்த்து வர,மானசாவிற்கு சாராளின் மேல் நல்ல எண்ணமே இல்லாமல் போய்விட்டது.

கடமைக்கு மட்டும் வாங்க என்று சொல்லிவிட்டு அவள் வேலையை பார்ப்பாள்.

அருணுக்கும் மூன்று வயது முடிந்திருக்க மனமே இல்லாமல் தனது கணவனை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி,நெஞ்சுக்குள் இருக்கும் வலியை மறைத்துக்கொண்டு சிரித்த முகத்துடனே மானசா அனுப்பி வைத்தாள்.

ஆனால் எஸ்தரிடம் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயத்தை சொல்லிட்டுதான் கல்யாணம் பண்ணனும் என்று முன்பே மகியிடம் சொல்லியிருக்க,அவனும் சொல்லிடுவேன் என்றான்.

அந்த நம்பிக்கையில் தான் மானசாவும் இதற்கு சம்மதித்தது.ஆனால் மானசாவுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் எஸ்தருக்கு இதைப் பற்றி எதுவுமே அவர்கள் சொல்லவில்லை,சொல்லப் போவதுமில்லை.

ஏற்கனவே கல்யாணம் ஆகி குடும்பம் இருப்பது ஆபீஸில் இருப்பவர்களுக்கு தெரியும் என்பதால் மெடிக்கல் லீவ் என்று சொல்லிவிட்டு ஒரு மாதம் லீவு எடுத்துக் கொண்டு மகியும் ஊருக்கு வர ஒரே மகனின் கல்யாணத்தை விமர்சையாக ஆபிரகாமும் மேரியும் நடத்தினர்.

இரண்டு வருடத்தில் பெண் குழந்தை ஒன்று பிறக்க அவளுக்கு ஷமீரா தாஸ் சென்று பெயர் சூட்டினர்.முதுமையின் காரணமாக ஆபிரகாமும் மேரியும் சில வருடத்தில் இறக்க,இனி யாருக்கும் பயப்பட வேண்டாம் என்று மானசாவை அழைத்து வந்து திருச்சியிலே குடி வைத்து விட்டான்.

அவனுக்கும் வேலை மாற்றுதலை திருச்சிக்கு வாங்கிக் கொண்டு அங்கே குடும்பமாக வாழ ஆரம்பித்தனர்...

அலாரம் சத்தத்தில் கண் விழித்த மகி கடந்த கால நினைவுகளிலிருந்து வெளியே வந்தார்.பின்னர் இருவரும் குளித்து தயாராகியவர்கள் அங்கிருந்து சாந்தினி சௌவுக் என்ற இடத்திற்கு நடந்து சென்றனர்.

இவர்களைப் போல தனது சொந்தங்களை பறிகொடுத்த உறவினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர்.தங்கள் மகளை நினைத்து இருவரும் கண்ணீரோடு நின்றனர்.

நேரமும் கடந்து செல்ல அப்பொழுது இருவரும் அங்கிருந்து திரும்பும் போது எஸ்தரை போல் ஒருவர் தூரத்தில் நடந்து போக,மானசா அருகில் வருவதை மறந்து விட்டு எஸ்தர் என்று கத்திக் கொண்டே மகி ஓட அந்த உருவமோ காரில் ஏறி சென்றது.

கார் போன திசையில் ஓடி வந்த மகிக்கு அப்பொழுது தான் மானசாவும் கூட வந்தது ஞாபகம் வர,தலையில் தட்டிக் கொண்டு திரும்பி அங்கு வர மானசாவோ தனது கணவரை கோபமாக பார்த்தவர் எதுக்கு எப்படி கத்திட்டு ஓடுனிங்க?

எஸ்தர் போல யாரோ போனாங்கடி நான் போய் அவங்கள் எஸ்தரானு பார்ப்பதற்குள் காரில் ஏறி போயிட்டாங்க என்கவும்,உங்களுக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கா?

எஸ்தர் எப்படி இங்கு வருவாங்கள் என்று கோவமாக கேட்க,அது தான் எனக்கு தெரியலை.ஆனா நான் நல்லா பார்த்தேன்.அது என் பொண்டாட்டி எஸ்தர் தான் டி..ஓஓஓ அப்போ நான் யாரென்று மானசா கோவமாக கேட்க,என்ன டி கேள்வி இது?

ஏன் நீ யார் எனக்குனு தெரியாதா?

தெரியாமல் தான் என்னோடு இத்தனை வருஷம் குடும்பம் பண்ணுனியா என்று மகி திட்ட மானசாவால் எதுவும் பேச முடியவில்லை.இவளுங்க ரெண்டு பேரையும் கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே ஆண்டவரே என மனதிற்குள் புலம்பியர் வா மா போகலாம்.

ஆசிரமத்தில் சாப்பாட்டுக்கு பணம் கொடுத்திருக்கேன் என்கவும்,மகளை நினைத்து மீண்டும் அழுதவர் கணவரோடு ஆட்டோவில் ஏற இருவரும் ஆசிரமத்திற்கு போனார்கள்.

வனிச்சூர்:

என்ன செல்லம் மாமா மேல இருந்த கோவம் எல்லாம் போய்விட்டதா என்று மனைவியின் கன்னத்தை தடவிக் கொண்டே செழியன் கேட்க,ஷமீராவோ அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏன் டி அதுதான் உன்னை கூல் பண்ணிட்டேனே பிறகு எதுக்கு முறைக்கிற என்கவும் நான் என்ன கோவத்துல இருக்கேன்,நீங்கள் என்ன பண்ணுறிங்க என்று கோவமாக பார்த்தாள்.

அடியேய் நாலு நாளா என் பொண்டாட்டியை பாக்காமல்,இந்த ஆப்பிள் கன்னத்தை தொடாமல்,இந்த பஞ்சு மேனியை அணைக்காமல் இருந்தது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தான் டி தெரியும் என்றவன் மனைவியின் கன்னத்தை கடிக்க,கொஞ்சம் கூட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

"கண்டிப்பா இல்லை டி"

அப்போ உன் மனசு இந்த மாமனை நினைக்கவே இல்லை அப்படி தானே என்று செழியன் கேட்க,நான் ஏன் போலீஸ்காரனை நினைக்க போகிறேன் என்கவும்,அடிப்பாவி ஊருக்கு மட்டுமே போலீஸ்காரன்.உனக்கு நான் புருஷன் தான் டி.

அது எப்படி நீ என்னை நினைக்காமல் இருக்கலாமென்று மீண்டும் ஒருமுறை மனைவியை வன்மையாக இம்சிக்க அய்யோ இளா போதுமென்று சிணுங்கினாள்.

"சரி சரி குளிச்சிட்டு கிளம்பலாம்"

அங்க ஏதோ விருந்து ஏற்பாடு பண்ணிருக்காங்களே என்கவும், அடக்கடவுளே இதை நான் மறந்துட்டேன். எல்லாரும் கீழ இருக்காங்களே என்று அப்பொழுதுதான் ஷமீராவுக்கு ஞாபகம் வர ஹா ஹா என்று சிரித்தவன் சரி சரி வா குளிக்கலாம் என்று மனைவியை தூக்கிக்கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் போனவன் அங்கேயும் சில பல சேட்டைகளை செய்து கொண்டு இருவரும் குளித்து தயாராகி கீழே வர வீட்டில் யாருமே இருப்பது போல தெரியவில்லை.

ஷமீராவோ தலையில் அடித்துக் கொண்டு கணவனை பார்த்து முறைக்க, அவனோ உதட்டை குவித்து உம்மா என்றவன் எல்லாம் புரிஞ்சிப்பாங்க நீ வாடி செல்லம் என்று மனைவியின் தோளில் கையை போட்டுக் கொண்டு கதவை திறக்க போக,அய்யோ என்ன பண்றீங்க என்று கணவனின் கையை தட்டி விட்டாள்.

இவ ஒருத்தி என்றவன் தனது புல்லட்டை எடுத்து ஸ்டார்ட் பண்ண ஷமீராவும் வீட்டை பூட்டிக் கொண்டு வந்து வண்டியில் உட்கார,இருவரும் அங்கிருந்து கோயிலுக்கு எதிரே இருக்கும் திடலை நோக்கி சென்றனர்.

"ஓய் என்று கூப்பிட்டான் "

"ம்ம் என்றாள்"

"ஹனிமூன் போகணும்"

எதேஏஏஏஏ என்று ஷமீரா அதிர,என்ன டி என்று கண்ணாடி வழியாக மனைவியை பார்க்க,"ஏன் வீட்டில் அடிக்கிற கூத்து போதாதா என்றாள்"

"அது வேறு-இது வேறு செல்லம் "

கல்யாணம் ஆன புது மாப்பிள்ளை,தன் புது பொண்டாட்டியை கூட்டிட்டு ஹனிமூன் போகலைன்னாக்க அது எவ்வளவு பெரிய மானக்கேடு தெரியுமா எனக்கு...அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்.இன்னைக்கு நைட்டு நம்ம கிளம்பனும் ஞாபகம் இருக்கட்டும் என்றான்.

அதெல்லாம் முடியாது என்று ஷமீரா சொல்ல அதையும் பார்க்க தானடி போற என்று இருவரும் வாக்குவாதம் பண்ணிக் கொண்டு விருந்து நடக்கும் திடலுக்கு வந்தனர்.

கோயில் பூசாரி முருகனோ கண்மணி மலரு,நம்ப ஆத்தாவை குளிப்பாட்டனும் குளத்தில் போய் தண்ணி எடுத்துட்டு வாங்க மா என்க,இருவரும் சரி என்று அங்கிருந்த பிளாஸ்டிக் குடத்தை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு எதிரே இருக்கும் குளத்திற்கு சென்றார்கள்.

இரண்டு முறை ஆளுக்கு ரெண்டு ரெண்டு குடம் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க இன்னும் இரண்டு குடம் தான் வேணும்.கண்மணி நீ கோலம் போடு மலரு நீ தண்ணி எடுத்துட்டு வாத்தா என்கவும்,சரிங்க மாமா என்று சொல்லிவிட்டு மலர் மட்டும் தனியாக வந்தவள் படியில் இறங்கி தண்ணீர் எடுத்துக் கொண்டும் மேலே வரும் போது திடீரென்று வழுக்கி விட, பின்பக்கமாய் விழப்போனவளை யாரோ எட்டிப் பிடித்தனர்.

யார் தன்னை பிடித்து இருக்கிறார்கள் என்று அதிர்ந்து போய் திரும்ப,அங்கே கண்ணன் நின்று கொண்டிருந்தான்.அவளின் கையை வேகமாய் இழுக்க அவன் நெஞ்சோடு இடித்து நின்றாள்.

ஏய் பார்த்து எடுத்துட்டு வரக்கூடாதா? விழுந்து கைகால் ஏதாச்சும் ஆனால் எனக்கு தான டி சிரமம்,ஒழுங்கா எடுத்துட்டு போ என்று சொல்லவும் தன்னிடம் தான் பேசினானா என்று மலர் அதிர்ந்து போய் நிற்க...

அவள் முகத்தில் இருக்கும் அதிர்ச்சியை பார்த்தவன் என்ன டி பகல் கனவா? என்று வலிக்கும்படி மலரின் கன்னத்தில் கிள்ள,அதில் சுதாரித்தவள் கண்ணனின் கையை தட்டி விட்டு அங்கிருந்து வேகமாக சென்றாள்.

குடத்தை தூக்கிக்கொண்டு போகுபவளை திரும்பிப் பார்த்து சிரித்தவன் ஊப் என்று பெருமூச்சு விட்டான்.

தண்ணி எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வந்தவளோ நடந்தது நிஜம்தானா?இல்லை கனவு ஏதாவது காண்கிறோமா?

இவங்களா நம்ம கிட்ட பேசினாங்க என்று புலம்பிக்கொண்டே வர, கோலத்தை போட்டு முடித்த கண்மணியோ தானாக பேசிக்கொண்டு வருபவளை விசித்திரமாக பார்த்தாள்.

பொம்மை போல் தண்ணி குடத்தை கீழே வைத்து விட்டு அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றவளோ சற்று முன்னர் நடந்ததை யோசித்துப் பார்க்க,வேகமாக வந்த கண்மணி மலரின் தோள்பட்டையில் ஓங்கி ஒன்று வைக்க அதில் சுதாரித்தவள் ஏன் டி என்றாள்.

பின்ன அடிக்காமல்...பைத்தியம் போல தானா பேசிட்டு இருக்கியே என்ன சங்கதி என்க,ஒன்னும் இல்லடி என்று சிரித்தாள்.

மலரின் முகத்தில் இருக்கும் பொலிவை பார்த்தவள் உன் சிரிப்பை பார்த்தா ஒன்னும் இல்லாத போலயா இருக்கிறது?

என்னமோ நடந்திருக்கு. கத்திரிக்காய் முத்தினால் கடை தெருக்கு வந்து தானே ஆகணும் என்றாள்.

வீழ்ந்தேனடி...
 
Last edited by a moderator:
Active member
Joined
Jun 3, 2025
Messages
379
Lol bad author Valentine days kudos Ethan madhiri romance panda vechuttu,Shamirava Chelyunakku adi kudukkama vittutengha 😥
😁🤭🤭🤭🤣🤣🤩🤩🤩 அவங்க புருசன் பொண்டாட்டி பிரச்சினை நமக்கு ஏன் 😁😁🤭🤭
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top