Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 376
- Thread Author
- #1
சென்னை கோர்ட்:
மற்றவர்களோ இங்கே என்ன கேஸ் தான் நடக்க போகுது?
ஒன்னும் புரியலையே,எதுக்கு சம்பந்தமே இல்லாம ஆடியபாதத்தோட பொண்ணை பற்றி இந்த அம்மா விசாரிக்கிறார்கள் என்று பேசிக் கொண்டனர்.
சார் உங்கள் அனுமதியோட இவருக்கு நான் போன் கொடுக்கிறேன் என்க, காரணம் இல்லாமல் உமா எதுவும் செய்ய மாட்டார் என்பதை புரிந்து கொண்ட ஜட்ஜும்,பர்மிஷன் கிராண்டெட் என்று சொல்ல,தனது போனை எடுத்துட்டு வந்து ஆடியபாதத்திடம் கொடுக்க,அவனோ எதோ ஒரு நம்பரை அழுத்தி அதுக்கு கால் பண்ணியவன் பிரியாவை பேச சொல்லுங்க என்க ...
சிறிது நிமிடத்தில் அந்த பக்கமிருந்து அப்பா எப்படி இருக்கீங்க என்று பெண் குரல் ஒன்று அவனிடம் நல விசாரித்து பேசிக் கொண்டிருக்கும்போது பின்பக்கம் திரும்பிய உமா கண்ணை அசைக்க அவரின் ஜூனியர் பெண்ணோ புர்கா போட்ட ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு போய் கூண்டில் நிற்க வைத்தாள்.
பாசமான தந்தையும் மகளைப் போல் பேசி முடித்து விட்டு அழைப்பை கட் பண்ணிய ஆடியபாதம் போதுமா?என் பொண்ணு காலேஜ்ல இருக்காள்.தேவை இல்லாம எதுக்கு என் பொண்ணை பற்றி கேக்குறீங்க என்று கோவப்பட்டான்.
மௌனமாய் சிரித்த உமா மகேஸ்வரி இவ்வளவு நேரம் நீங்க பேசியது உங்க பொண்ணு கிட்ட தானே என்கவும் ஆமாம்.இத்தனை பேருக்கு முன்னாடி தானே பேசினேன்.நான் என்ன மறைமுகமாகவா பேசினேன் என்றான்.
எதிர் கூண்டில் இருந்த உருவமோ தனது முக கவசத்தையும்,புர்காவையும் அவிழ்த்து நிற்க,அங்கிருந்த மகளை பார்த்த ஆடியபாதம் பிரியாஆஆ என்று அதிர்ந்து போனான்.
இப்போது ஜட்ஜ் பக்கம் திரும்பிய உமா மை லார்ட் இவ்வளவு நேரம் இதோ குற்றவாளி கூண்டில் இருக்கும் ஆடியபாதம் எந்த மகளிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தாரோ அந்த மகள் இவர்தான் மிசஸ் பிரியா ரவீந்திரன் என்கவும்,சில நொடிகள் அங்கே ஒரே சலசலப்பாக இருந்தது.
அமைதி அமைதி என்று சொல்லிய ஜட்ஜ்,மேடம் எதையும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் என்கவும் எஸ் மை லார்ட்,சார் இந்த கேஸோட முகாந்திரமே ஆணவக் கொலை.அதில்தான் போலீஸ் இவரை அரெஸ்ட் பண்ணிருக்காங்க என்று உங்களுக்கு தெரியும்.
அதாவது நான் சொல்றதை விட இவரை அரெஸ்ட் பண்ணிய போலீஸே இதைப் பற்றி சொன்னால் நல்லா இருக்கும் என்கவும்,ஓகே வர சொல்லுங்கள் என்றார்.
அங்கிருந்த செழியனோ கம்பீர நடையோடு வந்தவன் கொஞ்சம் கீழே இறங்கி நில்லுமா என்று பிரியாவிடம் சொல்ல,அவளும் எதுவும் சொல்லாமல் கீழே இறங்கி வர,அந்த கூண்டுக்குள் நின்றவன் ஜட்ஜை பார்த்து மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தவன் நான் இளஞ்செழியன் ஐபிஎஸ்,சிபிஐ க்ரைம் பிரான்ச் டெல்லி என்றவன் மனித உரிமை கழகத்திலிருந்து இந்த ஆணவக் கொலையை விசாரிக்க சொல்லி டெல்லி மேலிடத்திற்கு தகவல் வந்தது.
"அந்த கேஸ் என்கிட்ட கொடுக்கப்பட்டது"
கடந்த ஒரு வருடமாக அதைப்பற்றி தேடலில் இருக்கும்போது முதல் குற்றவாளி எதிரே நிற்கும் ஆடியபாதம் என்பது தெரிந்ததும் டெல்லி மேலிடமே அரெஸ்ட் பண்ண சொல்லி எனக்கு பர்மிஷன் கொடுத்திருக்காங்க.
அதற்கான லெட்டர் தன்னிடம் உள்ளது என்று கையிலிருந்த கவரை நீட்டி சொல்லவும்,வக்கீல் உமாவோ அந்த லெட்டரை வாங்கி ரைட்டரிடம் கொடுத்து ஜட்ஜிடம் கொடுக்க சொன்னார்.ஜட்ஜும் அதை வாங்கி படித்துப் பார்க்க,அதில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்த கேஸை விசாரிப்பதற்காக அனுமதி கொடுத்திருப்பது தெரிந்தது.
ஓகே என்று லெட்டரை மூடி வைத்தவர், சொல்லுங்க மிஸ்டர் செழியன் நீங்க தெரிந்து கொண்டது என்னவென்று கேட்க...செழியனும் விஷயத்தை சொல்லவும் அதைக் கேட்ட ஆடியபாதம் இது சுத்த பொய்.
என் மேல ஜோடிக்க பட்ட வழக்கு என்று சொல்லவும் அமைதி அமைதி என்ற ஜட்ஜ் அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று செழியனிடம் கேட்க இதுவரை தான் சேகரித்த அத்தனை ஆதாரத்தையும் அங்கு உட்கார்ந்திருந்த கண்ணப்பனிடம் கொடுத்து வந்திருக்க,திரும்பி அவரை பார்க்கவும் அவரும் எழுந்து வந்து கொடுக்க அதையும் ஜட்ஜிடம் ஒப்படைத்தார்கள்.
அதை எல்லாம் படித்து பார்த்த ஜட்ஜ்,உமாவிடம் நீங்கள் ஆரம்பிங்கள் என்கவும் தேங்க்யூ மை லார்ட் என்றவர் சொல்லுங்க மிஸ்டர் ஆடியபாதம் உங்க பொண்ணு பாரின்ல படிச்சிட்டு இருக்காங்கன்னு சொன்னீங்க,அப்போ இவங்க யாரு?
ஒருவேளை உங்களுக்கு ரெட்டை பிள்ளையா இருக்குமோ என்க,மகளைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்தவனோ இன்னும் வெளிவரவில்லை.
சொல்லுங்க மிஸ்டர் ஆடியபாதம் அவங்க உங்களோட பொண்ணா? இல்லையா என்று உமாவின் கம்பீரமான குரலைக் கேட்டு நிகழ்விற்கு வந்த ஆடியபாதம்,ஆமாம் என்னுடைய பொண்ணு தான்.
ஆனால் என் பொண்ணு பாரின்ல தான இருந்தாள்.இப்ப கூட நான் பேசினேனே பிறகு இங்கு எப்படி என்க...அது என்ன மாயம் மந்திரமோ நீங்க தான் சொல்ல வேண்டுமென உமா கேட்க,கோர்ட்டில் இருந்தவர்களோ சிரித்தனர்.
"ஜட்ஜோ சைலன்ட் சைலன்ட் என்றார்"
ஆடியபாதம் நல்ல மனநிலையில் தானே இங்கே இருக்கிறீர்கள் என்று ஜட்ஜ் கேட்க ஆமாங்கய்யா என்றார்.
அப்போ நடந்தது என்ன என்று நீங்களே சொல்கிறீர்களா என்கவும்,ஐயா அதுதான் எனக்கும் தெரியவில்லை என் பொண்ணு இங்க இருக்கிறாள்.
பிறகு எதுக்கு இந்த ஆணவக் கொலை வழக்கு என் மேல போட்டுருக்காங்க? அப்படி நான் யாரை கொலை பண்ணினேன் என்கும் போது உமாவின் அண்ணன் பையன் ஒரு தம்பதியை அங்கே அழைத்து வந்தான்.
அவர்களை கூண்டுக்குள் நிற்க வைத்த உமா யுவர் ஆனர் இங்கே நிற்கிறார்களே பன்னீர்-வசந்தா இவர்களின் ஒரே பையன் ரவீந்திரன் பற்றிய கேஸ் தான் இது என்க...
எதற்காக மனித உரிமை கழகத்திற்கு கம்ப்ளைன்ட் பண்ணுனீங்கள் என்கவும், எங்களுடைய ஒரே பையன் ரவீந்திரனை கடந்து ஒன்றரை வருடமாக காணவில்லை.
அங்கே நிற்கிறாரே ஆடியபாதம் அவரும் நாங்களும் ஒரே ஊர்காரர்கள் தான். அவருடைய பொண்ணும் என் பையனும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள் என்க...அப்படியா என்க, ஆமாம் என்றார்.
ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சவங்க.வெவ்வேறு ஜாதி.அவங்க கல்யாணம் பண்ணிக்கிற விஷயமே எங்களுக்கு தெரியாது.ஒரு நாள் இவர் ஆட்களோட வந்து எங்க வீட்ல இருக்கும் பொருள் எல்லாம் அடிச்சு ஒடைச்சிட்டு உன் பையன ஒழுங்கா இருந்துக்க சொல்லு..
இல்லை காணாமல் பண்ணிடுவேன்னு சொன்னார்.அன்று காலை தான் என் பையன் வேலை கிடைச்சிருக்குன்னு பெங்களூருக்கு கிளம்பி போனான். இதோ ஒன்றரை வருஷம் ஆகிவிட்டது.என் பையன் வரலை எங்க போனானென்றும் தெரியலை என்று கதறி அழுதார்கள்...
கோர்ட்டில் வாதம் நடந்து கொண்டிருக்கும்போது தனது போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்த செழியன் தனது வீட்டிற்கு கால் பண்ண செல்லதுரை தான் எடுத்து பேசியவர் மகனிடம் வேற எதுவும் கேட்காமல் நல்லா இருக்கிறியா?
நல்லபடியாக கேஸ் முடிச்சுட்டு வா என்று சொல்லியவர் பின்னர் வானதியிடம் கொடுக்க,அவரோ வருத்தமாக பேச தனது தாயை சமாதானப் படுத்தியவன் உன் மருமகள் எங்க மா என்றான்.
இப்பொழுது தான் ரூமுக்கு போனாள் என்று சொல்லவும் சரி நான் அவளுக்கு ஃபோன் பண்ணுகிறேன் என்று மனைவிக்கு கால் பண்ண ஷமீராவோ போன் அழைப்பை அட்டென்ட் பண்ணவே இல்லை.
தொடர்ந்து கால் பண்ணி கொண்டே இருக்க அவளும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.பயங்கர கோவமா இருக்கா போலையே? என்று கண்மணிக்கு போன் பண்ணி எங்கே இருக்கிற என்க...
ஏண்டா மானங்கெட்ட மாமா.நீ போலீஸ்ன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே என்கவும்,அதுலாம் நேரில் வந்து பேசுறேன் டி.மொதல்ல என் பொண்டாட்டி கிட்ட போனை கொடு டி என்க,ஏன் உன் பொண்டாட்டி கிட்ட தான் போன் இருக்கேயென்றாள்.
அடியேய் அந்த வெங்காய மயிறு தெரியாதா? அவள் போனை எடுக்க மாட்டேங்குறாடி கோவமா இருக்குறாள்.போய் கொடு என்றான்.
சரி...நீ போனை வை நான் மேல போயிட்டு வீடியோ கால் பண்றேன்னு சொல்ல,நீ தாண்டி செல்லக்குட்டி என் மாமா பொண்ணு.நானே பொண்டாட்டிய பாக்காம ரெண்டு நாள் ஏங்கி போயிருந்தேன் டி.
மாமா மனசை புரிஞ்சுகிட்டு வீடியோ கால் பண்றேன்னு சொன்ன பாத்தியா உனக்கு கோயில் கட்டணும் தங்க குட்டி என்கவும்....யோவ் ஓவரா சோப்பு போடாதே என்றவாறு மேலே வந்தவள் ஷமீராவின் ரூம் கதவை தட்ட,துணி மடித்துக் கொண்டிருந்தவளோ கதவை திறக்க கண்மணி தான் நின்று கொண்டிருந்தாள்.
அவள் வாசலில் நிற்கும் போதே செழியனுக்கு வீடியோ கால் பண்ண அவனும் அட்டென் பண்ணியிருந்ததால் மனைவியின் முகத்தை பார்த்தவன் ஓய் பொண்டாட்டி ,என்ன டி கோவமா என்றான்.
திடீரென்று கணவனின் குரல் கேட்பதை கண்ட ஷமீராவோ கண்மணியை முறைக்க அவளோ போனை காட்டினாள்.அதில் செழியன் யூனிஃபார்மில் இருப்பது தெரியவும் எதுவும் சொல்லாமல் கண்மணியிடம் இருந்து போனை வாங்கிக் கொண்டு கணவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனைவியின் பார்வை தன்னை ஊசி போல் ஊடுருவதை உணர்ந்தவன் மாமா கோர்ட்ல இருக்கிறேன் டி.இப்படி உத்து பார்த்தால் மூடு மாறிடும் என்கவும்,அதற்கும் அவள் ஒன்னும் சொல்லவில்லை .
யூனிஃபார்ம் ல உன் புருசன் எப்படி இருக்கிறேன்? சொல்லு டி என்று கேமராவை சற்று தள்ளி வைத்து தன்னை காட்ட,என் புருஷன் எப்படி இருந்தாலும் அழகு தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவளோ வாயை திறந்து சொல்லவில்லை.
போலீசா இருக்குறேன்னு உன்கிட்ட சொல்லல அதுதான் கோவமா?அப்பா அம்மாக்கு மாமா வீட்ல கூட சொல்லலை டி ஏன் அதை யோசிக்கலை என்க,அப்பொழுதும் அவள் அமைதியாக இருப்பதை பார்த்து மனுஷன் இங்கு கரடியாக கத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி வாயை மூடிக்கிட்டு இருந்தாக்க என்ன அர்த்தம்?
ரொம்ப கடுப்பு மயிரா வருது.ரெண்டு நாளா பேசலன்னு எவ்ளோ ஆசையா போன் பண்ணிட்டுருக்கேன்,எடுத்து அட்டென்ட் பண்ணி பேசுவது கூட உன்னால முடியலையா?
"உடம்பெல்லாம் திமிரு டி"இரு டி உன்னை நேர்ல இருந்து வச்சுக்கிறேன் என்யவாறு அழைப்பை துண்டித்தான்.
மற்றவர்களோ இங்கே என்ன கேஸ் தான் நடக்க போகுது?
ஒன்னும் புரியலையே,எதுக்கு சம்பந்தமே இல்லாம ஆடியபாதத்தோட பொண்ணை பற்றி இந்த அம்மா விசாரிக்கிறார்கள் என்று பேசிக் கொண்டனர்.
சார் உங்கள் அனுமதியோட இவருக்கு நான் போன் கொடுக்கிறேன் என்க, காரணம் இல்லாமல் உமா எதுவும் செய்ய மாட்டார் என்பதை புரிந்து கொண்ட ஜட்ஜும்,பர்மிஷன் கிராண்டெட் என்று சொல்ல,தனது போனை எடுத்துட்டு வந்து ஆடியபாதத்திடம் கொடுக்க,அவனோ எதோ ஒரு நம்பரை அழுத்தி அதுக்கு கால் பண்ணியவன் பிரியாவை பேச சொல்லுங்க என்க ...
சிறிது நிமிடத்தில் அந்த பக்கமிருந்து அப்பா எப்படி இருக்கீங்க என்று பெண் குரல் ஒன்று அவனிடம் நல விசாரித்து பேசிக் கொண்டிருக்கும்போது பின்பக்கம் திரும்பிய உமா கண்ணை அசைக்க அவரின் ஜூனியர் பெண்ணோ புர்கா போட்ட ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு போய் கூண்டில் நிற்க வைத்தாள்.
பாசமான தந்தையும் மகளைப் போல் பேசி முடித்து விட்டு அழைப்பை கட் பண்ணிய ஆடியபாதம் போதுமா?என் பொண்ணு காலேஜ்ல இருக்காள்.தேவை இல்லாம எதுக்கு என் பொண்ணை பற்றி கேக்குறீங்க என்று கோவப்பட்டான்.
மௌனமாய் சிரித்த உமா மகேஸ்வரி இவ்வளவு நேரம் நீங்க பேசியது உங்க பொண்ணு கிட்ட தானே என்கவும் ஆமாம்.இத்தனை பேருக்கு முன்னாடி தானே பேசினேன்.நான் என்ன மறைமுகமாகவா பேசினேன் என்றான்.
எதிர் கூண்டில் இருந்த உருவமோ தனது முக கவசத்தையும்,புர்காவையும் அவிழ்த்து நிற்க,அங்கிருந்த மகளை பார்த்த ஆடியபாதம் பிரியாஆஆ என்று அதிர்ந்து போனான்.
இப்போது ஜட்ஜ் பக்கம் திரும்பிய உமா மை லார்ட் இவ்வளவு நேரம் இதோ குற்றவாளி கூண்டில் இருக்கும் ஆடியபாதம் எந்த மகளிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தாரோ அந்த மகள் இவர்தான் மிசஸ் பிரியா ரவீந்திரன் என்கவும்,சில நொடிகள் அங்கே ஒரே சலசலப்பாக இருந்தது.
அமைதி அமைதி என்று சொல்லிய ஜட்ஜ்,மேடம் எதையும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் என்கவும் எஸ் மை லார்ட்,சார் இந்த கேஸோட முகாந்திரமே ஆணவக் கொலை.அதில்தான் போலீஸ் இவரை அரெஸ்ட் பண்ணிருக்காங்க என்று உங்களுக்கு தெரியும்.
அதாவது நான் சொல்றதை விட இவரை அரெஸ்ட் பண்ணிய போலீஸே இதைப் பற்றி சொன்னால் நல்லா இருக்கும் என்கவும்,ஓகே வர சொல்லுங்கள் என்றார்.
அங்கிருந்த செழியனோ கம்பீர நடையோடு வந்தவன் கொஞ்சம் கீழே இறங்கி நில்லுமா என்று பிரியாவிடம் சொல்ல,அவளும் எதுவும் சொல்லாமல் கீழே இறங்கி வர,அந்த கூண்டுக்குள் நின்றவன் ஜட்ஜை பார்த்து மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தவன் நான் இளஞ்செழியன் ஐபிஎஸ்,சிபிஐ க்ரைம் பிரான்ச் டெல்லி என்றவன் மனித உரிமை கழகத்திலிருந்து இந்த ஆணவக் கொலையை விசாரிக்க சொல்லி டெல்லி மேலிடத்திற்கு தகவல் வந்தது.
"அந்த கேஸ் என்கிட்ட கொடுக்கப்பட்டது"
கடந்த ஒரு வருடமாக அதைப்பற்றி தேடலில் இருக்கும்போது முதல் குற்றவாளி எதிரே நிற்கும் ஆடியபாதம் என்பது தெரிந்ததும் டெல்லி மேலிடமே அரெஸ்ட் பண்ண சொல்லி எனக்கு பர்மிஷன் கொடுத்திருக்காங்க.
அதற்கான லெட்டர் தன்னிடம் உள்ளது என்று கையிலிருந்த கவரை நீட்டி சொல்லவும்,வக்கீல் உமாவோ அந்த லெட்டரை வாங்கி ரைட்டரிடம் கொடுத்து ஜட்ஜிடம் கொடுக்க சொன்னார்.ஜட்ஜும் அதை வாங்கி படித்துப் பார்க்க,அதில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்த கேஸை விசாரிப்பதற்காக அனுமதி கொடுத்திருப்பது தெரிந்தது.
ஓகே என்று லெட்டரை மூடி வைத்தவர், சொல்லுங்க மிஸ்டர் செழியன் நீங்க தெரிந்து கொண்டது என்னவென்று கேட்க...செழியனும் விஷயத்தை சொல்லவும் அதைக் கேட்ட ஆடியபாதம் இது சுத்த பொய்.
என் மேல ஜோடிக்க பட்ட வழக்கு என்று சொல்லவும் அமைதி அமைதி என்ற ஜட்ஜ் அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று செழியனிடம் கேட்க இதுவரை தான் சேகரித்த அத்தனை ஆதாரத்தையும் அங்கு உட்கார்ந்திருந்த கண்ணப்பனிடம் கொடுத்து வந்திருக்க,திரும்பி அவரை பார்க்கவும் அவரும் எழுந்து வந்து கொடுக்க அதையும் ஜட்ஜிடம் ஒப்படைத்தார்கள்.
அதை எல்லாம் படித்து பார்த்த ஜட்ஜ்,உமாவிடம் நீங்கள் ஆரம்பிங்கள் என்கவும் தேங்க்யூ மை லார்ட் என்றவர் சொல்லுங்க மிஸ்டர் ஆடியபாதம் உங்க பொண்ணு பாரின்ல படிச்சிட்டு இருக்காங்கன்னு சொன்னீங்க,அப்போ இவங்க யாரு?
ஒருவேளை உங்களுக்கு ரெட்டை பிள்ளையா இருக்குமோ என்க,மகளைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்தவனோ இன்னும் வெளிவரவில்லை.
சொல்லுங்க மிஸ்டர் ஆடியபாதம் அவங்க உங்களோட பொண்ணா? இல்லையா என்று உமாவின் கம்பீரமான குரலைக் கேட்டு நிகழ்விற்கு வந்த ஆடியபாதம்,ஆமாம் என்னுடைய பொண்ணு தான்.
ஆனால் என் பொண்ணு பாரின்ல தான இருந்தாள்.இப்ப கூட நான் பேசினேனே பிறகு இங்கு எப்படி என்க...அது என்ன மாயம் மந்திரமோ நீங்க தான் சொல்ல வேண்டுமென உமா கேட்க,கோர்ட்டில் இருந்தவர்களோ சிரித்தனர்.
"ஜட்ஜோ சைலன்ட் சைலன்ட் என்றார்"
ஆடியபாதம் நல்ல மனநிலையில் தானே இங்கே இருக்கிறீர்கள் என்று ஜட்ஜ் கேட்க ஆமாங்கய்யா என்றார்.
அப்போ நடந்தது என்ன என்று நீங்களே சொல்கிறீர்களா என்கவும்,ஐயா அதுதான் எனக்கும் தெரியவில்லை என் பொண்ணு இங்க இருக்கிறாள்.
பிறகு எதுக்கு இந்த ஆணவக் கொலை வழக்கு என் மேல போட்டுருக்காங்க? அப்படி நான் யாரை கொலை பண்ணினேன் என்கும் போது உமாவின் அண்ணன் பையன் ஒரு தம்பதியை அங்கே அழைத்து வந்தான்.
அவர்களை கூண்டுக்குள் நிற்க வைத்த உமா யுவர் ஆனர் இங்கே நிற்கிறார்களே பன்னீர்-வசந்தா இவர்களின் ஒரே பையன் ரவீந்திரன் பற்றிய கேஸ் தான் இது என்க...
எதற்காக மனித உரிமை கழகத்திற்கு கம்ப்ளைன்ட் பண்ணுனீங்கள் என்கவும், எங்களுடைய ஒரே பையன் ரவீந்திரனை கடந்து ஒன்றரை வருடமாக காணவில்லை.
அங்கே நிற்கிறாரே ஆடியபாதம் அவரும் நாங்களும் ஒரே ஊர்காரர்கள் தான். அவருடைய பொண்ணும் என் பையனும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள் என்க...அப்படியா என்க, ஆமாம் என்றார்.
ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சவங்க.வெவ்வேறு ஜாதி.அவங்க கல்யாணம் பண்ணிக்கிற விஷயமே எங்களுக்கு தெரியாது.ஒரு நாள் இவர் ஆட்களோட வந்து எங்க வீட்ல இருக்கும் பொருள் எல்லாம் அடிச்சு ஒடைச்சிட்டு உன் பையன ஒழுங்கா இருந்துக்க சொல்லு..
இல்லை காணாமல் பண்ணிடுவேன்னு சொன்னார்.அன்று காலை தான் என் பையன் வேலை கிடைச்சிருக்குன்னு பெங்களூருக்கு கிளம்பி போனான். இதோ ஒன்றரை வருஷம் ஆகிவிட்டது.என் பையன் வரலை எங்க போனானென்றும் தெரியலை என்று கதறி அழுதார்கள்...
கோர்ட்டில் வாதம் நடந்து கொண்டிருக்கும்போது தனது போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்த செழியன் தனது வீட்டிற்கு கால் பண்ண செல்லதுரை தான் எடுத்து பேசியவர் மகனிடம் வேற எதுவும் கேட்காமல் நல்லா இருக்கிறியா?
நல்லபடியாக கேஸ் முடிச்சுட்டு வா என்று சொல்லியவர் பின்னர் வானதியிடம் கொடுக்க,அவரோ வருத்தமாக பேச தனது தாயை சமாதானப் படுத்தியவன் உன் மருமகள் எங்க மா என்றான்.
இப்பொழுது தான் ரூமுக்கு போனாள் என்று சொல்லவும் சரி நான் அவளுக்கு ஃபோன் பண்ணுகிறேன் என்று மனைவிக்கு கால் பண்ண ஷமீராவோ போன் அழைப்பை அட்டென்ட் பண்ணவே இல்லை.
தொடர்ந்து கால் பண்ணி கொண்டே இருக்க அவளும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.பயங்கர கோவமா இருக்கா போலையே? என்று கண்மணிக்கு போன் பண்ணி எங்கே இருக்கிற என்க...
ஏண்டா மானங்கெட்ட மாமா.நீ போலீஸ்ன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே என்கவும்,அதுலாம் நேரில் வந்து பேசுறேன் டி.மொதல்ல என் பொண்டாட்டி கிட்ட போனை கொடு டி என்க,ஏன் உன் பொண்டாட்டி கிட்ட தான் போன் இருக்கேயென்றாள்.
அடியேய் அந்த வெங்காய மயிறு தெரியாதா? அவள் போனை எடுக்க மாட்டேங்குறாடி கோவமா இருக்குறாள்.போய் கொடு என்றான்.
சரி...நீ போனை வை நான் மேல போயிட்டு வீடியோ கால் பண்றேன்னு சொல்ல,நீ தாண்டி செல்லக்குட்டி என் மாமா பொண்ணு.நானே பொண்டாட்டிய பாக்காம ரெண்டு நாள் ஏங்கி போயிருந்தேன் டி.
மாமா மனசை புரிஞ்சுகிட்டு வீடியோ கால் பண்றேன்னு சொன்ன பாத்தியா உனக்கு கோயில் கட்டணும் தங்க குட்டி என்கவும்....யோவ் ஓவரா சோப்பு போடாதே என்றவாறு மேலே வந்தவள் ஷமீராவின் ரூம் கதவை தட்ட,துணி மடித்துக் கொண்டிருந்தவளோ கதவை திறக்க கண்மணி தான் நின்று கொண்டிருந்தாள்.
அவள் வாசலில் நிற்கும் போதே செழியனுக்கு வீடியோ கால் பண்ண அவனும் அட்டென் பண்ணியிருந்ததால் மனைவியின் முகத்தை பார்த்தவன் ஓய் பொண்டாட்டி ,என்ன டி கோவமா என்றான்.
திடீரென்று கணவனின் குரல் கேட்பதை கண்ட ஷமீராவோ கண்மணியை முறைக்க அவளோ போனை காட்டினாள்.அதில் செழியன் யூனிஃபார்மில் இருப்பது தெரியவும் எதுவும் சொல்லாமல் கண்மணியிடம் இருந்து போனை வாங்கிக் கொண்டு கணவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனைவியின் பார்வை தன்னை ஊசி போல் ஊடுருவதை உணர்ந்தவன் மாமா கோர்ட்ல இருக்கிறேன் டி.இப்படி உத்து பார்த்தால் மூடு மாறிடும் என்கவும்,அதற்கும் அவள் ஒன்னும் சொல்லவில்லை .
யூனிஃபார்ம் ல உன் புருசன் எப்படி இருக்கிறேன்? சொல்லு டி என்று கேமராவை சற்று தள்ளி வைத்து தன்னை காட்ட,என் புருஷன் எப்படி இருந்தாலும் அழகு தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவளோ வாயை திறந்து சொல்லவில்லை.
போலீசா இருக்குறேன்னு உன்கிட்ட சொல்லல அதுதான் கோவமா?அப்பா அம்மாக்கு மாமா வீட்ல கூட சொல்லலை டி ஏன் அதை யோசிக்கலை என்க,அப்பொழுதும் அவள் அமைதியாக இருப்பதை பார்த்து மனுஷன் இங்கு கரடியாக கத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி வாயை மூடிக்கிட்டு இருந்தாக்க என்ன அர்த்தம்?
ரொம்ப கடுப்பு மயிரா வருது.ரெண்டு நாளா பேசலன்னு எவ்ளோ ஆசையா போன் பண்ணிட்டுருக்கேன்,எடுத்து அட்டென்ட் பண்ணி பேசுவது கூட உன்னால முடியலையா?
"உடம்பெல்லாம் திமிரு டி"இரு டி உன்னை நேர்ல இருந்து வச்சுக்கிறேன் என்யவாறு அழைப்பை துண்டித்தான்.