Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
வனிச்சூர்:
நான் முன்னாடி வண்டில போறேன்..என் பின்னாடியே வாங்களென்றவர் அங்கிருந்த தனது புல்லட்டில் ஏறி செல்ல,அவரை பாலோ பண்ணி கொண்டே சென்றனர்.
பரமசிவமோ இரண்டு தெருவை தாண்டி மூன்றாவது தெருவில் இருக்கும் அந்த பெரிய வீட்டின் முன்பு வந்து வண்டியை நிறுத்த,இவர்களும் காரை நிறுத்தி விட்டு இறங்கினர்.
வாங்களென்றவர் துரை துரை என்று குரல் கொடுக்க, பரமு மச்சான் குரல் கேட்பது போல இருக்கேயென்ற செல்லதுரை, உள்ள தான் இருக்கேன் மச்சான் வாங்க.
அவர்கள் நால்வரோடும் உள்ளே வந்தவர் அங்கே வீரையன் தம்புசாமி வானதியின் அண்ணன்கள் அன்பரசன் கனவரசனும் இருப்பதை பார்த்து இவங்க யாருன்னு தெரியுதா?என்க..
என்ன மச்சான் விளையாடுறியா?நீ கூப்பிட்டு வந்துட்டு எங்களை கேக்குறீங்கனு செல்லதுரை சொல்ல,பாப்பாவ வர சொல்லு என்றார்.
அதிலே விஷயம் புரிந்து விட்டது.மரியாதை நிமித்தமாக வணக்கம் சொல்லியவர்கள் உட்காருங்களஎன்று அங்கிருந்த மர சோபாவை காட்டி சொல்ல,வந்த ஆத்திரத்தை அடக்கி கொண்டு,முதலில் தங்களது பிள்ளையை பார்க்க வேண்டும் என்பதால் அமைதியாக உட்கார்ந்தனர்.
மகள் எங்கே இருக்கிறாளென்று தெரியாமல் கண்களை அங்கே இங்கே எஸ்தர் அலைபாய விட,அருகில் இருந்த மகளை பார்த்த தம்புசாமியோ அம்மாடி போய் கூட்டிட்டு வா என்கவும் வானதியும் அங்கிருந்த படிகள் வழியாக மாடிக்கு போய் ரூம் கதவைத் தட்ட, சில நொடியில் ஷமீராவும் கதவை திறந்தாள்.
உன்னை பார்க்க வந்திருக்காங்களென்று சொல்லவும்,என்னையா என்றவளுக்கோ பயம் வந்துவிட்டது.எங்க அப்பா அம்மா வந்திருக்காங்களா?என்கவும்,அவங்க உன்னோட அப்பா அம்மாவாயென்று எனக்கு தெரியல ஆத்தா.
ஆனால் பார்க்க ரொம்ப படிச்சவங்க போல இருக்கிறாங்க என்கவும்,வந்திருக்கிறது தனது தந்தை தானென்பது ஷமீராவுக்கு புரிந்துவிட்டு.
அய்யோஓஓ என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே??இந்த நேரத்தில் இவர் வேற வீட்டில் இல்லையேனு ஒருபக்கம் கவலையாக இருந்தது.
அவள் அமைதியாகவு இருக்க,வாத்தா போகலாம் என்கவும் ம்ம் என்றவளோ பயந்து கொண்டே அவர் பின்னாடியே வந்தாள்.மாடியிலிருந்து கீழே இறங்கி வரும் மகளை பார்த்து வேகமாக எழுந்து போன மகியோ பளார் பளாரென்று அவள் கன்னத்தில் அறைய அதில் நாலடி தள்ளி போய் விழுந்தாள்.
ஏங்க என்னங்க பண்றீங்களென்று செல்லத்துரையும் மற்றவர்களும் கத்த, என் பொண்ணு என்ன வேணாலும் பண்ணுவேன்,அதைக் கேட்க நீங்கெல்லாம் யாருனு மதி கேட்க, உங்க பொண்ணா இருந்த வரைக்கும் நீங்க வெட்டலாம் கொல்லலாம்.அதை நாங்க கேட்க மாட்டோம்.
ஆனால் இப்போ இந்த வீட்டு மருமகள்.என் பேரனோட பொண்டாட்டினு வீரையன் தனது மீசையை முறுக்கி கொண்டு சொல்ல,அதற்கு மகியோ என்ன விளையாட்டு காட்டுறீங்களா?
யாரு பொண்ணை யாரு உறவு கொண்டாடுவது?
நீங்கெல்லாம் மனுஷங்களா?
படிச்சவங்களா இருந்தா உங்களுக்கெல்லாம் தெரியுமென வாய்க்கு வந்தபடி கோபத்தில் பேச அதைக் கேட்டு செழியன் வீட்டினரும் பேச அந்த இடமே சண்டைக்களமானது.
அட கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள்...இப்படி மாறி சண்டை போடுவதால் என்ன ஆக போகுது?எதாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாமென்று தம்புசாமி தாத்தா தனது குரலை உயர்த்தி சொல்லவும்,இவ்வளவு நேரம் காச்சுமூச்சென்று கத்தி கொண்டிருந்தவர்கள் அவரின் சத்தத்தை கேட்டு அமைதியாகினர்...
யாரென்று தெரியாதவர்கள் தங்களை இவ்வளவு பேச்சு பேசுறார்களா இதற்கெல்லாம் மகள் தானே காரணம் என்னும் கோவம் வர,சோபாவிலிருந்து எழுந்த எஸ்தரோ,அங்கே அழுது கொண்டிருந்த மகளிடம் சென்றவர் ஏண்டி இப்படி பண்ணுன?
எல்லா அம்மாவை போல கண்டிப்போடா உன்னை வளர்த்தேன்?சொல்லு உங்க அப்பா கொடுக்காத சுதந்திரத்தை உனக்கு நான் கொடுக்கலையா?நீ கேக்குறதுக்கு முன்னாடியே உனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தேனே,அதுக்கு நீ கொடுத்த பரிசா இது??
ரோட்ல ஒருத்தி நடந்து போற நடையை வைத்தே அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு யூகிக்கிற ஆளான என்னால் வீட்டுக்குள்ள இருந்த உன்னை கணிக்க முடியலையே?
கல்யாணம் ஏற்பாடு பண்ணுற வரைக்கும் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தியேடி.இப்ப மட்டும் என்ன இவனை நம்பி ஓடி வந்து இருக்கிற?
அழுது கொண்டிருந்தவளோ தனது தாய் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்தவள் ஏம்மா நான்தான் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்?வாழ்ந்தால் நான் இவர் கூட தான் வாழ்வேன்..இவர தான் புடிச்சிருக்கு..எனக்கு கல்யாணம் ஒன்று நடந்தால் இவர் கூட தான் என்பதை ரெண்டு வருஷமா உங்க கிட்ட சொல்லவே இல்லையா?
நான் சொன்னதை காதுல வாங்கினீர்களா என்க,இத்தனை வருடங்களாக தங்கள் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாத மகளோ,இங்கு இத்தனை பேருக்கு முன்னாடி தங்களை எதிர்த்து பேசுவதை கேட்ட மகிக்கும் எஸ்தருக்கும் ஷமீராவின் மீது மேலும் ஆத்திரமும் கோவமும் அதிகமானது.
ஒத்த புள்ளைனு மார்லையும் தோளிலையும் போட்டு வளர்கள தான்..ஆனால் உன்னை கண்ணுக்குள்ள வச்சி தானே நாங்கள் வளர்த்தோம்.
நீ பிறந்ததிலிருந்து காலேஜ் படிச்சு முடிக்கிற வரைக்கும் ஒன்னு ஒன்னு பார்த்து பார்த்து செஞ்சோமே??
அதுக்காகவா இப்படி பண்ணிட்டனு அவர் பங்குக்கும் நாலு அறையை விட்டவர்,என்ன குலம் என்ன கோத்திரன்னு தெரியல,நம்ம ஊரு எங்க? இந்த ஊரு எங்க இருக்கு?
இவ்வளவு தூரம் எப்படி உனக்கு பழக்கமாச்சுடினு மேலும் நாலு அறை விட்டு கீழே கிடந்த மகளின் முடியை பிடித்து தூக்க போகும் போது தான் அவள் கழுத்தில் கிடக்கும் தாலியை பார்த்துவிட்டார்.
அய்யோ ஏசப்பாஆஆ என்று கத்தியவர் ஓஓஓ உன் இஷ்டத்துக்கு தாலி வேற கட்டிக்கிட்டியா என்றவர் ஆத்திரத்தில் என்ன பண்ணுகிறோம் என்பதை உணராமல் மகளின் கழுத்தில் இருக்கும் தாலியை அறுக்க போக,என்னம்மா பண்ணுறீங்களென்று வீட்டினரின் பதற்றமான குரலையும் தாண்டி நிறுத்துங்களென்ற செழியனின் கணீர் குரலை கேட்டு எஸ்தர் மட்டுமில்லை அங்கிருந்தவர்களும் ஒரு நிமிடம் அரண்டு தான் போனார்கள்.
வாசலில் நின்றிருந்தவனோ நாலே எட்டில் வேகமாக உள்ளே வந்தவன் அங்கிருந்த எஸ்தரை தீப்பார்வை பார்த்தவன் இவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை.
வயதில் பெரியவங்களென்று பார்க்கிறேன் இல்லை என்ன பண்ணுவேனென்று தெரியாது.என் பொண்டாட்டி கழுத்திலிருந்து முதல்ல உங்க கையை எடுங்கள் என்கவும்,நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கம்பீரமாக நிற்பவனை பார்த்த எஸ்தருக்கு ஒரு நொடி பயம் வராமல் இல்லை..
பேரனின் கோபத்தை பற்றி நன்கு தெரிந்திருந்த வீரையனோ ஐயா செத்த அமைதியாக இருயா.பொண்ணை பெத்தவங்க கோபத்தில் நாலு வார்த்தை பேச தான் செய்வாங்க.
கொஞ்சம் பொறுத்து போய்யா.அது ஒன்னும் தப்பில்லை.உன்னை விட வயசுல பெரியவங்க இல்லையா என்கவாம்,அப்புச்சி எல்லாருக்கும் முன்னாடி உங்களை எதிர்த்து பேசுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க..
நீங்க சொல்றது வாஸ்தவம் தான். கண்டிக்கட்டும் நான் வேண்டாமென்று சொல்லவில்லை.அதுக்குன்னு இவ கழுத்துல கிடக்குற தாலியா அறுக்க போறாங்களே இது நல்லாவா இருக்கு?
ஊர் உலகத்தில் எந்த தாயாவது இவங்களை போல மகளின் கழுத்தில் இருக்கும் தாலியை அறுக்க நினைப்பார்களா?என பல்லை கடித்துக் கொண்டே கேட்டான்.
செழியின் கேள்வியோ எஸ்தருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. ஆமாம் தானே எந்த தாயுமே இப்படி ஒரு செயலை ஒருபோதும் செய்ய மாட்டாளே?
என் பொண்ணை எப்படி எல்லாம் ஆசையா வளர்த்தேன்.அவள் மேல ஒரு துரும்பு பட்டாலும் துடித்து போவேனே, இதுவரை என் பொண்ணை விளையாட்டுக்கு கூட ஒரு அடி நான் அடித்ததில்லையே...
இன்று முதல்முறையா நானே என் பொண்ணை இத்தனை அடி அடித்துவிட்டேனே?அந்த அளவிற்கு நான் அரக்கியா மாறிட்டேனா?
ஆண்டவரே எனக்கு ஏன் இப்படி ஒரு கோபம் வந்தது?
யாரோ கண்ணுக்கு தெரியாத பெண் கஷ்ப்படுகிறாள் என்பதை கேள்விப்பட்டாலும் அவள் புருஷனோடு சந்தோஷமா இருக்கணும்னு தானே பிரேயர் பண்ணிப்பேன்.
இன்று நான் பெற்ற மகளின் கழுத்திலிருக்கும் தாலியை அறுக்க போயிருக்கேனே அந்த அளவுக்கு நான் கெட்டவளானு தன்னையே கடிந்து கொண்டார்.
இருந்தாலும் தனது மகளை இங்கிருந்து கூப்பிட்டு போக வேண்டும்.அவளுக்காக அங்கு ஒரு ராஜ வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கின்றது என்ற எண்ணத்தில் என் பொண்ணு மேல நான் கை வைப்பேன் அதை கேட்க நீ யாருடா என்க. .
உங்க பொண்ணு என்பது நேற்று காலையோடு முடிஞ்சு போயிடுச்சு. சட்டப்படி அவள் எனக்கு சொந்தமானவள் என்றபடி அழுது கொண்டிருந்தவளை எழுப்பி தோளோடு அணைத்தான்.
இங்க பாருங்க உங்க கூட வாக்குவாதம் பண்றதுக்காக நாங்க வரல.என் பொண்ணை எங்களோட அனுப்பி வைங்க.என் பொண்ணுக்காக நான் ஏற்கனவே மாப்பிள்ளை எல்லாம் பார்த்து முடிவு பண்ணிட்டேன்னு எஸ்தர் சொல்ல..
அட என்னங்க நீங்க...என் பையனோட பொண்டாட்டியை போய் கூப்பிட்டு போறேன்னு சொல்றீங்களே இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம் என்றவாறு வானதியும் வாயைத் திறந்தார்.
நீங்க எந்த குலம் கோத்திரம் தெரில. நாங்க கிறிஸ்டியன்.உங்களுக்கும் எங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது பந்தல் போட்டாலும் பத்தாது. இதெல்லாம் சரி வராதென்று மீண்டும் எஸ்தர் சொல்ல..
அதற்கு வானதியோ,என்னம்மா பேசுறீங்க??எல்லாரும் மனுஷன் ஜாதி தானே...எப்போ உங்க பொண்ணு வீட்டை விட்டு வந்துருச்சோ அப்பவே அந்த குலம் கோத்திரம் எல்லாம் காத்துல பறந்து விட்டதென்றார்.
நீங்க பேசுறது எந்த விதத்திலும் நியாயமா இருக்கா?தேவையில்லாம பேசாதீங்க என்று வானதியிடம் சொல்லிய எஸ்தர்,கழுத்துல கிடக்கிறதை கழட்டி போட்டு விட்டு வாடி என்றார்..
இப்பொழுது மகியோ தனது மகளை ஷமீஈஈஈ என கோபமாக கூப்பிட அவளோ முடியாதுப்பா என்று சொல்லவும் அவ்வளவு கொழுப்பு வந்திருச்சா என்று மீண்டும் மகளை அடிக்க போக இன்னொரு வாட்டி என் பொண்டாட்டி மேல கைய வைக்க வந்தீங்க மனுஷனா இருக்க மாட்டேனென்று ருத்ரமூர்த்தியாக கோபம் பொங்க செழியன் சொல்வதை கேட்டு, மகளையே இமைக்காமல் பார்க்க,தந்தையின் பார்வையில் கணவனின் பின்னால் போய் மறைந்தாள்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பரமசிவம்...ஐயா இங்கு வாங்க..
முதல்ல வந்து உட்காருங்கள் என்கவும், மகளே தங்களுக்கு எதிராக இருக்கிறாளே?முதலில் இங்கிருந்து அவளை அழைத்துக்கொண்டு போவது தான் உத்தேசம்.
அதற்கு சத்தம் போட்டால் காரியம் கெட்டுவிடும் என்கும் உண்மை புரிய எஸ்தரும் மகியும் அமைதியாக வந்து உட்கார,அந்தோணியோ தனது மருமகளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
தான் வந்ததிலிருந்து தனது மாமாவின் பார்வை தன் மேல் இருப்பதை புரிந்துகொண்டவளோ அங்கிருந்தே கையை கூப்பி மன்னிப்பு கேட்டாள்....
நீங்க எல்லாம் பெரியவங்க.உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லை.எதற்கு வார்த்தைகளை வளர்த்துக்கிட்டு இருக்கணும்.என் பொண்ணு எடுத்த முடிவில் எங்களுக்கு கொஞ்சம் கூட சம்மதமில்லை...
சொந்த பந்தங்களுக்கு முன்னாடி நாங்களும் அங்க கௌரவமா வாழணும்.இன்னும் மூணு வாரத்துல கல்யாணம் இருக்கு..
நான் முன்னாடி வண்டில போறேன்..என் பின்னாடியே வாங்களென்றவர் அங்கிருந்த தனது புல்லட்டில் ஏறி செல்ல,அவரை பாலோ பண்ணி கொண்டே சென்றனர்.
பரமசிவமோ இரண்டு தெருவை தாண்டி மூன்றாவது தெருவில் இருக்கும் அந்த பெரிய வீட்டின் முன்பு வந்து வண்டியை நிறுத்த,இவர்களும் காரை நிறுத்தி விட்டு இறங்கினர்.
வாங்களென்றவர் துரை துரை என்று குரல் கொடுக்க, பரமு மச்சான் குரல் கேட்பது போல இருக்கேயென்ற செல்லதுரை, உள்ள தான் இருக்கேன் மச்சான் வாங்க.
அவர்கள் நால்வரோடும் உள்ளே வந்தவர் அங்கே வீரையன் தம்புசாமி வானதியின் அண்ணன்கள் அன்பரசன் கனவரசனும் இருப்பதை பார்த்து இவங்க யாருன்னு தெரியுதா?என்க..
என்ன மச்சான் விளையாடுறியா?நீ கூப்பிட்டு வந்துட்டு எங்களை கேக்குறீங்கனு செல்லதுரை சொல்ல,பாப்பாவ வர சொல்லு என்றார்.
அதிலே விஷயம் புரிந்து விட்டது.மரியாதை நிமித்தமாக வணக்கம் சொல்லியவர்கள் உட்காருங்களஎன்று அங்கிருந்த மர சோபாவை காட்டி சொல்ல,வந்த ஆத்திரத்தை அடக்கி கொண்டு,முதலில் தங்களது பிள்ளையை பார்க்க வேண்டும் என்பதால் அமைதியாக உட்கார்ந்தனர்.
மகள் எங்கே இருக்கிறாளென்று தெரியாமல் கண்களை அங்கே இங்கே எஸ்தர் அலைபாய விட,அருகில் இருந்த மகளை பார்த்த தம்புசாமியோ அம்மாடி போய் கூட்டிட்டு வா என்கவும் வானதியும் அங்கிருந்த படிகள் வழியாக மாடிக்கு போய் ரூம் கதவைத் தட்ட, சில நொடியில் ஷமீராவும் கதவை திறந்தாள்.
உன்னை பார்க்க வந்திருக்காங்களென்று சொல்லவும்,என்னையா என்றவளுக்கோ பயம் வந்துவிட்டது.எங்க அப்பா அம்மா வந்திருக்காங்களா?என்கவும்,அவங்க உன்னோட அப்பா அம்மாவாயென்று எனக்கு தெரியல ஆத்தா.
ஆனால் பார்க்க ரொம்ப படிச்சவங்க போல இருக்கிறாங்க என்கவும்,வந்திருக்கிறது தனது தந்தை தானென்பது ஷமீராவுக்கு புரிந்துவிட்டு.
அய்யோஓஓ என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே??இந்த நேரத்தில் இவர் வேற வீட்டில் இல்லையேனு ஒருபக்கம் கவலையாக இருந்தது.
அவள் அமைதியாகவு இருக்க,வாத்தா போகலாம் என்கவும் ம்ம் என்றவளோ பயந்து கொண்டே அவர் பின்னாடியே வந்தாள்.மாடியிலிருந்து கீழே இறங்கி வரும் மகளை பார்த்து வேகமாக எழுந்து போன மகியோ பளார் பளாரென்று அவள் கன்னத்தில் அறைய அதில் நாலடி தள்ளி போய் விழுந்தாள்.
ஏங்க என்னங்க பண்றீங்களென்று செல்லத்துரையும் மற்றவர்களும் கத்த, என் பொண்ணு என்ன வேணாலும் பண்ணுவேன்,அதைக் கேட்க நீங்கெல்லாம் யாருனு மதி கேட்க, உங்க பொண்ணா இருந்த வரைக்கும் நீங்க வெட்டலாம் கொல்லலாம்.அதை நாங்க கேட்க மாட்டோம்.
ஆனால் இப்போ இந்த வீட்டு மருமகள்.என் பேரனோட பொண்டாட்டினு வீரையன் தனது மீசையை முறுக்கி கொண்டு சொல்ல,அதற்கு மகியோ என்ன விளையாட்டு காட்டுறீங்களா?
யாரு பொண்ணை யாரு உறவு கொண்டாடுவது?
நீங்கெல்லாம் மனுஷங்களா?
படிச்சவங்களா இருந்தா உங்களுக்கெல்லாம் தெரியுமென வாய்க்கு வந்தபடி கோபத்தில் பேச அதைக் கேட்டு செழியன் வீட்டினரும் பேச அந்த இடமே சண்டைக்களமானது.
அட கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள்...இப்படி மாறி சண்டை போடுவதால் என்ன ஆக போகுது?எதாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாமென்று தம்புசாமி தாத்தா தனது குரலை உயர்த்தி சொல்லவும்,இவ்வளவு நேரம் காச்சுமூச்சென்று கத்தி கொண்டிருந்தவர்கள் அவரின் சத்தத்தை கேட்டு அமைதியாகினர்...
யாரென்று தெரியாதவர்கள் தங்களை இவ்வளவு பேச்சு பேசுறார்களா இதற்கெல்லாம் மகள் தானே காரணம் என்னும் கோவம் வர,சோபாவிலிருந்து எழுந்த எஸ்தரோ,அங்கே அழுது கொண்டிருந்த மகளிடம் சென்றவர் ஏண்டி இப்படி பண்ணுன?
எல்லா அம்மாவை போல கண்டிப்போடா உன்னை வளர்த்தேன்?சொல்லு உங்க அப்பா கொடுக்காத சுதந்திரத்தை உனக்கு நான் கொடுக்கலையா?நீ கேக்குறதுக்கு முன்னாடியே உனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தேனே,அதுக்கு நீ கொடுத்த பரிசா இது??
ரோட்ல ஒருத்தி நடந்து போற நடையை வைத்தே அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு யூகிக்கிற ஆளான என்னால் வீட்டுக்குள்ள இருந்த உன்னை கணிக்க முடியலையே?
கல்யாணம் ஏற்பாடு பண்ணுற வரைக்கும் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தியேடி.இப்ப மட்டும் என்ன இவனை நம்பி ஓடி வந்து இருக்கிற?
அழுது கொண்டிருந்தவளோ தனது தாய் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்தவள் ஏம்மா நான்தான் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்?வாழ்ந்தால் நான் இவர் கூட தான் வாழ்வேன்..இவர தான் புடிச்சிருக்கு..எனக்கு கல்யாணம் ஒன்று நடந்தால் இவர் கூட தான் என்பதை ரெண்டு வருஷமா உங்க கிட்ட சொல்லவே இல்லையா?
நான் சொன்னதை காதுல வாங்கினீர்களா என்க,இத்தனை வருடங்களாக தங்கள் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாத மகளோ,இங்கு இத்தனை பேருக்கு முன்னாடி தங்களை எதிர்த்து பேசுவதை கேட்ட மகிக்கும் எஸ்தருக்கும் ஷமீராவின் மீது மேலும் ஆத்திரமும் கோவமும் அதிகமானது.
ஒத்த புள்ளைனு மார்லையும் தோளிலையும் போட்டு வளர்கள தான்..ஆனால் உன்னை கண்ணுக்குள்ள வச்சி தானே நாங்கள் வளர்த்தோம்.
நீ பிறந்ததிலிருந்து காலேஜ் படிச்சு முடிக்கிற வரைக்கும் ஒன்னு ஒன்னு பார்த்து பார்த்து செஞ்சோமே??
அதுக்காகவா இப்படி பண்ணிட்டனு அவர் பங்குக்கும் நாலு அறையை விட்டவர்,என்ன குலம் என்ன கோத்திரன்னு தெரியல,நம்ம ஊரு எங்க? இந்த ஊரு எங்க இருக்கு?
இவ்வளவு தூரம் எப்படி உனக்கு பழக்கமாச்சுடினு மேலும் நாலு அறை விட்டு கீழே கிடந்த மகளின் முடியை பிடித்து தூக்க போகும் போது தான் அவள் கழுத்தில் கிடக்கும் தாலியை பார்த்துவிட்டார்.
அய்யோ ஏசப்பாஆஆ என்று கத்தியவர் ஓஓஓ உன் இஷ்டத்துக்கு தாலி வேற கட்டிக்கிட்டியா என்றவர் ஆத்திரத்தில் என்ன பண்ணுகிறோம் என்பதை உணராமல் மகளின் கழுத்தில் இருக்கும் தாலியை அறுக்க போக,என்னம்மா பண்ணுறீங்களென்று வீட்டினரின் பதற்றமான குரலையும் தாண்டி நிறுத்துங்களென்ற செழியனின் கணீர் குரலை கேட்டு எஸ்தர் மட்டுமில்லை அங்கிருந்தவர்களும் ஒரு நிமிடம் அரண்டு தான் போனார்கள்.
வாசலில் நின்றிருந்தவனோ நாலே எட்டில் வேகமாக உள்ளே வந்தவன் அங்கிருந்த எஸ்தரை தீப்பார்வை பார்த்தவன் இவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை.
வயதில் பெரியவங்களென்று பார்க்கிறேன் இல்லை என்ன பண்ணுவேனென்று தெரியாது.என் பொண்டாட்டி கழுத்திலிருந்து முதல்ல உங்க கையை எடுங்கள் என்கவும்,நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கம்பீரமாக நிற்பவனை பார்த்த எஸ்தருக்கு ஒரு நொடி பயம் வராமல் இல்லை..
பேரனின் கோபத்தை பற்றி நன்கு தெரிந்திருந்த வீரையனோ ஐயா செத்த அமைதியாக இருயா.பொண்ணை பெத்தவங்க கோபத்தில் நாலு வார்த்தை பேச தான் செய்வாங்க.
கொஞ்சம் பொறுத்து போய்யா.அது ஒன்னும் தப்பில்லை.உன்னை விட வயசுல பெரியவங்க இல்லையா என்கவாம்,அப்புச்சி எல்லாருக்கும் முன்னாடி உங்களை எதிர்த்து பேசுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க..
நீங்க சொல்றது வாஸ்தவம் தான். கண்டிக்கட்டும் நான் வேண்டாமென்று சொல்லவில்லை.அதுக்குன்னு இவ கழுத்துல கிடக்குற தாலியா அறுக்க போறாங்களே இது நல்லாவா இருக்கு?
ஊர் உலகத்தில் எந்த தாயாவது இவங்களை போல மகளின் கழுத்தில் இருக்கும் தாலியை அறுக்க நினைப்பார்களா?என பல்லை கடித்துக் கொண்டே கேட்டான்.
செழியின் கேள்வியோ எஸ்தருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. ஆமாம் தானே எந்த தாயுமே இப்படி ஒரு செயலை ஒருபோதும் செய்ய மாட்டாளே?
என் பொண்ணை எப்படி எல்லாம் ஆசையா வளர்த்தேன்.அவள் மேல ஒரு துரும்பு பட்டாலும் துடித்து போவேனே, இதுவரை என் பொண்ணை விளையாட்டுக்கு கூட ஒரு அடி நான் அடித்ததில்லையே...
இன்று முதல்முறையா நானே என் பொண்ணை இத்தனை அடி அடித்துவிட்டேனே?அந்த அளவிற்கு நான் அரக்கியா மாறிட்டேனா?
ஆண்டவரே எனக்கு ஏன் இப்படி ஒரு கோபம் வந்தது?
யாரோ கண்ணுக்கு தெரியாத பெண் கஷ்ப்படுகிறாள் என்பதை கேள்விப்பட்டாலும் அவள் புருஷனோடு சந்தோஷமா இருக்கணும்னு தானே பிரேயர் பண்ணிப்பேன்.
இன்று நான் பெற்ற மகளின் கழுத்திலிருக்கும் தாலியை அறுக்க போயிருக்கேனே அந்த அளவுக்கு நான் கெட்டவளானு தன்னையே கடிந்து கொண்டார்.
இருந்தாலும் தனது மகளை இங்கிருந்து கூப்பிட்டு போக வேண்டும்.அவளுக்காக அங்கு ஒரு ராஜ வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கின்றது என்ற எண்ணத்தில் என் பொண்ணு மேல நான் கை வைப்பேன் அதை கேட்க நீ யாருடா என்க. .
உங்க பொண்ணு என்பது நேற்று காலையோடு முடிஞ்சு போயிடுச்சு. சட்டப்படி அவள் எனக்கு சொந்தமானவள் என்றபடி அழுது கொண்டிருந்தவளை எழுப்பி தோளோடு அணைத்தான்.
இங்க பாருங்க உங்க கூட வாக்குவாதம் பண்றதுக்காக நாங்க வரல.என் பொண்ணை எங்களோட அனுப்பி வைங்க.என் பொண்ணுக்காக நான் ஏற்கனவே மாப்பிள்ளை எல்லாம் பார்த்து முடிவு பண்ணிட்டேன்னு எஸ்தர் சொல்ல..
அட என்னங்க நீங்க...என் பையனோட பொண்டாட்டியை போய் கூப்பிட்டு போறேன்னு சொல்றீங்களே இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம் என்றவாறு வானதியும் வாயைத் திறந்தார்.
நீங்க எந்த குலம் கோத்திரம் தெரில. நாங்க கிறிஸ்டியன்.உங்களுக்கும் எங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது பந்தல் போட்டாலும் பத்தாது. இதெல்லாம் சரி வராதென்று மீண்டும் எஸ்தர் சொல்ல..
அதற்கு வானதியோ,என்னம்மா பேசுறீங்க??எல்லாரும் மனுஷன் ஜாதி தானே...எப்போ உங்க பொண்ணு வீட்டை விட்டு வந்துருச்சோ அப்பவே அந்த குலம் கோத்திரம் எல்லாம் காத்துல பறந்து விட்டதென்றார்.
நீங்க பேசுறது எந்த விதத்திலும் நியாயமா இருக்கா?தேவையில்லாம பேசாதீங்க என்று வானதியிடம் சொல்லிய எஸ்தர்,கழுத்துல கிடக்கிறதை கழட்டி போட்டு விட்டு வாடி என்றார்..
இப்பொழுது மகியோ தனது மகளை ஷமீஈஈஈ என கோபமாக கூப்பிட அவளோ முடியாதுப்பா என்று சொல்லவும் அவ்வளவு கொழுப்பு வந்திருச்சா என்று மீண்டும் மகளை அடிக்க போக இன்னொரு வாட்டி என் பொண்டாட்டி மேல கைய வைக்க வந்தீங்க மனுஷனா இருக்க மாட்டேனென்று ருத்ரமூர்த்தியாக கோபம் பொங்க செழியன் சொல்வதை கேட்டு, மகளையே இமைக்காமல் பார்க்க,தந்தையின் பார்வையில் கணவனின் பின்னால் போய் மறைந்தாள்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பரமசிவம்...ஐயா இங்கு வாங்க..
முதல்ல வந்து உட்காருங்கள் என்கவும், மகளே தங்களுக்கு எதிராக இருக்கிறாளே?முதலில் இங்கிருந்து அவளை அழைத்துக்கொண்டு போவது தான் உத்தேசம்.
அதற்கு சத்தம் போட்டால் காரியம் கெட்டுவிடும் என்கும் உண்மை புரிய எஸ்தரும் மகியும் அமைதியாக வந்து உட்கார,அந்தோணியோ தனது மருமகளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
தான் வந்ததிலிருந்து தனது மாமாவின் பார்வை தன் மேல் இருப்பதை புரிந்துகொண்டவளோ அங்கிருந்தே கையை கூப்பி மன்னிப்பு கேட்டாள்....
நீங்க எல்லாம் பெரியவங்க.உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லை.எதற்கு வார்த்தைகளை வளர்த்துக்கிட்டு இருக்கணும்.என் பொண்ணு எடுத்த முடிவில் எங்களுக்கு கொஞ்சம் கூட சம்மதமில்லை...
சொந்த பந்தங்களுக்கு முன்னாடி நாங்களும் அங்க கௌரவமா வாழணும்.இன்னும் மூணு வாரத்துல கல்யாணம் இருக்கு..