Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 370
- Thread Author
- #1
மகி நினைவுகள்:
"ஐயோ அம்மா..!!
"அப்படி எல்லாம் பண்ணாத மா"
தயவு செய்து அதை கீழே போடுமா என்று மகி பதற,அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் மானசாவிற்கு மாமியாரின் முழு குணத்தையும் செயல்களையும் பார்த்து கண்ணீர் வடிந்து ஓடியது.
பின்னர் ஒரு முடிவு எடுத்தவள் இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்,நீங்க ஆசைப்பட்ட போல உங்க அண்ணனோட பொண்ணை தானே கல்யாணம் பண்ணிக்கணும் தாராளமா அவர் பண்ணி பாரு போதுமா என்று கத்த...
ஏய்...!
நீ யாருடி அதை சொல்வது???
என் பையனுக்கு யாரை கல்யாணம் பண்ணி வைக்கணும் என்பதை நான் முடிவு பண்ணுவேன் டி என்று மேரி ஆங்காரமாக சொல்ல,அம்மா தயவு செய்து இப்படி பண்ணாதம்மா என்று மகி கதறினான்.
இங்க பாரு மகி என் பொண்ணோட வாழ்க்கை உன்னோட முடிவுல தான் இருக்கு.என் அண்ணன் பையன் ரொம்ப நல்லவன்.என் பொண்ணை மனசார நேசிக்கிறான்.
அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது அதை கெடுக்கிறதுக்கு நீ முயற்சி பண்ணாதே,உன் கூட பிறந்த தங்கச்சி அவ வாழ்க்கையை பற்றி முடிவு பண்ணுடா.சுயநலமா இருக்காதே என்க,தங்கையின் பாசத்தை பகடைக்காயாக மேரி மாற்ற,மகியோ இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தான்.
புகழ் நீங்க எஸ்தரை கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள் இது நம்ம வயித்துல இருக்குற குழந்தை மேல சத்தியம் என்று மகியின் கையை பிடித்து தனது வயிற்றின் மேல் வைத்துக்கொண்டு மானசா சொல்லும்போது இருவருக்குமே அழுகை வந்தது.
நீயும் ஏண்டி இப்படி என்ன கஷ்டப் படுத்துற என்று மகி அழுக,அந்த ஒரு முடிவால் நம்ம மூணு பேரும் நிம்மதியா இருக்க முடியுமென ரூமுக்குள் போய் கதவை சாற்றிக் கொண்டாள்.
மானசாவின் பதிலை கேட்டு மேரியோ மனதிற்குள் துள்ளி குதித்தார்.
கடைசி வரையில் நம்ப ராஜ்யம் நடக்கும்.இந்த விஷயத்தை ஆறப்போட கூடாது.சூட்டோட சூடு கல்யாணத்தை முடித்து விடணும் என்று மனதிற்கு நினைத்தவர் பின்னரே அருவாள்மனையை கீழே போட வேகமாய் போன மகி அதை எடுத்து ஒளிய வைத்தவர் ஏம்மா இப்படி பண்ற என்று தாயை பிடித்துக் கொண்டு அழுதார்.
மகன் அழுவது ஒரு பக்கம் வலியாக இருந்தாலும் இதில் தனது கௌரவமும் இருப்பதை நினைத்தவர் மகனின் ஆசைக்கு முன் தனது சுய கௌரவம் ரொம்ப முக்கியம் என்பதே மேரிக்கு முதலாவதாக இருந்தது.
சரி...பத்து நாள் லீவு எடுத்துட்டு நீ வா. நான் இப்படியே ஊருக்கு கிளம்புறேன் என்றவர் அதன் பின்னர் ஒரு நிமிடம் கூட அங்கு இருக்கவில்லை.பஸ்ஸை பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தார்.
இரண்டு நாட்கள் வரை மானசாவும் மகியும் எந்த வார்த்தையும் பேசிக்கவில்லை.குழந்தையின் மேல் சத்தியம் பண்ணியதை மறுத்தால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று அவனின் மனதை மாற்றியவள் தங்கையின் திருமணத்திற்காக ஊருக்கு அனுப்பி வைத்தாள்.
மனமே இல்லாமல் சோழனூருக்கு வந்த மகி கல்யாண விஷயத்தை பார்க்கலானான்.
ஊருக்கு வந்த மறுநாளே தனது கணவரோடு கிளம்பிய மேரியோ பூம்புகாரில் இருக்கும் தனது பிறந்து விட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
அவளின் அண்ணன் பெஞ்சமின் ஊர் கணக்கு பிள்ளை அவரின் மனைவியோ ஜென்சி.அவர்களுக்கு எஸ்தர் அந்தோணி என்று இரண்டு பிள்ளைகள். விவசாய குடும்பம் என்றாலும் தூரத்தில் உறவின் மூலமாக ஆபிரகாமின் சம்பந்தம் வரவும் சாராளை கட்டிக் கொடுத்தனர்.
"சாராளுக்கோ தலைகணம் அதிகமானது".
தன் புருஷன் கவர்மெண்ட் வேலையில் இருப்பதாகவும் சொத்து பத்து உள்ள வீட்டில் மூத்த மருமகளாக போனதை நினைத்து கர்வத்துடன் வலம் வர இது ஜென்சிக்கு சிறிதும் பிடிக்காமல் போய்விட்டது
எஸ்தர் பருவமானதிலிருந்து தனது மகனுக்கு தான் பொண்ணை கொடுக்கணும் என்று பெஞ்சமினிடம் சாராள் சொல்லும் போதெல்லாம் ஜென்சிக்கு அதைக் கேட்க எட்டிக்காயை போல் கசந்தது.
நாத்தனார் இருக்கும் வரை எதுவும் சொல்லாதவர் அவர் போன பிறகு கணவனிடம் கடிந்து கொள்ளுவார்.எந்த காரணத்தை கொண்டும் என் பொண்ணை உன் தங்கச்சிக்கு கொடுக்க மாட்டேன் என்று சண்டை போடுவார் ..
அண்ணியின் குணத்தை ஓரளவு கணித்த மேரியோ காயை எஸ்தரிடம் நகர்த்த ஆரம்பித்தாள்.
அந்தோணியும் படித்து முடித்து கவர்மெண்ட் வேலைக்கு முயல,உணவு நுகர்பொருள் அலுவலகத்தில் வேலை கிடைக்க முதல் போஸ்டிங்கோ சோழனூரில் கிடைக்கவும் அங்கு ஜென்சியின் தங்கை சாரதான்சி இருப்பதால் அவர் வீட்டில் தங்கி கொண்டு மகனை வேலைக்கு போக சொல்ல...
பருவ வயதில் இருந்த ராணிக்கு அந்தோணியின் அடக்கமான குணமும் பெரியவர்களை மதிக்கம் பாங்கும் நிதானமான பேச்சும் மிகவும் பிடித்து விட தனது தாய் மாமன் மகன் மேல் ஆசையை வளர்த்தவள் அதை அவரிடமும் வெளிப்படையாக சொல்ல அத்தை மகள் என்ற எண்ணத்தில் ராணியையும் அந்தோணிக்கும் பிடித்து விட்டது.
கல்யாணம் என்று வரும்போது அந்தோணியை காதலிப்பதை சொல்ல, ஏற்கனவே அண்ணன் மகனுக்கு தான் பொண்ணு கொடுக்க நினைத்து இருந்ததால் இந்த விஷயம் மேரிக்கும் சம்மதமானது.
பின்னர் அந்தோணியிடமே எஸ்தரை மகிக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் வீட்டில் பேசி சம்மதம் வாங்கினால் மட்டுமே ராணியை கல்யாணம் பண்ணிக்க தான் சம்மதிப்பதாக மேரி குண்டை தூக்கிப்போட,காதல் மயக்கத்தில் இருந்த அந்தோணியும் அதற்கு சரி என்று தலையாட்டி விட்டான்.
மதுரை:
அந்த பெரிய வீட்டின் முன்னிருந்த தோட்டத்தில் அங்கங்கே கட்சிக்காரர்கள் நின்று பேசிக் கொண்டிருக்க இரண்டு மூன்றென கார்களும் ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தது.
என்ன நடக்க போகுதுனு இங்க இருக்கிறவங்களுக்கு ஒன்னும் தெரியாது என்று கான்ஸ்டபிள் கண்ணப்பன் சொல்ல,நல்லது.
இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன ஆட்டம் ஆடுவார்களோ பாக்கலாம் என்று செழியன் சொல்ல,அதை கேட்ட கான்ஸ்டபிள் இருவரும் சத்தம் இல்லாமல் வாயை மூடி சிரித்துக்கொண்டே அவனின் பின்னாடியே சென்றார்கள்.
மினிஸ்டர் வீடு என்பதால் போலீஸ் வந்துட்டு போவது என்றும் சாதாரண விஷயம் தானே என்று அவர்கள் எல்லாம் இருக்க நேராக வீட்டிற்குள் போக, அமைச்சர் ஆடியபாதமோ பூஜை அறையில் இருப்பது மணி சத்தத்தின் மூலமாக தெரிந்தது.
செய்வதெல்லாம் கேப்மாரி தனம்.இவனுக்கு பூஜை ஒன்னு தான் கேடு என்று மூவரும் மனதிற்குள் நினைத்துக் கொள்ள வீட்டில் இருந்தவர்களோ போலீஸ் வந்ததை பார்த்து வேலை விஷயமாக ஏதாவது இருக்கும் என்று நினைத்து விட்டு, பூஜையறையில் இருக்காங்க கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க என்று ஆடியபாதத்தின் பி ஏ சொல்ல செழியனோ அவனை ஒரு பார்வை பார்க்கவும் அமைதியாக சற்று தள்ளிப் போய் நின்று கொண்டான்.
நிதானமாக பூஜையை முடித்துவிட்டு நெற்றியில் மிகப்பெரிய பட்டையோடு வெளியே வந்த ஆடியபாதமோ அங்கே ஹாலில் இருந்த செழியனையும் இரண்டு கான்ஸ்டபிள்ஸையும் பார்த்தவர் மூவரும் புதிதாக இருக்கவும் எந்த ஸ்டேஷன்ல இருக்கீங்க?
"பார்த்ததே இல்லையே"
புதுசா நம்ப ஊருக்கு எஸ் பி வந்துருக்கிறானா?நமக்கு தெரியாம எப்படி வர முடியும் என்று யோசனையோடு அங்கு வந்தவர் வாங்க சார் டீ காபி குடிப்பீங்களா என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்து சோபாவில் உட்காரும் போது அவரைப் பார்த்த செழியனோ பக்கத்திலிருந்த கான்ஸ்டபிள் கண்ணப்பனை பார்க்க சரிங்க சார் என்றவர் தன்னிடம் இருந்த லெட்டரை செழியனின் முன்பு நீட்டினார்.
அதை வாங்கியவன் மிஸ்டர் ஆடியபாதம் உங்களுக்கான அரஸ்ட் வாரண்ட் என்க,இது என்னப்பா ஜோக் என்று சிரித்துக் கொண்டிருந்த ஆடியபாதத்தை பார்த்தவன் நீங்களா வந்திங்கனாக்க நல்லது.
நானே அழைத்திட்டு போனால் அது நல்லா இருக்குமா நல்லா இருக்காதா என்று நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்கும் செழியனின் குரலில் உள்ள உறுதியோ இவன் அடிச்சு இழுத்துட்டு போவான் என்பதை ஆடியபாதத்துக்கு சொல்ல,அந்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியோ ஒரு நொடி அவனின் கம்பீரத்தை பார்த்து அரண்டு தான் போனான்.
என்ன சார்?
யார் நீங்க?
இஷ்டத்துக்கு வந்து பேசிட்டு இருக்கீங்களே என்று பிஏவும் வீட்டில் இருந்தவர்களும் தாம் தூமென்று குதிக்க,இங்கிலீஷ் படிக்க தெரியுமா என்று ஆடியபாதத்தின் பிஏவிடம் கேட்க,ஐ ஆம் கோல்ட் மெடல் லிஸ்ட் என்றவரிடம் லெட்டரை கொடுத்து செழியன் படிக்க சொன்னான்.
அதை வாங்கி அவசர அவசரமாக பிரித்து படித்தவனோ விழி பிதுங்கிப் போய் நிற்க,யோவ் என்ன பேய் முழி முழிக்கிற என்று எம்.பி கத்த,சார் டில்லியில் இருந்து உங்களை அரெஸ்ட் பண்ண வாரண்ட் அனுப்பிருக்காங்க என்கவும்,என்னாஆஆ டில்லியில் இருந்தா என்று ஆடியபாதம் அதிர்ந்தான்.
அண்ணா எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க என்று செழியன் கேட்க வாங்க சார் என்று ஆடியபாதத்தை கூப்பிட,என்னோட வக்கீல் கிட்ட நான் பேசணும் என்றான்.
அதை எல்லாம் நீங்க ஸ்டேஷன்ல வந்து பேசிக்குங்க இப்போ நீங்களே வந்தால் நல்லது என்று குரலை உயர்த்த,பேச்சு சத்தம் கேட்டு வெளியே நின்ற கட்சி ஆட்கள் எல்லாம் வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.
ஐயா என்னங்கய்யா நடக்குது?என்றவாறு உள்ளே வந்த அடியாளில் ஒருத்தனோ செழியனை பார்த்து என்ன இன்ஸ்,ஊருக்கு புதுசா?
உனக்கு தான் மாமுல் ஒழுங்கா வந்து சேருமே,பிறகு எதுக்கு தேவை இல்லாம இங்க வந்து டிராமா பண்ணிட்டு இருக்க?
உன்ன போல எத்தனை பேரை நாங்க பார்த்து இருப்போம் என்று சொல்லிக் கொண்டே தனது சட்டை காலரை பிடிக்க வந்தவனை பார்த்தவன், கண்ணிமைக்கும் நொடிக்குள் இரண்டு அறையை விட,வாங்கிய அறையில் அவனின் கடவாய் பல் உடைந்து வாயிலிருந்து ரத்தம் வந்தது.
அதைப் பார்த்து மற்றவர்களுக்கும் பயம் வந்தாலும் போலிஸ் அராஜகம் ஒழிக ஒழிக என்று கோஷம் எழுப்ப,தனது சுண்டு விரலால் காதை குடைந்தவனோ மிஸ்டர் ஆடியபாதம் கடைசியா சொல்றேன்.
அமைதியா நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது.இல்லையென்றால்?
கூட்டத்தினரை பார்த்தவன் அமைதியா இருங்க..இது எதிர்க்கட்சி செய்த சதி தான் என்று சொல்லிய ஆடியபாதம் போகலாம் என்று அவர்களோடு வந்தவன்,எந்த கேஸ்ல நம்மை அரஸ்ட் பண்றான்னு ஒன்னும் புரியலையே என்ற யோசனையோடு ஜீப்பில் போய் உட்கார்ந்தான்.
"ஐயோ அம்மா..!!
"அப்படி எல்லாம் பண்ணாத மா"
தயவு செய்து அதை கீழே போடுமா என்று மகி பதற,அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் மானசாவிற்கு மாமியாரின் முழு குணத்தையும் செயல்களையும் பார்த்து கண்ணீர் வடிந்து ஓடியது.
பின்னர் ஒரு முடிவு எடுத்தவள் இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்,நீங்க ஆசைப்பட்ட போல உங்க அண்ணனோட பொண்ணை தானே கல்யாணம் பண்ணிக்கணும் தாராளமா அவர் பண்ணி பாரு போதுமா என்று கத்த...
ஏய்...!
நீ யாருடி அதை சொல்வது???
என் பையனுக்கு யாரை கல்யாணம் பண்ணி வைக்கணும் என்பதை நான் முடிவு பண்ணுவேன் டி என்று மேரி ஆங்காரமாக சொல்ல,அம்மா தயவு செய்து இப்படி பண்ணாதம்மா என்று மகி கதறினான்.
இங்க பாரு மகி என் பொண்ணோட வாழ்க்கை உன்னோட முடிவுல தான் இருக்கு.என் அண்ணன் பையன் ரொம்ப நல்லவன்.என் பொண்ணை மனசார நேசிக்கிறான்.
அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது அதை கெடுக்கிறதுக்கு நீ முயற்சி பண்ணாதே,உன் கூட பிறந்த தங்கச்சி அவ வாழ்க்கையை பற்றி முடிவு பண்ணுடா.சுயநலமா இருக்காதே என்க,தங்கையின் பாசத்தை பகடைக்காயாக மேரி மாற்ற,மகியோ இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தான்.
புகழ் நீங்க எஸ்தரை கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள் இது நம்ம வயித்துல இருக்குற குழந்தை மேல சத்தியம் என்று மகியின் கையை பிடித்து தனது வயிற்றின் மேல் வைத்துக்கொண்டு மானசா சொல்லும்போது இருவருக்குமே அழுகை வந்தது.
நீயும் ஏண்டி இப்படி என்ன கஷ்டப் படுத்துற என்று மகி அழுக,அந்த ஒரு முடிவால் நம்ம மூணு பேரும் நிம்மதியா இருக்க முடியுமென ரூமுக்குள் போய் கதவை சாற்றிக் கொண்டாள்.
மானசாவின் பதிலை கேட்டு மேரியோ மனதிற்குள் துள்ளி குதித்தார்.
கடைசி வரையில் நம்ப ராஜ்யம் நடக்கும்.இந்த விஷயத்தை ஆறப்போட கூடாது.சூட்டோட சூடு கல்யாணத்தை முடித்து விடணும் என்று மனதிற்கு நினைத்தவர் பின்னரே அருவாள்மனையை கீழே போட வேகமாய் போன மகி அதை எடுத்து ஒளிய வைத்தவர் ஏம்மா இப்படி பண்ற என்று தாயை பிடித்துக் கொண்டு அழுதார்.
மகன் அழுவது ஒரு பக்கம் வலியாக இருந்தாலும் இதில் தனது கௌரவமும் இருப்பதை நினைத்தவர் மகனின் ஆசைக்கு முன் தனது சுய கௌரவம் ரொம்ப முக்கியம் என்பதே மேரிக்கு முதலாவதாக இருந்தது.
சரி...பத்து நாள் லீவு எடுத்துட்டு நீ வா. நான் இப்படியே ஊருக்கு கிளம்புறேன் என்றவர் அதன் பின்னர் ஒரு நிமிடம் கூட அங்கு இருக்கவில்லை.பஸ்ஸை பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தார்.
இரண்டு நாட்கள் வரை மானசாவும் மகியும் எந்த வார்த்தையும் பேசிக்கவில்லை.குழந்தையின் மேல் சத்தியம் பண்ணியதை மறுத்தால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று அவனின் மனதை மாற்றியவள் தங்கையின் திருமணத்திற்காக ஊருக்கு அனுப்பி வைத்தாள்.
மனமே இல்லாமல் சோழனூருக்கு வந்த மகி கல்யாண விஷயத்தை பார்க்கலானான்.
ஊருக்கு வந்த மறுநாளே தனது கணவரோடு கிளம்பிய மேரியோ பூம்புகாரில் இருக்கும் தனது பிறந்து விட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
அவளின் அண்ணன் பெஞ்சமின் ஊர் கணக்கு பிள்ளை அவரின் மனைவியோ ஜென்சி.அவர்களுக்கு எஸ்தர் அந்தோணி என்று இரண்டு பிள்ளைகள். விவசாய குடும்பம் என்றாலும் தூரத்தில் உறவின் மூலமாக ஆபிரகாமின் சம்பந்தம் வரவும் சாராளை கட்டிக் கொடுத்தனர்.
"சாராளுக்கோ தலைகணம் அதிகமானது".
தன் புருஷன் கவர்மெண்ட் வேலையில் இருப்பதாகவும் சொத்து பத்து உள்ள வீட்டில் மூத்த மருமகளாக போனதை நினைத்து கர்வத்துடன் வலம் வர இது ஜென்சிக்கு சிறிதும் பிடிக்காமல் போய்விட்டது
எஸ்தர் பருவமானதிலிருந்து தனது மகனுக்கு தான் பொண்ணை கொடுக்கணும் என்று பெஞ்சமினிடம் சாராள் சொல்லும் போதெல்லாம் ஜென்சிக்கு அதைக் கேட்க எட்டிக்காயை போல் கசந்தது.
நாத்தனார் இருக்கும் வரை எதுவும் சொல்லாதவர் அவர் போன பிறகு கணவனிடம் கடிந்து கொள்ளுவார்.எந்த காரணத்தை கொண்டும் என் பொண்ணை உன் தங்கச்சிக்கு கொடுக்க மாட்டேன் என்று சண்டை போடுவார் ..
அண்ணியின் குணத்தை ஓரளவு கணித்த மேரியோ காயை எஸ்தரிடம் நகர்த்த ஆரம்பித்தாள்.
அந்தோணியும் படித்து முடித்து கவர்மெண்ட் வேலைக்கு முயல,உணவு நுகர்பொருள் அலுவலகத்தில் வேலை கிடைக்க முதல் போஸ்டிங்கோ சோழனூரில் கிடைக்கவும் அங்கு ஜென்சியின் தங்கை சாரதான்சி இருப்பதால் அவர் வீட்டில் தங்கி கொண்டு மகனை வேலைக்கு போக சொல்ல...
பருவ வயதில் இருந்த ராணிக்கு அந்தோணியின் அடக்கமான குணமும் பெரியவர்களை மதிக்கம் பாங்கும் நிதானமான பேச்சும் மிகவும் பிடித்து விட தனது தாய் மாமன் மகன் மேல் ஆசையை வளர்த்தவள் அதை அவரிடமும் வெளிப்படையாக சொல்ல அத்தை மகள் என்ற எண்ணத்தில் ராணியையும் அந்தோணிக்கும் பிடித்து விட்டது.
கல்யாணம் என்று வரும்போது அந்தோணியை காதலிப்பதை சொல்ல, ஏற்கனவே அண்ணன் மகனுக்கு தான் பொண்ணு கொடுக்க நினைத்து இருந்ததால் இந்த விஷயம் மேரிக்கும் சம்மதமானது.
பின்னர் அந்தோணியிடமே எஸ்தரை மகிக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் வீட்டில் பேசி சம்மதம் வாங்கினால் மட்டுமே ராணியை கல்யாணம் பண்ணிக்க தான் சம்மதிப்பதாக மேரி குண்டை தூக்கிப்போட,காதல் மயக்கத்தில் இருந்த அந்தோணியும் அதற்கு சரி என்று தலையாட்டி விட்டான்.
மதுரை:
அந்த பெரிய வீட்டின் முன்னிருந்த தோட்டத்தில் அங்கங்கே கட்சிக்காரர்கள் நின்று பேசிக் கொண்டிருக்க இரண்டு மூன்றென கார்களும் ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தது.
என்ன நடக்க போகுதுனு இங்க இருக்கிறவங்களுக்கு ஒன்னும் தெரியாது என்று கான்ஸ்டபிள் கண்ணப்பன் சொல்ல,நல்லது.
இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன ஆட்டம் ஆடுவார்களோ பாக்கலாம் என்று செழியன் சொல்ல,அதை கேட்ட கான்ஸ்டபிள் இருவரும் சத்தம் இல்லாமல் வாயை மூடி சிரித்துக்கொண்டே அவனின் பின்னாடியே சென்றார்கள்.
மினிஸ்டர் வீடு என்பதால் போலீஸ் வந்துட்டு போவது என்றும் சாதாரண விஷயம் தானே என்று அவர்கள் எல்லாம் இருக்க நேராக வீட்டிற்குள் போக, அமைச்சர் ஆடியபாதமோ பூஜை அறையில் இருப்பது மணி சத்தத்தின் மூலமாக தெரிந்தது.
செய்வதெல்லாம் கேப்மாரி தனம்.இவனுக்கு பூஜை ஒன்னு தான் கேடு என்று மூவரும் மனதிற்குள் நினைத்துக் கொள்ள வீட்டில் இருந்தவர்களோ போலீஸ் வந்ததை பார்த்து வேலை விஷயமாக ஏதாவது இருக்கும் என்று நினைத்து விட்டு, பூஜையறையில் இருக்காங்க கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க என்று ஆடியபாதத்தின் பி ஏ சொல்ல செழியனோ அவனை ஒரு பார்வை பார்க்கவும் அமைதியாக சற்று தள்ளிப் போய் நின்று கொண்டான்.
நிதானமாக பூஜையை முடித்துவிட்டு நெற்றியில் மிகப்பெரிய பட்டையோடு வெளியே வந்த ஆடியபாதமோ அங்கே ஹாலில் இருந்த செழியனையும் இரண்டு கான்ஸ்டபிள்ஸையும் பார்த்தவர் மூவரும் புதிதாக இருக்கவும் எந்த ஸ்டேஷன்ல இருக்கீங்க?
"பார்த்ததே இல்லையே"
புதுசா நம்ப ஊருக்கு எஸ் பி வந்துருக்கிறானா?நமக்கு தெரியாம எப்படி வர முடியும் என்று யோசனையோடு அங்கு வந்தவர் வாங்க சார் டீ காபி குடிப்பீங்களா என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்து சோபாவில் உட்காரும் போது அவரைப் பார்த்த செழியனோ பக்கத்திலிருந்த கான்ஸ்டபிள் கண்ணப்பனை பார்க்க சரிங்க சார் என்றவர் தன்னிடம் இருந்த லெட்டரை செழியனின் முன்பு நீட்டினார்.
அதை வாங்கியவன் மிஸ்டர் ஆடியபாதம் உங்களுக்கான அரஸ்ட் வாரண்ட் என்க,இது என்னப்பா ஜோக் என்று சிரித்துக் கொண்டிருந்த ஆடியபாதத்தை பார்த்தவன் நீங்களா வந்திங்கனாக்க நல்லது.
நானே அழைத்திட்டு போனால் அது நல்லா இருக்குமா நல்லா இருக்காதா என்று நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்கும் செழியனின் குரலில் உள்ள உறுதியோ இவன் அடிச்சு இழுத்துட்டு போவான் என்பதை ஆடியபாதத்துக்கு சொல்ல,அந்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியோ ஒரு நொடி அவனின் கம்பீரத்தை பார்த்து அரண்டு தான் போனான்.
என்ன சார்?
யார் நீங்க?
இஷ்டத்துக்கு வந்து பேசிட்டு இருக்கீங்களே என்று பிஏவும் வீட்டில் இருந்தவர்களும் தாம் தூமென்று குதிக்க,இங்கிலீஷ் படிக்க தெரியுமா என்று ஆடியபாதத்தின் பிஏவிடம் கேட்க,ஐ ஆம் கோல்ட் மெடல் லிஸ்ட் என்றவரிடம் லெட்டரை கொடுத்து செழியன் படிக்க சொன்னான்.
அதை வாங்கி அவசர அவசரமாக பிரித்து படித்தவனோ விழி பிதுங்கிப் போய் நிற்க,யோவ் என்ன பேய் முழி முழிக்கிற என்று எம்.பி கத்த,சார் டில்லியில் இருந்து உங்களை அரெஸ்ட் பண்ண வாரண்ட் அனுப்பிருக்காங்க என்கவும்,என்னாஆஆ டில்லியில் இருந்தா என்று ஆடியபாதம் அதிர்ந்தான்.
அண்ணா எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க என்று செழியன் கேட்க வாங்க சார் என்று ஆடியபாதத்தை கூப்பிட,என்னோட வக்கீல் கிட்ட நான் பேசணும் என்றான்.
அதை எல்லாம் நீங்க ஸ்டேஷன்ல வந்து பேசிக்குங்க இப்போ நீங்களே வந்தால் நல்லது என்று குரலை உயர்த்த,பேச்சு சத்தம் கேட்டு வெளியே நின்ற கட்சி ஆட்கள் எல்லாம் வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.
ஐயா என்னங்கய்யா நடக்குது?என்றவாறு உள்ளே வந்த அடியாளில் ஒருத்தனோ செழியனை பார்த்து என்ன இன்ஸ்,ஊருக்கு புதுசா?
உனக்கு தான் மாமுல் ஒழுங்கா வந்து சேருமே,பிறகு எதுக்கு தேவை இல்லாம இங்க வந்து டிராமா பண்ணிட்டு இருக்க?
உன்ன போல எத்தனை பேரை நாங்க பார்த்து இருப்போம் என்று சொல்லிக் கொண்டே தனது சட்டை காலரை பிடிக்க வந்தவனை பார்த்தவன், கண்ணிமைக்கும் நொடிக்குள் இரண்டு அறையை விட,வாங்கிய அறையில் அவனின் கடவாய் பல் உடைந்து வாயிலிருந்து ரத்தம் வந்தது.
அதைப் பார்த்து மற்றவர்களுக்கும் பயம் வந்தாலும் போலிஸ் அராஜகம் ஒழிக ஒழிக என்று கோஷம் எழுப்ப,தனது சுண்டு விரலால் காதை குடைந்தவனோ மிஸ்டர் ஆடியபாதம் கடைசியா சொல்றேன்.
அமைதியா நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது.இல்லையென்றால்?
கூட்டத்தினரை பார்த்தவன் அமைதியா இருங்க..இது எதிர்க்கட்சி செய்த சதி தான் என்று சொல்லிய ஆடியபாதம் போகலாம் என்று அவர்களோடு வந்தவன்,எந்த கேஸ்ல நம்மை அரஸ்ட் பண்றான்னு ஒன்னும் புரியலையே என்ற யோசனையோடு ஜீப்பில் போய் உட்கார்ந்தான்.