Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 370
- Thread Author
- #1
மகி நினைவுகள்:
முதல் மகள் இறந்த துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் மனைவியையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கு இருப்பதால் தனது துக்கத்தை மறைத்துக் கொண்ட மகி,மானசாவின் முன் தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டார்.
இரண்டு நாட்கள் அந்த மருத்துவமனையில் இருந்த மகி ஒரு மாதம் மெடிக்கல் லீவ் இருவருக்கும் எழுதி கொடுக்க மேலிடத்திற்கு அவர்கள் சூழ்நிலை பற்றி தெரிந்ததால் உடனே லீவும் கிடைத்தது.
கையோடு சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்க அதற்கு சம்மதித்து அடுத்த மாதத்தில் இருந்து சென்னையில் இருக்கும் ஆஃபீஸில் ஜாயின் பண்ண சொல்லி அவரின் மேல் அதிகாரியிடம் இருந்து மெயில் வந்திருந்தது.
பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தான்.ஏற்கனவே அவர்களை சென்னையில் தங்க வைக்க வேண்டும் என்னும் பிளான் இருந்ததால் இந்த ஐந்து வருட சம்பளத்தில் சேர்த்து வைத்த பணத்தில் ஒரு வீட்டையும் சென்னையில் வாங்கியிருக்க அந்த வீட்டிற்கு வந்து குடியேறினார்கள்.
மானசாவிற்கு பெற்ற பொண்ணோடு தாய் தகப்பன் இறந்ததும் பெரிய இழப்பு என்பதால் அதிலிருந்து தேறி வரவே வெகு நாட்கள் ஆனது.
வயிற்றில் நம்ப குழந்தை வளர்கிறதே அதை நினைத்து பாருடி என்று மகி ஒரு நாள் கடுமையாக சொல்ல நிதர்சனத்தை புரிந்து கொண்டவர் பின்னர் குடும்பத்தை கவனிக்கலானார்.
நாட்களும் கடந்து வாரங்களை தாண்டி மாதங்களும் ஓடியது.மானசாவிற்கு எட்டாவது மாதம் நடந்து கொண்டிருக்க,ஒரு நாள் வீட்டின் ஹாலின் பெல் சத்தம் கேட்டது.
மகி மார்க்கெட்டுக்கு சென்றிருக்க மானசா மட்டும் வீட்டில் இருந்தாள். கணவர் தான் வந்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டு கதவை திறக்க, அங்கே மதியின் அம்மா சாராள் மேரி நின்று கொண்டிருந்தார்.
திடீரென்று மாமியார் வந்திருப்பதை எதிர்பார்க்காத மானசாவோ அதிர்ந்து நிற்க,மேரியோ வீட்டில் வேலை செய்யும் பெண் என்று நினைத்துக் கொண்டு என்னம்மா இப்படி வழியில் நிற்கிறாய் என்கவும் அதில் சுதாரித்து வழியை விட்டவள் வாங்க அத்தை என்று சொல்ல வர பின்னர் வாயை மூடிக்கொண்டாள்.
உள்ளே வந்தவர் அங்கிருந்த சேரில் உட்கார்ந்துகொண்டு மகி இல்லையா என்கவும்,அவங்க டவுனுக்கு போயிருக்காங்க என்று சொல்லும்போது கதவு திறந்து இருந்ததால்,வீட்டுக்குள் வந்த மகியோ அங்கிருந்த தனது அம்மாவை பார்த்து அதிர்ந்து போய் கையிலிருந்த பையை கீழே போட, அதிலிருந்த காய்கறிகள் எல்லாம் சிதறி ஓடியது.
வனிச்சூர்:
கணவனின் அணைப்பிலிருந்து பொறுமையாக எழுந்து ரெஷ்ட் ரூமிற்கு போனவள் குளித்து வெளியே வந்து வேறு உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்தவள் வழக்கம் போல வீட்டை கூட்டி விட்டு பூஜையறையில் விளக்கேற்றியவள் காலை டிபனை செய்வதற்காக கிச்சனிற்குள் சென்றாள்.
வெற்றியையும் கபிலனையும் வாங்கப்பு என்றவர்,நல்லாருக்கீங்களா என்று விசாரிக்க அவர்கள் இருவரும் நலம் நலம் என்க,அந்த பேச்சு சத்தத்தில் பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜனனியும் ரியாவும் தூக்கம் கலைந்தவர்கள் கதவை திறந்து வெளியே வந்து செல்லதுரையிடம் நலம் விசாரித்தனர்.
ரியாவின் மகன் தூக்கத்தில் இருக்க ஜனனியின் மகனோ தூக்கம் கலைந்து எழுந்து வந்தவன் தாத்தா என்று செல்லதுரையை கட்டிக் கொண்டான்.குழந்தையை தூக்கி முத்தமிட்டவர் நல்லாருக்கிறியா சாமி என்கவும்,நல்லாருக்கேன் தாத்தா.நீங்க எப்படி இருக்கீங்க?
தாத்தாக்கு என்ன கண்ணு என்று சிரித்தவர் உள்ள வாங்கப்பாயென்று அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் போனவர் வானதி யார் வந்திருக்காங்க பாரு என்று மனைவிக்கு குரல் கொடுக்க,பூஜை அறையில் இருந்த வானதியோ சாமியை வணங்கி விட்டு ஹாலுக்கு வந்தவர் அவர்களை பார்த்து சந்தோஷத்தில் அதிர்ந்து போனார்.
கபி வெற்றி ஜனனி ரியாஆஆஆ...ஒரு வார்த்தை கூட வரேன்னு சொல்லவே இல்லையே என்க,மாமாவுக்கு தான் தெரியுமே அத்தை என்று வெற்றி சொல்லவும் கணவரை பார்த்து வானதி முறைக்க உனக்கு அதிர்ச்சி வைத்தியமா இருக்கட்டும்னு தான் சொல்லவில்லை.
பாட்டிகிட்ட வாங்க என்கவும் செல்லதுரையிடமிருந்து கீழே இறங்கியவன் பாட்டி என்று வானதியிடம் போக நல்லாருக்கியா கண்ணா என்று குழந்தையின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தார்.
அம்மாடி சமிராஆஆ,கிச்சனில் இருந்தவளோ மாமியாரின் குரல் கேட்டு அடுப்பை சிம்மில் போட்டுவிட்டு ஹாலுக்கு வந்தாள்.
இதுதான் நம்ம செழியன் பொண்டாட்டினு அறிமுகப்படுத்த வெற்றியும் கண்ணனும் அவளை போட்டோவில் பார்த்திருக்கிறார்கள். ஜனனி ரியாவும் கேள்விப் பட்டிருக்கிறார்களே தவிர பார்த்ததில்லை என்பதால் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
ரியா காபி குடிக்கும்,மிச்ச மூணு பேருக்கு டீ போட்டு எடுத்துட்டு வா மா என்று மருமகளிடம் வானதி சொல்ல சரிங்கத்தை என்றவள் உள்ளே போய் வேக வேகமாக டீயும் காபியும் போட்டு எடுத்துட்டு வந்து கொடுக்க,எங்கத்தை உன் மகனுக்கு இன்னும் விடியலையா என்று வெற்றி கேட்கவும்,அவன் தூங்குறதால இப்ப நாடு என்ன நஷ்டமாயிடுச்சானு கபிலன் முறைத்தான்.
அதான,உடன்பிறப்பை சொன்ன உடனே உனக்கு ரோசம் பொத்துகிட்டு வந்துருமே என்றவன் டீ குடித்துக்கொண்டே தற்செயலாக வலது பக்கம் திரும்பியவன் அங்கே சுவற்றில் சாய்த்து வைத்திருக்கும் போட்டோவை பார்த்து கபி என்று கத்தினான்.
வெற்றியின் பார்வை சென்ற திசையில் திரும்பிய கபிலனும் போட்டோவை பார்த்து டேய் இவங்களானு அதிர, செல்லதுரையோ எதுக்கு இவங்க ரெண்டு பேரும் இப்படி அதிர்ச்சியாகுறாங்களென்று அவரும் பார்க்க,அங்கே நேற்று அமாவாசைக்கு படைப்பதற்காக தனது வீட்டில் இறந்து போனவர்கள் போட்டோவை எடுத்து கீழே வைத்திருப்பதை பார்த்தவர் இதை பார்த்து எதற்கு பா அதிர்ச்சியென்றார்.
அவர் குரலில் சுதாரித்த வெற்றியோ உடனே தனது போனை எடுத்தவன் அவன் அம்மாவிற்கு கால் பண்ணினான்.
கபியை தவிர மற்றவர்கள் அவன் செயலை என்னவென்று யோசனையோடு பார்க்க,இரண்டே ரிங்கில் அந்த பக்கம் அட்டென்ட் பண்ணிய வசுந்தரா என்ன வெற்றி வனிச்சூருக்கு போயிட்டீங்களா என்கவும்,அம்மா என்று வெற்றி பல்லை கடிக்க போனை துரை அண்ணன் கிட்ட குடு என்றார்.
அம்மா என்று மீண்டும் வெற்றி கூப்பிட, வெற்றி..துரை அண்ணா கிட்ட போன குடுன்னு சொல்லிட்டேன் என்று கண்டன குரலில் வசுந்தரா சொல்லவும், தனது தாயைப் பற்றி தெரிந்ததால் அங்கிருந்த செல்லதுரையிடம் மாமா..அம்மா தான் லைன்ல இருக்காங்களென்றான்.
குடுப்பா என்று வாங்கியவர் நல்லா இருக்கிறியா டா? மூர்த்தி மாப்பிள்ளை எப்படி இருக்கு? வேலையெல்லாம் எப்படி போகுது என்று நலம் விசாரிக்க நல்லா இருக்கேன் ணா.நீங்க அண்ணி செழியன்,ஷமீரா எல்லாரும் நல்லா இருக்கீங்களா என்று வசுவும் கேட்க,எல்லாரும் நல்லா இருக்காங்க மா.
ஏன் டா அண்ணா வீட்டுக்கு வரவே கூடாது என்று முடிவில் இருக்கிறியா என்கவும்,அப்படி எல்லாம் இல்லை ணா.என் வேலை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே என்க செல்லதுரையோ புரியுது புரியுது என்றார்.
அப்புறம் ணா ஒரு முக்கியமான விஷயம் என்று வசு தயங்க,சொல்லு டா என்ன பிரச்சனை சொல்லு அண்ணன் இருக்கிறேன்.உனக்கு எதுக்கு தயக்கம் என்ன பண்ணனும் சொல்லு என்கவும்,உங்க மருமகன் ஒரு விஷயத்தை சொல்லுவான் ணா.
அதைக் கேட்டுட்டு உங்கள் மனசுக்கு என்ன தோணுது அதன்படி முடிவு எடுங்கள் என்கவும் சரிடா வசு.நீ சொன்னா அது சரியா தான் இருக்கும் என்றவர் வெற்றி கிட்ட கொடுக்கட்டுமா என்கவும் குடுங்க ணா என்றார்.
இந்தா வெற்றி என போனை கொடுக்க ஏம்மா எல்லாம் தெரிஞ்சி தான் அனுப்புனீங்களா?என்க...காரணம் இல்லாமல் உன் அம்மா எந்த செயலும் செய்ய மாட்டார் என்று உனக்கு புரியவில்லையா வெற்றி என்று வசந்தரா அந்த பக்கம் இருந்து கேட்க, நான் இப்படி ஒரு பக்கத்தை சுதாரிக்கலைமா என்றான்.
போலீஸ்காரனாய் இருக்கும் உன்னிடம் இப்படி ஒரு அசட்டை தனமான பதில் என்னைக்கும் வரவே கூடாது.இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும். செழியனுக்கு விஷயம் தெரியும் என்கவும் சாரி மா என்றான்.
ஓகே...சரி வெக்கேஷனை நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்களென்று வசு சொல்ல,பல்லை கடித்தவன் பிளான் பண்ணி அனுப்பிவிட்டு இதில் பெருசா பத்து நாள் லீவு கொடுத்த போல உனக்கு பெருமையாம்மா?
ஹா ஹா என்று சிரித்த வசுந்தரவோ என்னோட டார்லிங் போன் பண்றாரு நீ கட் பண்ணுடா என்றார்.ஓஓஓ அப்பாவா என்கவும் ஆமாம் என்று சொன்னவர் கணவர் சுந்தரமூர்த்தியிடம் இருந்து வந்த காலை அட்டென்ட் பண்ணி கான்ப்ரன்ஸில் போட,தாரா டார்லிங் எப்படி இருக்கீங்க???
இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லப்பா என்று வெற்றி சொல்ல,கண்ணா நீ எப்படி??வேலை எப்படி போகுதென்று மகனிடம் விசாரிக்க,எல்லாம் உங்க பொண்டாட்டி பிளான் பண்ணி தான் எங்களை துரத்தி விட்டுருக்காங்க.
இது எதுவுமே தெரியாத போல நடிக்காதீங்கப்பா என்றான்.
டேய் உங்க வேலை விஷயத்துல நான் என்னைக்குமே தலையிட மாட்டேன் புரியுதா,உன்னோட மேலதிகாரி என்ன சொல்றாரோ அதை நீ கேட்டுதான் ஆகணும் என்க,முதல்ல நீங்க ரெண்டு பேரும் எனக்கு அப்பா அம்மா பிறகு தான் வேலை என்றான்.
சரி சரி இப்போ உன் கூட வாதம் பண்ண எனக்கு நேரமில்லை.என் டார்லிங் கூட என்னை பேச விடுடா.ரெண்டு நாளா போனே பண்ணலை.நீ கட் பண்ணு என்கவும் பேரப்பிள்ளைகள் தூக்கின வயசுல உங்க ரெண்டு பேருக்கும் ரொமான்ஸ் ஒன்னு தான் கேடா என்றான்.
பொறாமைப் படாதடா வைடா என்க சரி வைக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கட் பண்ணினான்.
சரிப்பா எல்லாரும் குளிச்சிட்டு வாங்க காலை சாப்பாடு சாப்பிடலாம் என்று வானதி சொல்ல,ஆமாத்தை நைட் எல்லாம் டிராவல் பண்ணிட்டு வந்தது ரொம்ப பசிக்குது.
சீக்கிரம் சோத்த போடு என்று வெற்றி சொல்லவும்,ஏத்தா என்ன பண்ணிருக்க என்று மருமகளிடம் கேட்க,பூரிக்கு மாவு பிசைஞ்சிருக்கேன்.மசாலாக்கு உருளைக்கிழங்கு வேக வச்சிருக்கேன் அத்தை என்கவும் அப்படியா ரொம்ப நல்லது.
"வெற்றிக்கு பூரி பிடிக்கும்"
உன் அண்ணன் கபிலனுக்கு தோசை தான் பிடிக்கும்.வெற்றி போல கபி அவ்வளவு சீக்கிரம் வாயை திறக்காது மா.பார்த்து பக்குவமாக செய் என்கவும் சரிங்க அத்தை என்றாள்.
அம்மா நீங்க தம்பிய புடிங்க நானும் ஷமீரா கூட போய் வேலை பாக்குறேன் என்று ஜனனி சொல்ல,இருக்கட்டும் கா நான் பார்க்கிறேன் என்று சொல்லவும் நம்முடைய வீடு டா,அதான் அண்ணி இருக்கேன் இல்லையா நீ ஏன் கவலைப்படுகிறாய் என்றவள் ஷமீராவோடு கிச்சனிற்குள் போக, ரியாவும் தோளில் தூங்கிய குழந்தையை உள்ளே போய் பெட்டில் கடத்தி விட்டு அவர்களோடு போய் இணைந்து கொண்டாள்.
முதல் மகள் இறந்த துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் மனைவியையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கு இருப்பதால் தனது துக்கத்தை மறைத்துக் கொண்ட மகி,மானசாவின் முன் தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டார்.
இரண்டு நாட்கள் அந்த மருத்துவமனையில் இருந்த மகி ஒரு மாதம் மெடிக்கல் லீவ் இருவருக்கும் எழுதி கொடுக்க மேலிடத்திற்கு அவர்கள் சூழ்நிலை பற்றி தெரிந்ததால் உடனே லீவும் கிடைத்தது.
கையோடு சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்க அதற்கு சம்மதித்து அடுத்த மாதத்தில் இருந்து சென்னையில் இருக்கும் ஆஃபீஸில் ஜாயின் பண்ண சொல்லி அவரின் மேல் அதிகாரியிடம் இருந்து மெயில் வந்திருந்தது.
பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தான்.ஏற்கனவே அவர்களை சென்னையில் தங்க வைக்க வேண்டும் என்னும் பிளான் இருந்ததால் இந்த ஐந்து வருட சம்பளத்தில் சேர்த்து வைத்த பணத்தில் ஒரு வீட்டையும் சென்னையில் வாங்கியிருக்க அந்த வீட்டிற்கு வந்து குடியேறினார்கள்.
மானசாவிற்கு பெற்ற பொண்ணோடு தாய் தகப்பன் இறந்ததும் பெரிய இழப்பு என்பதால் அதிலிருந்து தேறி வரவே வெகு நாட்கள் ஆனது.
வயிற்றில் நம்ப குழந்தை வளர்கிறதே அதை நினைத்து பாருடி என்று மகி ஒரு நாள் கடுமையாக சொல்ல நிதர்சனத்தை புரிந்து கொண்டவர் பின்னர் குடும்பத்தை கவனிக்கலானார்.
நாட்களும் கடந்து வாரங்களை தாண்டி மாதங்களும் ஓடியது.மானசாவிற்கு எட்டாவது மாதம் நடந்து கொண்டிருக்க,ஒரு நாள் வீட்டின் ஹாலின் பெல் சத்தம் கேட்டது.
மகி மார்க்கெட்டுக்கு சென்றிருக்க மானசா மட்டும் வீட்டில் இருந்தாள். கணவர் தான் வந்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டு கதவை திறக்க, அங்கே மதியின் அம்மா சாராள் மேரி நின்று கொண்டிருந்தார்.
திடீரென்று மாமியார் வந்திருப்பதை எதிர்பார்க்காத மானசாவோ அதிர்ந்து நிற்க,மேரியோ வீட்டில் வேலை செய்யும் பெண் என்று நினைத்துக் கொண்டு என்னம்மா இப்படி வழியில் நிற்கிறாய் என்கவும் அதில் சுதாரித்து வழியை விட்டவள் வாங்க அத்தை என்று சொல்ல வர பின்னர் வாயை மூடிக்கொண்டாள்.
உள்ளே வந்தவர் அங்கிருந்த சேரில் உட்கார்ந்துகொண்டு மகி இல்லையா என்கவும்,அவங்க டவுனுக்கு போயிருக்காங்க என்று சொல்லும்போது கதவு திறந்து இருந்ததால்,வீட்டுக்குள் வந்த மகியோ அங்கிருந்த தனது அம்மாவை பார்த்து அதிர்ந்து போய் கையிலிருந்த பையை கீழே போட, அதிலிருந்த காய்கறிகள் எல்லாம் சிதறி ஓடியது.
வனிச்சூர்:
கணவனின் அணைப்பிலிருந்து பொறுமையாக எழுந்து ரெஷ்ட் ரூமிற்கு போனவள் குளித்து வெளியே வந்து வேறு உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்தவள் வழக்கம் போல வீட்டை கூட்டி விட்டு பூஜையறையில் விளக்கேற்றியவள் காலை டிபனை செய்வதற்காக கிச்சனிற்குள் சென்றாள்.
வெற்றியையும் கபிலனையும் வாங்கப்பு என்றவர்,நல்லாருக்கீங்களா என்று விசாரிக்க அவர்கள் இருவரும் நலம் நலம் என்க,அந்த பேச்சு சத்தத்தில் பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜனனியும் ரியாவும் தூக்கம் கலைந்தவர்கள் கதவை திறந்து வெளியே வந்து செல்லதுரையிடம் நலம் விசாரித்தனர்.
ரியாவின் மகன் தூக்கத்தில் இருக்க ஜனனியின் மகனோ தூக்கம் கலைந்து எழுந்து வந்தவன் தாத்தா என்று செல்லதுரையை கட்டிக் கொண்டான்.குழந்தையை தூக்கி முத்தமிட்டவர் நல்லாருக்கிறியா சாமி என்கவும்,நல்லாருக்கேன் தாத்தா.நீங்க எப்படி இருக்கீங்க?
தாத்தாக்கு என்ன கண்ணு என்று சிரித்தவர் உள்ள வாங்கப்பாயென்று அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் போனவர் வானதி யார் வந்திருக்காங்க பாரு என்று மனைவிக்கு குரல் கொடுக்க,பூஜை அறையில் இருந்த வானதியோ சாமியை வணங்கி விட்டு ஹாலுக்கு வந்தவர் அவர்களை பார்த்து சந்தோஷத்தில் அதிர்ந்து போனார்.
கபி வெற்றி ஜனனி ரியாஆஆஆ...ஒரு வார்த்தை கூட வரேன்னு சொல்லவே இல்லையே என்க,மாமாவுக்கு தான் தெரியுமே அத்தை என்று வெற்றி சொல்லவும் கணவரை பார்த்து வானதி முறைக்க உனக்கு அதிர்ச்சி வைத்தியமா இருக்கட்டும்னு தான் சொல்லவில்லை.
பாட்டிகிட்ட வாங்க என்கவும் செல்லதுரையிடமிருந்து கீழே இறங்கியவன் பாட்டி என்று வானதியிடம் போக நல்லாருக்கியா கண்ணா என்று குழந்தையின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தார்.
அம்மாடி சமிராஆஆ,கிச்சனில் இருந்தவளோ மாமியாரின் குரல் கேட்டு அடுப்பை சிம்மில் போட்டுவிட்டு ஹாலுக்கு வந்தாள்.
இதுதான் நம்ம செழியன் பொண்டாட்டினு அறிமுகப்படுத்த வெற்றியும் கண்ணனும் அவளை போட்டோவில் பார்த்திருக்கிறார்கள். ஜனனி ரியாவும் கேள்விப் பட்டிருக்கிறார்களே தவிர பார்த்ததில்லை என்பதால் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
ரியா காபி குடிக்கும்,மிச்ச மூணு பேருக்கு டீ போட்டு எடுத்துட்டு வா மா என்று மருமகளிடம் வானதி சொல்ல சரிங்கத்தை என்றவள் உள்ளே போய் வேக வேகமாக டீயும் காபியும் போட்டு எடுத்துட்டு வந்து கொடுக்க,எங்கத்தை உன் மகனுக்கு இன்னும் விடியலையா என்று வெற்றி கேட்கவும்,அவன் தூங்குறதால இப்ப நாடு என்ன நஷ்டமாயிடுச்சானு கபிலன் முறைத்தான்.
அதான,உடன்பிறப்பை சொன்ன உடனே உனக்கு ரோசம் பொத்துகிட்டு வந்துருமே என்றவன் டீ குடித்துக்கொண்டே தற்செயலாக வலது பக்கம் திரும்பியவன் அங்கே சுவற்றில் சாய்த்து வைத்திருக்கும் போட்டோவை பார்த்து கபி என்று கத்தினான்.
வெற்றியின் பார்வை சென்ற திசையில் திரும்பிய கபிலனும் போட்டோவை பார்த்து டேய் இவங்களானு அதிர, செல்லதுரையோ எதுக்கு இவங்க ரெண்டு பேரும் இப்படி அதிர்ச்சியாகுறாங்களென்று அவரும் பார்க்க,அங்கே நேற்று அமாவாசைக்கு படைப்பதற்காக தனது வீட்டில் இறந்து போனவர்கள் போட்டோவை எடுத்து கீழே வைத்திருப்பதை பார்த்தவர் இதை பார்த்து எதற்கு பா அதிர்ச்சியென்றார்.
அவர் குரலில் சுதாரித்த வெற்றியோ உடனே தனது போனை எடுத்தவன் அவன் அம்மாவிற்கு கால் பண்ணினான்.
கபியை தவிர மற்றவர்கள் அவன் செயலை என்னவென்று யோசனையோடு பார்க்க,இரண்டே ரிங்கில் அந்த பக்கம் அட்டென்ட் பண்ணிய வசுந்தரா என்ன வெற்றி வனிச்சூருக்கு போயிட்டீங்களா என்கவும்,அம்மா என்று வெற்றி பல்லை கடிக்க போனை துரை அண்ணன் கிட்ட குடு என்றார்.
அம்மா என்று மீண்டும் வெற்றி கூப்பிட, வெற்றி..துரை அண்ணா கிட்ட போன குடுன்னு சொல்லிட்டேன் என்று கண்டன குரலில் வசுந்தரா சொல்லவும், தனது தாயைப் பற்றி தெரிந்ததால் அங்கிருந்த செல்லதுரையிடம் மாமா..அம்மா தான் லைன்ல இருக்காங்களென்றான்.
குடுப்பா என்று வாங்கியவர் நல்லா இருக்கிறியா டா? மூர்த்தி மாப்பிள்ளை எப்படி இருக்கு? வேலையெல்லாம் எப்படி போகுது என்று நலம் விசாரிக்க நல்லா இருக்கேன் ணா.நீங்க அண்ணி செழியன்,ஷமீரா எல்லாரும் நல்லா இருக்கீங்களா என்று வசுவும் கேட்க,எல்லாரும் நல்லா இருக்காங்க மா.
ஏன் டா அண்ணா வீட்டுக்கு வரவே கூடாது என்று முடிவில் இருக்கிறியா என்கவும்,அப்படி எல்லாம் இல்லை ணா.என் வேலை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே என்க செல்லதுரையோ புரியுது புரியுது என்றார்.
அப்புறம் ணா ஒரு முக்கியமான விஷயம் என்று வசு தயங்க,சொல்லு டா என்ன பிரச்சனை சொல்லு அண்ணன் இருக்கிறேன்.உனக்கு எதுக்கு தயக்கம் என்ன பண்ணனும் சொல்லு என்கவும்,உங்க மருமகன் ஒரு விஷயத்தை சொல்லுவான் ணா.
அதைக் கேட்டுட்டு உங்கள் மனசுக்கு என்ன தோணுது அதன்படி முடிவு எடுங்கள் என்கவும் சரிடா வசு.நீ சொன்னா அது சரியா தான் இருக்கும் என்றவர் வெற்றி கிட்ட கொடுக்கட்டுமா என்கவும் குடுங்க ணா என்றார்.
இந்தா வெற்றி என போனை கொடுக்க ஏம்மா எல்லாம் தெரிஞ்சி தான் அனுப்புனீங்களா?என்க...காரணம் இல்லாமல் உன் அம்மா எந்த செயலும் செய்ய மாட்டார் என்று உனக்கு புரியவில்லையா வெற்றி என்று வசந்தரா அந்த பக்கம் இருந்து கேட்க, நான் இப்படி ஒரு பக்கத்தை சுதாரிக்கலைமா என்றான்.
போலீஸ்காரனாய் இருக்கும் உன்னிடம் இப்படி ஒரு அசட்டை தனமான பதில் என்னைக்கும் வரவே கூடாது.இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும். செழியனுக்கு விஷயம் தெரியும் என்கவும் சாரி மா என்றான்.
ஓகே...சரி வெக்கேஷனை நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்களென்று வசு சொல்ல,பல்லை கடித்தவன் பிளான் பண்ணி அனுப்பிவிட்டு இதில் பெருசா பத்து நாள் லீவு கொடுத்த போல உனக்கு பெருமையாம்மா?
ஹா ஹா என்று சிரித்த வசுந்தரவோ என்னோட டார்லிங் போன் பண்றாரு நீ கட் பண்ணுடா என்றார்.ஓஓஓ அப்பாவா என்கவும் ஆமாம் என்று சொன்னவர் கணவர் சுந்தரமூர்த்தியிடம் இருந்து வந்த காலை அட்டென்ட் பண்ணி கான்ப்ரன்ஸில் போட,தாரா டார்லிங் எப்படி இருக்கீங்க???
இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லப்பா என்று வெற்றி சொல்ல,கண்ணா நீ எப்படி??வேலை எப்படி போகுதென்று மகனிடம் விசாரிக்க,எல்லாம் உங்க பொண்டாட்டி பிளான் பண்ணி தான் எங்களை துரத்தி விட்டுருக்காங்க.
இது எதுவுமே தெரியாத போல நடிக்காதீங்கப்பா என்றான்.
டேய் உங்க வேலை விஷயத்துல நான் என்னைக்குமே தலையிட மாட்டேன் புரியுதா,உன்னோட மேலதிகாரி என்ன சொல்றாரோ அதை நீ கேட்டுதான் ஆகணும் என்க,முதல்ல நீங்க ரெண்டு பேரும் எனக்கு அப்பா அம்மா பிறகு தான் வேலை என்றான்.
சரி சரி இப்போ உன் கூட வாதம் பண்ண எனக்கு நேரமில்லை.என் டார்லிங் கூட என்னை பேச விடுடா.ரெண்டு நாளா போனே பண்ணலை.நீ கட் பண்ணு என்கவும் பேரப்பிள்ளைகள் தூக்கின வயசுல உங்க ரெண்டு பேருக்கும் ரொமான்ஸ் ஒன்னு தான் கேடா என்றான்.
பொறாமைப் படாதடா வைடா என்க சரி வைக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கட் பண்ணினான்.
சரிப்பா எல்லாரும் குளிச்சிட்டு வாங்க காலை சாப்பாடு சாப்பிடலாம் என்று வானதி சொல்ல,ஆமாத்தை நைட் எல்லாம் டிராவல் பண்ணிட்டு வந்தது ரொம்ப பசிக்குது.
சீக்கிரம் சோத்த போடு என்று வெற்றி சொல்லவும்,ஏத்தா என்ன பண்ணிருக்க என்று மருமகளிடம் கேட்க,பூரிக்கு மாவு பிசைஞ்சிருக்கேன்.மசாலாக்கு உருளைக்கிழங்கு வேக வச்சிருக்கேன் அத்தை என்கவும் அப்படியா ரொம்ப நல்லது.
"வெற்றிக்கு பூரி பிடிக்கும்"
உன் அண்ணன் கபிலனுக்கு தோசை தான் பிடிக்கும்.வெற்றி போல கபி அவ்வளவு சீக்கிரம் வாயை திறக்காது மா.பார்த்து பக்குவமாக செய் என்கவும் சரிங்க அத்தை என்றாள்.
அம்மா நீங்க தம்பிய புடிங்க நானும் ஷமீரா கூட போய் வேலை பாக்குறேன் என்று ஜனனி சொல்ல,இருக்கட்டும் கா நான் பார்க்கிறேன் என்று சொல்லவும் நம்முடைய வீடு டா,அதான் அண்ணி இருக்கேன் இல்லையா நீ ஏன் கவலைப்படுகிறாய் என்றவள் ஷமீராவோடு கிச்சனிற்குள் போக, ரியாவும் தோளில் தூங்கிய குழந்தையை உள்ளே போய் பெட்டில் கடத்தி விட்டு அவர்களோடு போய் இணைந்து கொண்டாள்.