Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 360
- Thread Author
- #1
டெல்லி- சிபிஐ அலுவலகம்:
மகனின் முகத்தைப் பார்த்தவர் நீங்க கேட்டுக் கொண்ட போல டென் டேஸ் லீவ் எடுத்துக்கொள்ள பர்மிஷன் தருகிறேன் என்று வசுந்தரா சொல்ல,அது போதாது மா.இன்னும் ஒன் வீக் சேர்த்து கொடுங்கள் என்றான்.
நோ,அதற்கு வாய்ப்பில்லை வெற்றி என்கவும்,வேற வழி நீங்க சொன்னதை கேட்டு தானே ஆகணும் என்று பல்லை கடித்தவன்,தேங்க்யூ மேடம் என்று சொல்லிக்கொண்டு சல்யூட் அடித்து விட்டு அங்கிருந்து வெளியே செல்ல, கபிலோனோ அவரை பாவமாக பார்க்க அதான் உங்க தல போகுதே நீங்களும் போக வேண்டியது தானே என்று சிரித்தார்...
ஆன்ட்டி என்ற கபிலனை பார்த்தவர் கல்யாணம் ஆகி குழந்தை பெத்தவனுங்க போல நடந்துக்கோங்க. ரெண்டு பேரும் சின்ன பயலுகளை விட ரொம்ப மோசமா இருக்கிறீங்க என்றார்.
கபிலனும் வெற்றியும் வெளியே போன பிறகு மீண்டும் அந்த பைலை எடுத்து படித்து பார்த்தவர்,மிஸ்டர் அமர்நாத் இந்த முறை எங்ககிட்ட இருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது.
என்னோடு மூணு சிங்கங்களும் வருது என்ன பண்றன்னு நானும் பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தனது வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
வெற்றியும் கபிலனும் ஆபீஸிலிருந்து தங்களது கார் நிற்கும் இடத்திற்கு வந்தனர்.டேய் அந்த நாய்க்கு போனை போடு என்று சொல்லிக் கொண்டே டிரைவர் சீட்டில் வெற்றி உட்கார,ஏன் உன் போன்ல பண்ணினால் டச் தேஞ்சு போயிடுமா என்று கபிலன் கேட்கவும், விளங்காத பயலே...
உன் தங்கச்சி டிஸ்ப்ளேவை உடைத்து விட்டாள் பாருடா என்று தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்துக்காட்ட,அதை பார்த்த கபிலனுக்கு சிரிப்பு வந்துவிட்டது...
ஏண்டா நான் என்ன சோக்கா சொல்லிட்டு இருக்கேன் நீ பல்லை காட்டிட்டு இருக்க என்று முறைக்க,அது வந்து மச்சி வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமென்று முன்னோர்கள் சொல்லிருக்காங்க டா அதான் என்றான்.
நான் கொலைவெறியில் இருக்கேன் பார்த்துக்கோ என்றவாறு காரை ஸ்டார் பண்ணிய வெற்றி அங்கிருந்து அவர்கள் வீட்டை நோக்கி சென்றான்.
கபிலனும் நண்பனுக்கு கால் பண்ண அந்த பக்கம் அட்டென் பண்ணியவன் என்ன டா?
என்னமோ காதலிக்கு போன் பண்ற போல ஓயாமல் போன் போடுற என்கவும் ஸ்பீக்கரில் இருந்ததால் இதைக் கேட்ட வெற்றியோ செருப்பு பிஞ்சிடுமென்க ஆத்தாடி விருமாண்டி என்று அந்த பக்கமிருந்த நண்பன் சொல்ல கபிலனோ இதைக் கேட்டு சத்தமாக சிரித்தான்.
வாய மூடுடா என்றவன் ஏய் வெலங்காத முண்டம் 10 நாள் லீவ்.நாங்கள் ஊருக்கு வரோம் என்க,அப்படியா என்று அந்த பக்கம் உள்ளவன் அதிர ஆமா ஆமா....
இந்த மேடம் அந்த அமர்நாத் கேஸை சீக்கிரம் முடிக்க சொல்லுறாங்கள். கண்டிப்பாக நீ வந்தே ஆகணுமென்கவும்,என்ன டா விளையாடுறீங்களா?
வீட்டுக்கு தெரிந்தால் என்ன ஆவது?
நாலு இல்லை 5 நாள் என்றால் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.அதை விட்டு உன் பாட்டுக்கு ஒரு மாதம் சொன்னா அவ்வளவு தான் என்று அந்த பக்கமிருந்த நண்பன் அலற...
சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அது உன்பாடு...தங்கச்சி கால்ல விழுவியோ இல்லை செருப்படி வாங்குவியோ எனக்கு தெரியாது.கேஸ் பற்றி நாளைக்கு நேரில் வந்து பேசுறேன் பாய் என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
வனிச்சூர்:
வண்டியை எடுத்துக்கொண்டு தனது பாட்டி வீட்டுக்கு வந்த செழியன் அத்தை கண்ணன் இருக்கானா என்க,மேல தான் படுத்துருக்கான் என்று புவனா சொல்ல, விடிஞ்சி இவ்ளோ நேரம் ஆகுது எருமை மாடு இன்னும் தூங்குது என்று படியிலேறியவனிடம் டீ பா என்கவும்,வீட்டில் குடிச்சிட்டு வந்தேன்.
அவனுக்கு டீ போட்டு குடுங்க நான் எடுத்துட்டு போறேன் என்று பாதி படியில் ஏறியவன் கீழே இறங்கி வந்து சோபாவில் உட்கார,தோட்டத்திலிருந்து வந்த தம்புசாமி தாத்தா அங்கிருந்த பேரனை பார்த்தவர் என்ன ஒரு எருமை மாடு இங்க இருக்கு இன்னொரு எருமை மாட்டை காணும் என்கவும்..
பெரிய எருமை மாடு தான் சொல்லணும் என்க,என்னடா வாய்க்குள்ளே முணவுற என்றவாறு பேரனுக்கு எதிரில் இருந்த சோபாவில் வந்து உட்கார்ந்தவர் அப்பு என்க,சொல்லு தாத்தா என்றான்.
ஏன் அப்பு நம்ம மலரை சின்ன கழுதைக்கு பார்த்தா என்னவென்று கேட்க,நானும் அதான் நினைச்சுகிட்டு இருந்தேன்.அதுக்குள்ள மாமா தான் அந்த பாத்திர கடைகாரன் பொண்ணை பேசிட்டு வந்து சேதி சொன்னாரே என்பவனுக்கு,அதுதான் இல்லன்னு ஆயிடுச்சு. .
"நம்ப புள்ளை"
ஒன்னுக்குள்ள ஒன்னு.சொந்த பந்தம் விட்டு போகாது இல்லையா என்றார்.நல்ல விஷயம் தான் தாத்தா.சித்தப்பாவும் மலருக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு தான் இருக்கு.
அதுக்கு முன்னாடி நம்ம கேட்டு வைப்பது நல்லது தானென்க,அந்த பயல பற்றி உனக்கு தெரியும்.உன் மாமனுங்க போல இந்த தடிமாடும் எந்த புள்ளையாவது மனசுல நினைச்சிருக்கா என்னன்னு தெரிஞ்சுக்கறதுக்காக தான் உன்கிட்ட கேக்குறேன் யா..
இல்ல தாத்தா.அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.மலரை தாராளமா பேசி முடிங்க என்று செழியன் சொல்லவும்,பேரனின் வார்த்தைகளில் இருக்கும் உறுதியை கேட்ட தம்புசாமி தாத்தாவுக்கு சின்னவனாவது நம்ம பார்க்கும் பொண்ணை கட்டபோறனே என்று பெருமையாக இருந்தது.
அப்ப இன்னைக்கு அம்மாவாசை நாளைக்கு பாட்டி முகம்.வர்ற புதன்கிழமை அன்னைக்கு பொண்ணு கேக்க போகலாமா என்று தாத்தா யோசனையோடு கேட்க அதுல என்ன தயக்கம்.
பஸ் புடிச்சா போக போற?பக்கத்து தெருவுல தானே சித்தப்பா வீடு இருக்கு போக வேண்டியது தானே என்றான்.
ஆனால் மலருக்கு இந்த காட்டான் பயலை புடிக்கணுமே அது தான் முக்கியம்.என் தங்கச்சி பச்ச புள்ள என்கவும்,ஏன்டா சின்னவனுக்கு என்ன குறைச்சல் என்று தம்புசாமி தாத்தா கேட்க,அப்படி சொல்லலை.என் தங்கச்சி அப்பாவி,உன் பேரனுக்கு ஏழு ஊர் வாய் அதுக்கு சொன்னேன் என்று சிரித்தான்.
படவா ராஸ்கல் என்றவர் ஏ சுமதி இன்னுமா சிங்காரிக்கிற என்று மனைவிக்கு குரல் கொடுக்க வந்துட்டேன் வந்துட்டேன் என்றார்.
பக்கத்து தெருவுல இருக்க அப்பன் வீட்டிற்கு போவதற்கு உன் பாட்டி சீவி சிங்காரிச்சுக்கிட்டு தான் வருவாளோ என்கவும்,அதுக்குனு தலையை விரிச்சு போட்டுக்கிட்டா போக முடியும் என்றவாறு அங்கு வந்து சுமதி பாட்டி முறைக்க..
புவனாவோ டீயோடு வந்தவர் மாமனாருக்கு ஒன்றை கொடுத்துவிட்டு கண்ணனுக்கு ஒன்னு எடுத்துப் போக,நான் போறேன் என்று அவரிடம் வாங்கிக் கொண்டு படியில் ஏறி மேலே போனவன் கதவை திறந்து பார்க்க அங்கே கண்ணனோ பெட்டில் குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்.
அங்கிருந்த டேபிள் மேல் டீயை வைத்த செழியன் ஒன் டூ த்ரீ என்று சொல்லிக் கொண்டு கட்டில் மேல் படுத்திருக்கும் கண்ணன் மேல் ஜம்ப் பண்ண தூங்கிக் கொண்டிருந்தவனோ கொலை கொலை என்று கத்தினான்.
நான் தான் மாப்பி என்று செழியன் சொல்ல,தடிப்பயலே இறங்கி தொலடா எருமை மாடு.எப்ப பார்த்தாலும் மெத்தை மேல வந்து பாயிற போல விழுறது.
எந்திரிடா நாயே என்று கண்ணன் திட்ட நீ என்னை அப்புறம் கொஞ்சிக்க ஒரு முக்கியமான விஷயம் என்று ஏதோ ரகசியமாக கண்ணனிடம் சொல்ல, படுத்திருந்தவனோ அதைக் கேட்டு பதறி அடித்து எழுந்து உட்கார்ந்து என்னடா சொல்ற என்கவும்,ஆமாடா இப்ப என்ன பண்றதுன்னு எனக்கே ஒன்னும் புரியலை டா...
"ஏதாவது வழி இருந்தால் சொல்லு மச்சி" தயவு செய்து நீ தாண்டா என்ன காப்பாத்தணும் என்றான்.
நான் தான் அப்பவே சொன்னனே இதெல்லாம் நமக்கு வேண்டாம்னு.எங்க நாயே நீ கேட்ட என்கவும்,என்னடா இப்ப வந்து இப்படி சொல்ற என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு செழியன் சொல்ல...
"செருப்பால நாலு அடி வேணாலும் அடிச்சுக்க இப்படி பாவமா முகத்தை வைக்காத" சத்தியமா என்னால பாக்கவே முடியலை,காரி துப்பனு போல இருக்கு என்று சொல்லிக் கொண்டு எழுந்தவன் கைலியை அவிழ்து உதறி கட்டிவிட்டு ரெஸ்ட் ரூமுக்குள் சென்று பிரஷ் ஆகி வெளியே வர அவனுக்கு முன்பு டீயை நீட்டினான்.
என்னடா புது பொண்டாட்டி போல பெட் டீ கொடுக்க வந்திருக்க என்று பல்லை கடித்துக் கொண்டே அத்தை மகன் கையில் இருந்து டீயை வாங்கி குடித்தவனும் என்ன பண்ணலாம் என்று யோசனையானான்.
சரி மச்சி வழக்கம் போல தெம்பா சாப்பிடுவோம்.அப்பதான் நமக்கு ஏதாவது ஐடியா கிடைக்கும் என்று கண்ணன் சொல்ல,இதுதான் சரியான பாயிண்ட் மச்சி.
சரி வா போகலாம் என்கவும் இரு டா குளிச்சிட்டு வாரேன்னு சொல்ல,சரி சரி என்ன பண்ணலாம்னு நான் யோசிக்கிறேன்.நீ போய் குளிச்சிட்டு வா என்று சொல்லியவன் அங்கிருந்த டிவியை ஆன் பண்ணி பெட்டில் படுத்துக் கொண்டான்.
கண்ணனும் ரெஸ்ட் ரூமிற்குள் சென்று குளித்து வெளியே வந்தவன் தயாராகி வாடா என்க,பின்னர் இருவரும் கீழே வந்தனர்.
சுமதியோ மாங்காயை வத்தல் போடுவதற்காக அரிந்து கொண்டிருக்க அதில் இருவரும் ஆளுக்கு ஒரு துண்டை எடுத்து வாயில் வைத்துக் கொள்ள,ரெண்டு தடிமாடும் மாசமா இருக்குங்க..இப்பதான் மாங்காய் திங்க நிக்குது என்று தோட்டத்து பக்கமாக உட்கார்ந்து இருந்த தம்புசாமி தாத்தா சொல்ல,இந்த நம்பியார் கிழவனுக்கு மட்டும் நாம என்ன பண்ணுனாலும் குத்தமா தெரியுதுடா என்றவாறு செழியன் பல்லை கடித்தான்.
விடு விடு நம்ம தாத்தா தானே பாத்துக்கலாம் என்று சொல்லிக்கொண்டு இருவரும் அங்கிருந்து வண்டியில் ஏறி செழியன் வீட்டிற்கு வந்தனர்.
ஷமீராவிற்கு இந்த அமாவாசை விரதம் எல்லாம் எப்படி செய்யணும் என்று தெரியாததால் கூடமாட உதவி செய்து கொண்டிருக்க கண்மணியும் வானதியும் சமையல் வேலையை பார்த்தார்கள்.பொரியலையாவது நான் செய்கிறேன் என்று ஷமீரா கேட்க சரி என்றனர்.
கவிதாவோ முன்னோர்கள் போட்டோக்களை எடுத்து துடைத்து பொட்டு வைத்தவள் பூஜைக்கு வாங்கிய பூக்களை அதன் மேல் மாலையாக வைத்து படையலுக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தாள்.
மகனின் முகத்தைப் பார்த்தவர் நீங்க கேட்டுக் கொண்ட போல டென் டேஸ் லீவ் எடுத்துக்கொள்ள பர்மிஷன் தருகிறேன் என்று வசுந்தரா சொல்ல,அது போதாது மா.இன்னும் ஒன் வீக் சேர்த்து கொடுங்கள் என்றான்.
நோ,அதற்கு வாய்ப்பில்லை வெற்றி என்கவும்,வேற வழி நீங்க சொன்னதை கேட்டு தானே ஆகணும் என்று பல்லை கடித்தவன்,தேங்க்யூ மேடம் என்று சொல்லிக்கொண்டு சல்யூட் அடித்து விட்டு அங்கிருந்து வெளியே செல்ல, கபிலோனோ அவரை பாவமாக பார்க்க அதான் உங்க தல போகுதே நீங்களும் போக வேண்டியது தானே என்று சிரித்தார்...
ஆன்ட்டி என்ற கபிலனை பார்த்தவர் கல்யாணம் ஆகி குழந்தை பெத்தவனுங்க போல நடந்துக்கோங்க. ரெண்டு பேரும் சின்ன பயலுகளை விட ரொம்ப மோசமா இருக்கிறீங்க என்றார்.
கபிலனும் வெற்றியும் வெளியே போன பிறகு மீண்டும் அந்த பைலை எடுத்து படித்து பார்த்தவர்,மிஸ்டர் அமர்நாத் இந்த முறை எங்ககிட்ட இருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது.
என்னோடு மூணு சிங்கங்களும் வருது என்ன பண்றன்னு நானும் பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தனது வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
வெற்றியும் கபிலனும் ஆபீஸிலிருந்து தங்களது கார் நிற்கும் இடத்திற்கு வந்தனர்.டேய் அந்த நாய்க்கு போனை போடு என்று சொல்லிக் கொண்டே டிரைவர் சீட்டில் வெற்றி உட்கார,ஏன் உன் போன்ல பண்ணினால் டச் தேஞ்சு போயிடுமா என்று கபிலன் கேட்கவும், விளங்காத பயலே...
உன் தங்கச்சி டிஸ்ப்ளேவை உடைத்து விட்டாள் பாருடா என்று தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்துக்காட்ட,அதை பார்த்த கபிலனுக்கு சிரிப்பு வந்துவிட்டது...
ஏண்டா நான் என்ன சோக்கா சொல்லிட்டு இருக்கேன் நீ பல்லை காட்டிட்டு இருக்க என்று முறைக்க,அது வந்து மச்சி வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமென்று முன்னோர்கள் சொல்லிருக்காங்க டா அதான் என்றான்.
நான் கொலைவெறியில் இருக்கேன் பார்த்துக்கோ என்றவாறு காரை ஸ்டார் பண்ணிய வெற்றி அங்கிருந்து அவர்கள் வீட்டை நோக்கி சென்றான்.
கபிலனும் நண்பனுக்கு கால் பண்ண அந்த பக்கம் அட்டென் பண்ணியவன் என்ன டா?
என்னமோ காதலிக்கு போன் பண்ற போல ஓயாமல் போன் போடுற என்கவும் ஸ்பீக்கரில் இருந்ததால் இதைக் கேட்ட வெற்றியோ செருப்பு பிஞ்சிடுமென்க ஆத்தாடி விருமாண்டி என்று அந்த பக்கமிருந்த நண்பன் சொல்ல கபிலனோ இதைக் கேட்டு சத்தமாக சிரித்தான்.
வாய மூடுடா என்றவன் ஏய் வெலங்காத முண்டம் 10 நாள் லீவ்.நாங்கள் ஊருக்கு வரோம் என்க,அப்படியா என்று அந்த பக்கம் உள்ளவன் அதிர ஆமா ஆமா....
இந்த மேடம் அந்த அமர்நாத் கேஸை சீக்கிரம் முடிக்க சொல்லுறாங்கள். கண்டிப்பாக நீ வந்தே ஆகணுமென்கவும்,என்ன டா விளையாடுறீங்களா?
வீட்டுக்கு தெரிந்தால் என்ன ஆவது?
நாலு இல்லை 5 நாள் என்றால் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.அதை விட்டு உன் பாட்டுக்கு ஒரு மாதம் சொன்னா அவ்வளவு தான் என்று அந்த பக்கமிருந்த நண்பன் அலற...
சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அது உன்பாடு...தங்கச்சி கால்ல விழுவியோ இல்லை செருப்படி வாங்குவியோ எனக்கு தெரியாது.கேஸ் பற்றி நாளைக்கு நேரில் வந்து பேசுறேன் பாய் என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
வனிச்சூர்:
வண்டியை எடுத்துக்கொண்டு தனது பாட்டி வீட்டுக்கு வந்த செழியன் அத்தை கண்ணன் இருக்கானா என்க,மேல தான் படுத்துருக்கான் என்று புவனா சொல்ல, விடிஞ்சி இவ்ளோ நேரம் ஆகுது எருமை மாடு இன்னும் தூங்குது என்று படியிலேறியவனிடம் டீ பா என்கவும்,வீட்டில் குடிச்சிட்டு வந்தேன்.
அவனுக்கு டீ போட்டு குடுங்க நான் எடுத்துட்டு போறேன் என்று பாதி படியில் ஏறியவன் கீழே இறங்கி வந்து சோபாவில் உட்கார,தோட்டத்திலிருந்து வந்த தம்புசாமி தாத்தா அங்கிருந்த பேரனை பார்த்தவர் என்ன ஒரு எருமை மாடு இங்க இருக்கு இன்னொரு எருமை மாட்டை காணும் என்கவும்..
பெரிய எருமை மாடு தான் சொல்லணும் என்க,என்னடா வாய்க்குள்ளே முணவுற என்றவாறு பேரனுக்கு எதிரில் இருந்த சோபாவில் வந்து உட்கார்ந்தவர் அப்பு என்க,சொல்லு தாத்தா என்றான்.
ஏன் அப்பு நம்ம மலரை சின்ன கழுதைக்கு பார்த்தா என்னவென்று கேட்க,நானும் அதான் நினைச்சுகிட்டு இருந்தேன்.அதுக்குள்ள மாமா தான் அந்த பாத்திர கடைகாரன் பொண்ணை பேசிட்டு வந்து சேதி சொன்னாரே என்பவனுக்கு,அதுதான் இல்லன்னு ஆயிடுச்சு. .
"நம்ப புள்ளை"
ஒன்னுக்குள்ள ஒன்னு.சொந்த பந்தம் விட்டு போகாது இல்லையா என்றார்.நல்ல விஷயம் தான் தாத்தா.சித்தப்பாவும் மலருக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு தான் இருக்கு.
அதுக்கு முன்னாடி நம்ம கேட்டு வைப்பது நல்லது தானென்க,அந்த பயல பற்றி உனக்கு தெரியும்.உன் மாமனுங்க போல இந்த தடிமாடும் எந்த புள்ளையாவது மனசுல நினைச்சிருக்கா என்னன்னு தெரிஞ்சுக்கறதுக்காக தான் உன்கிட்ட கேக்குறேன் யா..
இல்ல தாத்தா.அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.மலரை தாராளமா பேசி முடிங்க என்று செழியன் சொல்லவும்,பேரனின் வார்த்தைகளில் இருக்கும் உறுதியை கேட்ட தம்புசாமி தாத்தாவுக்கு சின்னவனாவது நம்ம பார்க்கும் பொண்ணை கட்டபோறனே என்று பெருமையாக இருந்தது.
அப்ப இன்னைக்கு அம்மாவாசை நாளைக்கு பாட்டி முகம்.வர்ற புதன்கிழமை அன்னைக்கு பொண்ணு கேக்க போகலாமா என்று தாத்தா யோசனையோடு கேட்க அதுல என்ன தயக்கம்.
பஸ் புடிச்சா போக போற?பக்கத்து தெருவுல தானே சித்தப்பா வீடு இருக்கு போக வேண்டியது தானே என்றான்.
ஆனால் மலருக்கு இந்த காட்டான் பயலை புடிக்கணுமே அது தான் முக்கியம்.என் தங்கச்சி பச்ச புள்ள என்கவும்,ஏன்டா சின்னவனுக்கு என்ன குறைச்சல் என்று தம்புசாமி தாத்தா கேட்க,அப்படி சொல்லலை.என் தங்கச்சி அப்பாவி,உன் பேரனுக்கு ஏழு ஊர் வாய் அதுக்கு சொன்னேன் என்று சிரித்தான்.
படவா ராஸ்கல் என்றவர் ஏ சுமதி இன்னுமா சிங்காரிக்கிற என்று மனைவிக்கு குரல் கொடுக்க வந்துட்டேன் வந்துட்டேன் என்றார்.
பக்கத்து தெருவுல இருக்க அப்பன் வீட்டிற்கு போவதற்கு உன் பாட்டி சீவி சிங்காரிச்சுக்கிட்டு தான் வருவாளோ என்கவும்,அதுக்குனு தலையை விரிச்சு போட்டுக்கிட்டா போக முடியும் என்றவாறு அங்கு வந்து சுமதி பாட்டி முறைக்க..
புவனாவோ டீயோடு வந்தவர் மாமனாருக்கு ஒன்றை கொடுத்துவிட்டு கண்ணனுக்கு ஒன்னு எடுத்துப் போக,நான் போறேன் என்று அவரிடம் வாங்கிக் கொண்டு படியில் ஏறி மேலே போனவன் கதவை திறந்து பார்க்க அங்கே கண்ணனோ பெட்டில் குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்.
அங்கிருந்த டேபிள் மேல் டீயை வைத்த செழியன் ஒன் டூ த்ரீ என்று சொல்லிக் கொண்டு கட்டில் மேல் படுத்திருக்கும் கண்ணன் மேல் ஜம்ப் பண்ண தூங்கிக் கொண்டிருந்தவனோ கொலை கொலை என்று கத்தினான்.
நான் தான் மாப்பி என்று செழியன் சொல்ல,தடிப்பயலே இறங்கி தொலடா எருமை மாடு.எப்ப பார்த்தாலும் மெத்தை மேல வந்து பாயிற போல விழுறது.
எந்திரிடா நாயே என்று கண்ணன் திட்ட நீ என்னை அப்புறம் கொஞ்சிக்க ஒரு முக்கியமான விஷயம் என்று ஏதோ ரகசியமாக கண்ணனிடம் சொல்ல, படுத்திருந்தவனோ அதைக் கேட்டு பதறி அடித்து எழுந்து உட்கார்ந்து என்னடா சொல்ற என்கவும்,ஆமாடா இப்ப என்ன பண்றதுன்னு எனக்கே ஒன்னும் புரியலை டா...
"ஏதாவது வழி இருந்தால் சொல்லு மச்சி" தயவு செய்து நீ தாண்டா என்ன காப்பாத்தணும் என்றான்.
நான் தான் அப்பவே சொன்னனே இதெல்லாம் நமக்கு வேண்டாம்னு.எங்க நாயே நீ கேட்ட என்கவும்,என்னடா இப்ப வந்து இப்படி சொல்ற என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு செழியன் சொல்ல...
"செருப்பால நாலு அடி வேணாலும் அடிச்சுக்க இப்படி பாவமா முகத்தை வைக்காத" சத்தியமா என்னால பாக்கவே முடியலை,காரி துப்பனு போல இருக்கு என்று சொல்லிக் கொண்டு எழுந்தவன் கைலியை அவிழ்து உதறி கட்டிவிட்டு ரெஸ்ட் ரூமுக்குள் சென்று பிரஷ் ஆகி வெளியே வர அவனுக்கு முன்பு டீயை நீட்டினான்.
என்னடா புது பொண்டாட்டி போல பெட் டீ கொடுக்க வந்திருக்க என்று பல்லை கடித்துக் கொண்டே அத்தை மகன் கையில் இருந்து டீயை வாங்கி குடித்தவனும் என்ன பண்ணலாம் என்று யோசனையானான்.
சரி மச்சி வழக்கம் போல தெம்பா சாப்பிடுவோம்.அப்பதான் நமக்கு ஏதாவது ஐடியா கிடைக்கும் என்று கண்ணன் சொல்ல,இதுதான் சரியான பாயிண்ட் மச்சி.
சரி வா போகலாம் என்கவும் இரு டா குளிச்சிட்டு வாரேன்னு சொல்ல,சரி சரி என்ன பண்ணலாம்னு நான் யோசிக்கிறேன்.நீ போய் குளிச்சிட்டு வா என்று சொல்லியவன் அங்கிருந்த டிவியை ஆன் பண்ணி பெட்டில் படுத்துக் கொண்டான்.
கண்ணனும் ரெஸ்ட் ரூமிற்குள் சென்று குளித்து வெளியே வந்தவன் தயாராகி வாடா என்க,பின்னர் இருவரும் கீழே வந்தனர்.
சுமதியோ மாங்காயை வத்தல் போடுவதற்காக அரிந்து கொண்டிருக்க அதில் இருவரும் ஆளுக்கு ஒரு துண்டை எடுத்து வாயில் வைத்துக் கொள்ள,ரெண்டு தடிமாடும் மாசமா இருக்குங்க..இப்பதான் மாங்காய் திங்க நிக்குது என்று தோட்டத்து பக்கமாக உட்கார்ந்து இருந்த தம்புசாமி தாத்தா சொல்ல,இந்த நம்பியார் கிழவனுக்கு மட்டும் நாம என்ன பண்ணுனாலும் குத்தமா தெரியுதுடா என்றவாறு செழியன் பல்லை கடித்தான்.
விடு விடு நம்ம தாத்தா தானே பாத்துக்கலாம் என்று சொல்லிக்கொண்டு இருவரும் அங்கிருந்து வண்டியில் ஏறி செழியன் வீட்டிற்கு வந்தனர்.
ஷமீராவிற்கு இந்த அமாவாசை விரதம் எல்லாம் எப்படி செய்யணும் என்று தெரியாததால் கூடமாட உதவி செய்து கொண்டிருக்க கண்மணியும் வானதியும் சமையல் வேலையை பார்த்தார்கள்.பொரியலையாவது நான் செய்கிறேன் என்று ஷமீரா கேட்க சரி என்றனர்.
கவிதாவோ முன்னோர்கள் போட்டோக்களை எடுத்து துடைத்து பொட்டு வைத்தவள் பூஜைக்கு வாங்கிய பூக்களை அதன் மேல் மாலையாக வைத்து படையலுக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தாள்.