Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 360
- Thread Author
- #1
வனிச்சூர்:
அத்தை டிபன் ரெடி என்க,சரிமா என்றவர் இளா சாப்டுக்கேயேன் பா என மகனிடம் கேட்க,அப்பா வரட்டுமே மா என்று செழியன் சொல்லும் போது செல்லதுரையும் கையில் ஒரு கவரோடு உள்ளே வந்தவர் அம்மாடி இந்தாயென்று ஷமீராவிடம் நீட்டினார்.
இதழ் பிரியாமல் சிரித்தவாறு மாமனாரிடமிருந்து வாங்கிக் கொள்ள,மகனை கண்டன பார்வையோடு பார்த்த வானதி,குளிச்சிட்டு வந்துடுங்க சாப்பிடலாமென கணவரிடம் சொல்லவும் சரி மா என்றவாறு அவர்களது ரூமிற்குள் சென்றார்.
அத்தையென்று தனது கையிலிருந்த கவரை வானதியிடம் நீட்ட,புயலே வந்தாலும் உன் மாமானார் தீனி வாங்காமல் வீட்டுக்கு வந்ததில்லை.
உனக்கு என்ன புடிக்கும்னு அவருக்கு தெரியாது,இருக்குறதை சாப்பிடு. நாளைக்கு உனக்கு புடிச்சதை வாங்கியார சொல்லுறேன் மா என்க,மாமியாரின் வார்த்தைகளை கேட்டவளுக்கு அழுகை வந்தது.
தனக்கு என்ன பிடிக்கும் என்பது இதுவரை தன்னை பெற்ற தந்தைக்கே தெரியாது.ஏன் அதை பற்றி அவர் கேட்டதுமில்லை.இன்று நம் விருப்பத்தை கேட்பதற்கு தாய் கணவனுக்கு பிறகு இன்னும் இரண்டு உறவுகள் கிடைத்திருக்கிறதே என்பதை நினைக்க அழுகையோடு சந்தோஷமும் போட்டி போட்டுக்கொண்டு வந்தது.
போ மா...
"சாப்பாடு எடுத்து வை"
இவங்க ரெண்டு பேருக்கும் கொடுத்துட்டு நீயும் சாப்பிடு,நான் பிறகு சாப்டுக்கிறேன் என்ற வானதி சீரியலில் மூழ்கினார்.
அங்கிருந்த செழியனோ தனது பார்வையை மனைவியின் மேலிருந்து சிறிதும் விலக்கவில்லை.ஆனால் அவளோ அங்கு ஒருத்தன் இருப்பதைப் போலவே கண்டு கொள்ளாமல் கிச்சனிற்கு சென்றவள்,கவரை அங்கிருந்த ஷெல்பில் வைத்து விட்டு சமைத்ததை எடுத்து வந்து டைனிங் டேபிளின் மேல் வைக்க,செல்லதுரை சாப்பிட வரவும்,மனைவியை முறைத்தவாறு செழியனும் கையை கழுவிட்டு வந்து உட்கார இருவருக்கும் ஷமீரா பரிமாறினாள்.
உணவின் சுவையை வைத்து அது மருமகள் சமைத்தது என்பதை புரிந்து கொண்ட செல்லதுரை,என் வாழ்க்கையில் இன்னைக்கு தான் மா உண்மையான சப்பாத்தியை சாப்பிடுறேன்.
"உன் அத்தை ஆடிக்கு ஒருநாள் அமாவாசைக்கு ஒருநாள் பண்ணி குடுப்பாள்".
அந்த ராட்டியை உடைச்சி ஊறவைத்து வயிற்றில் தள்ளுவதற்குள் எனக்கு கண்ணு முழிலாம் பிதுங்கிடும் மா என்க,என்ன சொல்றீங்க என்றவாறு அங்கு வந்த வானதி,கணவனை முறைத்தார்.
மனைவியை பார்த்த செல்லதுரை அது ஒன்னும் இல்ல வானதி,உன் அத்தை கிட்ட சமையல் கத்துக்கன்னு மருமகளிடம் சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன நினைச்சு என்கவும்,இல்லையே நீங்க வேற ஏதோ சொல்லிக்கிட்டு இருந்த போல என் காதுல விழுந்துச்சே என்றார்.
அட ஏன் மா இப்படி..உன்னை பற்றி மருமகள் கிட்ட எவ்வளவு பெருமையா சொல்லிக்கிட்டு இருக்கேன்,அது தெரியாமல் எப்ப பாத்தாலும் என்னை குறை சொல்றதே உனக்கு வேலை தான்..
சரி வா...
"அம்மாடி நீயும் வந்து உட்கார்ந்து மா".
ஆவி பறக்க இருக்கிற சப்பாத்தி தேவாமிர்தம் போல தொண்டைக்குள் இறங்குது வா வா என்று மனைவியை பக்கத்தில் இருக்கும் சேரை காட்டி செல்லதுரை கூப்பிட,அவரும் சிரித்துக் கொண்டு உட்கார்ந்தவர் மருமகளை பார்த்து நீயும் உட்காரு மா சாப்பிடலாம் என்க,இருக்கட்டுங்கத்தை.நீங்கள் சாப்பிடுங்கள் பிறகு நான் சாப்பிடுறேன் என்றாள்.
அட என்னம்மா நீ..ராவுக்கு ஒரு வேளை தான் எல்லாரும் உட்கார்ந்து குடும்பமா சாப்பிடுறோம்.நீ மட்டும் தனியா சாப்பிட்டா என்ன அர்த்தம் உக்காரு. அதான் உன் புருஷனுக்கு பக்கத்துல சேர் இருக்குல அதுல போய் உட்காருமா என்று செல்லதுரை சொல்ல, மாமனாரின் வார்த்தையை தட்ட முடியாமல் சரிங்க மாமா என்றவள் தனக்கு தேவையானதை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வானதி நாளைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா என்க,அது எப்படி மறக்க முடியும்...
சரி சரி.செழியனுக்கு நாளைக்கு வேலைக்கு போக வேண்டாம் தான்.
அப்ப சூடத்த காமிச்சுட்டு சாப்பாட்டை நம்ப கரும்பு தோப்புக்கு கொடுத்து அனுப்பி விடு.நாளைக்கு கரும்பு வெட்ட ஆள் வர வைத்திருக்கிறேன் என்கவும் சரிங்க என்றார்.
பெற்றோர்கள் எதிரில் உட்கார்ந்திருப்பதால் எந்த சேட்டையும் செய்யாமல் அமைதியாக சாப்பிட்டு எழுந்த செழியன் கையை கழுவிட்டு மாடியில் இருக்கும் அவனது ரூமிற்கு சென்று விட்டான்.
ஷமீராவும் வேலைகளை முடித்து விட்டுரூமிற்க்குள் வந்து பார்க்க செழியன் அங்கு இருப்பது போல் தெரியவில்லை.
பால்கனி கதவு திறந்திருப்பதை வைத்து மாடிக்கு போயிட்டார் போலனு நினைத்துக் கொண்டு பால் டம்ளரை எடுத்துக்கொண்டு படியில் ஏறி மேலே வர செழியனோ மாடி சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு தூரத்தில் இருக்கும் இருட்டான மலையை பார்த்துக் கொண்டிருந்தான்.
கொலுசு சத்தமும் மல்லிகைப் பூவின் வாசமும் மனைவி வந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்த்த அவனோ திரும்பி பார்க்காமல் அதே தோரணையிலே நின்று கொண்டிருந்தான்.
ஆண்டவரே இந்த மனுஷனுக்கு கோபத்தை எப்படித்தான் மலையிறக்க போறேன்னு தெரியலையே என்று மனதிற்குள் நினைத்தவள் என்னங்க பால் என்று சொல்ல,எதுவும் சொல்லாமல் அமைதியாக திரும்பியவன் அவள் கையில் இருந்த டிரேவிலிருந்து பால் டம்ளரை எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டான்.
கணவனின் செய்கைகளை பார்த்தவள் அட போடா ரொம்ப ஓவரா தான் பண்ணுற,ஏன் எனக்குலாம் கோவம் வராதா?போனை ஆஃப் பண்ணி வைத்ததற்கு நானும் உன் மேல கோவமாக தான் டா இருக்கணும் என மனதிற்குள் நினைத்தவள் வந்த வழியாக திரும்பி சென்றாள்.
செழியனோ மேனேஜர் சொன்ன விஷயத்தை யோசித்தபடி இருக்க கையில் இருந்த பால் டம்ளரை மறந்து விட்டான்.
தூரத்தில் நாய் சத்தம் கேட்டு சுதாரித்தவனுக்கு ஆறி போன பால் தெரிய மனைவி பின்னாடி தான் நிற்பாள் சூடு பண்ண சொல்லலாமென்று நினைத்து திரும்ப,தன்னவள் இல்லாததை பார்த்து கோவம் தலைக்கு ஏற,திமிரு புடிச்சவள்
புருஷங்காரன் கோவமா இருக்கானே அவனை எப்படியாவது சமாதானம் பண்ணனும்னு நினைக்காமல் ஏனோ தானோனு இருக்காளே,அப்படியே அவளோட அப்பன் புத்தி என்று திட்டினான்...
கீழே வந்தவளோ குளித்து விட்டு இலகுவான புடவையை கட்டிக்கொண்டு பால்கனி கதவை சாற்றியவள் காதில் ஹெட் செட் போட்டு படுத்து விட்டாள்.
இரு டி வரேனென்று முணுமுணுத்தவன் சிறிது நேரம் மாடியில் நடந்து விட்டு ரூமிற்குள் வர இரவு விளக்கின் வெளிச்சத்தில்,மனைவி பெட்டில் படுத்திருப்பது தெரிந்தது.
"ஏய் எந்திரி டி என்றான் "
ஷமீராவோ அமைதியாக இருக்க,உன்னை தாண்டி சொல்றேன் எந்திரி டி என்று கொஞ்சம் வேகமாக சொல்ல அப்பவும் அவள் படுத்தவாக்கில் இருக்கவும்,இவளுக்கு எவ்வளவு திமிரு பாரேனென்று அவள் காலை பிடித்து இழுக்க ஐயோ என்று பதறியடித்து எழுந்தாள்.
கட்டிலின் மேல் கால் நீட்டி உட்கார்ந்திருப்பவளை பார்த்தவன் எட்டி ஷமிராவின் கையை பிடித்து இழுக்க,செழியனின் நெஞ்சோடு வந்து வேகமாக மோதி பின்பக்கமாக விழப் போனவளின் கழுத்தோடு வளைத்து பிடித்தவன் ரொம்ப திமிரு...
ஒருத்தன் வீட்டுக்கு வந்து எவ்வளவு நேரம் டி ஆகுது,இதுவரை ஒரு வார்த்தை பேசலைனா என்ன டி அர்த்தம்?
அவ்வளவு அகங்காரமென்று தன்னோடு இறுக்க,ஷமீராவிற்கோ முறுக்கேறிய தன்னவன் வலிமையான உடலோடு அழுந்துவது வலியை கொடுக்க முகத்தை சுருக்கினாள்.
மனைவியின் முக சுணக்கத்தை பார்த்தாலும் தன்னவள் இவ்வளவு நேரம் வரையில் பேசாமல் இருந்தாளே என்கும் கோபம் தான் முதன்மையாக இருந்தது.
ஷமீராவும் பல்லை கடித்து வலியை பொறுத்தவள்,சிறிது நொடிகள் வரை எதுவும் பேசவில்லை.நாம் வாயை திறக்கவில்லை என்றால் தன்னவனின் கோவம் குறையாது என்பது புரிந்து,அன்னார்ந்து கணவனை பார்த்தவள் அவன் கையிலிருந்த டம்ளரை கண்டு,பால் ஆறி போயிடுச்சு முதலில் குடிங்களென்க,ஹம் என்றவன் போய் சூடு பண்ணி எடுத்துவாடியென்று தனது இரும்புக்கர வளையத்தை விலக்க,ஷமீராவிற்கு அப்பொழுதுதான் இயல்பாக மூச்சு விடுவது போல இருந்தது.
இரண்டு டம்ளரையும் எடுத்துக் கொண்டு கதவை திறந்து வெளியே போய் ஹப்பாடா என்று பெருமூச்சு விட்டவள்,இந்த மனுஷன் போனை சுவிட்ச் ஆப் பண்ணி வச்சுட்டு நம்ம பேசலன்னு கோவப்படுறாரே என்று திட்டிக்கொண்டு கீழே வர வானதியும் செல்லதுரையும் டிவி பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
சூடு பண்ணிய பால் டம்ளரோடு மேலே வந்து கதவை திறந்தவளுக்கு கணவன் நிற்கும் தோற்றத்தை கண்டு திக்கென்று இருந்தது.
ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருக்கும் கண்ணாடி வழியாக கதவைத் திறந்து அதிர்வோடு நிற்கும் மனைவியை பார்த்து தனது மீசையை முறுக்கிவிட்டவன் என்னடி வாசல் பக்கமே நிற்கணுமென்று வேண்டுதலையா?.
எச்சில் விழுங்கியவள் உள்ளே வந்து கதவை சாற்றி விட்டு வலது கையை தூக்கி தாழ்ப்பாள் போடப்போக,ஆணி அடித்த போல அப்படியே நின்றாள்.
மனைவியின் கையிலிருந்ததை வாங்கி அங்கிருந்த டேபிளின் மேல் எட்டி வைத்தவன்,அவள் தலையில் இருக்கும் மல்லி பூவை வாசம் பிடித்தபடி ஒரு கையால் மனைவியின் இடுப்பை இறுக்கிக் கொண்டு இன்னொரு கையால் தாழ்ப்பாளின் மேலிருக்கும் கையை பிடித்து அந்த தேக்கு மர கதவில் சாய்ந்தான்.
அடர்ந்த தாடியோ வெறுமையான முதுகில் ஊர்வலம் போக பெண்ணவளோ ரோமங்கள் சிலிர்க்க கண்களை மூடியிருந்தாள்.
மனைவியின் உடல் சிலிர்ப்பதை உணர்ந்தவன் நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கியேடி...
ஏன் நான் வந்த உடனே என்னை தேடி ரூமிற்கு வரலை?
சரி வரலை...அதன் பிறகாவது எதாவது பேசுனியா இல்லையே,நீ வந்தா வா இல்லை வராட்டி போடானு எனக்கென்ன வந்துச்சினு இருந்தால் என்ன டி அர்த்தமென்று மனைவியின் காதோரம் மீசை முடிகள் குத்த முத்தமிட்டவாரு கேட்க....
கணவனுக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் உறைந்து நின்றவளோ இப்படி பண்ணிட்டு கேள்வி கேட்டால் எப்படி டா பதில் சொல்ல முடியும் விளக்கெண்ணெய் என்று மனதிற்குள் திட்டினாள்.
மனைவியின் மனதை படித்தவன் போல என்னடி மனசுக்குள்ளே உன் புருஷனை திட்டுறியா என்றவாறு இன்னும் அவளோடு நெருங்கி நிற்க. ..
மனசுக்குள்ள கூட இந்த மனுஷன் கிட்ட பேச முடியாது போலயேனு நினைத்தவள் இப்ப எதுக்கு கதவுக்கு முட்டு கொடுத்துட்டு நிக்கிறீங்களென்று ஷமீரா கேட்க,வேண்டுதலைடி என்றான்.
பின்னர் ஒரு அடி பின்னாடி தள்ளி போனவன் அவள் சுதாரிப்பதற்குள் மனைவியின் முந்தானையை பிடித்து இழுக்க ஒரு சுத்து சுற்றியவளோ என்ன பண்ணுறீங்களென்று கைகளை நெஞ்சின் மேல் தடுப்பாய் வைத்துக் கொண்டு கேட்கவும்,முழு புடவையும் செழியனின் கையில் வந்தது.
கோழி குஞ்சு போல ஒடுங்கி நிற்பவளை ரசித்துக் கொண்டே புடவையை கட்டிலில் மேல் போட்டவன் மனைவியை தூக்கிக்கொண்டு பால்கனி வழியாக மாடியில் இருக்கும் ரூமிற்கு சென்று கதவை திறக்க மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அந்த அறையை பார்த்து திகைத்து போனாள்.
அத்தை டிபன் ரெடி என்க,சரிமா என்றவர் இளா சாப்டுக்கேயேன் பா என மகனிடம் கேட்க,அப்பா வரட்டுமே மா என்று செழியன் சொல்லும் போது செல்லதுரையும் கையில் ஒரு கவரோடு உள்ளே வந்தவர் அம்மாடி இந்தாயென்று ஷமீராவிடம் நீட்டினார்.
இதழ் பிரியாமல் சிரித்தவாறு மாமனாரிடமிருந்து வாங்கிக் கொள்ள,மகனை கண்டன பார்வையோடு பார்த்த வானதி,குளிச்சிட்டு வந்துடுங்க சாப்பிடலாமென கணவரிடம் சொல்லவும் சரி மா என்றவாறு அவர்களது ரூமிற்குள் சென்றார்.
அத்தையென்று தனது கையிலிருந்த கவரை வானதியிடம் நீட்ட,புயலே வந்தாலும் உன் மாமானார் தீனி வாங்காமல் வீட்டுக்கு வந்ததில்லை.
உனக்கு என்ன புடிக்கும்னு அவருக்கு தெரியாது,இருக்குறதை சாப்பிடு. நாளைக்கு உனக்கு புடிச்சதை வாங்கியார சொல்லுறேன் மா என்க,மாமியாரின் வார்த்தைகளை கேட்டவளுக்கு அழுகை வந்தது.
தனக்கு என்ன பிடிக்கும் என்பது இதுவரை தன்னை பெற்ற தந்தைக்கே தெரியாது.ஏன் அதை பற்றி அவர் கேட்டதுமில்லை.இன்று நம் விருப்பத்தை கேட்பதற்கு தாய் கணவனுக்கு பிறகு இன்னும் இரண்டு உறவுகள் கிடைத்திருக்கிறதே என்பதை நினைக்க அழுகையோடு சந்தோஷமும் போட்டி போட்டுக்கொண்டு வந்தது.
போ மா...
"சாப்பாடு எடுத்து வை"
இவங்க ரெண்டு பேருக்கும் கொடுத்துட்டு நீயும் சாப்பிடு,நான் பிறகு சாப்டுக்கிறேன் என்ற வானதி சீரியலில் மூழ்கினார்.
அங்கிருந்த செழியனோ தனது பார்வையை மனைவியின் மேலிருந்து சிறிதும் விலக்கவில்லை.ஆனால் அவளோ அங்கு ஒருத்தன் இருப்பதைப் போலவே கண்டு கொள்ளாமல் கிச்சனிற்கு சென்றவள்,கவரை அங்கிருந்த ஷெல்பில் வைத்து விட்டு சமைத்ததை எடுத்து வந்து டைனிங் டேபிளின் மேல் வைக்க,செல்லதுரை சாப்பிட வரவும்,மனைவியை முறைத்தவாறு செழியனும் கையை கழுவிட்டு வந்து உட்கார இருவருக்கும் ஷமீரா பரிமாறினாள்.
உணவின் சுவையை வைத்து அது மருமகள் சமைத்தது என்பதை புரிந்து கொண்ட செல்லதுரை,என் வாழ்க்கையில் இன்னைக்கு தான் மா உண்மையான சப்பாத்தியை சாப்பிடுறேன்.
"உன் அத்தை ஆடிக்கு ஒருநாள் அமாவாசைக்கு ஒருநாள் பண்ணி குடுப்பாள்".
அந்த ராட்டியை உடைச்சி ஊறவைத்து வயிற்றில் தள்ளுவதற்குள் எனக்கு கண்ணு முழிலாம் பிதுங்கிடும் மா என்க,என்ன சொல்றீங்க என்றவாறு அங்கு வந்த வானதி,கணவனை முறைத்தார்.
மனைவியை பார்த்த செல்லதுரை அது ஒன்னும் இல்ல வானதி,உன் அத்தை கிட்ட சமையல் கத்துக்கன்னு மருமகளிடம் சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன நினைச்சு என்கவும்,இல்லையே நீங்க வேற ஏதோ சொல்லிக்கிட்டு இருந்த போல என் காதுல விழுந்துச்சே என்றார்.
அட ஏன் மா இப்படி..உன்னை பற்றி மருமகள் கிட்ட எவ்வளவு பெருமையா சொல்லிக்கிட்டு இருக்கேன்,அது தெரியாமல் எப்ப பாத்தாலும் என்னை குறை சொல்றதே உனக்கு வேலை தான்..
சரி வா...
"அம்மாடி நீயும் வந்து உட்கார்ந்து மா".
ஆவி பறக்க இருக்கிற சப்பாத்தி தேவாமிர்தம் போல தொண்டைக்குள் இறங்குது வா வா என்று மனைவியை பக்கத்தில் இருக்கும் சேரை காட்டி செல்லதுரை கூப்பிட,அவரும் சிரித்துக் கொண்டு உட்கார்ந்தவர் மருமகளை பார்த்து நீயும் உட்காரு மா சாப்பிடலாம் என்க,இருக்கட்டுங்கத்தை.நீங்கள் சாப்பிடுங்கள் பிறகு நான் சாப்பிடுறேன் என்றாள்.
அட என்னம்மா நீ..ராவுக்கு ஒரு வேளை தான் எல்லாரும் உட்கார்ந்து குடும்பமா சாப்பிடுறோம்.நீ மட்டும் தனியா சாப்பிட்டா என்ன அர்த்தம் உக்காரு. அதான் உன் புருஷனுக்கு பக்கத்துல சேர் இருக்குல அதுல போய் உட்காருமா என்று செல்லதுரை சொல்ல, மாமனாரின் வார்த்தையை தட்ட முடியாமல் சரிங்க மாமா என்றவள் தனக்கு தேவையானதை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வானதி நாளைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா என்க,அது எப்படி மறக்க முடியும்...
சரி சரி.செழியனுக்கு நாளைக்கு வேலைக்கு போக வேண்டாம் தான்.
அப்ப சூடத்த காமிச்சுட்டு சாப்பாட்டை நம்ப கரும்பு தோப்புக்கு கொடுத்து அனுப்பி விடு.நாளைக்கு கரும்பு வெட்ட ஆள் வர வைத்திருக்கிறேன் என்கவும் சரிங்க என்றார்.
பெற்றோர்கள் எதிரில் உட்கார்ந்திருப்பதால் எந்த சேட்டையும் செய்யாமல் அமைதியாக சாப்பிட்டு எழுந்த செழியன் கையை கழுவிட்டு மாடியில் இருக்கும் அவனது ரூமிற்கு சென்று விட்டான்.
ஷமீராவும் வேலைகளை முடித்து விட்டுரூமிற்க்குள் வந்து பார்க்க செழியன் அங்கு இருப்பது போல் தெரியவில்லை.
பால்கனி கதவு திறந்திருப்பதை வைத்து மாடிக்கு போயிட்டார் போலனு நினைத்துக் கொண்டு பால் டம்ளரை எடுத்துக்கொண்டு படியில் ஏறி மேலே வர செழியனோ மாடி சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு தூரத்தில் இருக்கும் இருட்டான மலையை பார்த்துக் கொண்டிருந்தான்.
கொலுசு சத்தமும் மல்லிகைப் பூவின் வாசமும் மனைவி வந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்த்த அவனோ திரும்பி பார்க்காமல் அதே தோரணையிலே நின்று கொண்டிருந்தான்.
ஆண்டவரே இந்த மனுஷனுக்கு கோபத்தை எப்படித்தான் மலையிறக்க போறேன்னு தெரியலையே என்று மனதிற்குள் நினைத்தவள் என்னங்க பால் என்று சொல்ல,எதுவும் சொல்லாமல் அமைதியாக திரும்பியவன் அவள் கையில் இருந்த டிரேவிலிருந்து பால் டம்ளரை எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டான்.
கணவனின் செய்கைகளை பார்த்தவள் அட போடா ரொம்ப ஓவரா தான் பண்ணுற,ஏன் எனக்குலாம் கோவம் வராதா?போனை ஆஃப் பண்ணி வைத்ததற்கு நானும் உன் மேல கோவமாக தான் டா இருக்கணும் என மனதிற்குள் நினைத்தவள் வந்த வழியாக திரும்பி சென்றாள்.
செழியனோ மேனேஜர் சொன்ன விஷயத்தை யோசித்தபடி இருக்க கையில் இருந்த பால் டம்ளரை மறந்து விட்டான்.
தூரத்தில் நாய் சத்தம் கேட்டு சுதாரித்தவனுக்கு ஆறி போன பால் தெரிய மனைவி பின்னாடி தான் நிற்பாள் சூடு பண்ண சொல்லலாமென்று நினைத்து திரும்ப,தன்னவள் இல்லாததை பார்த்து கோவம் தலைக்கு ஏற,திமிரு புடிச்சவள்
புருஷங்காரன் கோவமா இருக்கானே அவனை எப்படியாவது சமாதானம் பண்ணனும்னு நினைக்காமல் ஏனோ தானோனு இருக்காளே,அப்படியே அவளோட அப்பன் புத்தி என்று திட்டினான்...
கீழே வந்தவளோ குளித்து விட்டு இலகுவான புடவையை கட்டிக்கொண்டு பால்கனி கதவை சாற்றியவள் காதில் ஹெட் செட் போட்டு படுத்து விட்டாள்.
இரு டி வரேனென்று முணுமுணுத்தவன் சிறிது நேரம் மாடியில் நடந்து விட்டு ரூமிற்குள் வர இரவு விளக்கின் வெளிச்சத்தில்,மனைவி பெட்டில் படுத்திருப்பது தெரிந்தது.
"ஏய் எந்திரி டி என்றான் "
ஷமீராவோ அமைதியாக இருக்க,உன்னை தாண்டி சொல்றேன் எந்திரி டி என்று கொஞ்சம் வேகமாக சொல்ல அப்பவும் அவள் படுத்தவாக்கில் இருக்கவும்,இவளுக்கு எவ்வளவு திமிரு பாரேனென்று அவள் காலை பிடித்து இழுக்க ஐயோ என்று பதறியடித்து எழுந்தாள்.
கட்டிலின் மேல் கால் நீட்டி உட்கார்ந்திருப்பவளை பார்த்தவன் எட்டி ஷமிராவின் கையை பிடித்து இழுக்க,செழியனின் நெஞ்சோடு வந்து வேகமாக மோதி பின்பக்கமாக விழப் போனவளின் கழுத்தோடு வளைத்து பிடித்தவன் ரொம்ப திமிரு...
ஒருத்தன் வீட்டுக்கு வந்து எவ்வளவு நேரம் டி ஆகுது,இதுவரை ஒரு வார்த்தை பேசலைனா என்ன டி அர்த்தம்?
அவ்வளவு அகங்காரமென்று தன்னோடு இறுக்க,ஷமீராவிற்கோ முறுக்கேறிய தன்னவன் வலிமையான உடலோடு அழுந்துவது வலியை கொடுக்க முகத்தை சுருக்கினாள்.
மனைவியின் முக சுணக்கத்தை பார்த்தாலும் தன்னவள் இவ்வளவு நேரம் வரையில் பேசாமல் இருந்தாளே என்கும் கோபம் தான் முதன்மையாக இருந்தது.
ஷமீராவும் பல்லை கடித்து வலியை பொறுத்தவள்,சிறிது நொடிகள் வரை எதுவும் பேசவில்லை.நாம் வாயை திறக்கவில்லை என்றால் தன்னவனின் கோவம் குறையாது என்பது புரிந்து,அன்னார்ந்து கணவனை பார்த்தவள் அவன் கையிலிருந்த டம்ளரை கண்டு,பால் ஆறி போயிடுச்சு முதலில் குடிங்களென்க,ஹம் என்றவன் போய் சூடு பண்ணி எடுத்துவாடியென்று தனது இரும்புக்கர வளையத்தை விலக்க,ஷமீராவிற்கு அப்பொழுதுதான் இயல்பாக மூச்சு விடுவது போல இருந்தது.
இரண்டு டம்ளரையும் எடுத்துக் கொண்டு கதவை திறந்து வெளியே போய் ஹப்பாடா என்று பெருமூச்சு விட்டவள்,இந்த மனுஷன் போனை சுவிட்ச் ஆப் பண்ணி வச்சுட்டு நம்ம பேசலன்னு கோவப்படுறாரே என்று திட்டிக்கொண்டு கீழே வர வானதியும் செல்லதுரையும் டிவி பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
சூடு பண்ணிய பால் டம்ளரோடு மேலே வந்து கதவை திறந்தவளுக்கு கணவன் நிற்கும் தோற்றத்தை கண்டு திக்கென்று இருந்தது.
ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருக்கும் கண்ணாடி வழியாக கதவைத் திறந்து அதிர்வோடு நிற்கும் மனைவியை பார்த்து தனது மீசையை முறுக்கிவிட்டவன் என்னடி வாசல் பக்கமே நிற்கணுமென்று வேண்டுதலையா?.
எச்சில் விழுங்கியவள் உள்ளே வந்து கதவை சாற்றி விட்டு வலது கையை தூக்கி தாழ்ப்பாள் போடப்போக,ஆணி அடித்த போல அப்படியே நின்றாள்.
மனைவியின் கையிலிருந்ததை வாங்கி அங்கிருந்த டேபிளின் மேல் எட்டி வைத்தவன்,அவள் தலையில் இருக்கும் மல்லி பூவை வாசம் பிடித்தபடி ஒரு கையால் மனைவியின் இடுப்பை இறுக்கிக் கொண்டு இன்னொரு கையால் தாழ்ப்பாளின் மேலிருக்கும் கையை பிடித்து அந்த தேக்கு மர கதவில் சாய்ந்தான்.
அடர்ந்த தாடியோ வெறுமையான முதுகில் ஊர்வலம் போக பெண்ணவளோ ரோமங்கள் சிலிர்க்க கண்களை மூடியிருந்தாள்.
மனைவியின் உடல் சிலிர்ப்பதை உணர்ந்தவன் நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கியேடி...
ஏன் நான் வந்த உடனே என்னை தேடி ரூமிற்கு வரலை?
சரி வரலை...அதன் பிறகாவது எதாவது பேசுனியா இல்லையே,நீ வந்தா வா இல்லை வராட்டி போடானு எனக்கென்ன வந்துச்சினு இருந்தால் என்ன டி அர்த்தமென்று மனைவியின் காதோரம் மீசை முடிகள் குத்த முத்தமிட்டவாரு கேட்க....
கணவனுக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் உறைந்து நின்றவளோ இப்படி பண்ணிட்டு கேள்வி கேட்டால் எப்படி டா பதில் சொல்ல முடியும் விளக்கெண்ணெய் என்று மனதிற்குள் திட்டினாள்.
மனைவியின் மனதை படித்தவன் போல என்னடி மனசுக்குள்ளே உன் புருஷனை திட்டுறியா என்றவாறு இன்னும் அவளோடு நெருங்கி நிற்க. ..
மனசுக்குள்ள கூட இந்த மனுஷன் கிட்ட பேச முடியாது போலயேனு நினைத்தவள் இப்ப எதுக்கு கதவுக்கு முட்டு கொடுத்துட்டு நிக்கிறீங்களென்று ஷமீரா கேட்க,வேண்டுதலைடி என்றான்.
பின்னர் ஒரு அடி பின்னாடி தள்ளி போனவன் அவள் சுதாரிப்பதற்குள் மனைவியின் முந்தானையை பிடித்து இழுக்க ஒரு சுத்து சுற்றியவளோ என்ன பண்ணுறீங்களென்று கைகளை நெஞ்சின் மேல் தடுப்பாய் வைத்துக் கொண்டு கேட்கவும்,முழு புடவையும் செழியனின் கையில் வந்தது.
கோழி குஞ்சு போல ஒடுங்கி நிற்பவளை ரசித்துக் கொண்டே புடவையை கட்டிலில் மேல் போட்டவன் மனைவியை தூக்கிக்கொண்டு பால்கனி வழியாக மாடியில் இருக்கும் ரூமிற்கு சென்று கதவை திறக்க மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அந்த அறையை பார்த்து திகைத்து போனாள்.